பச்சோந்தி

324 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 6, 2016, 4:03:49 AM6/6/16
to A K Rajagopalan, தமிழ் சிறகுகள், Thamizhthendral, வல்லமை, நட்புடன், அந்தியூரன் பழமைபேசி, அப்பண்ணா கோலாலம்பூர், vallamai editor, பவளஸ்ரீ, palsuvai, bcc: Ganchu, ganesh, Geetha Natarajan, Gopi, Gopi Rajagopal, H. Venkatesh, Jayashree Iyer, K.N.Rajalakshmi, Kiran Iyer, Kumar, Kumar Kalpat, Kumar Subramanim, Lalitha Rajagopalan, Mani, mythili, Nandha Kishore, Nimmu Kumar, Nisha Iyer, Prasanna, R. Ganesh, Raj Sriram, Rajaram Naraayanan, Ram Kalpat, Ram Kalpat, Ramnath Iyer, Ramu, sashisri, Sekhar @ Krishnan Kalpat Subramanian, Shankar, Srikant, Sundaram N M, Swaroon Sridhar, V rajaraman, vidhya sundar, vidh...@hotmail.com, crazy.mohan, Dr. Udhayaraja, Indhu Madhavan, jayasree shanker, Koothanainar SRS, Krishnan V.R., Mohan Aiyaswami, Muralidharan Sourirajan, N.Srinivasan, Narasimhan C R, narender...@rediffmail.com, P. N. Subramaniam, Padma Vasantharaajan, R. Vaidhyanathan, Rajagopal Subramaniyam, Raji, Ramakrishnan K S, Ramalakshmi Rajan, Ramya, Shoba, Subashini Tremmel, subramanian Subramanian, Sulochana Suriyanarayanan, Sumathy Ramesh, sundar rajagopal, Suri siva, Velaydham Sankaranarayanan, velayudan sankaranarayana, VV Ramesh, அப்பண்ணா, ச. கம்பராமன், சுந்தர்ஜி ப்ரகாஷ், Kaviyogi Vedham

பச்சோந்தி


தேவைக்கு ஏற்ப கட்சி மாறுபவரை பச்சோந்தி என்பார்கள்.  அவர்களைப் பற்றி பேச எனக்கு ஒன்றும் இல்லை.  அல்ப (?) பிராணி ஒன்றைப் பற்றிதான் இங்கு சொல்லப் போகிறேன்


ஓந்தியிலோர் ஓந்தி பச்சோந்தி

பார்க்க அழகு இவ்வோந்தி

ஆச்சரியங்கள் பல கொண்ட ஓந்தி

காணக் கிடைக்கும் மனச் சாந்தி

 


(படம் பிடித்தது க.சு.கிருஷ்ணன்)


 

(படம் ந.க.)

 

 

ஓணான், பல்லி, பாம்பு இனத்தைச் சேர்ந்த பச்சோந்தி ஒரு வினோதப் பிராணி.  இதைப்  பற்றிய சில தகவல்கள் இதோ. புத்தகத்தில் படித்தவை அல்ல.  நேரில் கண்டறிந்தவை.

 

பச்சோந்தி நிறம் மாறும் என்பது உண்மை.  ஆனால் நினைத்தபடி எல்லாம் அது இருக்கும் சுற்றுப் புரத்திற்கேப்ப நிறம் மாறும் என்பது தவறு.  சாதாரணமாக பச்சை நிறத்திலே சில சிறு கருப்புக் கட்டங்களுடன் காணப்படும் இது கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை நல்ல பச்சை நிறத்திலிருந்து, கரும் பச்சையாகவொ அல்லது வெளிர் பச்சையாகவோ மாறுகிறது.  அதன் மீதுள்ள கருப்பு புள்ளிகளோ கட்டங்களோ சற்றே மாறுகின்றன.

 

பச்சோந்திகளிடம் பல வியக்கத் தக்க விஷயங்கள் உள்ளன. அவை வருமாறு.

 

உருவத்தில் ஓணான் மாதிரித் தோன்றினாலும் இது ஓணான் போல வேகமாக ஓடக்கூடிய ஒன்றல்ல.  முன்னும் பின்னுமாக ஆடி ஆடி நிதானமாக ஒரு ஒரு அடியாக காலை முன் வைத்து நகரும்.  அதே சமயத்தில் எதிரிகளிடம் இருந்து உயிர் தப்பிட வேண்டுமெனின் வேகமாக ஓடும் சக்தியும் கொண்டதிது.

 

பச்சோந்திக்கு முதல் எதிரி காகம்.  பச்சோந்தியைக் கண்டால் விடாது.  கொன்று தின்றுவிடும்.  காகத்திடம் இருந்து தப்புவதற்குத் தான் இவை இருக்கும் தாவரங்களின் பச்சை நிறத்தையே இதற்கும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான். 

 

பச்சோந்தியின் கண்கள் இரெண்டும் தனித் தனியே இயங்கக் கூடியவை.  ஒரு கண் முன்புரம் பார்க்கும் போது மற்றொன்றால் அது பின் புரம் பார்க்கும்.  அவ்வாறு பார்ப்பதை மாற்றிக் கொண்டே இருக்கும்.  கண்கள் ஒரு உருண்டையான தோல் பைக்குள் இருக்கும் ஒரு மில்லிமீடர் அளவிலான் சிறு ஓட்டை கொண்டதாக.  கண்களைத் தனித் தனியாக எல்லாப் பக்கமும் சுற்ற வல்லது பச்சோந்தி.

 

பச்சோந்தியின் வால் அதற்கு ஐந்தாவது கால்.  ஒரு குச்சியில் இருந்து மற்றொன்றுக்குத் தாவும் போது முதலில் உடலை கவிழ்த்து வைத்த ஆங்கில எழுத்து யூ போன்று வளைத்துக் கொண்டு முன்னங் கால்களைக் கொண்டு புதிய குச்சியைப் பிடிக்கப் பார்க்கும். எட்டவில்லை என்றால் முதுகை நிமிர்த்தி உடலை நீட்டி முன்னே உள்ள குச்சியைப் பிடிக்கப் பார்க்கும்.  அப்போதும் எட்ட வில்லை என்றால் தனது வாலை இருக்கும் குச்சியில் விஷ்ணுச் சக்கரம் போன்று சுருட்டிக் கொண்டு நான்கு கால்களையும் விட்டுவிட்டு எட்டிப் பார்க்கும்.  மீண்டும் எட்ட முடிய வில்லையா?  விஷ்ணுச் சக்கரத்தினை மெதுவாகப் பிரித்து குச்சியை எட்டிப் பிடிக்கப் பார்க்கும்.  அப்பொதுகூட எட்ட வில்லையாபேசாமல் வாலை மீண்டும் விஷ்னணுச் சக்கரமாக சுருட்டி உடலை பின்னே இழுத்து வந்த வழியெ திரும்பி விடும்.

 

பச்சோந்தியின் நாக்கு கிட்டத் தட்ட அதன் உடல் நீளத்திற்கே ஆனது.  வேண்டும்போது நீட்டி முன்பக்கமாக சாட்டை போல வேளியே மின்னல் வேகத்தில் தள்ளி பசை கொண்ட நுனி நாக்கால்  அதற்கு மிகவும் பிடித்த உணவான ஈ மற்றும் சிறு புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும்.  நாக்கு ஒட்டிக் கொண்டிருப்பதும் அடி வாயில் அல்ல.  நுனி வாயில்.

 

பச்சோந்தியின் முன்னங் கால்களில் வெளிப்புறம் இரெண்டும் உட்புறம் மூன்றுமாக ஊள்ள நகங்கள் பின்னங் கால்களில் வெளிப் புறம் மூன்றும் உட்புறம் இரெண்டுமாக இருக்கும்.

 

இப்படிப் பல வியக்கத் தக்க விநோதங்களை பச்சோந்திக்கு அதன் வாழ்க்கைக்கேற்ப அளித்திருக்கிறான் ஆண்டவன்.

 

பச்சோந்தி நல்ல பாம்பு போன்று விஷம்கொண்டது என்பர் சிலர்.  இது முற்றிலும் தவறான ஒரு கருத்து.  கொல்லப்படவிருந்த ஒரு பச்சோந்தியை காப்பாற்றும் பொருட்டு அதன் வாய்க்குள் என் விரலை விட்டிருக்கிறேன்.  அதுவும் நன்றாகக் கடித்தது.  ஆனால் இன்றும் நான் உயிருடன் தான் இருக்கிறேன்.  அந்தப்  பச்சோந்தியும் அன்று பிழைத்தது.



 

(ஆமை வேகத்தில் நகரும் பச்சோந்தி அசுர வேகத்தில் ஓடுது)

(படம் எடுத்தது ந.க.)

 

பச்சோந்தி என்றால் பச்சையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.  வேறு நிறங்களிலும் இருக்கலாம். அடுத்து வரும் படங்களைப் பாருங்கள்.



 

 

 

   

விஷ்ணுச் சக்கர வாலையும் கால் விரல்களையும் கண் அமைப்பினையும் பாருங்கள்

 

 

இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள்.  இறைவனை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.

 

( கடைசீ இரண்டு வண்ணப் படங்கள் கூகிளார் உபயம்)

 

நடராஜன் கல்பட்டு


--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


N. Ganesan

unread,
Jun 9, 2016, 9:34:23 PM6/9/16
to வல்லமை, vallamai, மின்தமிழ்

2000 வருடத்துக்கு முந்தைய கிரேக்கப் பாடல் ஓந்தியின் வண்ணங்களைக் கொண்டு நீதிக்கதை சொல்கிறது. வெள்ளகால் ப. சுப்பிரமணியமுதலியார் இதனைத் தமிழில் கோம்பிவிருத்தம் என மொழிபெயர்த்துள்ளார். அதில் யார் பாடியது என இல்லை. ஜேம்ஸ் மெர்ரிக் என்னும் 18-ஆம் நூற்றாண்டு கவிஞர் (கிரேக்க அறிஞர், ஆக்ஸ்போர்ட்) ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 1897-ல் வெ.ப.சு. தமிழில் எழுதினார். பின்னர் டிகேசி உரையும் இருக்கிறது (1931). மெர்ரிக்கின்  கோம்பிக் கவிதை (கிரேக்க மூலத்தில் இருந்து) தேடிக் கண்டேன்:

http://www.bartleby.com/380/poem/421.html

அச்சானபோதே பாராட்டப்பெற்றது. “Mr. Merrick is best known to general readers by his amusing little poem entitled The Chameleon.” இன்றைய தமிழில் வரவேண்டும்.

 

>உருவத்தில் ஓணான் மாதிரித் தோன்றினாலும் இது ஓணான் போல வேகமாக

> ஓடக்கூடிய ஒன்றல்ல.  முன்னும் பின்னுமாக ஆடி ஆடி நிதானமாக ஒரு ஒரு அடியாக

> காலை முன் வைத்து நகரும்.  அதே சமயத்தில் எதிரிகளிடம் இருந்து உயிர் தப்பிட

> வேண்டுமெனின் வேகமாக ஓடும் சக்தியும் கொண்டதிது.

 

தூங்கிசை வண்ணத்துக்கு உவமை (யாப்பருங்கலம்): ‘‘முதுபிடி நடந்தாற்போலவும், கோம்பி நடந்தாற் போலவும், நாரை நடந்தாற் போலவும் வரும். அவை ஒருபுடை ஒப்பினால் தூங்கிசை வண்ணம் எனக் கொள்க."

 

>பச்சோந்தி நிறம் மாறும் என்பது உண்மை.  ஆனால் நினைத்தபடி எல்லாம் அது இருக்கும்

> சுற்றுப் புரத்திற்கேப்ப நிறம் மாறும் என்பது தவறு.  சாதாரணமாக பச்சை நிறத்திலே சில

> சிறு கருப்புக் கட்டங்களுடன் காணப்படும் இது கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை நல்ல

> பச்சை நிறத்திலிருந்து, கரும் பச்சையாகவொ அல்லது வெளிர் பச்சையாகவோ

 >மாறுகிறது.  அதன் மீதுள்ள கருப்பு புள்ளிகளோ கட்டங்களோ சற்றே மாறுகின்றன.

 

 ஓந்தி < கோம்பி. ஓத்தி <கோத்தி. ஓதி என்பது சங்கத் தமிழிலேயே வந்துவிட்டது. கோம்பிகளில் representative species பச்சை ஓணான் தான். இது சிவப்பாக மாறுவதில்லை என்பது முக்கியச் செய்தி. ஓந்தியின் அதிசயமான நாக்கின் திறத்தால் இந்த ஊரும் பிராணியின் தமிழ்ப்பெயர் வருகிறது.

 

 நா. கணேசன்

 

The Chameleon
By James Merrick (1720–1769)

 
OFT has it been my lot to mark
A proud, conceited, talking spark,
With eyes that hardly served at most
To guard their master ’gainst a post;
Yet round the world the blade has been,        5
To see whatever could be seen.
Returning from his finish’d tour,
Grown ten times perter than before,
Whatever word you chance to drop,
The travell’d fool your mouth will stop.        10
“Sir, if my judgment you’ll allow,
I’ve seen, and sure I ought to know.”
So begs you’d pay a due submission,
And acquiesce in his decision.
 
Two travellers of such a cast,        15
As o’er Arabia’s wilds they pass’d,
And on their way, in friendly chat,
Now talk’d of this, and then of that,
Discoursed awhile, ’mongst other matter,
Of the Chameleon’s form and nature.        20
“A stranger animal,” cries one,
“Sure never lived beneath the sun:
A lizard’s body lean and long,
A fish’s head, a serpent’s tongue,
Its foot with triple claw disjoin’d,        25
And what a length of tail behind!
How slow its pace! And then its hue!
Who ever saw so fine a blue?”
 
“Hold, there!” the other quick replies;
“’Tis green; I saw it with these eyes,        30
As late with open mouth it lay,
And warm’d it in the sunny ray.
Stretch’d at its ease the beast I view’d,
And saw it eat the air for food.”
 
“I’ve seen it, sir, as well as you,        35
And must again affirm it blue.
At leisure I the beast survey’d
Extended in the cooling shade.”
 
“’Tis green, ’tis green, sir, I assure ye.”
“Green!” cries the other in a fury;        40
“Why, sir, d’ye think I’ve lost my eyes?”
“’Twere no great loss,” the friend replies;
“For if they always serve you thus,
You’ll find them but of little use.”
 
So high at last the contest rose,        45
From words they almost came to blows,
When luckily came by a third;
To him the question they referr’d,
And begg’d he’d tell them, if he knew,
Whether the thing was green or blue.        50
 
“Sirs,” cries the umpire, “cease your pother;
The creature’s neither one nor t’other.
I caught the animal last night,
And view’d it o’er by candle-light.
I mark’d it well; ’twas black as jet.        55
You stare! But, sirs, I’ve got it yet,
And can produce it.” “Pray, sir, do;
I’ll lay my life the thing is blue.”
“And I’ll be sworn, that when you’ve seen
The reptile, you’ll pronounce him green.”        60
 
“Well, then, at once to ease the doubt,”
Replies the man, “I’ll turn him out;
And when before your eyes I’ve set him,
If you don’t find him black, I’ll eat him.”
 
He said; and full before their sight        65
Produced the beast, and lo! ’twas white.
Both stared; the man look’d wondrous wise.
“My children,” the Chameleon cries
(Then first the creature found a tongue),
“You all are right, and all are wrong.        70
When next you talk of what you view,
Think others see as well as you;
Nor wonder if you find that none
Prefers your eyesight to his own.”

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 9, 2016, 11:16:44 PM6/9/16
to வல்லமை
​​

2016-06-10 7:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

 ஓந்தி < கோம்பி. ஓத்தி <கோத்தி. ஓதி என்பது சங்கத் தமிழிலேயே வந்துவிட்டது. கோம்பிகளில் representative species பச்சை ஓணான் தான். இது சிவப்பாக மாறுவதில்லை என்பது முக்கியச் செய்தி. ஓந்தியின் அதிசயமான நாக்கின் திறத்தால் இந்த ஊரும் பிராணியின் தமிழ்ப்பெயர் வருகிறது.

 


​பச்சை ஓணான் வேறு.  பச்சோந்தி வேறு.  முன்னது எப்போதுமே பச்சையாக இருக்கும்.  நிறம் மாறாது.  இரண்டையுமே நான் பார்த்து ரசித்திருக்கிறேன்.​

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 9, 2016, 11:17:57 PM6/9/16
to வல்லமை

பச்சோந்தி

 

கண்டார் ஒருவர் பச்சோந்தி

கொண்டார் காதல் அதன் மேல் விரும்பி

கண்டவரிட மெல்லாம் சொன்னார்

கண்டேன் நான் இன்றொரு வினோதப் பிராணி

கொண்டதது கிளிப் பச்சை நிறம்

அண்டத்தின் அதிசம் அது என்றார்

 

உண்டதற்குக் கண்கள் இரண்டு

தனித் தனியே திருப்பிடும் சக்தி கொண்டது

சாட்டையென ஓர் நாக்கு

போட்டிடும் அது கொண்டு மரண அடி ஈக்கு

மூன்றும் இரண்டுமாய் ஒட்டிய விரல்கள் அதற்கு

கொண்டதது நீண்ட வால்

அதற்கது ஐந்தாம் கால்

சுருட்டியே அதை மாலவன் சக்கரம் போல்

பற்றியே கிளைதனை அது

எட்டிப் பிடிக்க முயலுது

முற்றிலுமாய் உடலை நீட்டி

எட்டாத தூரத்தில் இருக்கும் கிளை ஒன்றை

எட்டவில்லை எனின்

மெல்லப் பிரித்திடுது சுருட்டிய வாலை

பெருக்கிட உடல் நீளம்

அப்போதும் எட்ட வில்லை யெனின்

சுருட்டியே மீண்டும் வாலை

இழுத்திடுது உடலை முன் இருந்த கிளைக்கே

 

கண்டுள்ளேன் நானும் அந்தப் பிராணி

கொண்டதில்லை அது பச்சை நிறம்

கொண்டதது கரும் பச்சைக் கட்டம்

கதை கேட்ட ஒருவர் சொன்னார்

 

 

இல்லை பச்சை நிறமது

இல்லை இல்லை கரும் பச்சைக் கட்டமது

 

சென்றார் இருவரும்

கண்டிட நியாயம்

மூன்றாம் மனிதரிடம்

 

சொன்னார் அவர் கண்டிருக்கிறேன்

அப் பிராணியை நானுந்தான்

இல்லை யதன் நிறம் பச்சையயோ

கரும் பச்சைக் கட்டமோ

இரத்தச் சிவப்பு நிறம்

கொண்டதது என்றாரவர்

 

இல்லை பச்சை நிறம் கொண்டதது

இல்லை இல்லை கரும் பச்சைக் கட்டம்

இல்லை யில்லை இல்லை சிவப்பது

 

சண்டை வலுத்திட மூவருக்கும்

மண்டை உடைந்து அவர்க்கு

மாறியது அவர் சட்டை நிறம் சிவப்பாய்

மாறிடும் பச்சோந்தியின் நிறம் போலது

 

(இன்று நா. கணேசன் அவர்கள் அனுப்பி இருந்த ஜேம்ஸ் மெரிக் என்ற ஆங்கிலக் கவிஞரின் “பச்சோந்தி” கவிதையினைத் தழுவி எழுதியது.)

 

(பச்சோந்தி படம் கல்பட்டு க.சு.கிருஷ்ணன்)

 

10-06-2016                            நடராஜன் கல்பட்டு

 


2016-06-10 7:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Jun 10, 2016, 3:16:02 AM6/10/16
to வல்லமை, மின்தமிழ்

(இன்று நா. கணேசன் அவர்கள் அனுப்பி இருந்த ஜேம்ஸ் மெரிக் என்ற ஆங்கிலக் கவிஞரின் “பச்சோந்தி” கவிதையினைத் தழுவி எழுதியது.)

உங்கள் தழுவலைப் படித்தேன். ஆனால், மெர்ரிக்கின் கவிதை சண்டையில் முடிவதில்லை. 

மெர்ரிக்கின் கிரேக்கத் தழுவல் ஆங்கிலங் கற்ற தமிழறிஞரால் கடின நடையில் மொழியாக்கங் கண்ட கவிதை. விலங்கியல் மருத்துவத் துறை இயக்குனராய் விளங்கிய
வெ.ப.சு. அவர்களின் ‘கோம்பி விருத்தம்’ (1897) உருவாக ஆதாரம் இந்த ஆங்கிலக் கவிதையே. நூலை இங்கே வாசிக்கலாம்:

பேரா. க. கைலாசபதி தமிழில் ஆங்கிலத்தின் தாக்கம் பற்றிச் சொல்கிறபோது வெ.ப.சு. செய்யுளையும் சொல்கிறார்:
”தாம் கற்ற ஆங்கிலமொழி-இலக்கியத்தில் மட்டுமன்றி, உலகமெங்கணும் நவீன வாழ்கை, உரை நடையையே சிறப்பிக்கிறது என இவர்கள் கண்டனர். தமது வாழ்க்கை நிலையோடொட்டிய, அதற்கு இன்றியமையாத, புதிய எண்ணங்களும் இலட்சியங்களும் கருத்துப் படிவங்களும் எளிய, தௌிவான உரைநடை மூலமாகவே நடமாடுகின்றன என்றறிந்தனர். சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலே சமயத்துறையிலும் சமூகத்துறையிலும் இலட்சிய வேகத்துடன் முன்னின்றுழைத்த ஆறுமுக நாவலர் போன்றவர்கள் உரைநடையின் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்திருந்தனர். நாவலர் தமது யுகத்துக்கும் அதற்கேற்ற சாதனத்துக்கும் உள்ள தொடர்பைப் பூரணமாக உணர்ந்திருந்தார். ஈழநாட்டுப் புலவர் சோமசுந்தரனார் பாடியுள்ளதுபோல, செய்யுள் நடையிலேயே பயின்று வந்த தமிழணங்கிற்கு,

    "வன்னநடை வழங்குநடை வசனநடை
    யெனப்பயிற்றி வைத்த ஆசான்"
நல்லை நகர் நாவலர், அக்காரணத்தினாலேயே "வசன நடை கைவந்த வல்லாளர்" ஆனார். 'வழங்கும் வசன நடை'க்கு ஆதர்ஷ மாக விளங்கும் நாவலர், செய்யுள் இயற்ற முனைந்தபோது சம்பிரதாய முறைப்படி "சீர்பூத்த கருவி நூல்..." என்று தொடங்குவது போன்ற பழைய நடையில் அமைந்தவற்றையே பாடினார். கதிரை முருகன்மேல் சில கீர்த்தனங்கள் பாடியுள்ளாரெனினும், பொதுவாக அவர் செய்யுட்கள் அக்காலத்தில் வாழ்ந்து கவி பாடிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, வித்துவான் தியாகராசச் செட்டியார் முதலியோர் செய்யுட்களைப்போலச் செய்யப்பட்டவையே. 

பாரதி காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் வித்துவான்கள் மாத்திரமன்றி முற்கூறிய ஆங்கிலக் கல்வி பயின்ற நவீனர்களும் பழைய பந்தாக் கவிகளையே பாடுபவராயிருந்தனர். உதாரணமாக, பாரதியின் இளமைத் தோழனாக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் நிரம்பிய ஆங்கிலப் புலமை பெற்றவர்; நவீன வாழ்வியல் தெரிந்தவர்; பல்லாண்டுகள் வழக்கறிஞராகத் தொழில் பார்த்தவர். தற்காலத் தமிழில் புதுக் கவிதைகள் அரிதாயுள்ளன என்றுணர்ந்து இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே உரையும் செய்யுளும் எழுதிவந்தவர். புதுக்கவிகளாக அன்னார் படைத்தவற்றுள் "மாரி வாயில்", "மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி" என்பன வித்துவான்களும் வியந்து பாராட்டியவை. ஆனால் காய்தல் உவத்தலின்றிப் பார்க்கும் ஒருவர் அவற்றைப் பழந்தமிழ்ச் செய்யுட்கள் எனக் கருதினால் வியப்பிருக்காது. இப்பனுவல்களில் சோமசுந்தர பாரதியாரது ஆழ்ந்த தமிழ்ப்புலமை சுடர்விடுகிறது. ஆனால் அவை தற்காலத் தமிழால் ஆனவையல்ல. "பொங்கல் நிகழ்ச்சிப் பாடலை" 1909-ம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். அதுபற்றி முன்னுரையில் (1947) கூறப்படுவதாவது: 

"முன் எழுதியவற்றுட் சிலவற்றைப் பொருத்தம் நோக்கி திருத்தியும் அமைத்தது இத்தாழிசைக் கொச்சகச் செய்யுள். இப்பாக்களை வண்ணவகை எனக் கொள்ளினும் இழுக்கில்லை... இது அகத்திணைச் செய்யுளாதலின், இதில் "சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார்" ஆயினர். இச்செய்யுள் அகப்பகுதியில், 'நிகழ்ந்தது கூறி நிலையல்' எனும் துறையில் தலைவி கூற்றாகும். இது தொல்காப்பியர் கூறும் 'சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து, ஓதல் வேண்டாது குறித்தது தோன்றும்' புலன் வகையாகும். 'விருந்து' வகை எனினும் பொருந்தும்." 

சான்றோர் செய்யுட்களுக்கு, நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலிய இடைக்கால உரையாசிரியர் விளக்கங் கூறுவதுபோல, தமது புதுமைக் கவிக்கு இத்துணை விளக்கம் அவசியமெனக் கருதுகிறார் கணக்காயர். நூலுக்கு முகவுரை வழங்கிய கரந்தைத் தமிழ்ச் சங்கப் புலவர் நீ. கந்தசாமிப்பிள்ளை கூறுவதுபோல, "இப்பாக்களில் சொல்லில் நொய்மையும் பொருள் எளிமையும் காணவில்லை." ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு அவிழ் பதம் என்பதுபோல கணக்காயர் போன்று "தமிழிலும் ஆங்கிலத்திலும் பல அரிய அறிவினிக்கும் நூல்கள் இயற்றியோர்" இத்தகைய பழைய நடையையே போற்றினர் என்பதற்கு இப்பனுவர் சிறந்த சான்று. ஆயினும் இன்னுமோர் உதாரணம் பார்ப்போம். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் (1857-1947) உயர்தர வேலையிலிருந்தவர்; ஹேபர்ட் ஸ்பென்ஸர் ஆங்கிலத்தில் கல்வியைப்பற்றி எழுதிய கட்டுரையை மொழிபெயர்த்தவர். ஆயினும் அவர்பாடிய கோம்பி விருத்தம், நெல்லைச் சிலேடை வெண்பா என்பன மரபுவழி வித்துவான்கள் வியந்தவை. கணித நூற்பேராசிரியராயும் விஞ்ஞானத் துறையில் ஈடுபாடுடையராயும் விளங்கிய பூண்டி அரங்கநாத முதலியார் கச்சிக் கலம்பகம் பாடி அரங்கேற்றினார். 

இவ்வுதாரணங்கள் ஒரு பெரும் உண்மையை எமக்குணர்த்துகின்றன. தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலில் நான் வேறொரு தொடர்பிற் கூறியிருப்பது இங்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது:

"புதுமையான கருத்துக்களை வசனமாக எழுத முனைந்த அறிஞர் பலர் தமிழ்க் கவிதை எழுதிய போதிலும் பல்லுடைக்கும் கடின நடையிலே மரபு வழிவந்த பாடல்களையே பாடினர். அதுவரை எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்துவந்த வசனத்தை இவர்கள் தன்னம்பிக்கையுடன் கையாண்டனர்; அதன் எஜமானராயினர். கவிதையோ பாரம்பரியச் சிறப்புடையதாகலின், அதனைப் பயபக்தியுடன் அணுகினர். கவிதை இவர்களை ஓர் அளவுகோல் கொண்டும் உரைநடையைப் பிறிதோர் அளவுகோல் கொண்டும் மதிப்பிட்டனர். இவ்வீரடிநிலை இன்றுவரை காணப்படுகிறதெனலாம். பழந்தமிழ்க் கவிதைப்பற்று உள்ளவராகவும், தேவையேற்படின் தாமும் அந்தாதி, கலம்பகம் முதலிய பிரபந்தங்கள் பாடும் ஆற்றல் பெற்றவராகவும் இருந்த இவர்களது முக்கியமான படைப்புக்கள் கவிதையாகவன்றி உரைநடையி லமைந்தமை கவனிக்கற் பாலது." 

மேற்கூறியவர்களுக்குக் கவிதை சொகுசாகவும் இன்பப் பொருளாகவும் இருந்தது. அதே சமயத்தில் இவர்களிற் பெரும்பாலானோர் பழந்தமிழ்க் கவிதைகளை அவற்றிற் காணப்படும் அறவியற் கருத்துகளக்காகவே போற்றினர் என்று எண்ணத் தோன்றுகிறது. அந்நிய ஆதிக்கத்தின் விளைவாக ஏற்பட்டுக் கொண்டிருந்த பாரதூரமான சமுதாய மாற்றங்கள் மக்களது ஒழுகலாறுகளைப் பாதிக்கத் தொடங்கியிருந்தன. ஈரடிநிலையிலிருந்த இக் கல்விமான்கள் பண்டைய நீதிநூல்களைத் துணையாகவும் புகலிடமாகவும் கொண்டனர். மாதவையர் எழுதிய பத்மாவதி சரித்திரம் போன்ற நாவலில் இதனைக் கண்டு தௌியலாம். ”
[...]
”வெள்ளக்கால் முதலியார் ஆங்கிலக் கவி இராட்சசனான மில்டனைத் தமிழில் (சுவர்க்க நீக்கம்) பெயர்த்தவர் 1914-இல் அகலியை வெண்பா என்ற சுவைமிக்க கதைப்பாடலை இயற்றியவர். J.Merrick என்பார் யாத்த (The Chameleon) என்ற பாடலைத் தழுவி கோம்பிவிருத்தம் பாடியவர். அவரே சுயமாக நெல்லைச் சிலேடை வெண்பா என்ற கடினமான நூலை இயற்றினார். "நெல்லை என்னும் சொல்லை ஆசாக வைத்து நூறு சிலேடை கூறுதல் மிகக் கொண்டாடற்பாற்று" என்று அன்றைய விவேகபானு என்ற சஞ்சிகை விமர்சன மெழுதி யிருந்தது. முதலியாரின் கோம்பி விருத்தம் வௌிவந்த பொழுது, சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள், "பண்டிதரும் வித்தியார்த்திகளும் ஒரு நிகராக இன்பம் அனுபவிக்க ஏற்ற நூல்" என்று பாராட்டினர். பொருளமைதி ஒருபுறமிருக்க வெள்ளக்கால் முதலியாரும். பூண்டி முதலியாரும் சுந்தரம்பிள்ளையைப்போல பழைய யாப்பு வகைகளையே பயன்படுத்தியமையும் கவனிக்கத்தக்கது. எனவே புதுமைப் பண்பு குறைவாகவும், பழமை கூடுதலாகவுமே பாரதிக்கு முந்திய இப்புலவர் பெரு மக்களிடத்துக் காணப்பட்டன. இந்நிலையில் பி.ஸரீ. குறிப்பிடுவதுபோல சுந்தரம்பிள்ளை, "பாரதியார் போல் புதிய சந்தம் நாடோடி மெட்டு முதலியவற்றைக் கையாளவில்லை. இராமலிங்க சுவாமியைப் போல் கும்மி, கண்ணி முதலிய மெட்டுக்களையும் கையாளவில்லை. புதிய கருத்துக்களையும் பழைய பாவகையிலேயே அமைத்திருக்கிறார்." 

~NG

On Thursday, June 9, 2016 at 8:17:57 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:

பச்சோந்தி

 

கண்டார் ஒருவர் பச்சோந்தி

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 10, 2016, 4:17:32 AM6/10/16
to வல்லமை

2016-06-10 12:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
Kalpattu wrote:
http://www.bartleby.com/380/poem/421.html
(இன்று நா. கணேசன் அவர்கள் அனுப்பி இருந்த ஜேம்ஸ் மெரிக் என்ற ஆங்கிலக் கவிஞரின் “பச்சோந்தி” கவிதையினைத் தழுவி எழுதியது.)

உங்கள் தழுவலைப் படித்தேன். ஆனால், மெர்ரிக்கின் கவிதை சண்டையில் முடிவதில்லை. 

​தழுவல் என்று சொன்னது தவறு.  அன்பர் நா கணேசன் இன்று அனுப்பி இருந்த ஜேம்ஸ் மெரிக்கின் "கெமேலியன்" என்ற ஆங்கிலக் கவிதை என்னை இந்த "பச்சோந்தி" யை எழுத வைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும் நான்.  

தவறினை சுட்டிக் காட்டியதற்கு நன்றி நா.கணேசன் அவர்களே.​



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


N. Ganesan

unread,
Jun 10, 2016, 4:30:32 AM6/10/16
to வல்லமை, மின்தமிழ்


On Friday, June 10, 2016 at 1:17:32 AM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:

2016-06-10 12:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
Kalpattu wrote:
http://www.bartleby.com/380/poem/421.html
(இன்று நா. கணேசன் அவர்கள் அனுப்பி இருந்த ஜேம்ஸ் மெரிக் என்ற ஆங்கிலக் கவிஞரின் “பச்சோந்தி” கவிதையினைத் தழுவி எழுதியது.)

உங்கள் தழுவலைப் படித்தேன். ஆனால், மெர்ரிக்கின் கவிதை சண்டையில் முடிவதில்லை. 

​தழுவல் என்று சொன்னது தவறு.  அன்பர் நா கணேசன் இன்று அனுப்பி இருந்த ஜேம்ஸ் மெரிக்கின் "கெமேலியன்" என்ற ஆங்கிலக் கவிதை என்னை இந்த "பச்சோந்தி" யை எழுத வைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும் நான்.  

தவறினை சுட்டிக் காட்டியதற்கு நன்றி நா.கணேசன் அவர்களே.​



நன்றி, கல்பட்டு ஐயா. மெர்ரிக்கின் கவிதையில் சிவப்பு நிறமே பச்சை ஓந்திக்கு வருவதில்லை. நீங்களும் உங்கள் கோம்பி(= பச்சோந்தி, பின்னர் ஓந்திப் பொது) கட்டுரையில்
பச்சோந்தி நிறம் மாறும்போது கண்டகண்ட (உ-ம்: சிகப்பு) நிறம் ஆகாது எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள். வேறு ஓந்திகள் ஆகலாம், ஆனால் பச்சோந்தி சிகப்பு ஆவதில்லை.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 10, 2016, 5:05:23 AM6/10/16
to வல்லமை, மின்தமிழ்
பச்சோந்தி சிவப்பு ஆவதில்லை.  ஆனால் பச்சோந்தி வகையிலே சிவப்பு நிறம் கலந்த ஓந்திகள் இருக்கின்றனவே?  கீழுள்ளதைப் பாருங்கள்.


​ 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jun 10, 2016, 6:07:23 AM6/10/16
to vallamai, A K Rajagopalan, தமிழ் சிறகுகள், Thamizhthendral, நட்புடன், அந்தியூரன் பழமைபேசி, அப்பண்ணா கோலாலம்பூர், vallamai editor, பவளஸ்ரீ, palsuvai, bcc: Ganchu, ganesh, Geetha Natarajan, Gopi, Gopi Rajagopal, H. Venkatesh, Jayashree Iyer, K.N.Rajalakshmi, Kiran Iyer, Kumar, Kumar Kalpat, Kumar Subramanim, Lalitha Rajagopalan, Mani, mythili, Nandha Kishore, Nimmu Kumar, Nisha Iyer, Prasanna, R. Ganesh, Raj Sriram, Rajaram Naraayanan, Ram Kalpat, Ram Kalpat, Ramnath Iyer, Ramu, sashisri, Sekhar @ Krishnan Kalpat Subramanian, Shankar, Srikant, Sundaram N M, Swaroon Sridhar, V rajaraman, vidhya sundar, vidh...@hotmail.com, crazy.mohan, Dr. Udhayaraja, Indhu Madhavan, jayasree shanker, Koothanainar SRS, Krishnan V.R., Mohan Aiyaswami, Muralidharan Sourirajan, N.Srinivasan, Narasimhan C R, narender...@rediffmail.com, P. N. Subramaniam, Padma Vasantharaajan, R. Vaidhyanathan, Rajagopal Subramaniyam, Raji, Ramakrishnan K S, Ramalakshmi Rajan, Ramya, Shoba, Subashini Tremmel, subramanian Subramanian, Sulochana Suriyanarayanan, Sumathy Ramesh, sundar rajagopal, Suri siva, Velaydham Sankaranarayanan, velayudan sankaranarayana, VV Ramesh, அப்பண்ணா, ச. கம்பராமன், சுந்தர்ஜி ப்ரகாஷ், Kaviyogi Vedham


6 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 4:03 அன்று, Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com> எழுதியது:

 

 

இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள்.  இறைவனை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.


ஆனால் பாவம் டார்வின். உலகையே புரட்டிப்போடும் கோட்பாடுகளை கண்டார்.

 


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jun 10, 2016, 8:48:41 AM6/10/16
to வல்லமை, minT...@googlegroups.com


On Friday, June 10, 2016 at 2:05:23 AM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:
பச்சோந்தி சிவப்பு ஆவதில்லை.  ஆனால் பச்சோந்தி வகையிலே சிவப்பு நிறம் கலந்த ஓந்திகள் இருக்கின்றனவே?  கீழுள்ளதைப் பாருங்கள்.



இந்தியாவிலோ, உலகில் பல இடங்களிலுமோ இல்லாதன இவை.

ஆப்பிரிக்கா அருகுள்ள மடகாஸ்கர் தீவின் வடகடல் ஓரம் மட்டும் வாழும் அரிய ’செவ்வரி பச்சோந்தி’.
வரிப்புலிப் பச்சோந்தி என ஆங்கிலத்தில் பெயர். கெமெலியான்: https://en.wikipedia.org/wiki/Panther_chameleon
புலிப் பச்சோந்தி  இருக்குமிடம்:


எல்லா ஓந்தி, ஓணான்களுக்குப் பொதுவாக 
இருக்கட்டும் என கோம்பி விருத்தம் எனப் பாடினேன் என்கிறார் வெபசு.
நம்ம நாட்டுப் பச்சோந்தி (உஸ்தாத் மன்சூர் வரைந்தது. முகலாய தர்பார்):


 நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 10, 2016, 9:15:39 AM6/10/16
to வல்லமை, minT...@googlegroups.com
கல்பட்டாருக்குப் பிடிக்கக்கூடிய பச்சை ஓந்தியின் பல்லாண்டு அவதானிப்பு:
படித்து மகிழ்க,

N. Ganesan

unread,
Jun 11, 2016, 6:08:56 AM6/11/16
to வல்லமை, மின்தமிழ்

On Thursday, June 9, 2016 at 8:16:44 PM UTC-7, Natrajan Kalpattu Narasimhan wrote:

2016-06-10 7:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

 ஓந்தி < கோம்பி. ஓத்தி <கோத்தி. ஓதி என்பது சங்கத் தமிழிலேயே வந்துவிட்டது. கோம்பிகளில் representative species பச்சை ஓணான் தான். இது சிவப்பாக மாறுவதில்லை என்பது முக்கியச் செய்தி. ஓந்தியின் அதிசயமான நாக்கின் திறத்தால் இந்த ஊரும் பிராணியின் தமிழ்ப்பெயர் வருகிறது.

 


​பச்சை ஓணான் வேறு.  பச்சோந்தி வேறு.  முன்னது எப்போதுமே பச்சையாக இருக்கும்.  நிறம் மாறாது.  இரண்டையுமே நான் பார்த்து ரசித்திருக்கிறேன்.​



நன்றி, ஐயா. பச்சோணான் இருக்கிறது. மரவோணானும் இருக்கிறது ~ இது மர (brown color) நிறம்.

ஓந்தி, ஓணான் - இரண்டுமே முதலில் பச்சோந்திக்கு உருவாகி பிறகு தொடர்புடைய இவைகட்கு பெயராக விரிந்துள்ளது எனலாம்.
கோள்+நா = கோணா(ன்) > ஓணான், கோள்- (இரையைப் பிடிக்கும் நாக்கு) கோண்பு > கோம்பு > கோம்பி (பச்சோந்தி).
(1) வண்பு > வம்பு என்னும் தமிழ்ப்பெயர் bamboo என ஆங்கிலத்தில் வருகிறது. கிழக்கு ஆசியாவின் பண்பாடு வம்பு தாவரத்தின் அடிப்படையாய் அமைந்த பண்பாடு.
(2) வெண்கால் + ஊர் = வெங்காலூர் (வெங்கால மரம் = ஞெமை/நமை மரம், button-flower tree), பெங்களூரின் ஒரிஜினல் பெயராய் கல்வெட்டுகளில் பயில்வது.
(3) கண்பு = கம்பு (தானியம்) - அவிநாசிக் கல்வெட்டில். கண்புள் - கம்பு போன்ற உறுப்பை அலகின் மேல் தாங்கும் நாமக்கோழி (=கம்பங்கோழி/சம்பங்கோழி).. (4) கண்பை = சண்பை (புல்) etc.,
தன் வேர்களும், விழுதுகளும் பாறையிலும், சுவற்றிலும் பரவும் Figs (ஆல், அரைசு, இத்தி, ... போன்றன). இவற்றுக்கு கோளி = Figs என தமிழில் பழம்பெயர்.
பாம்பு/பாமு/பாவு பா- போல, கோம்பு/கோமு/கோவு என்று கொண்டு நாக்கின் திறத்தால் கோம்பி என்று பெயர் எனலாம்.
அல்லது, கோண்பு கோம்பு என ஆயிற்று (Cf. கோணான்/ஓணான்) எனவும் சொல்லலாம். பச்சோந்தி சிவப்பாதும் இல்லை, சினப்பதும் இல்லை. கோபம் தமிழ் மூலம் கொண்ட சொல்லும் இல்லை.

இதனை யோசிக்கையில், திருத்தணி திருப்புகழில் வரும் கோம்புமொழி படைத்த பரத்தையரைச் சொல்லும் வாக்கு காண்போம்:
கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்
      பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்
      கோம்புப டைத்தமொழிச்சொல்ப ரத்தியர்      புயமீதே
   கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள்
      வாஞ்சையு றத்தழு விச்சிலு கிட்டவர்
      கூன்பிறை யொத்தந கக்குறி வைப்பவர்       பலநாளும்
ஈந்தபொ ருட்பெற இச்சையு ரைப்பவ
      ராந்துனை யற்றழு கைக்குர லிட்டவ 
      ரீங்கிசை யுற்றவ லக்குண மட்டைகள்  பொருள்தீரில்
   ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்

 
இந்த இடத்தில் கோம்புமொழி என்பது கோபமொழி எனல் பொருந்துவதில்லை எனக் கருதுகிறேன்.
கோம்பு மொழி கோப மொழியானால் ’கஸ்டமர்’ எப்படி வருவார்கள்? கோம்புமொழி - கோர்வையான
பசப்பல் வார்த்தை அல்லது கோண்புமொழி = கோணலான, ஆனால் வசீகரிக்கும் கொஞ்சலையுடைய
மொழிபேசும் பரத்திகள் எனலாம்.

---------------------------------------------

பச்சோணான், மரவேணானுக்கு வருவோம். இரண்டுக்கும் ஆண்களின் தலை இனப்பெருக்க காலத்தில்
சிவந்து சிலகாலம் காணப்படும். கள் (மதம்) ஊறும் விடலை யானை = களிறு. காளம் (கறுப்பு) நிறத்
திமில் கொண்ட விடலை ஏறு ஏறும்பருவ விடை = காளை. அதுபோல், பச்சோணான், மரவோணான்
விடலை ஏறுகளுக்கு தமிழில் பெயர்: சீத்தி ஓணான். பைப்பில் சீத்தென தண்ணீர் அடித்தது என்கிறோம்.
சீத்தை (அ) சீத்தா என பேச்சுவழக்கில் இலிங்கக் குறிக்கு ஒரு பெயருண்டு, This is called ideophone (சீத்தா - ஒலிக்குறிப்புச்சொல்).
சீத்துப்பூத்தெனல் cīttu-p-pūtteṉal , n. Onom. expr. of (a) short, quick breathing;
சீத்தடி-த்தல் cīttaṭi- , v. tr. < சீ- + அடி-. To sweep away, as wind; காற்று வாரிவீசுதல். பொடியைச் சூறை சீத்தடிப்ப (கலிங். 78).
காளை (ஏறுவிடை), களிறு (விடலையானை) போல சீத்தி ஓணான் என்பது தலைசிவந்த ஓணான் ஏற்றை ஆகும்.
இது இனவிருத்திக் காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே, ஜூன்) மட்டுமே சீத்தி ஓணான். மற்ற மாதங்களில் ஆண் ஓணான்கள்
இயல்பான நிலையை எய்திவிடுகின்றன.

நா. கணேசன்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jun 11, 2016, 6:58:30 AM6/11/16
to வல்லமை
அன்பு கணேசன்,

இலக்கியம் பலவும் படித்தவர் நீங்கள்.  எது ஒன்றுக்கும் இலக்கியத்திலிருந்தும் பண்டைத் தமிழில் இருந்தும் மேற்கோள்களும் விளக்கங்களும் அளித்திடுறீர்கள்.  நானோ இவை எதுவும் படிக்காதவன்.  

பறவைகள், விலங்குகள், புழு, பூச்சி இவற்றை நேரில் கண்டு, அவற்றுள் காணும் ஆச்சரியங்களைக் பார்த்து வியந்தவன்.

ஓணான் தனது முட்டைகளை எப்படி குட்டிகளாக மாறிட வைக்கும் தெரியுமா?  மண் தரையில் சுமார் மூன்று / நான்கு சென்டி மீட்டர் ஆழத்திற்கு, ஒரு சென்டிமீடர் விட்டத்தில் கால் விரல்களால் தொளை செய்து அதனுள் முட்டைகளை இடுகிறது.  பின்னர் கால்களால் மண்ணைத் தள்ளி, குழியை மூடி, முகவாய்க் கட்டையால் கிடிக்கிறது.  தரை சூட்டில் முட்டைகளில் இருந்து குட்டிகள் வெளி வருகின்றன.  ஆமைகளும் இப்படித்தான்.  

பல்லிகளும் ஓணான் போல ஊர்வனவாக இருந்தாலும் தன் முட்டைகளை புத்தகப் பெட்டி . அலமாரிக்குள்ளோ. மின் இணைப்புப் பலகைப் பெட்டியுள்ளோ இட்டு விட்டு அது பற்றி மறந்திடும்!
.




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages