என் ஐயம் .....
காவிரிக்குமுதன்முதல் கல்லணை கட்டிய கரிகால் சோழன் ..........
ஆதாரம் ?
அன்புள்ள மின் தமிழ் // சிங்கனெஞ்சன்// புவியியல் மேலாளர்//அவர்கட்கு
தமிழக போலி வரலாற்றாளர்கள் தன மனதிற்க்கு வந்ததை அறிவிற்குப்
பொ ருந்தாத உளறல் புராணக்கதை ஆசிரியர்கள் போல் சில நேரம் வாந்தி எடுத்து விடுகின்றனர் எவனோ சொன்னதை பின் வருவோர் ஆட்டுக்கூட்டம் போல் கீறல் விழுந்த இசைத்தட்டுபோல் அறிவினை சிறிதும் பயன் கொள்ளமல் சித்தத்தை அடகு வைத்துவிட்டு வேதாந்திகளாய் நடந்து கொள்வர்
தஞ்சைக்குச் சென்றால் விமானத்தில் நிழல் கீழே விழாது என 90 சதம் பேர்
இன்றும் சொல்லுவதில்லையா? என்னே மடத்தனம் இதைவிட அவர்களை திருத்த முயலாமல் நமக்கென்ன என செல்லும் தன்னலமே உருவான சோம்பேறிகள் மற்றவர்களின் செயலிலேயே வாழ்வின் தேவைகளை
பெறும் தளுக்குக் காரர்கள் தான் இந்த சமூகத்திற்கு சுமை
கரிகாலசோழன் ( கரிகால் சோழன் அல்ல - புள்ளி வேண்டுமிடத்தில் இட்டுக்கொள்ள வேண்டும் எனும் நியதியில் பிழையாக கொள்ளப்பட்டு வருகின்றது எனபது என் கருத்து ) தன தலை நகரம் உறையூரில் அடிக்கடி காவியின் வெள்ளத்தால் அரிப்புண்டு அவன் மனை பாழாகியதால் மண்ணாலான கரையை கல்லால் அணைத்தான் இதனை குறித்தொறதாம் கரிகால சோழன் (காவிரியின் கரைக்கு) கல்லணைக்
கட்டினான் என்றனர்
அ ணை என்றால் அணைத்தல் அவ்வளவே (தலை அ ணை) ஒருவரை ஒருவர் வாழ்த்துச் சொல்ல அணைத்தல் என்பன காண்க )
மேலும் ஒன்று பலர் ஓர் சொல்லினை பயன் கொள்ளும்போது பொறுப்புடன் பயன் கொள்ளாமல் எதோ தோராயமாக இப்படியும் இருக்கட்டும் என புரியாமையாலும் அறியாமையாலும் பலபோது கள்ளத்தனத்தாலும் பலவாக்கி விடுகின்றனர் அதனில் ஒன்று இந்த அணை என்பது
ஏரி குளம் குட்டை கண்மாய் இவற்றின் கரை களை கல்லினால் அணைப்பது தேவையாகி விட்டதால் அணைக்கரை என்றனர்
பின் அணைக்கரைப் போ ல் தோன்றும் ஓர் அமைப்பு நீரிணைத் தேக்க பயன் பட்டபோது அதுவே அணையெனவும் விளி க்க ப்பட்டு பின் ஓடும் நீர்வழியின் முன்பு குறு க்காக காட்டப்படும் எப்போது மேலெழுந்து வழியும் தேக்கும் நீருக்கும் பயனாகி உள்ளது
பாருங்கள் மேட்டூரில் உள்ளது அ ணை என்றால் திருச்சியில் உள்ளது ம் அணையாகுமா
ஆங்கிலேயர்கள் DAM எனபது வேறு BARRAGE வேறு எனத்தான் குறிப்பர்
முதலதி ல் நீர் பலநாள் தேங்கி நின்று வேண்டியபோது வழிய விடப்படும்
ஆ னால் Barrage ல் நீ ர் தேங்காது பல்வேறு கால்களாக தடுக்கும் அமைப்பு கொண்டு ஓடும் நீர் அளவினை மாற்றி கால் மாறி விடுவார் அவ்வளவே
யாரோ இத்தனையும் அ ணை என்ற வுடன் கள்ளத்தனம் மிக்க வர் காவிரிகரைக்கு அணைக்கட்டினமை பழம் குறிப்புகளாக உள்ளதை இ ணைத்து கரி காலன் கல்லணைக்கட்டடினான் என வீண் பெருமைத னை பரப்பினர் இது நாகரீக மற்ற உலக வரலாற்றுக் கள்ளத்தனம்
இப்போதுள்ள அமைப்பு முன்பும் பழமையானதொன்று இருந்திருக்கலாம் நான்கைந்து நூற்ராண்டுகளுக்கு முன்பு யாரோ அமைத்திருக்கலாம் அல்லது சோழ மன்னர்கள் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் அன்றி 2000 ஆண்டு பழமை எனபது முட்டாள்தனம் சிறியஅ மைப்புகளான வீடோ கோயில்களோ கிட்டவில்லை அப்படி இருக்க ஓர் மிக அகனற தோர் அமைப்பு கட்டி இருக்க வாய்ப்பில்லை கரைக்கு கட்டிய கல்லணைகளே காணவில்லை
அருவி என தூய தமிழ் சொல் இருக்க நீர் வீழ்ச்சி என ஆங்கிலத்திலிருந்து கொணர்ந்து தமிழினை வளமற்ற மொழிக்கு வளம் சேர்க்கின்றனாராம்
மேட்டூர் அ ணை காட்டியவுடன் கட்டியதற்கு சத்திய மூர்த்தி நீர்த்தேக்கம் வீடூர் நீர்த்தேக்கம் என்றனர் பின் வந்தோர் பொறுப்பிலில்லாமல் மீண்டும் அ ணை என அழைக்க முயல்கின்றனர்
ஓர் வரியில் சொலவதனால் இக்காலத்து வழங்கும் திரிந்த பொருளினை முற்காலத்து சொல்லிற்கு இணைத்து விடுவதுதான் பெரும் பி ழை
சில பாடல்களே கிட்டியுள்ள தகடூர் யாத்திரை எனும் மிகப்பழம் நூலில் நீ ர்ச்சிறை எனும் சொல் பயனில் முன்பே உள்ளது என்ன பொருள் பொருத்தம் காண்க (பாடலில் ஓர் வீரம் வலிமை மிக்கவன் நீர்ச் சிறைபோல் எதிரில் வரும் படைகளை தடுத்து கசிய விடாமல் நிறுத்தி நிற்கின்றானாம் )
மறந்தேன்
அந்த மூவருலா வரிகள் தேடினேன் கிட்டவில்லை அதனில் சோழமன்னன் பரம்பரைச் சிறப்பு
பேசப்படும் வரிகளில் கல்லணை குறிக்கப்பட்டுள்ளது சிறப்பாக கரை எனும் சொல் உள்ளதாக நினைவு
மேலும்
கரி கால ன் எனும் சொல்லிற்கே புரட்டுப் புராணக் கதைகளை நீக்கும்
பொருள் தன்னை சரியாக்க கொள்ளலாம் பின் ஓர் மடலில்