Re: தொந்தி கணேசன் துணை

31 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 17, 2015, 10:03:08 PM9/17/15
to சந்தவசந்தம், vallamai, mintamil


On Wednesday, September 16, 2015 at 7:34:49 PM UTC-7, Chandar Subramanian wrote:
அன்புக்கை நீட்டி அனைவரையும் சோதரராய்  
இன்பத்தோ(டு) ஏற்றுய்வோம் இவ்வுலகில்! - துன்பகன்று
சிந்தைக்குள் அன்பே சிறந்தெழுக; யாவர்க்கும்
தொந்திக் கணேசன் துணை



On Wednesday, September 16, 2015 at 7:58:49 PM UTC-7, yogiyaar wrote:
அருகம்புல், மோதகம், அன்புடன்  வைத்(து) என்
அரும்உயிரே! செல்வமே! ஆனைக்-கரும்பே!
எனக்குள் இனிப்பவனே! என்றும்என்  நெஞ்சில் 
கனமாய்நில் என்றாலே  காப்பு!
 யோகியார்


On Thursday, September 17, 2015 at 8:26:00 AM UTC-7, kuppudu wrote:

விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்! சந்தமும் சொற்களும் அவனே அந்தமில் கற்பனை அவனே! நந்தமிழ் நவில்வதும் அவனே! எந்தையும் ஏற்றமும் அவனே! 

தந்தி முகத்தானை தொந்தி வயிறானை
வந்திப் பவர்க்கருள் முந்திக் கொடுப்பானை
சிந்தித் திருப்பவர் புந்தி உறைவானை
அந்திப் பகலும் நினை


    “குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
    வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு”

குள்ளக் குள்ளன் - சிவ கணங்கள் குள்ளமானவை.
அக் கணங்களுள் ஒருவர் கணபதி.

காஞ்சி கைலாசநாதர் கோவிலில் - 
கணங்களுடன் கும்மாளமிடும் கணபதி!










கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே  
	கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|  
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே  
	ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||  
 
	அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி  
	மஹா கணபதிம் ஆவாஹயாமி 

    “ வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழத்
    துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே”

    “கருணை வள்ளல் கணபதி யைத்தொழ
    அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே”

    “ முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
    தொப்பை அப்பனைத் தொழவினை இல்லை”

    “ வேழ முகத்து விநாயகனைத் தொழ
    வாழ்வு மிகுத்து வரும்.”

நா. கணேசன்


 

N. Ganesan

unread,
Sep 18, 2015, 9:30:05 PM9/18/15
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai


On Thursday, September 17, 2015 at 5:46:49 AM UTC-7, siva siva wrote:


2015-09-16 22:58 GMT-04:00 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:
அருகம்புல், மோதகம், அன்புடன்  வைத்(து) என்
அரும்உயிரே! செல்வமே! ஆனைக்-கரும்பே!
எனக்குள் இனிப்பவனே! என்றும்என்  நெஞ்சில்
கனமாய்நில் என்றாலே  காப்பு!
 யோகியார்


/அருகம்புல்/ 

Typo. அறுகம்புல்.

அறுகம்புல் சரி. ஆனால், அருகம்புல் என்றும் பலர் எழுதுகின்றனர்.  முருக்கு/முறுக்கு, அரைத்தல்/அறைத்தல், 
முரிதல்/முறிதல், வீறு/வீரம், கறுப்பு/கருப்பு, அருகு/அறுகு (புல்) .... 

கறுப்பு என்பது தொல்காப்பியம். ஆனால், கருப்பு என்பதும் இருக்கிறது அல்லவா? அதுபோல், அறுகு/அருகு.
கறுகு- என்பது அறுகின் பழையபெயர். மலையாளம், கன்னடம், தெலுங்கில் கறுகுதான். வெயில் அடிக்கும் 
கடும் வறட்சிக் காலத்தில் கறுகினாலும், மழைக்குப் பின் முதலில் தழைக்கும் அறுகு/கறுகு.
பொலி/பலி சம்ஸ்கிருதம்/தெலுங்கில் bali ஆவதுபோல, மலையாளம்/தமிழின்
கறுகு- வடமொழியில் garaa, garii என அழைக்கப்படுகிறது. இந்த voicing of k- to g-
கோடு > கௌடி = ஆமா, Indian wild gaur ரிக்வேதத்தில். கோடு அணிந்த கொற்றவை
கௌடி கௌரி (kODu > kauDi > Gauri).

அகநானூறு 86-ம், 136-ம் சங்க காலத் திருமணச் சீர்களை அறிவிக்கும் சான்றோர் செய்யுள்களாகும். இரண்டுமே மிக அழகானவை, இன்றும் நடக்கும் கொங்குநாட்டுக் கலியாணங்களை நினைவூட்டுபவை.  கொற்றவை என்னும் கொல்லிப் பாவை ஈட்டி மரத்தில் செய்து மணப்பெண்ணுக்கு மண்ணுமங்கலச் சீர் ஆனவுடன் நடப்பதை வில்லூற்று மூதெயினர் அகம் 136-ல் அழகாகப் பாடியுள்ளார். கொல்லிப்
பாவைக்குப் பிடித்தமான வாகை மலரும், திருமணம் ஆயிரங்காலப் பயிராக விளங்க அறுகும், வெண்ணூலில் கோத்துக் கட்டிக் கரிய பாவையை அலங்கரித்து வழிபட்டு அறுகுமணம் என்னும் சீர்செய்தலைப் பாடும் பாடல் இது.

136. மருதம்

[உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]

மைப்புறப் 3புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி
அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்
5.4சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்
கடிநகர் புனைந்து கடவுட் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் 
5விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
10.மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண்நறு முகையொடு வெண்நூல் சூட்டித்
15.தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி
மழைபட் டன்ன மணன்மலி பந்தர்
இழையணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்
தமர்நமக் கீத்த தலைநாள் இரவின்
உவர்நீங்கு கற்பின்எம் உயிருடம்பு அடுவி
20.முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்
பெரும்புழுக்கு உற்றநின் பிறை 
1நுதல் பொறிவியர்
உறுவளி ஆற்றச் சிறுவரை திறவென
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறைகழி வாளின் உருவுபெயர்ந் திமைப்ப
25.மறைதிறன் அறியா ளாகி ஒய்யென
நாணினள் இறைஞ்சி யோளே பேணிப்
பரூஉப்பகை ஆம்பல் குரூஉத்தொடை நீவிச்
சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே.

-விற்றூற்று மூதெயினனார்.

உரை:http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=311&y=313&bk=136&z=l1270804.htm

Three important Vedic grasses, S. Mahdihassan, IJHS, 1987
அறுகம்புல்லின் வேரோடும் தன்மையை பக்கம் 289-ல் காண்க. ’ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி” எனக் கலியாண மங்கல வாழ்த்தில் சொல்வது தமிழர் மரபு. தூர்வம் என்று வடமொழியில் அறுகை அழைக்கின்றனர். திசையெலாம் துருவித் தரைமுழுதும் பரவும் அறுகுக்கு தூர்வம் என்ற பெயர் அமைந்ததா? - எனப் பார்க்கவேண்டும். துருவை என்றால் யாடு, துராஅய் என்றால் அறுகு என்பதும் வடமொழியின் தூர்வத்துடன் ஒப்புடையன.

வல்லம் குகையிலே பழைய விநாயகர்:




























எங்குமுள்ள அறுகை ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி
என வாழ்த்தும் கலியாண மங்கலவாழ்த்து. சங்க காலக் கொற்றவையும்,
பின்னர் அவளின் மூத்தபிள்ளையும் விரும்புவது இயற்கைதானே.

---------------------------

  உருவினில் பெரியன் வருமிடர் அகல
     ....உலகினர் வழிபடு மிறைவன் – அவர்
     ......உளமெனும் குடிலினில் உறைவன்                                                                                                                                                                                                                            

      திருமுறை ஓதி இருவர்முன் கயிலை
     ....செலக்கரி பரியுடன் விரைய – ஔவை
     ......தினமவன் திருவுளம் கரைய 

       ஒருமுக முடனே  உரைதுதி கேட்டே
       ....ஒருநொடி யளவினில் வரையை -  அவள்                       
       .......
உறவர மருளிய துரையைக்

       குருவடி வாக  வழிபடின் உள்ளக்
     
....குகையினில் விலகிடும் இருளே அவண்
      .......குடிகொளும் பரசிவப் பொருளே!

அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்!

                                                  .....அனந்த்

-- 

-----------------------------

கணேசன் துதியைக் கணேசனே படித்தது கண்டு மகிழ்ச்சி!

”ஔவை தினமவன் திருவுளம் கரைய... ” என்பதை ’ஔவையார் தினமும் கணேசன் திருவுள்ளம் உருகும்படி (உரைத்த துதி)’, எனப் பொருள் கொள்ளல் நன்று. 

அன்புடன்

அனந்த்


N. Ganesan

unread,
Sep 19, 2015, 9:43:12 AM9/19/15
to மின்தமிழ், santhav...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Friday, September 18, 2015 at 6:30:07 PM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, September 17, 2015 at 5:46:49 AM UTC-7, siva siva wrote:


2015-09-16 22:58 GMT-04:00 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>:
அருகம்புல், மோதகம், அன்புடன்  வைத்(து) என்
அரும்உயிரே! செல்வமே! ஆனைக்-கரும்பே!
எனக்குள் இனிப்பவனே! என்றும்என்  நெஞ்சில்
கனமாய்நில் என்றாலே  காப்பு!
 யோகியார்


/அருகம்புல்/ 

Typo. அறுகம்புல்.

அறுகம்புல் சரி. ஆனால், அருகம்புல் என்றும் பலர் எழுதுகின்றனர்.  முருக்கு/முறுக்கு, அரைத்தல்/அறைத்தல், 
முரிதல்/முறிதல், வீறு/வீரம், கறுப்பு/கருப்பு, அருகு/அறுகு (புல்) .... 

கறுப்பு என்பது தொல்காப்பியம். ஆனால், கருப்பு என்பதும் இருக்கிறது அல்லவா? அதுபோல், அறுகு/அருகு.
கறுகு- என்பது அறுகின் பழையபெயர். மலையாளம், கன்னடம், தெலுங்கில் கறுகுதான். வெயில் அடிக்கும் 
கடும் வறட்சிக் காலத்தில் கறுகினாலும், மழைக்குப் பின் முதலில் தழைக்கும் அறுகு/கறுகு.
பொலி/பலி சம்ஸ்கிருதம்/தெலுங்கில் bali ஆவதுபோல, மலையாளம்/தமிழின்
கறுகு- வடமொழியில் garaa, garii என அழைக்கப்படுகிறது. இந்த voicing of k- to g-
கோடு > கௌடி = ஆமா, Indian wild gaur ரிக்வேதத்தில். கோடு அணிந்த கொற்றவை
கௌடி கௌரி (kODu > kauDi > Gauri).


கெம்பு > செம்பு, கெவி > செவி, இதுபோல் கறுகு/கருகு > சறுகு/சருகு > அறுகு/அருகு.
சங்க இலக்கியத்திலேயே அறுகு, தொல்காப்பியத்தில் கறுப்பு - இரண்டும் இருப்பதால்,
அறுகு என்ற தமிழ்ச்சொல் 2500 ஆண்டுப் பழமையது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், வடமொழி
கறுகு என்ற மிகப்பழைய த்ராவிடச்சொல்லை இன்னமும் வைத்துள்ளது.
ஓரியண்டல் தேசங்களில் வில்லோ மரத்தை வாழ்வின் சின்னம் என்பர். மிகக் கடுங்குளிருக்குப்
பின்னர் முதலில் துளிர்ப்பது வில்லோ மரந்தான். இதனால், அவலோகிதேசுவரனின் வடிவாகிய
குவான்யின் போதிசத்துவர் பெண்வடிவில் வில்லோ மரத்தடியில் காட்டுவர்.
அதுபோல, எந்த வறட்சியிலும், முதல்மழை பெய்ததும் கறுகிய அறுகு துளிர்க்கும்.
இதைத்தான் சங்க இலக்கியத்தில் கண்ணாலப்பாட்டில் மூதெயினனார் குறித்துள்ளார்.

(1) கௌடி கௌரி (kODu > kauDi > Gauri). (2) கெம்பு > செம்பு, (3) கெவி > செவி, 
(4) கண்பு > கம்பு (கண்பு என்றே கம்பு அவிநாசிக் கல்வெட்டில் இருத்தலைக் குறிப்பிடுகிறார் துரை. சுந்தரம் (கோவை).
கண்பகம் > சண்பகம், முதலில் கண்பு போல் உள்ள மலர். கண்பை > செண்பை/சண்பை (ஒரு புல். இதனால் சீகாழிக்கு
ஒரு பெயர்.) கண்பைக் காடுகளில் இருக்கும் ஒருவகைக்கோழி கண்பு +புள் கண்புள்/கம்புள் = சம்பங்கோழி ‘Coot'.

கம்புளின் நெற்றி (= நுதல்)  வெண்மை நிறத்தது என அடையாளங் காட்டுகிறது சங்க இலக்கியம்.

“கதிர்த்ததண் பூணிக் கம்புடாழ் பீலிக்கனைகுரனாரை வண்டான, மெதிர்த்ததண் புனல்சூழிந்நதிக்கரை” (சீவக. 2108) என்பதனுரையில், ‘கம்புளென்பதுஇறந்த கால வழக்கு’ என்பர் நச்சினார்க்கினியர். க- > ச-> நச்சர் காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது. கம்புள் > சம்பங்கோழி ஆகிவிட்டது. கம்புள் என்ப சம்பங் கோழி (பிங்கலம் 38) 
”வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
தண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்” - ஐங்குறுநூறு

“கம்புள் கோழியும், கனைகுரல் நாரையும் 
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்” - சிலம்பு

”கானற் கடற் கம்புளே” (புள்ளொடு புகலல், நந்திக் கலம்பகம்)

காடை வருகுது கம்புள் வருகுது 
காக்கை வருகுது கொண்டைக் குலாத்தியும் 
மாடப் புறாவும் மயிலும் வருகுது - குற்றாலக் குறவஞ்சி



இந்தியாவில் கம்புள் (Fulica atra = Coot)

கம்புள் - உப்பளப்பாடு, குண்டூர்
Common Coot (Fulica atra)


கம்புள் > சம்பங்கோழி.
அதுபோலே,
 கறுகு/கருகு > சறுகு/சருகு > அறுகு/அருகு.





















நா. கணேசன்
குய் = கூர்மை. இயை/இசை என்பதுபோல் குயை/குசைப்புல் = தர்ப்பை.
குயம் = paring knife. குயவரி = புலி (which has paring knife-like stripes).
மீன் சீவு குயம் (சங்கச் செய்யுள்) = fish pared sideways using a paring knife
தர்ப்பைக்கான பெயர் குசை வடமொழியில்:
Reply all
Reply to author
Forward
0 new messages