வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! - 1907 சித்திரை முதல்நாள் - புதுவருஷ வாழ்த்துச் செய்தி (பாரதியார்)

151 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 19, 2021, 9:43:15 PM12/19/21
to vallamai, housto...@googlegroups.com
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! - 1907 சித்திரை முதல்நாள் - புதுவருஷ வாழ்த்துச் செய்தி (பாரதியார்)

On Sat, Dec 18, 2021 at 3:12 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
வாழிய செந்தமிழ் பாடலில் ஒரு வரி குறைகிறதோ என்று ஒரு ஐயம்.

பாடல்

.வாழிய செந்தமிழ்
ஆசிரியப்பா
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!

இப்பாடல் ஆசிரியப்பா என எல்லாப்புத்தகங்களிலும் கொடுத்துள்ளார்கள். எனக்கென்னவோ இது எண்சீர்க் கண்ணிகளாகத் தோன்றுகிறது.

அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக   என்ற அடியைத்தொடர்ந்து அறம் என்பதற்கு எதுகையான சொல்லோடு தொடங்கும் இன்னொரு அடி இருக்க வேண்டும்.

நீங்கள் பார்த்த அளவில் எந்தப்புத்தகத்திலாவது அப்படியோர் அடியிருக்கிறதா?

1907-ம் வருடம், தமிழ் புதுவருஷப் பிறப்புப் பாடலாக இயற்றியுள்ளார் பாரதி.
சித்திரைத் திங்களில் புதுவருஷ பிறப்புக் கொண்டாடும் இதழாக ‘இந்தியா’ மலர்ந்துள்ளது.
அவர் போட்டுள்ள கார்ட்டூனும் அருமை. ராஜா ரவிவர்மாவின் சரசுவதியை
பாரத மாதா ஆக்கியுள்ளார். பீடத்தில் இந்தியாவின் வரைபடம். முஸ்லீம் குனிந்து
பாரத்மாதா அடியிணைத் தாள்களை வணங்க, பார்ஸி ஒருவர் அருகில் நிற்கிறார்.
பின்னால் ஹிந்துக்கள். பாரதியார் தமிழர்க்குச் சொன்ன அறிவுரை பொருள் பொதிந்தது.
The New Year
புது வருஷம்

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்
     வாழிய பாரத மணித்திருநாடு
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
     நன்மை வந்தெய்துக, தீதெலாம் நலிக.

அறம் வளர்ந்திடுக, மறமடிவுறுக
     ஆரிய நாட்டினர் ஆண்மையொ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக
     நந்தேயத்தினர் நாடோறும் உயர்க.
 வந்தே மாதரம் வந்தே மாதரம்.

சென்ற வாரம் சனிக்கிழமை யன்று தமிழரகளின் புது வருஷப் பிறப்பு நாள். ஆதலால் அன்ற நாம் விடுமுறை பெற்றுக் கொண்டோம்.

புது வருஷம் நமக்கு ஸர்வ மங்களமாகவே பிறந்திருக்கின்றது. இது முதலேனம் நாம் இடையாறாது விடாமுயற்சியுடன் ஸ்வராஜ்யம் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் முயற்சி புரிய வேண்டுமென்பதாக நம்மவர்களிலே பலர் புதுவருஷப் பிறப்பன்று பிரதிக்கினை செய்து கொண்டார்கள்.

ஸ்வராஜ்யம் பெறும் வழிகளாகிய ஸ்வதேசியக் கல்வி, அன்னிய வஸ்து பஹிஷ்காரம், ஸர்க்கார் உத்தியோக வெறுப்பு, பஞ்சாயத்து தீர்ப்புகள் முதலிய ஏற்பாடுகள் நமது நாட்டிலே பரவுவதற்குரிய பிரயத்தனங்கள் எவ்விதத்திலேனும் செய்ய வேண்டுமென நம்மவர்கள் நிச்சயம் செயது கொண்டிருக்கிறார்கள்.

மேலும் நமக்கு அனேக நற்சகுனங்களும் தோன்றியிருக்கின்றன. தூத்துக்குடிக்குச் சுதேசீயக் கப்பல்கள் வந்துவிட்டன. 'பஞ்சாபி' பத்திரிகைக்காரரின் தண்டனை உறுதியாய் விட்டது. அதாவது தேசாபிமானம் என்று வாயால் பேசிக் கொண்டிருந்த நாட்கள் போய், கஷ்டத்தைப் பாராட்டாமல் தேசத்திற்குழைக்கும் நாட்கள் வந்து விட்டன.

தூக்கத்திலே விருப்பம் கொண்ட சென்னை மாகாணத்தின் முகத்திலே தேசாபிமான ஜலத்தை வாரிக்கொட்டி எழுப்பி விடும் பொருட்டாகப் பாபு விபன சந்திரபாலர் வந்துவிட்டார். இன்னும் பல நற்குறிகளும் காணப்படுகின்றன. இவை யனைத்தையும் பாழாக்கி விடாமல் காலத்தின் சின்னங்களை நமக்கனுகூலமான வழியிலே பயன்படுத்திக் கொள்வது நம்மவர்களின் கடமையாகும்.

 

தமிழர்க்குப் பாரதமாதா உருவாக்கம்: http://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html

MS sings, "Vaazhiya Centhamizh, Vaazhiya Narramizhar!"  https://youtu.be/rrciRLT_2Bs
---------

இப்பொழுதும், தமிழர்கள் இடையே புதுவருஷப் பிறப்பு பற்றிப் பேச்சு நடக்கிறது.
எதிர்க்கட்சிகள், பாரதியார் அறிவித்த புதுவருஷ நாள் தொடரவேண்டும் என்கின்றன.


தமிழர்கள் சென்ற நாடுகளில் எல்லாம் - ஈழம், மலாயா, இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து ...- 
புதுவருஷம் சித்திரை 1 தான். சங்க காலத்து இலக்கியங்களிலே வந்துவிடுகிறது.

சித்திரைக் கனி என கனி நோட்டம் காணல் என கேரளத்தில் இதே புதுவருஷம் சுழற்சிமுறையில்.
ஆனால், ஆவணி 1 கொல்லம் ஆண்டு லீனியர் வருஷம். அதே போல, தமிழ் நாட்டிலும்
நடைமுறையில் உள்ளது. திருவள்ளுவர் ஆண்டு தைப் பொங்கலில். இது லீனியர் வருஷம்.
சித்திரை 1 - பாரதி கொண்டாடிய புது வருஷம் - தமிழர் வீடுகள், கோவில்களில் ....

இந்த ஆண்டு ஏதாவது மாற்றம் வருமா எனத் தமிழர்கள் அவதானிக்கிறார்கள்.
எதிர்ப்பு இருப்பதால், அரசாங்கம் சித்திரை 1 புதுவருஷத்தைத் தொடாது என்றும் கேள்வி.
பொங்கல் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

நா. கணேசன்

 

இலந்தை
18-12-2021


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDSYP0OUCMkOutca2gB06YDjrf_rM%2BW579oPHkrM_WbOg%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Dec 20, 2021, 12:04:02 AM12/20/21
to vallamai
///நீங்கள் பார்த்த அளவில் எந்தப்புத்தகத்திலாவது அப்படியோர் அடியிருக்கிறதா?/// முனைவர் கணேசன் ஒரு மணி நேரத்திற்கு முன்பு எழுதியது 

இல்லை. 
சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcA69oLP-s2hyRhDH4LyjGoVhtZUm0DEJu_%2BVYGJ2Uu0A%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Dec 20, 2021, 6:49:55 AM12/20/21
to vallamai, housto...@googlegroups.com
எஸ். ராமச்சந்திரன், தொல்லியலாளர்,
சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என விளக்குகிறார்:

N. Ganesan

unread,
Dec 21, 2021, 11:30:57 AM12/21/21
to vallamai, housto...@googlegroups.com
மறைந்த மதுரை ஆதீனகர்த்தர், சித்திரை தமிழ்ப் புத்தாண்டு என்கிறார்: https://youtu.be/3AfHi8VVWks

----------------

https://www.tnnews24air.com/posts/Why-now-the-who-sent-back-asking-for-an-explanation-of-this-change-The-that-struck-as-a-put-latest-tamil-current-update
https://www.dinamalar.com/news_detail.asp?id=2918181
ஆனால், கவர்னர் தரப்பில் இன்னமும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியில் நீக்கப்பட்ட போது, அதற்கான காரணத்தை விளக்கி உள்ளனர். இதை அறிந்த கவர்னர், அரசாணை தொடர்பாக சில விளக்கங்களை கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும், கவர்னர் திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க முடியுமா என்ற சந்தேகம், ஆளும் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.


எஸ். ராமச்சந்திரன், தொல்லியலாளர்

kanmani tamil

unread,
Dec 21, 2021, 7:49:53 PM12/21/21
to vallamai
மனம் திறந்து பேசுகிறார். 

சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcnv1ipYGrpJQ9kgM0s%2BVO4z6G%3DGYObnSc3KTgogE53sQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jan 1, 2022, 7:26:21 PM1/1/22
to vallamai, housto...@googlegroups.com
DMK has settled on Tamil New year day as Chithirai 1. That is great news, giving honor to old tradition. Same thing should happen for Tamil Nadu Day as November 1, initiated by stalwarts like Chilambu Chelvar MaPoSi, ...

தை முதல் தேதி தமிழர் திருநாள்: பொங்கல் பரிசு பைகளில் திடீர் மாற்றம்
https://www.updatenews360.com/tamilnadu/sudden-change-of-pongal-gift-bag28122021/
https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-changed-pongal-gift-bags-for-tamil-new-year-controversy-389559/
https://www.dinamalar.com/news_detail.asp?id=2924144

seshadri sridharan

unread,
Jan 1, 2022, 7:43:02 PM1/1/22
to வல்லமை
On Sun, 2 Jan 2022 at 05:56, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
DMK has settled on Tamil New year day as Chithirai 1. That is great news, giving honor to old tradition. Same thing should happen for Tamil Nadu Day as November 1, initiated by stalwarts like Chilambu Chelvar MaPoSi, ...

மாறிக்கொண்டே இருக்கின்ற உலகில் எல்லாமே நிலையில்லாமல் மறுக்கிக்கொண்டே இருக்கும். immortal ruler தமது ஆட்சியை முதற்கொண்டு முதலாம் ஆண்டு என்று அறிவித்து கிரிகேரியன் கணக்கை முடித்து வைப்பார்.  கிரிகேரியன் அம்பேலாகிப்போகும்.


 

N. Ganesan

unread,
Jan 2, 2022, 4:40:31 PM1/2/22
to vallamai, housto...@googlegroups.com

தை முதல் தேதி தமிழர் திருநாள்: பொங்கல் பரிசு பைகளில் திடீர் மாற்றம்
https://www.updatenews360.com/tamilnadu/sudden-change-of-pongal-gift-bag28122021/
https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-changed-pongal-gift-bags-for-tamil-new-year-controversy-389559/
https://www.dinamalar.com/news_detail.asp?id=2924144

On Sun, Dec 19, 2021 at 8:42 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! - 1907 சித்திரை முதல்நாள் - புதுவருஷ வாழ்த்துச் செய்தி (பாரதியார்)


கவியரசர் கண்ணதாசனின் புத்தாண்டு கவிதை....
புதியன பிறக்கட்டும்:
புண்ணியம் செழிப்ப தாக
பொய்மைகள் தொலைவ தாக
கண்ணியம் தழைப்ப தாக
கடமைகள் உயர்வ தாக
எண்ணிய நடப்ப தாக
இனியபா ரதத்தில் மீண்டும்
கண்ணியன் கீதைச் செல்வன்
கண்ணனே பிறப்பா னாக!
கற்பெனும் பெருமை ஓங்க
கவினுறும் தாய்மை வாழ
அற்புதக் கவிதை தோன்ற
ஆனந்த இல்லம் காண
நற்பெரும் தவத்த ராய
நங்கைமார் உயர்ந்து வாழ
கற்புயர் நாட்டில் மீண்டும்
கண்ணகி பிறப்பா ளாக!
தந்தையைப் பணிந்து போற்றி
தாய்மையை வணங்கி யேற்றி
சிந்தையைச் செம்மை யாக்கி
செயல்களை நேர்மை யாக்கி
செந்தமிழ் நாட்டோர் வாழ்வில்
செல்வங்கள் குவிந்து காண
சிந்தையால் உயர்ந்து நின்ற
ஸ்ரீராமன் பிறப்பா னாக!
கணவனே தெய்வ மென்றும்
காடெலாம் சோலை யென்றும்
அணிமணி வேண்டே னென்றும்
அவனையே தொடர்வே னென்றும்
பணிவொடு பண்பும் கொண்டு
பாவலர் ஏற்ற வாழும்
தணலெனும் கற்பின் செல்வி
ஜானகி பிறப்பா ளாக!
ஒவ்வொரு பிறப்பும் இங்கே
உயர்ந்ததாய்ப் பிறப்ப தற்கு
செவ்விதழ் நீலக் கண்ணாள்
திருமகள் தமிழ்மீ னாட்சி
செவ்விதின் அருள்வா ளாக!
தேசத்தை உயர்த்து கின்ற
நல்வழி யாவும் கண்டு
நடக்கட்டும் தமிழ்ப் புத்தாண்டு!

(எந்த ஆண்டு தமிழ்ப் புது வருஷ வாழ்த்தைக் கவிஞர் இயற்றினார்?)

Virus-free. www.avast.com

kanmani tamil

unread,
Jan 2, 2022, 9:42:14 PM1/2/22
to vallamai
///பணிவொடு பண்பும் கொண்டு
பாவலர் ஏற்ற வாழும்
தணலெனும் கற்பின் செல்வி
ஜானகி பிறப்பா ளாக!/// முனைவர் கணேசன் எடுத்துக் காட்டியது.

சீதை என்றைக்குப் பணிவோடு இருந்தாள்!!!
அவளைப் பார்த்துத் தான் அடம் பண்ணக் கற்றுக் கொள்ள வேண்டும்.

சக

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeu6NJpdY4h2vSpdhbhcERyxk-_TrREqVc3_kHe8huh2A%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jan 24, 2022, 8:29:12 AM1/24/22
to vallamai, housto...@googlegroups.com

தமிழ்நாட்டு அரசாங்கம் முதலில் மஞ்சப் பைகளில் ’தமிழ்ப் புத்தாண்டு’ எனத் தைப் பொங்கல் இலவசம் வழங்கும் பைகளை அச்சடித்தது. பின்னர் ’தமிழர் திருநாள்’ எனத் திருத்தி வெளியிட்டது. திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரமுகர்கள் வலியுறுத்தியதும் ஒரு காரணம் என்கின்றனர். சிவகங்கை எம்பி, கார்த்தி சிதம்பரம் ஏப்ரல் 14 தான் தமிழ்ப் புத்தாண்டு என ஆண்டுதோறும் வலியுறுத்தி வருகிறார்.
https://tamil.oneindia.com/news/chennai/inc-mp-karti-chidambaram-pongal-wish-mentioing-chithirai-as-new-year-netizens-criticize-445364.html

நிகழும் 2022-ம் ஆண்டு, தமிழ் புத்தாண்டு தினங்கள் விவாதத்தில் ஓர் மைல்கல். அரசாணைகள், தமிழரசு என்னும் அரசு இதழ் போன்றவற்றில் தொடராண்டு (லீனியர் ஆண்டு) எனப் பல்லாண்டுகளாக தை 1 திருவள்ளுவர் ஆண்டு கி.மு. 31-ல் தொடங்குகிறது. சங்க இலக்கியங்கள் (உ-ம்: நெடுநல்வாடை) காட்டும் சித்திரை/ஆடு (Aries) மாதம் பிறப்புநாளை, ’தமிழ்ப் புத்தாண்டு தினம்’ என கி.பி. 2022-லும் தமிழ்நாடு அரசாங்கம் விடுமுறை நாள் என அறிவித்து, 2022-ம் ஆண்டின் விடுமுறை நாள்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசாங்கம், பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு எனச் சித்திரை 1-ம் தேதியை ஏற்றுக்கொண்டுள்ளதைக் காட்டும் அறிக்கைகள் இவை. யூனிகோட் நிறுவனம் ISO அமைப்புடன் இணைந்து இயங்குவது. The Unicode character repertoire is synchronized with ISO/IEC 10646 (https://en.wikipedia.org/wiki/Unicode). பெரும்பான்மை எழுத்து வடிவத்தை எல்லா மொழிகளின் இலிபிகளிலும் ஏற்பதை நடைமுறையில் காணலாகும். காட்டாக, சென்னைப் பல்கலைப் பேரகராதியில் உள்ள 18 தமிழ்மெய்கள், 5 வடவெழுத்தும் தமிழ் யூனிகோட் கொண்டு வாட்ஸப், ட்விற்றர், ஃபேஸ்புக், ... இயங்குகிறது. அது போன்ற செயலாக, தமிழக அரசின் திருவள்ளுவர் தொடராண்டு, தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14) அறிக்கையைக் காண்கிறேன். கேரளத்திலும், சித்திரை 1 சித்திரைக் கனி காண்பது என்று கொண்டாடப்பெறுகிறது. கொல்லம் ஆண்டு ஆவணி 1 தொடங்கும். நம் திருவள்ளுவர் ஆண்டு போன்ற லீனியர் ஆண்டு.
Reply all
Reply to author
Forward
0 new messages