vallamai |
|
Posted: 31 May 2016 10:11 PM PDT ‘’சர்வம் உடுப்பி சர்வர் ஸ்ரீ கிருஷ்ணார்பண மத்து’’…. ———————————————————————————————— ”குச்சிமத் தோர்கையில், மச்சுவெண்ணை(உத்திரத்து உறி) மற்றோர்கை எச்சிபண்ணும் மாட்டுக்(கு) எழுங்காலில் -தச்சிமம்மு கொண்டு, பருகுகிறாள் கோமாதா;, கோலமிதை விண்டுரைத்த கேசவ் வியப்பு’’….கிரேசி மோகன்…
|
|
’’கண்ணா கனியவை நாற்பது’’(அந்தாதி….)…. Posted: 31 May 2016 10:01 PM PDT கிரேசி மோகன் வாய்க்கரிசி போட்டவாய் மாய்ந்தவுயிர் போகும்முன் வாய்க்கு ருசியாய் விருந்துண்ணும் -வாய்க்குவாய் பேராண்மை போற்றுவர் பத்தாம்நாள் தூற்றுவர் ஓரான்மா தானுன் உறவு….(31) உறவுக்குத் தேவை உருவும் திருவும் கறவைக்குப் பின்லாடம் காலில் -பறவைக்கு உள்ள சுதந்திரமும் இல்லை, சிறகுவிரி கள்ளத் தனத்திலென்ன கற்பு….(32) கற்பூர வாசனை கழுதை அறியுமா விற்பனைக்கு வந்தாலும் வீடுபெறும் -நற்கதியை நெஞ்சமது ஏற்காது வஞ்சக மாயைகை அஞ்சுவிரல் கோர்க்கும் அசடு….(33) அசடுக்கு உண்டு அடைக்கும்தாள் வாழ்க்கை கசடற கற்றுக் கொடுத்தும் […]
|
|
இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-19 Posted: 31 May 2016 05:02 PM PDT மீனாட்சி பாலகணேஷ் கைவண்ணமும் கால்வண்ணமும்… சிறு மல்லிகைச்செண்டு போலும் அழகான பெண்மகவு. இந்தப் பிஞ்சுக்குழந்தையைக் கண்ணுறும்போது, பெற்றோருக்குத் தம் கவலைகள் அனைத்தும் மறந்துவிடுகின்றன. ஏழையோ எளியவனோ, உடல்நிலை சரியில்லாதவரோ, “ஏன் இவ்வுலகில் பிறந்தோம்?” என சலித்துக் கொள்பவர்களும் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல், குழந்தையின் அழகிலும், குறும்பிலும் மழலையிலும் உள்ளம் பறிகொடுத்து விடுகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சி எனும் பேரானந்தக்கடலில் மூழ்கிவிடுகிறார்கள். நல்லிசைப்புலமைப் பெரியோர் கூற்றில் குழந்தைக்குத் தாய்மார்கள் அமைவது மூன்றுவிதம். முதலாமவள், தன் குழந்தை மற்ற குழந்தைகளைப்போலும், இன்னும் […]
|
|
இருபது ஆண்டுகளில் ஹப்பிள் விண்ணோக்கி புரிந்த அரும்பெரும் அண்டவெளிச் சாதனைகள் Posted: 31 May 2016 04:51 PM PDT (கட்டுரை -1) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ https://youtu.be/wIL68Pl4who https://youtu.be/lkT7UkzgobA https://youtu.be/–X9zfgZtS0 ++++++++++++++++ நாசாவின் முதல் விண்ணோக்கி ஹப்பிள் தொலைநோக்கி ! இருபது ஆண்டுகளாய் முப்பதி னாயிரம் பிம்பங்கள் நோக்கி யுள்ளது ! விண்வெளியில் அகிலக் கோள்கள் எழுபதின் நகர்ச்சியைக் கண்டது ! பிரபஞ்ச விரிவை உண்டாக்கும் விலக்கு விசையான கருஞ் சக்தியின் மறைந்த இருப்பைக் கண்டது ! பிரபஞ்ச விரிவு வீதத்தைக் கணிக்கத் திரிந்திடும் விண் கழுகு ! காலக்ஸிகளின் […]
|
|
Posted: 31 May 2016 04:42 PM PDT -க. பிரகாஷ் ஓர் ஊரில் நான்கு நண்பர்கள். ராமு, சோமு, பாலா, சுப்ரமணி ஆகியோர். இவர்கள் ஒரே பள்ளியில் பயின்று வந்தனா். பள்ளிக்குச் செல்லும்போது ஒரே நேரத்தில் செல்வதும் வகுப்பறையில் நான்கு பேரும் ஒரே பலகையில் அமா்வதும் பழக்கமாக இருந்தது. எல்லாப் பாடவேளையிலும் ஒவ்வொரு பாட ஆசிரியர் வகுப்பு எடுப்பது உண்டு. அன்று ஒருநாள் கணிதப் பாடவேளையில் ஆசிரியரைப் பார்த்து பாலா ஒரு வினாவை எழுப்பினான். ”சார் நீங்கள் நடத்துவது எனக்கா? இல்ல எல்லாருக்குமா?” ஆசிரியா்: ”ஏன்டா!?” […]
|
|
Posted: 31 May 2016 04:03 PM PDT – ராஜகவி ராகில் அதிகம் அப்பா வயல் நெல் மணிகளை விட விளைந்த வியர்வைத் துளிகள் வயற்காடு கறுத்திருக்கின்ற பொழுதிலும் சூரியன் முதுமையுற்று மேற்கு வைத்தியசாலைப் பக்கம் சென்றபின்தான் வீட்டில் அப்பா வந்து நிற்பார் கறுத்துப்போன உருவமாய் இருளும் வெளிச்சமும் களவொழுக்கம் புரிகின்ற வைகறையில் அம்மா அரைத் தூக்கத்தோடு சோறு சமைத்துக் கட்டிக் கொடுப்பாள் மாதத்தில் சில நாட்கள் அப்பா உழவனென்றாலும் வீட்டு அரிசிப்பானை வெறுமையாகவே இருக்கும் பல நாட்கள் அம்மாவைச் சாப்பிடும் அக்கம் பக்கமெல்லாம் […]
|
| You are subscribed to email updates from வல்லமை. To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
Posted: 02 Jun 2016 04:57 AM PDT சபாஷ் கேசவ் அற்புதமான சிந்தனை…. “கரமுகம் வைத்திங்கு கீதையாம் சாதத்தை பரிவாக ஊட்டுகிறான், பெம்மான்-பரிமுகன்(அயக்ரீவர்)- “பாதத்தில் மாருதி, பார்த்தாயா பார்த்தரே! சாதத்தில் நெய்சுவை சேர்ப்பு’’….கிரேசி மோகன்…. “மாமேகம் சரணம் வ்ரஜ:”…. ————————————– “என்னை ஒருவனையே, என்றும் சரணடைந்து, நின்னைநீ! ஒப்படைக்க, நீண்டபுகழ்: -திண்ணையில், நிம்மதியாய்த் தூங்கி, நிலமாள லாமிதற்குன், சம்மதமே போதும் சகா”….கிரேசி மோகன்….
|
|
Posted: 01 Jun 2016 11:07 PM PDT எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா ஆயுதக் கழஞ்சியத்தை அரவணைத்த அரக்கரெலாம் அறிவுக் கழஞ்சியத்தை அக்கினியில் இட்டார்கள் அத்தனையும் செய்துவிட்டும் அவரோய்ந்த பாடில்லை மிச்சமெலாம் கொழுத்துதற்கும் மீண்டுமெழ நினைக்கின்றார் ! புத்தபிரான் போதித்த போதனைகள் அத்தனையும் போதிமரம் கேட்டுவிட்டுப் பெறுமையுடன் நிற்கிறது காவிகட்டி சேதிசொல்லும் கனிவுடைய துறவியரும் பாவிகளின் அருகிருந்து பாடமெல்லோ சொல்லுகிறார் ! வேட்டிகட்டும் தர்மிஷ்டர் விரும்பிநின்ற மந்திரிகள் போட்டிபோட்டு வந்துநின்று பொசுக்கிவிட்டார் நூலகத்தை காட்டிக்காட்டி எரிக்கச்சொல்லி கைகட்டி நின்றார்கள் […]
|
|
Posted: 01 Jun 2016 10:18 PM PDT “சுடலையாண்டி” (மீ.விசுவநாதன்) ஊருக்கு வெளியிலே சுடலை – அங்கு உயிரோடு வாழ்கிறா(ன்) ஒருவன் நீராலே ஆனதாம் உடலை – விழி நெருப்பிட்டுப் பொசுக்குறா(ன்) ஒருவன் ! வீபூதிச் சாம்பலால் அழகை – ஒளி விளக்காகச் செய்கிறா(ன்) ஒருவன் மேதாவி பாமரன் வரவை – சிவ விருந்தாக அழைக்கிறா(ன்) ஒருவன் ! பேசாமல் பேசியே உயிரை – தன் பிடிக்குள்ளே வைக்கிறா(ன்) ஒருவன் தூசான உலகென உணர – திரு ஓடுதனைக் காட்டுறா(ன்) ஒருவன் ! தானெனும் […]
|
| You are subscribed to email updates from வல்லமை. To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
உலக பணக்காரர்கள் வரிசையில் 7 வது இடம் – மிக ஏழ்மையான தனிமனிதன்! Posted: 03 Jun 2016 04:27 AM PDT பவள சங்கரி தலையங்கம் இது மலைப்பான செய்தியா அல்லது வருத்தப்படவேண்டிய செய்தியா என்று தெரியவில்லை. மத்திய மாநில அரசுகளின் பார்வைக்கு இதுபோன்ற செய்திகள் சென்று சேருகின்றதா என்றும் தெரியவில்லை. ஆனால் உலகளாவிய பொருளாதார ஆய்வறிக்கைகளின் முடிவு இதுபோன்ற எண்ணம் ஏற்படுத்துவதை தவிர்க்க இயலவில்லை. உலகிலுள்ள 10 பணக்கார நாடுகளின் வரிசையில், அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், நம் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளது என்கிறது ‘நியூ வேர்ல்ட் வெல்த்’ என்கிற ஆய்வு நிறுவனம். கடந்த […]
|
|
எழுவகைப் பெண்கள்: “பெண்ணின் உடல்” எனும் சித்தாந்தம் Posted: 03 Jun 2016 03:23 AM PDT அவ்வைமகள் பெண் எனும் மனித உயிரி அலாதியானவள். மனிதப் பெண், பிற பெண் உயிரிகளிலிருந்து பெரிதும் வேறுபடுபவள் – அதிசயமானவள் – அற்புதமானவள். அவளைப்புதிரென்பர் – வியப்பென்பர் – தீர்வுகாணாக் கணக்கெனக் கொண்டு தீரா முயற்சியுடன் அவளை அறிந்தறிய விழைவர். பாடிப்புகழ்வர் – பரவசப்படுவர் – சாடி இகழ்ந்தும் சளையாமல் நினைந்தலைவர். பாட்டியாய், தாயாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய் என நிதம் அவளுடன் கூட வாழ்ந்தாலும்கூட அவளை அறியாதும் புரியாதுமே நாள் கழியும் உண்மையே நம் நிலையெனில் […]
|
|
Posted: 03 Jun 2016 02:52 AM PDT —————————————– தானதன தானதந்த தனதான திருவல்லிக் கேணி ————————————— “சோணமலை மீதமர்ந்து -ரமணேசர் ஞானமலை யாயகந்தை -யதன்முலம் காணுவகை தானுகந்த -வழியேகி நானெனது பேதபந்தம் -விலகாதோ தானமென மூணுகந்த -பலிசாய வானவழி போயளந்த -நெடுமாலே சேணமுற கேணிநின்று -கவிராஜன் கானமென வேவுயர்ந்த -பெருமாளே”…. ———————————————————————————————————– பெருமாள் திருப் புகழ்…. ———————————————- தனதய்யத் தான தாத்தன தானன தனதய்யத் தான தாத்தன தானன தனதய்யத் தான தாத்தன தானன -தனதான திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் ——————————————————————————– “ஒருகள்ளக் […]
|
Posted: 03 Jun 2016 02:49 AM PDT இதுநிஜமாய் ஆகும், அது பொய்யாய்ப் போகும், விதவிதமாய் எண்ணல் விடுத்து, -எதுவரினும், கண்ணணைந்த போதுதிக்கும், காரிருள் வண்ணத்து, கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….
|
|
பெருமாள் திருப்புகழ் …. கும்பகோணம் என்ற குடந்தை Posted: 02 Jun 2016 05:50 PM PDT “பெருமாள் திருப்புகழ்’’ ———————————————– தனந்த தானனத்த தனந்த தானனத்த தனந்த தானனத்த -தனதான கும்பகோணம் ——————— பெருமாள் திருப் புகழ்…. “அகந்தை வேரறுத்தவ் விழந்த வான்கிடைத்திங் கிருந்த வாறிருக்க -ரமணேசர் புகன்ற வாசகத்தை உணர்ந்து மாதவத்தை நெருங்க ஞானவித்தை -அருள்வாயே அகன்ற சாகரத்தில் அனந்தன் மேலிருக்கை அமைந்த யோகநித்ரை, -வனமாலி சுகந்தம் வீசலக்மி பதங்கள் மேவநித்ய இனங்கள் சூரிநிற்க -பயில்வோனே தகுந்த வாறளிப்பு ,சினந்த மாமனுக்கு இகழ்ந்த பாலனுக்கு -முறைவாசல், தினங்கள் போயெமர்க்கை விழுந்து சாவதற்குள் […]
|
|
வானமுதம் வானொலியின் பத்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மனமுவந்து வழங்கிய வாழ்த்துப்பா Posted: 02 Jun 2016 05:35 PM PDT எம். ஜெயராமசர்மா வானலைகள் ஊடாக வண்ணத் தமிழ்பரப்பி தேனாக இனித்துநிற்கும் திகட்டாத வானமுதே ஐயிரண்டு ஆண்டாக அனைவரது மனங்கவர்ந்தாய் அளவில்லா வளர்ச்சிபெற அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன் ! எல்லையில்லா இன்பம்தரும் எங்களது வானமுதே நல்லபல ரசிகர்களை நாளும்நீ வளர்த்துள்ளாய் சொல்லவல்ல சுவைபயக்க சுந்தரமாய் தமிழ்தருவாய் நல்லபடி நீநிலைக்க நயந்துன்னை வாழ்த்துகிறேன் ! வானத்துமழை காணின் மண்ணெல்லாம் பசுமைபெறும் வானமுதின் தேன்மழையால் மனமெல்லாம் மகிழ்வுபெறும் ஞானத்தை உடையோரின் நற்கருத்தும் தேடிவரும் நாளும்நீ வளர்ச்சிபெற நல்வாழ்த்தை நவில்கின்றேன் ! விஞ்ஞானம் […]
|
|
Posted: 02 Jun 2016 05:02 PM PDT மூன்று கேள்விகள் திவாகர் சோறுடைத்த சோழநாட்டில் பஞ்சமோபஞ்சம் அறிவுக்குப் பஞ்சம்வந்தததாம் சொல்கின்றான் ஆக்கியாழ்வான்; அவனடி பணியவேண்டுமாம் போக்கற்ற பண்டிதனாய் பிதற்றுகிறானென அவன்போக்கில் அவனை விட்டுவிட்டால் அவனேயனைத்தும் அறிந்தவனாய் ஊர்சொல்வர் பண்டிதன்கேள்விக்கோ பதில்சொல்வார் இல்லை பண்டையகாலத்து வேதமெல்லாம் அறிந்தவனாம் சாத்திரங்கள் ஓதியோதி நாத்தழும்பானவனாம் தோத்திரங்களெல்லாம் அவனுக்கே சொந்தமாம் கற்றோருக்கு ஒப்பாரும் மிக்காருமில்லைதான் கற்றோரே இங்கில்லையென இவன்கூவுகையில் கற்றாரொருவர் உளரேல் கொண்டுவாருமென கொற்றவன் கோபத்துடன் ஆணையிட்டான் ‘ஈசுவரமுனியே உமக்குமிஞ்சிய கற்றவர்தாம் காசினியிலுண்டோ வாதுசெய்ய வாரீர் சோணாட்டுத் திறமையெலாம் […]
|
|
குயில் கீச் கீச் குருவி குக்கூ Posted: 02 Jun 2016 04:32 PM PDT ராஜகவி ராகில் – தண்ணீர்க் குளிர்ச்சியும் பலூன் மெது மெதுப்பும் ரோஜா மலர் மென்மையுமாக எனது கைப்பேசி என் கையில் காதுப்பையில் இரும்புக்குடில் நீ குடியேறுகிறாய் மொழிக்கை வீசியும் வார்த்தை ஆடை உடுத்தியும் என் உயிர் உன் குரல் என ஒரு புள்ளிகம்பத்தில் கட்டிப்போடுகிறாய் அவிழ்த்துக் கொண்டு வெளியேற விருப்பமில்லாத ஒரு மனதையும் ஒலிகளால் ஒப்பனை செய்து என்னை அழைத்துச் செல்கின்ற ஒரு வயதையும் பரிசாகத் தந்துவிட்டு உனது காற்று வெளியில் என் இரும்புக் கைக்குட்டை […]
|
Posted: 08 Jun 2016 01:17 AM PDT சூழ்ச்சி யுடன்வந்த பேய்ச்சி முலைபற்றி மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில் கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும் கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….
|
|
நதி பெய்கின்ற மழையில் பெருக்கெடுக்கும் இருள் Posted: 07 Jun 2016 04:49 PM PDT ராஜகவி ராகில் சூரியன் கொண்டு வந்து விட்டுச் சென்ற இருளெனவும் ஓர் இருளிலிருந்து கடத்தப்பட்ட இன்னோர் இருள் மின்குமிளெனவும் நீ ஓர் உயிர்த் தசை பாவ இரும்புத்துகளாய் காந்த இதயம் பொய் வேரில் நாவு மரம் இருட்டு உண்கின்ற இரவுக் கண் கறுப்பு இசை உணர்கின்ற மலட்டுக் காது ஓர் உயிர்க் காடு கார் வெயில் உறிஞ்சுகின்ற வேர்கள் வளைந்து நெளிந்து அசைகின்ற பாம்புக் கிளைகள் பருந்துகளாய்ப் பறந்து பிணம் உண்கின்ற […]
|
|
நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி புரிந்த ஐம்பெரும் விண்வெளி விஞ்ஞான விந்தைகள் Posted: 07 Jun 2016 04:43 PM PDT (கட்டுரை -2) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ஹப்பிள் தொலைநோக்கி ! ஒப்பில்லாச் சாதனை செய்துளது ! விண்வெளியில் ஐம்பெரும் விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கு விரித்தது பாதை ! அகிலக் கோள்கள் எழுபதின் நகர்ச்சியைக் கண்டது ! பிரபஞ்ச விரிவை உண்டாக்கும் விலக்கு விசையான கருஞ் சக்தியின் இருப்பைக் கண்டது ! விரிவு வீதத்தைக் கணித்திடத் திரிந்திடும் விண் கழுகு ! காலக்ஸிகளின் ஒளிமந்தை தோற்ற வளர்ச்சியைத் தெளிவாகக் காட்டும் ! ஒளியற்று ஈர்ப்பாற்றல் கொண்ட கரும்பிண்டத்தின் இருப்பை மெய்ப்பிக்கும் ! ஹப்பிள் தொலை நோக்கியை இப்போது மிஞ்சுவது கெப்ளர் விண்ணோக்கி ! புறவெளிப் பரிதிக் கோள்களைத் தேடிக் காண விழி திறக்கும் விண்ணோகி ! ++++++++++ “இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், அவற்றில் உயிரினச் சின்னங்கள் இருப்பதையும் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் […]
|
| You are subscribed to email updates from வல்லமை. To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
Posted: 13 Jun 2016 05:29 AM PDT கிரேசி மோகன் —————————————————– வாடா மலரன்னை சூடா மணிபெற்று ஓடோடி அண்ணலிடம் ஓதிய, -நாடகம், சுந்தர காண்டத்தை எந்திரமாய்ச் செப்பினும் மந்திரம் ஆகிடும் மெய்….(37) கைத்தலம் பற்றிய கூடலாள் கூறிட மைத்துனர் கால்பிடிக்க மாருதியாய் -வைத்திய நாதரே வந்தீரோ நானிலத்தில் நாரணர் தூதரான தேவா துணை….(38) காமம் உலோபம் குரோதம் அகங்காரம் நாமம் அனுமனென நாவுறைக்க -போமாம்காண் தோளால் சிரஞ்சீவி தூக்கிவந்த மாருதியின் வாளாம் அவனுடைய வால்….(39) ஆதவனோ(டு) ஏகிவான் வீதியிலே மெய்ப்பொருளை பேதமறக் கற்ற பவுருஷத்தை […]
|
Posted: 13 Jun 2016 05:17 AM PDT பகவான் உவாச…. ———————— “சரணா கதிசெய்து சும்மா இருப்பாய், கரணா திகள்கருவி கர்த்தா-முரணாகும்; தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்சொல்கேள் நூறை ஒழிக்க நிமிர்”…. “கைவல்யம் கேட்டாய் களத்தில் களைப்புற்று – மைவண்ணன் சொன்னான் மறுமொழி -கைவல்யம் – கைவில்யம் தானுனக்கு ,பொய்இப் புவிவாழ்வு – செய்வனபார்த் தாதிருந்தச் செய் “….கிரேசி மோகன்…. ”ஊதும்வெண் சங்கினால் ஊட்டிட கீதையை போதுமென்று பார்த்தன் பணிந்துரைத்தான் -தீதொடு நன்மை வாரா நமக்கு பிறர்தர, தொன்மை கடைச்சங்கத் தீர்ப்பு’’….கிரேசி மோகன்
|
|
Posted: 12 Jun 2016 10:30 PM PDT செ. இரா.செல்வக்குமார் இந்தக் கிழமையின் வல்லமையாளர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதுபெறும் முதுபெரும் தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்கள் மிகவும் புகழ்பெற்றவர் என்றாலும், இவருடைய பெயர் அண்மையில் அதிகமாக எடுத்துரைக்கப்படாமையால் அதிகம் அறியப்படாத பேரறிஞர். இவர் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்திலுள்ள, உடையார்பாளையம் வட்டத்தில் செயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள இலையூர் என்னும் ஊரில் திசம்பர் 15, 1936 இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் திரு சோ.நடராசனார், திருவாட்டி மீனாம்பாள் அம்மாள் ஆகியோர் ஆவர். கந்தசாமியார் […]
|
|
Posted: 12 Jun 2016 06:05 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.06.2016) வரை உங்கள் கவிதைகளை […]
|
|
திருத்தி எழுதப்படும் சாசனங்கள் Posted: 12 Jun 2016 05:27 PM PDT பவள சங்கரி தலையங்கம் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் தலைவர்கள் தங்களுடைய மக்களுக்கு இந்த வகையான வாழ்க்கை முறை தம் நாட்டு மக்களுக்கு ஏற்புடையது என்று வழி நடத்தி செல்கின்றனர். இசுடாலின், காரல் மார்க்சு போன்றோர் தமது மக்களுக்கு கம்யூனிச சித்தாந்தமே சரியானது என்று முடிவெடுத்தனர். காந்தியடிகள் அகிம்சையே நம் நாட்டிற்கு ஏற்புடையது என்று முடிவெடுத்தார். இங்கிலாந்து, சப்பான் போன்ற சில நாடுகளில் இன்றளவும் மன்னராட்சி நடைபெற்று வருகின்றது. அண்டை நாடான நேபாளத்தில் துப்பாக்கி முனையில் மன்னராட்சி […]
|
|
Posted: 12 Jun 2016 05:05 PM PDT க. பாலசுப்பிரமணியன் கற்றலுக்கான சூழ்நிலைகள் மூளையின் திறன்பட்ட வேலைக்கும் சிறப்புமிக்க கற்றலுக்கும் பலவிதமான தேவைகள் கண்டறியப்பட்டுள்ளன.. அவைகளில் சில முக்கியமானவை. இந்த உள்ளீடுகள் அதன் வேலைத்திறனையும் திறனையும் கற்றல் திறனையும் வெகுவாக பாதிக்கின்றன. 1. உணவு 2. தூக்கம் 3. உடலில் உள்ள நீர் விழுக்காடு 4. உடல் பயிற்சி 5. மன நிலை நம்முடைய உணவில் என்னென்ன ஊட்டச் சத்துக்கள் உள்ளன.- கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின் சத்துகள், தாதுக்கள் அனைத்தும் சேர்ந்த உணர்வு மிக […]
|
|
Posted: 12 Jun 2016 05:01 PM PDT மீ.விசுவநாதன் வெள்ளையாய் ஒருநேரம் -கரு நீலமாய் ஒருநேரம் – மேக வெள்ளமாய் ஒருநேரம் -செந் தீயென ஒருநேரம் -இடி மின்னலாய் ஒருநேரம் – சுடும் வெய்யிலாய் ஒருநேரம் -ஒளிப் பின்னலாய் ஒருநேரம் – வான் பெற்றதே அவதாரம். கறுப்பென ஒருநேரம் – நிலாக் கடலென ஒருநேரம் – புள் பறக்கிற ஒருநேரம் – தூள் பறக்கிற ஒருநேரம் – விண் மீன்களால் ஒருநேரம் – வண்ண வில்லென ஒருநேரம் – பால் வான்வெளி அலங்காரம் -இறை […]
|
|
Posted: 12 Jun 2016 05:00 PM PDT நிர்மலா ராகவன் அப்பா, அம்மா, அடி `எங்கப்பா என்னைத் தினமும் அடிக்கிறார்! எதற்கென்றே புரியவில்லை!’ `எங்கப்பா மட்டும்? நான் எவ்வளவு நல்லது செய்யப் பார்த்தாலும், என்னை ஓயாமல் திட்டுகிறார்!’ பத்து வயதுப் பையன்கள் இருவரின் உரையாடல் இது. தந்தைக்கு ஏன் தன்னைப் பிடிக்கவில்லை என்ற பரிதவிப்பு இருவருக்கும். இதே ஏக்கத்தை நாற்பது வயதான ஓர் சகஆசிரியரும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்: `நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். என் அப்பாவின் அன்பைப் பெற முடியவில்லை!’ `அவருக்கு உங்கள் தங்கைமேல்தான் […]
|
|
படக்கவிதைப் போட்டி 67 – இன் முடிவுகள் Posted: 12 Jun 2016 04:48 PM PDT காயத்ரி பூபதி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் ஆதித்ய நாகராஜ். இதனைப் போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள். இங்கு படக்கவிதைப் போட்டிக்கான படத்தில் இருப்பவர் குரங்காட்டி. கோல் கொண்டு குரங்கை ஆட்டுவிக்கும் இவருக்கு, எழுதுகோலால் கவிஞர்கள் ஆக்கிய கவிதைகளைப் பார்ப்போம் இனி, வயிற்றுப் பசிக்காக குரங்கை வைத்து வித்தைக் காட்டிப் பிழைப்பு நடத்தும் குரங்காட்டி தன் பசியை […]
|
|
இன்னம்பூரான் பக்கம் [6] பெண்ணியம்: புதிய பார்வை [1] Posted: 12 Jun 2016 04:42 PM PDT இன்னம்பூரான் ஜூன் 11, 2016 பல வருடங்களாக பெண்ணியத்தைப் பற்றி பலர் எழுதுவதைப் படித்து வருகிறேன். எனக்கும் அது பற்றி ஆழமான கருத்துக்கள் உண்டு. சமுதாயத்தின் பல படிநிலைகளில் வாழும் மனிதர்களுடன், குறிப்பாக பெண்பாலாருடன் என்னால் இயல்பாகப் பழக முடிவதால், பெண்பாலாரில் பலரின் கருத்துக்களம், எண்ணவோட்டம், நினைவலைகள், உள்ளக்கிடக்கை, செயல்பாடுகள், அணுகுமுறை, வாழ்க்கை வழங்கிய மர்மங்கள் ஆகியவற்றை, சட்டப்பூர்வமான ஆலோசகன், நண்பன், நேசன், காதலன், கணவன், உடன்பிறப்பு, வாரிசுகள் என்ற பலவித கோணங்களில் ஓரளவு புரிந்து கொள்ளும் […]
|
|
Posted: 12 Jun 2016 04:42 PM PDT செண்பக ஜெகதீசன் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். -திருக்குறள் -479(வலியறிதல்) புதுக் கவிதையில்… உள்ள பொருளின் அளவறிந்து வாழாதவன் வாழ்க்கை, உள்ளது போலத் தோன்றி இல்லாததாகி எதுவும் தோன்றாமல் கெட்டழியும்…! குறும்பாவில்… கைப்பொருள் அளவறியான் வாழ்க்கை, உளதுபோல் தோன்றி இல்லாததாகிக் கெட்டிடும் எதுவுமேயின்றி…! மரபுக் கவிதையில்… இருக்கும் பொருளின் அளவறிந்தே இயல்பாய் வாழத் தெரியாதவன் பெரிதாய்க் கொண்ட வாழ்வதுதான் […]
|
|
Posted: 12 Jun 2016 04:39 PM PDT எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா பார்வையற்றோர் குறையெதையும் பார்க்காது இருந்திடுவர் செவிப்புலனை இழந்தவரோ குறைகேட்கா இருந்திடுவார் கையற்றோர் தீயவற்றை தொட்டுவிடா திருந்திடுவார் இத்தனைகள் குறையிருந்தும் இவர்நிறைவா யிருப்பார்கள் ! அழகான கண்ணிருக்கும் அகன்றபெரும் செவியிருக்கும் திடமான கையிருக்கும் திரண்டபெரும் உடலிருக்கும் வரமாக இவையிருந்தும் வண்ணமுற இருக்காது வசைபாடிக் குறைசொல்லி வாழ்நாளைக் கழித்திடுவார் ! ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு எம்படைப்பே பகுத்தறியும் பேரறிவை படைக்கையிலே புகுத்திவிட்டான் குறையற்ற உடல்கிடைத்தும் குறைசொல்லி இருந்துவிடின் எமைப்படைத்த […]
|
|
Posted: 12 Jun 2016 04:29 PM PDT மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை கண்ணகி வந்ததை வாயிலோன் மன்னனுக்குத் தெரிவித்தல் வாயிலோன் கூறலானான்: ” எம் கொற்கை அரசே! வாழி! தெற்கில் பொதிகை மலை கொண்ட தலைவனே வாழி! செழியனே வாழி! தென்னவனே வாழி! பழிவரும் காரியங்கள் செய்யாத பஞ்சவனே வாழி! பொங்கி வழிகின்ற குருதியால் புண்ணாக இருக்கின்ற மகிடாசுரனின் பிடரொடு கூடிய தலைப் பீடத்தில் நின்று தன் அகன்ற கைகளில் வெற்றிவேல் ஏந்திய கொற்றவை போலும் இருக்கிறாள்; எனினும் அவள் […]
|
|
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி, ஒளிமந்தைகள், நிபுளாக்கள் Posted: 15 Jun 2016 10:51 AM PDT (கட்டுரை: 8) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ பால்மய வீதி சூரிய காலக்ஸி ! பரிதி மண்டலக் கோள்கள் உருண்டோடும் விளையாட்டுச் சந்தை ! பரிதி அங்கோர் வெள்ளாடு ! குடை ராட்டினம் போல் கோள்கள் சுற்றிவர வெய்யோன் மையக் கனலை வணங்கி வலம்வரும் ஒளிமயமான மந்தை ! பூமி சிறியது ! பூமி சுற்றும் சூரியன் சிறியது ! சூரியன் சுற்றி வரும் பால்மய வீதிப் பூதக் காலக்ஸி சிறியது […]
|
Posted: 15 Jun 2016 10:28 AM PDT கண்ணன் அனுபூதி…. ——————————– ஆண்டவா நீலவண்ணம் பூண்டவா நீள்விசும்பில் நீண்டவா பாரதப் பாண்டவராய் -வேண்டவா? தூண்டவா பக்தியால் ? தீண்டவா பாரதியாய் ? கீண்டவா தீங்கைக் கிழித்து…. கிழிந்து பிணியில் கிடக்கும் உடம்பைப் பிழிந்து சுகம்மேலும் பார்க்கும் -இழிந்த மனமேன் கொடுத்தாய் எனையேன் படைத்தாய் உனைஏன் கேட்கநான் உண்டு…. உண்டில்லை என்றுனை இங்கிரு சாரர்கள் விண்டுரைத்த போதும் விசுவமே -கண்டுகொண்டேன் மித்யை ஜகத்தென்றும் சத்தியம் நீயென்றும் வித்தை பழகும் விதம்…. விதவிதப் பூவாய் விதவையின் கூந்தற் […]
|
|
Posted: 15 Jun 2016 04:42 AM PDT பவள சங்கரி கொலை, பொய், களவு, கள்ளூண், குருநிந்தை ஆகிய பஞ்சமாபாதகங்கள் என்பது மிகவும் பெரியதொரு பாவம் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கெல்லாம் கூடப் பரிகாரமும் கழுவாயும் உண்டு என்கிறது புறநானூறு. வேதத்தில் வல்லவர்களான அந்தணர்களைக் கொல்வது, பெண் கொலை புரிவது , குழந்தைகளை அழிப்பது போன்றவைகள் கொடும் பாவம் என்று கருதப்பட்டாலும் இந்தப் பாவங்களையெல்லாம் விடக் கொடுமையானது பொய் சொல்வதுதானாம். பொன்ற வான்அந்தணர் பெண் புதல்வரைக் கொன்ற பாதகத்தில் கொடும் பொய் என்பது […]
|
|
Posted: 15 Jun 2016 02:17 AM PDT நிர்மலா ராகவன் பத்திரிகையில் பெயர் வந்துவிட்டால், புகழ் வருகிறதோ இல்லையோ, எல்லாருக்கும் பொறாமை வருகிறது. என்னமோ பத்திரிகைக்காரர்கள் கொட்டிக் கொடுத்து, அந்த சன்மானத்தில் நாலு பங்களா வாங்கிப் போட்டுவிட்ட மாதிரிதான்! இந்த மனிதர்களை எண்ணி அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை இந்திராவுக்கு. இருபத்தைந்து ஆண்டுகளாக புனைப்பெயரிலேயே எழுதி தன்னை மறைத்துக் கொண்டவளின் போதாத காலம் ஏதோ போட்டியில் பரிசு கிடைத்து, புகைப்படம் மூலம் அவள் முகமும், அத்துடன் சொந்தப்பெயரும் எல்லாருக்கும் அறிமுகமாகிவிட்டது. பரிசு வாங்கியதில் தன்னம்பிக்கை துளிர்த்தது. […]
|
|
கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல்நாள் நிகழ்ச்சி Posted: 14 Jun 2016 05:41 PM PDT முனைவர் மு.இளங்கோவன் கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கருத்தரங்க நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் 04.06.2016(காரிக்கிழமை) காலை 9.15 மணியளவில் தொடங்கியது. முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் தொடங்கிய கருத்தரங்க நிகழ்வில் 17 ஆய்வாளர்கள் தொல்காப்பியம் குறித்த கட்டுரைகளை வழங்கினர். இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெற்றது. முதல் அமர்வில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் பரவுவதற்குரிய வழிமுறைகளைத் தம் சிறப்புரையில் குறிப்பிட்டார். கனடாவின் கல்வித்துறை – […]
|
|
இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-20 Posted: 14 Jun 2016 05:07 PM PDT உன்னைக்குறைகூறல் நேர்மையாமோ? மீனாட்சி பாலகணேஷ் ஏழெட்டுச் சிறுமியர்; தமது வழக்கமான சிற்றில் விளையாட்டை மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அழகான சிறிய வீட்டைக்கட்டுகிறாள் ஒருத்தி. மலர்களாலும் கிளிஞ்சல்களாலும் சோடனைசெய்கிறாள் இன்னொரு சிறுமி. பக்கத்தில் அழகான பள்ளம் ஒன்றினைத் தோண்டி, அதில் நீரைநிரப்பித் தாமரைக்குளம் அமைத்துவிட்டாள் வேறொருத்தி. தாமரை எனும் பெண் ஓடோடிச்சென்று பக்கத்துக்குளத்திலிருந்து மலர்ந்த தாமரைமலர்கள் இரண்டினைப் பறித்துவந்து அதில் மிதக்கவும் விட்டுக்களிக்கிறாள். எல்லாரும் தாமிழைத்த இச்சிறு வீட்டைச் சுற்றிநின்று பாடிக்களிக்கிறார்கள்: கைகொட்டி ஆடுகிறார்கள்! ‘ஆத்தோரம் வீடுகட்டி, அழகான […]
|
|
Posted: 14 Jun 2016 05:06 PM PDT மீ.விசுவநாதன் அடடா அடடா ஆண்டவனே – என் அகத்தில் அன்பு பூண்டவனே ! விடடா விட்டா என்றாலும் – ஒரு விளக்காய் உள்ளே ஒளிர்பவனே ! எதற்கோ வந்து என்னுள்ளே – தன் இருப்பைக் காட்டிச் சிரிப்பவனே ! பதற்கும் பசுமை காட்டுகிற – தன் பரந்த குணத்தால் நிறைந்தவனே ! எவரோ துன்பம் அடைந்தாலும் – என் இதயம் வலிக்கச் செய்பவனே ! சுவராய் இருக்கும் என்மூலம் – நல்ல சோதிக் கவிதை […]
|
|
இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் Posted: 14 Jun 2016 05:01 PM PDT 1. அன்று அங்கு விடுபட்டது மதமா? மடைமையா? அவ்வைமகள் இரேணுகா இராசசேகரன் ஸ்டீவ் ஜாப்ஸின் இறையியல் சிந்தனைகள் அவர் மறைவுக்குப் பின்பு நிறையவே பேசப்படுகின்றன. நம்முடன் சமகாலத்தில் வாழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு, 2011ல் இறைசோதியுடன் ஐக்கியமாகி இருக்கிற ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்நாள் பயணம் ஒப்பற்றதொரு சரித்திரமே எனும்படியான புரிந்துகொள்ளல் இவ்வுலகில் உண்டாகியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தைப் பற்றி ஒன்றைச் சொல்வார்கள் – இது நவீனப் பறைசார் ஊடகப் பரவல் காலம். சாதாரண விஷயங்கள் கூட இன்று வெகுப் […]
|
|
Posted: 14 Jun 2016 04:51 PM PDT அன்பே தெய்வம் திவாகர் உயிர்களிடத்தே அன்புசெய்ய வேணுமாய் ஆயிரம் முறைசொன்னாலும் கேளாமல் உந்தன் நலமொன்றையே கருத்தில்கொண்டு எந்தநாளும் உன்காரியம் செய்கின்றாய் பயன்பிறர்க்கும் அதன்பலனில் உண்டெனில்; சுயநலம் பேணுவதால் குறையில்லைதான் அறியவேணும் தம்பி நன்றாய்புரியவேணும் குறுகியயெண்ணங்கள் என்றும் துணைவாரா; உன்மீதே உனக்கன்பு என்றல்லாமல் அனைவர்மீதும் செலுத்துமன்பே உத்தமாம் உள்ளம்சிறிது உயிர்பெரிது என்றிருப்போர் கள்ளத்தன வாழ்க்கையே வாழ்வார்களாம் சற்றேகவனம் கொடுத்து சொல்வதைக்கேள் பற்றுமிகக் கொள்வாய் அன்பின்மீதே! அனாதையென்றே வந்தவனாம் அவனை ஆனந்தமாய் அருட்தந்தை […]
|
|
Posted: 14 Jun 2016 04:37 PM PDT க.பிரகாஷ் ஓர் அடர்ந்த காடு, அக்காட்டினுள் ஒரு பெரிய வீடு, அவ்வீட்டினுள் ஒரு வேடன். அவ்வேடனுக்கு மக்களோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் காட்டிற்குள் வாழ வந்துவிட்டான். அப்படி வந்த அவனுக்கு அக்காட்டில் வேட்டையாட ரொம்ப நாளா ஆசை. என்ன ? தனியாக இருக்க வேண்டும். ஏன்? காட்டில் இருக்கும் விலங்குகளைக் கண்டு ரசிக்கவேண்டும், அதனோடு, பேச வேண்டும் அதனை வேட்டையாடவேண்டும். சரி! இருந்தாலும் அவனுக்கு கொஞ்சம் பயம், அதனால் அவன் வீட்டைச் சுற்றி வேலியமைச்சு. […]
|
|
Posted: 14 Jun 2016 04:35 PM PDT தமிழ்த்தேனீ வாசிப்பு, அறிவியல், கணிதம் ஆகிய திறன்களில் மலேசியா முறையே 55, 52, 57ஆம் இடங்களில் இருக்கிறது. முதல் ஐந்து இடங்களில் சிங்கப்பூர், தென்கொரியா, ஹாங்காங், சங்காய் சீனா, பின்லாண்ட் ஆகிய நாடுகள் இருக்கின்றன. ஜப்பானியக் கல்வி முறை 21 ஆம் நூற்றாண்டை நோக்கி பீடு நடை போடுகிறது. ஜப்பானில் அவர்கள் ஒரு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் . அதாவது ஒவ்வொரு மாணவருக்கும் அவர் வாங்க வேண்டிய மதிப்பெண் 100 என்றால் அதிலே 20 சதவிகிதம் எழுத்து வடிவமாகவும் […]
|
|
Posted: 14 Jun 2016 04:34 PM PDT கிருத்திகா கீர்த்தனா ‘காலேஜ் விட்டதும் முதலில் யாழினியைப் பார்க்க வேண்டும்’ மனதுக்குள் எண்ணியவனாக அரைகுரையாக பாடத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான். கல்லூரி முடிந்ததும் யாழினியே கௌதமை பார்க்க வந்துவிட்டாள். மாலை வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்காற்றை வாரி வழங்கி கொண்டிருந்தது, வேப்பமரம். அதன் கீழ் அமர்ந்து இருவரும் மாற்றி மாற்றி யோசித்து கொண்டிருந்தனர். “கௌதம், நாம கண்டிப்பா வீட்டை விட்டுப் போகனும….? இன்னொரு முறை யோசிச்சுப் பாரேன்” “இல்லை, யாழினி. நான் பலதடவை யோசிச்சுப் பார்த்துட்டேன்…… இதைத் தவிர […]
|
|
Posted: 14 Jun 2016 03:33 PM PDT தி.விஜயராணி எங்கே தலைநிமிர்ந்து சென்றாலும் உன் அருகில் தலை வணங்குகிறேன் “உன் மகளாக’’ தலைநிமிர்த்தியது நீ என்பதால். உயிர் ஜனிப்பு பாலைவன நிலத்தினுள் பதுங்கியிருந்த “பனிக்குடத்தில்”, நீந்தி விளையாடிய “மீன்” (குழந்தை) உலகைக் காணவே, அதை உதைத்து விட்டு வந்தது, “பிறந்தநாளான” இன்று. படத்திற்கு நன்றி- கூகிள்
|
| You are subscribed to email updates from வல்லமை. To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
|
Posted: 18 Jun 2016 07:01 AM PDT பவள சங்கரி ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையே கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே உயிராவது எதுவடா? உடம்பாவது எதுவடா ? உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது எதுவடா? உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லடா ? – சிவவாக்கியர் பொருள் : ஒரு முழுமையான உயிரினமாய் இந்த பூமியில் வலம்வரும் உன்னால் உன் மூலம் அறிய இயலுமா? ஒரு துளி நீரில் உருவாகி, கை, கால், கண், மூக்கு, செவி என பல உறுப்புகளும் தோன்றியது எங்கனம்? […]
|
|
Posted: 18 Jun 2016 06:51 AM PDT பவள சங்கரி இவ்வுலகில் அழிவின்றி நிலைத்திருப்பவையாக நம் சைவச் சித்தாந்தங்கள் கூறுபவை – பதி, பசு, பாசம் என்பன. பதி எனும் இறையை அடைவதற்கு பசு எனும் உயிர்களுக்குத் தடையாக இருப்பவை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களே. உயிர்கள் சத்தியம், அசத்தியம் எனும் இரண்டையும் பகுத்துணர இயலாத இருளாக அறிவொளியை மறைக்கக்கூடியதே இந்த ஆணவ மலம். இறை சக்தியை அண்டவிடாமல் நீச மயக்கத்தில் உழலச் செய்து, அறிவை கீழ் நிலைக்கு எடுத்துச்சென்று பொய் பக்தியை உருவாக்குவதும் […]
|
Posted: 18 Jun 2016 06:44 AM PDT ”கண்ணன் அனுபூதி’’ —————————————- கூப்பிட்டால் ஆயர்க்காய்க் கூச்சலிட்டால் ஆனைக்காய்ச் சாப்பிட்டால் நட்புக்காய்ச் சோர்வின்றிக் -காப்பிட்ட ராதை கரம்விலக்கிக் கீதை உரைநிறுத்தி ஆதரவுக்(கு) ஓடும் அரி….(16) அரியா தவனை அறியா தவரே அறிய முயல்வர் அறிவால் -எறியா(து) ஒளிந்த நெருப்பை உணர மரத்தைப் பிளந்த குருடனைப் போல்….(17) ‘போலெ’ன்(று) உவமை புகல முடியாது மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா எந்தனை வேறுவடி வாக்கு….(18) வாக்கிலே பாரதி வார்த்தைகள் வந்திட நாக்கிலே நம்மாழ்வார் […]
|
Posted: 18 Jun 2016 06:40 AM PDT ’’கண்ணன் அனுபூதி’’ —————————————- நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில் இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த இடப்பயல் தாளே இருப்பு….(10) இருப்பதிங்(கு) ஒன்றே இதன்பேர் கண்ணன் மறுப்பதை விட்டென் மனமே -கருப்பொருளைப் பார்க்காத போதும் பாடப் பரவசத்தில் கார்கால மேகத்தில் காண்….(11) காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில் நானென(து) இல்லாத மோனத்தில் -தேனளவு பார்க்கும் மலர்வண்டின் போக்கில் இனப்பெருக்கம் கோர்க்கும் குயுக்தியின் கண்….(12) கன்னங் கருத்தது காரிருள் போன்றது நண்ணும் நமக்கொளி […]
|
Posted: 18 Jun 2016 06:35 AM PDT கிரேசி மோகன் —————————————- வாழ்த்தியவன் வாகை விளம்பிட ஜாம்பவான் ஆழ்திரை ஆழிமேல் ஆதவனாய் -பாழ்படுத்த லங்கா புரிசென்று அங்கசோகக் கானுறையும் செங்கமலத் தாள்கண்ட சேய்….(49) சேயாய் இருக்கையில் சூரியனை சாப்பிட தாயார் தடுத்தும் தவிர்த்துவான் -பாய வெகுண்ட சுரர்கோன் வயிரத்தால் தாக்க அகண்ட(து) அனுமன் அடல்….(50) அடலவன் மோனம் கடலவன் ஞானம் சுடர்விடும் ராமம் சுகித்து -அட!இவன் எத்திறமும் அஞ்சிடும் ருத்திரன் அம்சமே சித்தமொரு மித்திவனைச் சேர்….(51) சேர்ந்த கவிக்குள சேற்றுச்செந் தாமரை நேர்ந்தரா மாயண நுட்பொருள் […]
|
|
இன்னம்பூரான் பக்கம் [6] பெண்ணியம்: புதிய பார்வை [2] Posted: 18 Jun 2016 06:31 AM PDT இன்னம்பூரான் ஜூன் 16, 2016 கொள்ளிவாய் பிசாசு, பேய், குட்டிச்சாத்தான் ஆகியவை கண்டு அஞ்சுபவர்கள் ஆண் வர்க்கத்தைக் கண்டு நடுங்கவேண்டியதில்லை. ஆண்வர்க்கம் பேய்,பிசாசுகளுக்கு விலக்கு. ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பார்கள். ஆண்வர்க்கம் கிறங்குவதுடன் சரி. சில வருடங்களுக்கு முன் ஒரு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு அழைப்பு வரவே, எனக்கு செல்லமான அந்த சிறுமிக்கு என்ன பரிசு வாங்கலாம் என்று புரியவில்லை. தருணம் கிடைத்த போது, அவளையே கேட்டேன். ‘… உங்களிடம் கேட்க எனக்கு தயக்கம் இல்லை. […]
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (200) Posted: 18 Jun 2016 06:26 AM PDT சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! இங்கிலாந்திலிருந்து இச்சிறியேனின் அன்பு வணக்கங்களுடன் இந்த மடலின் மூலம் உங்களுடன் மனம் திறப்பதில் மகிழ்வடைகிறேன் . இது நான் உங்களுக்கு வரையும் 200வது மடல் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். புலம்பெயர் வாழ்வின் உத்வேகத்துடனான சுழற்சியினுள் அகப்பட்டு ஆழியினுள் ஒரு சுழியில் அகப்பட்டு இழுத்துச் செல்லப்படும் மீனைப்போல காலவோட்டத்தோடு இழுத்துச் செல்லப்படுகையில் மனதின் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாய் இம்மடலின் மூலம் உறவாடக் கிடைத்த சந்தர்ப்பத்திற்கு அனைவர்க்கும் பொதுவான இறைக்கு நன்றியைச் செலுத்துவதோடு […]
|
Posted: 18 Jun 2016 05:28 AM PDT பூபாரம் போக்க வந்தவன் ஆபாரம் தூக்குகிறான்….சபாஷ் கேசவ்….. ”பட்டா பிஷேகம்:சார் பட்டா பரம்பரைக், கிட்டா கரங்களில் கன்றேந்தி -கொட்டொகொட் என்றவன்மேல் கொட்டப்பால், கேசவ் வரைவின்று வென்ன்றிடும் ஆஸ்கார் விருது”….கிரேசி மோகன்….
|
|
Posted: 18 Jun 2016 05:22 AM PDT மீ.விசுவநாதன் பச்சைக் கிளியில் பலவகை வண்ணமும், கொச்சை மொழிசொலும் குஞ்சுக் குருவியில் மஞ்சள். கருஞ்சாம்பல். மாநிறம் என்றுபல நெஞ்சங் கவர்ந்த நிறைய வண்ணமும். சேவலின் கொண்டையில் செந்நிறச் சேர்க்கையும், தாவிடும் வானரத் தாடையில் சந்தனம் நீவிய நேர்த்தியும், நீந்திடும் மீனுக்கு ஓவியக் காந்த ஒளிமிகும் வைரமணிக் கண்களும், ஊறுகிற கட்டெறும்பின் நாசியில் மண்ணளக்கும் ஞானமும், வாலிலே நாய்க்குநல் நன்றி சொலும் நரம்புகளும், குட்டையான பன்றிக்கு வாயால் பகைவிரட்டு(ம்) ஆற்றலும், பாம்பிற்கு ரெண்டு பகுதியென நாக்குகளும், கூம்பி இருக்கும் […]
|
| You are subscribed to email updates from வல்லமை. To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
vallamai |
|
Posted: 19 Jun 2016 09:37 AM PDT எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா அப்பாவின் தோழேறி அவர்மார்பில் உதைத்துநிதம் துப்பிநாம் நின்றாலும் சுகமுடனே அதையேற்பார் நித்திரையில் எமையணைத்து நீங்காமல் அவர்படுப்பார் நினைத்துநாம் பார்த்துவிடின் நெக்குருகி நிற்போமே ! தோழேறி நின்றநாம் தோழளவு வளர்ந்தபின்பும் தன்தோழில் எமைத்தாங்கும் தருமசீலர் அப்பாவே எம்குறையைத் தம்குறையாய் ஏற்றுநின்று காக்குமவர் என்றுமெங்கள் நெஞ்சினிலே இறைவனென இருக்கின்றார் ! புழுதிதனில் புரண்டாலும் புன்முறுவல் காட்டிடுவார் அழுதுநாம் பார்த்துவிடின் அவருருகிப் போய்விடுவார் தெருவதனில் சண்டைசெய்தால் திருந்துதற்கு வழிகாண்பார் ஒருபொழுதும் சினங்காட்டா […]
|
|
சூரிய குடும்பத்தின் புதிய ஒன்பதாம் கோளைப் பற்றி ஐயுறும் வானியல் விஞ்ஞானிகள் Posted: 19 Jun 2016 09:28 AM PDT சூரிய குடும்பக் கோள்கள் ஒன்பதா, பத்தா, அதற்கும் மேலா ? சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/6poHQ2h00ZA https://youtu.be/fAIV_6lcbIQ https://youtu.be/TBnItMgSjsE http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* [Click to Enlarge] சூரிய குடும்பப் பூதப் புறக்கோளாய்ச் சுற்றும் ஒன்பதாம் கோள் ஒளிந்துள்ளதா ? இல்லையா ? ஐயம் எழுந்துள்ளது ! ஒன்பது கோளா, அல்லது பத்தா ? நெப்டியூனுக்கு அப்பால் சுற்றும் ஆறு நீள்வட்ட அண்டப் பாதைகள் நிலையல்ல ! ஆதலால் ஒன்பதாம் […]
|
|
எழுவகைப்பெண்கள்: 3. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே Posted: 18 Jun 2016 08:26 PM PDT அவ்வை மகள் 3. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே ஆண் -பெண் வேறுபாட்டில் இடுப்பெலும்பைபற்றிக் குறிப்பிட்டாக வேண்டும் என்றேன். உயரத்தில் குறைந்தும், அகலத்தில் மிகுத்து சற்றேறக்குறைய வட்ட வடிவத்தில் இருப்பது பெண்ணின் இடுப்பெலும்பு (காண்க படம் – 1). மேலும், பெண்ணின் இடுப்பெலும்பானது சற்று முன்னோக்கித். தள்ளப்பட்டிருக்கும். சற்றே பின்புறம் சாய்ந்தார்ப் போன்ற நடுமுதுகும் , சிறிதேனுமாவது வயிறு கொஞ்சம் முந்தித் தள்ளப்பட்டிருக்கும் தன்மையும் பெண்ணுக்கு இயல்பாய் அமையும் காரணம் பெண்ணின் இடுப்பெலும்பின் தன்மைதான். […]
|
| You are subscribed to email updates from வல்லமை. To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
Posted: 20 Jun 2016 04:49 AM PDT ”நீலம்பா ரித்த நவநீதன் மத்ததனில், பாலின்ப வெண்ணை பிசுபிசுக்க, -காலின்பம் கொண்டு பருகுகிறாள் கோமாதா;, கோலமிதை விண்டுரைத்த கேசவ் வியப்பு’’….கிரேசி மோகன்…. “விண்சார்ந்த இந்திரன் வீசிய மின்னலிடி மண்சேரா வண்ணம் மலையெடுத்த, -மின்சாரக் கண்ணமுது ,அந்தக் கிளிசுகர் கூறிய வண்ணமிகு பாக வதம்”….கிரேசி மோகன்….
|
|
தமிழ்த் தேசியவாதியுடன் சிறப்பு நேர்காணல் Posted: 20 Jun 2016 04:44 AM PDT பவள சங்கரி தமிழ்த் தேசியவாதி ஐயா திரு பழ.நெடுமாறன் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் , கி. பழநியப்பனார் மற்றும் பிரமு அம்மையாருக்கும் தவப்புதல்வனாய்ப் பிறந்தவர். இவரது தந்தையார் மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றியவர். 1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா போன்ற […]
|
Posted: 20 Jun 2016 04:23 AM PDT ’’கண்ணன் அனுபூதி’’…. ———————————————– தேற்றி விஜயனைத் தேரேற்றி வில்லேந்தச் சாற்றினாய் கீதையை சர்வேசா -சேற்றினுள் பஞ்சப் புரவிகட்(கு) அஞ்சிப் புதைந்திடும் நெஞ்ச ரதத்தை நிறுத்து….(25) நிருத்தம் பயில நினக்கொரு வாய்ப்பு கருத்த நவநீதக் கண்ணா -பருத்த அகந்தையாம் ஆற்றில் புகுந்ததே ஆசை முகுந்தாயிக் காளியனுன் மன்று….(26) மன்றாடி ஈசன் மனம்குளிர மோகினியாய் அன்றாடிப் பாடிய அச்சுதா -மன்றாடிக் கேட்கிறேன் வைகுந்தா காட்சிதா கைலாசன் வேட்கை அளவென் விருப்பு….(27) விருப்புடன் மாலோலன் விரைகழல் பற்றிச் சிறப்புடன் வாழ்வோம் […]
|
|
Posted: 20 Jun 2016 02:05 AM PDT முல்லை அமுதன் தமிழின் வரப்பிரசாதம் தமிழர் வாழும் பரப்பெல்லை விரிவுபட்டுள்ளது. இன முரண்பாடு உள்ளக வெளியக இடப்பெயர்வுகளை அதிகமான மக்களை பெயர்த்திருக்கிறது அல்லது வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறது. ஆதலினால் மக்களின் பரப்பளவின் அதிகமும் அதிகமாக அவர்களுக்கிடையேயான மொழி வளம் ஆளுமை கற்றுக்கொள்ளும் வல்லமை கல்வியின் மேலோங்கிய பயிற்சி கைகளுக்குள் உலகையே கொண்டு வரும் கணினியியல் நெறிகளின் கற்கைகள் ஒவ்வொரு வரும் தங்களின் திறமைகளை வெளிக்கொணரும் துணிச்சலையும் கொண்டு வந்துள்ளமை கண்கூடு. இங்கு பன்முக ஆளுமை மிக்க படைப்பாளிகளும் […]
|
|
Posted: 19 Jun 2016 06:29 PM PDT மீ.விசுவநாதன் மனத்தை அழிக்கப் பழகென்றாய் – ரமணா மனத்தில் நீயும் இருக்கின்றாய் ! சினத்தை அழிக்கப் பழகென்றாய் – என் சிரமம் அறிந்து சிரிக்கின்றாய் ! ஆசை அடக்கப் பழகென்றாய் – என் ஆசை உனதாய் அறிகின்றாய் ! காசைத் துறக்கப் பழகென்றாய் -பொற் காசாய்ப் பொலிந்தே அழைகின்றாய் ! அண்ணா மலையை நினையென்றாய் – நீ அண்ணா மலையாய்த் தெரிகின்றாய் ! எண்ணா திருந்து களியென்றாய் – அந்த எண்ணா மருந்தின் சுவையானாய் ! “யார்நீ?” […]
|
|
Posted: 19 Jun 2016 06:26 PM PDT பிரகாஷ் காடூர் என்ற கிராமத்தில் ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வந்தனர். இக்கிராமத்தில் படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகமாக இருந்தனர். அதிலும் கடினமாக உழைத்து படிக்கவைக்கும் போது நடந்த சம்பவங்களை இக்கதையில் சுட்டுகிறேன். கலைச்செல்வி பள்ளிக்கு சேர்ந்த முதல் நாளே நண்பர்கள் துணைக்கு இல்லை என்று வருத்தப்பட்டாள். அடுத்தநாள் பள்ளிக்குச் செல்லும்போது தேவி, அபி, என்ற இரண்டு நண்பர்கள் கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தாள். கலைச்செல்வி பள்ளிக்குச் செல்லும்போது ஆற்றை கடந்து செல்லவேண்டும். ஆற்றை கடந்து செல்வதற்கு தொங்குபாலம் ஒன்று […]
|
|
Posted: 19 Jun 2016 05:46 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.06.2016) வரை உங்கள் கவிதைகளை […]
|
|
Posted: 19 Jun 2016 05:13 PM PDT நிர்மலா ராகவன் அப்பாவுக்கு நன்றி இளவரசி எங்கள் பள்ளியில் இறுதியாண்டை முடித்துவிட்டு, பரிசோதனைக்கூடத்தில் உதவியாளாக வேலை பார்த்தாள். இரண்டு ஆண்டுகளாக அவள் ஒருவனைக் காதலித்து வந்தது எனக்குத் தெரியும். ஒரு நாள் ரொம்பக் கோபமாக இருந்தாள். `என்ன ஆச்சு, ஈலா?’ என்று விசாரித்தேன். (இளவரசி என்ற பெயர் வாயில் நுழையாததால், அவள் சீன ஆசிரியைகளுக்கு `ராசி’. பிறருக்கு ஈலா). `எப்போ பார்த்தாலும், நாம்ப கல்யாணத்துக்குப்புறம், ஒன் சம்பளத்திலே வீடு வாங்கலாம், காடி வாங்கலாம்னு அதே பேச்சுத்தான்!’ `அவனுக்கு […]
|
|
படக்கவிதைப் போட்டி 68 – இன் முடிவுகள் Posted: 19 Jun 2016 05:00 PM PDT காயத்ரி பூபதி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் புதுவை சரவணன். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள். மலைப் பாதையில் மழை வரும் முன்பே குடை பிடித்துச் செல்லும் இச்சிறுவன் தான் யாரோ? விளையாடும் பருவம் இது விளையாட நேரம் ஏது சின்னத் திரையில் சிறு பிள்ளைப் பருவமும் வெள்ளித் திரையில் விடலைப் பருவமும் களி […]
|
|
Posted: 19 Jun 2016 04:59 PM PDT க. பாலசுப்பிரமணியன் ஒரு நாளும் இரு விழியும் போதுமோ உனைக்காண, ஒரு குரலும் ஒரு மொழியும் போதுமோ உனைப்பாட, ஓருயிரும் ஒருலகும் போதுமோ உன்னருள்நாட, உலகாளும் அபிராமியே ! உளமாளும் எழில்ராணியே ! நிறைஞானி நிலைமறந்து நிறைநிலவாய் நினைந்திடவே காரிருளில் ஒளிர்நிலவாய் வலம்வந்த ஓங்காரியே ! பிறைதன்னை தலைசூடி பித்தான பரமேசன் பிணிதீர்க்க சரிபாதி உடல்கொண்ட சாம்பவியே ! குலம்காத்து நலம்காத்து மனம்காத்து உயிர்காத்து விடையீசன் துணைகாத்து வினைதீர்க்கும் விசாலாட்சியே ! மலையரசன் […]
|
|
Posted: 19 Jun 2016 04:58 PM PDT க. பாலசுப்பிரமணியன் தூக்கமும் கற்றலும் “தூங்கி வழியாதே. புத்தகத்தைப் படி ” என்று புத்தகத்தோடு போராடும் மகனுக்கு அறிவுரை கூறும் தந்தை. “புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருது” என்று பரீட்சைக்கு முன்னால் தன் நண்பனுக்கு வழிமொழியும் நண்பன். “தூங்குவதற்கு முன்னாலே நான் கொஞ்சம் புத்தகம் படிப்பேன் . தூக்கம் தானாக வந்துவிடும்” என்று புன்னகையுடன் தன் தூக்கக் கலையை விளக்கும் என் ஆபீஸ் நண்பர்.. தூக்கத்தின் பேராண்மையைப் பற்றி போற்றாத மனிதரே கிடையாது எனச் சொல்லலாம். தூக்கத்திற்க்கும் […]
|
|
Posted: 19 Jun 2016 04:49 PM PDT எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா வள்ளுவத்தைப் படித்துவிடின் வாழ்க்கைபற்றி அறிந்திடலாம் தெள்ளுதமிழ் நூல்களிலே சிறந்தநூலாய் இருக்கிறது அள்ளவள்ளக் குறையாமல் அறிவுரைகள் தருவதனால் நல்லதெனப் போற்றுகின்றார் நாட்டிலுள்ள மக்களெல்லாம் கள்ளமெலாம் அகல்வதற்கும் கயமைவிட்டு ஓடுதற்கும் நல்லதொரு மருந்தாக நம்குறளும் இருக்கிறது உள்ளமதில் குறள்கருத்தை உருவேற்றி விட்டுவிடின் இவ்வுலகில் நல்வாழ்வு எல்லோர்க்கும் அமையுமன்றோ ! பலநூல்கள் வந்தாலும் பாரில்நிலை நிற்கின்ற பக்குவத்தைப் பெறுவதற்கு பக்குவமும் வேண்டுமன்றோ குறள்வந்த காலம்முதல் தலைநிமிர்ந்து நிற்குதென்றால் அதுகூறும் அத்தனையும் […]
|
|
Posted: 19 Jun 2016 04:38 PM PDT மலர்சபா மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை மன்னவன் கட்டளைப்படி கண்ணகி அவையை அணுகுதல் அரசன் வாயிலோனிடம் கூறினான்: “அத்தகையவள் இங்கே வருவாளாக… அவளை அழைத்து வருவாயாக..” பாண்டியன் வினா கண்ணகியைப் பார்த்து அரசன் கேட்டான்: “நீர் வார்க்கும் கண்களையுடைய பெண்ணே! என் முன் நிற்கும் கொடி போன்றவளே.. நீ யார்?” கண்ணகியின் மறுமொழி “ஆராய்ந்து பார்க்கும் திறன் இல்லாத மன்னவனே! உன்னிடம் குறை ஒன்று சொல்லக்கூடியவளாய் நான் இருக்கிறேன். இகழமுடியாத சிறப்பு வாய்ந்த தேவர்களும் போற்றும்படி […]
|
|
Posted: 19 Jun 2016 04:18 PM PDT பயன்தூக்கார் செய்த வுதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது. -திருக்குறள் -103(செய்ந்நன்றி அறிதல்) புதுக் கவிதையில்… உதவியில் உயர்வு பயன் கருதாமல் உதவுதலே.. அதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்த்தால், அதனால் வரும் நன்மை அளவில் பெரிது, அலைகடலை விட…! குறும்பாவில்… பயன்கருதாதவர் செய்த உதவியால் பெற்ற நன்மையின் சிறப்பு, பரந்த கடலினும் பெரிது…! மரபுக் கவிதையில்… பலனாய் என்ன கிடைக்குமென பார்த்தே […]
|
---------- Forwarded message ----------
From: "வல்லமை" <noreply+...@google.com>
Date: Jun 25, 2016 2:59 AM
Subject: vallamai
To: <annak...@gmail.com>
Cc:
vallamai
________________________________
இன்னம்பூரான் பக்கம் [7] பெண்ணியம்: புதிய பார்வை [3/1]
‘மகத்தானப் பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்’
பகவத்கீதை பதினெட்டு!
“நான்” என்னும் ஒரு நாடகம்
எழுவகைப் பெண்கள்: 4. முரடாய்ப் போன இந்தப் பெண்ணின் உடம்பு
இன்பமுடன் வாழ்த்துகிறோம் (கவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை)
வாழ்ந்திடுவோம் வளத்துடனே (சர்வதேச யோகா தினத்துக்கான கவிதை)
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (201)
இன்னம்பூரான் பக்கம் [7] பெண்ணியம்: புதிய பார்வை [3/1]
Posted: 24 Jun 2016 10:00 AM PDT
இன்னம்பூரான் ஜூன் 24, 2016 ஒரு கட்டுரையை நான்கு பாகமாக அளிக்க வேண்டிய கட்டாயம், நேரமின்மை. விட்டு விடுவதை விட, இது மேல். இங்கிலாந்தின் லான்ஸெட் என்ற மருத்துவ இதழ் பல்லாண்டுகளாகவே மிக பிரபலம்; முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் நாளை சாரு பஹ்ரீ என்பவர் எழுதிய Gaps in India’s health response to violence against women என்ற ஆங்கில கட்டுரை வெளியாகும். நாமும் நான்கு பேர் ஆராய்ந்து கூறுவதை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். இல்லையென்றால், குண்டுச்சட்டியில் […]
‘மகத்தானப் பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்’
Posted: 23 Jun 2016 09:27 PM PDT
பவள சங்கரி சீதாயணம் – மதிப்புரை அணுசக்தி ஆக்கப்பணியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற அறிவியல் விஞ்ஞானி திரு ஜெயபாரதன் தமிழ் இலக்கியப் பணியிலும் தம்முடைய சுவடுகளை ஆழப்பதித்துள்ளார். சீதாயணம் எனும் இந்நாடக நூலின் ஆசிரியரின் நாடகம் மிக வித்தியாசமான கோணத்தில் வரையப்பட்ட ஒன்று. நம் நாட்டில் ஆன்மீக நம்பிக்கை என்பது பெரும்பான்மை மக்களின் குருதியில் ஊறிக்கிடப்பதென்பது அனைவரும் அறிந்த உண்மை. இராமாயணம் என்ற மாகாவியத்தின் நாயகன் இராமச்சந்திரமூர்த்தியும், அவர்தம் தர்மபத்தினி சீதாதேவியும் மனிதராக அவதரித்தவர்கள் […]
Posted: 23 Jun 2016 05:40 PM PDT
புலவர் இரா, இராமமூர்த்தி *********************************** பகவத்கீ தையின் பதினெட்டுப் பாகமும் மிகவிரைந் தென்னுள் விளங்க – முகத்தில் இருகோடு கொண்ட எழிலானை உள்ளம் உருகித் துதித்தேன் உவந்து! 1. நீநினைப்ப தெல்லாம் நிகழுமா? நின்னினைப்பில் வீண்கருத்தே மேவி வெளித்தோன்றி – காணும் பிரச்சினை உன்னையே பின்னிப் பிணங்கும் சிரைத்திட்டால் போமோ சிகை! 2. சரியான நல்லறிவு சாத்திய மானால் அரிக்கும் கவலை அகலும்! – புரிந்த பொழுதில் புரியாமை முற்றும் புரியப் பழுது விலகும் பயன்! […]
Posted: 23 Jun 2016 05:17 PM PDT
க. பாலசுப்பிரமணியன் கரையோரம் கால்நனைத்துக் கடல்மீளும் அலைபோல காற்றிழுக்கக் கரைசேரும் என்னுயிரே! கார்மேகம் இடையிடையே கண்சிமிட்டும் மின்னலைப்போல் களிப்படைந்த புலன்காட்டும் புன்சிரிப்பே! வானுயரப் பறக்கின்ற நீர்த்திவலை நிலம்காட்டும் வண்ணம்போல் வானவில் கனவுகளே ! வாடாத மலரென்றும் வாசம்வரும் நித்தமென்றும் வாழ்க்கையை வாழ்த்துகின்ற மனமே ! போகுமிடம் தெரியாத புதிரென்று புரிந்தபின்னும் போகத்திலே விடைதேடும் வாழ்வே ! போதாத மனம்கொண்டு புகலிடம் தேடிச்சென்று போராடி புலியாட்டம் போடும் ஆசைகளே ! முதல் இதுவென்றும் […]
எழுவகைப் பெண்கள்: 4. முரடாய்ப் போன இந்தப் பெண்ணின் உடம்பு
Posted: 23 Jun 2016 05:08 PM PDT
அவ்வை மகள் ரேணுகா ராஜசேகரன் விளையாட்டுத் துறையைப்போலவே காவல் துறை மற்றும் இராணுவத்திலும் பெண்களின் பணிப்பங்களிப்பு பற்றிய கரிசனங்கள் உலகெங்கிலும் எழுந்தவாறு உள்ளன. ஆண்-பெண் சமான அங்கீகாரத்திற்குப் பெயர் போனது அமெரிக்காவின் காவல் துறை. பெண்கள், காவல் துறையில் நுழைந்த 110 ஆவது ஆண்டைக் கொண்டாடி முடித்திருக்கிறார்கள். இத்தருணத்தில் அமெரிக்கக் காவல் துறையில் பெண் காவலர்கள் (அதிகாரிகளையும் உள்ளடக்கி) 15 விழுக்காடு மட்டுமே! இத்தருணத்தில், இங்கு, அமெரிக்கப் பெண்காவலர்களின் வரலாற்றைக் கொஞ்சம் மீள்பார்வை செய்வது பொருத்தமாய் இருக்கும். […]
இன்பமுடன் வாழ்த்துகிறோம் (கவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை)
Posted: 23 Jun 2016 05:00 PM PDT
எம். ஜெயராமசர்மா.. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே நிலைநிற்கும் பலகருத்தை சுமந்துவந்த அவர்பாட்டு நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது ! காதலவர் கைபட்டால் காமனுமே கலங்கிடுவான் தேவர்கூட அவர்பாட்டை திறமென்றே பகர்ந்திடுவார் சாதிமதம் காதலுக்கு தடையாதல் தகாதென்று […]
வாழ்ந்திடுவோம் வளத்துடனே (சர்வதேச யோகா தினத்துக்கான கவிதை)
Posted: 23 Jun 2016 04:50 PM PDT
எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா இளமையாய் வாழவேண்டும் இன்பமாய் வாழவேண்டும் நெடுதுநாள் வாழவேண்டும் நிறைந்திடும் மகிழ்ச்சிவேண்டும் அளவிலா செல்வம்சேர்த்து ஆனந்தம் பெருக்கிநின்று மனையொடு மக்களாக வாழ்வதை விரும்புகின்றோம் ! மண்ணிலே நல்லவண்ணம் வாழ்ந்திட விரும்பும்போது எம்மன எண்ணம்யாவும் இழுக்கிலா இருத்தல்வேண்டும் தன்னிலை உணர்தல்வேண்டும் தன்னுடல் பேணவேண்டும் உண்ணும் நம்உணவுயாவும் உடலுளம் காக்கவேண்டும் ! உடலினைக் காக்கவேண்டில் உளமதைப் பேணல்வேண்டும் உளமது செம்மையானால் உடலுமே உறுதிகொள்ளும் உடலுளம் சிறக்கவேண்டில் உயர்வுடை யோகம்தன்னை அயர்விலா செய்வோமாயின் […]
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (201)
Posted: 23 Jun 2016 04:48 PM PDT
சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். 2016 ஜீன் மாதம் 23ம் திகதி. இங்கிலாந்து மக்களின் மனதில் பொறித்து வைக்கப்பட வேண்டிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள். அப்படி என்ன முக்கியத்துவம் இங்கிலாந்தில் ? எனும் கேள்வி எழுகிறதா ? இங்கிலாந்தின் எதிர்கால அரசியல், பொருளாதார முன்னேற்றம் , இங்கிலாந்து இனிவரும் காலத்தில் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப்போகிறது என்பதை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான நாள். இதை நிர்ணயிக்கும் உரிமையை மக்களின் கைகளில் இங்கிலாந்தின் அரசாங்கம் கொடுத்திருக்கும் […]
Posted: 25 Jun 2016 01:01 AM PDT ”மூடமெய் பக்தி முழங்கால் வழிவார மாடவர் பாதத்தை மேயுது : -GODஅவர் காடதனில் வாசிப்பு கோதை திருப்பாவை, மாடதன் மேய்ச்சல் மறந்து’’….கிரேசி மோகன்….
|
Posted: 25 Jun 2016 12:57 AM PDT கிரேசி மோகன் ஓவியப் பிதாமகர் திரு.கோபுலு சார் நமது கேசவ்ஜிக்கு ‘’கிருஷ்ணப் பிரேமி’’ என்ற பட்டத்தை அளித்துள்ளார் என்பதை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்….(கேசவ் வெகு கூச்சத்துடன் என்னிடம் இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டது அடியேன் செய்த பாக்கியமே)…. ’’யாரென் றுதெரியுதா! , யாதவன் தானிவன்மன் னார்குடி கோபுலு மாடோடு- சாரே!(மலையாள ‘’சாரே’’) கிருஷ்ணனை டெய்லி தருகின்ற கேசவ், ‘’கிருஷ்ணப் பிரேமி கரெக்ட்’’….கிரேசி மோகன்…. தொடர்ந்து பன்னாட்களாக நம்மையெல்லாம் தமது அற்புதமான ஓவியக்கலை மூலம் உள்ளம் நெகிழச் செய்யும் […]
|
|
Posted: 24 Jun 2016 07:38 PM PDT பவள சங்கரி குருட்டு உலகில் குதர்க்கம் பேசும் முரட்டு உலகம் – இது உச்சியைத்தொட வக்கணை பேசும் வரட்டு நாதம் – பாப்பா புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தீர வழியைச் சொல்லம்மா இருக்கும் மடமையை வெளிச்சம் போடும் பகட்டு உலகமே – மாயையில் ஓயாத போட்டியும் பொறாமையும் கூடிய உலகமே – பாப்பா புரிந்து தெளிந்து கொள்ளம்மா பித்தம் தீர வழியைச் சொல்லம்மா குருட்டு உலகில் குதர்க்கம் பேசும் முட்டாள் உலகம்தான் – இது பட்டாம்பூச்சியாய் […]
|
|
விண்வெளிச் சுனாமிக் கதிர்வீச்சு மூன்றாம் பூகாந்த வளையம் தோன்றி மறையக் காரணமாகும். Posted: 24 Jun 2016 07:06 PM PDT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_embedded&v=c9qKIVlhXpQ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sF_Gbs1yj6w http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CMwdhEKoBdw ++++++++++++ சிறப்பாகப் பேரளவில் ஒளிப்பிழம்பு அலைகளை [Plasma Waves] நாங்கள் நோக்கினோம். அண்டவெளிச் சுனாமிபோல் [Space Tsunami] அடித்து அவை பூகாந்தக் கதிர்வீச்சு வளையங்களைச் சுற்றித் தெறித்து, வெளி வளையப் பகுதியை அழித்துச் சென்றன. அப்போது புரிய முடியாதபடி மூன்றாம் காந்த வளையத்தின் வடிவாக்கம் விளங்கியது. பேராசிரியர் இயான் மாண் [அல்பெர்டா பல்கலைக் கழகம், கனடா] மூன்றாம் பூகாந்த வளைய எழுச்சி இயக்கத்துக்கு […]
|
|
Posted: 26 Jun 2016 08:23 AM PDT மலர்சபா மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை மன்னவன் உரைத்த விடை மன்னவன் உரைத்தான்: “பெண் அணங்கே! கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோல் ஆகாது; அதுவே அரச நீதியாகும்.” கண்ணகி தன் சிலம்பின் தன்மையை அறிவித்தல் “அறநெறி பின்பற்றாத கொற்கை நகரத்து வேந்தனே! என் காலுக்கு அணியாய் விளங்கும் சிலம்பின் பரல்கள் மாணிக்கமே” என்றாள் கண்ணகி. மன்னவன் தன் தேவியின் சிலம்பில் உள்ள பரல் முத்து எனக்கூறி, காவலர் கொண்டுவந்த சிலம்பைக் கண்ணகியின் முன் வைத்தல் தேனைப் […]
|
|
Posted: 26 Jun 2016 07:22 AM PDT பவள சங்கரி சென்ற வெள்ளியன்று (24/06/16) காலை 6.30 மணிக்கு வழக்கம்போல் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் மகேந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளராக தான் பணிபுரியும் அலுவலகத்திற்குச் செல்வதற்காக சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு தன் தந்தையுடன் வந்திருக்கிறார் சுவாதி. தினமும் மின்சார இரயிலில் பணிக்குச் செல்வது வழக்கம். மகளை இறுதியாகப் பார்க்கப்போவது அன்றுதான் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அன்பு மகளை கொண்டுவந்து விட்டுவிட்டு கிளம்பிவிட்டார் அவர் தந்தை. மத்திய […]
|
|
இன்னம்பூரான் பக்கம் [7] பெண்ணியம்: புதிய பார்வை [3/2] Posted: 26 Jun 2016 02:21 AM PDT இன்னம்பூரான் ஜூன் 26, 2016 கட்டுரையை தொடர்வதற்கு முன் ஷாக்: இன்று சென்னையில் ஐந்து பெண்மணிகள் (நான்கு பெண்கள் 30 வயதுக்குள்) கொடூரமாகத் தாக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் 24 வயது யுவதி. கணினி பணியாளர். நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் கொலை. ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஒரு அன்னையும் அவரது மூன்று மகளிரும் கொல்லப்பட்டு, வீட்டிலேயே சடலங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. இதையெல்லாம் கேட்டு, பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், ‘பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பு இல்லை; […]
|
Posted: 26 Jun 2016 02:10 AM PDT ”தாலாட்டு பாடுகின்றான் தாமோ தரன்நாலு காலாட் படைக்குக் கொடுத்துமடி: -வாலாட்டித் துள்ளும் கறவை துவண்டு கிடக்குததன் உள்ளும் புறமும் உவப்பு”….கிரேசி மோகன்….
|
|
படக்கவிதைப் போட்டி 69 – இன் முடிவுகள் Posted: 27 Jun 2016 08:32 AM PDT காயத்ரி பூபதி: இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு. வெங்கட் சிவா. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள். படக் கவிதைப் போட்டிக்கான ஒளிபடத்தில் இருப்பவர்கள் மணலில் வீடு கட்டி விளையாடும் சிறுவர்கள். இவர்கள் கட்டிய வீட்டிற்கு கவிஞர்கள் தீட்டிய பா வண்ணத்தைப் பார்ப்போம். இனி, சிறுபிள்ளை பருவத்தில் குழந்தைகள் மனம் விரும்பியவாறு விளையாடுதற்கு பெற்றோர்கள் தடையாக […]
|
|
Posted: 27 Jun 2016 03:22 AM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். […]
|
Posted: 27 Jun 2016 01:21 AM PDT நீந்தித் தவழ்ந்து நடந்துவிரைந்(து) ஓடி ஏந்தினாய் வேடங்கள் எத்தனை -சாந்தி உனக்களிக்க வெண்பாவில் உட்கார்நீ ஓய்வாய் எனக்களிப்பாய் வேலை எழுத்து…. ”எனக்கவலைத் தந்தாய் மனக்கவலை தீரும்” எனக்குசேலன் நட்புக்(கு) இளகும் -குணக்கடலே மாபாவச் செல்வம் மனதில் சுமக்கின்றேன் கோபாலா கொள்ளைக்குக் காத்து…. இன்றுபோய் நாளைவா என்றிலங்கை வேந்தனிடம் அன்றுரைத்த அன்பே அரிமயமே -இன்றாகி நேற்றான நாளையே, நேரான வட்டமே கூற்றான காவலா காப்பு….கிரேசி மோகன்….
|
|
அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016 Posted: 27 Jun 2016 01:17 AM PDT கே.எஸ்.சுதாகர் அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது. போட்டிகள் பற்றிய பொது விதிகள் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்இப்போட்டியில் பங்கு பற்றலாம். ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனுப்பிவைக்க முடியும். குறுநாவல் யுனிகோட் (Unicode) எழுத்துருவில் – மின்னஞ்சல் இணைப்பாக Microsoft Word வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். […]
|
|
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 65 Posted: 26 Jun 2016 05:16 PM PDT அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம், லுக்ஸம்பர்க் முனைவர்.சுபாஷிணி லுக்ஸம்பர்க் ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ஜெர்மனியோடு, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய இரண்டு நாடுகளையும் எல்லையாகக் கொண்டது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1940ம் ஆண்டில் மே10ம் தேதி ஹிட்லர் தலைமையிலான நாஸி படைகள் லுக்ஸம்பர்க் நாட்டிற்குள் ஊடுருவின. ஒரே நாளில் லுக்ஸம்பர்க் நாட்டைக் கைப்பற்றியது ஜெர்மனியின் அப்போதையை நாஸி அரசு. 1944ம் ஆண்டின் இறுதி வாக்கிலும் 1945ம் ஆண்டில் 2ம் உலகப்போரின் முடிவிலும் […]
|
|
Posted: 26 Jun 2016 04:57 PM PDT நிர்மலா ராகவன் என்றும் சோகமா! `உங்கள் மகள் இப்படி இருக்கிறாள்! நீங்கள் என்ன, சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?’ என்று பல பெண்கள் தன்னைக் கேட்பதாகச் சொன்ன கௌரியின் முகத்தில் ஆழ்ந்த சோகம். உறவில் மணமுடித்ததாலோ, இல்லை, வேறு எந்த காரணத்தினாலோ, அவள் பெற்ற இரு பெண் குழந்தைகளுமே உடலளவில் சரியில்லை. சந்திராவின் வலது கையும், இரு கால்களும் செயலிழந்து இருந்தன. தவழ்ந்துதான் நகருவாள். அதிக கனமில்லாமல் இருந்ததால், சிறு குழந்தையைப்போல் அவளைத் தூக்கிக்கொண்டுதான் வெளியிடங்களுக்குப் போவார்கள். இதே போன்றதொரு […]
|
|
Posted: 26 Jun 2016 04:55 PM PDT மீ.விசுவநாதன் அந்தத் துறவி அணுகித்தான் அறத்தி(ன்) அருகே அமர்ந்தேன்நான் ! கந்தல் துணியை அணிந்தாலும் கவலை மறக்கத் தெரிந்தேன்நான் ! பொந்தாய் இருக்கும் மனத்திற்குள் புதுமை வழிய இருந்தேன்நான் ! வந்த வழியை மறக்காமல் வருமெ(ன்) உறவை அணைத்தேன்நான் ! அணுவைப் பிளக்கு(ம்) அவசரத்தில் அகத்தி(ல்) அழுக்கை அடைத்தேன்நான் ! அணுவில் அணுவாய் இருப்பவனை அறிய அவரைப் பணிந்தேன்நான் ! கணுவே கரும்பிற் கழகென்று கையில் சுமந்து திரிந்தோனை கணுவைப் பிளந்து சுவைகண்டு கணத்தில் மனத்தை […]
|
|
Posted: 26 Jun 2016 04:53 PM PDT க. பாலசுப்பிரமணியன் பொதிகையிருந்து பூத்துவரும் புதுப்புனலே பொழிந்துவிடும் பொலிவுடனே குற்றாலத்தில் .. பொங்குதமிழில் புன்சிரிக்கும் கவிதையென புதுமணமே முகர்ந்துவிடும் மலைச்சாரல் ! எதுகையின்றி மோனையின்றி தாளமின்றி இசைபாடும் இலையசைத்து மரங்கள் ! கலையரசி யாழிசையைக் கவர்ந்துவந்து காதருகே கவிபாடும் கருவண்டுகளே ! மங்குஸ்தான் பழம்பறித்து மகிழ்ந்திருக்கும் மந்தியெல்லாம் மலையோர மரங்களிலே ! மலைச்சாரல் நீர்நனைந்து மலர்களெல்லாம் மண்வீழ்ந்து மாலைதன்னை கோர்க்கும் ! வானமுதம் வழிந்ததுபோல் வளைந்துவரும் வாசமுடை மூலிகையுடன் தேனருவி ! […]
|
|
Posted: 26 Jun 2016 04:49 PM PDT க. பாலசுப்பிரமணியன் கற்றல் சிறப்புற எவ்வளவு தூக்கம் தேவை ? ” வகுப்பில் தூங்கி வழியாதே. போய் முகத்தைக் கழுவிக்கொண்டு வா…” என்று ஒரு முறையாவது மாணவர்களைப் பார்த்துக் கூறாத ஆசிரியர்களே இருக்க முடியாது. விருப்பமில்லாத பாடங்கள், சோர்வுற்ற மனநிலை, ஆசிரியர்களிடம் ஈடுபாடற்ற தன்மை, உடல் சோர்வு, உணவு வகைகள் மற்றும் உண்ணும் முறைகளால் தூக்க நிலை ஊக்கப்படுத்தப்பட்டு கற்றலில் மற்றும் கவனத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது . நல்ல தூக்கமின்மை கற்றலை வெகுவாக பாதிக்கும் என்று ஆராய்ச்சிகள் […]
|
|
Posted: 26 Jun 2016 04:27 PM PDT தமிழ்த்தேனீ வேலைக்கு சேர்ந்து சில நாட்கள் சென்ற பின் ஒரு நண்பரைச் சுற்றிலும் பல நண்பர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்துவிட்டு நானும் அந்தக் கூட்டத்தில் பங்கெடுக்க அவர்களை சமீபித்தேன். வாப்பா தம்பி வா உக்காரு உன் பேரு என்னா என்றார் நடு நாயகமாக உட்கார்ந்திருந்த ஒரு மூத்த நண்பர். சார் என் பேரு கிருஷ்ணமாச்சாரி, நான் வேலைக்கு சேந்து ஆறு மாதம் ஆச்சு என்றேன். அப்போதுதான் கவனித்தேன் அந்த நடு நாயகம் அங்கிருந்த அனைவருக்கும் உள்ளங் கையில் […]
|
|
Posted: 26 Jun 2016 04:11 PM PDT எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா தமிழினை முதலாய்க் கொண்டு தரணியைப் பார்க்க வைத்த உரமுடை டொமினிக் ஜீவா உவப்புடன் என்றும் வாழ்க அளவிலா ஆசை கொண்டு அனைவரும் விரும்பும் வண்ணம் தெளிவுடன் எழுத்தை ஆண்ட தீரனே வாழ்க வாழ்க சொல்லிலே சுவையை ஏற்றி சுந்தரத் தமிழைக் கொண்டு மல்லிகை இதழைத் தந்த மாதவன் ஜீவா வாழ்க தொல்லைகள் பலவும் கண்டும் துவண்டு நீ இருந்திடாமல் மல்லிகை இதழை நாளும் மலர்ந்திடச் செய்தாய் நன்றாய் தோழிலே […]
|
|
Posted: 26 Jun 2016 03:50 PM PDT சுலோசனா 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை பண்பாட்டு பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை. மகான்கள் பூமிக்கு வருவதன் நோக்கம் தாய்மையின் பங்கு விவேகானந்தரின் இளமைப் பருவம் இந்திய பண்பாட்டின் உயர்வு . விவேகமும் வைராக்கியமும், ஒழுக்கம், தன்னை வளர்த்தல், சகோதரத்துவம்,சேவை மனப்பான்மை, சராசரி மனிதர்களாகப் பிறக்கும் எத்தனையோ உயிர்களை கடைத்தேற்றுவதின் பொருட்டு சாதாரண மனிதன் சான்றோன் எனும் நிலையை அடையும் பொருட்டே மகான்கள் இறை அருளால் மண்ணில் வந்து பிறக்கின்றனர். பிறவாநிலையை எய்திவிட்ட அவர்கள் […]
|
|
Posted: 26 Jun 2016 03:49 PM PDT செண்பக ஜெகதீசன் அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந் தின்சொல னாகப் பெறின். -திருக்குறள் -92(இனியவை கூறல்) புதுக் கவிதையில்… புன்னகை முகத்தில் கூட்டி வருவோரை இன்சொல்லால் வரவேற்பது, அகநிறைவுடன் அடுத்தவர்க்கு ஈவதைவிட இனிதானதே…! குறும்பாவில்… இதயநிறைவுடன் ஈவதைவிட, இதழில் புன்னகையுடன் பிறரை இன்சொலால் வரவேற்பதே இனிது…! மரபுக் கவிதையில்… வாசல் வந்த வறியவர்க்கு வள்ளல் தன்மை மாறாதே வேச மின்றியே உளமார வேண்டு […]
|
Posted: 28 Jun 2016 01:13 AM PDT ”தின்னுமிலை(தின்னும் வெற்றிலை) மாறி, திருப்பாவை கிள்ளையாய் (கிளியாய்) கண்ணன் குழல்வழி கோதையிடம், -எண்ணமாய் தூதாகப் போவதை தூரிகையில் தந்தனன், சாதுவான ஓவியன்கே சவ்’’….கிரேசி மோகன்…. இவ்விடம் ‘’சாது’’ என்பது ‘’சுகர் ஜடபரதர்’’ போன்ற பாகவத ‘’சாதுக்கள்’’….. ஸாரி கிளியை கோகிலம் என்று தவறாக பயன்படுத்தி விட்டேன்….’’கிள்ளை’’ கிளி….
|
|
Posted: 27 Jun 2016 07:32 PM PDT பவள சங்கரி புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கண்டறிந்த பொது சார்புக் கோட்பாடு – theory of relativity என்ற தத்துவம். இதைத்தானே நம் பாட்டனார்கள் மிக இயல்பாக ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்று பண்டைக்காலம் தொட்டே கூறி வந்திருக்கிறார்கள். ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இந்த தத்துவத்தை அதாவது “நாம் காண்பதெல்லாம் உண்மையல்ல” என்ற கோணத்தில் தாம் கண்டறிந்த தத்துவத்தை விளக்கிக் கொண்டிருந்தாராம். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞர்களில் […]
|
|
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விண்மீன்கள் தோற்றமும் இறுதி முடிவும் Posted: 27 Jun 2016 06:05 PM PDT (கட்டுரை: 9) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://slideplayer.com/slide/1374764/ முன்னுரை: பிரபஞ்சத்தில் சூப்பர்நோவா ஒன்று விளைவித்த கொந்தளிப்பில் அல்லது பளுமிக்க விண்மீன் ஒன்று வெடித்த கொந்தளிப்பில் புதிய விண்மீன் ஏற்பாடுகள் (New Star Systems) உருவாகுகின்றன. நமது சூரிய மண்டலமே பால்மய வீதி காலக்ஸியின் சுருள் ஆரத்தில் மரித்த ஒரு சூப்பர்நோவா வீசி எறிந்த மிச்சத்திலிருந்து தோன்றி யிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஒரு கோட்பாடை ஊகிக்கிறார்கள். சுமார் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அது […]
|
|
’’அன்னம் அருஞ்சொற்பொருளில் பார்த்தவரை’’…. Posted: 27 Jun 2016 05:58 PM PDT கிரேசி மோகன் புகழேந்திப் புலவரின் ‘’நள வெண்பா’’ நண்பர் ராமஷேஷன் கொடுத்தார்….புகழேந்தியிடம் கையேந்தி நள வெண்பா போல என் ‘’உள வெண்பா’’ எழுதிக்கொண்டிருக்கிறேன்….ராமஷேஷன் தந்த புத்தக அட்டையில் யாரோ ஒரு ஓவியர் ரவிவர்மாவின் ‘’தமயந்தி அன்னத்தை தூது விடும்’’ பெயிண்டிங்கை வரைந்துள்ளார்….அவர் வரைந்த ஓவியத்தைப் பார்த்து அடியேன் வரைகிறேன்….அவர் வரைந்த ஓவியப் பிரிண்டில் தமயந்தியும், அன்னமும் தெளிவாய் உள்ளது…. மற்றபடி பேக்ரவுண்ட் மரங்கள் மங்கலாக உள்ளது…. ரவிவர்மா பழக்கத்தில் பேக்ரவுண்டை அடியேன் என் கற்பனைக்கு ரீல் விட்டுக் […]
|
Posted: 29 Jun 2016 08:28 AM PDT காயத்ரி பூபதி: இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு. வெங்கட் சிவா. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள். படக் கவிதைப் போட்டிக்கான ஒளிபடத்தில் இருப்பவர்கள் மணலில் வீடு கட்டி விளையாடும் சிறுவர்கள். இவர்கள் கட்டிய வீட்டிற்கு கவிஞர்கள் தீட்டிய பா வண்ணத்தைப் பார்ப்போம். இனி, சிறுபிள்ளை பருவத்தில் குழந்தைகள் மனம் விரும்பியவாறு விளையாடுதற்கு பெற்றோர்கள் தடையாக இருக்கக் […]
|
|
படக்கவிதைப் போட்டி 68 – இன் முடிவுகள் Posted: 29 Jun 2016 08:24 AM PDT காயத்ரி பூபதி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் புதுவை சரவணன். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள். மலைப் பாதையில் மழை வரும் முன்பே குடை பிடித்துச் செல்லும் இச்சிறுவன் தான் யாரோ? விளையாடும் பருவம் இது விளையாட நேரம் ஏது சின்னத் திரையில் சிறு பிள்ளைப் பருவமும் வெள்ளித் திரையில் விடலைப் பருவமும் களி […]
|
|
படக்கவிதைப் போட்டி 67 – இன் முடிவுகள் Posted: 29 Jun 2016 08:20 AM PDT காயத்ரி பூபதி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் ஆதித்ய நாகராஜ். இதனைப் போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள். இங்கு படக்கவிதைப் போட்டிக்கான படத்தில் இருப்பவர் குரங்காட்டி. கோல் கொண்டு குரங்கை ஆட்டுவிக்கும் இவருக்கு, எழுதுகோலால் கவிஞர்கள் ஆக்கிய கவிதைகளைப் பார்ப்போம் இனி, வயிற்றுப் பசிக்காக குரங்கை வைத்து வித்தைக் காட்டிப் பிழைப்பு நடத்தும் குரங்காட்டி தன் பசியை […]
|
|
படக்கவிதைப் போட்டி 66 – இன் முடிவுகள் Posted: 29 Jun 2016 08:16 AM PDT காயத்ரி பூபதி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் இராமலெஷ்மி. இதனைப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள். மலர்கள் என்றுமே கவிஞர்களின் எண்ண ஊற்றுகளின் பிறப்பிடமாகும். இலக்கியத்தில் மலர்கள் நிலத்தை, காலத்தைக் குறிக்கும் குறியீடாகவும், கருத்துச் செறிவான செய்திகளைச் சுட்டும் உவமையாகவும் சூழலைக் குறிக்கும் பின்னணியாகவும் இடம் பெற்றுள்ளன. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. […]
|
Posted: 28 Jun 2016 11:19 PM PDT ”பின்னல் மயிற்பீலி, கன்னல்(கரும்பு) குழல்கீதம், எண்ணல் அவர்நாமம் என்றிருக்க, -கண்ணன் நிரந்தரக் காப்பு, நினக்குண்டு கன்றே !(நாமும்தான்) வரந்தது கேசவ் விரல்’’….கிரேசி மோகன்….
|
|
Posted: 28 Jun 2016 05:58 PM PDT க.பிரகாஷ், எம்.ஏ, எம்.பிஃல், தமிழ்த்துறை தொழில் நுட்ப்பக் கள ஆய்வுப் பணியாளர் பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் – 46 ஆசிரியர் : எறும்பும், ஈயும் நெறுங்கிய சினேகிதர். அது கிராமத்தில் விவசாயத் தொழில் செய்து வந்தது. ஈ வீட்டுவேலையும், எறும்பு விவசாயத்தையும் பார்த்து வந்ததுர். ஆசிரியர் : எறும்பு ஏறு ஓட்டுவதற்காக சென்றுவிட்டது. ஈ வீட்டில் சமையல் வேலை முடித்துவிட்டு, சுவையாக எதையாவது சமைப்போம் என்று பாயாசத்தை செய்து கொண்டு […]
|
|
இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 3 Posted: 28 Jun 2016 05:24 PM PDT அவ்வை மகள் சமூகப் பிரக்ஞையும் சுயப் பிரக்ஞையும் அவதாரப் புருஷர்களிடம் சமூகப் பிரக்ஞை நிறைந்த இறைவழி மார்க்க நோக்கு இருந்தது என்றோம். இதை நாம் அறியும் இத்தருணம், சமூகம் என்றால் என்ன என்ற கேள்வி நம்முள் முதலில் எழுகின்றது. சமூகம் என்பதை ஒழுங்கமைப்புடைய மக்கள் தொகுதி என்பர். கூட்டுப் பண்பும், ஒருமித்த குணாதிசயங்களும், பொதுப்படையான பழக்கவழக்கங்களும், ஒன்றேயான அடையாளங்களும், ஒத்ததான பரஸ்பர பரிபாஷைகளும் கொண்ட ஒரு குழுமித்த மனிதசார் அமைப்பை சமூகம் என்கிறோம். அவதாரப் புருஷர்கள் இப்படிப்பட்ட […]
|
|
இன்னம்பூரான் பக்கம் 1 [4] சமுதாயமும், நீயும், நானும், அவரும். [4.1] Posted: 28 Jun 2016 04:50 PM PDT இன்னம்பூரான் ஜூன் 28. 2016 ‘…முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க..’ என்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் வாழ்த்திய பாரத சமுதாயத்தின் தற்கால பொது உடைமை, சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை நாமே சற்று பரிசோதித்துக்கொள்வது நலம் பயக்கும். நமது பொதுவுடமை நாட்டுப்பற்றும், […]
|
Posted: 30 Jun 2016 11:12 AM PDT ’’மாட்டுக்(கு) ஒருகாலும், பாட்டுக்(கு) ஒருகாலும் கூட்டியிசை ஹார்மனி கண்ணனை: -கோட்டுக்குள் போட்டதற்கு வண்ணத்தை பூசிய கேசவ்கை போட்டிருக்கும் காப்பு பிரஷ்(BRUSH)’’….கிரேசி மோகன்….
|
|
Posted: 29 Jun 2016 08:25 PM PDT பவள சங்கரி பிரெக்ஸிட் – இது pre-exit என்ற முன் திட்டமிட்ட ஒன்றேயொழிய திடீரென ஏற்படுத்தப்பட்ட திட்டமல்ல. இந்த வாக்களிப்பையொட்டி இசுகாட்லாந்து மக்களும் தங்களுடைய விடுதலைக்ககாக வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென வற்புறுத்துகின்றனர். பிரிட்டனில் ஆளும் கட்சி எதிர் கட்சி இரண்டிலும் இதற்கான ஆதரவும் எதிர்ப்பும் பலமாகவே இருந்துள்ளன. பிரிட்டன் பாராளுமன்ற பிரதமர் கேமரூன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தத் தோல்வியை தமது தோல்வியாக எடுத்துக்கொண்டு பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் எதிர்கட்சியான லேபர் பார்ட்டி தலைவர், ஜெர்மி கார்பைன் […]
|
|
Posted: 29 Jun 2016 07:41 PM PDT பவள சங்கரி மலையில் மணம்வீசும் மென்மலர்கள் மாலையில் கலையிழந்து தலைசாயும் மறுபடியும் மொட்டாகி மலரும்மணம் இது மலரின் வாடிக்கை மழையும் புயலும் வெள்ளமும் மலரையும் மணத்தையும் அள்ளிச்செல்லும் கனியும் சுவையும் காணாமலடிக்கும் இது இயற்கையின் வேடிக்கை மலையும் அறமும் அசராமல் நிற்கும் கலையும் மணமும் கருத்தென கொள்ளும் மழையும் வெள்ளமும் இயல்பென ஏற்கும் இது மலையின் நிறம் பூவோ புயலோ மழையோ வெள்ளமோ காயோ கனியோ கருப்போ வெளுப்போ மலையைப் பிளக்க மாதவம் செய்வதில்லை இது மலையின் […]
|
|
Posted: 12 Jun 2016 06:05 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.06.2016) வரை உங்கள் கவிதைகளை […]
|
|
Posted: 01 Jul 2016 04:04 AM PDT நிர்மலா ராகவன் தாந்தித்தாத்தாவும், பொன்னுசாமி கங்காணியும் தந்தையின் பக்கத்தில் அமர்ந்து, கடந்த முக்கால் மணி நேரமாகப் பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருந்த புலியம்மாவின் உள்ளத்தில் ஒரே சமயத்தில் பயமும், குதூகலமும் நிரம்பி இருந்தன. ஆறு வருடங்களாகத் தமிழில் பயின்றுவிட்டு, இப்போது மலாய்ப் பள்ளியில் — முற்றிலும் புதியதொரு சூழ்நிலையில் — படிக்கவேண்டுமென்ற பயம். தங்கள் தோட்டப்புறத்திலேயே முதன்முறையாக இவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கற்க ஆயத்தமென, இந்தப் பள்ளியில் சேரப் போகும் களிப்பு. ‘கேவலம், பெண்ணாய்ப் பிறந்தவளுக்கு […]
|
|
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை – மின்னிதழ் செய்தி Posted: 01 Jul 2016 03:55 AM PDT உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை
|
Posted: 30 Jun 2016 11:15 PM PDT ”கரணமிட்டேன் வெல்லக் கியாதியில்லை, தோப்புக் கரணமிட்டேன் கண்ணாவுன் காலில் , -அரனவர் சீமந்தப் பிள்ளைபோல் சேயெனை ஆதரி தாயிந்த வேளை தயவு’’…. ’’நீயின்றி நானில்லை நானின்றி நீயுண்டு தீயின்றி தீபம் திரிதானே -வாஇன்றே வெப்பமாய் வந்தென்னை அப்புவாய் சந்தனமாய் அப்பனே ஆரா அமுது’’…. ’’அமுதா அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம் எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய் பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச் சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்’’….கிரேசி மோகன்….
|
|
Posted: 30 Jun 2016 06:37 PM PDT பவள சங்கரி ஒரு பிரபலமான வங்கியில் முதியோர் ஓய்வூதியம் வாங்க வந்திருந்த ஒரு தம்பதியரின் மிக மோசமான நிலையை அறிந்தபோது இதயம் துடித்தது. வங்கி மேலாளரிடம் ஓய்வூதிய மனு நிரப்பும்போதே அடுத்த மாதத்திலிருந்து பணம் கைக்கு கிடைத்துவிடுமா என்று கேட்க அவர் சிரித்துவிட்டு ஒரு ஆண்டு ஆகும், இன்னும் எத்தனை வேலை இருக்கிறதே என்கிறார். கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் போன்றோரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள்… நொந்துபோய் வந்தவரிடம் ஒருவர் தலைக்கு 2000 […]
|
|
Posted: 30 Jun 2016 05:35 PM PDT க. பாலசுப்பிரமணியன் கற்சிலையே நீயென்றார் கண்ணாயென் காதலனே ! கையிரண்டில் உனையணைத்துக் காலமெல்லாம் வாழ்வேனே ! கனவெல்லாம் நீயிருக்க கண்ணிரண்டும் நீர்வடிக்க காசினியில் உன்னையன்றி வேறொன்றும் அறியேனே ! கருவண்ணம் நீயென்று யார் சொன்னது ? கருவிழியால் பார்த்ததாலே அது வந்தது ! கருநாகம் வால்பிடித்துக் கண்ணா! நீயாட கண்களெல்லாம் கைகோர்த்து முன் நின்றது ! முன்னிரவும் பின்னிரவும் மனமெல்லாம் உனைத்தேட கண்ணருந்தும் விருந்தாக கருவிழியில் நின்றாய் ! விண்மறந்து மண்மறந்து உனை […]
|
|
இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-21 Posted: 30 Jun 2016 05:25 PM PDT மீனாட்சி பாலகணேஷ் ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்தபெண்! இத்தனை நாட்கள் நாம் சிறுமிகள் சிற்றிலிழைத்தும், சிறுவீடு கட்டியும் விளையாடியதனையும், சிறுவர்கள் அவற்றை அழித்துச் சிதைத்ததனையும் கண்டோம். இப்போது காணும் காட்சி கண்ணுக்குப் புதுமையாகவும் இனிமையாகவும் உள்ளதே! பாண்டியமன்னனின் மாபெரும் அரண்மனை. பளிங்குக்கற்கள் பதித்த பெரிய பரந்த முற்றம். வண்ணமலர்கள் போன்ற சிறுமிகள் அரசிளங்குமரியுடன் கூடி அம்மானை ஆடுகிறார்கள். அந்த அரசிளங்குமரியோ தெய்வத்தன்மை படைத்தவள். அவளுடைய ஆட்டம் விந்தைகள் நிறைந்து அனைவர் கருத்தினையும் கவர்கின்றது. வாருங்களேன்! நாமும் […]
|
|
Posted: 30 Jun 2016 05:14 PM PDT (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை) மீ.விசுவநாதன் A. சேகர் அவன் வசந்தா மேன்ஷன் விடுதியில் தங்கி இருந்த பொழுது, அவனுடன் சுரேஷ், கல்யாண சுந்தரம், சகஸ்ரநாமன் என்ற சாத்து, ஜெமினி, சேகர், நீலகண்டன் போன்ற அவனுக்கு இளவயது முதல் பழக்கமான நண்பர்களும் இருந்தனர். 1982ம் வருடம் மார்ச் மாதம் அவனுக்கு B. com இறுதி ஆண்டின் தேர்வு எழுத வேண்டி இருந்தது (மைசூர் பல்கலைக் கழகத்தின் தொலைவழித் தொடர்புக் கல்வி). அவன் பாட புத்தகத்தை விட கதை […]
|
|
Posted: 30 Jun 2016 05:07 PM PDT உடம்பெனும் தராசில் இது ஒரு அக்கினிப் பரிட்சை அவ்வை மகள் “நீங்களே சொல்லுங்கள் இந்தக் காவலர் வேலை, பெண்ணுக்கு எத்தனை நாள் தாங்கும்?” என்று எதிர் கேள்வி கேட்ட அந்தப் பெண் காவல் அதிகாரியைப் பார்த்து, நான் சொன்னேன்: “வேறு மாதிரியல்லவா கேள்விப் பட்டிருக்கிறோம் – “காவல் துறையில் ஆணாதிக்கம் – பாலியல் பலாத்காரம் – பெண்ணுக்கு அங்கீகாரம் இல்லை –” நான் சொல்லி முடிக்கும் முன் குறுக்கிட்டார். “இவையெல்லாம் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் […]
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 202 ) Posted: 30 Jun 2016 05:04 PM PDT சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். இவ்வாரம் இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் நிறைந்த வாரமாக இடம்பெறப் போகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னால் அடுக்கடுக்காய் வரும் சிறு அதிர்வுகளும் அவ்வதிர்வுகளினால் ஏற்படும் விளைவுகளும் சகஜம் என்பது போல ஜாரோப்பிய ஒன்றியத்தின் உள்ளேயா ? வெளியேயா ? என்பதற்காக நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு எனும் அரசியல் அதிர்வின் விளைவுகள் இன்னும் விளைந்து கொண்டே இருக்கின்றன. கடந்த வியாழக்கிழமை 23ம்திகதி […]
|
|
Posted: 30 Jun 2016 05:02 PM PDT கே.எஸ்.சுதாகர் எதிரே இருப்பது இன்னதுதான் என்று தெரியாதளவிற்கு மூடுபனி. தென்னிந்திய சிற்ப – ஓவிய – கலை வேலைப்பாடுகளுடன் அந்தக் கோவில் கட்டும்பணி நடந்து கொண்டிருந்தது. முருகன் கோவில். அமைதியான கிராமம். பாரிய கருங்கற்களைக் பொழிந்து, சிற்பிகள் சிலை வடித்துக் கொண்டிருந்தார்கள் . உழியின் ஒலிச்சத்தம் எங்கும் கேட்டபடி இருந்தது. பொன்னுக்கிழவர் பொல்லை ஊன்றிக்கொண்டு ஊசலாடியபடியே போய்க் கொண்டிருக்கிறார். மூன்றுகாலப் பூசைகளில் ஏதாவது ஒன்றையாவது தவறவிடமாட்டார். பூசை முடித்து வீடு திரும்புகையில்தான் அவர், அந்தப் பெண்ணைக் கண்டுகொண்டார். […]
|
|
Posted: 30 Jun 2016 05:01 PM PDT மெய்யன் நடராஜ் ஏழை எளியோர் வாழ்வின் இன்னல் களையும் தொண்டு மனப்பான்மையை காதல் செய்தார் நோபல் வென்றார் அன்னை தெரேசா.. அடிமை விலங்குடைத்து விடுதலை சிறகசைக்க அஹிம்சையை காதல் செய்தார் சுதந்திரம் தந்தார் அண்ணல் காந்தி. அறிவியல் கண்கொண்டு நாளைய நோக்கிய இன்றில் ஆராய்ச்சிகளைக் காதல் செய்தார் விஞ்ஞான ஜனாதிபதி அப்துல் கலாம் புரட்சிக் குரலெடுத்து பெண் விடுதலைக்காய் கூவியே தமிழைக் காதல் செய்தான் கவிஞனாய் மகாகவி பாரதி. ஆதலால் […]
|
|
Posted: 30 Jun 2016 05:00 PM PDT மீ.விசுவநாதன் நல்லவன் போலே தெரிகின்ற நடிப்புக் கலைஞன் நானேதான் ! வில்லனை உள்ளே தெரியாமல் வெளியே சிரிப்பவன் நானேதான் ! சொல்கிற வார்த்தை கனிபோலே சுகமாய்த் தருபவன் நானேதான் ! சல்லடை யிட்டே சலித்தாலும் சாந்தி இலாதவன் நானேதான் ! வல்லினப் பேச்சால் வகையின்றி வசைகள் பொழிபவன் நானேதான் ! மெல்லின மாதர் மதிமயக்க மெய்யை மறைப்பவன் நானேதான் ! கல்லிலும் பாலைக் கறக்கின்ற காசுக் கலைபவன் நானேதான் ! துல்லிய மாக எடைபோடும் […]
|
|
Posted: 30 Jun 2016 04:39 PM PDT சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FvksfIDVGAA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LgzM-uV81YE https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iQ_Wp4bcLFI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KfODJpfS0fo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html ++++++++++++++++++++ புதுத் தொடுவான் விண்ணூர்தி முதன்முதல் நெருங்கி புளுடோ பனிக்கடல் இருப்பைக் கூறும் . அணுசக்தி உந்து ஆற்றலில் மிகுந்த வேகத்தில் கடந்து செல்கிறது விண்கப்பல். புளுடோ வையும் சாரன் துணைக் கோளையும். நாற்பது ஆண்டுக்கு முன் பறந்த முதலிரு வாயேஜர் விண்ணூர்திகள் காணாத விந்தைகள் காணும் ! புளுடோ வுக்கும் அப்பால் பறந்து […]
|
vallamai |
|
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்ட வெளியில் நியூட்ரான் விண்மீன் ! துடிப்பு விண்மீன் ! Posted: 02 Jul 2016 08:08 AM PDT (கட்டுரை: 10) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ நியூட்ரான் விண்மீன் கண்டுபிடிப்பு 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 ஆம் தேதி வானியல் விஞ்ஞானிகள் ராபர்ட் ரூத்லெட்ஜ் & டிரெக் பாக்ஸ் (Robert Rutledge & Derek Fox) இருவரும் தொலைநோக்கிகள் மூலமாகவும், ஜெர்மன்-அமெரிக்க “ரோஸாட்” விண்ணுளவி (ROSAT Space Probe) மூலமாகவும் உளவு செய்ததில் பூமிக்கு மிக்க நெருக்கத்தில் இருக்கும் ஒரு நியூட்ரான் விண்மீனைக் கண்டு பிடித்தார்கள் ! அந்தக் கதிர்ப்பிண்டம் […]
|
| You are subscribed to email updates from வல்லமை. To stop receiving these emails, you may unsubscribe now. |
Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
Posted: 04 Jul 2016 12:55 AM PDT ”அம்பாள் சவுந்தர்ய ஆழி, சகோதரன்- நம்பாள் கிருஷ்ண நவநீதன் -கம்பால்(புல்லாங்குழல்)- இசைவழி ஊட்டுகிறான் ஈரிருகால் மாட்டுக்(கு)- அசைபோடும் நாவுக்(கு) அமுது’’….கிரேசி மோகன்….
|
Posted: 03 Jul 2016 10:04 PM PDT ”பிம்மாலை நேரத்தில் புள்ளில்(கருடனில்) வருகின்ற அம்மாலை வேண்ட அடைக்கலம்: -’கம்’மாளே(சும்மா’கம்னு’ இருக்கும் ஆளே!) காலைக் கடனாக கேசவ் வரைந்தனுப்ப மாலைக்(திருமாலைக்) கடனாக மாற்று’’…. ”முதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி முதலைவா வென்றைக்க மூன்றில் -முதலாய் கருடன் அமர்ந்து கஜேந்திரனைக் காத்த புருடனைப் போற்றல் பிழைப்பு”….கிரேசி மோகன்….
|
|
Posted: 03 Jul 2016 07:17 PM PDT விவேக் பாரதி உலகத்தார் பல்லோரும் இளைஞர் வாழ்வை உருப்படாத வாழ்வென்றே எண்ணு கின்றார் கலகந்தான் இவராலே நேரு மென்பார் கண்டபடி வாழ்ந்திடுவோ ரிளைஞ ரென்பார் விலக்கிடுவார் குடியிருப்பு பகுதி தன்னில் வீடுதர மறுத்திடுவார் இளைஞர் சேர்ந்தால் தலைகால்தான் புரியாமல் ஆட்டம் போட்டுத் தன்குடும்பப் பெயரையுமே கெடுப்ப ரென்பார் !! உண்மையிலே இளைஞரென்றால் யார்தான் சொல்வீர் உலகத்தை இயக்கவல்ல சக்தி காண்க நுண்ணறிவைக் கொண்டவர்கள் சாதி பேதம் நுகராத பாரதியின் கூட்டங் காண்க மண்முழுதும் மலரினங்கள் பூக்க […]
|
|
Posted: 03 Jul 2016 05:05 PM PDT மீ.விசுவநாதன் ரயிலுவண்டி வருகிறது – அது ராவில் ஊருள் நுழைகிறது குயிலுகுரல் கொடுக்கிறது – படு குஷியாய்ப் பக்கம் வருகிறது ! வெளிச்சமுடன் அருகினிலே – ஒரு விஷயம் சொல்லத் துடிக்கிறது ! முளிச்சபுள்ள கதவருகில் – என் முகத்தப் பாத்துச் சிரிக்கிறது ! சிறுவசில தெருவுனிலே – அவள் சிலுப்பி நடந்த நினைவிருக்கு வறுகடலை எடுத்துவந்து – என் வாயில் தந்த உணர்விருக்கு ! அவளையிங்கு இறக்கிவிட்டு – ரயிலு அடுத்த ஊரு நகர்கிறது […]
|
|
மலர்ந்துவிடச் செய்துநிற்போம் ! Posted: 03 Jul 2016 05:03 PM PDT எம் . ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா கடவுளில் காதல் கொள்ளு கல்வியில் காதல் கொள்ளு கடமையில் காதல் கொள்ளு காதலில் காதல் கொள்ளு இடர்தரும் விதத்தில் காதல் ஏற்படும் பொழுது ஆங்கே குறையுனை வந்தே சேரும் குழப்பத்தில் இருப்பாய் நாளும் ! ஒருதலைக் காதல் செய்தால் உளமெலாம் வருத்தம் சேரும் நிலவதைப் பார்க்கும் போதும் நெருப்பென நினைக்கத் தோன்றும் அளவிலா துன்பம் அங்கே அகத்தினை உடைத்தே நிற்கும் ஒருதலைக் காதல் என்றும் உயிருக்கே […]
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை Posted: 03 Jul 2016 05:02 PM PDT பாயிரவியல் இசைக்கவி ரமணன் (தொடர் சொற்பொழிவுகள்) வாழ்த்து கவலைக் கடலைக் கடியும் கனலாய் கவிதை சொன்னவன் பாரதி காதும் காதும் வைத்தாற் போலக் காவியம் செய்தவன் கம்பன் திவலைக் குள்ளே கடலைக் காட்டிய தெய்வப் புலவர் வள்ளுவர் திரிகோணத்தின் நடுமுற்றத்தே தேனகலாய்த் தமிழ் வளரும்! ஒருவா னத்திற் கொருகதிர் போதும் உலகில் உயிர்கள் வாழும் ஒருவாழ் வுக்கோ ஒரு குறள் போதும் உயிரே ஒளிமய மாகும் திருவள்ளுவர் எனும் […]
|
|
Posted: 03 Jul 2016 05:02 PM PDT ரா.பார்த்தசாரதி ஆயிரம் எண்ணங்கள் உதயம் நம் மனதினிலே எண்ணங்களும், ஆசைகளும், தோன்றும் நம் நெஞ்சத்தினிலே, அலை பாயும், எண்ணங்களை வடிகாலாய் வடித்து பழைய திண்ணை பேச்சையும் சற்றே மறந்தோமே ! உழைத்து களைத்த வேளையில் உறவுகள் சூழ உணர்வுகளை பகிர்ந்து மனம் தெளிந்தபோது தொலை காட்சிக்கு முன், கணிணிக்கு பின் நேரத்தை பிறர்க்கென நல்ல நேரத்தை வீணடித்தோமே! நல்ல நேரத்தை வீணடித்து, குறிக்கோள் இல்லா நிலைமை, நேரம் நம்மை விழுங்கச் செய்வதே இக்கால […]
|
|
படக்கவிதைப் போட்டி 70 – இன் முடிவுகள் Posted: 03 Jul 2016 05:00 PM PDT காயத்ரி பூபதி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் கோகுல்நாத். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள். இந்த வார படக் கவிதைப் போட்டிக்கான ஒளிபடத்தில் கிராம தேவதையும், அதை வணங்கும் பெண்மணியும் இடம் பெற்றுள்ளனர். இவ் வொளிப்படத்திற்கு கவிஞர்கள் வரைந்த கவிதைகளைப் பார்ப்போம். இனி, கிராம தேவதைகள் கிராமத்தின் குறியீடாகும். கிராமம் என்ற உடனே நம் நினைவுக்கு வருபவை […]
|
|
Posted: 03 Jul 2016 05:00 PM PDT விவேக் பாரதி கவிஞர் கிரேஸி மோகன் அவர்கள் எழுதிய வெண்பாக்கள் படித்து அவரது நடையில் நங்கனல்லூர் ஆஞ்சநேயர் மேல் எழுதிய வெண்பாக்கள். கேட்டவுடனே படம் தந்து உதவிய கவிஞர் கிரேஸி மோகன் அவர்களுக்கு என் நன்றி மருதீ உன்றன் மணிவாசல் நாடிவந்தோம் பாருநீ தேடிவந்த பக்தருக்குச் – சீருநீ ! மேருநீ ! பாருநீ ! தேருநீ ! ஊருணீ நீருநீ ! தீருநீ ஊறு ! நங்கநல் லூருறை நம்பிரான் தோழ!க்கு ரங்குநீ ! காவேரி […]
|
|
Posted: 03 Jul 2016 04:56 PM PDT நிர்மலா ராகவன் எனக்கென்ன, பயமா! ‘கோலாலம்பூரா! தலைநகரம் அல்லவா? சின்ன விஷயத்திற்கெல்லாம் அங்கே எல்லாரும் சண்டை பிடிப்பார்களே! நீ எப்படித்தான் தாக்குப்பிடிக்கப் போகிறாயோ, பாவம்!’ சிற்றூரிலிருந்து நாட்டின் தலைநகரத்திற்குப் போனால் கலாசார அதிர்ச்சி ஏற்படும் என்று பலரும் பயமுறுத்தி இருந்தார்கள் மே லின் என்ற அந்த இளம் ஆசிரியையை. செல்வச்செழிப்போ, பெற்றோரின் பிரத்தியேக கவனிப்போ இல்லாத பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தவளுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. இந்த இருபத்து ஐந்து வருடங்களாக தான் யாரை நம்பி வாழ்ந்தோம், இனியும் அப்படித்தான் […]
|
|
Posted: 03 Jul 2016 04:55 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? சாந்தி வீஜே எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். […]
|
|
Posted: 03 Jul 2016 04:53 PM PDT க.பாலசுப்பிரமணியன் படித்தலும் கற்றலும் “அவனைப் பார்த்தாயா, எவ்வளவு வேகமாக பொருள் அறிந்து படிக்கிறான்.. நீயும் படிக்கிறாயே…” என்று குழந்தைகளைப் பார்த்து அங்கலாய்க்கும் பெற்றோர்களின் குரல் காதில் விழுந்துகொண்டுதான் இருக்கிறது.. மற்ற வீட்டுக் குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மட்டுமின்றி கூடப்பிறந்தவர்களோடும் ஒப்பிட்டிப்பார்க்கும் மனம் குடும்பங்களில் உண்டு. இது நமது மனத்தின் அன்பின் ஆதங்கத்தில் பிறந்த சொற்களாக இருந்தாலும் அறியாமையின் அறிகுறியாகவே வெளிப்படுகின்றது.. முன்பே சொன்னபடி ஒரு காட்சியைப் பார்க்கின்ற கண்கள் அந்த ஒளி அலைகளை பிரித்து மூளையின் வெவ்வேறு […]
|
|
Posted: 03 Jul 2016 04:51 PM PDT மலர்சபா மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை மன்னன் உண்மையை உரைத்து உயிர் துறத்தல் தெறித்த மாணிக்கங்கள் கண்டு மருண்டான் மன்னன். “என் குடை தாழ்ந்ததே! என் செங்கொல் வீழ்ந்ததே! பொன் செய்யும் கொல்லன் பேச்சை ஆராய்ந்து பார்க்காமல் அதை உண்மை என எடுத்துக்கொண்ட நான் தானா அரசன்? இல்லை நானே கள்வன்! மக்களைப் பாதுகாத்து நிற்க வேண்டிய எம் பாண்டி நாட்டு ஆட்சி என்னை முதலாகக் கொண்டு தவறு இழைத்து விட்டது. என் […]
|
|
Posted: 03 Jul 2016 04:49 PM PDT க. பாலசுப்பிரமணியன் அவள் ஒரு காவியமா? குறுநாவலா? சிறுகதையா? … யாருக்குத் தெரியும் ? காலையிலே கதிரவனின் முதல் கதிர் வெளிவரும் போது மலர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிபோல அவள் வார்டுக்குள் “குட் மார்னிங் ” என்று சொல்லிக்கொண்டு வரும்பொழுது அந்த வார்டு பூத்து மலரும்.. “;ஹாய்… சௌ…” காயத்ரி அவளுக்கு பதில் சொல்லி இருவரும் தங்கள் வலது கைகளால் ஒருவரை ஒருவர் தட்டிக்கொள்ள… படுக்கையில் இருந்துகொண்டும் பாதி எழுந்துகொண்டும் இருக்கின்ற நோயாளிகள் முகத்தில் ஒரு சிறிய புன்னகை… […]
|
|
Posted: 03 Jul 2016 04:27 PM PDT அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். -திருக்குறள் -167(அழுக்காறாமை) புதுக் கவிதையில்… பொறாமை பிறர்மீது கொண்டவனிடம் சேர்ந்திருக்கமாட்டாள் செல்வமெனும் சீதேவியும்.. ஓடிடுவாள் அவள், வறுமையெனும் மூதேவியை விட்டுவிட்டு அவனிடம்…! குறும்பாவில்… செல்வமாம் சீதேவி போய்விடுவாள், பொறாமை கொண்டவனிடம் வறுமையாம் மூதேவியை விட்டுவிட்டு…! மரபுக் கவிதையில்... செல்வ மென்னும் சீதேவி சேர்ந்தே யென்று மிருப்பதில்லை, பொல்லாப் பொறாமை கொண்டவனைப் பிரிந்தே ஓடிச் […]
|
|
பறவையிடம் பாவ மன்னிப்புக் கேட்கும் வானமும் சுழன்றடிக்கின்ற காற்றும் Posted: 03 Jul 2016 04:22 PM PDT ராஜகவி ராகில் வெளியே வெளிச்சமாய் இருளின் கருவூலம் உள்ளே உயிர்ப்பாய் உள்ளதாய் ஒளியற்ற ஒரு வயலில் இருட்டு விதைத்து முள் கல் நஞ்சு கலந்த ஒரு பயிர் வளர்ந்ததாய் உள்ளே இருந்த சாட்சித் தேவன் உரத்துச் சொல்லிக் கொண்டிருந்த வேளை செவிடாகத்தான் நகர்ந்தது காலம் தெரிந்தது லெளகீகக் காடு பூந்தோட்டமாய் ஆத்மீக வனம் கூரிய முட்காடாய் ஆசை பொய் கோபம் சந்தேகம் துரோகம் காமம் எல்லாம் சேர்ந்து படைத்த ஒரு கார்மேகம் மழை பெய்தபோது லெளகீகக் […]
|
Posted: 05 Jul 2016 07:11 AM PDT கவிதை வருவது கண்ணன் அருளா ? செவியுண்ட செய்யுள் செயலா ?-புவியத்தா காவிய வாழ்க்கையா? கைவல்ய வேட்கையா? சாவியுன் கையில் செப்பு…. பார்த்தோர் பசுமையாய் பாராதோர் பூதமாய் சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய் -ஆர்த்தொலிக்கும்(சத்தமிடும்) சங்கில் மவுனமாய் சக்கரத்தில் சீற்றமாய் எங்கும் திகழ்வோனை ஏத்து…. மெய்யே அகலாக மேவுமுயிர் நெய்யாக உய்யுமோர் ஆன்மன் ஒளியாக -அய்யநின் ஆரா தனையல்லால் வேறே துமெண்ணாத சீரான வாழ்வில் செலுத்து….கிரேசி மோகன்….
|
Posted: 04 Jul 2016 10:00 PM PDT செ. இரா.செல்வக்குமார் இப்பதிவு சூன் 20 ஆம் கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது [1]. அக்கிழமையின் வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் இமய மலையின் எவரெசுட்டு முகட்டின் உச்சியை எட்டிய தமிழகத்தின் முதல் தமிழர் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள் இமயமலையின் எவரெசுட்டு முகட்டின் உச்சியை எட்டிய முதல் தமிழ்நாட்டுத் தமிழர் அவில்தார் கே. சிவக்குமார் அவர்கள். படம் [2] இந்தப் புவி உலக உருண்டையிலேயே ஆகப்பெரிய உயரமான மலை இமயமலையில் உள்ள எவெரெச்சுட்டு முகடே. இதன் உயரம் 8,848 மீட்டர். […]
|
|
இன்னம்பூரான் பக்கம் 7 நூறு வருடங்களுக்கு முன்னால் 1 Posted: 06 Jul 2016 06:17 AM PDT ஜூலை 6, 1916 இன்னம்பூரான் ஜூலை 6, 2016 சமுதாயத்தில் நல்லதும் கெட்டதும் நடந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், நல்லது நடக்கவும், தீயது விலக்கவும், விழிப்புணர்ச்சி அளிக்கும் அறிவுரை மிகவும் உதவும். கொசு மருந்திலிருந்து விதவாவிவாகம் வரை, விழிப்புணர்ச்சியும், அதைப் பரப்பும் உத்திகளும், விளம்பரங்களும் வரவேற்கப்படுகின்றன. நூறு வருடங்களுக்கு முன்னால், இதே தினத்தில், ஒரு நிகழ்வு. 1914ஆம் வருடம் தொடங்கிய முதல் உலக யுத்தத்தில் அமெரிக்கா பங்கு கொள்ள நிச்சயித்த காலகட்டத்தில், ராணுவத்துக்கு ஆள் […]
|
Posted: 06 Jul 2016 06:09 AM PDT ”நின்றாலும், நித்திரையாய் நீளக் கிடந்தாலும் நன்றைவர்க் காக நடந்தாலும்*, -என்றுமிவன் கன்றுக்காய் வந்தவன்தான்: என்றாலும் எம்பிரான் இன்றிருப்பு கேசவ் இடம்’’….கிரேசி மோகன்…. *நன்றைவர்க் காக நடந்தாலும்-நல்லவர்கள் ஐந்து பேர்களுக்காக தூது நடந்தாலும்….
|
|
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கருட காயத்திரி ஹோமம் Posted: 05 Jul 2016 05:36 PM PDT ஸ்ரீ முரளீதர சுவாமிகள் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைஅனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு அஷ்ட நாக கருடனுக்கு சன்னதி அமைத்து வருகை புரியும் பக்தர்களின் சர்ப தோஷம் நீங்கவும், விபத்துக்களை தடுக்கவும் கருட யாகங்கள் நடத்தி வருகிறார். வருகிற ஜீலை மாதம் 08.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கும் 09.07.2016 சனிக் கிழமை காலை 10.30 மணிக்குமேல் வளர்பிறை பஞ்சமியன்று ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஸ்ரீ […]
|
|
இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 4. Posted: 05 Jul 2016 05:02 PM PDT அவ்வை மகள் மனோமயமும் அம்மையப்ப உறவும் நான் யார்? என்பது மிகப்பிரசித்தமான கேள்வி. ஊடகங்கள் பரவின பிறகு இந்த கேள்வி வெகுமிகவே பிரசித்தமாகி விட்டது. எவரைப் பார்த்தாலும், இந்த நான் யார் கேள்வியை தம் பேச்சு வழக்கில் வெகு அதிகமாகவே பயன் படுத்துகிறார்கள். விவாதிக்கிறார்கள் – விளக்கம் தருகிறார்கள். இத்தனை ஊக்கத்திற்கும் ஏதேனும் விளைவு இருக்கிறதா, உண்மையில் நிறைய பேர் “நான் யார்?” என்று தன்னைத்தானே வினவுகிறார்களா என்று நான் சுற்றிலும் பார்த்தால் நாம் காணும் காட்சி […]
|
|
விதைத்ததை நாம் காத்துநிற்போம் ! Posted: 05 Jul 2016 05:00 PM PDT எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா ஆங்கிலத்தில் கற்றாலும் ஆன்மீகம் அகம்நிறைத்தார் அறிவுடனே ஆன்மீகம் அவருரைத்து நின்றாரே தன்குருவை சோதித்து தன்னுணர்வை அவர்வளர்த்தார் தன்குருவின் ஆசியினால் தரணியெங்கும் ஒளியானார் ! ஈரமதைக் கொண்டிருந்தும் வீரமுடன் செயற்பட்டார் ஊரெல்லாம் அவர்வார்த்தை உத்வேகம் ஊட்டியதே பாரினிலே புரட்சியுடன் பலகருத்தை அவர்பகர்ந்தார் பார்வையெலாம் பலநோக்கில் பாய்ந்துமே சென்றதுவே ! சமயத்தின் தத்துவத்தை தாமுணர்ந்தே போதித்தார் சரியான பாதைசெல்ல தன்கருத்தை […]
|
|
Posted: 08 Jul 2016 10:05 AM PDT எம் . ஜெயராமசர்மா.. மெல்பேண் … அவுஸ்திரேலியா நாடுபோற்ற வாழு நன்மைநினைத்து வாழு ஊடலொழித்து வாழு உண்மையோடு வாழு வாழவேண்டும் எண்ணம் மனதில்கொண்டு வாழு மனம்முழுக்கத் தூய்மை நிறைத்துக்கொண்டு வாழு ! அன்னைதந்தை உந்தன் அகத்தில்கொண்டு வாழு அறிவைநல்கும் ஆசான் ஆசீபெற்று வாழு உன்னைவிரும்பும் வண்ணம் உயர்ந்துநிற்கும் பெரியோர் உன்னைவாழ்த்தி நிற்க உளத்தாலுயர்ந்து வாழு ! கற்றவற்றை நாளும் கருத்தில்கொண்டு வாழு கற்கும்நூல்கள் தன்னை கவனங்கொண்டு பாரு கஞ்சிகுடிக்கும் வாழ்வு வந்தமையும் போதும் கற்கும்நிலைய […]
|
Posted: 08 Jul 2016 01:14 AM PDT ஏக ரேகா கண்ணன்…. —————————— “ஏகத்திற்(கு) ஏதுகை ரேகை, நாமெல்லாம் காகநிறக் கண்ணனின் கைபொம்மை, -போகவர, பூமத்ய ரேகையில் போட்டெடுத்து, ஏகாக்ர சூமந்த்ர காளி, சுகம்”….கிரேசி மோகன்….
|
|
Posted: 07 Jul 2016 05:01 PM PDT இரா.சந்தோஷ் குமார் கட்டை விரல் ரணமானால் சுண்டுவிரல் செய்யும் ஆறுதல் தழுவலைப் போல் ஒரு நண்பன் வேண்டும். நேச வீதியில் நேய விழிக்கோர்த்து நடையளந்து உளமறிந்து கரம் கோர்க்க கர்ணன் போல் ஒரு நண்பன் வேண்டும். பசித்திருக்கும் வேளையில் சோறூட்டாவிட்டாலும் கண்ணில் மாசுப் பட்டதைப் போல் விழிநீர் வழியும் ஒரு தூய நண்பன் வேண்டும். கவிஞனென நான் தப்பாட்டம் ஆடாவிட்டாலும் எனை கொண்டாடும் ஒரு ரசிக நண்பன் வேண்டும் . என் எழுத்துப் பிழை கருத்துப் […]
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (2) Posted: 07 Jul 2016 05:00 PM PDT இசைக்கவி ரமணன் திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி 1 கடவுள் வாழ்த்து கடவுள் வாழ்த்து – முன்னுரை கடவுள் என்னும் சொல்லுக்குத்தான் எத்தனை எத்தனை விளக்கங்கள்! ‘எல்லா விளக்கங்கள், விவரிப்புகளையும் கடந்து, உள்ளே இருப்பவன்,’ என்றொரு பொருள். ‘கடந்தால் உள்’ என்பார்கள். எதைக் கடப்பது? உடம்பு, மனம், புத்தி, சித்தம், அகங்காரம், என்பவனவற்றைக் கடந்தால் உள்ளே திகழ்வதே கடவுள் என்பார்கள். `கடவு` என்னும் சொல்லே சிந்திக்கத்தக்கது. கடவுச்சொல் என்றால் password என்று நமக்குத் தெரியும். […]
|
|
Posted: 07 Jul 2016 05:00 PM PDT வித்தக இளங்கவி விவேக்பாரதி நீல விசும்பிடையே – மிக …நீளக் கிடக்கும் வெளியிடையே கால மறிந்திடவே – அதோ …கடுகி வந்தது வான்பிறையே ! சீல முடையதுவாய்ப் – பல …சீவனைக் காத்திட வல்லதுவாய்ச் சாலங்கள் காட்டிடவே – பிறைச் …சந்திர னாயிறை தோன்றினனே ! நோன்பிருந்தார் உலகில் – அவர் …நோவை அகற்றியே நூதனமாய் வான்வழி வந்தவனே – அருள் …வாரிச் சொரிந்திருள் மாய்த்திடுவாய் ! ஊன மகற்றிடுவாய் – வழி …உண்மையி லேயெமைக் கொண்டுசெல்வாய் […]
|
|
Posted: 07 Jul 2016 04:58 PM PDT திவாகர் என்னன்புக் கண்மணியே பதில்சொல்வாயே இன்னமும்ஏன் தயக்கமும் தாமதமும் உனக்கொரு மணாளனென ஒருவனை உனக்களித்த உரிமையில் தேர்ந்தெடுப்பாய் இந்திரனென ஒருவன் வந்தானேகண்டாயோ சந்திரனென இன்னொருவனும் வந்தான் இருவருமே அழகில்அறிவில் வல்லவர்தாம் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர்தாம் ஆனாலும் உனைப்பெற்ற தாயாம்நான் எனக்குள் தோன்றியதைச் சொல்வேன்கேள் கொடைவழங்குவதில் சிறந்தவனாம் இந்திரன் மடைதிறந்து ஓடிவரும்நீர்போல செல்வத்தை அனைவருக்கும் மகிழ்வோடு வழங்குபனாம் பனைமரம்போல பலரும் பயன்பெறுவாராம் ஊருலகத்தில் போற்றுகிறார் அனைவரும் பாரிமன்னன் போனபிறகு பாரிலுள்ளோர் வாடாதிருக்க வறுமைதீர வந்தவனாம் கொடுத்துக்கொடுத்து […]
|
|
Posted: 07 Jul 2016 04:50 PM PDT மீ.விசுவநாதன் என்னு ளிருக்கும் இசைவெளியில் இமைக ளடைத்து ரசித்திருபேன் இன்னு மதிலே கரைந்தேபோய் இதயம் மறந்து தனித்திருபேன் ! தன்னந் தனியே இருக்கையிலே தன்னை அறிய முயலுகிறேன் அன்னப் பறவை அறிவோடு அகத்தைப் பிரிக்கப் பயிலுகிறேன் ! (07.07.2016)
|
|
Posted: 07 Jul 2016 04:41 PM PDT அவ்வைமகள் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒவ்வாத பணியில் பெண்கள் படும் அவதி என்கிற வகையில், பென்னி ஹாரிங்டனின் கதை வெளி உலகிற்குத் தெரிந்திருக்கிற ஒன்று. தெரியாத சரிதங்கள் எத்தனையோ! இன்றைய கால கட்டத்தில், பொதுவாக, அமெரிக்காவில், காவல் துறையில் அதிமேல் பதவிகளுக்குப் பெண்கள் முயற்சி செய்யும் எண்ணமும் கூட இல்லாதவர்களாக இருப்பதாக, நான் சந்தித்த பல பெண் காவல் அதிகாரிகள் கூறினார்கள். இந்நிலையில், ஒரு ஆண் காவல் தலைமை அதிகாரியிடம் பேசினேன். அவர் சொன்ன விவரங்களைப் பற்றி பேசும் […]
|
Posted: 07 Jul 2016 04:29 PM PDT மீ. விசுவநாதன் அத்யாயம்: 49 (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை) “பாரதி இரா. சுராஜ்” “பாரதி கலைக்கழகம்” என்ற அமைப்பு எண். 50, மசூதித் தெரு, சைதாப்பேட்டை என்ற இடத்தில் இயங்கி வந்தது. கவிமாமணி ஐயாரப்பன் அவர்களின் இல்லம்தான் அது. அமைப்பின் நிறுவனத் தலைவர் பாரதி இரா. சுராஜ் அவர்கள். அவனை அந்தக் கவிஞர் குழாமில் சேர்த்து அணைத்து நெறிப் படுத்திய பெரியவர் திரு. பாரதி இரா. சுராஜ் அவர்கள்தான். நல்ல அறிஞர். மிகச் சிறந்த ரசிகர். […]
|
|
இன்னம்பூரான் பக்கம் 7 நூறு வருடங்களுக்கு முன்னால் 2 Posted: 07 Jul 2016 04:20 PM PDT இன்னம்பூரான் ஜூலை 7, 2016 நூறு வருடங்களுக்கு முன்னால், இதே தினம் பிறந்தவர், பேராசிரியர் Chia-Chiao Lin (C.C.Lin) உச்சாடனம் இப்படியே இருந்தால், பிரச்னையில்லை. அது இங்கு ஒரு பொருட்டும் அல்ல. அவருடைய 96 வருட வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். சைனா நாட்டின் இன்னல், பின்னல்களும், தீர்வுகளும் அவருடைய காலகட்டத்தில் எளியதாக அமைய வில்லை. மிகவும் பின் தங்கிய அந்த நாட்டிலிருந்து பெருமளவு கப்பம் கறக்கப்பட்டிருந்து, மேல் நாடுகளால். அமெரிக்கா கணிசமான அளவுக்கு, அதை திருப்பி […]
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 203 ) Posted: 07 Jul 2016 03:39 PM PDT சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். அடுத்தொரு வாரம் , இங்கிலாந்து அரசியல் வானிலே அடுத்தொரு மின்னல். 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் திகதி ஈராக் நாட்டின் மீது அமெரிக்காவின் தலைமையில் இங்கிலாந்து நாடும் இணைந்து தொடுத்ததொரு போர். காரணம் ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் கொடுக்கும் பயங்கரமான அமைதியின்மை. அவர் வசம் உலகையே ஆட்டி வைக்கக்கூடிய பயங்கரமான இராசயன ஆயுதங்கள் இருப்பதற்கு ஆதரமாக அமெரிக்க, இங்கிலாந்து உளவுப்ப்படைகளின் அறிக்கை. இவைகள் தான் அன்று […]
|
|
Posted: 10 Jul 2016 11:10 AM PDT பவள சங்கரி வழக்கமான காதல், டூயட், சண்டை, இரட்டை அர்த்த வசனங்கள், இத்யாதி எதிர்பார்த்து ‘அப்பா’ திரைப்படம் செல்பவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளலாம். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சீராக உள்ளத்தை இறுக்கிப்பிடித்தபடி நகர்வதே இப்படத்தின் மாபெரும் வெற்றி எனலாம். கதை என்று பார்த்தால் நான்கு வரிகளில் சொல்லக்கூடிய சாதாரண கதைதான் என்றாலும் இயக்குநர் சமுத்திரக்கனி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டிவிட்டுப் போயிருக்கிறார். வித்தியாசமான காட்சியமைப்பு, நவீன யுக்தி, தொழில்நுட்பம் என்ற எந்தவிதமான ஆடம்பரமும் […]
|
|
169 இராகங்களில் திருக்குறள் முழுவதும் Posted: 10 Jul 2016 08:37 AM PDT மறவன்புலவு க. சச்சிதானந்தன் சந்தம் இல்லாமல் பாடல் இல்லை. பாடுவதால் பாடல்கள், குறட்பாக்கள். திருக்குறள் பாடல்களுக்கு இசை அமைத்தல் எளிதல்ல என்பார் எதுகைச் சீர் தரும் சந்தத்துள் மூழ்குக, அளவெடுக்கும் நெடிலின் இசைக்குள் நனைக, தமிழ் வேர்ப் பொருளைத் தேர்க, தேனாகக் குரலில் ஏற்றுக, அலைகளாய்க் காற்றில் தவழவிடுக, திருக்குறள் இனிமையாய் இசையாகும். இனிமையாக இசைப்பதற்காகவே ஏழு சீர்களில் எதுகை மோனையுடன் எழுதிய பண்வழிப் பாடல்கள் அவை. கருவிலே இசைக்குத் திருவானவர், மழலையாகத் தன் மிழலையில் பண்ணிசைத்தவர், […]
|
Posted: 10 Jul 2016 08:23 AM PDT ”கலிமுடிவில் ஓரடியை ஆலிலையில் உண்டாய் பலிமுடியில் வேறடியை வைத்தாய் -தெளிவடைய நூற்றிடுவேன் வெண்பாக்கள் நீர்வண்ணா வாழ்த்திடுவாய் ஈற்றடி யாக இருந்து”…. காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை ஆயர்தம் சின்னத்தை மண்ணையுண் -ஓயாத மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில் தாயொத்த தாயத்தைத் தேடு…. காலை எழுந்தவுடன் கண்ணன் பெயர்சொல்லி மூளை அடுப்பை மூட்டிடு -மாலை மலைவனம் சென்றாயர் மாடுகள் மேய்க்க அலைபவன் பேரால் அணை(SWITCH OFF)… நீதான் நானென்றும் நான்தான் நீயென்றும் சேதார மற்றென்றும் சேர்ந்திடுவோம் -ஏதோ இலக்கணம் […]
|
|
பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றிவரும் விண்ணுளவி ஜூனோ Posted: 09 Jul 2016 10:42 PM PDT [Juno Spacecraft Orbits Jupiter] (2011 – 2016) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ அமெரிக்க விடுதலை நாள் [ஜூலை 4, 2016] கொண்டாட்ட தினத்தில் விழாவின் போது, அடுத்த முக்கியப் பாராட்டு நிகழ்ச்சி ஜூனோ விண்ணுளவி பூதக்கோள் வியாழனின் சூற்றுவீதியில் துல்லியமாகப் புகுந்தது. இது நாசாவின் துணிச்சலான முயற்சி. இத்திட்டத்தில் இதுவரை எந்த விண்கப்பலும் செய்யத் துணியாதத் தீரச்செயல்களை ஜூனோ செய்துகாட்டப் போகிறது. இதுவரை அறியப் படாத பூதக்கோள் வியாழனின் […]
|
|
படக்கவிதைப் போட்டி 71 – இன் முடிவுகள் Posted: 11 Jul 2016 08:40 AM PDT காயத்ரி பூபதி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் சாந்தி வீ ஜே. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள். இந்த வார படக்கவிதைக்கான ஒளிப்படத்தில் நம் கருத்திற்கு விருந்தாக காக்கையோடு ஒன்றாக கூடி உண்ணும் பசுவும், கன்றும் இடம் பெற்றுள்ளன. இவ் வொளிப்படத்திற்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி, இங்கு இடம் பெற்றுள்ள கவிதைகள் பொதுவாக பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை வலியுறுத்துவனவாக […]
|
Posted: 11 Jul 2016 12:14 AM PDT ‘’ஆகுலக் கன்றை அதன்தாய் இடம்சேர்த்து வ்யாகுலம் தீர்த்திட வாத்ஸல்ய, -கோகுலத்தோன் மல்லாண்ட திண்தோளன் மாட்டுக்காய் ஆனானே புல்லாண்ட தோள(ழ)னாய் பார்’’….கிரேசி மோகன்….
|
|
Posted: 11 Jul 2016 12:00 AM PDT ( எம் .ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்த்திரேலியா) செம்பவள வாய்திறந்து சிரித்துநிற்கும் உன்முகத்தை தினமுமே பார்த்திருந்தால் சிந்தனையே தெளிந்துவிடும் வந்தநோவும் ஓடிவிடும் வலியனைத்தும் மறைந்துவிடும் […]
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (3) Posted: 10 Jul 2016 05:00 PM PDT இசைக்கவி ரமணன் திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி 2 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. (01:01) எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டவை. உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் கடவுளை முதலாகக் கொண்டவை. சொற்பொருள் – இலக்கணம் அ = அந்த, (அப்பசியை, அவ்வூன்) உடைய அகரம் = சாரியை பெற்ற எழுத்து சார் + இயை = சாரியை, அதாவது சார்ந்து வருவது சாரியை […]
|
|
Posted: 10 Jul 2016 04:59 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? பிரபு வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (16.07.2016) வரை உங்கள் கவிதைகளை […]
|
|
கலியன் குரல் காட்டும் வைணவ முப்பொருள்களுள் ஒன்றான இதம் Posted: 10 Jul 2016 04:59 PM PDT முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை , அறிவியல் கல்லூரி, திருவாடானை. வைணவத் தத்துவங்களில் ஆழங்கால்பட்டு, அதனில் கரைந்து, அதனில் தோய்ந்து அத்தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்த தமிழறிஞர்களுள் குறிக்கத்தக்கவர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் ஆவார். காரைக்குடிக்குக் கம்பன் அடிப்பொடி ச. கணேசன் அவர்களால் வரவழைக்கப் பெற்றவர். காரைக்குடி கல்வியியல் கல்லூரியில் ஏற்பட்ட தமிழ்ப்பேராசிரியர் பணியிடத்திற்கு உரியவராக பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அமைந்தார். சிலகாலம் இங்குப் பணிபுரிந்த பேராசிரியர் இதன்பின்னர் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்திற்குத் […]
|
Posted: 10 Jul 2016 04:58 PM PDT மீ.விசுவநாதன் ஊரெல்லாம் கண்விழிக்க உயரத்தில் உள்ள ஒளிகக்கும் ஆதவனோ வானில் மெல்லச் சீரோடு செங்கதிரைத் தெளித்துக் கொண்டே சிந்துகிறான் மஞ்சளுடன் நீலம் சேர்த்து ! தேரோடும் வீதியிலே சாண நீரைத் தெளித்தபின்னே பெருக்கிவிட்டுப் புள்ளிக் கோலம் போடுகிற பெண்பார்த்துச் சிவந்த கண்ணாய்ப் பொலிகிறது கிழக்கினிலே ஒளியாம் கோளம் ! விடிந்ததுபார் என்றங்கே பறக்கும் புட்கள் ! வேதியர்கள் நீராட நதிக்கே செல்வர் ! மடிந்ததுபார் இரவென்றே வெள்ளைக் கொக்காய் மடமடெனக் கதிரவனும் மேலே ஏறிக் கொடியுயர்த்திச் […]
|
|
Posted: 10 Jul 2016 04:55 PM PDT க. பாலசுப்பிரமணியன் எப்படி எப்போது படிக்கவேண்டும்? பல வீடுகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் பொழுது: ” படிக்கும் போது இவனுக்கு கவனமே இருப்பதில்லை”; “ஏண்டா. கன்னத்திலே கைவைத்துக்கொண்டு தலையை குனிந்துகொண்டு படிக்கிறே?”; “நீ படிக்கிற இடத்திலே புத்தகத்தில் வெளிச்சமே விழலே.. என்னதான் படிக்கிறாயோ?” “இப்படி உட்கார்ந்து படித்தால் முதுகிலே கூனல் விழுந்து விடும்” “படிக்கும்பொழுது எதுக்கு ஐ போனைக் காதிலே வைத்துக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டு படிக்கிறாய்?” “சோபாவிலே படுத்துக்கொண்டு படிச்சா எப்படி மண்டையிலே ஏறும்?” […]
|
|
Posted: 10 Jul 2016 04:53 PM PDT நிர்மலா ராகவன் வெண்ணையும், சுண்ணாம்பும் மூத்த மகன் அரசாங்கப் பள்ளிக்கு அனுப்பப்பட, இளையவன் தனியார் பள்ளிக்குப் போனான். ஏனெனில், மூத்தவன் கறுப்பு. தம் செல்வச் செழிப்பு, உயர் கல்வி இதிலெல்லாம் அடைந்த பெருமையைவிட, பெற்றோர் இருவருக்கும் தாம் கறுப்பாக இருக்கிறோமே என்பதுதான் பெரிய குறையாக இருந்தது. அதைப் போக்கவேபோல் இரண்டவதாகப் பிறந்த `வெள்ளையனை’ (அவனுடைய செல்லப்பெயர்) தெய்வமாகவே மதித்து நடத்தினார்கள். வெள்ளையன் கேட்பதற்கு முன்னாலேயே அவனுக்கு எல்லாம் கிடைத்துவிடும். பெரியவன் `கருப்பையா’வுக்கோ தந்தையிடமிருந்து அடிதான் கிடைத்தது. `நான் […]
|
|
Posted: 10 Jul 2016 04:44 PM PDT செண்பக ஜெகதீசன் வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து. -திருக்குறள் -221(ஈகை) புதுக் கவிதையில்… ஏதுமில்லா வறியவர்க்கவர் இதயங் குளிர இயன்றவரைக் கொடுப்பதுதான் ஈகை.. இது தவிர ஏனையோர்க்குக் கொடுப்பதெல்லாம் ஈகையாகாது, அவரிடம் ஏதோ ஒன்றை ஏதிர்பார்த்துச் செய்வதேயாகும்…! குறும்பாவில்… இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை, ஏனையோர்க்குக் கொடுப்பதெல்லாம் எதையோ எதிர்பார்த்துக் கொடுப்பதே…! மரபுக் கவிதையில்… இல்லை யென்று வருவோர்க்கே […]
|
|
“மீண்டும் போ-டிப்ஸ் ” (ஆலிவர் கோல்ட்ஸ்மித் மன்னிப்பாராக !!) Posted: 10 Jul 2016 04:22 PM PDT க. பாலசுப்பிரமணியன் “ஆறு மணி ஆச்சு, சீக்கிரம் எழுந்திரும்மா. வெள்ளிக்கிழமையும் அதுவுமா, காலையிலே எந்திருதோம்மா, குளிச்சோம்மான்னு இல்லாம, இப்படியா தூங்கிக்கொண்டு….” பதஞ்சலி தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டுவதைக்கண்ட அவர் மனைவி பார்வதி..”கொஞ்சம் கேளுங்கோ.. அவ ராத்திரி ரொம்ப நேரம் படிச்சுக்கொண்டிருந்தா.. தூங்கினா தூங்கிட்டுப்போறா கொஞ்ச நேரம் ” தன் மகள் ஜெயந்திக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு வர… ஜெயந்தி தன்னுடைய தூக்கத்திலே ஒரு புன்முறுவலுடன் ” அப்பா.. வாசல்ல யாரோ கதவைத் தட்டுகிறார்கள் பாருங்கோ” என்று சொல்ல, கதவைத் திறந்து […]
|
Posted: 10 Jul 2016 04:09 PM PDT நூறு வருடங்களுக்கு முன்னால் 3 இன்னம்பூரான் ஜூலை 8, 2016 மனிதவியலும் சமூகவியலும் தவிர்த்த மருத்துவம் உதவாக்கரை. தக்கதொரு மருத்துவ நல்வரவுகள் இல்லாத சமூகம் பாழ். ஏழை பாழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை/உதவி/ஆலோசனை எல்லாம் ஒரே தரத்தில் இருப்பது தான் நியாயம். காசுக்கேற்ப வசதி கிடைப்பது நடைமுறைதான். காசு கொடுத்தால் தான் வைத்தியம் என்பது அடாவடி. அண்மையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில், லஞ்சம் கொடுக்க முடியாததால், ஒரு சாவு. தற்காலம் இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் பெருகி […]
|
|
Posted: 10 Jul 2016 03:57 PM PDT தமிழ்த்தேனீ கொள்ளுன்னா வாயைத் தொறக்கறதும் கடிவாளம்னா வாயை மூடிக்கறதும் குதிரைக்கு மட்டுமல்ல மனுஷனுக்கும் அதுதான் இயல்பு. அடுத்த வீட்டுக்காரன் பாம்பைப் பிடிச்சா மத்தவங்க எல்லாருக்குமே அல்லித் தண்டு மாதிரிக் குளிர்ந்துதான் இருக்கும். சின்னக் கஷ்டமா இருந்தாலும் பெரிய கஷ்டமா இருந்தாலும் வலி என்னான்னு அவவனுக்கு வரும் போதுதான் தெரியும் புரியும். ஒரு பையன் அரசாங்க வேலை இன்னொருத்தன் ஆடிட்டர் ஆனா ரெண்டு பேருக்கும் ஒத்துப் போறதே இல்லே நியாத்தை சொல்லி ரெண்டு பேரிலே யாருக்கு சாதகமா பேசினாலும் […]
|
Posted: 13 Jul 2016 08:25 AM PDT ‘’ஸ்ரீ பகவான் உவாச:…. ——————————————- ”ஆரத் தழுவி அருச்சுன காமத்தை(பேதத்தை-அதுவும் காமத்தில் சேர்த்தி) வேரறுத்துச் சொன்னார் , விஜயரே! , -பாருச்சி, தேருச் சியில்காக்கும் தேவன் அனுமனுள்ளான், நூறைச் சிதைக்க நிமிர்’’…. ”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய் மாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுசேயே தர்கம் புரிதல் தவிர்”…. ”கொல்வோன் எனவும் கொலையுண் டோனெனவும் சொல்வோர் இருவரும் மூடராம் -உள்ளான்மா கொல்வதும் இல்லை கொலையுண் பவனுமில்லை வெல்வதுன் வேள்விவிஜ யா”….கிரேசி மோகன்
|
|
நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மணிவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது Posted: 12 Jul 2016 05:05 PM PDT பேராசிரியர். கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம் நரியைப் பரியாக்கிய சிவபெருமானின் திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காக நிகழ்த்தப்பட்டது என்பது சைவசமயிகளின் உணர்வில் கலந்த நிகழ்வு. இந்நிகழ்வு தனக்காக நிகழ்த்தப்பட்டதென்றோ, தனது வாழ்வில் நிகழ்ந்ததென்றோ திருவாசகத்தில் மாணிக்கவாசகர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்; இறைவனின் மற்ற திருவிளையாடல்களை வர்ணிப்பதுபோலத்தான் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலையும் கூறுகின்றாரே அன்றித் தன்வாழ்வில் நடந்ததாகக் குறிப்பிடவில்லை என்பது இவர்கள் வாதம். அதனால் திருவாசகத்தில் உள்ள […]
|
|
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ? Posted: 12 Jul 2016 04:30 PM PDT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.” லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55) “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . .ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு யுகத்தில் அப்படி நேரும் தோற்றங்களில், நமது பிரபஞ்சமும் ஒன்று என்பது !” எட்வேர்டு […]
|
|
இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 5 Posted: 12 Jul 2016 04:21 PM PDT அவ்வை மகள் நெஞ்சகம் நைந்து தொலைந்தழுத நோன்பு உறவுதான் உயிரிகளின் அடையாளம் என்றோம். உறவில் உதிப்பதே உயிரி. உறவுகொண்டொழுகலே உயிரியின் இயக்கம். முட்டையிலிருந்து கோழியா கோழியிலிருந்து முட்டையா என்பார்களே அதைப்போன்றது உயிரி – உறவின் தன்மை. சந்யாசிகள் கூட உறவு கொண்டு ஒழுகுபவர்களே. சன்யாசம் பூணும் முன் இருந்த உறவுகள் எத்தனையோ என்றாலும் சன்யாசம் பூண்ட பின், மதம், ஆச்சாரம் என்கிற ஷரத்துக்களுக்காய், குருவுடனும், சிஷ்யர்களுடனும் உறவு நீள்கிறது. பொதுஜனத் தொடர்பெனும் உறவு பெரிதாய் நீள்கிறது – […]
|
Posted: 15 Jul 2016 03:00 AM PDT “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி, சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின், வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக், காட்டிய கேசவ் கவி”….(1) —————————————————————————————————————– பழையன களைதலும், புதியன கொள்ளலும்…. ——————————————————————————— “ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு, நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு, பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள், மால்பிறப்பு பாகவத மாச்சு”….(2) ——————————————————————————————————————- “பால்கோலம் இட்டு பசுயிரெண்டு சுற்றிவர மால்கொள் கிறான்பார் மணிமகுடம்; – ஆள்கொல்ல, சிம்மமாய்த் தூணில் சிலிர்த்தெழுந்த கண்ணனுக்கு, சும்மாவே சிம்மா சனம்”….(3) ஆள்-இரணியன்…. ———————————————————————————————————— “பாலா […]
|
|
“கட்டகழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா” Posted: 14 Jul 2016 05:05 PM PDT விவேக்பாரதி கவியரசு கண்ணதாசன் அவர்களது “கட்டகழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா” என்கிற வண்ண மெட்டிற்கு திரு. கிரேஸி மோகன் எழுதச் சொல்லி நான் எழுதிய கவிதை. கன்னங் கரிதெனத் தோன்றும் இரவினில் …..கண்கள் விழித்திருப்பேன் – கவிப் …..பண்கள் படித்திருப்பேன் ! அடி கன்னி அழகினைக் காண அனுதினம் …..காற்றில் அலைந்திருப்பேன் – அடர்க் …..காட்டில் விழுந்திருப்பேன் !! எந்தத் திசையிலும் எங்கெங்கு காணிலும் …..உன்றன் திருமுகமே – எழில் …..கொஞ்சும் கலைமுகமே ! […]
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (4) Posted: 14 Jul 2016 05:03 PM PDT இசைக்கவி ரமணன் திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி 3 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (2) தூய அறிவினை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர்க்குக் கற்ற கல்வியினால் உண்டான பயன் என்ன? ஆய = ஆகிய, ஆன, இறந்த காலம், பெயரெச்சம் வாலறிவன் = எங்குமுளான் யாவும்வலான் யாவுமறிவான் என்று தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே என்பான் பாரதி. இங்கே வாலியோன் அறிவன் (Omnisicient) ஆசிரியர் சொல்வார். `கொள்கை வேறு, கோட்பாடு […]
|
|
சுந்தரரால் ‘பொய்யடிமையில்லா புலவர்’ எனப்பாடப்பட்டவர் மாணிக்கவாசகரே (பகுதி-1) Posted: 14 Jul 2016 05:02 PM PDT பேராசிரியர். முனைவர். கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம். சைவசமயிகளிடம் பரவலாக இருந்துவரும் ஐயம் ஒன்று உண்டு; அது, மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரா? இல்லையா? என்பதே. ‘திருத்தொண்டர்தொகை’ பதிகத்தில் சைவசமய நாயன்மார்களான ஞானியர் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு அவர்தம் அடியவர்க்கு தாம் அடியேன் என்று பாமாலை சாசனமிட்டுப் பரவிப் பாடியுள்ளார் எம்பெருமான் தம்பிரான்தோழர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். திருத்தொண்டர்தொகையை அடியொற்றி திருத்தொண்டர் திருவந்தாதியை அருளினார் சைவத் திருமுறைகளைத் தொகுத்து அருளிய நம்பியாண்டார் நம்பிகள். தெய்வச் சேக்கிழார் பெருமான், தம்பிரான்தோழர் அருளிய […]
|
|
Posted: 14 Jul 2016 05:01 PM PDT மீ.விசுவநாதன் எங்கெங்கோ பறந்தோடி எடுத்த சுள்ளி இப்படியும் அப்படியும் அடுக்கி வைத்து தங்குவதற் கானகூடு பறவை செய்யும் ! தகிக்கின்ற நல்வெயிலும் மழையும் கண்டும் தங்களது உறவுகளை நன்றாய்ப் பேணும் ! தவிக்கின்ற தன்குஞ்சு வாயில் ஊட்டி உங்களுக்கு நானிருக்கேன் என்று சொல்லி உடல்முழுதும் அலகாலே வருடிக் கொஞ்சும் ! வாசலிலே போடுகிற அரிசிச் சோறு வாய்க்குள்ளே வைத்தபடி காதல் பேசும் பாசமுள்ள குருவிகளைப் பார்க்கும் போது பாசத்தைப் பணத்திற்காய்க் கொன்று போடும் தூசுபெறா […]
|
|
Posted: 14 Jul 2016 04:55 PM PDT நாகேஸ்வரி அண்ணாமலை அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கக் கார்டினல் தன் பால் ஈர்ப்பு உடையவர்களை ஈடுபடுபவர்களை இதுவரை கத்தோலிக்க மதம் ஒதுக்கி வைத்து உரிமைகளை மறுத்ததற்கு அவர்களிடம் மதம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார். எப்போதுமே இம்மாதிரி சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டவர்கள், எளியவர்கள், வறியவர்கள் ஆகியோர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறிவரும் பிரான்ஸிஸ் போப் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு மேலே குறிப்பிட்டவர்களிடம் மட்டுமல்ல பெண்கள், இள வயதிலேயே நாம் வேலைவாங்கிய சிறார்கள் ஆகியோரிடமும் மன்னிப்பு […]
|
|
Posted: 14 Jul 2016 04:43 PM PDT பால நிவேதிதா “நீங்க மனசு வச்சா என்னையும் வேணியையும் சேர்த்து வைக்க கண்டிப்பா முடியும்மா” “நீ நல்லா யோசிச்சு தான் பேசுறியா குமார்… வேணி ஏற்கனவே திருமணமானவள், ஒரு குழந்தைக்கு தாய்….”-சித்ரா ஆச்சர்ய குரலில் . “எல்லாம் தெரியும்மா… அந்த குடிகாரனோட அவ பட்டபாடு எனக்கு தெரியாதாயென்ன… ஒவ்வொரு நாளும் இரத்த கண்ணீர் தாம்மா விட்டுது… சாகுறமட்டும் அந்த பாவி வேணியை சந்தோஷமா வைக்கலைம்மா….!” “ம்…எல்லாம் தெரிஞ்சுமா நீ அவளை திருமணம் செய்ய நினைக்கிற…?” “எனக்கு […]
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 204) Posted: 14 Jul 2016 04:31 PM PDT சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். ஒரு வாரம் ! அது இத்தனை நீளமானதா ? ஒரு வாரத்தின் அளவு அவ்வாரத்துக்குள் நடக்கும் நிகழ்வுகளின் ஆழத்தில் அமைந்துள்ளது என்று எங்கோ எப்போதோ யாரோ சொன்னதைப் படித்ததாக ஞாபகம். என்ன எதற்காக இவ்வாரத்தின் நீளத்தின் அளவு பற்றிய அலசல் எனும் எண்ணம் எழுகிறதா ? காரணம் இருக்கிறது. இங்கிலாந்தின் அரசியல் அரங்கிலே தினமும் மேடையேறும் காட்சிகளும் அதன் மாற்றங்களும் கொடுக்கும் அதிர்வுகளும் அதன் தாக்கங்களும் தாக்கத்தின் விளைவுகளும் […]
|
|
Posted: 14 Jul 2016 04:09 PM PDT அவ்வை மகள் பெண்ணின் “பெரினியம்” எனப்படும் மூலாதார யோகமுத்திரை பெண்ணியம் என்பதை விடப் பெண்ணியலும் பெண்ணறமும் தான் மிகவும் முக்கியம் என்ற அந்தஇராணுவ அதிகாரியைபப் பார்த்துக்கொண்டே அப்படியே எழுந்து ஒரு சல்யூட் அடித்துவிட்டு உட்கார்ந்தேன். “என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படிப் பரவசப்படுகிறீர்கள்!” என்றார். “ஐயா! நான் நெகிழ்ந்ததன் காரணம் சொல்கிறேன் கேளுங்கள்” என்று சொன்னேன்: ‘“வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி” என்ற எங்கள் மொழியில் உள்ள ஒரு பாசுரம் நினைவுக்கு வந்தது. […]
|
vallamai |
|
உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு! Posted: 16 Jul 2016 03:18 AM PDT பவள சங்கரி முந்தைய காலத்தில் தமிழ், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் நூல் இல்லை. எபிரேயம் என்ற ஹீப்ரு மொழி மற்றும் சீன மொழியில் சில எழுத்துக்கள் இருந்திருக்கின்றன. பைபிளின் பழைய ஏற்பாடு தோன்றியதும்கூட கி. மு.1000 ஆண்டுகளில்தான். ஆனால் இதெல்லாம் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பே அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, கடோபநிததத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தோன்றிய நசிகேதன் எனும் சிறுவன் எமனை வாக்குவாதத்தில் வென்று மூன்று வரங்கள் வாங்கி வருகிறான். அதேபோல் கார்க்கி போன்ற சில இந்துப் […]
|
Posted: 15 Jul 2016 11:24 PM PDT ”நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம் நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா வளிசொல்லி வேணு வனவிஹாரி தாளில் களிகொள் கன்றாய்க் கிடந்து”….கிரேசி மோகன்….
|
vallamai
உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு!
Posted: 16 Jul 2016 03:18 AM PDT
பவள சங்கரி முந்தைய காலத்தில் தமிழ், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் நூல் இல்லை. எபிரேயம் என்ற ஹீப்ரு மொழி மற்றும் சீன மொழியில் சில எழுத்துக்கள் இருந்திருக்கின்றன. பைபிளின் பழைய ஏற்பாடு தோன்றியதும்கூட கி. மு.1000 ஆண்டுகளில்தான். ஆனால் இதெல்லாம் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பே அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, கடோபநிததத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தோன்றிய நசிகேதன் எனும் சிறுவன் எமனை வாக்குவாதத்தில் வென்று மூன்று வரங்கள் வாங்கி வருகிறான். அதேபோல் கார்க்கி போன்ற சில இந்துப் […]
|
இரா.முருகனுக்கும் அடியேனுக்கும் ‘’வெண்பாஷணை’’….. Posted: 17 Jul 2016 09:43 AM PDT அடியேனுக்கு பல் வலி வந்த போது…. ———————————- மல்லாண்ட மாயவா வில்லாண்ட வித்தகா சொல்லாண்ட வாயிலே சொத்தையாய் -பல்லாண்டு பாடாய்ப் படுத்துது ஆடா(து) அசங்காது வாடா மருப்பொசித்த வா….()….15-12-2009….கிரேசி மோகன்…. இரா.முருகன் பதில் வெண்பா…. —————————————- பல்லவன் எந்நாளும் நாக்கைக் கடிக்காத நல்லவன் ஆயினும் ஐம்பதில் -தொல்லையாய் ஆடி அசைந்தவஸ்தை தந்தானை நேற்றுவே றோடு களைந்தாயோ சொல்….()….16-12-2009….கிரேசி மோகன்…. அடியேன் பதில் வெண்பா…. ———————————————— பல்லெடுத்தால் வாய்வீங்கி பார்க்க சிரஞ்சீவி கல்லெடுத்தோன் ஆவேனாம் காட்சிக்கு […]
|
Posted: 16 Jul 2016 10:59 PM PDT நிறத்துக்கு நீலம், நினைப்புக்கு லீலை, கருத்துக்கு கொள்மனமே கீதை, -சிரத்துக்குள் சீர்மல்கும் சீதரனை ,சிந்திக்க ஜீவன்கண் ணீர்மல்க ஆன்மாவா கும்….
|
|
Posted: 16 Jul 2016 10:55 PM PDT சிவசம்போ மீ.விசுவநாதன் ஆத்தங் கரையுறை ஆதி சிவனிடம் அன்பு வைத்திருப்பேன் – மனம் அச்சம் தவிர்த்திருப்பேன் – அந்தக் கூத்தன் விழிதனில் கூடிய பின்னாலே கொஞ்சம் தனித்திருப்பேன்- கண்ணீர் கொட்டப் பனித்திருப்பேன் ! கொத்துச் சடைமுடி கொண்ட பெருமகன் கூட நடந்திடுவேன் – தீபம் கொண்டு வழிபடுவேன்- இந்த வெத்து மனிதனை வேட்டை ஆடென விழுந்து கும்பிடுவேன்- சிவ வித்தை நம்பிடுவேன் ! தும்பை மலரிலே தூய வெள்ளையாய்த் தோன்றும் உருவெடுப்பேன் – ஈசன் தோளை […]
|
|
சுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள் Posted: 16 Jul 2016 08:59 PM PDT https://youtu.be/_7pZAuHwz0E சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ சுழலும் புவிக் கோளைச் சுற்றும் நிலவின் பின் முகத்தை நாசா துணைக்கோள் முதன்முதல் படமெடுக்கும் ! இதுவரை தெரியாத பின்புறம் இப்போது கண்படும் ! சைனா 2020 இல் நிலவின் பின்புறம் காண விண்ணுளவி அனுப்பும். அண்டவெளிப் பயணம் செய்து விண்வெளியில் நீந்தி வெற்றி மாலை சூடி மறுபடி மண்மீது கால் வைத்தார் சைன விண்வெளித் தீரர் ! அமெரிக் காவின் விண்வெளி […]
|
|
”நெமிலி பாலா திரிபுர சுந்தரி’’…. Posted: 17 Jul 2016 11:16 PM PDT ——————————————————– “மாலை மயக்கம், மதிய உதயம்அதி காலை வெளிச்சம் கனவாகும், -பாலை, திரிபுரையைக் கண்டு தரிசிப்போர் , தம்முன், எரிபவை கூட எழில்”….. ‘’சீட்டிப்பா வாடையும் ,சில்க்கில் சட்டையுமாய், நாட்டுப் புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள் வீற்றவளே பாலா , வருக வருகநான் சாற்றும்வெண் பாவை சகித்து’’….கிரேசி மோகன் ”பாப்பா நெமிலிவாழ் பாலா திரிபுரை, காப்பாள், அடியார் கரம்பிடித்துச், -சேர்ப்பாள் அதியற் புதமான ஆன்ம உலகில்: துதியவளை சாக்லேட்டைத் தந்து’’….
|
Posted: 17 Jul 2016 11:04 PM PDT கோகுலத்தில் இருந்தால் கீதையை யோசிக்க விடாமல் எங்கே கன்று வந்து கால் நக்குமோ என்று மன்னார் குடிசென்று மரமேறினாலும் நீராஞ்சன கோமாதா விடாமல் தொடர கண்ணன் பொருட்படுத்தாது யோஜனை செய்கின்றார்…. ”கோரோ ஜனைகோபால் கண்ணன் மரமேறி தேரோ ஜனைக்கண் தெரிந்திட, -போராஞ்ச(போர் ஆஞ்சனேயர்) னேயர் பறக்கஆவின், நக்கல்(பாதம் வருடல்) பொருட்டாது ஆயர் குலத்தோன் அமர்வு’’….கிரேசி மோகன்….
|
Posted: 17 Jul 2016 08:30 PM PDT செ. இரா.செல்வக்குமார் இப்பதிவு சூலை 4 ஆம் கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது [1]. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக பெட்னா (FeTNA) என்றழைக்கப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தொடர்ந்து 29 ஆண்டுகளாக வட அமெரிக்காவில் அருமையான தமிழ்ப்பணி ஆற்றிவரும் ஓர் இலாபநோக்கமற்ற தன்னார்வலர்களால் ஆன குழுமம். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான தமிழ்க்குடும்பங்கள் தங்களின் வேலைநேரம் போக மீதிநேரத்தைத் தமிழுக்காக இரவும் பகலுமாக உழைத்து வியப்பூட்டும் ஒரு கலைவிழாவும் ஒன்றுகூடலும் வெற்றிகரமாக […]
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (5) Posted: 17 Jul 2016 05:07 PM PDT இசைக்கவி ரமணன் திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி – 4 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (01:3) அன்பரின் நெஞ்ச மலரில் பொருந்தியிருக்கும் கடவுளின் திருவடிகளை எப்பொழுதும் நினைப்பவர், உலகில் நிலையாக வாழ்வார். இங்கே மலர் நமது இதயக் கமலமே! `ஹ்ருதய குஹர மத்யே` என்று விளக்குவார் ரமணர். யோகத்தில், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அனாஹதமே இதயக் கமலம் எனப்படுகிறது. அதற்கு மேலும் ஆதாரங்கள் உண்டெனினும், மனித ஆன்மா […]
|
|
Posted: 17 Jul 2016 05:02 PM PDT மீ.விசுவநாதன் எனக்கொரு மந்திரம் வாய்த்துளது – அது எல்லோர் நலமும் நினைக்கிறது தனக்கொரு தந்திரம் கொள்ளாத – தினம் தவிக்கும் உயிரை அணைக்கிறது ! இளமையில் ஓடிய கால்களுக்கு – இன்று இதமாய் தடவிக் கொடுக்கிறது அளவிலா அன்பினைத் தந்தவர்க்கு – கவலை அருகில் வராமல் தடுக்கிறது ! பலமுறை வாழ்விலே தோற்றவர்க்கு – உள் பலத்தைக் அளித்துப் பழக்கியது குலமுறை எதுவுமே பார்க்காமல் – நல்ல குணத்தைக் கண்டு மதிக்கிறது ! […]
|
|
ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு Posted: 17 Jul 2016 05:02 PM PDT எம்.ரிஷான் ஷெரீப் கறுத்த கழுகின் இறகென இருள் சிறகை அகல விரித்திருக்குமிரவில் ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில் ரட்சகனின் மந்திரங்கள் விசிறி கிராமத்தை உசுப்பும் சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல் ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள் குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள் முன் தள்ளிய வேட்டைப் பற்கள் விடைத்து அகன்ற நாசியென நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம் சனம் விழித்திருக்கும் அவ்விரவில் பேரோலமெனப் பாயும் பச்சைப் பொய்கை நீரின் ரேகைகள் ஊழிக் […]
|
|
Posted: 17 Jul 2016 05:02 PM PDT வித்தக இளங்கவி. விவேக்பாரதி காப்பு ஆத்தாளை அண்ட மளந்தாளை ஏழுலகம் காத்தாளைக் என்றன் கவிதையினைப் – பூத்தாள வாவெனக் கூப்பிட்டு வார்க்கின்றேன் வண்ணப்பா ! காவென்றேன் செந்தமிழே கா ! பதிகம் அரனுடலில் பாதி …அமையவுரு வாகி …அழகுவடி வான – உமையாளே முருகனவ னாள …முழுமைமிகு வேலை …முறுவலொடு தந்த – உமையாளே திருவுடலில் மேவுங் …களபமத னாலே …திடமகவை யீன்ற – உமையாளே அருளினொளி பாய …அழிவுணர்வு மாய …அமைந்தகதி நீயே – உமையாளே ! […]
|
|
படக்கவிதைப் போட்டி 72 – இன் முடிவுகள் Posted: 17 Jul 2016 05:02 PM PDT காயத்ரி பூபதி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் பிரபு வெங்கட்ராமன். இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள். இந்த ஒளிப்படத்தில் இடம்பெற்றிருப்பவர் உடன்பிறப்பை தூக்கிச்சுமந்து நிற்கும் சிறுமி. சுமையல்ல சுகம் என்று புன்னகையுடன் இச்சிறுமி எதிர்கொள்ளும் வாழ்க்கைப் பயணம் குறித்து, கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி, வறுமை ஒருபுறம், வறுமையில் காணும் இன்பமாய் குழந்தைகள் ஒருபுறம் என்று […]
|
|
Posted: 17 Jul 2016 05:00 PM PDT எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா ஆட்சிதனில் அமர்ந்திருந்தும் அதியுயர்ந்த பதிவிபெற்றும் மாட்சியுடை மணிமகுடம் தான்சூடிக் கொண்டிருந்தும் நாட்டிலிப்போ பெண்கள்தமை நலிவடையச் செய்யும்நிலை நாளுமே பெருகுவதை நாம் தினமும் பார்க்கின்றோம் ! வீட்டுக்குள் இருந்தவளை வெளிவரவே செய்திருந்தும் நாட்டுக்குள் நடமாட நரகாசுரர் விடவில்லை கல்விகற்கும் பெண்கள்கூட கண்கலங்கி நிற்கின்றார் கயமைநிறை மனமுடையார் கதிகலங்கச் செய்கின்றார் ! பட்டம்பல பெறுகின்றார் சட்டம்பல பயிலுகின்றார் நட்டம்பல வாழ்க்கையிலே நாளுமவர் காணுகிறார் கெட்டவரின் […]
|
|
Posted: 17 Jul 2016 05:00 PM PDT மீ.விசுவநாதன் குடகு மலையோ பொதிகை மலையோ குறிஞ்சித் தலைவன் இடமதுதான் – என் குமரன் இருக்கும் குகையதுதான் – ஒரு படகு எடுத்துக் கடலில் மிதப்பேன் பயத்தை மறந்த பயணம்தான் – குக பக்தி கொடுக்கும் துணிவேதான் ! செந்தூர் முருகன் சிரிக்கும் அழகை சிந்தை செய்வ தொருபழக்கம் – ஒரு சின்னப் பொழுதி(ல்) அவன்நெருக்கம் – நான் எந்தூர் திசையில் இருந்த போதும் இந்தப் பிள்ளை நினைவேதான் – என் இதயம் அவனின் அருளேதான் […]
|
|
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 66 Posted: 17 Jul 2016 04:57 PM PDT சிக்மண்ட் ப்ராய்ட் அருங்காட்சியகம், வியன்னா, ஆஸ்திரியா முனைவர்.சுபாஷிணி மனிதர்களுக்கு ஏற்படுகின்ற பல்வேறு உடல் நோய்களுக்குக் காரணமாக உளவியல் பிரச்சனைகளே அமைகின்றன. வெளிப்படையாக உடலில் தோன்றும் நோய்கள் என்பன சில. மனிதர்களாகிய நமக்கு ஏற்படுகின்ற பல நோய்கள் ஆழ் உள்ளத்தின் தேங்கிக் கிடைக்கின்ற சங்கடங்கள், பீதிகள், அச்சங்கள், வேதனைகள், துயரங்கள், ஏமாற்றங்கள், வலிகள், தோல்விகள் ஆகியவற்றின் தேக்கத்தினால் ஏற்படுபவையாகவே இருக்கின்றன. இவற்றின் மூலத்தை அறியும் முயற்சியில் சமயஞானிகளும் விஞ்ஞானிகளும் ஆய்வில் ஈடுபடுவது என்பது தொன்று தொட்டு நிகழ்வதைக் காண்கின்றோம். […]
|
|
இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-22 Posted: 17 Jul 2016 04:54 PM PDT மீனாட்சி பாலகணேஷ் சிறுதேர் உருட்டும் செந்தில்வாழ் கந்தவேள் தத்தித் தத்தித் தளர்நடைபயிலும் சிறு ஆண்மகவு; நடக்கக் கற்றுக்கொண்டு விட்டதனால் அவனுடைய தாய் அவனுக்கு விளையாட சில புதிய விளையாட்டுப்பொருள்களைக் கொடுத்திருக்கிறாள். அவற்றுள் ஒன்று நேற்றுதான் தச்சனிடம் செய்துவாங்கிய ஒரு அழகான சிறுதேர்; இலேசான, கனமற்ற மரத்தால் குழந்தை விளையாடுவதற்காகவே செய்யப்பட்டு, கூர்மையான முனைகள் எல்லாம் தேய்த்து மழுங்கவைக்கப்பட்டு (பின், குழந்தை கையிலோ காலிலோ குத்திக் காயம் பண்ணிக்கொண்டால் என்ன செய்வதாம்? அதற்கான முன்னெச்சரிக்கை இது!) செய்விக்கப்பட்ட தேர். […]
|
|
Posted: 17 Jul 2016 04:53 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். […]
|
|
Posted: 17 Jul 2016 04:51 PM PDT நிர்மலா ராகவன் தாயைப்போல் பிள்ளையா! ‘யாருக்கெல்லாம் இன்னும் அதிகமாகப் படித்திருக்கலாம் என்ற குறை இருக்கிறது?’ என்று, தமிழ்ப்பெண்களுக்கான ஒரு கருத்தரங்கில் நான் உரையாற்றி முடித்ததும் கேட்டேன். முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் கைதூக்கினார்கள். அவர்களுக்குப் படிப்பில் நாட்டமில்லாமல் போகவில்லை. ஆனால் அவர்கள் பெற்றோர் ஆண்பிள்ளைகளை மட்டும் நிறைய படிக்க வைத்தார்கள். பெண்கள், `அண்ணன் மட்டும் என்ன உயர்த்தி?’ என்று வாதாட, `அவன்தான் கடைசி காலத்திலே எங்களை வெச்சுக் காப்பாத்துவான்!’ என்று பதில் வந்ததாம். என் மாணவியரில் ஒருத்தி, `எனக்கு ஒரு […]
|
|
Posted: 17 Jul 2016 04:42 PM PDT செண்பக ஜெகதீசன் மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். -திருக்குறள் -134(ஒழுக்கமுடைமை) புதுக் கவிதையில்… கற்ற வேதத்தை அந்தணர் மறந்திடினும், கற்றிடலாம் மீண்டும், ஆனால் அவர்தம் குல ஒழுக்கம் கெட்டால், கெட்டிடும் எல்லாமே…! குறும்பாவில்… மறந்திட்டாலும் வேதத்தை, மீண்டும் கற்றிடும் அந்தணர், கெடுவர் குலவொழுக்கம் குறைந்தால் …! மரபுக் கவிதையில்… வேதம் ஓதிடும் வேதியர்க்கு வேதம் மறந்தே போனாலும் வேதனை யேதும் வாராது ஓதிட மீண்டும் […]
|
|
மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை (கோப்பெருந்தேவியை நோக்கிக் கண்ணகி கூறுதல்) Posted: 17 Jul 2016 04:41 PM PDT மலர்சபா கோவேந்தன் தேவியே! நான் கணவனை இழந்தவள் ஒன்றும் அறியாத் தன்மையுடையவள். பிறர் ஒருவருக்கு முற்பகல் ஒரு கேடு நினைத்தால் அக்கேட்டினை அன்று பிற்பகலே காணும் தன்மை உடையவை வினைகள். கற்புடை மகளிர் எழுவர் வரலாறு வன்னி மரத்தையும் மடப்பள்ளியையும் நற்பகல் ஒன்றில் தனக்குச் சாட்சிப் பொருட்களாய் அனைவரும் காணும்படி முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்திக் காட்டினாள் அடர்ந்த கூந்தலையுடைய பத்தினிப் பெண்ணொருத்தி. பொன்னியாற்றின் மணற்பரப்பில் மகளிர் சிலர் விளையாடும்போது, ஒருத்தி ஒரு மணற்பொம்மையைச் செய்து […]
|
|
Posted: 17 Jul 2016 04:34 PM PDT க. பாலசுப்பிரமணியன் சூழ்நிலைகள் கற்றலை பாதிக்குமா? ” படிப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகளைப் பற்றி நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி.. ஆனால் எத்தனை பேருக்கு இந்த மாதிரி சூழ்நிலைகள் கிடைக்கின்றன? சரியான சூழ்நிலைகள் இல்லாத போதும், தெரு விளக்குகளில் படித்தவர்களும் அகல் விளக்குகளின் அருகில் அமர்ந்து படித்தவர்களும் வாழ்க்கையில் முன்னுக்கு வரவில்லையா? ” என்று என் நண்பர் சென்ற இதழைப் படித்தபின் எழுப்பிய கேள்விகள் முற்றிலும் உண்மையானவை. படிப்பதற்கு சாதகமான சூழ்நிலைகள் என்னவென்றுதான் முந்தைய இதழில் பார்த்தோமே தவிர, […]
|
|
கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள் Posted: 17 Jul 2016 04:34 PM PDT சி. ஜெயபாரதன், கனடா காவியப் படைப்புகளில் கவிதை ‘கலைத்துவ இளவரசி ‘ என்று புகழப்படுகிறது. எழுத்தாளர், ஓவியர், இசைஞர், நர்த்தகி, நடிகர், சிற்பிகள், சிந்தனா மேதைகள் யாவரும் கவிதைகளில் தமது மனதைப் பறி கொடுத்தவரே! கவிதைப் போதையில் மூழ்காத கலைஞரைக் காண்பது மிக அபூர்வம்! கவிதைகள், அவற்றின் கிளைப் படைப்பான பாடல்கள் ஆகிய இரண்டும் இசைக் கலைக்கு வடிவம் தருபவை. கலைகளில் சிறந்த நாட்டியக் கலைக்குப் புத்துயிர் அளிப்பவை, இசையும் பாடல்களும். கீதங்களைக் கேட்டு கற்கள் கூட […]
|
|
Posted: 17 Jul 2016 04:32 PM PDT தமிழ்த்தேனீ 2016ம் ஆண்டு பிறக்கிறது, இந்த வருடம் ஜனவரி மாதம் 1ம் தேதியிலிருந்து அவருக்கு 63 வயது முடிந்து 64 ம் வயது ஆரம்பமாகிறது கதிரேசனுக்கு . புது வருட வாழ்த்துக்கள் அவருடைய தொலைபேசியிலும் இணையதள மடல்களிலும் நிரம்பி வழிகின்றன. அத்துடன் அவருடைய பிறந்த நாளுக்கும் சேர்த்து வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் வேலையிலிருந்து ஓய்வு பெற முடியவில்லை, அவர் வியாபாரம் ஓஹோவென்று ஓடிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு துளி ஸ்வாரஸ்யத்தையும் அனுபவிக்க முடியாமல் பணம் பணம் என்று அதன் பின்னால் அலைந்து குரங்கின் கையில் பிடித்த பாம்பாய் விட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். விட்டால் வியாபாரம் என்னும் பாம்பு […]
|
|
‘’குரு பூர்ணிமா’’ – ராமகிருஷ்ண பரமஹம்சர் Posted: 19 Jul 2016 09:14 AM PDT ‘’குரு மஹராஜ்கி ஜெய்’’…. —————————————————— ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி…. ——————————————— நெற்றியில் தொட்டு நரேனுக்குள் ஞானத்தை பற்றிட வைத்த பரமஹம்ஸா -வெற்றிடமென் நெஞ்சில் எழுந்தருளி அஞ்சற்க என்றிடுவீர் தஞ்சமென்றும் நின்னிரு தாள்….கிரேசி மோகன்…. நரேன் -விவேகானந்தர் பூர்வாஸ்ரம பெயர்….
|
|
Posted: 18 Jul 2016 11:28 PM PDT கிரேசி மோகன் ——————————– ’’குரு பஞ்சகம்’’ ——————— ஒருநோயும் அணுகாத உடல் ஆரோக்கியம் ஓகோ எனப்புகழ் , ஒரு மேரு திரவியம் குரு பத்மபாதம் மனம் குவியாதபோது கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(1) திருவொத்த மனையாள் திடமான பிள்ளைகள் தங்கவோ மாளிகை தாயாதி உறவினர் குரு பத்மபாதம் மனம் குவியாதபோது கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(2) மறை சாத்திரங்கள் முறையோடு பயின்றாய் உரைநடை பாட்டதில் கரைகண்டு வென்றாய் குரு பத்மபாதம் மனம் குவியாதபோது கண்ட பயனென்ன […]
|
Posted: 18 Jul 2016 11:25 PM PDT “பகவான் உவாச “…. ———————————————– “வேரோடு கிள்ளி விருட்சம் அகந்தையொடு – போரோடு போராகப் போராடு -வீராநீ! – வெற்றி உனக்கதை வீழ்த்துதல் தானன்றி – சுற்றியுள்ள நூறு சடங்கு “…..கிரேசி மோகன் ….!
|
Posted: 19 Jul 2016 07:54 PM PDT ’’கன்றைப்போல் கண்ணன் கரத்தில் பிதாமகர், சென்றடைந்து நாம சஹஸ்ரத்தை, -மென்று, முழங்கினார் , அந்திம மாடன் அழைத்தும், வழங்கினார் விஷ்ணு விருது’’….கிரேசி மோகன்…. அந்திம மாடன் -காலன்….
|
|
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் ! Posted: 19 Jul 2016 06:29 PM PDT (கட்டுரை: 12) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை சிதறித் துகளாகித் துணுக்காகித் துண்டமாகிப் பிண்டமாகி, பிண்டத்தில் பின்னமாகி அணுவாகி, அணுவுக்குள் அணுவான பரமாணு வாகித் திரண்டு பல்வேறு மூலகமாய்ப் பின்னித் தொடர்ப் பிளவில் பேரளவுச் சக்தி வெளியேற்றி நுண்துகள்கள் பிணைந்து பேரொளி வீசிப் பிரமாண்டப் பிழம்பாகி, விண்மீன்களாகி பால்மய வீதியாகி, அதனுள் பரிதி மண்டலமாகி அண்டக் கோள்கள் பம்பரமாய்ச் சுழலும் பந்துகளாகி, செம்மை நெறியிலே மகத்தான […]
|
Posted: 19 Jul 2016 05:07 PM PDT அவ்வை மகள் 6. துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்திலும் ஓங்கார நாதம் முனைப்பாடியார் தனது அறநெறிச் சாரத்தில் கூறுவார்: நோற்பவ ரில்லவர்க்குச் சார்வாகி இல்லவரும் நோற்பவருக்குச் சார்வா யறம்பெருக்கி–யாப்புடைக் காழுங் கிடுகும்போல் நிற்குங் கயக்கின்றி ஆழிசூழ் வையத் தறம். என்று. இல்லறமும், துறவறமும் ஒன்றுடன் சார்ந்து இயங்குதலே இவ்வையத்தின் அறம் எனக்காட்டும் இக்காட்சி உய்ந்துணரத்தக்கது. “காழும் கிடுகும் போல்” என்கிற உவமை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் புதுப்புது சிந்தனைகளைக் கிளப்பவல்லது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் – இது மிகப்பெரிய […]
|
|
Posted: 19 Jul 2016 05:01 PM PDT வித்தக இளங்கவி. விவேக்பாரதி தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன – தனதான தத்தன தனவென நித்தமு நடமிடு …மத்தனி னுடலினில் – சரிபாதி முத்தென விடமம ருத்தமி பதகம …லத்தினை யடையுக – உலகோரே ! (1) மத்தள வயிறனு மத்தனை அழகுக …ளெட்டிட வுடலுடைக் – கசடாலே மொத்தமு மெழிலென வித்தக மமைவுறப் …புத்தருள் பொழிந்தவ – ளுமையாளே ! (2) மக்களி னிடறற மிக்கம கிழவவ …ரெக்கண மலறினு – முடனேகித் தக்கதொர் […]
|
|
சுந்தரரால் ‘பொய்யடிமையில்லா புலவர்’ எனப்பாடப்பட்டவர் மாணிக்கவாசகரே (பகுதி-2) Posted: 19 Jul 2016 05:00 PM PDT பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் சென்ற பகுதி-1ல் ‘பொய்யடிமையில்லாப் புலவர்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது ஒரு தனியடியாரையே குறிக்கும், தொகையடியாரை அல்ல என்பதைத் தக்க சான்றுகளுடன் நிறுவப்பட்டது; அத்தனியடியார் ஏன் மாணிக்கவாசகராக இருக்கவேண்டும் என்பதற்கான பொய், மெய் என்பதுகுறித்த கருதுகோள்களின் தொடக்கநிலை அடிப்படைகளும் விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து மேலும் சிந்திக்கலாம். மன்னுயிர் என்பது அழிவில்லாத உயிரே மண்ணோடு மண்ணாக மறைந்தொழியும் இந்த மனித உடலை நாம் ‘என்றும் உள்ளது’ என்று பொருள்படும் ‘மெய்’ என்ற சொல்லால் அழைக்கின்றோம். ஒருவருடைய ‘Body Guard’-ஐ தமிழில் ‘மெய்க்காப்பாளர்’ என்று அழைக்கின்றோம். இதை ஏன் இவ்வாறு சொல்லும் வழக்கம் வந்ததென்று சிந்திக்கலாம். மனித […]
|
|
Posted: 19 Jul 2016 04:48 PM PDT சி. ஜெயபாரதன், கனடா பராசக்தியிடம் காணி நிலம் வேணும் என்று மிக்கக் கனிவோடு கேட்கிறான், பாரதி. அங்கே ஓர் மாளிகை கட்டிக் கொடு. பத்துப் பத்துப் பனிரெண்டு தென்னை மரம் பக்கத்திலே நட வேணும். நல்ல முத்துச் சுடர்போல நிலவொளி முன்பு வர வேணும். அங்கே கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் பட வேணும். சித்தம் குளிரத் தென்றல் காற்று அடிக்க வேணும். அங்கே நான் யுக யுகமாய்ப் பாட்டுப் பாடப் போகிறேன். அந்தப் பாட்டுக் […]
|
|
Posted: 19 Jul 2016 04:44 PM PDT க. பாலசுப்பிரமணியன் “மல்லிகைப்பூ என்ன விலை?” என்று வடக்கு மாசி வீதி விநாயகர் கோவிலுக்கு எதிர் நடைபாதையில் அமர்ந்திருந்த பூக்காரியிடம் சம்பந்தம் கேட்டார். ” நூறு பத்து ரூபா ” என்று அவள் சொன்னதும் அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “என்ன யானை விலை சொல்லறே?” “சந்தையிலே பூ கிடையாது சார். அதுவும் இன்னிக்கி வெள்ளிக்கு கிழமை.. டிமாண்ட் அதிகம். ” என்று ஆங்கிலம் கலந்த தமிழில் அவள் சொன்னதும் நல்ல விவரம் தெரிந்தவள் என்று அவருக்கு […]
|
|
அற இலக்கியங்களில் கல்விச் சிந்தனை Posted: 19 Jul 2016 04:41 PM PDT க.பிரகாஷ், தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர், தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 46 அறம் ‘அறு’ என்ற வினைச் சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். அச்சொல்லுக்கு அறுத்துச்சொல், வழியை உண்டாக்கு, எருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்றும் குறிப்பிடுகின்றனர். பின்னர் மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். பிறவிதோறும் மனிதனைப் பற்றி […]
|
|
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் Posted: 22 Jul 2016 04:23 AM PDT பவள சங்கரி தலையங்கம் தமிழக அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான ஒரு செய்தி என்றால் அது எந்த ஒரு புதிய வரிவிதிப்பும் இல்லை என்பதுதான். மற்றபடி இந்த நிதிநிலை அறிக்கை ஆக்கப்பூர்வமானதாக இல்லை. தொழில் வளர்ச்சிக்குரிய அறிவிப்புகளோ அல்லது உள் கட்டமைப்பு வளர்ச்சிக்குரிய அறிவிப்புகளோ ஏதுமில்லை. புதிதாக தொழில் முனைவோர்கள் அல்லது தொழிலகங்களின் வளர்ச்சிகளையோ உற்சாகப்படுத்துவதற்கான அறிவிப்புகளும் ஏதும் இல்லை. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சில இலவசங்களை […]
|
Posted: 22 Jul 2016 12:35 AM PDT “மார்கழி மாதத்தில் மாடுகள் மேய்த்திரவில் ஓர்கழி ஊது குழலோடு -ஊர்புகும் கார்முகில் வண்ணம்மேல் கோதூளி மின்னிட பார்மிசை ராப்பகல் பத்து’’….கிரேசி மோகன்….. ராப்பகல் பத்து -ராப்பத்து ,பகல்பத்து….கண்ணனைக் குறிக்கும்….!
|
|
Posted: 21 Jul 2016 05:10 PM PDT ருத்ரா இ.பரமசிவன் கண்ணீரும் கனவும் கொண்டு துடைத்து வைத்த பாதை. விடியும்போது இப்படி வாசல் தெளித்துவைத்த பாதை. நினவு நெளியல்களில் நெய்த கோலங்கள் இன்னும் விழவில்லை. பறவைச்சிறகுகள் நக்கிப்பார்த்து சொன்னது “வானம் இனிக்கத்தான் செய்கிறது.” நம்பிக்கை கசிவு வெளிச்சமாய் விழுது இறக்குகிறது. எதற்கு இந்த விடியல்? அப்புறம் எதற்கு மலையிடுக்கில் அந்தி எனும் ஒளி முடியல்? புள்ளி வைத்து வைத்து வாடிக்கையாக பால் ஊற்றும் பால்காரி வைப்பாளே அப்படி இந்த வட்டச்சூரியன்களை புள்ளி வைத்து வைத்து… முடிக்கவே […]
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (6) Posted: 21 Jul 2016 05:04 PM PDT இசைக்கவி ரமணன் திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (5) வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (4) விருப்பு வெறுப்பற்ற கடவுளின் திருவடிகளை எப்பொழுதும் நினைப்பவர்க்கு, துன்பங்கள் எக்காலத்தும் உண்டாகா. மனிதர்களில், ஞானியை `தீரன்` என்று மறைநூல்கள் விளிக்கும். ஏனெனில் அவன், பொருள்களின் மீதுவரும் பற்றைத் துறந்தவன். ஞானியே இப்படி என்றால், மலர்மிசை ஏகினான் எப்படி இருப்பான்? அவன், விருப்பு, வெறுப்பு இரண்டுமில்லாதவன். சிவனை ஆதிபிக்ஷு என்பார்கள். எதையும் நாடாமல், எதையும் வெறுக்காமல் அவன் விட்டேத்தியாய் […]
|
|
Posted: 21 Jul 2016 05:00 PM PDT வித்தக இளங்கவி விவேக்பாரதி தனன தனனனா தத்தன தத்தன …தனன தனனனா தத்தன தத்தன ……தனன தனனனா தத்தன தத்தன – தனதானா ! அருளி லடியவ ருற்றிடு மத்துய …ரதுவு மழிவுற வைத்திடு மத்தனி …..னரசி பதகம லத்தினைப் பற்றுக – தினமோடி ! அரச மகளெனத் ! தச்சனி னற்புத …அழகு மகவென ! இப்புவி மெச்சுற ……அரணின் தவமதை முற்றிட வைத்தவ – னுடல்சேரக் கருமை நிறமதை யுற்றிட, அத்தனைக் …கடலொ டுலகுப […]
|
|
Posted: 21 Jul 2016 05:00 PM PDT [ எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா ] பழைமையினை பார்ப்பதற்குப் பலருக்கும் பிடிப்பதில்லை பழமையது அருமையினைப் பலருமே அறிவதில்லை பழமையினை எதிரியாய் பார்க்கின்ற காரணத்தால் பலபயன்கள் இழந்துநிற்கும் பாங்கினையும் பார்க்கின்றோம் ! இயற்கையினை வாழ்வாக்கி இயங்கியது பழமையது இதனாலே ஆரோக்கியம் எழிலுடனே விளங்கியது நாட்டுப்புறம் என்றெண்ணி நல்லவற்றை ஒதுக்கியதால் நம்வாழ்வில் நட்டம்பல நாளுமே வளர்கிறதே ! விஞ்ஞானம் எனச்சொல்லி விபரீதம் வந்திருக்கு விளைச்சலினைப் பெருக்குதற்கு விதைக்கின்றோம் விஷமருந்தை […]
|
|
எழுவகைப் பெண்கள்: 8. பெண் உடலியல் வேதத்தைத் துறந்தோம் – மறந்தோம் Posted: 21 Jul 2016 04:57 PM PDT அவ்வை மகள் மூலாதாரம் என்கிறீர்களே அது பற்றி மேலும் விளக்கமுடியுமா என்றவரிடம், “மூலாதாரத்தை விளக்கவேண்டுமெனில், அதற்கு நான் அவ்வையைத் துணைக்கழைக்க வேண்டும். அவ்வை எங்கள் ஊரில் ஒரு சிறப்பு மிக்க பெண் புலவர் – விவேகி” என்றேன். “விவேகி என்று நீங்கள் சொன்னதும் எனக்குப் பெண்களின் விவேகம் பற்றிய எண்ணம் எழுந்தது அதுபற்றி பேசிவிட்டு மூலாதாரம் பற்றிப் பேசலாமா அல்லது மூலாதாரம் பற்றிப் பெண்களின் விவேகம் பற்றிப் பேசலாமா?” என்றார். “ஏறக்குறைய நானும் அதே மனோநிலையில் தான் […]
|
|
இன்னம்பூரான் பக்கம் [8] பாமரகீர்த்தி [1] Posted: 21 Jul 2016 04:29 PM PDT இன்னம்பூரான் 21 07 2016 “ என்னுடைய நோயாளிகளில் 95% சமுதாயத்தில் மிகவும் கீழ்படிந்த நிலையில் வறுமையில் உழலும் திக்கற்றவர்கள். அவர்களின் எதிர்நீச்சல்களை காணும் போது நம்மால் அவர்களுக்கு நல்லதொரு மாற்றம் தர இயலும் என்பது கண்கூடு” -டாக்டர் டொனால்ட் மெக்லார்ட்டி. “… சமுதாயத்தில் உரத்த குரல் எழும் வரை, அன்றாடம் நிகழும் அவலங்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.” -இன்றைய பாமரன் வரலாற்றின் கதாநாயகர்கள் ராஜா ராணியும், அமைச்சர்களும், தொழிலதிபர்களும் தான். சுருங்கச்சொல்லின் பிரபலங்கள். அங்கும் […]
|
vallamai |
|
ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உலகளாவிய கல்யாண் நினைவு கவிதைப் போட்டி – 2016. Posted: 23 Jul 2016 02:14 AM PDT பஃக்ருத்தீன் இப்னு ஹம்துன் உணர்வுகளை மலரச் செய்யும் கவிதை உங்களுக்குக் கைவரக் கூடியதா? ஒரு காட்சியை, ஓர் அனுபவத்தை, ஒரு திரைப்படத்தை, ஓர் அற்புதத்தை உங்களால் உணர்வுபூர்வமாகவும் பார்க்க இயலுமா? மலர்களின் மகரந்தப் புன்னகையை, மழலையரின் பேதமற்ற உலகை, காதலின் யெளவனத்தை, பால்திரியா பொதுமையின் இலக்கணத்தை, இனம் பிரியா மானுட இலட்சணத்தை, பேதங்களின் அவலட்சணத்தை, உரிமைக்குரல்களின் முழக்கத்தை, நியாயத்தின் தர்மாவேசத்தை மொழிபெயர்க்க அறிந்தவரா நீங்கள்? அப்படியானால் இந்தப் போட்டி உங்களுக்குத் தான்.. ரியாத் தமிழ்ச்சங்கம் – எழுத்துக்கூடம் […]
|
Posted: 23 Jul 2016 02:07 AM PDT ”அன்னம்போல், மயிற்பீலி வண்ணம்போல் பட்ஷிகளை எண்ணம்போல் கைவிரலால் ஏகாந்தக் -கண்ணன், வனத்தினில் செய்து விளையாடி னாலும் மனத்திலோ பூபார முள்’’….கிரேசி மோகன்….
|
vallamai |
|
மொரிசீயஸ் நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு – வந்தவாசியில் வரவேற்பு விழா – Posted: 24 Jul 2016 02:25 AM PDT வந்தவாசி. ஜூலை.24. மொரீசியஸ் நாட்டின் மோக்கா நகரிலுள்ள மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் நிறுவப்படவிருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வந்தவாசி நகரில் சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையேற்றார். செயலாளர் ப.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார், அரிமா சங்க மாவட்டத் தலைவர் இரா.சரவணன், நல்நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை தமிழ்த் […]
|
|
பரிதியும் புவி நோக்கிப் பாயும் தீவிரத் தீப்புயல் பாதிப்பு ஒளிப்பிழம்பை [Plasma] உருவாக்கலாம். Posted: 23 Jul 2016 06:10 PM PDT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ காலக் குதிரை ஆழியைச் சுற்றுவது பரிதி. பரிதி வடுக்கள் தோன்றி ஊழித் தீயின் ஓவிய நாக்குகள் நீண்டு பாயும் ! தீக்கனல் அண்டங்களைத் திண்டாட வைக்கும் ! பரிதியில் பூகம்பம் ஏற்படும் ! ஓயாத சூரியனும் ஒருநாள் ஒளிவற்றி முடங்கும் ! பூமியின் உட்கருவில் பூகம்பத் தொடரியக்கம் தூண்டும் பரிதியின் தீப்புயல்கள் ! சூரிய காந்தம், கதிர்வீச்சு காமாக் கதிர்கள் சூழ்வெளி வெப்பம் மாற்றுபவை ! […]
|
|
Posted: 23 Jul 2016 04:27 PM PDT எஸ். வி. வேணுகோபாலன் 2011 தீக்கதிர் புத்தக மேசை பகுதியில் வெளிவந்த நூல் ரசனை கட்டுரை இது… மதுரை சுப்பாராவ் அவர்களது அருமையான சிறுகதை தொகுப்பின் மீதான இந்த எழுத்துக்களை, அதன் தொடக்கத்தில் எழுதி இருந்த மேற்கோள் கவிதையை திண்டுக்கல் தோழர் ஆர் எஸ் மணி நினைவூட்டிக் கேட்கவும் மீண்டும் அசைபோட நேர்ந்தது… உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்…. தாத்தாவின் டைரி குறிப்புகள் ரசனையைத் தூண்டி சிந்தனையில் ஆழ்த்தும் வாசிப்புப் பயணம் என்றோ வசித்த ஒரு தெருவைக் கடப்பது […]
|
|
‘சொல்லின் செல்வரின்’ சமுதாய அக்கறை! Posted: 25 Jul 2016 03:26 AM PDT பவள சங்கரி ஈரோடு கொங்கு கலையரங்கில் நேற்று (24/07/2016) சி.கே.கே. அறக்கட்டளை சார்பில், சமுதாய அக்கறை உள்ளதா என்பது குறித்த பட்டி மன்றம் நடந்தது. ‘சொல்லின் செல்வர்’ திரு சுகி.சிவம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்த இந்த பட்டி மன்றத்தில் சமுதாய அக்கறை குறைந்துள்ளது என்ற அணியில் பேரா. ராமச்சந்திரன், திரு.மோகனசுந்திரம், பேரா. திருமதி.சாந்தாமணி ஆகியோரும், சமுதாய அக்கறை அதிகரித்துள்ளது என்ற அணியில் முனைவர்.சுந்தர ஆவுடையப்பன், திரு மணிகண்டன், வழக்கறிஞர் சுமதி ஆகியோரும் வாதிட்டனர். இலக்கிய அரங்கம் […]
|
Posted: 25 Jul 2016 02:53 AM PDT ”இல்லா ததைத்துரத்தி, செல்லா ததைச்சேர்த்து, பொல்லா தவனென்ற பேர்வாங்கி, -நில்லாது, விட்டிலென மாயா வெளிச்சத்தில் வீழ்வதேன் ! விட்டலிருள் வண்ணன்தாள் வீழ்”….கிரேசி மோகன்….
|
|
படக்கவிதைப் போட்டி 73 – இன் முடிவுகள் Posted: 24 Jul 2016 10:03 PM PDT காயத்ரி பூபதி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் ஷாமினி. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள். இந்த ஒளி படத்தில் இடம் பெற்றிருப்பவர் பறை கொட்டி இசைக்கும் தொழிலாளி. இவர் கொட்டும் பறைக்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம் இனி, பறையின் பயன்பாடு ஆதிகாலம் தொட்டு இருந்துவந்துள்ளதை சங்க இலக்கியத்தால் அறிய முடிகின்றது. பறை நிலத்தைக் குறிக்கும் குறியீடாக […]
|
Posted: 24 Jul 2016 09:00 PM PDT செ. இரா.செல்வக்குமார் இப்பதிவு சூலை 11, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, அருமையான அறிவியல்நூல்கள் எழுதியுள்ள முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சூலை 2, 2016 அன்று முனைவர் செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் கோட்பாட்டுவேதியியலுக்கான அடிப்படைக்கணிதம் என்னும் 316-பக்க உயர்கணித நூலொன்றை அனைவரும் இலவசமாகத் தரவிறக்கிப் படிக்கும்படி வெளியிட்டுள்ளார் [1]. இந்நூல் அறிவியல்-கணிதத் துறையின் ஆழங்குன்றாமல் எழுதப்பெற்றிருப்பது பெருஞ்சிறப்பு. இந்நூல் மட்டுமன்றி கடந்த சில ஆண்டுகளில் எட்டு அருமையான நூல்களை இலவசப்பதிப்பாக வெளியிட்டு […]
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (7) Posted: 24 Jul 2016 05:04 PM PDT இசைக்கவி ரமணன் திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (6) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5) கடவுளின் உண்மைப் புகழை விரும்பி, அன்புகொண்டவரிடத்து, அறியாமையால் உண்டாகும் இருவகை வினையும் சேர்வதில்லை. இருள் என்பது அறியாமை. இருவினை என்பது பாவமும் புண்ணியமும். இரண்டுமே மருள்மயமான பிறப்புக்குக் காரணம் என்பதால் நல்வினையும் தீவினை போலவே பிறவித் தளைக்குக் காரணமாக ஆகிறது. நல்வினையும் ஓர்சுமைதான் நட்ட நடுவிலதை மெல்ல இறக்கிவைத்தால் மீட்பு நல்வினை ஏன் சுமையாகிறது? அதை நாம் […]
|
|
Posted: 24 Jul 2016 05:01 PM PDT மீ.விசுவநாதன் மலரினால் பூசை செய்யும் வகைநா(ன்) அறிந்தே(ன்) இல்லேன் ! சிலரது அறிவைப் போல சிறிதும் கொண்டேன் அல்லேன் ! பலவகை திரியும் எண்ணம் படிந்த பாவி நானும் குலகுரு உந்தன் பாத குணத்தில் கரைந்து போனேன் ! மனதிலே மாசு நீங்க மௌன மொழியால் நித்தம் முனகிடு குருவின் பேரை , மூச்சுப் பயிற்சி யாலே சினமிலா பண்பு ஓங்கும் , சிந்தைத் தெளிவு காணும் எனவொரு வழியைச் சொல்லி எனக்குள் வந்த ஞானி ! […]
|
|
Posted: 24 Jul 2016 05:00 PM PDT செண்பக ஜெகதீசன் செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து மில்லதனின் தீய பிற. -திருக்குறள் -302(வெகுளாமை) புதுக் கவிதையில்… தம்மில் வலியோரிடம் கொண்டகோபம், செல்லாது போகும் சேர்க்கும் தீமையையே.. எளியோரிடத்து கோபம் எதையும் தராது, தீமை ஒன்றைத் தவிர…! குறும்பாவில்… செல்லாத இடத்து கோபந்தரும் தீமையே, செல்லும் எளியோரிடத்து, தருமது தீமையன்றி வேறிலையே…! மரபுக் கவிதையில்… வலியோர் தம்மிடம் சினங்கொண்டால் விரைவில் வந்திடும் தீமையதே, பலிக்கா தவரிடம் […]
|
|
Posted: 24 Jul 2016 05:00 PM PDT வித்தக இளங்கவி விவேக்பாரதி தனத்த தந்தன தனதன தனதன …தனத்த தந்தன தனதன தனதன ……தனத்த தந்தன தனதன தனதன – தனதானா ! செழித்த மஞ்சளொ டழகுடை நுதலினிற் …சிவக்க குங்கும மணிபெற அணிபவள் ……சிவத்தி னங்கமு முடையவ ளுமையவள – ளடிபேணிச் சிறக்கு மந்நிலை அடையுக விரையுக …சிவத்தி னுள்பொரு ளறியுக உயருக ……சிதைக்கு மின்னலு மவளடி சரணெனின் – கடிதேகும் ! கொழித்த கொங்கையு மதரமு முடலினில் …குதிக்கு மங்கியு குழைகளு மிடையினில் […]
|
|
Posted: 24 Jul 2016 04:57 PM PDT நிர்மலா ராகவன் குழந்தைகள் காட்சிப்பொருட்களல்ல எங்கள் உறவினர் பெண் ஒருத்தி தன் குழந்தையின் புத்திசாலித்தனத்தைப் பார்த்துப் பூரித்துப்போனாள். அருகில் இருப்பவர்களிடமெல்லாம், `இவளைப் பாருங்களேன்!’ என்று கூவுவாள். தாய் ஓயாமல் பார்ப்பதையெல்லாம் விளக்க, மகளின் அறிவு வயதுக்கு மீறி வளர்ந்திருந்தது என்னவோ உண்மை. ஆம், முதல் குழந்தைதான். இரண்டு வயது. பிறருக்கு அவளுடைய `நிர்ப்பந்தம்’ அலுப்பாகிவிட்டது. என்னிடம் குறைப்பட்டுக்கொண்டார்கள்: `எப்பவும் அந்தக் குழந்தையையே நாம்ப பார்த்துக் கொண்டிருக்கணும்!’ `எத்தனையோ குழந்தையைப் பாத்தாச்சு!’ ஒரு முதிய பெண்மணியின் அலுப்பு. அடுத்த […]
|
|
Posted: 24 Jul 2016 04:56 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.07.2016) வரை உங்கள் கவிதைகளை […]
|
|
Posted: 24 Jul 2016 04:55 PM PDT க. பாலசுப்பிரமணியன் கற்பதில் சில முறைகள் “படிச்சிருக்கேன்… ஆனால் பரிட்சை ஹாலில் வந்து மறந்து போச்சு ” என்று அங்கலாய்க்கும் மாணவர்களை நாம் பார்த்திருக்கிறோம். “வீட்டிலே எழுதறப்போ சரியா எழுதிறான். ஆனால் பள்ளிக்கூடத்திலே டெஸ்ட் வைத்தால் அங்கே பொய் முழிக்கிறான் ” என்று தனது இரண்டாவது வகுப்பில் படிக்கும் குழந்தையைப் பற்றி ஆசிரியர்களிடம் குறை சொல்லாத பெற்றோர்கள் மிகக் குறைவு. படித்தது எப்படி மண்டையில் ஏறுகிறது? அது எப்படி நினைவில் அமைகின்றது? எவ்வளவு நேரம் நினைவில் இருக்கின்றது? […]
|
|
Posted: 24 Jul 2016 04:52 PM PDT ராஜகவி ராகில் ‘ இந்தச் சூரியன் இப்படியே நிற்கக் கூடாதா ?’ என் ஏக்கம் பெருமூச்சானது. இன்று ‘யூனிவர் சிட்டி ‘ வாழ்க்கை எனக்கு முற்றுப் புள்ளி தினம் . சோகத்துடன் அவிழ்ந்து கொண்டிருந்தது பிரியாவிடை விழா . எல்லோரும் செயற்கைப் புன்னகை தேடி தோற்றுக் கொண்டிருந்தார்கள் . ஒருகடல் கண்ணீர் எனக்குள் . சில வருடங்களின் சேமிப்பு தீர்ந்து போகிறது இன்றோடு . என் உடல் விழா மண்டபத்தில் இருந்தாலும் இதயம் அலைந்தது . எனது […]
|
|
சுந்தரரால் ‘பொய்யடிமையில்லா புலவர்’ எனப்பாடப்பட்டவர் மாணிக்கவாசகரே! –பகுதி-3 (நிறைவுப் பகுதி) Posted: 24 Jul 2016 03:02 PM PDT பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம். ‘பொய்’ – திருவாசகத் தலையாய மெய்யியல் வரையறை–3 சீவன் சிவமாதல் எங்கும் நிற்றல் அல்லது எங்கும் கலந்திருத்தாலே ((வியாபிக்குந் தன்மை-வடசொல்) ‘மெய்’மை எனப்படும் தன்மை. இத்தன்மை உடைய ‘உயிர்’ அறியாமை என்னும் ஆணவத்தின் இயல்பான கலப்பினால், கட்டுண்டு கிடப்பதைக் கண்டு, கருணையால் அவ்வுயிரை இறைவன் மாயையினால் கட்டி உருவாக்கப்பட்ட ஊனுடம்பில் செலுத்தி அறிவு பெரும் பயணத்தைத் துவக்கி வைக்கின்றான். அப்பயண முடிவில், ஆணவம் என்னும் அறியாமைக் கட்டிலிருந்து விடுபடும் உயிர் மாயக்கட்டினாலாகிய உடலினின்றும் […]
|
|
Posted: 26 Jul 2016 06:45 AM PDT |
Posted: 26 Jul 2016 02:03 AM PDT பஜ கோவிந்தம்…. —————————– சாவிந்த மேனியை சந்திக்கும் வேளையில் காபந்து செய்யுமோ கற்றகல்வி -கோவிந்த நாமத்தில் மூட நினைவே நிலைத்திரு ஷேமத்தில் சேர்க்கும்மச் சொல்….(1) வெல்வாய்ஓ மூடா செல்வம்சேர் வேட்கையை கொள்வாய் அதன்மாற்றாம் கொள்கையாய் -வல்லான் விதித்த தொழில்செய்து வந்த பொருளை மதித்து மனதுள் மகிழ்….(2) வேறு ——- சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம் புல்மனமே வல்லான் காலன் வருகின்ற நேரம் தொல்காப்பியமா துணையாகும்….?….(3) வெல்வாய் மூடா செல்வம்சேர்க்கும் வேட்கை அதற்கு மாறாக ஈசன் விதித்த இயல்பாம் தொழில்சேர் […]
|
|
Posted: 25 Jul 2016 08:03 PM PDT பவள சங்கரி 1330 குறட்பாக்களும் இரண்டடியில் எழுதிவைத்த வள்ளுவப்பெருந்தகை, தமது மனைவி வாசுகி அம்மையாருக்காக எழுதிய குறள் மட்டுமே 4 வரிகளில் எழுதியுள்ளார்! இதோ: அடியிற்கினியாளே, அன்புடையாளே படிசொல் தவறாத பாவாய் – அடிவருடி பின்தூங்கி முன்னெழும்பும், பேதாய் இனிதாய் என்தூங்கும் என்கண் இரவு. இருக்காதா பின்னே, திருமணம் ஆன நாளிலிருந்து இறக்கும் தருணம் வரை திருவள்ளுவர் அன்றாடம் உணவு அருந்தும்போது தமதருகில் வைக்கச்சொன்ன ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் எதற்கு என்ற கேள்வியே கேட்காமல் […]
|
|
புதுக்கவிதையின் நோக்கும், போக்கும் Posted: 27 Jul 2016 09:53 AM PDT க.தமிழ் அழகன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசு கலைகல்லூரி, அரியலூர் ஆதி இலக்கியங்கள் கவிதை வடிவின. தொல்காப்பியம் கூறும் செய்யுளியல் இலக்கணம் அவர்காலத்திற்கு முன்னர் எழுந்த இலக்கியங்களின் வடிவங்களை விளக்கும். காரிகை கற்று எவரும் கவிதை இயற்றுவதில்லை. யாப்பருங்கலக்காரிகை எனும் யாப்பிலக்கணநூல் தொல்காப்பியத்திற்கு பின்னர் தோன்றியது. வடிவம் மட்டும் கவிதையாகிவிடாது. தேமா, புளிமா சேர்க்கையோடு எதுகை, மோனையுடன் கருத்துணர்வு நிலையும் சேர்ந்தால்தான் கவிதை உயிர்பெறுகிறது. தற்காலத்தில் கவிஞர்கள் பலர் முற்றிலும், வடிவிலும், பொருளிலும் மாறுபட்டு புதிய பிறவியாகக் காட்சியளிக்கும் புதுக்கவிதைகளை […]
|
|
தமிழ்க்குடில் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டி Posted: 27 Jul 2016 12:50 AM PDT போட்டி எண் 1 – திரு. காமராசர் அவர்களின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டி தலைப்பு : ‘இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்’ விதிமுறைகள்: போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.(பள்ளி மாணவர்கள் தவிர) குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும். படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்கென எழுதி அனுப்பவேண்டும். உங்கள் பார்வையில் நீங்கள் […]
|
|
Posted: 27 Jul 2016 12:35 AM PDT எம்.ரிஷான் ஷெரீப் ‘நான் இருப்பேனா வாழ்வேனா என்பது பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. நாம் எல்லோரும் சாகத்தான் பிறந்திருக்கிறோம் என்பது உண்மை. என் ஆத்மா கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறது. நாம் நினைத்தபடி நாம் வாழ முடியாது; நினைத்தபடி சாகவும் முடியாது. எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. வாழ்வும் சாவும் அவன் கையில் இருக்கிறது. சாவு குறித்து எனக்கு எந்த அச்சமும் இல்லை. இப்போது நான் செய்வதெல்லாம் கடவுளின் விருப்பமும் என் மக்களின் விருப்பமும்தான். […]
|
Posted: 27 Jul 2016 12:03 AM PDT ”பார்த்தனின் தேரேறி பாரதம் செய்,கீதைக் கீர்த்தன வாய்,அல்லிக் கேணியின் -மூர்த்தியே, தாளமிடும், தம்பி தனஞ்செயன் போலெனக்கு, மாலத்தா நட்பாய் மலர்’’….கிரேசி மோகன்…. மாலத்தா -மால் அத்தன்….!
|
|
இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 7 Posted: 26 Jul 2016 05:05 PM PDT அவ்வை மகள் திரிகரணத்தைப் பறைசாற்றும் மும்முகச் சிம்மம் திரிகரண சுத்தியும் அத்வைதமும் வள்ளலாரின் இறைமார்க்கத்தில் இரண்டறக் கலந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது என்றோம். திரிகரண சுத்தியை சைவ சித்தாந்தம் வெகுமிக முக்கியமாக வலியுறுத்தும் பாங்கு வெகு நேர்த்தியான விஷயம். பதஞ்சலி எனும் ஆத்ரேயரிடம் திரிகரணசுத்தியின் வாக்கு வடிவத்தின் ஆரம்பப்புள்ளியைக் காணலாம் என்பர். திருமூலரும் திரிகரண சுத்தியைப் பற்றிப் பகர்வதாகவும் காண்கிறோம். உடல், சொல், மனம் என்கிற மூன்று ஜீவாதார மையங்கள் மனிதனது இயக்கங்களுக்கு ஓயாமல் அடிமைகளாகி, அவனது/அவளது இயக்கங்களால் […]
|
|
பழந்தமிழ்இலக்கியத்தில் இயற்கை நன்னெறிகள் Posted: 26 Jul 2016 05:00 PM PDT முனைவர்(திருமதி)மா.பத்ம பிரியா தனிமனிதனும் அவன் சார்ந்திருக்கும் சமுதாயமும் முழுநிறைவுடன் வாழத்துணைசெய்வது நன்னெறிகள் ஆகும். ‘அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள், மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உறையுளும் அல்லது கண்டது இல்’ என்று மணிமேகலை கூறும் அறக்கருத்தானது சூழல் நோக்கம் கொண்டது. உணவு, உடை, இருப்பிடம் என்ற தேவைகள் நமக்கு கிடைப்பது நம்மை சூழ்ந்திருக்கும் இயற்கையின் பான்மையால் தான். அத்தேவைகள் வழங்கும் தன்மை அறமென்றால் அதன் வரவு தடையில்லாமல் கிடைக்க நாம் இயற்கையின் நலத்தினை மேம்படுத்த வேண்டும். […]
|
|
Posted: 26 Jul 2016 05:00 PM PDT மீ. விசுவநாதன் எதையெதைநாம் பார்த்தாலும் இறையாய்த் தோன்றி இல்லாத இடமில்லை என்றே நிற்கும் ! அதையறியும் ஆற்றலினை எவரே பெற்றார் அணுவாக உள்ளுக்குள் அதனைத் தொட்டார் ! விதையேதும் இல்லாமல் மரமாய் ஓங்கும் ! விளக்கேது மில்லாமல் ஒளியை வீசும் ! கதைபோலக் கேட்டாலும் கருத்தில் நீளும் ! கவிகோடி சொன்னாலும் இன்னும் மிஞ்சும் ! (1) ஆதிசக்தி அவளேதான் அன்று தன்னை அழகான “பாலையாய்” மாற்றிக் கொண்டு ஜோதிமிகு சின்னப்பெண் உயிராய் வந்தாள் ! ஒன்பதுதான் […]
|
|
Posted: 26 Jul 2016 04:59 PM PDT நாகேஸ்வரி அண்ணாமலை அறிஞர் அண்ணா ஆரிய மாயையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல சினிமாவையும் பயன்படுத்தினார். இப்போது சினிமாவே மாயை ஆகிவிட்டது. கபாலி படம் வெளிவருவதற்கு முன்பே எத்தனை ஆர்ப்பாட்டங்கள். சினிமா நடிகர்கள் மீது ஏன் இத்தனை மோகம் நம் மக்களுக்கு? இவர்களுக்கு வேறு எதிலும் பிடிப்பில்லையா? சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த மீடியம்தான். ஆனால் அதையே கதி என்று நினைத்து சினிமா நடிகர்களை வழிபடும் அளவுக்குச் சிலர் போவதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கோ […]
|
|
Posted: 26 Jul 2016 04:51 PM PDT எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா சிரித்து மகிழ்கின்ற நிலையானது மனிதனுக்கு மட்டுமே சிறப்பான ஒன்றாகும். விலங்குகளுக்குச் சிரிக்கத் தெரியாது.மனிதனைப்போன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தவோ அதனை அனுபவிக்கவோ தெரியாது. அதுபற்றி எதுவுமே புரிந்து கொள்ளும்நிலையிலும் அவைகள் இருப்பதில்லை. ஆனால் மனிதர்களில் பலர் தமக்கு கிடைத்த இந்த அருமையான பண்பினை உணருவதே இல்லை. ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற வேளையில் முதலில் அவரைப்பார்த்து ஒரு புன்முறுவலையாவது செய்யவேண்டும். நலமாக இருக்கிறீர்களா என்று ஒரு வார்த்தையாவது பேசமுயலுதல் வேண்டும். இப்படிச் செய்கின்றவர்கள் […]
|
|
இலக்கியம் எழுதாத நட்பு.. (முதல் பகுதி) Posted: 26 Jul 2016 04:34 PM PDT க. பாலசுப்பிரமணியன் இலக்கியம் எழுதாத நட்புக்கு இதயத்தில் காவியம் படைக்கிறேன் ! இலக்கணத்தில் சிறைப்படாத நட்புக்கு இலக்கியம் தேடுகிறேன் ! இயற்கையை இசைக்கின்ற நண்பனின் இசையில் ராகமாய் நிற்கிறேன் ! சொல்லுக்குப் பொருளாய் பொருளுக்குச் சொல்லாய் சுவையூட்டும் சுதந்திரனின் சுவையை ரசிக்கிறேன் ! கண்திரைக்குப் பின்னிருந்து கைப்பிடித்து வழிநடத்தும் கள்வனவன் ! கருத்துக்குள் நுழையாமல் கற்பனையோடு விளையாடும் காலத்தின் தலைவன் ! கடவுளென்ற பெயர் அவனுக்கு .. கற்றவர்கள் சொன்னார்கள் ! […]
|
|
Posted: 26 Jul 2016 03:32 PM PDT சரஸ்வதிராசேந்திரன் சந்தானமும் ,காஞ்சனாவும் ஊரை எதிர்த்து,உறவை பகைத்து திருமணம் செய்துகொண்டவர்கள் ,அதனால் ஒன்றும் பாதகமில்லை சந்தானம் ரியல் எஸ்டேட் பிஸினெஸ் பண்ணி லட்சம் லட்சமாய் சம்பாதித்து வீடு ,கார் என சமூக அந்தஸ்தோடு இருக்கிறான் . அவர்களுக்கு ஒரே மகள் ,,ஊரே வியக்கும் வண்ணம் நூறு பவுன் போட்டு விமர்சையாக திருமணம் செய்ய ஆசைபட்டான் சந்தானம் மனைவியிடம் தன் விருப்பத்தை சொன்னபோது. ‘’இப்ப என்ன அவச்ரம் அவளுக்கு?’’ ‘’உனக்குத் தெரியாது காஞ்சனா ,பெண்ணும் ,கீரைத்தண்டும் முற்றினால் விலை போகாது […]
|
Posted: 28 Jul 2016 03:32 AM PDT ”வீட்டுக்குள் விஸ்வரூபம்’’ ———————————————— ‘’மதிய உதயம் கதிர்மதியம் போல்முகத்தான்’’(மாட்னி ஷோ….!அசோதைக்கு(யசோதை)….! ”அந்தரங்க ராஜன்தன் அன்னை அசோதையை அந்தரங்க மாக அழைத்துப்போய், -தந்திரமாய் வட்டக் கதிர்மதியோன் வாய்பிளந்து காட்டுகிறான் விட்ட உறிக்கு வளர்ந்து’’(விஸ்வரூபம்)….கிரேசி மோகன்…. வளர்ப்பு அன்னைக்கு ஸ்பெஷலாய் வளர்ந்து காட்டுகிறான், அதேசமயம் கண்ணன் இதை சாக்காக வைத்து விட்டத்து உறி தொங்கும் வெண்ணைய்க்கு வேட்டு வைக்கிறானோ மாயாவி….!
|
|
ஆதி சங்கரரின் ‘’நிர்வாண சதகம்’’ Posted: 27 Jul 2016 07:55 PM PDT ஆதி சங்கரரின் ‘’நிர்வாண சதகம்’’ வெண்பாக்களாக முயற்சி….எழுதிய வரையில்….குரு வாரமாக இருப்பதால் ஆரம்பித்தேன் , பகிர்கின்றேன்…. ’’நிர்வாண சதகம்’’….(1) ——————————————- ’’புத்தி, விவேகம், புலனகந்தை, பூர்வஜென்மம் பத்தி அறிவோனும், புலனைந்தாம் -சுத்திவரக் காணும்கண், கைநாக்கு, காதுநாசி, போன்றவைகள் நானல்ல வென்றறிவேன் நன்கு’’…. ‘’நிர்வாண சதகம்’’….(2) ——————————————– ’’அஞ்சும்தீ , அணைக்கும்நீர், ஆகாசம், மண்காற்று பஞ்சபூ தங்கள் பகிர்வதால் -செஞ்சவன் நானல்ல, நித்ய நிர்குண நிராகார ஆனந்தமான அந்த அரன்’’….(2) நிர்வாண சதகம்….3 ——————————— ‘’அஞ்சும் பிராணனல்ல, அஞ்சுவிதக் […]
|
|
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விண்மீன் வெளி வெடிப்பில் நீர்ப்பனி அணிவகுப்புக் காட்சி Posted: 27 Jul 2016 06:16 PM PDT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://youtu.be/lc9D738u2YU https://youtu.be/8YiEm_cqlXc https://youtu.be/e1HA8L6Q3_8 +++++++++++++ ++++++++++++++++++ காந்த விண்மீன்கள் தீவிரக் கதிர்கள் வெளியேற்றும் ! இளம்பரிதிக் கனலில் கோள் உருவாக்க நீர்ப்பனி அணிவகுக்கும் ! பூதள விண்ணோக்கி முதன்முறை நீர்ப்பனி காணும். கோள் உருவாகும் போதே நீர்ப்பனி சேரும். அபூர்வக் காட்சி ! உயிரினத் துக்குச் சீர்கேடு உண்டாக்கும் நியூட்ரான் விண்மீன்கள் ! எரிசக்தி தீர்ந்த பின் வறிய விண்மீனாகி சிறிய தாகிப் பரிதிபோல் திணிவு நிறைப் […]
|
|
15வது உலகத்தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி அரங்கு அமைக்க அழைப்பு Posted: 30 Jul 2016 07:01 AM PDT அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் ஆய்வரங்கம், மக்கள் அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் மாநாடு நடைபெற உள்ளது. கண்காட்சி அரங்கம் 15 வது உலகத்தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டவுள்ளது. அது மாநாடு […]
|
Posted: 30 Jul 2016 12:19 AM PDT ”பெருந்தாய் அழைத்திட பாற்கடல் விட்டு விருந்தா வனத்திற்க்கு வந்தான் -கருந்தா மரைக்கண்ணன் மாதவன் மாம்பழ வாயன் தரைக்குவந்த தாமோ தரன்’’….கிரேசி மோகன்…. வழக்கமாக ‘’பழம் நழுவிப் பாலில் விழும்’’ இங்கோ ‘’பாலில்(பாற்கடலில்) இருந்த பழம் நழுவி’’ யசோதையிடம் வந்தது…. ‘’மாம்பழ வாயினிலே குழலிசை வன்மை புகழ்ந்திடுவோம்’’ ’’கண்ணன் என் தோழன்’’ என்ற மகாகவி பாரதியாரின் பிரயோகம்…. வாயடைத்த மல்கோவா -யசோதை வாய் பிளந்து காண அந்த வாயடைக்க விஸ்வரூபம் காட்டிய வள்ளல்(பேகனே) கண்ணன்…. ”பாம்பணைப்பை விட்டு பரிவோ(டு) […]
|
|
Posted: 28 Jul 2016 05:00 PM PDT அவ்வை மகள் பெண்ணின் மூலாதாரக்கனலில் அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் பெண்ணின் பெரினியத்தை அக்கினிப் பாண்டம் என்கிறோம் – படைப்பாற்றலின் குண்டமாக – பாத்திரமாக – செயல்படுவதால் அங்கே உஷ்ணம் உற்பத்தியாகிறது என்றோம். இந்த அக்கினி என்பது – எத்தகையது என்று பார்த்தால் அது ஒரு எண்ணெய் விளக்கைப் போன்றது. திரிபோட்டு, எண்ணெய் விட்டு ஏற்றப்பட்ட விளக்கு எவ்வாறு எரிந்து வெப்பம் தருகிறதோ அதுபோன்றே பெரினியத்தின் உள்ளே விளக்கின் அழல் போல் கனல் தோன்றி அங்கே வெப்ப […]
|
|
Posted: 29 Jul 2016 09:24 AM PDT காயத்ரி பூபதி சிந்தை முழுக்க நிறைந்தவள் சின்னஞ் சிறு குழந்தை யவள் சிறு நுதல் பேரொளியாய் குவி இதழ் குறு நகையாய் பூப் போன்ற புன்னகையால் அன்றலர்ந்த மலர் போல வான் முகம் சிவக்க இசைந்தாடும் சலங்கை ஒலிக்க அசைந்தாடும் தென்ற லென குறுநடையே கலை யென நடை பயிலும் சிலையழகே என் மகளே! என் மகளே! குவளை செவ்வாய் முத்தழகே! புவி சிறக்க நடைபயில்வாய் மகளே நடை பயில்வாய்! தத்தி தத்தி தடுமாறினாலும் தடம் மாறாமல் […]
|
Posted: 29 Jul 2016 04:48 AM PDT ”பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம் முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய் கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக் கண்ணனை நெஞ்சே கருது”…. ”நாவல் நிறத்தவனே, நாலாயிரம் போற்றிடும் காவலில் தோன்றிய கண்ணனே, -தாவலால் விட்டகன்றாய் அத்வைதம், வந்தாய் விசிஷ்டனாய், வெட்டுநீ துண்டிரெண்டா வோம்’’….கிரேசி மோகன்….
|
|
Posted: 29 Jul 2016 04:43 AM PDT கவியோகி வேதம் எத்தனை அழகு! எத்தனை அமைதி! ..இறைவனின் சன்னதியில்! முத்தெனும் பல்லின் ஒளியில் மூழ்கினன் …முருகனின் தண்ணருளில்! . எத்தனை முயன்றும் சொல்லே வரலையே?! … எங்ஙனம் பாடிடுவேன்? சத்தினை உறிஞ்சிய தலைவனின் அருளையே ….சாரமாய் நாடிடுதே!! ., சூடவே தொடுத்த மாலையும் நழுவித்– ..தொலைவில் போனதுவே! .பாடவே எடுத்த பல்லவி மறந்ததே, ……பதட்டம் ஆனதுவே! . கண்ணின் வீச்சில் உலகம் மறந்தது; …கவலையும் பறந்ததுவே!! தண்ணருள் புன்னகை முழுதுமே என்னைச் சக்கையாய்ச் செய்ததுவே! […]
|
|
Posted: 28 Jul 2016 11:49 PM PDT ராஜகவி ராகில் தாளம் தப்பினாலும் சுருதி விலகினாலும் சரியான சங்கீதம் காதல் பூமியில் நீ வானம் காதல்தான் சிறகு விண்மீன்கள் எண்ணிக்கை கேட்டால் மிக இலகுவாகச் சொல்வாய் உன்னிடம் இருக்கும் காதல் உச்சரித்த கணக்கு காதல் இளமையான முதுமை காதலுக்கு கூந்தல் இருந்தால் இலட்சம் கோடி ஆண்டுகளானாலும் கறுப்புத்தான் காதல் வந்த பின் அந்தவினாடியில் அத்தனையும் மறந்து போய் விடும் காதலைத் தவிர காதல் முள் அதில் […]
|
|
ஒளிரும் சாலையில் பிரகாசப் பயணம் Posted: 28 Jul 2016 11:47 PM PDT ராஜகவி ராகில் மனசெல்லாம் ரோஜாப் பூக்களைவிட லட்சம் மடங்கு நறுமணம் பக்தியோடு இருக்கும் போது . இதயம் உருகி உருகி இறைநாமம் உச்சரிக்கிறேன் பனித் துளி மென்மையை பின்தள்ளுகிறது என் இதயம் . பாவ நச்சு இருளுக்கு எனது வானத்தில் இடமில்லை என்றால் உயிருள்ள ஒளி நான் . சொர்க்கத்தை அடைகின்ற சிறகு வணக்கம் . இந்த உலகம் ஆகப் பெரிய பொய் என்று நம்புகின்ற போது மிகப் பெரிய மெய்யாகிறேன் நான் . இன்னொரு […]
|
|
Posted: 28 Jul 2016 05:10 PM PDT விவேக்பாரதி நேரிசை ஆசிரியப்பா கதிரவ னுதியாக் கருநிறக் காலை சதிர்படு மந்தச் சமவெளிப் பனியின் பால்நிற மன்ன படுவழ கோடே கால்நிற முள்ளக் கருநிற நாராய் ! பெறுமல கதிலே பேருரு கொண்ட உறுமீ னேந்தி யுச்சியிற் செல்வாய் ! உனதருங் கூட்ட மோய்விட மெல்லா மெனதருந் தலைவ ! னேவு கணையன் ! விண்ணளந் திட்ட விசையன் ! வீரன் ! கண்ணினி லதனைக் காட்டா மனிதன் ! அப்துல் கலாமெனு மதிசயக் […]
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (8) Posted: 28 Jul 2016 05:05 PM PDT இசைக்கவி ரமணன் திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (7) பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ்வார் (6) ஐம்பொறிகளின் வழியாக உண்டாகும் ஆசைகளை அகற்றி, கடவுளின் பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நீண்ட காலம் வாழ்வார். புலன்களும் பொறிகளும் யாரிடமிருந்து வந்தன? இறைவனிடமிருந்துதானே? ஆனால் அவனோ பொறிவாயில் ஐந்தவித்தான்! அவனைத் தொழுதால் நமக்கும் அப்படித்தான். மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசம் என்ன? இறைவன் தன்னில் தானாய் நிலைத்தவன். மனிதன் பொறிவழி மனம் சென்று எங்கும் […]
|
|
Posted: 28 Jul 2016 05:02 PM PDT சரஸ்வதி ராசேந்திரன் ‘’என்னங்க. பேசாமலேயே உட்கார்ந்திருக்கீங்க,கடன்காரன் எப்படி திட்டிட்டுப் போனான் , ஒரு வாரத்துக்குள்ளே பணத்தை கொடுக்கலைன்னா சாமானெல்லாம் ரோட்டுக்கு வந்திடும்னு சொல்லிட்டுப்போறான் நீங்க என்னடான்னா…’’’ கீதா சொல்ல ‘’எனக்கு என்ன காது செவிடா? இல்லே தமிழ் தெரியாதா? வேற மொழியில சொன்னமாதிரி மொழி பெயர்க்கிறாயா?எல்லாம் காதுல விழுந்துது ‘’எரிந்து விழுந்தான் வினோத் ‘’என்ன செய்யப்போறீங்க’’ ‘’ ஒரு வாரம் இருக்கில்லே யோசனை பண்ணுவோம் ‘’ தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டு பார்த்தான் கிடைக்க வில்லை நாள் […]
|
|
Posted: 28 Jul 2016 05:00 PM PDT |
விவேக்பாரதி தனனதந்த தத்தத்த தந்த …தனனதந்த தத்தத்த தந்த ……தனனதந்த தத்தத்த தந்த – தனதானா ! மணமறிந்த தெத்திக்கு மந்த …மதுவருந்த தித்தித்த வண்டு ……மதிமயங்கி சுற்றித்தி ரிந்த – மலரோடு மரமுவந்து கொட்டிக்க னிந்த …மணியிலிங்கு மொத்திட்ட தென்றல் ……மகிழவந்து கட்டிப்பு ரண்ட – கனியோடு கணமுமிங்கு சுற்றிக்கி டந்த …கடுமைகல்லின் செக்குற்ற எண்ணெய் ……கமழவந்து பற்றித்தி கழ்ந்த – அகலோடு கடவுளென்னு மொப்பற்ற வொன்று […]
|
|
Posted: 28 Jul 2016 05:00 PM PDT |
எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா அன்பைநடு அறிவைநடு ஆணவத்தை அகற்று இன்பைநடு ஈகையைநடு எண்ணமதை திருத்து உண்மைநடு உழைப்புநடு ஊழலினை விரட்டு உன்மனதில் இலட்சியத்தை ஊன்றிநின்று நடு ! இலக்கியத்தை என்னாளும் இங்கிதமாய் நடு நிலத்திலுள்ள மாந்தரிடம் நிம்மதியை நடு உனக்குதவி செய்வாரை உள்ளமதில் நடு உண்மையது யாவருக்கும் உதவுமென்று நடு ! களவுதனைக் கழைந்துவிட்டு கண்ணியத்தை நடு காதலுடன் வாழ்வெலாம் கல்விதனை நடு கடவுள்பற்றி நினைக்கின்ற கருத்தினையும் […]
|
|
தெய்வ தரிசனம்: ஆடிக் கிருத்திகை: முருகன் துதி Posted: 28 Jul 2016 04:59 PM PDT ரமணி தெய்வ தரிசனம்: ஆடிக் கிருத்திகை: முருகன் துதி (எழுசீர்ச் சந்த விருத்தம்: தான/தனன தானன/தனன தான/தனன தானன/தனன . தான/தனன தானன/தனன தானனா) ஆறு படைகளில் ஆல யங்கொளும் ஆறு மாமுக வேலனே ஏறு மாமயில் சேரும் மாவிணை ஈச னுமைமகன் பாலனே கூறு மாவடி யார்ம னத்தினில் கோலம் கொண்டமர் குமரனே சேறு வொன்றையே சீந்து மென்மனம் சேயெ னக்கருள் அமரனே. … 1 (2) [மாவிணை = அழகிய இரு மனைவியர்] ஓது […]
|
|
தொல்காப்பிய அளவியலும் சங்கக் கவிதை மரபும் Posted: 28 Jul 2016 04:35 PM PDT முனைவர் ப. தமிழரசி, பேராசிரியர் மற்றும் தலைவர், கற்பகம் பல்கலைக்கழகம், கோவை – 21. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே (மாணிக்கவாசகர்) என்ற மாணிக்கவாசகரின் வரிகள் மேற்கண்ட தலைப்புக்கு முற்றும் பொருந்தும். தமிழனின் மிகப்பழம் இலக்கண, இலக்கியங்களான தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் நீண்ட நெடிய தமிழ் இலக்கிய செழுமையில் கரைந்து, மறைந்து விடாது தனக்கென தனித்த இடத்தை இன்று வரை தக்க வைத்துத் தகவமைத்துக் கொண்டுள்ளன என்பதே அதன் பெருமைக்குச் சான்றாகும். இன்று நமக்கு கிடைக்கும் தமிழ் நூல்களில் மிகப்பழமையானது தொல்காப்பியமே. மனித வரலாற்றின் […]
|
|
இலக்கியம் எழுதாத நட்பு (இரண்டாம் பகுதி) Posted: 28 Jul 2016 03:55 PM PDT க. பாலசுப்பிரமணியன் நண்பனே ! நமது அமைதியான பயணத்தில் ஆயிரம் கேள்விகள்.. என் உள்ளத்தில் … நண்பனே, நீ எதை நேசிக்கிறாய்? என் உடலையா ? அல்லது உயிரையா? உயிரின்றி இந்த உடலுக்கு என்ன பொருள்? உடல் என்றால் என்ன? உடலுக்குள் உயிரா ? உயிரால் உணர்வுற்ற உடலா? உடல்… எலும்புத் துண்டுகளை.. இசைவாய் காற்றினில் அடுக்கி.. ஈரக் காற்றில் .. மிதக்க விட்ட மாளிகையா? எங்கேயோ மிதக்கும் […]
|
vallamai |
|
Posted: 31 Jul 2016 02:27 AM PDT ”உருவமன்று மாய அருவமன்று, ஆனால் திருவுண்டு மார்பில் திடமாய், -கருவண்டு எண்ண அநேகமவன் எண்ணா தவர்க்(கு)ஏகக், கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்…
|
|
Posted: 30 Jul 2016 05:01 PM PDT மீ.விசுவநாதன் சிவனே சிவனே உனைத்தேடி – நான் சிவலோகம் வரலாமா? மகனே மகனே வரவேண்டாம் – உன் மனம்தானே சிவலோகம் ! அரனே அரனே உன்மேனி – எழில் அரவாய்நான் வரலாமா? அசடே அசடே வரவேண்டாம் -“நா” அசைவுதானே அரவுருவம் ! அருவும் உருவும் இல்லானே – உனை அறிந்திடவே முடியாதா ? இருளில் இருந்து வெளியேவா – என் இருப்பைத்தான் அறிவாய்நீ ! பஞ்ச பூத வடிவோனே – உன் பயனென்ன உரைப்பாயா ? கொஞ்சம் வயது போகட்டும் […]
|
|
Posted: 01 Aug 2016 10:07 AM PDT முனிவர்கள் கூடி மெளனம் காத்திட தனி ஆவர்த்தனம் நந்தி முழங்கிட பனி மலை வாசன் பார்வதி யுடனிம் மனிதனில் தாண்டவம் ஆட வருகவே….(1) முகார விந்தம் முறுவல் பூத்திட அகார,உகார,மகார அம்பிகை அகோர மூர்த்தியை அணைத்து என்மன விஹாரில் தாண்டவம் ஆட வருகவே….(2) துந்துபி முழங்க டமருகம் ஒலிக்க கந்தன் கணபதி கைக்கட்டி நிற்க எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியென் சிந்தையில் தாண்டவம் ஆட வருகவே….(3) மாலவன் சங்க நாதம் ஊதிட நாலு முகன் நல்வேதம் ஓதிட […]
|
|
Posted: 01 Aug 2016 10:03 AM PDT ‘’புனரபி ஜனனம்’’ ————————————– ’’ஆடிப் பெருக்கினாலும், ஆடா(து) இளைத்தாலும், வாடி வதங்கிடும் வாழ்விது – கூடி இருக்கையில் இன்பம், பிரிகையில் துன்பம், கருப்பையில் மீண்டும் குதிப்பு’’….கிரேசி மோகன்….
|
|
படக்கவிதைப் போட்டி 74 – இன் முடிவுகள் Posted: 01 Aug 2016 12:20 AM PDT இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் பிரேம்நாத் திருமலைசாமி. இதனை போட்டிக்கு தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள். இந்த வார ஒளிபடத்தில் இடம்பெற்றிருப்பவர் தன்னிடம் அடைக்களம் நாடி வந்த ஆட்டுக்குட்டிக்கு ஆதரவு கரம் நீட்டும் மூதாட்டி. இம் மூதாட்டிக்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி, கருணையின் வடிவமாக, தன்னை தோண்டுபவரையும் தாங்கிக் கொள்ளும் மண்ணிற்கும், கைம்மாறு கருதாமல் பொழியும் […]
|
Posted: 31 Jul 2016 11:40 PM PDT ”புல்லாண்டு மேய்ந்து பொழுதைக் கழிக்காது, மல்லாண்டோன் தோளில் மயங்குது, -சொல்லாண்ட ஆழ்வார்கள் பாடிய ஆயிர நாமன்தோள் வீழ்வோர்க்கு வீடு வனம்’’….கிரேசி மோகன்….
|
|
Posted: 31 Jul 2016 05:05 PM PDT விவேக்பாரதி தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம் – தந்ததானா ! முன்புதம தன்பனுஞ் சந்திரனு மிங்ஙணம் …முந்திவர வென்றதும் – தன்றனோடு முள்ளநகை தன்னையும் விண்ணுலவ நல்கி,நம் …முல்லையிலொ ளிர்ந்திடுஞ் – சம்புமாரி ! துன்பமது மெங்கிலுந் துண்டெனநொ றுங்கிடுந் ! …துள்ளிவரு மன்பனின் – பிள்ளைகேவத் துங்கமுள கொங்கையின் நல்லமுது தந்தவன் …துஞ்சிடவ மர்ந்த்துஞ் – சம்புமாரி ! கன்றதும யங்கிடுங் கண்ணிமன மின்புறுங் …கந்துகமெ ரிந்திடுஞ் – சந்தராகங் கண்டவழி […]
|
|
Posted: 31 Jul 2016 05:04 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? முபாரக் அலி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (06.08.2016) வரை உங்கள் கவிதைகளை […]
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை ..(9) Posted: 31 Jul 2016 05:00 PM PDT இசைக்கவி ரமணன் திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (8) தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது (7) தனக்கு ஒப்பு இல்லாத கடவுளின் திருவடிகள் அடைந்தவருக்கு அல்லாமல், மற்றவருக்கு மனக்கவலையைப் போக்க முடியாது. சொற்பொருள் தாள் = காகிதம், பாதம் கவலை = கவலுதல், ஒன்று, இரண்டாகப் பிரிதல். என் மனம் கவல்கிறதே. கவலை என்பது இருமை அரிது = சாத்தியமன்று ஆங்கில இணைச் சொற்கள் தனக்கு உவமை இல்லாதான் = Peerless […]
|
|
இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-23 Posted: 31 Jul 2016 04:59 PM PDT மீனாட்சி பாலகணேஷ் உண்ணாமுலைக்கு எந்தமலை ஒப்பாகும்? பிள்ளைத்தமிழ் இலக்கியங்களின் அழகே ஒவ்வொரு பருவத்துப் பாடல்களிலும் புலவர்களால் புனைந்து கூறப்படும் ரசமான சிறுசிறு நிகழ்ச்சிகளும் நயம்மிகுந்த அணிகளும்தான். சொற்பின்வரு நிலையணியைக் கையாண்டு சுவைபடக் கவிபுனைவதில் உண்ணாமலையம்மை பிள்ளைத்தமிழினைப் படைத்த சோணாசல பாரதியார் முதன்மையிடம் வகிக்கிறார் எனலாம். ஒவ்வொரு பருவத்திலும் மலை, மான், புலி, பாணி, முத்து, போன்ற சொற்களை அழகுறப் பொருத்தமாகத் திரும்பத்திரும்பக் கையாண்டு புலவனார் படைத்துள்ள பாடல்கள் பயில்வோர் உள்ளங்களை மிகுந்த உவகையில் ஆழ்த்துகின்றன. இக்கட்டுரையில் அத்தகைய […]
|
|
Posted: 31 Jul 2016 04:22 PM PDT நிர்மலா ராகவன் மாமனார் மெச்சிய மருமகன் `என் கணவரோட அண்ணனை இப்போ பாத்தா, சுட்டுக் கொன்னுடுவேன்!’ நானும் என் சிநேகிதி மாதங்கியும் காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். மூன்று மணி நேரப் பயணம். அரை மணி நேரம் ஏதேதோ பேசிவிட்டு, அவள் தன் திருமணக் கதையை விவரிக்க ஆரம்பித்தாள். பாதியில், ஆத்திரத்துடன் தன் கொலைவெறியை வெளிப்படுத்தினாள். அப்படி என்னதான் ஆகிவிட்டது? தந்தையின் செல்லப்பெண் குடும்பத்தில் கடைக்குட்டியான மாதங்கி. அயல் நாடுகளில் பத்து வருட கல்லூரிப் படிப்பு படித்திருந்தாலும், ஆண்களுடன் […]
|
|
Posted: 31 Jul 2016 04:02 PM PDT செண்பக ஜெகதீசன் விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல் கற்றாரோ டேனை யவர். -திருக்குறள் -410(கல்லாமை) புதுக் கவிதையில்… அறிவுதரும் நூல்பல கற்றவரேர்டு கல்லாதவரை ஒப்பிடுகையில், கல்லாதவர் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்குமுள்ள வேறுபாட்டை உடையோரே…! குறும்பாவில்… கல்லாதவரை அறிவுநூல் பலவும் கற்றவரோடு ஒப்பிடுகையில், விலங்குக்கும் மனிதருக்குமுள்ள வேறுபாடுதான்…! மரபுக் கவிதையில்… அறிவைத் தந்திடும் நூல்பலவும் ஆர்வ முடனே கற்றவரை, நெறிமுறை யில்லாக் கல்லாரொடு நேர்மை யாக ஒப்பிட்டால், அறிந்து கொள்வாய் உண்மைதனை ஐந்தே […]
|
|
Posted: 31 Jul 2016 04:00 PM PDT மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை மலர்சபா புகழ்மிக்க அரசன் கரிகாலன் மகள் ஆதிநந்தி. வஞ்சி நகரத்தின் தலைவன் அவள் கணவன் ஆட்டனத்தியைக் காவிரி நீர் அடித்துச் சென்றது. ஆதிமந்தி ஆறு ஓடும் வழியாகத் தானும் ஓடிச்சென்று, “கல்லைப்போன்ற தோள்உடையவனே! நீ எங்கே இருக்கிறாய்?” எனக் கூவிப் பலமுறை அரற்ற, கடல் உடனே ஆட்டனத்தியை அவள் முன் நிறுத்தியது. காதலனைத் தழுவிக்கொண்டு பொற்கொடி போல வந்த அவளும் ஒரு பத்தினிப் பெண். மணல் […]
|
|
Posted: 31 Jul 2016 03:34 PM PDT க. பாலசுப்பிரமணியன் வகுப்பறை ஒரு நாடக மேடை பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான கற்றலின் முறையில் அதிகமான ஈடுபாடு இருக்கும். இதன் பொருள் அவர்கள் மற்ற முறைகளில் கற்றுக்கொள்வதில்லையென்றோ அல்லது மற்ற முறைகளில் அவர்களுக்கு அறிமுகம் அல்லது பழக்கம் இல்லை என்றோ கூறிவிட முடியாது. மேற்கூறப்பட்ட எல்லா முறைகளும் அனைவரிடமும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இருக்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் தங்களுக்கு உகந்த முறையில் கற்றலைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.. ஆகவே, வீடுகளில் குழந்தைகளின் படிப்பு முறைகளிலும் வகுப்பறைகளில் […]
|
|
Posted: 02 Aug 2016 08:59 AM PDT An Eternal Child Playing An Eternal Game in an Eternal Garden-AUROBINDHO…. ”சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே எந்தையே ஏகாந்த ஏகமே -விந்தையே தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில் சீராக ஆடிடும் சேய்’’…. ‘’வந்தாலும் , போனாலும், வந்துவந்து போகின்ற, அந்தாளு நானில்லை அன்பரே, -பந்தாடும், தேகான்ம பாவம் தெருகிரிக்கெட், விட்டுலக, ஏகாக்ர WORLD-CUPபுக்(கு) ஏங்கு’’….கிரேசி மோகன்..
|
|
Posted: 02 Aug 2016 03:23 AM PDT இன்று ஆடிப் பெருக்கு, அம்மாவாசை, குருப்பெயர்ச்சி ,மூன்றும் சேர்ந்து வருவது காலெண்டர் பார்க்கும் அனைவரும் அறிந்ததே…. எங்கள் குடும்பம் மட்டுமே அறிந்தது….நான்காவது ஒற்றுமை எனது ‘’அம்மாவின்’’ திவசம்….பஞ்சாங்கப் படி….வருடத்திற்க்கு ஒருமுறை வரும் ‘’அதிதி தேவொ பவ’’ அவள்…. ‘’ஆடிப் பெருக்கம்மா ஆசை குருபெயர்ச்சி கூடி வருகதென்று காலெண்டர் -கோடிட, ஆகஸ்ட் இரண்டின்று ,அம்மா சிரார்த்தம் ஆGUESTபஞ் சாங்கி அவள்’’….கிரேசி மோகன்….
|
Posted: 01 Aug 2016 10:05 PM PDT செ. இரா.செல்வக்குமார் இப்பதிவு சூலை 18, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, 2016 ஆண்டுக்கான கார்னிகி கார்ப்பொரேசன் கிரேட்டு இம்மிகிரண்டு (பெரும்புகழீட்டிய குடியேறியவர்) விருது பெற்ற திரு. அரி சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஒவ்வொரு ஆண்டும் கார்னிகி நிறுவனத்தார் பெரும்புகழ் ஈட்டிய குடியேறிய அமெரிக்கர்களுக்கு விருதுகள் வழங்குகின்றார்கள். 2016 இல் நான்கு இந்திய கொடிவழி குடியேறிகளுக்கு இவ்விருது வழங்கப்பெற்றது. 30 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 42 பேர் இவ்விருதைப் பெற்றார்கள். இந்தியர்களில் கூகுளின் சுந்தர் […]
|
Posted: 03 Aug 2016 02:56 AM PDT ’’பாதஸாரிக் கன்றவர் பின்சென்று மேயுது நாதரிசை கேட்டபடி நீட்டுது, -காதிரெண்டை: ராஹிமால்ட் கண்ணனால் ராகம் விலகிடும்: பாஹிமாம் பாதாம் புஜம்’’….கிரேசி மோகன்…. ராஹிமால்ட் -அந்த காலத்து குழந்தைகள் பானம்(காப்பி சாப்டாதே மோஹன்….கேசரி ராஹிமால்ட் சாப்டு-என் பாட்டியின் குரல் கேட்கிறது….) ராகம் -ராகத்துவேஷ வகையறா….
|
|
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை – 2016 Posted: 02 Aug 2016 06:10 PM PDT ஸ்டாலின் குணசேகரன்
|
|
Posted: 02 Aug 2016 05:55 PM PDT மந்தவெளி மாரிச்செட்டி தெரு ஸ்ரீனிவாசப் பெருமாள்…. ——————————— இந்த பெருமாளைப் பத்தி சொல்லியே ஆகணும்….உப்பிலியப்பன் எங்க குலதெய்வம்னா, இவர் எங்க காவல் தெய்வம்….25வயசு வரை எனக்கு பரிட்சை ரிஸல்ட் வந்தாலும் சரி….காலில் சிரங்கு வந்தாலும் சரி…..என்னோட தந்தை வழி பாட்டி நாலணா உண்டில போட்டுட்டு ,இந்த பெருமாளைத்தான் நம்புவோ….கோமுட்டிச் செட்டியார் கைங்கரியத்துல இந்த மந்தவெளி மாரிச்செட்டி தெரு வெங்கடாசலபதி திருப்பணி நடக்கறது….இந்தக் கோயில் தாயார் சாக்ஷாத் பராசக்தி….பச்சை கலர் புடவையை இவளுக்கு சாத்திட்டு ‘’பில்-கேட்ஸ்’’ ஆகணும்னு வேண்டிண்டாலும் […]
|
|
Posted: 02 Aug 2016 05:02 PM PDT எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா புலம்பெயர்ந்து வந்தாலும் புலனெல்லாம் பிறந்தமண்ணில் நலங்கள்பல இங்கிருந்தும் நம்மனமோ வெறுமைநிலை உளம்மகிழ வாழவெண்ணி உழைக்கின்றோம் ஓய்தலின்றி உளமகிழ்வோ சிலநேரம் உளநெகிழ்வோ பலநேரம் மனம்முழுக்க ஊரையெண்ணி மெளனித்தே நிற்கிறதே ! […]
|
|
Posted: 02 Aug 2016 05:01 PM PDT ராஜகவி ராகில் வாடாத வரம் பெறும் அன்னை மீது விழுந்த பூ தாயின் நா கொண்டு சேர்க்கத்தான் பூக்களில் தேனும் தேனீயும் படைத்தான் இறைவன் பட்டு மலர் பஞ்சு மெத்தைகள் சாய ஆசைப்படும் இடம் அன்னை மடி ஓர் ஆலயத்தை விட புனிதமானது அன்னை உடுத்த சேலை அம்மா முகம் பார்த்திடின் எமனுக்கு தோணவே தோணாது அவள் உயிர் பறிக்க தாய் தாலாட்டின் பின்னே கை கட்டி நிற்கும் புகழ் பூத்த புலவன் கவிதை […]
|
|
Posted: 02 Aug 2016 05:01 PM PDT எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா தப்பாகப் போகாமல் தடுத்திடுவார் எங்களப்பா எப்போதும் எம்நினைப்பாய் இருந்திடுவார் எங்களப்பா அப்பாவி போலவர் அயலார்க்குத் தோன்றிடினும் அப்பாவின் அறிவுத்திறன் ஆருக்கும் இல்லையென்போம் ! ஆங்கிலத்தைப் பேசுகின்ற ஆற்றலில்லா எங்களப்பா அழகுதமிழ் பேசிநின்றால் அனைவருமே அசந்திடுவர் பட்டிமன்றம் கவியரங்கம் ஏறிநிற்பார் எங்களப்பா பரவசமாய் அவர்படையல் பாங்குடனே வந்துநிற்கும் ! ஆடம்பரம் அறியாமல் வளர்ந்துவிட்டார் எங்களப்பா அறிவுடனே ஆராயும் ஆற்றலுள்ளார் எங்களப்பா வீணான வார்த்தைகளை விரும்பாதார் […]
|
|
Posted: 02 Aug 2016 05:00 PM PDT ரா.பார்த்தசாரதி பனிபடர்ந்த மலையின் மேலே அழகினை கண்டு நின்றேன் சிலைபோலே , பச்சை வண்ணப்போர்வை மலைமகளை சுற்றிட, நடுவே சுற்றி, நெளிந்து வாகனங்கள் சென்றிட ! பச்சைவண்ண என்றும் கண்களுக்கு குளிர்ச்சி அதுவே மனிதனின் மனதிற்கு தரும் புத்துணர்ச்சி ! இயற்கை அன்னையின் அழகினை ரசித்தோமே மனமகிழ்ச்சி கொண்டு மனதினில் பூரிப்படைதோமே! மலைமேல் கதிரவன் ஒளி பட்டாலே வெண்ணிற பனிமலை தன் வெண்ணிறாடை நீக்காமலே ! ஒளிர்ந்து தென்றல் காற்று வீசியதே அருவியும், சிற்றோடையும் நடனமாடி வந்ததே ! […]
|
|
குயிலி, உன்றன் திருநடம் கண்டிடப் பெற்றேன் Posted: 02 Aug 2016 04:37 PM PDT மறவன்புலவு க. சச்சிதானந்தன் யாழ் மகள் அழுதாள், விடுதலை பெறுவாள் என்ற வரிகளை வண்ணமாக்கியவர் குயிலி. வரிகளை எழுதியவர் அருள்மொழி. ஈழத் துயரத்தைக் காட்ட அழுதேன், விடிவு வரும் எனக் கண்டும் கேட்டும் மகிழ்நீர் சொரிந்தேன். பெண் எனும் பேராற்றல் எனும் எண்ணம் தந்தவர் அருள் மொழி, வண்ணம் தந்தவர் நர்த்தகி நடராசர், நடனம் தந்தவர் குயிலி. சென்னை மயிலாப்பூர், பாரதிய வித்திய பவன் அரங்கம். 2047 ஆடி 2 (17.07.2016) காலை 10 மணி தொடக்கம் […]
|
Posted: 05 Aug 2016 02:33 AM PDT ”BAMBOO NOTES”…. —————————————— கேசவ் ஓவியத்தைப் பார்த்த்வுடன் நினைவுக்கு வந்தது ‘’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’’ கவிஞர் கண்ணதாசர் அவர்களின் ‘’கிருஷ்ண கானம்”….! ‘’பேம்பூ(Bamboo) கொடுத்து வந்த புல்லாங் குழல்புருஷன் மாம்பூ(மாம்பழவாய்)வாய் பட்டின்று மோதியதால் -தாம்பூலம் போலச் சிவந்து பிரவுன்(Brown) நிறமிழப்பு, பால்பசு போயங்கு பேர்(BEAR)’’….கிரேசி மோகன்….
|
|
பெருமாளின் த்வாதச நாமத் துதி…. Posted: 05 Aug 2016 12:28 AM PDT அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி…. இன்று ஆரம்பம்….முதல் மூன்று நாமங்கள் ‘’கேசவா, நாராயணா, மாதவா’’…. “கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”….. “களமுற பார்த்தனின் கலவர வேர்த்தலைக் கழுவிடு தீர்த்தமாம் கீதையதால் உளமுரம் கூட்டினை ஒருரதம் ஓட்டினை பலமுற காட்டினை பாதையதை பொலபொல என்றுதி காலையை முந்திடும் பரவசக் கோதையின் பாசுரத்தால் அலைகடல் விட்டுயர் பட்டரின் பெட்டையை கட்டிடக் கேட்டிடும் கேசவனே”….(1) […]
|
|
Posted: 05 Aug 2016 12:25 AM PDT மீ. விசுவநாதன் பெற்ற உதவியை மறப்பதும் உற்ற துணைதனை இழப்பதும் – மனமே கற்ற வழியெது எண்ணுவாய் – தீ தற்ற மொழியிலே சொல்லுவாய் ! நித்தம் கவலையில் திளைப்பதும் சுத்த நினைவினை இழப்பதும் – மனமே சித்தம் அறிந்துடன் காட்டுவாய் – உன் குத்தம் குறைகளைக் கொட்டுவாய் ! உருவில் அழகினைக் கருதியும் அருகில் பணத்தது புழுதியும் – மனமே உருகி உருகியே கொஞ்சுவாய் – உயிர் திருகித் தவிகையில் அஞ்சுவாய் ! நீரில் […]
|
|
இலக்கியம் எழுதாத நட்பு .. (ஐந்தாம் பகுதி ) Posted: 04 Aug 2016 10:35 PM PDT க. பாலசுப்பிரமணியன் நண்பனே… கொஞ்சம் நில்… என் இன்பக்கோட்டையின் வாயிலின் கதவுகளை யாரோ தட்டுகிறார்கள் ! ஏன் நண்பா சிரிக்கின்றாய்? உனக்கு அவர்களை அடையாளம் தெரியுமா? உருக்குலைந்த உடல்கள் ஒன்றாய் .சேர்ந்ததுபோல்.. உருத்தெரியாத உருவங்கள் நடுக்காட்டில் ஓலமிட்டது போல்…… அந்த ஒலி ஏன் புரியாத பயத்திற்கு முன்னுரை எழுதுகிறது? பனிக்குள் புதைந்த நெருப்பைப்போல் .. இளமைக்குள் மறைந்த முதுமை போல் இருளுக்குள் ஒளிந்த பயத்தைப் போல் .. நம்பிக்கையின் வேர்களில்.. நச்சை உமிழ்ந்துகொண்டு… காலங்கள் காத்து […]
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை ..(10) Posted: 04 Aug 2016 05:07 PM PDT இசைக்கவி ரமணன் திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை ..(9) அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்த லரிது (8) அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளை அடைந்தாருக்கு அல்லாமல், மற்றவர் பொருள், இன்பமாகிய பிற கடல்களைக் கடக்க முடியாது. ‘தருமத்தின் பாதை சூட்சுமமானது, கரடுமுரடானது` என்று மகாபாரதம் சொல்லும். அறம் என்பது பல பொருள் கொண்டது. காலம், இடம், சூழல், மனிதனின் நிலை இவற்றுக்கேற்பப் பொருள் மாறுவது. மிகவும் விரிந்தது. மிக மிக நுண்மையானது. இறைவனுக்குச் சொல்லப்படும் பல […]
|
|
Posted: 04 Aug 2016 05:00 PM PDT நிர்மலா ராகவன் பூங்கோதையின் அருகே சிறியதொரு மரக்கட்டிலில் கண்ணை மூடிப் படுத்திருந்தது அவனது முதல் சிசு. `அது இனி கண்ணைத் திறந்தாலும் ஒன்றுதான், மூடினாலும் ஒன்றுதான்!’ என்று நினைக்கும் போதே ஏதோ நெஞ்சை அடைத்துக்கொண்டது. “ஒங்களுக்கு நான் என்ன கொறை வெச்சேன்? இப்படிப் பண்ணிட்டீங்களே!” யாராவது ஏதாவது கேட்டால், ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசும் பூங்கோதை அன்றுதான் முதன்முதலாக அவ்வளவு ஆக்ரோஷத்துடன், சுயமாகப் பேசினாள். அதுவும் கணவனிடமே! அவளுக்கு விடையளிக்கும் திறனின்றி, தங்கராசு தலைகுனிந்த படி, […]
|
|
Posted: 04 Aug 2016 04:51 PM PDT முனைவர் துரை.குணசேகரன், மனத்தான், பகுத்தறியும் குணத்தான் மாண்புக்குரிய இனம் மனித இனம். பண்பட்ட மனித மனம் தனக்கென வாழாது. அதற்குக்காரணம் அம்மனத்தில் குடி கொண்டிருக்கும் கனிந்த அன்பால் உருவான அருட்பண்பு. மாந்தரிடத்தில் இப்பண்பு குடிகொண்டிருப்பதால்தான் இன்னும் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொல்காப்பியர் காலம் தொடங்கி அண்மையில் சென்னை, திருவள்ளுர்,கடலூர் போன்ற நகரங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்ட காலம் வரை மேற்கூறிய அருள் பண்பின் மேன்மைத்திறம் குறித்தது இக்கட்டுரை. அன்பின் வழிப்பட்ட அருள்: வரையறை அருளுக்குப் பொருள் விளக்கம் […]
|
|
தில்லை காட்டும் சைவசமயாசிரியர் நால்வர்களின் காலச்சுவடுகள் Posted: 04 Aug 2016 04:49 PM PDT -பேரா.முனைவர். ந. கிருஷ்ணன் தில்லை – பக்தி எழுச்சி வரலாற்றின் மொகஞ்சதாரோ! தில்லை பக்தி எழுச்சி வரலாற்றின் மிகமுக்கியமான சான்றுகளைப் பட்டியலிடும் தமிழக மொகஞ்சதாரோ. தமிழர்களின் போதாத காலமோ என்னவோ, இவ்வூர் தரும் இலக்கியச் சான்றுகள் அறிவியல்ரீதியாகக் கருதப்படாததால், தமிழிலக்கிய வரலாற்றின், குறிப்பாகச் சைவ இலக்கிய வரலாற்றின் தடங்கள் முரண்பாடுகளின் குவியலாகவே இன்றுவரை காணக்கிடக்கின்றன. கடல் நிலவியல்ரீதியாக கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தில்லையில் நிகழ்ந்த மாற்றங்கள் நமக்குத்தரும் செய்திகளைத் தொகுப்பதும், அதன்வழி சைவஇலக்கிய வரலாற்றை மீள்வாசிப்பு செய்வதுவும் […]
|
|
Posted: 04 Aug 2016 04:47 PM PDT -வீ.முத்துலட்சுமி பாழாய்ப் போன பார்வைக்குத்தான் அா்த்தங்கள் அனேகம் அம்மாவின் பார்வையில் தொனித்தது அன்பு அப்பாவின் பார்வை அகண்டமாக்கியது அறிவை பணக்காரனின் பார்வையோ ஏளனப்படுத்தியது என் ஏழ்மையை எதிரியின் பார்வையோ என்னைப் புழுப்போலப் பொசுக்கியது குழந்தைகளின் பார்வையோ என்னைக் குதூகலிக்கச் செய்தது எத்தனைப் பார்வைகள்… அதில் எத்தனை அா்த்தங்கள்…!! பார்வைகள் பலவிதம்! பார்வைகள் பலவிதம்! எங்கெங்கிருந்தோ பார்வைகள் வந்து எனைக் குத்த என்னைப் படைத்த ஆண்டவனே! உன் பார்வை மட்டும் இன்னும் என் மீது படாததேனோ? *** வீ. […]
|
|
Posted: 04 Aug 2016 04:46 PM PDT –நிர்மலா ராகவன் ’இப்போ யாரைக் கேட்டாலும், மலேசியாவிலதான் வேலை பாக்கிறதாச் சொல்றாங்க!’ சமீபத்தில் தமிழ்நாட்டில் நான் கேட்டது இந்த விமரிசனம். இங்கு வேலை பார்க்க வருகிறவர்கள் பன்னிரண்டிலிருந்து ஐம்பது பேர் ஒரே இடத்தில் படுத்துக்கொண்டு, குடும்பத்துடன் இருக்க வாய்ப்பில்லாது (இந்தோனீசியர்களைத் தவிர பிற ஆண்கள் தம் மனைவியரை அழைத்து வர அனுமதி கிடையாது), விடுமுறை நாட்களில்கூட வெளியூருக்கு எங்காவது போகாது, முடிந்தவரை காசைச் சேமித்துக்கொண்டு தாய்நாடு திரும்பும்போது, தாம் அனுபவித்த இன்னல்கள் பிறருக்குத் தெரியாதவண்ணம் பார்த்துக்கொள்வார்கள். […]
|
|
Posted: 04 Aug 2016 04:40 PM PDT நாகை வை. ராமஸ்வாமி அரும் பெரும் ஐயாறு தியாகராசனும் மூவரில் பெருமைமிகு முத்துசாமியும் சீர்மிகு சிங்காரி நீலாயதாக்ஷி யுனை பாரும் அடி பணிய பாடினரே பாராட்டி பவபய ஹரணி மாதே நீலாயதாக்ஷி சிவராஜதானி கொலுவுறும் சிவமய ராணி புவனம் காக்குமுன் பூந்தளிர் பதம் போற்றி தவமுடன் பாடிட எனக் கருள் தந்தனையே குவலயம் போற்றும் பாலா நீலாயதாக்ஷி பாலும் தேனும் பஞ்ச அமிர்தமுடன் கோலாகலமாய் சுகந்த நீரும் கலந்துன் காலடி […]
|
|
Posted: 04 Aug 2016 04:40 PM PDT எம். ஜெயராமசர்மா, B.A Hons, Dip.in.Ed, Dip.in.Soc, M.Phil Edu, SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் . அவுஸ்திரேலியா வள்ளுவத்தின் சிறப்பு தமிழிலே தோன்றிய பல நூல்கள் வாழ்வியலைப் பற்றிய கருத்துக்களை பலவாறு எடுத்துக் காட்டிருக்கின்றன. அவைகள் கூறும் கருத்துக்கள் முழுமையான தாகவோ எக்காலத்துக்கும் ஏற்றனவாகவோ இருகின்றனவா என்று பார்க்கின்ற பொழுதான், திருக்குறளை நாம் கூர்ந்து பார்க்க வேண்டியுள்ளது.வாழ்வியல் சம்பந்தமான கருத்துக்களைப் பகர்ந்து நின்ற நூல்களுக்கு மத்தியில் திருக்குறள் ஒன்றே […]
|
|
எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் – “எழுத்துக்கு எழுபது” Posted: 04 Aug 2016 04:39 PM PDT மீ. விசுவநாதன் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் எழுபத்தி ஒன்றாவது பிறந்த தினத்தில் (05.07.2016) வெளியிடப் பட்ட “எழுத்துக்கு எழுபது” மலரைக் கண்டதும் கண்களில் ஒற்றிக்கொள்ளத் தோன்றும் வனப்பும், படித்ததும் மனத்திற்கு நிறைவும் தந்தது. பாலகுமாரனின் இளமைக் காலம் தொட்டு, இன்று வரை அவரது முக்கியமான நிகழ்வுகளின் அழகழகான வண்ணப்படங்கள் மலருக்குச் சிறப்பு சேர்க்கிறது. இந்த அழகிய மலரைத் தயாரித்த திரு. சூர்யா பாலகுமாரன் உள்ளிட்ட குழுவினருக்குப் பாராட்டுகள்.. எங்கே படைப்பாளி கொண்டாடப் […]
|
|
Posted: 04 Aug 2016 12:30 PM PDT விவேக்பாரதி தான தந்தன தானா தனாதன …தான தந்தன தானா தனாதன …..தான தந்தன தானா தனாதன – தனதானா ! சீறு மங்கர வோடே சடாமுடி …சீத ளம்பயி லாதே நிலாவொடு …….சீவ னந்தக னோடே யுலாவிடு – சிவதேவீ ! தீது மெங்கிலு மூடே யெழாதற …தீரு மந்நிலை மாதே அழாதிர …….தீர மென்றிட மாரே விழாதுற – அருள்தாராய் ! ஏறு மங்கரி காடே புகாதரு …ளேகி யெம்மன நாடே சடாரென ……ஏறி […]
|
|
அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! [ஹிரோஷிமா நாகசாக்கி நினைவு நாள்] Posted: 06 Aug 2016 05:56 AM PDT அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! (ஏப்ரல் 26, 1986) சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா எழில் நகரம் அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் அணுப் பேரிடியால் நாசமாகி மட்டமாக்கப் பட்டது! திட்ட மின்றி தென்னாலி ராமர் சந்ததி மூடர்கள் அணு உலையைச் சூடாக்கி வெடிப்புச் சோதனை அரங்கேற்றி நிர்வாண மானது, செர்நோபில் அணு உலை ! சமாதி யானது மரணித்த […]
|
|
Posted: 06 Aug 2016 05:30 AM PDT அவ்வைமகள் துவாரபாலகர்களும் துளைநிலை ஒழுக்கமும் அமுத நிலையம் ஆதித்தன் இயக்கமும் என்ற உங்கள் அவ்வையைப் இவ்வுலகின் தலைசிறந்த பெண்மைப் பாதுகாவலர் என்றே சொல்லத் தோன்றுகிறது என்றார் அந்த இராணுவ அதிகாரி. “நான்கு மனைவிகள் – எத்தனையையோ பெண் தோழிகள் என்று என் காலம் இதுகால் ஓடியிருக்கிறது. பெண்ணின் உடம்பை – புணர்ந்திருக்கிறேனே தவிர உணர்ந்தவன் இல்லை. நான் சொல்கிறேன் எனத் தப்பாக நினைக்காதீர்கள – ஆண்மை மிதர்ப்புக்குக் கண்ணும் தெரியாது – காதும் கேட்காது – மூளையும் […]
|
Posted: 06 Aug 2016 05:11 AM PDT ’’ஒலிம்பிக் டார்ச்சேந்தி ஓடுகின்றான் கண்ணன் குளம்படி மான்வேகம் கொண்டு: -களம்புகும், பார்த்தனின் வெற்றி பிரகா ச(ம்)அடைய வேர்க்கின்றான் நந்த வனன்’’…..கிரேசி மோகன்…. குளம்படி -மானின் பாதம்….!
|
|
Posted: 06 Aug 2016 04:15 AM PDT அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….இன்று 3 நாமங்கள் ’’கோவிந்தாய, விஷ்ணவே, திரிவிக்ரமாய’’….! “அலமுவை கட்டினை அதிகடன் பட்டனை அடைத்திடத் தொட்டனை ஏழுமலை பலரிட உண்டியில் சிலறையை ஒண்டியாய் புகல்ஜர கண்டியில் வாழயிலை துளசியை மென்றிட குறையிலை என்றிடும் நிலைதர நின்றிடும் கோவிந்தா அலைகடல் சேடனில் அணிமகள் கூடலில் வளர்துயி லாடிடும் வைகுந்தா”….(4) ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே…. “செதிளதில் ஆரணம் முதுகினில் மேருவும் முகநுனி தாரணி கொண்டவனே […]
|
Posted: 07 Aug 2016 02:25 AM PDT ’’ஒன்றே சதமென்று ஒருஓரம் உட்கார்ந்து மென்று முழுங்கிட மாம்பழம்(கண்ணனின் கன்னம்-மாம்பழ வாயன்….) -கன்றெபோல்-, நித்தம் இதுபழக, நம்பீச மைத்துனனால் சித்தம்மாப் பிள்ளை சிவம்’’….கிரேசி மோகன்….
|
|
Posted: 07 Aug 2016 01:26 AM PDT கிரேசி மோகன் ’’பெருமாள் த்வாதஸ நாமத் துதி….இன்றைய மூன்று ‘’வாமனாய, ஸ்ரீதராய, ரிஷிகேசாய’’….! “சிறைவசு தேவகி கருவச மாகிட இரவினில் ஏகினன் கோகுலமே கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன் தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும் குடுமியின் உச்சமும் பூமணமாய் குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற களபலி சேய்வளர் வாமனனே ….(7) ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே…. “இலைமரு தாணியின் மணமுறை மேனியள் திருமகள் பூணிடும் சீதரனே […]
|
|
இலக்கியம் எழுதாத நட்பு ( நான்காம் பகுதி) Posted: 05 Aug 2016 04:35 AM PDT க.பாலசுப்பிரமணியன் அமைதியான பயணம்… நினைவுக்கடலில்… ஆழ்கடலின் உள்ளே.. அலைகளில்லாத இடத்தில்…… இன்னும் அமைதியைத் தேடி… அமைதி எங்கே? மகிழ்சியாலா ? துயரத்தாலா ? இன்பங்களின் அந்தப்புர வாசலில்.. சிதறிக்கிடப்போதோ மகிழ்ச்சி? அல்லது.. துன்பக்கிணறைத் தூர்வாரியபின்.. கொஞ்சிவரும்.. குளிர் நீரூற்றோ ? இன்பங்கள்… வறண்டு காய்ந்த பூமியில்… சில்லென்று விழுகின்ற.. சில நீர்த்துளிகள் போல்.. ஒட்டியவுடன் உலர்ந்துபோகும் !! உடலின் ஒவ்வொரு அணுவிலும்.. உள்ளே அமர்ந்து.. அமுதம் போல்… சிகரத்தை வெல்லும் சிந்தனையைத் தூண்டி.. வந்த சுவடு […]
|
|
இலக்கியம் எழுதாத நட்பு ( மூன்றாம் பகுதி) Posted: 05 Aug 2016 02:32 AM PDT க.பாலசுப்பிரமணியன் நண்பனே !! உடலின்றி உயிரில்லை… ஆனால்… உடலில்லா உயிரெங்கே? வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கைக்கும் உயிருக்கும் என்ன உறவு? புல்லாங்குழலின் ஒரு பக்கம் நுழையும் காற்று.. இசையாய் மறுபக்கம் வருவது போல்… உடலென்னும் இந்தக் குழலில்.. ஓசையின்றிச் செல்லும் காற்று.. இசைக்கும் இசைதான் வாழ்வோ? இந்தக் குழலை ஊதுவது யார்? நீயா? இல்லை நானா? இதில்.. ராகங்களையும் , தாளங்களையும் பாடல்களையும் யார் எழுதியது ? ஓர் […]
|
Posted: 07 Aug 2016 10:58 PM PDT ‘’விசுவரூபம் காட்டி விரட்டியும் பார்த்தன் விசன விரக்தியில் வாட, -கொசுவரூபம் ஏற்றம்புத் தூளியில் வீற்ற பரந்தாமர் மாற்றினார் கீதை மொழிந்து’’….கிரேசி மோகன்…. ”பகவான் உவாச’’…. ———————————————- ”வாட்டிடும் இன்பத்தைக், கூட்டிடும் துன்பத்தைப் போட்டிட நெஞ்சத் தராசினில் -காட்டிட வேண்டும் சமத்துவம், வீரன் அவனழியான் காண்டீபம் தானுன் களிப்பு”….
|
|
படக்கவிதைப் போட்டியின் முடிவுகள் – 75 Posted: 07 Aug 2016 10:15 PM PDT இந்த வாரப் படக் கவிதைக்கான புகைப்படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு முபாரக் அலி. இதனை நம் வல்லமை ப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த வாரப் புகைப்படத்தில் நம் கருத்திற்கு விருந்தாக துணையோடு கொஞ்சும் புறாக்கள் இடம் பெற்றுள்ளன. இப் புகைப்படத்திற்கு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் பார்ப்போம். இனி, காடுகள், மரங்கள் அழிக்கப்படுவதால், […]
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (11) Posted: 07 Aug 2016 05:04 PM PDT இசைக்கவி ரமணன் திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை – 10 கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (09) எட்டுக் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள், தத்தமக்குரிய செயல்களைச் செய்யாத ஐம்பொறிகளைப் போலப் பயனற்றவையாகும். கோள் இல் = கொள்ளுவது கோள். கிரகங்களுக்கும் பொருந்தும். கிரஹணம் = பற்றுதல். பாணிக் கிரஹணம் = கைத்தலம் பற்றுதல் பொறி = மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் கர்மேந்திரியங்கள். Sensory organ. […]
|
|
அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும் Posted: 07 Aug 2016 05:02 PM PDT பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம் நாற்பத்து இரண்டே ஆண்டுகள் வாழ்ந்தாலும் தமிழுக்கும், தமிழ் நாடகவியலுக்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அளித்த கொடை அளப்பரியது. அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியரல்லர். தத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மலையாள மண்ணின் மைந்தனாகப் பிறந்திருந்தாலும், அவரின் தமிழ்ப் பற்றுக்கு நிகர் அவரே. மனோன்மணியம் நூலுக்கு அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், அன்றைய தமிழக அரசின் சார்பாக தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கியவர்கள், சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் […]
|
|
Posted: 07 Aug 2016 05:01 PM PDT எம்.ரிஷான் ஷெரீப் ‘வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்’ என ஒரு பழமொழி இருக்கிறது. உண்மைதான். மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உணவும் மருந்தும் எவ்வளவு உதவி செய்கின்றனவோ, அது போலவே மனிதனின் மன வளர்ச்சிக்கும், ஆளுமை விருத்திக்கும் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் வாசிக்கும்போது சில படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பது உங்களில் பலருக்குத் தெரியாமலிருக்கும். அது ‘வாசிக்கும் கலை’ எனப்படுகிறது. வாசிக்கும் கலை குறித்து வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் 1972 இல் தோமஸ் மற்றும் ரொபின்சன் ஆகியோரால் […]
|
|
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 67 Posted: 07 Aug 2016 05:00 PM PDT பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா முனைவர்.சுபாஷிணி மேலை நாடுகளில் தங்கள் நாட்டு அரும்பொருட்களைச் சேகரித்து வைப்பது போல அல்லது அதற்கும் சற்று கூடுதலான ஆர்வத்துடன் ஆசிய, ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளின் அரும்பொருட்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வம் இருப்பது, இந்த நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் போது உணர முடியும். ஆசிய நாடுகளுக்கே உரித்தான இறைவடிவங்கள், எழுத்து முறை வளர்ச்சி தொடர்பானவை, நூல்கள், இலக்கியங்கள் என்பனவோடு விலை உயர்ந்த கற்கள், […]
|
|
Posted: 07 Aug 2016 05:00 PM PDT செண்பக ஜெகதீசன் நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு. –திருக்குறள் –784(நட்பு) புதுக் கவிதையில்… சிரித்து விளையாடுவதல்ல சிறந்த நட்பு, தவறான வழிசெல்லும் நண்பனைத் திருத்திட தட்டிக்கேட்டு சரிசெய்வதே…! குறும்பாவில்… சிரிப்பதற்கல்ல நட்பு சீராக்கிட, தவறும் நண்பனைத் தட்டிக்கேட்டு…! மரபுக் கவிதையில்… என்றும் நல்ல நட்பென்பது எதற்கும் சிரித்து விளையாடும் ஒன்றும் உதவா உறவல்ல ஓசைச் சிரிப்பில் பயனில்லை, சென்றிடும் நட்புப் பாதையிலே செயலில் தவறிடும் […]
|
|
Posted: 07 Aug 2016 04:54 PM PDT –மலர் சபா மதுரைக் காண்டம் 11: வஞ்சின மாலை வேறு ஒருவன் தன்னைத் தவறாகப் பார்ப்பது கண்டு, “நிறைமதி போன்ற முகத்தைக் குரங்கு முகம் ஆக்குக” என்று கூற, அவ்வாறே அந்த முகத்தில் இருந்து, வெளியூர் போன கணவன் வீடு திரும்பியதும் குரங்குமுகம் நீக்கி இயல்பான முகம்கொண்ட சிவப்பு மணிகள் பொருந்திய மேகலை அணிந்த அல்குலை உடைய அவளும் ஒரு பத்தினிப் பெண். மகளிர் அறிவு என்பது அறியாமை உடையது என மேலோர் கூறிய வார்த்தையின் […]
|
|
Posted: 07 Aug 2016 04:51 PM PDT நிர்மலா ராகவன் காதல் வந்துவிட்டதே! பல ஆண்கள் என்மீது ஒருதலைப் பட்சமாக காதல் கொண்டிருந்தார்கள். எனக்கு அதனால் பெருமையோ, படபடப்போ எழவில்லை. மாறாக, சிரிப்புதான் வந்தது — அவர்கள் நான் பெற்ற குழந்தைகளைவிட இளையவர்கள் என்பதால். ஆம், என்னிடம் படித்த மாணவர்களைத்தான் குறிப்பிடுகிறேன். `டீச்சர்! ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?’ என்ற சீன இளைஞரை ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒன்றில் சந்தித்தேன். `எங்கள் பள்ளியில் நான் கவுன்சிலர். நான் மாணவிகளுக்கு அறிவுரையோ, நல்லதொரு வழிகாட்டலோ வழங்கினால், உடனே காதல் கடிதம் […]
|
Posted: 07 Aug 2016 04:49 PM PDT –க.தமிழ் அழகன் ஆதி இலக்கியங்கள் கவிதை வடிவின. தொல்காப்பியம் கூறும் செய்யுளியல் இலக்கணம் அவர்காலத்திற்கு முன்னர் எழுந்த இலக்கியங்களின் வடிவங்களை விளக்கும். காரிகை கற்று எவரும் கவிதை இயற்றுவதில்லை. ‘யாப்பருங்கலக்காரிகை’ எனும் யாப்பிலக்கணநூல் தொல்காப்பியத்திற்குப் பின்னர்த் தோன்றியது. வடிவம் மட்டும் கவிதையாகிவிடாது. தேமா, புளிமா சேர்க்கையோடு எதுகை, மோனையுடன் கருத்துணர்வு நிலையும் சேர்ந்தால்தான் கவிதை உயிர்பெறுகிறது. தற்காலத்தில் கவிஞர்கள் பலர் முற்றிலும், வடிவிலும், பொருளிலும் மாறுபட்டுப் புதிய பிறவியாகக் காட்சியளிக்கும் புதுக்கவிதைகளை இயற்றிவருகின்றனர். அத்தகைய புதுக்கவிதைகளின் நோக்கும் […]
|
|
Posted: 07 Aug 2016 04:46 PM PDT –கிருத்திகா அவன் இரண்டு நாட்களுக்குமுன்தான் எதிர் வீட்டுக்கு, அதாவது சோமுத் தாத்தாவின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்தான். யாரையும் கவரும் அழகு. இன்னும் என் கண்ணில் நிழலாடுகிறது அவனது கம்பீரமான நடையும், பார்வையும்…. அப்பப்பா!! இனி அவன் இங்குதான் தங்கப்போகிறான் என்பதையும் தெரிந்து கொண்டாயிற்று… உடனே சோமுத் தாத்தாவின் வீட்டுக்கு ஓட்டம் எடுக்க மனம் துடித்தது. முடியவில்லையே….! என் வீட்டில் இருந்த நேரத்தைவிட அவர் வீட்டில் இருந்த நேரம்தான் அதிகம்… ஆனால் இந்த அம்மாவுக்கு என்னாயிற்று?? இதுவரை நான் […]
|
|
Posted: 07 Aug 2016 04:37 PM PDT க. பாலசுப்பிரமணியம் மூளைநரம்பின் வலைத்தளங்களும் கற்றலும் (Neural Networks and Learning) “நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால் எந்த முறையில் கற்றல் நடந்தாலும் ஒரு மாணவனால் ஒரு அளவுக்குத்தான் படிக்க முடியுமே தவிர, படிப்புச் சுமை அதிகமாக இருந்தால் படிப்பின் மேலே அவனுக்கு வெறுப்பு வந்துவிடாதா” என்று நண்பர் ஒருவர் வினவினார். அந்தப் படிப்புச் சுமை என்பது எவ்வளவு? ஒரு தனி மனிதனின் கற்றல் வயதுக்குத் தகுந்தவாறு மாறுபடுமா ? எந்த அளவுக்கு மேல் படிப்புச் […]
|
|
Posted: 07 Aug 2016 04:07 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.08.2016) வரை உங்கள் […]
|
|
Posted: 09 Aug 2016 09:25 AM PDT கிரேசி மோகன் ’’பாலா திரிபுரை நெமிலி’’…. —————————————————— ”சுண்டு விரலளவு சொப்புப் பதுமையாய் கண்டு பிடித்தனர் காட்டாற்றில், -கொண்டுவந்த, நாலா யிரத்தோன் நவனீதன் சோதரி பாலாம் பிகையவள் பேர்”….(7) “மாலை மயக்கம், மதிய உதயம்அதி காலை வெளிச்சம் கனவாகும், -பாலை, திரிபுரையைக் கண்டு தரிசிப்போர் , தம்முன், எரிபவை கூட எழில்”….(8) ”பாலாவின் பேர்சொல்லி பாம்பை எழுப்பிடு. மூலாதா ரத்தில் முழிபிதுங்கும் : -தோளா யிரத்தில் உறங்கிடும், யாதவன் தங்கை, சிரத்தில் சிரிப்பாள் சிலிர்த்து’’….(9) ’’இமியளவும் தீங்கின்றி, […]
|
|
ரோஸெட்டா தளவுளவி புகட்டிய புதிய வால்மீன் உருவாக்கக் கோட்பாடு Posted: 09 Aug 2016 09:18 AM PDT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/ZwEADPlHdEE https://youtu.be/29byorgwMGY https://youtu.be/hZHcf9NyYWw ++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள்! வியாழக்கோள் ஈர்ப்பு வலையில் சிக்கிய போது வால்மீன் மீது கவண் வீசிக், காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் ! சூரிய குடும்பக் கோள்களின் ஆதித் தோற்ற வளர்ச்சி அறியவும், உயிரின மூலத்தை உளவவும் ஏவிய […]
|
Posted: 09 Aug 2016 01:53 AM PDT ’’கன்று துதித்திடும் கண்ணனிவன் கோகுலத்தில் இன்று பிறந்த இறை(ஆ)யானால், -அன்றுமிவன் ஊழி மிதந்(து)உலகேழ் உண்டுமிழ்ந்த பாலகன் பாழியந்தோள் பத்பனா பன்’’….கிரேசி மோகன்….!
|
|
Puthiyathaliamurai Tamilan Awards Posted: 10 Aug 2016 02:20 AM PDT (11th of August 2016 at 6.00 pm in Chennai Trade Centre) Puthiya Thalaimurai, TV channel with its unbiased and independent news, delivering live News, as-it-happens, has dramatically re-defined television journalism in Tamil Nadu. Puthiya Thalaimurai has done what it promised to its viewers; that it would provide a platform to the voiceless and bring out the aspirations and beliefs […]
|
Posted: 10 Aug 2016 01:30 AM PDT ”பச்சைப் பயலாக பார்த்திபன் வேர்த்திட பச்சைப் புயல்மால் பாரதத்தின் -உச்ச குருஷேத் திரத்திடை ,கீதோ பதேசம் பரிட்சித்தைக் காத்தோன் பணி’’….கிரேசி மோகன்….
|
Posted: 10 Aug 2016 01:27 AM PDT ‘’திரிபுர சுந்தரி தேவி நமஸ்தே, பரிபூ ரணமுணர பாலா -சரிபுகல்வாய், சாதகனாய் ஆக்கி சதாசர்வ காலமும் மாதவத்தில் மூழ்கயென், மனு’’….(13) ”தாலேலோ தாலேலோ தாயாரின் தாலாட்டு, பாலேலோ பாலேலோ பையனிவன் -தாலேலோ, தூங்காமல் தூங்கும் திருமால் சகோதரி ஓங்காரி பாலாவுக்(கு) ஓய்வு”….(14) ‘’கல்லைச் சிலையாக்கும் கல்லுளி மங்கம்மா, சொல்லைக் கவியாக்கும் சுந்தரி, -கொல்லை, குமுதத்தில் பூப்பாள் குலம்ஜாதி காணா, அமுதத்தன் தங்கை அவள்’’….(15) ‘’ஆலோல வள்ளியின் ஆம்படையான் அன்னையே, தாலேலோ பாடவந்தேன் தாயுனக்கு, -பாலேலோ, மாலோலன் […]
|
|
Posted: 09 Aug 2016 05:07 PM PDT கவிதை பற்றிய மொழிபெயர்ப்பாளர் குறிப்பு ஆதிமுதல், யுத்த களத்துக்கு நெடுந்தூரம் பயணம் செய்யும் போர் வீரர்கள், வழியில் பூனையைக் கண்டால், அருகிலொரு மக்கள் குடியிருப்பு இருக்கிறதென அறிந்து கொண்டனர். பூனைகள் எப்போதும் மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவை. அவ்வாறே பெண்களையும் கருதுகின்றனர். பெண்களையும் பூனைகளுக்கு ஒப்பிடுகின்றனர். பெண்களிடம் கூறப்படும் ‘பூனைக்குட்டியைப் போல அழகாக இருக்கிறாய்’, ‘பூனை நடை’, ‘பூனையைப் போல மிருது’, ‘பூனையைப் போல மின்னும் கண்கள்’ போன்ற வர்ணனை வார்த்தைகளைப் போலவே ‘பூனையின் […]
|
|
இன்னம்பூரான் பக்கம் [10] – என்றோ ஒரு நாள் -1 Posted: 09 Aug 2016 04:52 PM PDT இன்னம்பூரான் பக்கம் [10] என்றோ ஒரு நாள் -1 திக்குத் தெரியாத காட்டில்… இன்னம்பூரான் ஆகஸ்ட் 8, 2016 அவரவரது வாழ்க்கையின் உள்ளுறை அற்புதமானது. கண்ணுக்குள் நிற்கும் மறைமூர்த்தியான அதன் அடர்த்தி பெரிது. பரிமாணமோ பரந்த வானம் போல் எல்லையற்றது. ஆழமோ, ஆழ்கடலை விட, ஏன்?, அதலபாதாளத்தையும் மிஞ்சியது. அதன் வளர்த்தியோ ஒளியின் வேகத்தைத் துச்சமாக மதிக்கும் விரைவுடன் ஓங்கி உலகளக்கும். பிரபஞ்சத்தை அளவெடுக்கும். இத்தனையும் பொருந்திய கோடானுகோடி மானிடர்களில் பெரும்பாலோர் எல்லாம் அறிவர்;அறிந்துகொண்டதாகப் […]
|
|
இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 8 Posted: 09 Aug 2016 04:27 PM PDT அவ்வை மகள் மனித நேயமும் – மனிதச் சேவையும் தொழிநுட்பத்தின் இரு கண்கள் உலகிற்கு என்ன தேவை என்பதனை மிகச்சரியாக உணர்ந்து, அதனை மிகச்சரியான தருணத்தில், மிகச்சரியான அளவிலே தருகிறவர்கள் உலகில் வாழும் கடவுள்களாகிறாகள். துறை எதுவாகினும் எந்தத்துறைக்கும் இது பொருந்தும். மதமா? அரசியலா? மருத்துவமா? உளவியலா? தொழில்நுட்பமா? எந்தத்துறையும் இதற்கு விதிவிலக்கில்லை. அரண்மனை வாயிலில் மணி கட்டி – மக்கள் குறை அச்சமின்றி அரண்மனை வந்து குறை அறிவிக்கச் செய்து – அவர்கள் குறைதீர்த்த மனுநீதிச் […]
|
vallamai |
|
Posted: 11 Aug 2016 12:51 AM PDT ”Sakha Tvameva”…. —————————————– ’’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தனள் சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ வின்பால் யசகாதே வர்’’….கிரேசி மோகன்….!
|
|
Posted: 11 Aug 2016 12:47 AM PDT கிரேசி மோகன் ’’காளிதாசர் உலா’’ நடப்பதில் மகிழ்ச்சி….!’’மேக சந்தேசமும்’’, ‘’குமார சம்பவமும் ‘’ லிஃப்கோ சமஸ்கிருத பதிப்பை வைத்து வெண்பாவாக்கம் எல்லா ச்லோகங்களையும் 2010துகளில் செய்தேன்….குறிப்பாக ‘’குமார சம்பவம்’’….உட்கார்ந்த இடத்தில் உலகையே பார்த்த ‘’காளிதாசர்’’ விஞ்ஞானிக்கு மேற்பட்ட மெய்ஞானி….400 ஸ்லோகங்கள் மொழி பெயர்த்தேன்….ஏனோ நிரு விட்டது….இந்த பகிர்வை சாக்காக வைத்து முழுதும் முடித்து விட நப்பாசை….முதலில் ‘’காப்பு செய்யுள்கள்’’ ஆறைப் பதிவு செய்கிறேன்….இருக்கவே இருக்கு ‘’ஈஸ்வரோ ரக்ஷது’’…. குமார சம்பவம் —————————— காப்பு ———————- சிவபார்வதி —————- […]
|
|
’’வரலஷ்மி விரத வாழ்த்துக்கள்’’ Posted: 11 Aug 2016 11:59 PM PDT ————————————————————– “கள்ளம் கபடின்றி, கையேந்திய சங்கரர்க்கு உள்ளங்கை நெல்லி உவந்தளித்த -உள்ளத்தின் வீரதர் மத்தால் வியந்தவர் வேண்டிட கூரையைப் பிய்த்தவளைக் கொஞ்சு”….(1) “சுதாமன் அவலுக்கு சொர்ணங்கள் தந்தாய் கதாமகன் கீர்த்தியை கண்ணனுக்(கு) -இதோவென்று பொன்னோடு பேரை புறக்கணித்த பூவையே நின்னோடு சேர்ந்தகண்ணன் நார்”….(2) “பொன்வைக் குமிடத்தில் பூவைப்போர் மீதிவள் கண்வைக்க கஞ்சனும் கர்ணனே -முன்வைத்தக் காலைப்பின் வைக்கா கடுமுயற்சி யாளர்க்கு வேலை திருவினையாள் வாகு”….(3)
|
|
Posted: 11 Aug 2016 09:12 PM PDT குப்பையில் மாணிக்கக் கல்லாய் மிளிர்ந்திடுவாள் அப்பழுக்கு சேறிலவள் அல்லியாவாள் -குப்பனின் வீட்டுச் சுவரில் வரைந்தாலும் வந்தருள் கூட்டும் வரலக்ஷ்மி காப்பு”…. “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் ) ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும் மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….கிரேசி மோகன்….!
|
Posted: 11 Aug 2016 09:08 PM PDT k ”ஆலில் படுத்தன்று ஆழியில் உண்டுமிழ்ந்த மாலின்று மாட்டின் மடிபுகுந்து , -காலின், பெருவிரலைச் சூப்ப, பசுமிரண்டு பார்க்கும் கருவிருந்த கண்ணனவன் கால்’’….கிரேசி மோகன்….! ஆலில் -வடபத்ர சாயி…. ஆழியில் -கடலில் ஊழிநாளில் உலகேழை உண்டு உமிழ்ந்த உலகளந்தோன்….!
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (12) Posted: 11 Aug 2016 05:05 PM PDT இசைக்கவி ரமணன் திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (11) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் (10) கடவுளின் திருவடியை அடைந்தவரால் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவரால் கடக்க முடியாது. யார் இறைவனடியைச் சேர்கிறார்களோ அவர்களே பிறவியாகிய பெருங்கடலைத் தாண்டுகிறார்கள். அறம், பொருள், இன்பம் என்னும் கடல்களைக் காட்டிலும் விரிந்ததும் மருட்சி தருவதுமானது பிறவி என்னும் பெருங்கடல். அதனால்தான் அதனை சம்சார சாகரம் என்கிறோம்; பவக்கடல் என்கிறோம்; ஏன், கவலைக் கடல் […]
|
|
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 68 Posted: 11 Aug 2016 05:03 PM PDT பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகம், ஃபிலடெல்ஃபியா, வட அமெரிக்கா முனைவர்.சுபாஷிணி பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பு மிகப் பிரமாண்டமானது. அடித்தளத்தில் நான் சென்ற போது ஆசிய, அதிலும் தெற்காசிய சிற்பங்களின் கண்காட்சி வைத்திருந்தனர். இதில் அறிய புத்தர் சிற்பங்களும் திபேத்திய அருங்கலைப் படைப்புக்களும் நிறைந்திருந்தன. உள்ளே கட்டணம் கட்டி டிக்கட் பெற்றுக் கொண்ட உடன் முதல் தளத்திலேயே அங்குள்ள ரோமானிய, கிரேக்க சேகரிப்புக்களைப் பார்வையிடத் தொடங்கலாம். ஆனால், நான் அங்கே தொடங்காமல் அடித்தளத்தில் இருந்த சிறப்புக் கண்காட்சியை பார்வையிட […]
|
|
Posted: 11 Aug 2016 05:00 PM PDT எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா புலம்பெயர்ந்து சென்றாலும் புறப்பட்டு வந்திடுவார் நலம்கிடைக்கும் நல்லூரான் நற்றிருவிழா காண்பதற்காய் புலனைந்தும் தனைமறந்து புத்துணர்வு பெற்றுநிற்கும் புதுமையினைப் பெற்றுவிட புறப்படுவார் அன்பரெலாம் ! வெள்ளைமணல் வீதியிலே விரதமுடன் அடியார்கள் உள்ளமெலாம் உருகிநிற்க உருக்கமுடன் பாடிநின்றி கள்ளமெலாம் களைந்துவிடு கந்தாவென அழைத்து நல்லதமிழ் பாடிநிற்பார் நல்லூரான் சன்னிதியில் ! நாகரிகம் வந்தாலும் நல்லூரான் கோவிலிலே நல்லதமிழ்ப் பண்பாடே நாளுமே […]
|
|
தாத்தா அப்பா நானென மூன்று நண்பர்கள் Posted: 11 Aug 2016 05:00 PM PDT ராஜகவி ராகில் அடிக்கடி பற்றாக்குறைத் தீ வீடு எரியும் சில வேளை அடுப்பில் பூனை படுத்திருக்கும் அப்பா அறையெங்கும் இரவு நேரத்திலும் பாசம் பரவி நிற்கும் வெளிச்சமாய் சட்டை பழையது அப்பா முகம் அணிகின்ற புன்னகை ஆடை காற்றைக் கலகலப்பாக்கும் இதய சுகந்தம் கலந்தபடியும் இனிப்பு நறுமணம் பூசியதுமாய் புறப்பட்டுச் சென்றுவிட்ட பழைய மாதத்தில் தாத்தா மீண்டும் பிறந்திருந்தார் எழுபது வயதுடன் நான் இறைவனிடம் இருந்திருக்க மாட்டேன் அப்பாவும் தாத்தாவும் தோழமைப் பாலங்கட்டியபோது தாத்தா கன்னத்தில் சோகக்கை […]
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்—(205) Posted: 11 Aug 2016 04:53 PM PDT அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள். சிறியதோர் இடைவெளிக்குப் பின்னால் மீண்டும் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன். காலவோட்டத்தின் சுழற்சியில் சிக்குண்டு அலையும் சருகினைப் போல் எமது வாழ்வும் எமது கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் உழலும் நிலை ஏற்படுவதுண்டு. அத்தகைய ஒரு சூழலில் சிக்குண்டதினால் தான் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டது. எனது முந்தைய மடலில் இங்கிலாந்தின் தொழிற்கட்சி அதாவது பிரதான எதிர்க்கட்சியின் தலைவரான ஜெர்மி கோபன் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் பற்றி அடுத்த மடலில் கூறுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். வரலாறு காணாத […]
|
vallamai |
|
Posted: 12 Aug 2016 10:45 PM PDT பவள சங்கரி 70 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை ‘பாரத விழா’ என்று மத்திய அரசு ஒரு வாரம் கொண்டாடுகிறார்கள். நம் இந்தியக் கலாச்சாரத்தைப் போற்றும்விதமாக, 12 ஆம் தேதி ஆரம்பித்து 18 ஆம் தேதி வரை நடக்கப்போகிற இந்த நிகழ்ச்சிக்காக தில்லியில் 100 அரங்குகள், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பல்வேறு விதமான கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி. பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாசாரத்தின் பன்முகத்தன்மையை உணர்த்தும் […]
|
Posted: 12 Aug 2016 09:43 PM PDT முலைகனத்தாள்(பாலூட்ட ரெடியாக) காட்டும் கலையைக்(சந்திரன்)கா ணாது கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைக்க, எண்ணி மடியிறங்கும் ஏரார்ந்த கண்ணியின் கண்ணனை நெஞ்சே கருது’’…..கிரேசி மோகன்….
|
vallamai |
|
Posted: 14 Aug 2016 12:15 PM PDT -எஸ் வி வேணுகோபாலன் ஆகஸ்ட் 1995ல் கணையாழி இலக்கிய இதழ், தமன் அறக்கட்டளையின் அரவணைப்பில் தனது பயணத்தைத் தொடரத் தொடங்கிய நிகழ்விற்குக் கல்லூரி மாணவர் ஒருவரும் அழைப்பிதழோடு வந்து கூட்டத்தின் பகுதியாக அமர்ந்திருந்தார். எழுத்தாளர் சுஜாதா பேசுகையில், மாதா மாதம் கவிதைகளைத் தேர்வுசெய்து தரும் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அன்று வெளியாகும் இதழில் தாம் தேர்வுசெய்து பிரசுரமாகி இருக்கும் தமக்கு மிகவும் பிடித்த கவிதையை வாசிக்கப் போவதாகவும் குறிப்பிடும்போதுகூட அந்த மாணவர் அறிந்திருக்கவில்லை, […]
|
|
Posted: 14 Aug 2016 10:42 AM PDT -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா காஞ்சியில் பிறந்து கவிதையில் நுழைந்து ஆண்டுகள் குறுகி அமரராய் விட்டாய். பாரதிவழியில், பட்டுக்கோட்டையார் வழியில் பாவலனாய் மிளிர்ந்து பாதிவழியில் போய்விட்டாய். குறுகிய காலத்தில் அறிவுடன் எழுதி அடையாளமாகி நின்றாய். ஆனந்தயாழும், அழகு அழகும் உன்னைத் தேசியக் கவிஞனாக்கிப் பரிசினைப் பெற்றுத்தந்தது. ஆயிரம் பாடலுக்கு மேலெழுதி அனைவரின் அகத்திலே அமர்ந்துவிட்டாய். மரணம் பற்றிய வதந்தி பாடிய நீயோ இன்று அதற்குள் அகப்பட்டுக்கொண்டாய். முத்துக்குமார் என்னும் உடம்புதான் அழிகிறதே அன்றி முத்துக்குமாரின் உணர்வுகள் சாகாவரம் பெற்று நிற்கின்றன. கவிஞனுக்கு மரணமே இல்லை. […]
|
|
பூகோளச் சூடேற்றும் தீவிர வாயு கார்பன் டையாக்சைடு மாற்றப்படும் இயக்கத்தில் மின்சக்தியும் உற்பத்தி Posted: 13 Aug 2016 05:00 PM PDT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/jyYIbOV97o8 https://youtu.be/MgeVrKmxADs +++++++++++++ சூட்டு யுகப் பிரளயம் வருகுது சூடு காலம் வருகுது ! நமக்குக் கேடு காலம் வருகுது ! நாடு, நகரம், வீடு, மக்கள் நாச மாக்கப் போகுது ! புயல் எழுப்ப வருகுது ! பூத மழை பொழியப் போகுது ! நீரை, நிலத்தை, குளத்தை, பயிரை, உயிரை, வயிறை முடக்கிப் போட வருகுது ! கடல் வெப்பம் மீறி, கடல்நீர் […]
|
Posted: 15 Aug 2016 10:03 AM PDT -கிரேசி மோகன் ’’குட்டிப் பசுங்கன்றுக் குட்டியிடம், கோகுலக் குட்டனவன் ராதையைக் காண்கிறான்: -சுட்டிப் பயலவர்க்கு எல்லாமே, பைங்கிளி ராதா: வயலிவர் ராதைநீர் வீச்சு’.’
|
|
Posted: 14 Aug 2016 05:07 PM PDT பவள சங்கரி அனுபவம் தவிர வேறு சிறந்த கல்வியேதுமில்லை – சத்திய சோதனை 1948 பல்கலைப் பட்டங்களுக்கு மயங்கிவிடும் போக்கு காந்தியின் காலத்திலும் இருந்திருக்கிறது. பட்டங்களுக்கு மதிப்பு இருப்பது உண்மைதான் என்றாலும் அனுபவக்கல்வியைக் காட்டிலும் உன்னதமான ஆசிரியர் எவரும் இருக்க முடியாது . அறிவார்ந்த செயலாற்றலே தனிநபர் திறமையை வளர்க்கும். அந்த வகையில் வாழ்க்கை அனுபவமே பாடமாக வேண்டும் என்கிறார் மகாத்மா காந்தி. அதாவது ஏட்டுக் கல்விக்கு காந்தி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வழக்குகளை உருவாக்கி அதனை வளர்த்து, […]
|
|
திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை (13) Posted: 14 Aug 2016 05:05 PM PDT இசைக்கவி ரமணன் முடிவுரை இப்படி, மனதால் நினைத்தல், வாயாற் புகழ்தல், உடம்பால் வணங்குதல் மூன்றையும் சேர்த்துக் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் வைத்தார். இறைவன், இறை, தெய்வம் என்னும் சொற்களைப் பயன்படுத்தும் வள்ளுவரின் குறளில் கடவுள் என்னும் சொல் இல்லை. மன்னனும் இறை, இறைவன் போன்ற சொற்களால் குறிக்கப்படுகிறான். (உ-ம் இறைமாட்சி) `விஷ்ணுவின் அம்சம் உடையவனே மன்னன், ரிஷியின் அம்சம் உடையவனே கவிஞன்,` என்பது நமது பண்டைய கூற்று. அரசன் என்பவன், இறைவனின் பிரதிநிதியாகவே பிற நாடுகளிலும் […]
|
|
Posted: 14 Aug 2016 04:55 PM PDT –செண்பக ஜெகதீசன் விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். (திருக்குறள்-162: அழுக்காறாமை) புதுக் கவிதையில்… பிறரிடம் பொறாமை கொள்ளாதவனுக்கு, அதைவிடப் பேறெதுவும் பெரிதாகயில்லை…! குறும்பாவில்… அடுத்தவரிடம் அழுக்காறில்லாத பண்பு ஒருவனுக்கு, பேறுகளிலெல்லாம் பெரும்பேறு…! மரபுக் கவிதையில்… மண்ணில் மனித வாழ்வினிலே மற்றவர் மீது பொறாமையின்றிக் கண்ணிய மாக வாழ்வோர்கள் காணற் குரிய பேறுகளில், புண்ணிய மான வாழ்விதுபோல் போற்றுதற் கேற்ற பேறதுவாய் எண்ணித் தேடினும் பெரிதாக எதுவு மில்லை அறிவீரே…! லிமரைக்கூ… அழுக்காறில்லா வாழ்வுபெரும் […]
|
|
Posted: 14 Aug 2016 04:47 PM PDT இன்னம்பூரான் 16 08 2016 எல்லாரும் ஓரினம் என்றாலும் ராணுவ வீரர்களுக்கு ஒரு தனி முத்திரை இருக்கத்தான் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு உயிர் வெல்லமல்ல. சற்று மாற்றி எழுதவேண்டும். அவர்களுக்கு உயிர் வெல்லம் தான், மற்றவர்களின் உயிர்! இந்தியாவின் பெரிய ராணுவப்பள்ளியின் தாரகமந்திரமே, “உனது நாடு முதலில்; அடுத்து முக்கியமானது உனது படை வீரர்கள்; உனது இடம் கடைசியில்; என்றுமே.’ அன்றொரு நாள் தொகுப்பில் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத்ரபால் பற்றி எழுதியிருந்தேன். இன்று அசோகச் சக்கரம் […]
|
|
Posted: 14 Aug 2016 04:46 PM PDT நிர்மலா ராகவன் அக்கரைப்பச்சை யாத்தி (YATI) என்ற இந்தோனீசிய பணிப்பெண் வாரத்திற்கு ஒருமுறை எங்கள் வீட்டைச் சுத்தப்படுத்த வருவாள். கண்ணாடி ஜன்னல்களை ஈரத்துணியால் துடைத்து, அதன்பின் தினசரித் தாளைக் கசக்கி மீண்டும் அழுந்தத் துடைத்துப் பளபளப்பாக்கி.. இப்படி உயிரை விட்டுக்கொண்டு வேலை செய்வாள். அப்போது அவளுக்கு முப்பது வயதிருக்கும். “உனக்கு நாங்கள் கொடுக்கும் பணத்தை என்ன செய்கிறாய்?” என்று கேட்டேன். “அப்படியே என் கணவரிடம் கொடுத்துவிடுவேன்!” யாத்தியை பதின்மூன்று வயதிலேயே கல்யாணம் செய்து கொடுத்திருந்தார்கள். அதனால் கணவனைத் […]
|
Posted: 14 Aug 2016 04:45 PM PDT –கிரேசி மோகன் ’’பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமெனக் கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் – உள்ளமே கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு வள்ளல் பெரும்பசுவாய் வாழ்வு’’ ’’ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன் ராதை கழுத்தென்னும் சங்கை – போதை தலைக்கேறக் கண்ணனவன் தோளைத் தழுவி வளைக்கரத்தால் போரென்றாள் மாது… (அல்லது) ——————————————— – போதை இதம்தர கண்ணந்திண் மார்பைத் தழுவி சுதந்திர வாழ்த்துரைத்தாள் சாது!’’
|
|
Posted: 14 Aug 2016 04:41 PM PDT மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை மலர் சபா அரசோடு மதுரையையும் அழிப்பேன் என்று கூறிக் கண்ணகி மதுரையை விட்டு நீங்குதல் “அப்படிப்பட்ட ஊரில் பிறந்த நானும் ஒரு கற்புடைய பெண் என்றால் மதுரை நகரை மட்டுமன்றி மன்னனையும் அழிக்காமல் விடமாட்டேன்; இதை நீ நிச்சயம் காண்பாய்” எனக் கூறிக் கோவிலை விட்டு நீங்கினாள். கண்ணகி தன் இடமுலையைத் திருகி எடுத்து மதுரையின் மேல் எறிதல் “நான்மாடக் கூடலான மதுரை நகரின் ஆண்களும் பெண்களும் தேவர்களும் தவத்தோரும் […]
|
|
Posted: 14 Aug 2016 04:40 PM PDT –எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா காந்திமகான் எனும்பெயரில் வந்துநின்ற பெருவெளிச்சம் கருமைநிறை அடிமைத்தனம் கழன்றோடச் செய்ததுவே வெள்ளையரை விரட்டிவிட்டு விடிவுவந்த பாரதத்தில் கொள்ளையரை விரட்டிவிட வருவாரா காந்திமகான்? உண்ணாத நோன்பிருந்து உயிருடனே வதைப்பட்டும் கண்ணான சுதந்திரத்தைக் கண்டுவிடப் பாடுபட்டார் மண்மீது மனிதர்க்கு மானமுடன் சுதந்திரமும் என்றுமே தேவையென எண்ணிநின்றார் காந்திமகான்! காந்தியது சாத்வீகம் கண்டுநின்ற வெற்றியினால் கணக்கற்றோர் காந்திய வழிநடக்கப் புறப்பட்டார் தேசமதைச் சிந்தைவைத்துச் சிறைசென்றார் பலபேரும் தேசப்பிதா காந்திமகான் தெய்வமென உயர்ந்துநின்றார்! […]
|
|
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்! Posted: 14 Aug 2016 04:36 PM PDT –ரா. பார்த்தசாரதி எழுபது ஆண்டுகள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தோமா? இன்றைய நாட்டின் நிலைமை அறிந்து செயல்படுகின்றோமா? எதிலே முன்னேற்றம் கண்டோம் என அறிந்தோமா? சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என உணர்ந்தோமா?! ஒரு பக்கம் மனித மேம்பாடு, தொழில் மற்றும் விஞ்ஞான வளர்ச்சி மறுபக்கம் காட்டையும், விளை நிலங்களையும் அழிக்கும் முயற்சி நிலங்களைக் கூறு போட்டு விற்கும் அவலத்தைத் தடுப்பாருண்டோ? அரசாங்கமே இதற்குத் துணைபோனால் நீதி நிலைப்பதுண்டோ? நடுநிசியில் பெண் பயமின்றி வருவதே உண்மைச் சுதந்திரம் பட்டப் பகலில் பெண் […]
|
|
Posted: 14 Aug 2016 04:35 PM PDT -நிர்மலா ராகவன் “நல்லா யோசிச்சுப் பாத்தியா, சியாமளா?” தந்தையின் குரலில் கவலை மிகுந்திருந்தது. மூன்று வருடங்களோ, இல்லை ஐந்து வருடங்களோ சேர்ந்து வாழ்வதற்கா கல்யாணம்? ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்களே!பெற்ற ஒரே பெண்ணுக்குத் தன் முயற்சியால் ஒரு கணவனைத் தேடித்தர டியவில்லையே என்ற அவருடைய நீண்டகால வேதனை இன்னும் மிகுந்தது. “சதீஷ் காண்ட்ராக்டிலே வந்தவன்! அது முடிஞ்சதும் வந்தஊருக்கே திரும்பிப்போயிடணுமேம்மா!”கட்டிடவேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு விபத்தால் முதுகில் பலத்த அடிபட,சில ஆயிரம் நஷ்ட ஈடு பெற்று வீட்டிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டியநிலை தனக்கு ஏன் வந்தது என்று மீண்டும் மீண்டும் குமைவதைத் தவிர, உருப்படியாக என்னசெய்ய முடிந்தது தன்னால்? எட்டு வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்ட சியாமளா தொழிற்சாலையில் வேலை செய்வதால்தான் குடும்பமே ஓடுகிறது. இந்த நிலையில் பேச தனக்கு என்ன அருகதை? “சதீஷ்தானேதான், நாம்ப ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’ன்னு கேட்டாருப்பா,” அவருடைய அனுமதியை வேண்டி நின்ற மகளைப் பார்த்து மெல்லச்சிரித்தார் சுப்பையா. “ஒனக்குச் சரின்னு பட்டா, சரிதான்!” சதீஷ் அவர்கள் வீட்டுக்கு வந்தபோதே இப்படி ஓர் எண்ணம் அவனுக்குள் இருக்கும் என்று அவர் பயந்திருந்தது நிஜமாகப் போயிற்றே! பங்களா தேஷிகளுக்கே உரிய கவர்ச்சியான கண்களும், நீண்ட மூக்கும் எவரையும் கவர்ந்துவிடும். அத்துடன், அவனுடைய கடுமையான உழைப்பும், சேமிக்கும்திறனும்! இதைவிட அருமையான துணை சியாமளாவுக்குக் கிடைக்க முடியாது என்பதென்னவோ உண்மை என்று ஒரு சிறுகசப்புடன் ஒத்துக்கொண்டார் சுப்பையா. ஆனால், இருவருக்குமிடைய ஒரு பெரிய வித்தியாசம் இருந்ததே! இருபத்தெட்டுவயது இளைஞன் சதீஷ். சியாமளாவோ இருபத்தெட்டு வயதாகியும், பல வரன்கள்பெண்பார்க்க வந்துவிட்டு, `பெண் கறுப்பு!’ என்று தட்டிக்கழிக்கப் பார்த்து, பின் சற்றுஇறங்கிவந்து, எவ்வளவு பவுன் நகை போடுவீங்க?’ என்று பெரிய மனது பண்ணிப் பேரம்பேசிவிட்டு, வியாபாரம்’ படியாததால் ஒதுங்கிப் போனதன் பலனாக,உள்ளுக்குள்ளேயே மறுகிக்கொண்டிருப்பவள். பிறர் அவளை நிராகரித்துவிட்டுப் போகும் ஒவ்வொரு முறையும், தன் ஏமாற்றத்தைமறைத்துக்கொண்டு, `வயசான காலத்திலே ஒங்களுக்குத் துணையாதான் இருந்துட்டுப் போறேனேப்பா!’ என்று சமாதானப்படுத்துவாள் சியாமளா. `இவ்வளவுபேசிட்டு, கட்டிக்கிட்டதும், குடிப்பான். அடிப்பான். நான் சம்பாதிக்கிறதையும்பிடுங்கிப்பான். அதான் அன்னாடம் பாக்கறேனே அந்தக் கண்ராவியை! மூஞ்சியெல்லாம் ரத்தக்காயமா வர்றாளுங்க ஒவ்வொருத்தியும்! நான் சுதந்தரமாஇருந்துட்டுப்போறேனே!’ வெளியில் வீறாப்பாகப் பேசினாலும், பழைய தோழிகளைஅவர்கள்பிள்ளைகுட்டிகளுடன் பார்க்கும்போது, அவள் மனம் பொருமத்தான் செய்தது. இப்போது அவளையும் ஒருவன் மணக்க விரும்பி, வேண்டுகிறான்! பெருமையாக உணர்ந்தாள். “அப்பா! கல்யாணத்துக்கு அப்புறம் அவரும் நம்பகூட இங்கதான் வந்துதங்கப்போறாரு. ஒங்களைவிட்டு எங்கேயும் வரமாட்டேன்னு கண்டிசனாசொல்லிட்டேன்ல!” தன் நன்றியை ஒரு புன்முறுவல் மூலம் வெளிப்படுத்தினார் சுப்பையா. “சாயந்திரம் ஸ்டூடியோவுக்குப் போய், நான் ஒரு போட்டோ எடுத்துக்கணும். அவரோட அம்மாவுக்கு அனுப்ப!” சுப்பையாவின் முகத்தில்படர்ந்த கலவரத்தைப் பார்த்துச் சியாமளாசிரித்தாள். நம்ம தமிழாளுங்க மாதிரி நினைச்சுட்டீங்களா இவரையும்? அழகு, கலர், அந்தஸ்து- இப்படிஎதிலேயாவது குறை கண்டுபிடிச்சு, மத்தவங்களைக் கேவலமா பேசறதாலேயேஅவங்க என்னமோ ஒரு படி ஒசந்து இருக்கிறதா நினைக்கிற சின்னப் புத் […]
|
Posted: 14 Aug 2016 04:31 PM PDT –கிரேசி மோகன் கோனிங்(கு) இமவான் குளிர்சா மரமிங்கு வானின் வளர்மதி வெண்கவரி – மானின்வால் ஆகமலை ஆளும் அரசனே இங்குமலை ஆக இருத்தல் அழகு….(13) கூச்சமுறும் கின்னரப்பெண் கூறை களைகையில் ஆச்சரியம் கொள்வாள்அதைப்பார்த்து – மூச்சிறைக்க மேகம் குகைவாசல் போகும் திரையாக மோகத் துணைபோகும் மஞ்சு….(14) தேவகங்கை நீர்த்திவலை, தேவதாரு தூமணம் மேவுமயிற் தோகை மிருதுவும் – தாவிவரும் காற்றில் கலந்திருக்கக் காட்டில் களைத்தவேடர் ஏற்றடைவர் ஏகாந்த மே….(15) ஏழுரிஷி கொய்தபின்பு எஞ்சும் உயிர்மொட்டை வாழும் […]
|
|
படக்கவிதைப் போட்டி 76-இன் முடிவுகள் Posted: 14 Aug 2016 04:30 PM PDT -மேகலா இராமமூர்த்தி இந்தவாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இதனைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருப்பவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமை இதழின் நன்றி! மாலை மரியாதையோடு(!), கயிற்றிலே கட்டுண்டிருக்கும் (பலி)ஆடும், தன் உயிருக்கு நேரவிருக்கும் துன்பத்தை அறியாது தரையிலே கிடக்கும் சேவலும் கொல்லாமையை விரும்பும் நல்லோர் மனத்தை நடுங்க வைக்கின்றன. புத்தரும், எண்ணிறந்த சித்தரும் நம் மண்ணில்தோன்றி ”உயிர்க்கொலையைக் கைவிடுக!” என்று கடிந்துரைத்துப் பயனென்ன? அக்கொடுமைகள் […]
|
|
இலக்கியம் எழுதாத நட்பு (ஏழாம் பகுதி ) Posted: 14 Aug 2016 03:48 PM PDT க. பாலசுப்பிரமணியன் நண்பா..! கொடுத்துச் சிவந்த கைகள் உனக்கு…! வாங்கிச் சிவந்த கைகள் எனக்கு….!! கருவிலே அசைவையும் .. உருவிலே வடிவையும் ….. கண்ணிலே ஒளியையும் . கருத்திலே அறிவையும் கருணையாய்த் தந்தாய் ! உதட்டிலே சிரிப்பையும் உள்ளத்தில் உவகையும் உதிரத்தில் துடிப்பையும் உறவினில் அன்பையும் .. அளவின்றிக் கொடுத்தாய் ! வாங்கியே வளர்ந்தவன் வாழ்வினில் கொடுத்தேனோ ? எனதென்று எனதென்று .. நானுரைக்க.. நாற்புறமும் கதவொன்று திறந்திருக்க.. வந்ததும் நிற்கவில்லை.. வருவதும் நிற்பதில்லை..!! வருவதும் […]
|
|
Posted: 16 Aug 2016 09:03 AM PDT க. பாலசுப்பிரமணியன் சிந்தனையின் வழித்தடங்கள் கற்றல்-புரிதலை ஒரு தனி மனிதனின் சூழ்நிலைகளும் முந்தய அறிவும் அனுபவங்களும் அதிகமாக பாதிக்கின்றன. ஆகவே ஒரு கற்றலுக்கான நிகழ்வு ஏற்படும் பொழுது அது அந்தத் தனி மாணவனின் உணர்வுகளை பெரிதும் மாற்றக்கூடும். கற்றல் ஒரு உணர்வு சார்ந்த செயலாக இருப்பதாலும் முந்திய அனுபவங்களோடு இணைந்து செயல் படுவதாலும், படிப்பித்தலுக்கும் கற்றலுக்கு இடையே அதிகமான இடைவெளி இருக்க வாய்ப்புக்கள் உண்டு. உதாரணமாக, தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு மாணவனிடம் “காஞ்சீபுரம் ” என்ற வார்த்தையைச் […]
|
Posted: 16 Aug 2016 08:42 AM PDT ‘’சூரி நாகம்மாள் ப்ளஸ் கிருஷ்ணா’’…. —————————————————————— ”சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி! வந்தேகிச் செல்லும் விளையாடி -உன்தேகம் பொய்யென்(று) உணர்ந்து புகலடை யாதவன்கால் மெய்யுணர் மானுட மாடு’’….கிரேசி மோகன்….
|
|
Posted: 16 Aug 2016 06:50 AM PDT கிரேசி மோகன் ”குமார சம்பவம்’’ —————————————– நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை தேகநீர் ராஜனுக்குத் தோழனும், -போகரெக்கை வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன் மேனாள் வயிற்று மகன்….(19) தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய் துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) -அக்கினியில் முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள் அன்பு இமவான் அகம்….(20) உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும் நற்சாதி செல்வ நிகழ்வேபோல் -அச்சாக மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி சங்கரியாய் வந்தாள் சதி….(OR) திங்களெனத் தோன்றினாள்ச தி….(21) தெளிந்த […]
|
|
இலக்கியம் எழுதாத நட்பு (ஆறாம் பகுதி) Posted: 13 Aug 2016 05:05 PM PDT க. பாலசுப்பிரமணியன் நண்பனே யாமிருக்க பயமேனென சொல்லும் நீ .. பயத்தை ஏன் படைத்தாய் ? பயத்தையும் தந்து அதிலிருந்து .. என்னைக் காப்பாற்றுவதில் உனக்கு என்ன மகிழ்ச்சி ? கண்ணைக் குத்திவிடுவாய் நீ…….. காரிருளில் பேயாய் வருவாய் நீ…………….. முருங்கை மரத்தில் மறைவாய் நீ……….. .. என்றெல்லாம் சொல்லி… கிள்ளையான என் மனத்தில் .. களங்கத்தை ஏற்படுத்தியது யார்? அகிலமெல்லாம் உன்நிழலே என்றால் நானும் உன்நிழல் தானே? என் நிழலை கண்டு…. உன் நிழலைக் […]
|
|
Posted: 16 Aug 2016 11:06 PM PDT ‘’அர்ஜுன அனுபவம் -கண்ணனை கிருபாளு மஹாராஜாகக் காணல்’’….! ———————————————————————————————————————— ‘’பார்த்தன் பரவச, பாலன் கிருபாளர் சேர்த்தணைப்பு கோவின் சிசுபசுவை: -நார்த்தங்காய் கன்றதற்கு அச்சுதன் கல்லுப்பு கண்டதில் வென்றது வில்சோர்வை விட்டு’’….கிரேசி மோகன்….!
|
|
இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-24 Posted: 16 Aug 2016 05:01 PM PDT மீனாட்சி பாலகணேஷ் ஆராரெனத் தாலாட்டுகின்ற அரசே! வாழ்வின் மிகப்பெரிய அதிசயம் குழந்தைகள்தாம். ஒரு சிறுகுழந்தை நம்முடன் இருந்துவிட்டால் போதும், நேரம்போவதே தெரிவதில்லை. அதன் குறும்புகளும், மழலையும், விளையாட்டுகளும் சொல்லொணா இன்பத்தை வாரிவாரி வழங்க, அதனையெல்லாம் நாமும் மாந்திமாந்திக் களித்திருப்போம். எப்படி ஒவ்வொரு சிறுகுழந்தையும் ஒவ்வொருவிதமான அழகில் திகழ்கின்றதோ, அதே போன்று ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் புதுப்புதுக் கருத்துக்களில், நயத்தில், சொல்லாடலில் ஒளிர்கின்றது எனலாம். கீழே நாம் காணப்போகும் முருகப்பெருமான் மீதான பழனிப்பிள்ளைத்தமிழும் இவற்றுள் ஒன்றாகும். ***** நடைபழகக் […]
|
|
Posted: 16 Aug 2016 04:52 PM PDT –சுரேஜமீ இறைவன்: பாடலீஸ்வரர் இறைவி: கோதைநாயகி காப்பு நம்பினார்ப் பாடிடுவர் இப்பதிகம் தோன்றிநாதர் கும்பிட்டு மகிழ்வர் நிறை! தடையறு பதிகம் திருஞான சம்பந்தர் தேவாரம் பாடியுந்தன் பெருமை பறைசாற்றிப் பாதம் பணிந்திட்டார் திருப்பா திரிப்புலி யூருறை மன்னவனே ஒருபா உனைப்பாட வைத்திட்டாய் என்னை! (1) கல்லோடு அப்பரைக் கடலினிலே வீசிடினும் தில்லாய்க் கரைசேர்ந்தார் தோன்றிநாதர் அண்டியதால் நில்லாத் துயரமுமே நீங்கிடும் நின்னருளால் இல்லா இனிஇல்லை ஈசன் இருப்பிடத்தில்! (2) வேண்டியுனைக் கேட்கின்றேன் பாப்புலிவாழ் ஈசனே […]
|
Posted: 16 Aug 2016 04:50 PM PDT –கிரேசி மோகன் ‘’சூரி நாகம்மாள் ப்ளஸ் கிருஷ்ணா’’ ———————————————— ”சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி! வந்தேகிச் செல்லும் விளையாடி – உன்தேகம் பொய்யென்(று) உணர்ந்து புகலடை யாதவன்கால் மெய்யுணர் மானுட மாடு’’
|
Posted: 16 Aug 2016 04:46 PM PDT –கிரேசி மோகன் நாகபுரிக் கன்னிகையர் நாதனும், கத்துமலை தேகநீர் ராஜனுக்குத் தோழனும், – போகரெக்கை வானாள்வோன் வாளால் வலியறியா மைனாகன் மேனாள் வயிற்று மகன்…(19) தக்கனவன் பெண்ணாக, முக்கண்ணன் பத்தினியாய்த் துக்கஅவ மானத்தால் தன்னுடலோ(டு) – அக்கினியில் முன்பு புகுந்தவள் பின்பு புகுந்தனள் அன்பு இமவான் அகம்….(20) உற்சாகம் நீதி ஒன்றிணைய உண்டாகும் நற்சாதி செல்வ நிகழ்வேபோல் – அச்சாக மங்களமாய் மாயிமவான் மேனாள் மகளாகி சங்கரியாய் வந்தாள் சதி….(அல்லது) திங்களெனத் தோன்றினாள்ச தி….(21) தெளிந்த திசைகளாய், […]
|
vallamai |
|
சூரிய சக்தியில் மனிதன் இயக்கி ஒருநாள் பறந்த முதல் வானவூர்தி Posted: 18 Aug 2016 03:57 AM PDT (ஜூலை 8, 2010) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா தட்டாம்பூச்சி போல் பறக்குது ! தரணியில் முதலாய்ப் பறக்குது ! பரிதியின் சக்தியால் பறக்குது ! எரிசக்தி இல்லாமல் பறக்குது ! பகலிலும் இரவிலும் பறக்குது ! பசுமைப் புரட்சியில் உதித்தது ! பாதுகாப் பாய்க் கீழ் இறங்குது ! நாற்பது குதிரைச் சக்தியில் நான்கு காற்றாடி உந்துது ! பனிரெண் டாயிரம் செல்கள் பரிதிச் சக்தியை அளிப்பது ! ஒற்றை விமானி ஓட்டுவது […]
|
Posted: 18 Aug 2016 03:50 AM PDT ”சுத்தி விளையாடும் ஜீவன்கள் ஆன்மனை எத்தி விடாதது ஏந்துது -பத்திரக்கை: ஆனால் பசுக்களுக்கோ ஆட்டத்தில் ஆவேசம்: போனால் வராது பதி’’….கிரேசி மோகன்….!
|
Posted: 19 Aug 2016 02:46 AM PDT ’’கிளியலங் காரன் கிளிகொஞ்சும் கண்ணன் களிகொள்ளும் ஓவியத்தைக் காண , -தளிகையில் கைதவறி பாலில் கனிவிழுந் தாற்போல்: மெய்தவறா கிள்ளை முனி’’….கிரேசி மோகன்…. கிள்ளை -கிளி…. பாகவத எட்டைக் கொஞ்சிட பாகவதம் எழுதிய கிளி முக சுக முனி சப்த ரிஷிகள் சமேதராய் கிளி ரூபத்தில் எட்டாகிக் கண்ணனைக் கொஞ்சுகிறார்….! கிளிகொஞ்சும் கண்ணன் -அழகு….!கேசவ்….!
|
|
Posted: 18 Aug 2016 06:16 PM PDT கிரேசி மோகன் தூரிகையால் சித்திரம் தேர்ச்சி யுறுதலாய் சூரியனால் தாமரையின் சோபையாய் -காரிகையாய் யவ்வனத்தைப் பார்வதி எட்டினள் மெல்லமெல்ல அவ்வனப்பே ஆரா அழகு…(31) பட்டழுந்த பூமியில் பார்வதி செல்கையில் கட்டை விரல்நகம் கொப்பளித்த -இட்ட பதச்செந் நிறத்தால் பதுமத்தை மண்ணில் விதித்தெடுத்துச் சென்றாள் விரைந்து….(32) அழைக்கும் சிலம்பொலியை அன்னப் பறவைகள் கழைத்தோள் பார்வதிபால் கற்க -குழைந்தவள்முன் தக்ஷிணையாய் தம்மன்னத் தத்திநடை தந்துவிட்டு சிக்ஷைக்காய் ஏந்தும் சிறகு….(33) ஒயிலாய் உருண்டு ஒழுங்காய்த் திரண்ட கயிலாயப் பெண்முழங் காலை -அயனவன் […]
|
|
Posted: 18 Aug 2016 04:38 PM PDT -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா பூமியில் பிறந்தமுதல் பூமிக்குள் போகும்வரை தான்பெற்ற பிள்ளைக்காய்த் தனையிழப்பாள் தாயாவாள் சேயதனின் வாழ்வினுக்காய்ச் செலுத்திடுவாள் தன்னலத்தைப் பூதலத்தில் தெய்வமாய்ப் பொலிந்திடுவாள் தாயாவாள் ஆரென்ன சொன்னாலும் அதைமனத்தில் ஏற்றாமல் பேரெடுத்துப் பிள்ளைவாழ பெரும்பொறுப்பைத் தான்சுமந்து ஊருணரச் செய்துநிற்பாள் உண்மையிலே தாயாவாள்! நிலத்திலே வந்தபிள்ளை மலத்திலே கிடந்தாலும் மனத்திலே மகிழ்ச்சியுடன் அதைச்சுத்த மாக்கிநின்று கலத்திலே சோறிருந்தும் கவனமதில் கொள்ளாமல் அணைத்துமே மகிழ்ந்திடுவாள் அருமைமிகு தாயாவாள்! மார்பணைத்துப் பால்கொடுக்கும் தாயவளின் […]
|
|
Posted: 18 Aug 2016 04:29 PM PDT அவ்வை மகள் பெண்ணார்ந்த சூட்சமங்கள் யாவற்றையும் விநாயகர் அகவலில் பொதித்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் அவ்வையின் கருத்து என்ன என்று சொல்வதாகச் சொன்னீர்களே என்று அந்த இராணுவ அதிகாரி தொடர்ந்து வினவினார் – என் உரையாடல் தொடர்ந்தது. பெண்ணின் மூலாதாரத்தில் வெப்பம் உருவாகிறது என்றும் அந்தக் கனலின் உஷ்ணத்தை, பெண்ணின் பலவேறு உறுப்புக்களில் காணமுடிகிறது என்றும் பார்த்தோம் அல்லவா?. பெண்ணின் பல்வேறு உறுப்புக்களில் உஷ்ணம் எதிரொளித்ததாலும், மூலாதாரத்தில் உஷ்ணம் தேங்கி – அங்கேயே தங்கி […]
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (206) Posted: 18 Aug 2016 04:03 PM PDT சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். இதோ மற்றொரு வாரம், மற்றொரு மடலுடன் உங்கள் முன்னே. உலகம் சுற்றிக் கொண்டே இருப்பதினால் தானோ என்னவோ வாழ்க்கையும் ஒரு சுழற்சி போலத் தென்படுகிறது. சுழற்சியில் முன்பு வந்த இடத்தை மீண்டும் வந்து தொடுவது போல வாழ்விலும் சில சமயங்களில் பழைய நிலை மீண்டும் திரும்புவது போன்ற ஒரு உணர்வு எமக்கு ஏற்படுவது உண்டு. இங்கிலாந்தில் நடக்கும் நடைபெறும் நிகழ்வுகளின் அடிப்படையில் எனது பார்வையில் அதன் தாக்கங்களையும், விளைவுகளையும் […]
|
|
Posted: 21 Aug 2016 03:15 AM PDT பவள சங்கரி தலையங்கம் துணை ஆளுநராக இருக்கும் உர்ஜித் பட்டேல் அவர்கள் தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்களைத் தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன் 10 உதவி ஆளுநர்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 52 வயதான பட்டேல் அவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். ஒருவருக்கு பதவிப் பொறுப்புகள் கொடுக்கும்போது அதிகப்படியான ஆண்டுகள் பொறுப்புகள் கொடுத்தால் அவர்களுடைய பணியை மேலும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பளிக்கும். குறுகிய காலங்களில் புதிய […]
|
Posted: 21 Aug 2016 02:16 AM PDT கிரேசி மோகன் ————————————– சஞ்சாரி நாரதர், சக்களத்தி அற்றவளாய் பஞ்சாப கேசனுடல் பாகியாய் -பெஞ்சாதி பார்வதியென்(று) ஆக்கும் பனிமலை மன்னனே பார்விதி என்றார் பலத்து….(49)…. தும்புருவின் வாக்கில் திளைத்ததில் தந்தையும் தம்பருவப் பெண்மணம் தாமதித்தான் -தென்புறும் வேறுவாய்த் தீயினுள் வேள்வியவிர் பாகத்தை தாரைவார்ப் பாரோ தெரிந்து….(50)…. வரம்கொட்டும் சாமி வரன்கேட்டுச் சென்றால் தரம்பார்த்(து) இகழ்ந்திடுமோ தன்னை -வரையுற்றோன் கேட்டு மறுத்துவிட்டால் கேலிப் பொருளாகும் பாட்டை நினைத்துவிட்டான் பற்று….(51)…. அப்பனிடம் கோபித்து அப்பார்வதி தன்னுடலை எப்போது தீயில் எரித்தாளோ […]
|
Posted: 20 Aug 2016 11:54 PM PDT ”தும்பிக்கை தேடுது , தம்பிக்கை கூடுது எம்பிக்கை கூப்ப எதுவுமில்லை! -நம்பிக்கை அஞ்சறிவு(யானை) கொண்டாற்போல், ஆறறிவு(நாம்) கண்மூட, அஞ்சலென்(று) ஆறு(யமுனா) அணைப்பு’’….!கிரேசி மோகன்….!
|
|
பிரபஞ்சத்தில் புதிய ஐந்தாம் விசை இருப்பதற்குச் சான்று உள்ளதை விஞ்ஞானிகள் உறுதியாக அறிவிப்பு Posted: 20 Aug 2016 06:56 PM PDT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ +++++++++ கடந்த பத்து ஆண்டுகளாய் அடிப்படையாய் நாமறிந்தது நான்கு அகில விசைகள். ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுத்த, தளர்ந்த அணுக்கரு விசைகள். புதிய கண்டுபிடிப்பு புரட்சிகரமான ஐந்தாம் விசை ! கருமை விசை ! அது கருமை ஒளித்திரளா அன்றி கருந்துகளா ? பிண்டத் துகளா அன்றி விசை தூக்கும் துகளா ? ஹிக்ஸ் போஸானுக்குப் பின் கண்ட ஒட்டு விசைத் துகள் அது எக்ஸ் […]
|
Posted: 22 Aug 2016 02:45 AM PDT ”திருப்பாவை ராகத் திருமண மாலை திருத்துழாய் மார்பில் தரித்து -கருப்பைத்தன் காதலனாய் ஏற்றனள் கோதைஅவ் ஆண்டாளே ராதையாம் ராகம்மா றாள்’’….கிரேசி மோகன்….! ராகம்மா றாள்-விடாது (காதல்) கருப்பை…..!(விடாது கருப்பு என்று ஒரு தமிழ் சீரியல் வந்தது….கேசவ்வை ‘’விடாது கருப்பு’’(கண்ணன்)….!
|
|
Posted: 22 Aug 2016 01:47 AM PDT கிரேசி மோகன் ————————————— சர்கம் -2 ————- அந்த சமயம், அசுரனாம் தாரகனால் நொந்த சுரர்கள் நடுநடுங்க -வந்தனர் முன்னிருத்தி இந்திரனை முப்பது முக்கோடியும் கண்ணிருநான் கோன்முன் குவிந்து….(60) சீதளத் தாமரை சூழ்தடாகக் கண்ணுக்கு போததி காலை புலப்படும் -ஆதவன்போல் வாடிய வானவர்முன் கூடிய வாசலில் பாடிடும் நூலோன் பிறப்பு….(61) நாற்புறமும் பார்க்கவல்ல பார்ப்பனனை, பல்லுயிரை தோற்றுவிக்கும் நற்கல்வித் தூயவனை -ஆர்பரித்து தேவர்கள் தோத்திரமாய் தேவன் திருமுகத்தில் தூவினர் சொற்பூ தொழுது….(62) (OR) வான்முதல் பார்வரை வேய்ந்துயிர் […]
|
Posted: 21 Aug 2016 11:04 PM PDT செ. இரா.செல்வக்குமார் இந்த வாரத்தின் வல்லமையாளர் அனைவரும் எதிர்பார்த்திருந்த 2016 இரியோ-தி-செனரோ ஒலிம்பிக்குப் போட்டிகளில் ஒற்றையர் பெண்கள் இறகுப் பந்தாட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பு. வே. சிந்து (P.V. Sindhu) அவர்களே . அகவை 21 நிரம்பிய, தெலிங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரின் தந்தையார் திரு. பு.வே. இரமணா அவர்கள் இந்தியாவின் அருச்சுனா விருதை வென்றவர். சிந்து அவர்களின் தாயார் தந்தையார் ஆகிய இருவருமே புகழ்பெற்ற கைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள். […]
|
|
Posted: 21 Aug 2016 06:23 PM PDT க. பாலசுப்பிரமணியன் கற்றலின் போது மூளையில் ஏற்படும் தாக்கங்கள் இத்தாலியைச் சேர்ந்த வின்சென்ஸ்ஸோ மாலாகார்னே (Vincenzo Malacarne) என்ற 18 ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஞ்ஞானி மூளையின் பலவிதமான செயல்களைப் பற்றி ஆராய்ந்தபொழுது சில அறிய நுணுக்கமான திறன்களைக் கண்டறிந்தார். அவர், சில கற்கும் திறன் உள்ள பறவைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் சிறுமூளைப் பகுதியினை ஆராய்ந்தபொழுது அதில் ஏற்பட்டுள்ள மடிப்புக்களையும் பதிவுகளையும் அறிந்தார். பின்பு அந்தப் பறவைகளை சில நாட்களுக்கு புதிய சில தந்திரங்களையும் திறன்களையும் பழகிக்கொள்ளவும் […]
|
|
ஓர் அபூர்வக் கவிஞனின் அகால மரணம்! Posted: 21 Aug 2016 05:22 PM PDT -மேகலா இராமமூர்த்தி மனிதன் சக மனிதர்களோடு பல்வேறு சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காகப் போராடுவதோடல்லாமல் நோய்களோடும் போராடவேண்டிய அவலநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சில நோய்கள், உடலை வாடகை வீடாய் நினைத்துச் சிலகாலம் மட்டும் அங்கே குடியிருந்துவிட்டுத் தக்க மருந்துகள் எனும் தாக்குதல் ஏற்பட்டால் சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடிக்கும். வேறுசில நோய்களோ உள்ளிருப்பதே தெரியாமல் திருடன்போல் ஒளிந்திருந்து, முற்றியபின்பு திடீரென்று வெளிப்பட்டு மனிதனைத் தாக்கும். இதுபோன்ற சங்கடமான சூழ்நிலையில், நோயாளி நோயை வென்று […]
|
|
Posted: 21 Aug 2016 05:04 PM PDT நிர்மலா ராகவன் பரீட்சைப் பயம் `இது சாதாரண பள்ளிக்கூடப் பரீட்சைன்னு அலட்சியமா இருக்காதீங்க! இப்போ வாங்கற மார்க்கைத்தான் பப்ளிக் எக்ஸாமிலும் வாங்குவீங்க!’ பல மாணவர்களும் கேட்டு நடுங்கிய எச்சரிக்கை. இப்படியெல்லாம் பயமுறுத்தினால்தான் மாணவர்கள் ஒழுங்காகப் படித்து, நல்ல மதிப்பெண்கள் வாங்குவார்கள், நமக்கும் மரியாதையோ, பதவி உயர்வோ கிடைக்கும் என்றெண்ணி பல ஆசிரியைகள் இம்முறையைக் கையாளுவார்கள். `படிப்பு’ என்றாலே பயம் உண்டாகும் என்பதுதான் உண்மை. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நான் புத்தகங்கள் படிப்பது கண்டு, `எப்படித்தான் உனக்குப் படிக்கப் பிடிக்கிறதோ!’ […]
|
|
Posted: 21 Aug 2016 04:57 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.08.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். […]
|
|
Posted: 21 Aug 2016 04:53 PM PDT –பொன். இராம் மனம் தெளிவுபட மருந்துக் கவிதையானாய்! பாழ்பட்ட திரையுலகைப் பண்படுத்த வேரானாய்! என்னை மட்டும் ஏன் பயன்படுத்த மறந்தாய் மானிடனே? சிற்பி வடித்த சிலைகளாய் மனித உள்ளங்களைச் சீர்திருத்திய நீ உடல்நலம் காக்க என்னை மட்டும் ஏன் மறந்தாய்? முத்தான கவிதைகளை முத்துக்குமரனாய் முருகவேள் தந்த தமிழை வளர்த்த உன் புகழைத் தீந்தமிழ்க் கவிதை நெஞ்சங்கள் என்றும் பாடும்! பணம் தர மறுத்த வெற்று உயிர்க் காசோலைகள் அல்ல நாங்கள்! அடுத்த பிறவி அருமையாய் உனக்கு […]
|
|
தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிரிவாக்கமும் சுற்றுச்சூழல் சீர்கேடும் Posted: 21 Aug 2016 04:51 PM PDT –ரா. மூர்த்தி தமிழர்கள் நிலங்களை ‘நிலம், ‘திணை’ சார்ந்து அடையாளப்படுத்துவதற்கு இயற்கையும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலுமே காரணமாக அமைந்தது. இதனைத் தொல்காப்பியம் ’ஐவகை சார்ந்த திணைக்கோட்பாடு’ என்கிறது. தொல்தமிழர்கள் இனக்குழுவாழ்க்கை, கூட்டுவாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, சமூக வாழ்க்கை வாழ்ந்ததற்கான பண்பாட்டு இறுமையாக அடையாளமாகவும் இனங்கானுகிறது. தமிழ்ச்சமுதாயம் நிலப்பின்னணியில் குறிஞ்சி – மலை, முல்லை – காடு, மருதம் – வயல், நெய்தல் – கடல் என வகுப்பட்ட நிலையில், அந்தந்த நிலத்திற்கு முதல்பொருள், கருப்பொருள், […]
|
|
Posted: 21 Aug 2016 04:49 PM PDT எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா உள்ளத்து உணர்வுகளை உலகினுக்கு எடுத்துரைக்கும் கள்ளமில்லா மனமுடயார் கவிதைகள்தாம் வாழ்கிறது வள்ளுவரின் கவிதையின்று வையகத்தில் நிலைப்பதற்குக் கள்ளமில்லா அவர்மனமே காரணமாய் ஆகியதே! எல்லோரும் வள்ளுவராய் இருந்துவிட முடிவதில்லை என்றாலும் இயன்றவரை ஏற்றதையே எடுத்துரைப்பார் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நாளுமவர் தந்துவிடின் நாட்டிலுள்ளார் மனங்களிலே நன்மதிப்பைப் பெற்றிடுவார்! சங்ககாலக் கவிதையெலாம் நாம்படித்துப் பார்த்துவிடின் இங்கிதமாய்ப் பலகருக்கள் இருப்பதையும் உணர்ந்திடலாம் எங்களது தமிழ்மொழியின் மங்காத செல்வங்களாய் இருக்குமந்த அருமையினை எல்லோரும் அறிந்திடலாம்! சொற்சுருக்கம் சுவைநுணுக்கம் அத்தனையும் அரவணைத்துச் சுந்தரத்தமிழ் […]
|
|
Posted: 21 Aug 2016 04:37 PM PDT இன்னம்பூரான் ‘சுகவனம்’ என்ற இந்த தொடர் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று துவக்கப்பட்டதின் நீடிப்பு. உரியகாலம் இப்போது தான் வந்ததோ என்னவோ? சுகவனம் இயற்கை வளம் பொருந்திய கானகம் என்க. அது அவரவர் ஆரோக்கியத்தை அவரவரே கண்காணித்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தின் உருவகம். அந்த விழிப்புணர்ச்சிக்கு அரசும், சமுதாயமும், மருத்துவ உலகமும் கைகொடுக்கவேண்டும். அவ்வாறு அவர்கள் இயங்காவிடின் அவர்களை நாம் வற்புறுத்தி, நல்வழிக்குக் கொணரவேண்டும். சான்றாக, கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் அகாலமரணம் கலையுலகுக்கும், கவிதையுலகுக்கும் மாபெரும் இழப்பு. […]
|
|
Posted: 21 Aug 2016 04:36 PM PDT –செண்பக ஜெகதீசன் மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (திருக்குறள்-51–வாழ்க்கைத்துணைநலம்) புதுக் கவிதையில்… மனையறம் போற்றிடும் மாண்பினளாய், மணாளன் வருவாய்க்கேற்றவாறு மணவாழ்வு அமைத்துக்கொள்பவள்தான், மெய்யான வாழ்க்கைத்துணை…! குறும்பாவில்… மனையற மாண்புடனே கணவன் வருவாயறிந்து வாழ்பவளே, உறவாம் வாழ்க்கைத்துணை…! மரபுக் கவிதையில்… மனையறம் நன்றாய்த் தெரிந்துகொண்டே -மாண்புடன் வாழும் மனையாளாய், அனைவரும் மெச்சும் வகையினிலே -அன்பொடு ஆருயிர்க் கணவனவன் தனையும் பேணியவன் வருவாய்க்குத் –தக்க வாறு வாழ்பவளே நினைக்கப் படுவாள் நீணிலத்தில் […]
|
|
Posted: 21 Aug 2016 04:33 PM PDT மலர்சபா *மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை* அங்ஙனம் அவள் எறிந்த நேரத்தில் நீல நிறத்தையும் செந்நிறமான நீண்ட சடையையும் பாலைப் போன்ற வெள்ளிய எயிற்றையும் உடைய பார்ப்பன வடிவத்துடன் நன்றாக இருக்கின்ற எதையும் எரிக்க வல்ல தீக்கடவுள் வெளியே வந்து, “நிறைந்த கற்புடையவளே! இந்நகர் உனக்கு மிகவும் தவறிழைத்துவிட்டது. பரந்த நெருப்புக்கு இந்நகரை இரையாக்கும் ஏவலை நான் முன்னரே பெற்றுள்ளேன். இங்கே யார் மட்டும் பிழைத்திருக்க வேண்டும்?”எனக் கண்ணகியைக் கேட்டது. *கண்ணகியின் கட்டளையால் மதுரையில் தீ […]
|
|
Posted: 21 Aug 2016 04:24 PM PDT க. பாலசுப்பிரமணியன் (1974-ம் ஆண்டு சென்னை கடற்கரைக் கவியரங்கத்தில் படிக்கப்பட்டு பதிவுசெய்த கவிதை.. மறுபகிர்வு) பத்து முறை பிறப்பவனே இன்றொரு முறை பிறந்தாலென்ன ! பச்சைப் புற்கள் பசுமை மரங்கள் பழைய நினைவுகள் மறைந்தாலென்ன ? படைத்த உலகைப் பாவி மனிதரை படைத்தவனே அழித்தாலென்ன ? லஞ்சம் கொஞ்சும் நெஞ்சில் வஞ்சம் பஞ்சம் நட்டம் பாவம் மிச்சம் ! கொடிய விடத்தைக் கொட்டும் தேளும் ஒதுங்கிச் செல்லும் ஓரம் பார்த்து ! பாவி மனிதன் பகட்டு […]
|
|
Posted: 21 Aug 2016 03:53 PM PDT ஸ்ரீதரன் காப்பாற்ற முடியாத நோய் புற்று நோய்.. திருமதி வேதவல்லி பார்த்தசாரதி புற்று நோயிலிருந்து ( 3வது ஸ்டேஜ்) மீண்டு வந்து 15 ஆண்டுகள் ஆகி விட்ட்து.. 32 கீமோதெரபி செய்து தலை மயிர் எல்லாம் போய் மொட்டை அடித்தது போன்ற தலையுடன் இருந்தவர் அவருடைய பாஸிடிவ் அப்ரோச் மூலம் . புற்று நோய் பாதிக்கப் பட்டவர்களுக்கு யோகா மூலம் மனவலிமை கிடைக்க உதவி செய்கிறார்.. புற்று நோயின் பயத்தைப் போக்கவும். நோயை நீக்கவும் உதவி செய்கிறார். […]
|
|
’’கண்ணன் பிறந்தான் நம்ம கண்ணன் பிறந்தான்’’….! Posted: 24 Aug 2016 03:49 AM PDT கண்ணன் பிறந்தது வெண்ணை உண்ணவா….அல்ல!….கம்சனைக் கொல்லவா….அல்ல!….ராதையைக் காதலிக்கவா….அல்ல!…..பாரதம் செய்யவா….அல்ல!….கீதை உபதேசிக்கவா….அல்ல!….பின்….!தனக்கு முந்தி வந்த ராமரைப் போல் பெற்றோருக்காக…..70துகளில் ர.மோகனாய் இருந்த அடியேன் ரவிவர்மாவைப் பார்த்து வரைந்தது(இணைத்துள்ளேன்)….கிருஷ்ண, பலராமர்கள் முதல் காரியமாய் செய்தது ‘’வசுதேவர், தேவகியை’’ சிறையிலிருந்து விடுவித்தது….!
|
Posted: 24 Aug 2016 02:13 AM PDT “தந்தைக்(கு) உபதேசம்(உப தேசம் ஆயர்பாடி) தந்தான் தலையமர்ந்து, நந்தனூர்(நந்தகோபன் ஊர்) சென்றான் நதிதாண்டி(யமுனா), -வந்தான் குடையாய் மழைக்கந்த கண்ணாயிரன்(1000கண் ஆதிசேஷன்) சேடன், இடையன் இணைப்பில் இரு’’….கிரேசி மோகன்….! (OR) -விந்தையவர் (அத்புத பாலன் அவதாரம்)- மாரி(மழை)வந் தாலும்ரா மானுஜர் காப்பிலிடைச்(நனையாது காத்து இடைச்) சேரியில் சேர்ந்த சிசு’’….கிரேசி மோகன்….!
|
|
Posted: 23 Aug 2016 06:10 PM PDT பவள சங்கரி . சிறீவில்லிப்புத்தூர் – கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்! சிறீவில்லிப்புத்தூர் என்ற இப் புனிதத்தலத்தின் காரணப் பெயர், சிறீ என்ற இலக்குமி அவதாரமான ஆண்டாள், வில்லி என்ற மன்னன் ஆண்ட பாம்பு புற்றுகள் நிறைந்த புத்தூரில் வாழுகிறாள் என்பதாகும். ஆண்டாள், பெரியாழ்வாருடன் வடபத்ரசாயி சுயம்புவாக அவதரித்த தலம் என்பதால் இது முப்புரி ஊட்டிய தலம். இறைச்சிந்தையில் இயைந்து ஈடுபடுபவர் என்ற பொருளில் வைணவ அடியார்களுக்கு “ஆழ்வார்’ எனும் பதம் வழங்கி வருகிறது. […]
|
|
Posted: 23 Aug 2016 05:23 PM PDT சரஸ்வதிராசேந்திரன் கொண்டை மயில் சீவி குழலூதும் கண்ணா கோபியர் கொஞ்சும் கோகுல கிருஷ்ணா மாய லீலை செய்யும் ஆயர்பாடி கண்ணா கேட்டதை கொடுக்கும் கீதையின் நாயகா குருவாயூரில் நிற்கும் குழந்தை கண்ணா மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து துவாரகையை ஆண்டவனே குன்றம் ஏந்தியே குளிர் மழை காத்து பசுக்கூட்டதைக் காத்தவனே கமலம் போன்றகண்ணா கண்ணாய் இருந்து காப்பவனே உன் வேய்குழலின் நாதம் வீசி வரும் கீதம் எங்களுக்கு வேதம் பாடிப்பணிவோம் உன் பாதம்
|
|
Posted: 23 Aug 2016 04:47 PM PDT -இன்னம்பூரான் செவ்வாய் 23 08 2016 மனம் என்பதின் இருப்பிடம், அதன் வழித்தடங்கள் பற்றிய ஆய்வுகள் கணக்கில் அடங்கா. விஞ்ஞான ரீதியாக, அது மூளையின் செயலே என்ற கருத்து தற்காலம் பெரிதும் பேசப்படுகிறது. ஆழ்மனம் என்றால், அது உடல் அவயவமாகவே தென்படுவதில்லை. ஆனால், நம்மை அதுதான் ஆட்டிப்படைக்கிறது என்பது அவரவர் அறிந்ததே. அந்த ஆட்டிப்படைத்தல் உடல் நலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதும் ஒரு அனுபவக்கூறு. நோயற்ற வாழ்வுக்கு மனோதிடம் உறுதுணை என்பதும் மறுக்க முடியாத சூத்திரம் […]
|
|
Posted: 23 Aug 2016 04:25 PM PDT க. பாலசுப்பிரமணியன் விநாயகர் வாழ்த்து முதலாய் வந்து முடக்கங்கள் நீக்கி முன்னும் பின்னும் முடிவினில் நிற்பாய்; முருகனின் முதல்வா, மூலப் பொருளே முன்னுரை நீயே மூஷிக வாகனா ! ஆறுமுகன் அருட்பா 1. நீள்முடித் தலையில் நிறைவளர் நிலவும் நீலக் கழுத்தினில் நெகிழ்ந்திடும் அரவும் நீறுடை நெற்றியில் நெருப்புடைக் கண்ணும் நினைத்ததும் நிறைந்த நலமே! 2. நலத்தைக் காத்திட நாடிய அமரரும் நான்முகன் நாரணன் நற்றவ முனிவர் நாதங்கள் ஒன்றிட நமச்சிவாய மென்றிட நாபியில் […]
|
|
Posted: 25 Aug 2016 12:35 AM PDT பவள சங்கரி கண்ணா! மணிவண்ணா! தத்துவஞான ஒளியே! மாயமாய் மனதினூடே ஒளிருமணியே! சேயே யானுனை நெஞ்சாரத் தழுவிடவே சேவடியைத் தொழுதிடவே வாடாயென் மன்னா! கொல்லன் உலையெனக் கொதிக்குமென் மனமே நில்லெனக் கருணைகூர்ந்து வரமொன்றருள்வாயே கல்லென்ற இதயம்கொண்டு எனைக் காணாமல் கொல்லெந்தன் பாவம்யாவும் பரம்பொருளோனே! ஊற்றைச் சடலமிதை உய்யும் வழியறியா உயிரிதை தரணிகாப்போன் தள்ளிநின்றே பார்ப்பதென்னே பைம்பொழில் மாதவனே பரிதவிக்கும் ஏழையெனை கடைக்கண்ணால் பார்த்தருளுமய்யா!
|
|
Posted: 25 Aug 2016 12:03 AM PDT பாடல்: ஆர்.எஸ்.மணி (கனடா) மெட்டு, பின்னணி இசை: கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாட்டு ————————————————————————————— வாழ்வே இதுதான்: சுழலும் உலகம் இரவும் பகலும் வருமே மாறியே (வாழ்வே) காலை ஒளியும் மாலை இருளும் (2) உறவும் முறிவும் வருமே மாறியே (வாழ்வே) சுற்றம் என்ன சூழல் என்ன நிலையானதாகுமோ (2) சொந்தம் என்ன பந்தம் என்ன செல்லாமலே நில்லுமோ? […]
|
|
இத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம் Posted: 24 Aug 2016 11:45 PM PDT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா பூமித்தாய் குலுக்கித் தோள சைத்தாள் ! இடிந்து தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! தரை மட்ட மாகின கட்டடங்கள் ! சட்டென மக்கள் சடலமாய்ப் புதைந்தார் ! கடற்தட்டு கால் உதைத்தால் படை யெடுக்கும் சுனாமி அலைகள் ! அடித்தட்டு தொடை அசைந்தால் இடித்திடும் அதிர்வுகள் ! நிலம்நடுங்கி நடனமிடும் புவித்தளம் ! குடற் தட்டு கூத்தாடி உடல் நடுங்கும், உயிர் நசுங்கும் ! நிலையாமை மெய்யாகும் ! […]
|
Posted: 24 Aug 2016 11:01 PM PDT ரா.பார்த்தசாரதி இராமன் பிறந்தது நவமி தினத்திலே கண்ணன் பிறந்தது அஷ்டமி தினத்திலே, இராமனும், கிருஷ்ணனும் இரு அவதாரங்களே உலகில் அநீதியை அழித்த தெய்வங்களே ஒருத்தி மகனாய் சிறையில் பிறந்தான் ஓர் இரவில் மாறி கோகுலத்தில் வளர்ந்தான் சிறு வயதில் பல லீலைகள் புரிந்தான் சிறு விரலால் மலையை குடையாகப் பிடித்தான் ஆநிரை மேய்த்து கோபாலகிருஷ்ணன் என பெயர்பெற்றான் மலையை குடையாக பிடித்ததால் கிரிதரன் என அழைக்கப்பட்டான் மஹாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டினான் கீதை என்னும் […]
|
Posted: 24 Aug 2016 10:17 PM PDT ”என்னதவம் செய்தார் யசோதையார் ஏந்திட தின்னதை காட்டும் திருடனை: -முன்னம் உலகேழை உண்டுமிழ்ந்த உத்தம சேயால் கலகாளி மாயை கலைப்பு’’….கிரேசி மோகன்….! கலகாளி(கலகம் புரி ப்ருகிருதி மாயை காளி….பிரயோகம்தான்….சரியில்லை என்றால்) பலகால மாயை பறப்பு’’(கண்ணன் பிறப்பில் காளி பறப்பு)….! “பரம்பொருள்பால் காரன் ,அறம்பொருள் இன்பம் வரம்தரும் காவலன், வீடு -தரும்அருள் நூல்படித்தான் அன்னைக்கு(முன்பு கீதை),பால்கொடுத்த அன்னைக்கு(தாய்க்கு) பால்வெளி(MILKY WAY) காட்டிப் பிறப்பு(கோகுலாஷ்டமி)”….கிரேசி மோகன்….
|
|
Posted: 24 Aug 2016 07:30 PM PDT -மீ.விசுவநாதன் பாடுறேன் பாடுறேன் பல்லாண்டு – என் பல்லாங் குழிமனச் சொல்லாண்டு கூடுறேன் ஓடுறேன் நிற்காமல் – பெருங் கூட்ட இரைச்சலைக் கேளாமல்! வஞ்சமோ துன்பமோ செய்யாமல் – மண் வாச உறவினைப் பேணுகிறேன் கொஞ்சமா கொட்டுறான் இன்பங்கள் – அக் கொலுவின் அழகிலே சொக்குகிறேன்! கண்ணனாய்ப் பிள்ளையாய் ஊரெங்கும் – தினம் களிகள் நடப்பதைக் காண்கின்றேன் வெண்ணெயாய் வெண்மையாய் உள்ளுக்குள் – என் வெப்பம் தணிப்பதை என்னென்பேன்! பச்சையாய்ப் புல்வெளி பார்த்தாலே – […]
|
|
Posted: 24 Aug 2016 05:00 PM PDT எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா பத்தியம் இருந்தும் பலவிரவு விழித்திருந்தும் நித்தமே தன்பிள்ளை நினைவாக மனமிருத்தி எத்தனையோ வேண்டுதலை இறைவனிடம் முறையிட்டும் பெத்தெடுப்பாள் பிள்ளைதனை பிரியமுடன் பேரன்னை ! பேச்சுவரா நிலையினிலும் பேசவைப்பாள் பேரன்னை […]
|
Posted: 26 Aug 2016 05:34 AM PDT கிஷ்கிந்தா மந்திகள் முன்பு ராமர் பாலத்திற்காய்(சேது பாலம்) மண்,கல் சுமந்தபோது, ஒரு அணிலும் மண் சுமந்தது….ராமர் அதன் முதுகில் பரிவாகப் பின்கோடிட்டார்…. அன்னை மிரட்டலுக்கு பயந்தது போல் நடித்து, ‘’ராமனாய் வந்த கண்ணன் தன்னை அணிலின் அவதாரம் என்று சொல்லி அன்னையை ஏமாற்றுகிறான்….அதை நம்பாமல் யசோதை வாய்திறக்கச் சொல்ல அன்னைக்கு வாய்க்குள் அகிலத்தைக் காட்டியது கண்ணன் லீலை….!சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து….! ”மந்திகோள் மாதாமுன் மூட்ட மணல்தெருச் சந்தியில் உண்டவன் சாகஸம்: -சந்திர வம்சத்தோன்(கண்ணன்) சூரிய வம்சத்து(ராமர்) சேதுவிற்காய்(சேது […]
|
|
Posted: 25 Aug 2016 09:35 PM PDT ’’அய்யங்காரர்களுக்கு இன்று ஸ்ரீஜயந்தி….வைஷ்ணவ ஜனதோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’’….! “ஏறுமயில் ஏறிவிளை யாடும்முகம் ஒன்று” மெட்டில் எழுதியது…. கண்ணன் திருப் புகழ் ————————– “கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”…. ’’ஏக பில்வம் சிவார்ப்பணம்’’ பில்வாஷ்டகம் படித்த பாதிப்பில் […]
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . .( 207 ) Posted: 25 Aug 2016 05:32 PM PDT அன்பினியவர்களே! அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலின் மூலம் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். ஒருவாரம்! ஆமாம் அந்த ஒரேயொரு வாரம் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் நிகழ்வுகளின் நீளம்தான் என்ன என்பதை நினைத்துப் பார்க்கையில் காலதேவனின் கணக்கிற்கும்,மனிதனின் கணக்கிற்கும் உள்ள வித்தியாசம் புரிகிறது! போனவாரம் அதே செவ்வாயன்று தூங்கப் போகும்போது இந்தவாரம் அதே செவ்வாய் இரவு தமது தேசத்தை நிலஅதிர்வு ஒரு உலுக்கு உலுக்கப் போகிறது என்பதை இத்தாலிய மத்தியப் பிரதேச மக்கள் அறிந்திருந்தார்களா என்ன? அதே போலப் போனவாரம் புதன்கிழமை வாழ்வைச் […]
|
|
ஆறுமுகன் அருட்பா (இரண்டாம் பகுதி ) Posted: 25 Aug 2016 04:56 PM PDT க. பாலசுப்பிரமணியன் 11 வடிவம் கண்டதும் வாட்டங்கள் நீங்கிடும் வழிகள் அறியாப் பயணங்கள் முடிந்திடும் வலிகள் நீங்கியே வல்லமை வந்திடும் வள்ளியின் காதல் கனியே ! 12. கனியே ! கரும்பே ! கலைகளின் கருவே ! குவலயம் அறியா கலைஞனின் உருவே ! குருவாய் நின்று அருளிய அறிவே ! காத்திட வருவாய் இனிதே ! 13. இனிதே இனிதே சேவடி ஆட்சி இனிதே இனிதே வேலின் மாட்சி இனிதே இனிதே கந்தனின் காட்சி இனிதே […]
|
|
Posted: 25 Aug 2016 04:46 PM PDT -இன்னம்பூரான் மேற்படி நிறுவனத்தின் நீண்ட ஆய்வின் பயனாக வெளியிடப்பட்ட மற்ற அறிவுரைகள்: சுகவனம் 2-இல் கூறப்பட்டது. Keep Active: உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் என்றென்றும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது நலம் பயக்கும். எறும்பு சுறுசுறுப்பாக இயங்குவதை நாம் காண்கிறோம். ஆண்சிங்கமோ படு சோம்பேறி. புலியை விட வேங்கையின் வேகம் அதிகம். மற்ற ஆய்வுகளும் சோம்பிக்கிடக்காமல், பல அலுவல்களில் இயங்கும் மானிடரை வியாதிகள் அணுகுவது குறைவு என்று பல்லாண்டுகளாக அறிவித்து வந்துள்ளனர். Eat Well: உணவே […]
|
Posted: 27 Aug 2016 01:24 AM PDT அஷ்டாவக்ர கீதை, ரிபு கீதை போல் இது ‘’வானர கீதை’’….! வைகுண்டமும் விட்டதம்தான், அதில் உள்ள ‘’விஷ்ணுவே’’ உறிவெண்ணை….! ”ஒட்டகத்தைக் கட்டிக்க, உச்சிதனில் குந்திக்க விட்டமதன்(உத்திரத்தில் தொங்கும் உறி) வெண்ணையுன் வாயினிக்க -எட்டிடும்: கண்ணனுக்கு வானரம் கீதை உரைத்தது விண்ணிருக்கும் வைகுண்ட வாழ்வு’’….! (OR) ”ஒட்டகத்தைக் கட்டிக்க, உச்சிதனில் குந்திக்க விட்டமதன்(உத்திரத்தில் தொங்கும் உறி) வெண்ணையுன் வாயினிக்க -எட்டிடும்: கிட்டவந்து கைவல்ய கீதையைக் கூறியது கிட்டனுக்கு மேலே குரங்கு’’….கிரேசி மோகன்….! பாரதத் தேரில் தேரோட்டி கண்ணனுக்கு(கிட்டன்) மேலே […]
|
|
Posted: 26 Aug 2016 10:25 PM PDT கிரேசி மோகன் ———————- “யாதுமாகி நின்றவள் எங்கும் நிறைந்தவள் யாதவனாய் இங்கே எழுந்தருளி -ஊதுகுழல் கண்ணனாய் காட்சி கொடுக்கின்றாள்(ன்), கல்கத்தா மண்ணின் மயானத்தின் மீது”….கிரேசி மோகன்…. Kannamma! Kali and Krishna are one and the same. Both names mean “Black”… Picture below is from Krishnakali Mandir in Kolkata… Where Krishna and Kali are seen as a single form! The temple stands on […]
|
|
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். அகிலக் கதிர்கள் & அடிப்படைத் துகள்கள் Posted: 28 Aug 2016 10:28 AM PDT (கட்டுரை: 13) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ https://youtu.be/BQR7Zl_saVo https://youtu.be/c-iCw8EnhSY +++++++++++++++++++++++++++ எங்கெங்கு காணினும் இயங்கும் அங்கோர் அகிலம் ! அகிலக் கதிர்கள் அகிலாண்ட நாயகியின் கருங்கூந்தல் உதிர்க்கும் பூக்கள் ! அவற்றில் சிதறும் பரமாணுத் துகள்கள் அகிலக் கருந்துளையின் மகரந்த விதைகள் ! அணுவுக் குள்ளேயும் நுணுக்கமாய் ஓர் அகிலம் சுழலும் ! அணுக்கருவின் பரமாணுவுக் குள்ளேயும் பம்பரமாய்ச் சுற்றும் குவாண்ட அகிலங்கள் உள்ளனவா ? உட்கருத் துகள்களைச் சுற்றிவரும் குட்டி […]
|
|
Posted: 28 Aug 2016 07:15 AM PDT கிரேசி மோகன் ———————————————– பெண்ணையும் ஆணையும் பாரித்து பாலிக்க உன்னையே ஈறுடலாய் உற்பவித்து -முன்னைநீ தந்தை ஒருகூறாய் ,தாயார் மறுகூறாய் விந்தை புரிந்தாய் வகுத்து….(66) ஞாலம் படைத்தனை,கோலம் கொடுத்தனை காலம் பகலிரவாய்க் கொண்டனை -மூளுமவ் ஊழி உமக்குறக்கம் உற்பத்தி உன்விழிப்பு வாழி விரிஞ்சன் விறல்….(67) காரணனே பாருக்கு, காரணம் பாராத பூரணனே, பாரைப் படைத்தழிப்போய் -ஓரணுவும் தொல்லை கொடுக்காத தோற்றம் முடிவற்றோய் இல்லை உமக்கிங்கே ஈடு….(68) தானாகத் தன்னிலே தோன்றித் தனக்குள்ளே காணா(து) ஒடுங்கிடும் கற்பம்நீர் -வானாக […]
|
Posted: 28 Aug 2016 02:43 AM PDT ”என் காலைக் கடன் கேசவ்வால் வெண்பாவில் தொழும் (திரு)’’மாலைக் கடன்’’….! தென்னிந்தியாவில் கண்ணன்…. வட இந்தியாவில் கன்னையன்…. எனக்கு கனன்யன்….! ”அனன்ய அனவரதன் ஆவிற்காய், ஆயர் மனன்யன் மனிதா பிமான -குணன்யன் தினம்என் கணினியில் தோன்றிடும், கேசவ் கனன்யன்(கன்னையன்)என் காலைக் கடன்’’….!கிரேசி மோகன்….!
|
|
Posted: 27 Aug 2016 09:37 PM PDT கிரேசி மோகன் ————————————————- தந்த தத்த தானதா னனா தந்த தத்த தானதா னனா தந்த தத்த தானதா னனா-தனதான பொது ——— “எங்கு துச்சம் தூய்மையா குதோ எங்கு மிச்சம் பூர்ணமா குதோ எங்கு பிக்ஷை சேரஆ குதோ -பிரசாதம்; எங்கு சுத்தம் சோறுபோ டுதோ எங்கு பித்தம் ஆலவா யனார் நெஞ்சின் நச்சு பாகமா குதோ -அதனாலே எங்கு சித்தம் ஏகமா குதோ எங்கு சத்தம் கீதையா குதோ எங்கு பக்தி யோகமா குதோ […]
|
|
Posted: 27 Aug 2016 06:31 PM PDT நிர்மலா ராகவன் “இன்னிக்கு சத்யா திரும்ப ஆபீசுக்கு வந்திருந்தாரும்மா!” “அவர் பிழைச்சதே பெரிசு! இப்ப ஒடம்பு நல்லா ஆயிடுச்சா?” `உருவத்தில் பழைய சத்யாதான். ஆனால், அந்த இனிமையான குணத்தில்தான் ஏதோ மாசு படிந்துவிட்டதுபோல் இருக்கிறது,’ என்று தாயிடம் சொல்ல கலாவின் மனம் இடங்கொடுக்கவில்லை. கடந்த சில மாதங்களாக, மருத்துவமனைக்குப் போய் சத்யாவைப் பார்க்கும்போது, தலையில் பட்ட பலத்த அடியில் அவனது குணாதிசயமே மாறிவிட்டிருந்தது தெரிந்தது. காரணமில்லாமல் சிரித்தான். சம்பந்தம் இல்லாது ஏதேதோ பேசினான். பரிதாபமாகத் தோற்றம் அளித்த […]
|
Posted: 28 Aug 2016 11:29 PM PDT ”வாழப் பழத்தோலை வாத்ஸல் யமா(ய்)உரித்து வாழப் பழம்கீதை வாயூட்டீ: -கோழையந்த குந்திசேய்க்கு வீரம் கவுரவம் தந்தவர் மந்திக்கும் மார்ஜர மால்’’….!கிரேசி மோகன்…. மார்ஜரம் -பூனை(பூனைக்க்குட்டி ந்யாயம்-அம்மா பாத்துப்பா….! மற்கடம் -குரங்கு(குரங்க்குக் குட்டி ந்யாயம்-கிளை தாவுகையில் நீதான்(குரங்குக்குட்டி அம்மாவைப் பிடித்தவண்ணம் உன்னைப் பாத்துக்கணும்….!) மற்கடத்துக்கே(குரங்கு) மார்ஜரம்(பூனை) மால்….! மார்ஜர, மற்கட ந்யாயம் ஆச்சார்யாள் அருள் வாக்கு படித்து விட்டு அப்பாலே எழுதுகிறேன்….! மனம் ஒரு குரங்கு….! —————————————- ”தாய்ப்பூனை கண்ணாநீ தோளிரெண்டைக் கவ்விச்சென்(று) ஆய்க்குடி யில்காவல் ஆட்படுத்து, […]
|
|
அருங்காட்சியகம் ஓர் அறிவுக்கருவூலம் – 69 Posted: 28 Aug 2016 05:55 PM PDT தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (நிக்கலஸ் கோப்பர்னிக்கஸ்) முனைவர்.சுபாஷிணி உலக அருங்காட்சியகங்களில் மிக முக்கியமான அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம் பெறும் ஒன்று சுவிச்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள நேஷனல் மியூசியம். பொதுவான அருங்காட்சியக அமைப்பு அல்லது புது உலகக்கட்டிட கட்டுமான அமைப்பு, அல்லது கிரேக்க அக்ரோபோலிஸ் வகை கட்டுமான அமைப்பு என்றில்லாமல், பிரஞ்சு மறுமலர்ச்சிக்கால கட்டுமான வடிவில், ஒரு மாளிகையைப் போன்ற அமைப்பில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குட்டி அரண்மனையோ என வியக்க வைக்கும் அழகிய […]
|
|
Posted: 28 Aug 2016 05:00 PM PDT நிர்மலா ராகவன் சிரிப்புத்தான் வருகுதையா! `சிரிப்பு ஆன்மாவை சுத்தப்படுத்தும்’ என்கிறது யூதர்களின் பழமொழி. `பெண் சிரிச்சாப் போச்சு..!’ தமிழர்களுக்குப் பழக்கமான பழமொழி. `பெண்குழந்தைகள் அதிகமாகச் சிரிக்கக்கூடாது. அப்புறம், வாழ்க்கையே சிரிப்பாச் சிரிச்சுப்போயிடும்!’ முதிய பெண்டிரின் அறிவுரை. `எப்பவும் கஷ்டம்தான். சிரிக்க என்ன இருக்கிறது?’ பொதுமக்கள். இதனால் எல்லாம் சிரிப்பு என்று ஒரு மருந்து இருப்பதே மறந்து போய்விட்டது நம்மில் பலருக்கும். சிரிப்பதற்காகவென ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் சேர்ந்து, உடல் நலத்திற்காக பூங்கா போன்ற பொது இடங்களில், காரணமின்றி `ஹாஹ்ஹா` […]
|
|
Posted: 28 Aug 2016 04:51 PM PDT இன்னம்பூரான் 28 08 2016 ஏழை பாழை என்றால், அதுவும் கிராமத்தான் என்றால், இளப்பம் தான். சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் காய்ச்சலில் தவிக்கிறது. அந்த ஊரின் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு படுக்கையில் இரண்டு நோயாளிகள். டெங்கு போன்ற உயிர்கொல்லி காய்ச்சல்களுக்கு இது வரப்பிரசாதம். காய்ச்சலுடன் யார் வந்தாலும், ஆஸ்பத்திரியில் பரிசோதனை தொடங்கி விடுகிறார்கள். டெங்கு மட்டுமல்ல. டைஃபாய்டு, எலிவிஷஜுரம் எல்லாம் அங்கு அடைக்கலம் நாடுகின்றன. அந்தோ பரிதாபம்! போனவாரம் எழும்பூரில் உள்ள […]
|
|
Posted: 28 Aug 2016 04:46 PM PDT க. பாலசுப்பிரமணியன் இளமையில் கல் – ஏன் ? கற்றல் – புரிதல் பற்றிய பலவித ஆராய்ச்சிகள் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இவற்றில் சில கருத்துக்களும் கோட்பாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் மறுக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. இதனால் மூளையில் கற்றல் நிகழ்வு ஏற்படும் செயல்கள் புதிதாகவும், சில நேரங்களில் மிக விந்தையாகவும் அறியப்பட்டுள்ளன. மைகேல் மெர்ஸினிச் (Micheal Merzenich) என்ற மூளை- நரம்பியல் விஞ்ஞானி இந்த ஆராய்ச்சிகளில் மிகவும் ஆர்வம் காட்டியவர். ஒரு முறை ஒரு உயிரின் வளரும் […]
|
|
Posted: 28 Aug 2016 04:41 PM PDT –செண்பக ஜெகதீசன் இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட வுஞற்றி லவர். (திருக்குறள்-607: மடியின்மை) புதுக் கவிதையில்… சோம்பலில் சுகம் கண்டு, செய்யும் கடமையில் முயற்சியற்றவர்கள், பிறர் இடித்துரைக்கும் இழிசொல் கேட்கும் நிலையடைவர்…! குறும்பாவில்… செயலில் முயற்சியிலாது சோம்பியிருப்போர், பிறர் இடித்துரைக்கும் இழிசொல் கேட்பர்…! மரபுக் கவிதையில்… செய்யும் செயலில் முயற்சியின்றிச் -சோம்பல் தன்னில் சுகங்காணும் பொய்யாம் வாழ்வை வாழ்வோர்கள், -புவியில் வாழும் காலமட்டும் மெய்யாய் மற்றோர் இடித்துரைத்தே -மிகவும் கொடிதாய் இழிசொல்லைப் பெய்யும் மழைபோல் பேசுகின்ற […]
|
|
படக்கவிதைப் போட்டி 77-இன் முடிவுகள் Posted: 28 Aug 2016 04:31 PM PDT -மேகலா இராமமூர்த்தி திருமிகு. ராமலக்ஷ்மியின் கைவண்ணத்தில் உருவான இந்தப் புகைப்படத்தை இவ்வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருப்பவர் வல்லமை ப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு பெண்மணிகளுக்கும் வல்லமை மின்னிதழின் நன்றி. வைத்தகண் வாங்காமல் அன்னையை நோக்கும் இந்தப் பிஞ்சுக் குழந்தையின் வசியப் பார்வை நெஞ்சைக் கொள்ளையிடுகின்றது. இயற்கையின் படைப்புக்களில் ’master piece’ என்று சொல்லத்தக்க உச்சப் படைப்பு, குதலைமொழி பேசிக் குவலயத்தை மயக்கும் குழந்தையே அல்லவா? இவ்வழகிய புகைப்படத்திற்குத் தம் எண்ணதூரிகை கொண்டு நம் […]
|
|
Posted: 28 Aug 2016 04:31 PM PDT -மலர்சபா மதுரைக் காண்டம் – அழற்படு காதை மன்னவன் மாண்டதை அறியாமல் மற்றோர் அசைவற்றிருத்தல் கண்ணகியின் ஏவலின்படி தீக்கடவுளின் எரிமுகம் திறந்தது; காவல் தெய்வங்கள் தம் பணி விடுத்துக் கோட்டை வாயிலை விட்டு நீங்கினர். அரசர்க்கெல்லாம் அரசன் பகைவரைப் போரில் வெல்லும் பாண்டிய மன்னன் தன் தவற்றால் வளைந்த செங்கோலைத் தன் உயிர் கொடுத்து நிமிர்த்தினான். பெரிய நிலமகளுக்குத் தன் செங்கோல் நலம் காட்ட, கற்பில் சிறந்த தன் மனைவியோடு மன்னன் அரியணையிலேயே இறந்தான். அரசனும் அரசியும் […]
|
|
Posted: 28 Aug 2016 03:35 PM PDT மணி முத்து அதிகாலை 6மணி, ஒருவழியாக அடித்துப்பிடித்து சன்னலோர இருக்கையில் அமர்ந்து விட்டேன். அதிகாலை வேளையை ரசித்தப்படி பயணித்துக் கொண்டிருந்தேன் சுற்றுச்சூழலையும் மறந்து நானும் ஒரு பயணியாக. என்னுடனே இயற்கையும் பயணித்துக் கொண்டிருந்தது என்னைவிட வேகமாக பின்னோக்கி. அப்போதுதான், அந்த சத்தம் என்னை மட்டுமல்ல பேருந்திலிருந்த எல்லோரையும் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. திடீரென அந்த தனியார் பேருந்து வேகமாக ஒரு திருப்பத்தில் திரும்ப, ஓரமாக வந்த இரு சக்கர மோட்டார் வாகனத்தைக் கவனிக்காமல் அடித்துத் தூக்கியது. ஒருவரை […]
|
Posted: 31 Aug 2016 12:43 AM PDT
”MIRA KE PRABHU” ———————————– ’’கிரிதரன், கோபாலன், காற்றினிலே கீதன், கரிதரன், மீராவின் காதல் -வெறிதரன், வெண்ணை உறிதரன், வீரம் புரிதரன்(பாரதப் போர்) கண்ணன் சிரிதரன்(ஸ்ரீதரன்) காண்’’….கிரேசி மோகன்….! “காதலுக்குக் கண்ணில்லை, கண்ணனின் பக்திக்கண் காதலி மீராவை கண்டுகொள்ள:-ஆதலினால் காதலிப்பீர் கண்மூடி காற்றிசைக்கும் கீதத்தை; யாதுமான யாதவனே யாப்பு”….! யாப்பு-Grammar…. “மறைந்திருந்து பார்க்கின்றாள் மர்மமாக மீரா, கரைந்துருகி கானக்கண் கொண்டு; -உறைந்தபனி நெஞ்சிலே பக்தி நெருப்பைக் கொளுத்திவிட, மஞ்செழில் வண்ணன் மெழுகு”….கிரேசி மோகன்…. மஞ்சு-மேகம்…Posted: 30 Aug 2016 06:39 PM PDT
பவள சங்கரி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் – மதுரை அன்னை மீனாட்சியின் ஆட்சியின் அருமைப் பெருமைகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாகக்காட்டும் அற்புத ஆலயம் இது. இமைகளற்ற மீன் தன் முட்டைகளை கண் பார்வையின் சக்தி கொண்டே பொரிக்கச்செய்து காத்து வருவதைப்போன்று மீன் போன்று அழகிய வடிவுடை நயனங்களைப் பெற்ற அன்னை மீனாட்சி இப்புவி மக்களை கண்ணிமைக்காது காத்து வருகின்றாள். இதன் காரணமாகவே அன்னை மீனாட்சி என்ற திருநாமமும் கொண்டாள்! அன்னை எழுந்தருளியிருக்கும் புனிதத் தலம் மதுரை […]Posted: 30 Aug 2016 06:09 PM PDT
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை என் விருப்பத்திற்கிணங்க நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தன் படங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். அவருக்கு என் நன்றி. இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் […]ஆறுமுகன் அருட்பா (மூன்றாம் பகுதி)
Posted: 30 Aug 2016 05:52 PM PDT
க. பாலசுப்பிரமணியன் 21 போற்றுதும் போற்றுதும் செந்தூரான் சேவடிகள் போற்றுதும் போற்றுதும் தணிகையான் தாள்கள் போற்றுதும் போற்றுதும் பரங்குன்றத்துப் பாதங்கள்! போற்றுதும் பழனிவாழ் கருணையினை !\ 22 கருணைக்குக் கந்தா ! காத்திடக் கடம்பா ! கலியினைத் தீர்த்திடும் கயிலையின் மைந்தா ! காவடி தூக்கினேன் கைகளைக் கூப்பினேன் கொடியுடன் வருவாய் குமரா ! 23 குமரனோ ? கிழவனோ? துடித்தது உள்ளம் கொடியிடிடை வள்ளியின் காதல் நெஞ்சம் கோலங்கள் மாற்றியே தினைவனம் வந்தாய் கோடிகள் தந்திடும் […]
Posted: 30 Aug 2016 05:39 PM PDT
கிரேசி மோகன் ——————————— ”தேவர்கள் பிரம்மனைத் துதித்தல்’’….! ————————————————————————- காட்சிக்கு சாங்கியம் கூறும் பிரகிருதி சாட்சிக்கு சுத்தபுரு ஷோத்தமன் -ஆட்சிக்(கு) அகப்பட ஜீவனாய் ஆகிடும் நீரே சுகப்படுவீர் ஆன்மனில் சேர்ந்து….(72)…. விண்ணத் தனையும் விழுந்து வணங்கிடும் தென்னத் திசையோர் துதித்திடும் -அன்னத்(து) அயனே (OR) அயன்நீர் மரீசி செயலாம் சிருஷ்டிக் குயவன் களிமண் கரம்….(73) யாகம்நீர் யாகஅவிர் பாகம்நீர் பாகமுண்ணும் தேகம்நீர் திவ்வியங்கள் தந்தருள்நீர் -மேகம்நீர் தேர்ந்த பொருட்கள்நீர் தேர்ச்சிநீர் தேர்வும்நீர் நேர்ந்ததுவாய் நின்றீர் நினைத்து….(74) […]Posted: 30 Aug 2016 05:01 PM PDT
எம் . ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா வீரத்துறவியே நெஞ்சிலே ஆன்மீக சாரத்தை நிறைத்தவரே பாருக்கு வேராகி பக்குவத்தை ஊருக்கு உரைத்தவரே ஞானத்தின் திருவுருவே வாழ்வில் மோனத்தைக் கண்டவரே நால் வேதத்தை உள்வாங்கி நல்வாழ்வுக்கு அளித்தவரே ! பாரதத்தாய் ஈன்றெடுத்த பண்புளமே பார்வியக்க பலபகன்ற பகலவரே ஊரலைந்து நெறிவளர்த்த உத்தமரே உண்மையினை உணரத் துடித்தவரே சீரான குருதேடித் திருந்தவரே சிறப்புடனே உபதேசம் பெற்றவரே பாரைவிட்டு விரைவாக சென்றவரே பார்பிழைக்க அழைக்கின்றோம் வருவீரா ! […]Posted: 30 Aug 2016 04:51 PM PDT
இன்னம்பூரான் 29 08 2016 ‘சுகவனம்’ தொடரின் முதல் ஐந்து பதிவுகள் ஒரு அறிமுகத்தொடர் என்க. ஐந்தாவது ‘புள்ளி வைத்து அடிக்கும்’ ரகம். புள்ளியியல் துறை குறி வைத்தபடி பணி செய்தால், உண்மை சவுக்கடி போல் வெளிவரும். பொய்ச்சான்றுகள் கூற, அதே புள்ளியியலை துஷ்பிரயோகம் செய்வது எளிது. மெத்த கெட்டிக்காரர்கள், புள்ளி விவரத்தைத் தாமதம் செய்து அளித்து, முழுப்பூசணிக்காயைச் சோற்றில் வைத்து மறைக்க முயல்வதும் உண்டு. இந்தியமக்களின் சுகவனம் பொருட்டான புள்ளி விவரங்கள் பத்து […]Posted: 30 Aug 2016 04:40 PM PDT
ரா.பார்த்தசாரதி மழைத்துளிக்கு தெரியாது விழப்போவது நதியிலா, சேற்றிலா ? வீழ்ந்தபின்தான் அதன் விதி என்னவென்று தெரிகிறது, ஆற்றில் விழுந்தால் அனைவரது தேவையை தீர்க்கும், சேற்றில் வீழ்ந்தால் துர்நாற்றத்துடன் பயனற்று போகும்! பூக்கும் மலருக்கு தெரியுமா, சேருவது மணமாலையா, மரணமாலையா? அதன் விதி விற்பனை ஆகும்போதுதான் தெரிகின்றது, மணமாலையானால் எல்லோராலும் ஆசிர்வதிக்கப்படுகின்றது மரணமாலையானால் மிதிபட்டு மக்கி நாசமாய் போகின்றது ! மதிக்கும் பாதையில் செல்பவன் மகத்தான செயல் புரிகின்றான் மாபெரும் புகழுடன் சான்றோர் போற்ற […]Posted: 30 Aug 2016 04:30 PM PDT
ரா.பார்த்தசாரதி பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு வந்தேன் உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன் எனக்காக கண்விழித்து தூக்கத்தை மறந்தாய் உன் குருதியை எனக்கு பாலாகப் பொழிந்தாய் தோளையே தூளியாக்கி என்னை சுமந்து சென்றாய் கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய் ! உனக்கோ ஆயிரம் பிரச்சனை இருக்கும் என்னை கட்டியணைப்பதில் தான் ஆனந்தம் இருக்கும் ! உனது மடியும், இருகால்களுமே எனக்குத் தொட்டில் உனது மூச்சே எனக்கு அடைக்கலம் ! நான் தவறு […]
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
|
Posted: 01 Sep 2016 04:26 AM PDT கிரேசி மோகன் ——————————- ‘’பிரும்மப் பிரயத்தனம்’’ ——————————————— துள்ளும் நதிவெள்ளம் மெல்ல எதிர்திசையில் செல்லத் தடையென்று சொல்லலாம் -கொல்லும் வருத்தம்தான் என்ன? மருத்துக் களேழும் சிறுத்ததேன் சீறாது சோர்ந்து….(84) ஹூங்காரம் செய்யும் உருத்திரர்காள், வார்சடை தாங்காது தொய்வதேன் தண்மதியால் -ஏங்காணும் விண்ணிருந்தும் வீரமற்று வையத்தைப் பார்க்கிறது கண்ணிரெண்டும், ஏனிக் குனிவு….(85) பொதுவிதியை போக்கும் புதுவிதியைப் போலே இதுவரை ஆண்ட இடத்தை -எதிரிகள் உட்புகுந்து கொண்டனரோ, உங்களுயர் அம்பரம் முட்புகுந்த(து) ஏனோ மொழி….(86) தோற்றுவிக்கும் என்னை துயருலகை சூழுங்கால் […]
|
Posted: 01 Sep 2016 03:29 AM PDT ”மல்லாண்ட தோளில் முயலுமோர் ஜந்துவும், கல்லாமை கன்றவன் கால்வருட, -புள்வவ்வால் வானிலே வந்து விடிகாலை வந்தனம் கானிலே KonniChiwa Good”(கேசவ் !)….கிரேசி மோகன்….! கல்லாமை -வங்கக் கடல் கடைந்த போது கல்லைத்(மந்திர மலையைத்) தாங்கிய ஆமை….!புள்வவ்வால் -பறவை வவ்வால்….!கானிலே-காட்டிலே….VANAVIHARI….!
|
Posted: 31 Aug 2016 08:43 PM PDT கிரேசி மோகன் ——————————————— தனதான தத்தன தனதான தத்தன தனதான தத்தன -தனதான பொது ——– “கபவாத, பித்தமும், சளிதோஷ சத்தமும், தலைநோவும் ,ரத்தமும் -வெளியேறும் குதமூல பெளத்ரமும், நகம்மீது சுத்தியும், படர்சோகை, மக்கிடும் -விழிபார்வை சபைநாற வைத்திடும் சனிவாயில் சொத்தையும், உமிழ்நீர்தெ றித்திட -உருள்நாவும், செரிமானம் அற்றிட பிரிவாய்வ சுத்தமும், சொறிநோய்அ ரிப்பதும், -இதுபோக அபவாத புத்தியும், மமகார சித்தமும், அவதூறு ரைத்திடும் -விடநாவும், அணுகாது சத்துவ மனமேனி உற்றிட அலைமேல்ப டுத்திடும் -மணிமார்பா மதுகேசி, […]
|
|
Posted: 02 Sep 2016 08:55 AM PDT உண்மையில் கிளிகள் பேசுமா? ஆம் கிளிகளின் மூளையில் உள்ள வித்தியாசமான கட்டமைப்பு தான் அவைகளை மனிதன் பேசுவதை உள்வாங்கிப்பின் அதே போல் பேச வைக்கிறது என்று அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மற்ற பறவைகளுக்கு இல்லாத இந்த விசேசமான தன்மை கிளிகளுக்கு மட்டுமே உள்ளது. மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப முடிகிறது கிளிகளால். பயிற்சி அளித்தால் ஒரு சில வார்த்தைகளைக்கூட பேசமுடியும். கிளிகளின் மூளை உடற்கூறு நைட்டிங்கேல், காகம் போன்ற பிற பாடும் பறவைகளின், […]
|
Posted: 02 Sep 2016 12:23 AM PDT ”கவலையால் பீடித்த குவலயா பீடம்’’ —————————————————————— ‘’கேசவ் தந்த கற்பனை’’ —————————————- ‘’கொம்பொசிக்காய் கண்ணா !குவலயா பீடம்தன்(கம்ஸனின் பட்டத்து யானை) தும்பிக்கை யால்கெஞ்சல் தாள்வருடி!, -அம்பிகைசேய்(பிள்ளையாரப்பர்) பாரதம் வார்க்கும்(எழுதும்) பொறுப்பு பொருப்பன்றோ!(தந்தத்தால் வினாயகர் வியாசர் உரைக்க எழுதினார்) நீரொடிக்க லாமோPEN NIB”!….!கிரேசி மோகன்….!
|
|
Posted: 01 Sep 2016 11:34 PM PDT மீ.விசுவநாதன் எத்தனையோ நல்லவைகள் இங்கே – அந்த இடமெல்லாம் நானிருக்க வேண்டும் சத்தமின்றி செய்கின்ற நன்மை – என் சந்தோஷச் செய்தியாக வேண்டும் ! கல்வியிலே வல்லவர்கள் வாழும் – இடம் கண்டுகண்டு நான்கூட வேண்டும் வல்வினைகள் ஆக்கமுடன் ஓங்கும் – என் வளர்தேசம் நானறிதல் வேண்டும் ! நீர்நிலைகள் பூந்தோட்டம் யாவும் – எந்த நிலையினிலும் தூய்மையாக வேண்டும் ஊர்களுக்கே உபதேச மின்றி – என் உள்ளமிதை உள்வாங்க வேண்டும் ! என்வீடு என்தெருக்கள் யாவும் […]
|
|
இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-25 Posted: 01 Sep 2016 06:20 PM PDT மீனாட்சி பாலகணேஷ் கண்ணன் மருகா தாலேலோ! புலவர் பகழிக்கூத்தர் வைணவ சமயத்தவர். தமக்குண்டான தீராத வயிற்றுவலியை திருமால் மருகனான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது அழகான பிள்ளைத்தமிழ் ஒன்றினைப்பாடியதால் தீர்த்துக்கொண்டவர் என்பது வரலாறு. இவருடைய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் திருமால் பெருமை, மேலும் திருமால் செய்த விளையாடல்கள் தொடர்பான தொன்மங்கள் அழகுறப் புனையப்பட்டுள்ளதனைக் காணலாம். “இத்தகு திருமாலின் மருமகனே,” எனக்கூறிப் பாடி முருகவேளை வழுத்துவது இவருடைய முத்திரை எனலாம்! முருகப்பெருமானைச் சேடியரும் செவிலியரும் தொட்டிலிலிட்டுத் தாலாட்டி உறங்கவைக்கின்றனர். […]
|
Posted: 01 Sep 2016 05:59 PM PDT தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (2) (ஜோஹான்னஸ் குட்டன்பெர்க்) முனைவர்.சுபாஷிணி அச்சுப்பதிப்பாக்கம் உலக மக்கள் வாழ்வியலில் மாபெரும் சிந்தனைப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. மிகக்கடினமான எழுதும் முறையும், ஒரு நூலை உருவாக்க எடுத்துக் கொள்ளப்பட்ட நீண்ட நேரம் என்பதும் கல்வியை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும்தான் ஏதுவானதான ஒரு சூழலை இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே ஏற்படுத்தியிருந்தன. அச்சு இயந்திரங்கள் படிப்படியாக பயன்பாட்டில் பரவத் தொடங்கியபின்னர் ஒரு தனி நூல் […]
|
|
ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா உறங்கும் வால்மீன் விழித்தெழும் ஒளிக் கிளர்ச்சியைப் பதிவு செய்தது Posted: 01 Sep 2016 05:20 PM PDT comet Halley சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/16z1ZUMnGn0 https://youtu.be/Tp2P4ht2WNM https://youtu.be/J7I9z6Lcemo https://youtu.be/2-M5_xBVSLQ ++++++++++++++ கியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி, பரிதி ஈர்ப்பு மண்டத்தில் திரிந்து வருபவை வால்மீன்கள் ! வியாழக்கோள் வலையில் சிக்கிய வால்மீன் மீது கவண் வீசிக் காயப் படுத்தி ஆய்வுகள் புரிந்தார் ! வால் நெடுவே வெளியேறும், வாயுத் தூள்களை வடிகட்டியில் பிடித்து வையகத்தில் சோதித்தார் ! அண்ட கோள்களின் ஆதித் தோற்றம் அறியவும், உயிரின […]
|
|
Posted: 01 Sep 2016 04:48 PM PDT – எம்.ரிஷான் ஷெரீப் பிணத்தை மடியில் வைத்துக் கொண்டு, அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும்? புஷ்பமாலா தனது கால்கள் விறைத்திருப்பது போல உணர்ந்தாள். காலை நீட்டவும் முடியாது, வேறு விதமாக உட்காரவும் முடியாது என்பதால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். உடுத்திருந்த அசுத்தமான சீத்தைத் துணி அவளை அக் குழந்தைக்குத் தாயாகக் காட்டியது. காலையில் வரும்போது குடித்த வெறும் தேனீருக்குப் பிறகு எதுவும் கிடையாது. மத்தியானப் பொழுதுக்கு வெயில் ஏறியிருந்தது; பசித்தது. […]
|
Posted: 03 Sep 2016 01:15 AM PDT ”RAJAGOPALA”….! ———————————- ”வில்டாப் விஜயனுக்கு வீரம் விளைவித்து ஃபுல்ஸ்டாப் நூறுக்குப் போட்டவன் -அல்டாப்பாய் கண்ணார்வம் கொண்டிங்கு கோதைக்காய் காத்திருக்கான் மன்னார் குடிமைனர் மால்’’….கிரேசி மோகன்
|
|
Posted: 03 Sep 2016 01:11 AM PDT கிரேசி மோகன் ——————————- ‘’வானோர் வருத்தம்’’….! ————————————————- ஒவ்வோர் உயிரிடத்தும் ஊடுறுவும் வல்லோனே எவ்வா(று) அறியா(து) அளப்பீர்நீர் ! -அவ்வாறே தாங்களே சொன்னவண்ணம் நாங்கள் துயரடைந்தோம் தீங்குளத் தோரால் தவித்து….(90) விண்ணுச்சி தோன்றும் விபரீத தூமகேது தன்னிச்சைத் தீயவன் தாரகன் -முன்னுச்சி உம்மைக் குளிரவைத்து உற்றவர கர்வத்தால் பொம்மையாய் ஆனோம் பயந்து….(91) பாவியவன் ஊரில் பரிதா பமாய்க்கதிரோன் வாவியுள்ள அல்லிமட்டும் வாழ்வதற்கு -தேவையான வெய்யிலைத் தந்துவிட்டு வேர்க்க விறுவிறுக்க கையினால் பொத்துகிறான் கண்….(92) பாராது பக்ஷங்கள் […]
|
|
’குங்குமம்’ இதழில் கிரேசி மோகனின் – மனசு Posted: 03 Sep 2016 01:03 AM PDT கிரேசி மோகன் இதோ இப்ப கட்டியிருக்கிற வாட்ச் இத்தனை ஆண்டு கால என் வாழ்க்கைக்கு மூணாவது வாட்ச்… ஒரு தடவை அமெரிக்காவில் கை வீசிப் பேசினபோது கழன்று புல் தரையில் விழுந்திருச்சு. யாராவது மீட்டு கொண்டு வந்தால்தான் ஆச்சுன்னு மனநிலை ஆகிப்போச்சு. அப்புறம் கொண்டு வந்து கொடுத்தாங்க. ஒரு டவல் வச்சிருக்கேன். குளித்து அதில் துவட்டிட்டுப் போனால்தான் நாடகம் ஹிட் ஆகும்னு எனக்கு ஒரு சென்டிமென்ட். அந்த டவலை உங்ககிட்டே காட்டினால் என்மேல் மரியாதை இருக்காது. அவ்வளவு […]
|
|
The master of lol and rofl: ‘Crazy’ Mohan reminisces his 30-year-old career – INDIAN EXPRESS Posted: 03 Sep 2016 12:05 AM PDT CRAZY MOHAN By Chandni U If someone from within a cemetery calls you to step in, would you go? If ‘Crazy’ Mohan hadn’t, he wouldn’t be the great theatre artist, actor and writer that he is today. If not for his grandfather, he wouldn’t have found his passion for colours. If he hadn’t read great […]
|
|
Posted: 05 Sep 2016 04:48 AM PDT பவள சங்கரி “செக்கிழுத்த செம்மல்” என்று போற்றப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை – வ.உ.சி அவர்கள் பிறந்த புனித நாள் இன்று. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பின்னர் வந்த முகலாய மன்னர்கள் போன்றவர்களின் ஆட்சிக்காலங்களில் பிரபலமாக இருந்த கப்பல் போக்குவரத்து மற்றும் பிரம்மாண்டமான கப்பல்கள் என அனைத்தும் கிழக்கிந்திய கம்பெனி நம் இந்திய நாட்டில் நுழைந்து முன்னூறு ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்டன. ஆங்கிலேயர்களின் கப்பல் போக்குவரத்து கோலோச்ச ஆரம்பித்துவிட்டது. சுதந்திரப் […]
|
|
Posted: 04 Sep 2016 11:00 PM PDT தமிழ்த்தேனீ வழக்கம் போல் வினாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடைத்தெருவுக்குப் போய் வினாயகர் வாங்கி வரவேண்டும்.. நடந்து போய் வாங்கிக் கொண்டு அதி ஜாக்கிரதையாக நடந்து வரவேண்டும். கடைத்தெருவுக்கு போய் வினாயகர் வாங்கி வரவேண்டுமென்றால் ஒரு மணைப்பலகை வேண்டும் அதிலே களிமண்ணால் செய்த வினயாகரை வாங்கி வைத்துக் கொண்டு அந்த வினாயகர் கீழே விழுந்துவிடாதபடி பத்திரமாக எடுத்துக் கொண்டு வரவேண்டும். அப்போது சாலையில் வரும் பாதசாரிகள், வாகனங்கள் எதன் மேலும் படாதவாறு கொண்டு வரவேண்டும். கிட்டத்தட்ட கோயிலிலே […]
|
Posted: 04 Sep 2016 10:50 PM PDT கிரேசி மோகன் ——————————————- ”காப்புக் கரம்கொண்டு காதைப் பிடித்துமால் தோப்புக் கரணமிடத் தீர்ப்பளித்தோய் – யாப்பெனெக்(கு) அந்தாதி வெண்பாவில் அம்மான்(கண்ணன்) புகழ்பாட(பாரதத்தை) தந்தம்ஒடித்த தெய்வம் துணை”…. ”cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே mouseயிக வாகனா மோதகா -houseனுள் வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில் தாராய் அறிவில் தெளிவு”…. ‘HAPPY VINAYAGA CHADURTHTHY”….! ————————————————————– ’’வினாஅகமாய் நானார் விசாரிக்க வரமாய் வினாயகம் தோன்றும் விடையாய்: -கணாத்யக்ஷன் ஆனந்த ரூபமாய், ஆன்ம சதுர்த்தியாய், ஊனம் தனைப்போக்கும் ‘’ஊ’’(பிள்ளையார் சுழி)… ’’அய்யர் […]
|
|
”பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்”….! Posted: 04 Sep 2016 05:37 PM PDT கிரேசி மோகன் —————————————————————— பிள்ளையார் பதினாறு —————————- ஷோடஸ நாயகர் ———————- பிள்ளையார் பிறப்பு ———————– நீராடும் வேளை நிலைவாசல் காவலுக்கு ஓராளைத் தேடினாள் ஓங்காரி -சேறாக மேனியில் பூசிய மஞ்சளால் செய்தனள் ஞானி வினாயக னை…. ஆதியே ஆனாலும் அன்னை குளிக்கையில் பாதியில் வந்த பரம்பொருளை -வீதியில் தள்ளிய பிள்ளை தலையைத் தகப்பனரன் கிள்ளியங்கு வைத்தான் கஜம்…. ஆச்சார்ய ஸ்வாமிகள் அருள் வாக்கை வாசித்து விட்டு எழுதியது….! ———————————————————————— ஸுமுகர் ———– சிரித்த வதன […]
|
|
Posted: 04 Sep 2016 05:32 PM PDT மீ.விசுவநாதன் மஞ்சள் பிடித்து வைத்து மனத்தோடு புல்லைப் போட்டு கொஞ்சம் அமைதி யோடு குணவானே பிள்ளை யாரே தஞ்சம் அடைந்தே னுன்னை தவறிலாத பொழுதைத் தந்து நெஞ்சி லிருப்பாய் என்றால் நினைவெல்லாம் நிறைந்தி ருப்பான் ! வேலை துவங்கி னாலும் வேதாந்தம் கற்கும் போதும் மேலை நாட்டிற் காக விமானத்தில் செல்லும் போதும் சேலை துவைக்கும் போதும் சிறுபொழுதைச் செலவு செய்து பாலை நிகர்த்த “பிள்ளை யார்”பாதம் பணிந்தி ருப்போம் ! ஞானம் பரந்த நெற்றி! நம்பிக்கை […]
|
|
எல்லோருக்குமான கொண்டாட்ட தினம்! Posted: 04 Sep 2016 05:11 PM PDT செப் 5: ஆசிரியர் தினம் எஸ் வி வேணுகோபாலன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல் நாள், முதலாம் வகுப்பில் உள்ளே போய் நுழைந்த நேரம் நடுங்க ஆரம்பித்த காலும் கையும் நிற்கவில்லை. படபடப்பு மிகுந்து கொட்டிய வியர்வை கொட்டியபடியே. எத்தனை எத்தனை ஒத்திகை, எத்தனை முறை படித்துப் படித்து மனப்பாடம் ஆகியிருந்த சைக்காலஜி பாடம் ஒற்றைச் சொல் ஒழுங்காக வாயில் வரவேண்டுமே…ஹுஹும்…எதிரே தன்னைவிட வயது அதிகமான மாணவர்கள் (அதாவது ஆசிரியர்களாகப் போகிறவர்கள்!)….எப்படித்தான் நாற்பது நிமிடங்கள் ஓடி முடிந்ததோ […]
|
|
Posted: 04 Sep 2016 05:05 PM PDT -மேகலா இராமமூர்த்தி பெரிய புராணம் விவரிக்கும் திருத்தொண்டர் வரலாற்றில் மறக்கமுடியாத ஒன்று கண்ணப்ப நாயனார் வரலாறு. இறைவனை முறையாக வழிபடுவதற்குரிய நியமங்களோ ஆகமமுறைகளோ அறியாத பாமரவேடன் கண்ணப்பன். காளத்தி மலையில் எழுந்தருளியிருந்த குடுமித்தேவரைக் (சிவபெருமான்) கண்ட நொடியிலேயே ’love at the first sight’ என்று சொல்வதற்கேற்ப அவர்மீது மாளாத காதலுற்றான். ஐயனை அரைநொடியும் ’அகலகில்லேன்’ என்று எண்ணியவனாய், ’வங்கினைப் பற்றிப்போகா வல்லுடும்பை’ப்போல் அவரைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டான். ”நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன்” என்று பட்டினத்தாராலும், […]
|
|
எங்கும் மங்களம்அருளிடு ஐங்கரனே ! Posted: 04 Sep 2016 05:02 PM PDT சரஸ்வதிராசேந்திரன் ஆதி முதல்வனே ஆனை முகத்தவனே ஆதிசக்தி மைந்தனே ஆனந்த வினாயகனே முன்னை வினையின் முதலைக் களைபவனே அருள்வாய் உனைதினம்பணிந்தேன் அன்னை பராசக்தி அருள் மகனே ! மத்தள வயிறோனே உத்தமி புதல்வனே மோதகப் பிரியனே மூஷிக வாகனனே வடிவேல் சோதரனே அடியினைத் தொழுவேன் தேனொடுபாலும்தினம் தருவேன் திருவருள் தந்திடுவாய் சம்பு குமாரா சங்கரன் புதல்வனே ஐங்கர நாயகனே அவல்பொரிஅப்பமுடன் அரிசிக்கொழுக்கட்டை வடை சுண்டலும்படைப்பேன் அடைக்கலம் தருவாய் ஐயனே சீக்கிரம் வந்திடப்பா வந்தெனக்கு சிவனாந்தம் […]
|
|
Posted: 04 Sep 2016 05:02 PM PDT ரா.பார்த்தசாரதி தானத்திலே சிறந்தது அன்னதானம் தானத்திலே சிறந்தது ரத்ததானம் தானத்திலே சிறந்தது கண் தானம் இம்மூன்று தானங்களும் சிறந்ததே இவ்வுலகில் இன்றும் நடக்கின்றதே ! அன்னதானம் பசியினைப் போக்கும், இரத்ததானம் உயிரினை காக்கும் , கண்தானம் பார்வையை அளிக்கும் ! கண்ணாலே காதல் மலரும் கண்ணே இரக்கத்தை உண்டாக்கும் இயற்கையின் எழிலை ரசிக்கும் இறந்தபின்னும் புகழ் சேர்க்கும் மனித வாழ்வினை ஒளிபெறச் செய்யும் கண் தானமே மனிதனுக்கு பெருமை சேர்க்கும்! கண் தானம் […]
|
|
Posted: 04 Sep 2016 05:02 PM PDT ரா.பார்த்தசாரதி பிரணவ மந்திரத்தின் முதலோனே வீனைதீர்க்கும் விநாயகப் பெருமானே , சங்கடங்கள் தீர்க்கும் இறைவனே […]
|
|
Posted: 04 Sep 2016 05:01 PM PDT எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா சிரிப்பு ஒரு மருந்து தினமும் அதைநீ அருந்து அகத்தில் சிரிப்பு எழுந்தால் முகத்தில் சிரிப்பு மலரும் ! குழந்தைச் சிரிப்பு குதூகலம் குருவின் சிரிப்பு பெருமிதம் தந்தை சிரிப்பு மனநலம் தாயின் சிரிப்போ தனித்துவம் ! நட்பின் சிரிப்பு நற்கொடை நாட்டின் சிரிப்பு விடுதலை கற்பின் சிரிப்பு கண்ணகி கயவர் சிரிப்போ காரிருள் ! அஹிம்சையின் சிரிப்பு காந்தியில் ஆன்மீகச் சிரிப்பு […]
|
|
Posted: 04 Sep 2016 05:00 PM PDT நாகேஸ்வரி அண்ணாமலை நடிகர் அருண் விஜய் போதையில் காரை ஓட்டி ஒரு காவல் நிலையத்தில் நின்றிருந்த வேனில் மோதி, அதைச் சேதப்படுத்தினார். நான்கு நாட்களுக்குமுன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடிகை ராதிகாவின் மகளின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு, விடிய விடிய மது அருந்தியிருக்கிறார். மறுநாள் காலை மூன்று மணிக்கு ஒட்டலிலிருந்து கிளம்பி நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் காரை ஓட்டி வந்திருக்கிறார். அவருடைய மனைவியும் உடன் இருந்தார். காரை மிகவும் வேகமாக ஓட்டிச் சென்று காவல்நிலைய வாகனத்தின் […]
|
|
Posted: 04 Sep 2016 04:52 PM PDT -செண்பக ஜெகதீசன் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். (திருக்குறள்-471:வலியறிதல்) புதுக் கவிதையில்… தன் வலிமை, எதிராளியின் வலிமை இயற்றும் செயலின் வலிமை, இருவருக்கும் துணைநிற்போர் வலிமை எல்லாமறிந்து செயல்பட்டால், இல்லையென்றும் தோல்வி…! குறும்பாவில்… செயல் வலிமை, சேர்ந்தோர் வலிமை, தன் வலிமை, எதிரி வலிமை தெரிந்து செயல்படின் வெற்றியே…! மரபுக் கவிதையில்… செய்யும் செயலைச் செய்யுமுன்னே –செயலின் வலிமை அறியவேண்டும், செய்வோர் தம்வலி அறிவதோடு –செயலில் எதிரி வலிமையையும் மெய்யாய்த் […]
|
|
Posted: 04 Sep 2016 04:50 PM PDT தமிழ்த்தேனீ புழுவாயிருந்த என்னை என் தாயாரும் தந்தையாரும் கொட்டிக் கொட்டியே தேனியாக்கினார்கள் அப்படிப்பட்ட என்னை அதன் பின்னர் தமிழைக் கொட்டி தமிழ்த்தேனைக் கொட்டி தமிழ்த்தேனியாக்கிய என் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கம். ஆசிரியருக்கும் குருவுக்கும் வித்யாசம் என்ன என்று ஆராய்ந்தால் கற்றுக்கொள்ள விழைபவனுக்கு உலகத்தில் அத்தனைபேருமே குருவாகிறார்கள். ஆனால் ஒவ்வொரு குறிப்பிட்ட நூலையும் கற்க ஒவ்வொரு ஆசிரியர் தேவைப்படுகிறார். கணக்குக்கு ஒரு ஆசிரியர், தமிழுக்கு ஒரு ஆசிரியர் என்று. ஆனால் குரு என்பவர் தனக்குத் தெரிந்த […]
|
|
Posted: 04 Sep 2016 04:50 PM PDT க. பாலசுப்பிரமணியன் மொழி கற்றலும் கண்ணாடி நியூரான்களும் குழந்தை பிறந்து சில வாரங்களிலிருந்தே தாய் அந்தக் குழந்தையின் வளர்ச்சிப் பாதையின் முறைகளையும் வடிவங்களையும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் கவனிக்கத் தொடங்குகின்றாள். இந்த கவனிப்பு குழந்தையின் பிற்காலக் கற்றலுக்கு மிக அவசியமானதாகக் கருதப்படுகின்றது. ஒரு குழந்தையின் கண்களின் விழிகள் எப்படிச் செல்கின்றன, அதன் பார்வைகள் எல்லாப் பக்கமும் செல்கின்றனவா என்றெல்லாம் கவனித்தல் அவசியம். மேலும் அருகில் இருந்து வரும் ஒளி அலைகளுக்கு அந்தக் குழந்தையின் மறுமொழிகள் (Responses) எவ்வாறு இருக்கின்றன […]
|
|
சிவபுரி பெற்றெடுத்த சிவநேயச் செல்வர் Posted: 04 Sep 2016 04:47 PM PDT -முனைவர் சி.சேதுராமன் தமிழகத்தில் உள்ள ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமமாக விளங்கும் எனது ஊரான மேலைச்சிவபுரிக்கும் தனித்ததொரு சிறப்பு உண்டு. ஆம், இங்குதான் தமிழன்னையின் உயர்விற்கு அயராதுபாடுபட்ட தமிழ்ப்பெருந்தகை மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் பிறந்தார். அவரால் மேலைச்சிவபுரி தமிழக வரலாற்றிலும் தமிழிலக்கிய வரலாற்றிலும் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றது. கதர்ச்சட்டை, கதர்வேட்டி கதர்த்துண்டு, கையில் குடை, காலில் சாதாரண நடையன், நெற்றியில் திருநீறு இத்தகைய எளிமையான தோற்றத்துடன் தீட்சண்யமான கூர்ந்த […]
|
|
Posted: 04 Sep 2016 04:39 PM PDT நிர்மலா ராகவன் உணவின்மூலம் அன்பா? `இன்னும் நிறையச் சாப்பிடுங்கள்!’ கல்யாண வீட்டில் பந்தி உபசாரம். நம் வயிறு கொள்ளும்வரை சாப்பிட்டிருப்போம். இருந்தாலும், உபசாரம் செய்வார்கள். எனக்குத் தெரிந்த ஓர் இசைக்கலைஞர் நான் ஒவ்வொரு ஆண்டு பார்க்கும்போதும் பல கிலோ எடை கூடியிருப்பார். முப்பத்தைந்து வயதுதான். அவர் மனைவி என்னிடம் முறையிட்டார். “என்ன, இப்படி குண்டாகிக்கொண்டே போகிறீர்களே! இனிப்பு வியாதி வந்துவைக்கப்போகிறது!” என்று கவலைப்பட்டேன். “என்ன செய்யறது, மாமி! அடிக்கடி கல்யாணக் கச்சேரி. அப்போதெல்லாம், ஒரேயடியாக உபசாரம் செய்து […]
|
|
Posted: 04 Sep 2016 04:39 PM PDT -இன்னம்பூரான் செப்டம்பர் 3, 2016 இது இன்றைய செய்தி. அம்மா காண்டீன் என்ற மலிவு விலைச் சாப்பாட்டுக்கடை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். நேற்று, தமிழ்நாட்டுச் சட்டசபையில், நமது அரசியல் சாஸனத்தில் விதித்தபடித் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில், நிர்வாகக் கோளாறுகளால் 3.69 கோடி ரூபாய்கள் நஷ்டம் என்று குறிப்பிடப்பட்டது. அதற்கு அரசு அளித்த விளக்கமும், அதில் அடக்கம். ‘உகந்த நேரத்தில் சேவை, உத்தமமான அணுகுமுறை, சிக்கனம்’ ஆகியவற்றை இந்த திட்டம் கடைப்பிடிக்காததை ஆவணங்களுடன் நிரூபித்துச் […]
|
|
தலை வணங்குகிறேன்! ( செப்டம்பர் 5 – ஆசிரியர் தினம்) Posted: 04 Sep 2016 04:37 PM PDT க. பாலசுப்பிரமணியன் நாட்டின் முதுகெலும்புகளுக்கு உரம் போடும் இந்தத் தொழில் வல்லுனர்களுக்குத் தலை வணங்குகிறேன் ! “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் “என்ற பழமொழிக்குச் சான்றாக இன்றும் நாடெங்கும் தெய்வங்களின் பிரதிபலிப்பாக பல நல்ல உள்ளங்கள் உழைத்து வருகின்றன. அந்தச் சான்றோரை கைகூப்பி வணங்கும் நாள் இது! “இறைவனும் எனது குருவும் முன் வந்து நின்றால் முதலில் நான் என்னுடைய குருவின் கால்களில் தான் விழுவேன்; அவர்தான் என்னை இறைவனுக்கு அறிமுகம் செய்தவர் ” என்று சொன்னார் கபீர்தாஸ். […]
|
|
படக்கவிதைப் போட்டி 78-இன் முடிவுகள் Posted: 04 Sep 2016 04:31 PM PDT -மேகலா இராமமூர்த்தி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்தவர் நம் வல்லமை ப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். வல்லமை இதழாசிரியரின் விருப்பத்திற்கிணங்க இப்படத்தை அவர் போட்டிக்கு அளித்துள்ளார். அவருக்கு நம் நன்றி உரித்தாகுக! அன்புக்கரம் நீட்டி ஆசையாய் அழைக்கும் பாட்டனாரை விழிவிரிய நோக்கும் இந்த மழலையின் மதிவதனம் நம் மனம் மயக்குகின்றது! ”தளர்நடை போடும் தளிரே…! உன் அருகிலிருக்கும் பாட்டனாரும் (வயதாகித்) தளர்நடை போடுபவரே…அந்த உறவுக்குக் கைகொடு; அவர் அன்புக்கு உனைக்கொடு!” என்று அக்குழந்தையிடம் […]
|
|
Posted: 04 Sep 2016 04:19 PM PDT சுலோசனா பிள்ளையார் வழிபாடு என்பது பாரதம் முழுவதுமே பரவியுள்ள மிகப் பழமையான வழிபாடும் மிகப்பிரசித்தமானதும் ஆகும்.. படித்த பண்டிதர் முதல் பாமரன் வரையிலும் பிள்ளையார் வழிபாடு என்பது பொதுவானதாகவே இருக்கின்றது. செல்வச் சீமான்களுடைய அபிஷேக ஆராதனைகள் அஷ்டோத்திரம் சகஸ்ரநாம அர்ச்சனைகள் அனைத்தையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் விநாயகப் பெருமான் அதே மகிழ்வுடன் ஏழை விவசாயிகள் களத்து மேட்டில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்துவைத்து அருகம்புல்லை வைத்துவிட்டு தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணமும் போட்டுவிட்டு பிள்ளையாரப்பனே சரியான சமயத்தில் மழை பெய்ய வேண்டும், […]
|
vallamai |
|
Posted: 06 Sep 2016 12:04 AM PDT “சாமயஜுர் ரிக்கதர்வ கானரச கீதையை ஆமை உருவெடுத்து அன்றளித்த -வாமன மீனவ ராகசிம்ம மூணுராம கண்ணனாய் ஆனகல்கி மூர்த்தி அவர்”….கிரேசி மோகன்… *கல்கி” கிருஷ்ண மூர்த்தி….!
|
Posted: 05 Sep 2016 07:13 PM PDT செ. இரா.செல்வக்குமார் இந்த வாரத்தின் வல்லமையாளர் அருமையான நற்பணிகள் ஆற்றிவரும் ஓர் இளம் பெண். மிகவும் பயனுடைய கணினி மொழிகள், கணினி நிரல்நுட்பங்கள் பற்றிய ஏழு (7) மிக அருமையான, மின்னூல்களைத் தமிழில் எழுதியுள்ளார் திருவாட்டி நித்தியா துரைசாமி (“நித்யா துரைசாமி”) அவர்கள் இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்நூல்கள் அனைத்தையும் இலவசமாக அனைவரும் தரவிறக்கிப் பயன்கொள்ளும்படியாகக் “கிரியேட்டிவ் காமன்சு” (Creative Commons) என்னும் உரிமத்தின் கீழ் வழங்கியிருக்கின்றார். இந்நூல்களை யாரும் திருத்தியோ விரிவாக்கியோ சுருக்கியோ மீண்டும் […]
|
Posted: 06 Sep 2016 11:28 PM PDT இன்று கிரேசி கிரியேஷன்ஸ் 38ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது….! கமல் சார் போன வருடம் அடுத்த நாடகத்திற்காக கொடுத்த தலைப்பு ‘’கும்மாள கோகுலம்’’….! ‘’வேண்டுதல் வெண்பா’’ ——————————————— ‘’ஆண்டுமுப்பத்(து) எட்டில் அடியெடுத்து வைக்கின்றோம் வேண்டுதல் வேண்டாமை விட்டவிஷ்ணு -தூண்டுதலால்: கூட்டுக் குடும்பமாய், கும்மாள கோகுலமாய் மாட்டுத் தொழுவத்தில் மேய்’’….கிரேசி மோகன்….! (OR) ‘’ஆண்டுமுப்பத்(து) எட்டில் அடியெடுத்து வைக்கின்றோம் வேண்டுதல் வேண்டாமை விட்டவிஷ்ணு -தூண்டுதலால்: கூட்டுக் குடும்பமாய் கண்ணா எமையுந்தன் மாட்டுத் தொழுவத்தில் மேய்’’….கிரேசி மோகன்….! ‘’சாக்லேட் கிருஷ்ணா’’ […]
|
|
Posted: 06 Sep 2016 09:18 PM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.09.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் […]
|
|
Posted: 06 Sep 2016 08:22 PM PDT பவள சங்கரி குட்டு போடுவதின் பொருள் என்ன? அச்சோ இது ஆசிரியர் மண்டையில நங்குணு வைக்கிற கொட்டு இல்லீங்க… நம்ம பிள்ளையார் முன் தலையில் மூன்று முறை குட்டிக்கொள்கிறோமே -அதன் பொருள் பற்றியது. நமது காதுக்கு அருகில், தலையில் இருபக்கங்களும் அமிர்த நாடி இருக்கிறதாம். தலையில் நாம் மூன்று முறை குட்டிக் கொள்ளும்போது அந்த அமிர்த நாடியைத் தட்டிவிடும்போது நமது உடல் முழுவதும் அதன் ஆற்றல் பரவி குண்டலினியை எழுப்பிவிடுவதால் நமது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வையும், நல்ல […]
|
|
Posted: 06 Sep 2016 07:42 PM PDT கிரேசி மோகன் —————————————– முத்தை பவழத்தைப் பொத்தி ஜலத்திற்குள் நித்தம் அவைமுதிர நோன்பிருந்து -கத்தும் கடலரசன் தாருகன் காலடியில் கெஞ்சி அடபரிசாய் அந்தோ அளிப்பு….(96) வாசுகியும் தோழர்களும் வீசுமொளி ரத்தினத்தால் நீசனவன் மாளிகையில் நள்ளிரவில் -தாசியென தீபங்கள் தாங்கித் திரிகின்றார் தேவனே பாபமென் செய்தோம் புகல்….(97) கற்பகத் தாருதரும் அற்புதங்கள் யாவையும் அற்பனவன் ஆட்சி அருள்வேண்டி -நிற்பவனாம் இந்திரனே தாரகன் இன்னல் தவிர்த்திட தந்தருளி ஆனான் தொழும்பு….(98) காட்டிடும் அன்புக்குக் கட்டுப் படாதவன் வாட்டு கிறான்மூ உலகத்தை […]
|
|
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 71 Posted: 06 Sep 2016 06:32 PM PDT தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (3) முனைவர்.சுபாஷிணி ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலம் என்பது ஐரோப்பிய வரலாற்றுக்கு மட்டுமன்றி உலகின் ஏனைய கண்டங்களில் உள்ள நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சரித்திர நிகழ்வு. ரெனைசான்ஸ், அதாவது மறுமலர்ச்சிக்காலம் எனக்கூறப்படுவது, 1400 தொடங்கி 1600 வரை எனக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் தீவிரமான மாற்றங்கள் பல நிகழ்ந்தன. அதில் குறிப்பாக, சமயம், கலை, அறிவியல், கட்டுமானக் கலை, மருத்துவம், தத்துவங்கள், சிற்ப வடிவமைப்புக்கள், கடல் பயணங்கள் எனப் பன்முகத் தன்மையில் இந்த […]
|
|
Posted: 06 Sep 2016 06:00 PM PDT ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) அளவுடனே உணவுண்டால் ஆரோக்கியம் அமைந்துவிடும் அளவுமீறி ஆகிவிடின் அனைத்துமே அழிந்துவிடும் ! வாழ்வதற்கும் பணந்தேவை பணம்மட்டும் வாழ்வல்ல பணமெண்ணி வாழ்ந்துவிடின் பாழாகும் வாழ்க்கையது ! படிக்கவேணும் வாழ்க்கையிலே பலவற்றை யாவருமே பட்டம்மட்டும் வாழ்வல்ல பண்பும்சேர்ந்து வரவேணும் ! கோவிலுக்குப் போகவேணும் குறைசொல்லல் தவிர்க்கவேணும் பாவம்பற்றி எண்ணாமல் பலருக்கும் உதவவேணும் ! மூத்தோரை வாழ்க்கையிலே முதலிடத்தில் […]
|
|
Posted: 06 Sep 2016 05:01 PM PDT -இன்னம்பூரான் செப்டம்பர் 6, 2016 சிறுதுளி பெருவெள்ளம். சில்லறையை நடுத்தெருவில் இறைக்காமல் இருந்தால் தான் நாட்டின் செல்வக்களஞ்சியத்தை பாதுகாக்கமுடியும். தணிக்கைத்துறைக்கு இதையெல்லாம் கண்காணிக்கும் பணியை அரசியல் சாஸனம் அளித்திருந்தாலும், குறுக்குச்சால் ஓட்டித் தணிக்கையென்ற கண்கொத்திப் பாம்பிடமிருந்து ஒதுங்கி, ஓரத்தில் ஆட்டம் போடத்தான் ஆயுள் காப்பீட்டு கழகம், இந்தத் தளையிலிருந்து அக்காலத்து நிதியமைச்சர் திரு. சீ.டி. தேஷ்முக் அவர்களால் விடுவிக்கப்பட்டது. இந்தியாவின் ஆடிட்டெர் ஜெனெரலுக்குப் பாராளுமன்றத்தில் பேச உரிமை உண்டு. அதைப் பயன்படுத்தி அக்காலத்து ஆடிட்டர் ஜெனெரல் […]
|
|
Posted: 09 Sep 2016 09:52 AM PDT கிரேசி மோகன் —————————————– நேருதல் நிச்சயம் நீங்கள் நினைப்பதென ஆறுதல் சொன்னோன் அதுநிகழ -மாறுதலாய் சேனைத் தலைவன் ஜனிக்கப் படைப்பது நானல்ல என்றான் நகைத்து….(113) நட்ட மரமது நச்சுமர மாயினும் வெட்டுதல் வைத்தோன் வழியன்று -கெட்டவன் தாரகன் பெற்ற வரமளித்த நானவன் தீரவழி செய்தல் தவறு….(114) மூவுலகைத் தீக்குள் முழுகவைக்கும் வேள்வியை தீவிரமாய் செய்தனன் தாரகன் -தாவரம் என்றதும் தந்தேன் தவத்தைத் தடுத்திட அன்றியவன் நன்மைக்காய் அன்று….(115) போராளி யாய்யுத்த பூமியில் பூரிக்கும் தாரா சுரன்திகைக்கும் […]
|
|
Posted: 09 Sep 2016 09:49 AM PDT கிரேசி மோகன் —————————— மகப்பேறு காண மருத்துவச்சி ஆக அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய் பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு) எல்லைதனை யாரறிவா ரே….(1) நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும் மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார் நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும் தாயுமாவான் தந்தை தவித்து….(2) வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில் இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய் சிராப்பள்ளி ஈசனைச் சேரு….(3) ————————————————————————- சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர […]
|
Posted: 08 Sep 2016 11:59 PM PDT ”கண்ணா திருடாதே ! கோவிந்தா ஓடாதே ! உண்ணா முலைப்பால் உனக்களிப்பேன், -விண்ணில் பறக்கின்றாள் கோமாதா பாதவைக்கோல் உண்ண விருட்டென ரெக்கை விரித்து”….கிரேசி மோகன்….!
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 208 ) Posted: 08 Sep 2016 06:04 PM PDT சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில் அன்னைத்தமிழ் சொந்தங்களோடு மனம் திறக்க ஒரு மடல். கடந்த மடலுக்கும், இந்த மடலுக்கும் இடையில் இரண்டு வாரங்கள் காற்றாய்ப் பறந்தோடி விட்டன. இடையே ஒரு வாரம் தவறியது ஏன் என்னும் எண்ணம் உங்கள் மனங்களில் ஓடுவது இயற்கையே ! அகிலத்தில் அல்லாடும் மனிதர்களுடன் அடிக்கடி விளையாடுவது அந்த அனைவர்க்கும் பொதுவான ஆண்டவனின் பண்பாகும். அவ்விளையாட்டு சிலசமயங்களில் சோகத்தின் சுமையாகவும், சில சமயங்களில் ஆனந்த அலையாகவும் இருக்கும். […]
|
|
இது அவளின்…, தெருவாய் இருக்கலாம். Posted: 08 Sep 2016 05:10 PM PDT ரோஷான் ஏ.ஜிப்ரி துயர் செறிந்த மண்ணெங்கும் தேவை இல்லாமல் ஒரு தெரு வரம்பை மீறி வழியாகிறது ஒரு கொத்து சொப்பனங்களுடன் தனித்து நிற்கிறாள் மரமாய் பச்சாதாபமற்ற ஊராயிருந்திருக்கும் அவளது வெளியும் பரீட்சயங்களின் தெளிவற்ற ஊகங்கள் சரியும் பாகங்களில் கண்குத்தி விரிய முள்முருங்கை போல் முறிப்பதற்கான முன்னெடுப்புகள் முடக்கி விடப் படுகின்றன அண்மிக்கும் கணங்கள் விரசலில் உரச கிலிகொள்ள கிழிபடுகிறது பூமனசு நம்பிக்கைக்குரிய பாத்திரம் தேடியலைகிறேன் அள்ளி எடுக்க அவளுக்கு ஒரு சொட்டு மருந்தாகவேனும் இருக்கட்டுமென்று சிறிதளவு மனிதம் […]
|
|
Posted: 08 Sep 2016 05:03 PM PDT ( எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா ) வானம் மகிழ்வடைந்தால் மழையினைத் தந்துவிடும் பூமி மகிழ்வடைந்தால் புதுவிளைச்சல் கொடுத்துவிடும் சாமி மகிழ்வடைந்தால் சகலதும் கிடைத்துவிடும் ஆதலால் மகிழ்ச்சியினை அகிலமெலாம் விரும்புறதே ! பூக்கொடுக்கும் மரங்களெல்லாம் பூமிக்கு மகிழ்ச்சிதரும் பழங்கொடுத்து மரங்களெல்லாம் பலருக்கும் மகிழ்ச்சிதரும் சினமகற்றி வாழ்ந்துவிடின் தினமுமே மகிழ்ச்சிதான் அதைமனதில் கொண்டுவிட்டால் அகிலமே மகிழ்ச்சியுறும் ! பசித்தவர்க்கு உணவளித்தால் பசிதீர மகிழ்ச்சிவரும் அடித்தவரை அரவணைத்தால் அவர்மனமும் மகிழ்ச்சியுறும் […]
|
|
Posted: 08 Sep 2016 04:48 PM PDT -நிர்மலா ராகவன் காலை ஏழு மணிக்குள் தலைக்குக் குளித்துவிட்டு, ஈரத்தலையில் ஒரு துண்டைச் சுற்றிக்கொண்டு, வாசலில் கிடந்த மலேசிய நண்பனை எடுக்க வந்தாள் பாரு. தொலைபேசி அழைத்தது. `யார் இவ்வளவு சீக்கிரம்?’ என்ற யோசனையுடன் உள்ளே போய், `ஹலோ, வணக்கம்!’ என்றாள் அசுவாரசியமாக. முகமன் சொல்லாது, “துர்கா போயிட்டாளாம்!” என்ற குரல் — தோழி கமலினியுடையது. “எங்கே?” என்று வாய்வரை வந்த கேள்வியை அடக்கிக்கொண்டு, எதுவும் பேசத் தோன்றாது வெறித்தாள் பாரு. `தொலைந்தாள்!’ என்று ஒரு அலாதி […]
|
|
Posted: 08 Sep 2016 04:46 PM PDT -க.பிரகாஷ் வள்ளுவர்காலச் சமுதாயத்தின் தன்மையை அவர்தம் நூலிலிருந்தே உய்த்துணரலாம். உழவுத் தொழிலைத் தலைமையாகக் கொண்ட மருதநிலச் சமுதாயத்தில் நாகரிகம் நிலைகொண்டு கோனாட்சி வேர்விட்டிருந்த சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருந்த சமுதாயத்தில் தமிழர்கள் வாழ்ந்த நிலையினைக் குறளில் காண்கிறோம். வள்ளுவர் காலத்தில் பொருட் செல்வத்தால் பெருமை எய்திய சிலர் இருந்தனர். அன்றாடம் குடல் கழுவுவதற்கு வழிதெரியாத, ஆலாய்ப் பறந்த ஏழைகளாகப் பலர் இருந்தனர். “கரவாது உவந்து ஈயும்” என்ற குறளில் குறிப்பிடுவதுபோலச் செல்வர் சிலரைக் கண்டிருக்கிறார். […]
|
Posted: 08 Sep 2016 04:06 PM PDT கிரேசி மோகன் —————————————- வெகுவாக நம்பிய விஷ்ணுவின் ஆழி புகவாகு இல்லாத பாறை -நிகர்மார்பில் மோதியதால் உண்டான ஜோதியதால் ஆரமாய் க்ராதகன் கொண்டான் கழுத்து….(OR) பாதகன் கொண்டான் புனைந்து….(108) அயிரா வதமஞ்சும் அவ்வரக்கன் ஆனை எயிறால், இமையாதோன் என்றும் -உயிராய் வலம்வரும் புஷ்கரா வர்த்தக மஞ்சில் ஜலம்தெறிக்க முட்டும் சிதைத்து….(109) கர்மத் தளையகற்றி கர்பப் பிணியறுக்க தர்மம் தவதானம் தோன்றலாய் -மர்ம பலமுடைய தாரகன் பாதகம் தீர தளபதியை தேவர்க்குத் தா….(110) பற்றிச் சிறையில் பகைவனால் பூட்டிய […]
|
Posted: 10 Sep 2016 08:30 AM PDT ‘வெண்பா’கவதம்….! ———————————————————— துருவ சரித்திரம் ——————— உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டு சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள் சக்களத்தி மாதுசுரு ஸி….(1) சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும் தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப் பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….(2) கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட துருவன் மனக்குறையை தாய்முன் -உருக அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில் சுநீதி அமரென்றாள் சேய்க்கு….(3) மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு ஏதேனும் […]
|
|
முதன்முதல் முரண்கோளின் [Asteroid] மண் மாதிரி எடுத்து பூமிக்கு மீள விண்ணூர்தி ஏவியது நாசா Posted: 09 Sep 2016 08:48 PM PDT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://youtu.be/T0FxDxs7lyw https://youtu.be/xh8t8FpekH4 https://youtu.be/U-VR6pNi70k https://youtu.be/gtUgarROs08 https://youtu.be/vz45XOIkH_E https://www.youtube.com/watch?v=CADMSVRIJ0k +++++++++++++ நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கினார் ! முரண் கோள் ஒன்றின் மாதிரி மண் தூசியை வையத்தில் […]
|
|
Posted: 09 Sep 2016 08:41 PM PDT மீ.விசுவநாதன் தென்பொதிகை மலைத்தொடரில் தெரியும் அந்த தெய்வீக அழகினிலே சொக்கிப் போவேன் ! முன்பார்த்த இடங்கள்தான் என்ற போதும் முகம்சுளிக்கத் தோன்றாது முன்னே நிற்பேன் ! சின்னதானப் பறவையெனப் பறந்து அங்கே சிலநொடிகள் தவமிருந்து மறந்து போவேன் ! முன்னதானப் பிறப்பெல்லாம் முன்னே வந்து முகம்தடவி முத்தமிட மகிழ்ந்தி ருப்பேன் ! பிறப்பென்றும் இறப்பென்றும் இருந்த போதும் பெரியதொரு கவலைகளில் கரைய மாட்டேன் சிறப்பெல்லாம் இயற்கைவளக் கொடைதான் என்னும் சிந்தனையில் இருக்கின்ற பயிற்சி பெற்றேன் ! […]
|
|
Posted: 11 Sep 2016 10:05 AM PDT கிரேசி மோகன் ———————————- மூவுலகில் தாங்கள் முடிக்க நினைத்ததை ஏவுகணை என்மூலம் எய்திடுவீர் -காவலனே ஏனைய பேரிருக்க என்னை அழைத்தனையும் ஆணை எனக்கு அருள்….(126) வானப் பதவி விரும்பித் தவமியற்றும் ஈனப் பிறவியார் இன்றுரைப்பீர் -பாணம் தொடுத்தயென் வில்லால் தடுத்தவனைக் காமப் படுக்கையில் வீழ்த்துகிறேன் பார்….(127) பிறவிப் பிணிக்கஞ்சி பேரின்ப மோட்ச வரவுக்(கு) உமைமறந்த வீணன் -கருவத்தை நோக்க நுதலை நெறிக்கின்ற நங்கையர் தாக்கத் தவிர்ப்பான் தவம்….(128) சுக்கிராச் சாரியார் சொன்னவுப தேசத்தால் அக்கறையாய் தர்மார்த்தம் ஆழ்ந்தவனும் […]
|
|
Posted: 11 Sep 2016 09:57 AM PDT நிர்மலா ராகவன் மனதை மயக்கும் மருந்துகள் கடந்த இரண்டு மாதங்களில் நான் சந்தித்துப் பேசிய மூன்று பெண்மணிகள் குறுகிய காலத்தில் மிகப் பருமனாக ஆகியிருந்தார்கள். `எனக்கு ஐம்பது வயதாகிவிட்டதே! மெனோபாஸ்! ஓயாமல் தலைவலி. இழுப்புவேறு! அதனால் ஏதோ மருந்து சாப்பிடுகிறேன்’. முப்பது வயதே ஆகிய இசை ஆசிரியையான சீதாவின் பிரலாபம்: `அடிக்கடி சளியும் இருமலும் வருகின்றன. இப்படியே இருந்தால், நான் எப்படி பாட்டு வகுப்புகள் நடத்துவது?’ மலேசிய நாடு தழுவிய நாட்டியப் போட்டி ஒன்றில் முதல் பரிசு […]
|
Posted: 11 Sep 2016 04:27 AM PDT ”கன்றுபோல் பார்த்தன் கிருஷ்ணனவர் கால்வருட குன்றேந் தியவர் குஷியாகி -நன்றந்த கீதை உரைத்தனர்: கீழ்படிந்த் தோர்க்கெல்லாம் பாதை பயணம் பகிர்வு”….கிரேசி மோகன்….!
|
|
Posted: 12 Sep 2016 04:42 AM PDT தி விப்ரநாராயணன் மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்க ளெல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற் காயினரே திருவரங்கநாதர் இராமானுசரிடம் கேட்டாராம்.” அதெப்படி நான் யுகந்தோறும் அவதரித்து அவர்களை ரக்ஷிக்கின்றேன். என்னால் அவர்களை என்னை உணரவைக்க முடியவில்லை. உன்னால் எப்படி இச்செயல் முடிந்தது. அறியேன் நான், எடுத்துரைப்பாய் நீ ”என்று வினவினாராம் அதற்கு எம்பெருமானார் […]
|
|
Posted: 12 Sep 2016 02:55 AM PDT பவள சங்கரி தலையங்கம் மக்களுக்காக ஆட்சி செய்கிறோம் என்பதையே நடுவண் அரசு மறந்துவிட்டது போலத்தோன்றுகிறது. மக்களுக்கு எந்தெந்த முறையில் சலுகைகளை ஏற்படுத்தி நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்துவது என்பது பற்றி சிந்திப்பதற்கு பதிலாக துக்ளக் ஆட்சியைப்போல் மக்களுக்கு கேடு விளைவிக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது சமீபகாலங்களில். திரையரங்குகளில் நுழைவுச்சீட்டை அதிக விலைக்கு விற்றால் தண்டனை என்று கூறி நியாய விலையில் அதை வாங்கி திரையரங்கு செல்வதற்கு வழிவகுத்திருந்த காலம் ஒன்றும் இருந்தது. மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் ஒருவருக்கு 120 உரூபாய் என்று […]
|
Posted: 12 Sep 2016 01:04 AM PDT ”மல்லாண்டு கண்டது மாவீரன் பட்டம்தான், புள்ளாண்டான் ஹார்மனியை(சுமுகத்தை) பூமிக்கு -சொல்லாண்ட கீதை இசைக்கின்றார், கூடாரைக் கொள்ளுமிவர் பாதைக் குமார்க்க பந்து”….கிரேசி மோகன்….!
|
|
Posted: 11 Sep 2016 11:00 PM PDT ரோஷான் ஏ.ஜிப்ரி காலத்தின் வழியே தொலைத்த சுயத்தை தெருத்தெருவாய் தேடியலையும் நான் அண்மையிலிருந்து காசுக்காகவும்,கடமைக்காகவும் முழுநேர முகமூடிக்காரன் என்னிடம் ஒரு முகமும் சில..முகமூடிகளும் இருக்கின்றன குழந்தைகள்முன் ஒருமுக மூடியையும் மனைவியிடம் ஒரு முக மூடியையும் உறவினர்களிடம் ஒரு முகமூடியையும் நண்பர்கள் முன் ஒரு முக மூடியையும் வேலை தளத்தில் வேறொரு முகமூடியையும் அணிய வேண்டியது அவசியமாகி விட்டது எத்தனை நேர்த்தியாக இருப்பினும் மாறி,மாறி மாட்டிக் கொள்ளும் ஒவ்வொரு முகமூடியையும் களற்றி வைக்கையில் மாட்டிக் கொள்ளவும் நேர்கிறது […]
|
|
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 72 Posted: 11 Sep 2016 06:04 PM PDT ஹெர்மான் ஹெஸ்ஸ அருங்காட்சியகம், கால்வ், ஜெர்மனி முனைவர்.சுபாஷிணி ஹெர்மான் ஹெஸ்ஸ 1962ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றபோது அவருக்கு வயது 82. ஜெர்மானிய இலக்கியவாதி என்ற ஒரு எல்லைக்குள் மட்டுமே அவரது இலக்கிய ஆளுமை என்றில்லாது உலகப்புகழ்பெற்ற, உலகத்தரம் வாய்ந்த ஒரு எழுத்தாளர் என்ற புகழைப் பெற்ற அவரை அன்றைய “டி சைட்” (Die Zeit) நாளேடு இனி இந்த எழுத்தாளர் காலத்தால் மறக்கப்படுவார் என எழுதியது. ஆனால் இந்தக் கூற்று பொய்யானது என்பதைக் காலம் நிரூபித்து […]
|
|
Posted: 11 Sep 2016 05:00 PM PDT ( எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) சும்மாஇரு என்று சொல்லுவது எளிதாகும் சும்மா இருப்பதுதான் சுகமான நிலையாகும் சும்மா இருந்துவிட நினைக்கின்றார் யாவருமே இம்மா நிலத்தினிலே என்றுமே உயர்ந்துநிற்பார் ! சும்மா இருப்பது சுமையான காரியமே சுகம்கண்ட யாவருமே சும்மாஇருக்க மாட்டார் சுழன்றோடும் மனத்தாலே சும்மா இருப்பதற்கு சுதந்திரத்தைப் பெற்றுவிடல் சுகமான விஷயமல்ல ! சும்மா இருந்ததனால் சுமைவிட்டார் ஞானியர்கள் இம்மா […]
|
|
Posted: 11 Sep 2016 05:00 PM PDT ரா.பார்த்தசாரதி வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் , மனிதனின் மனதில் சட்டென்று மாறும் யோசனைகள் ஏன் நடந்தது என்று தெரியாத ஒரு மன வருத்தம் மனதினில் சத்தம் போடாமல் எழும் ஆசைகள் ! எதை கண்டும் நெஞ்சினுள் ஏற்படும் ஒரு ஏக்கம் கெட்டதை நினைத்து மனதினில் வேதனை கலந்த துக்கம் , யார் மீதோ ஏற்படும் காரணம்மில்லாத கோபம் ! வெற்றி பெற முடியாமல், கண்ணீர் சிந்தும் தோல்வி ! வாழ்க்கையில் மறக்க […]
|
|
Posted: 11 Sep 2016 04:58 PM PDT –செண்பக ஜெகதீசன் இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும். திருக்குறள் -448: பெரியாரைத் துணைக்கோடல்) புதுக் கவிதையில்… தவறும்போது தட்டிக் கேட்கும் தக்க பெரியோர் துணையற்ற மன்னனுக்கு, கெடுக்கும் பகைவரின்றியே கேடு வரும்! குறும்பாவில்… இடித்துரைத்துத் திருத்திடத் துணையாயப் பெரியோரில்லா மன்னன், பகைவரின்றியே பெரிதும் கெடுவான்! மரபுக் கவிதையில்… தவறிடும் போதெலாம் எடுத்துரைத்தே –தட்டிக் கேட்கும் பெரியோரை அவைதனில் அறிவுத் துணையாக –அமைத்துக் கொள்ளா மன்னவரும், புவியதன் […]
|
|
எட்டுத்தொகை நூல்களில் இயைபு வனப்பு Posted: 11 Sep 2016 04:56 PM PDT -பா.ராஜபாண்டி சங்க இலக்கியம் என்று அழைக்கப்படும் பதினெண்மேற்கணக்கு நூல்கள் அகம், புறம் என்ற இரு பொருண்மைக்கு உட்பட்டு வந்த பாக்களைப் பெற்று அமைந்துள்ளன. இவற்றுள் செவ்வியல் இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்கள் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகின்றன. இப்பாக்களில் ஈற்றடியில் கடைசி எழுத்து உயிர்மெய் கலந்து ஏகார ஓசையுடன் அமைந்து முடிவதாகப் பாடப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில பாடல்கள் இவ்விதியிலிருந்து சற்று மாறுபட்டு உயிர்மெய்யீராக அல்லாமல் மெய்யெழுத்தாகவே வந்துள்ளன. தொல்காப்பியர் ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்களும் ஈற்றடியில் இறுதியாக வந்து […]
|
|
Posted: 11 Sep 2016 04:51 PM PDT க. பாலசுப்பிரமணியன் மொழி கற்றலில் சில பார்வைகள் மொழி கற்றலைப் பற்றிய பலவிதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மெரஸினிச் என்ற மூளை நரம்பியல் விஞ்ஞானி இதைப்பற்றிய கருத்து தெரிவிக்கையில் கூறுவதாவது: “வளரும் பருவத்தில் எட்டு வயது முதல் மூளையில் மொழிகள் கற்பதற்கான முக்கிய பகுதி (critical Area ) தயாராகிறது. இந்தப் பருவத்தில் மொழிகள் ஒன்றோ, இரண்டோ அல்லது இதை விட அதிகமாக மொழிகளோ கற்பதற்கு மூளையின் அந்தப் பகுதி மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. எல்லா மொழிகளும் அதன் […]
|
|
Posted: 11 Sep 2016 04:50 PM PDT -இன்னம்பூரான் செப்டம்பர் 9, 2016 நாளை வெளிவரும் லான்ஸெட் என்ற உலகபுகழ் வாய்ந்த மருத்துவ இதழ் ஒரு மாபெரும் சாதனையை வெளிக்கொணரும். அதுவும் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சரும், உலக சுகாதார மையத்தின் பிராந்திய தலைவரும் கலந்தாலோசித்து எழுதியதை நாம் யாவரும் படித்து, இயங்கி, நமது சுகவனத்தை போற்ற வேண்டும். ஶ்ரீலங்காவின் சாதனை: மலேரியாவை ஒழித்ததும், அதற்கான நற்சான்றை நான்கு நாட்களுக்கு முன்பு WHO விடமிருந்து பெற்றுக்கொண்டதும். உள்நாட்டு போர் நடந்து கொண்டிருந்த போதே, இந்த […]
|
|
படக்கவிதைப் போட்டி 79-இன் முடிவுகள் Posted: 11 Sep 2016 04:31 PM PDT -மேகலா இராமமூர்த்தி இவ்வாரத்தின் போட்டிப் புகைப்படத்தை எடுத்துத் தந்திருக்கும் திருமிகு. ஷாமினிக்கும், அதனைத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் முதற்கண் நம் நன்றி! சிரத்தின்மீது குவிந்திருக்கும் கரங்கள் இம்மனிதரின் முகத்தில் கவிந்திருக்கும் கவலையின் பிரதிபலிப்பாய் இருக்குமோ? நமக்கேன் அந்தக் கவலை? புகைப்பட மனிதரின் அகத்தைத் திறந்துகாட்ட நம் கவிஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்! ஆதலால், அப்பொறுப்பை அவர்களிடமே விட்டுவிடலாம்! *** என்ன தப்பு நிகழ்ந்திருந்தாலும் தலைமீது கைவைக்காதே தோழா! கடல் அலையெனக் கவலைகள் ஆர்ப்பரித்து […]
|
|
Posted: 13 Sep 2016 02:02 AM PDT ஆனை(ஐராவதம்) அடிவருட அண்டர்கோன்(இந்திரன்) சார்பாக மோனைப் பசுஎதுகால்(எதுகை) மேய்ந்திட , -ஓணம் பிறந்தவன் வானைப் பிளக்கின்ற மின்னல்(வித்யுத்) திறந்திடும் ஆமனத் தோன்’’….கிரேசி மோகன்….! வாமனன் கோகுல ஆமனன்….! கண்ணன் எதுகையென்றால் பின்செல்லும் பசு மோனை….!
|
|
Posted: 13 Sep 2016 01:57 AM PDT பவள சங்கரி நம் தமிழ் மொழியின் சுவையை உணர முற்பட்டால் திகட்டத்திகட்ட சுவைக்க ஆயிரமாயிரம் விசயங்கள் உள்ளன. அதிலும் இலக்கணச்சுவையை அறிந்தோர் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனாலும் இலக்கணம் அதிகம் அறியாத என் போன்றோரும் கொண்டாட நிறையவே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த வஞ்சப்புகழ்ச்சி அணி. வஞ்சப்புகழ்ச்சி அணி என்பது ஒருவரைத் திட்டுவது போல் பாராட்டுவது. நம் ஆதிகாலப் புலவர்களில் மிகவும் குசும்பு படைத்தவர்கள் பலர்.. இரட்டுற மொழிதல் – சிலேடை அணிப் பாடல் என்ற ஒருவகை […]
|
Posted: 12 Sep 2016 10:42 PM PDT கிரேசி மோகன் ——————————– மடித்து தொடையில் மிடுக்காய்ப் பதித்த அடித்தா மரையை அகற்றி – வெடுக்கென ஆசன பீடத்தை அங்கீ கரித்தூன்றி பேசினான் மாரனைப் பார்த்து….(134) உச்சரித்தக் கீர்த்திகள் நிச்சயமே நண்பனே அச்சுறுத்தல் நீங்கி அகமகிழ்ந்தேன் -வச்சிரத்தை ஒத்தவனே, உன்படைதான் சித்தமகா யோகியையும் தத்தளிக்க வைத்திடும் தைத்து….(135) பூமியை சேடன் பொறுத்தல் திறன்கண்டே நேமியன் நாடினான் நீள்துயில் -பூமய வில்லாளி நண்பா விறலில் எனையொத்த வல்லானுன் வாளிக்கு வாய்ப்பு….(136) காளையார் மீது கணைவிட்(டு) அவர்தவச் சோலையை சாய்ப்பதாய் […]
|
|
Posted: 14 Sep 2016 06:40 AM PDT கிரேசி மோகன் —————————————— வெற்பரசன் தந்தை விடுத்ததோர் உத்திரவால் சொற்ப சிசுருஷை செய்கின்றாள் -சிற்பமாய் உச்சி சிகரத்தில் உள்ளாழ்ந்த ஈசர்க்கு எச்சரிக்கை அப்ஸர ஏவு….(140) முப்புறம்மண் சூழ்ந்தும் முளைக்க விதையதற்கு அப்புவின் தேவை அவசியம்போல் -ஒப்பறியா பார்வதியின் தோற்றப் பொலிவுதவ முற்றுமென்றால் நேருவதற்(கு) ஆரம்பம் நீ….(141) சிந்தையில் தோன்றியும் செய்ய முடியாத அந்தவோர் காரியத்தை ஆக்குபவன் -விந்தையாம் அச்சிவன் மீதுமலர் அம்பெய்தி கீர்த்தியின் உச்சிக்குப் போவாய் உயர்ந்து….(142) கொல்வதில்லை ஆனாலும் வில்வதையால் ஆனந்தம் கொள்வதனால் காமனுனைக் கூப்பிடுவர் […]
|
Posted: 14 Sep 2016 06:37 AM PDT மூவடி மண்கேட்க சேவடி பொற்சிலம்பு மாவலி உச்சி மவுலியில் -தீவெடிக்க திண்ணெனத் தாக்கும் திருவோணப் பிள்ளை கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….! மூலம் -நாராயண பட்டத்திரியின் ‘’ஸ்ரீமத் நாராயணீயம்’’….! ——————————————————————————————————– வாமனாவதாரம்….! ———————————- யாகாதி பாகத்தை ஈயாது போனதால் ஆகாயக் கோனிழந்தான் ஆட்சியை -ஏகென்ற சுக்கிரரால் மாபலி சொர்கம் புகுந்தடைந்தான் சக்கிர வர்த்தி சிறப்பு ….(1) பதவி இழந்தோய்ந்த பிள்ளைகள் சார்பாய் அதிதியன்னை கேட்டாள் அரியின் -உதவியை. பூணும் தவம்கண்டு பூரித்து வாமனனாய் ஓணத்தில் சேயாய் உதிப்பு….(2) […]
|
|
Posted: 13 Sep 2016 05:16 PM PDT -மீ.விசுவநாதன் திருவேணும் என்போர்க் கெல்லாம் –திருமாலின் பார்வை வேணும்! திருவோண நாளில் பெருமாள் –திருவடியை எண்ண வேணும்! ஒருஅடியால் உலகைத் தொட்டு –ஒருஅடியை விண்ணில் வைத்து மறுஅடியைத் தலையில் ஆழ்த்தி –மகாபலிக்கு ஞானம் தந்தான்! சிறுவனாக வந்து உள்ளச் –செருக்கினைத் துடைத்த போது மறுபிறவி இல்லா மன்னன் –மகாபலிக்கு மண்ணில் மீண்டும் வரும்படிக்கு வரமும் தந்தான்! –வரவேற்று மகிழ்ந்த மக்கள் […]
|
|
Posted: 13 Sep 2016 05:02 PM PDT ரோஷான் ஏ. ஜிப்ரி மழையை வரவேற்க பழகிய நாம் மழையை வழியனுப்ப பழகவே இல்லை, மழை குறைந்தால் வயிற்றுக்கு அரிசி இல்லை ஏங்குகிறோம் மழை கூடினால் வாய்க்கு அரிசி என்கிறோம் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டியபடி வெகுளியாய் விளங்கிக் கொண்டு நீ என்ன நினைக்கிறாயோ நான் நினைக்கிறேன். இது பற்றி எதுவும் உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை ஆயினும்; ஒன்றை சொல்ல வேண்டியிருக்கிறது. நம் தெருவில்தான் கிடக்கின்றன அந்த குப்பைகள் பற்றியாவது எதையேனும் சொல்லியாக […]
|
|
Posted: 13 Sep 2016 04:49 PM PDT ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா ) நிலத்துக்கும் சண்டையடா நீருக்கும் சண்டையடா நிலமுனக்குச் சொந்தமல்ல நீருனக்குச் சொந்தமல்ல இயற்கையினை பங்குபோட்டு இணக்கமின்றி இருந்துவிடின் நிலத்தினிலே நிம்மதியை எப்படித்தான் காணுவதோ ? ஓடிவரும் நீரென்றும் ஒருபக்கம் பார்ப்பதில்லை வீசிவரும் காற்றென்றும் வீண்வாதம் செய்வதில்லை பரந்துநிற்கும் கடல்கூட பாரபட்சம் பார்ப்பதில்லை பார்மீது உள்ளவரோ பகைகொண்டே வாழுவதேன் ? பூமிதனைக் குடைந்து புதையல் பலஎடுக்கின்றார் காடுதனை அழித்துக் காசுபல […]
|
|
Posted: 13 Sep 2016 04:43 PM PDT க. பாலசுப்பிரமணியன் இமைகளுக்கிடையே கசியும் நீர்த்துளி ஒரு ஏக்கத்தின் .. உயிர்த்துளி ! கனவுக்கும் நனவுக்கும் இடையே நடந்த காதல் சண்டையில் கண்களுக்கு கிடைத்த ஒரு பரிசுத்துளி ! யாருக்குத்தான் ஏக்கமில்லை ? ஐம்புலன்களுக்கும் அடிபணியாத உடலுக்கும் அறிவுக்கும் அமைதியில்லா உயிருக்கும் பிறப்பிற்கும் இறப்பிற்கும் .. என்றென்றும் ஏக்கம்தான் ! எரிகின்ற உடலுக்கும் இனியொரு பிறப்பிற்கு ஏக்கம்தான் ! ஏக்கம்.. அது .. உணர்வுகளின் மோகத்தின் மரண தாகம் ! […]
|
|
Posted: 13 Sep 2016 04:40 PM PDT – ராஜகவி ராகில் – முளைத்தவுடன் பழம் தருகின்ற ஒரு நட்பு விதையென என் வாழ்க்கை நிலத்தில் நீதான் இருந்தாய் நண்பா என் இரவில் சூரியன் உதித்தது அடடா நீதான் வந்துகொண்டிருந்தாய் என் வாழ்க்கை உணவில் இனிப்பு உப்புக் கல்லாய் வந்தும் என் சுவை தீர்மானிக்கின்ற நா ஆகவும் என்னுள் வசித்தாய் நீதான் உனது நட்பு நான் கண்ணீர் சிந்தினால் நீர் இனத்துக்கே தீவைத்துக் கொளுத்தும் தீக் குச்சியாய் காட்டுப் […]
|
|
Posted: 13 Sep 2016 04:38 PM PDT -ராஜகவி ராகில் உன் அழகு நதி அத்தனை மீன்களுக்கும் ஆசை அதற்குள் வாழ! நீ எது விதைத்தாலும் முளைக்கும் பூக்கள் மட்டும்! உதிர்ந்து உன்னில் விழுந்த இலை பறந்து சென்றது பட்டாம் பூச்சியாகி! நீ வீதியில் நின்றால் போதும் யாரும் செல்ல மாட்டார்கள் மதுக்கடைக்கு! வீட்டுக்குள் இருந்த உன்னில் நனைய முடியவில்லை என்ற கவலையில் பெய்தது மழை! புயலை விடப் பல மடங்காக வீசுகிறது உன் அழகு பார்ப்பவர்கள் விழுகிறார்கள் தொப்பென! எல்லாருமே கவிஞர்கள்தான் நீ […]
|
Posted: 16 Sep 2016 01:31 AM PDT ”பாம்புத் தலைமேல் பரதமிடும் பாதத்தை நாம்ப வணங்க நலம்பெறுவோம்: -சாம்பலான்(சாம்பல் நீ்று பூசிய சிவன்) மைத்துனன்(மச்சினர்) ஆட்டம், மகரந்த வண்டேபோல், (பாம்புப்) பைத்தலைப்பூ வுக்குள் புயல்”….கிரேசி மோகன்….! புயல்- பச்சைப் புயல் கண்ணன்….!
|
|
இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-26 Posted: 15 Sep 2016 05:01 PM PDT மீனாட்சி பாலகணேஷ் சகலலோகமும் பின்வரும் தெய்வமாக்கொடி சிறுமகள் தளர்நடை நடக்கிறாள். தாயும் சேடியரும் கண்கள் பெற்றபேறு என்று மகிழ்வெய்துகின்றனர். “வா குழந்தாய், எம் கண்மணியே, முத்தே,” என்றெல்லாம் அவளை அழைத்து குறுநடை பயின்றுவர வேண்டுகின்றனர். அடியவர் ஒருவர், இந்த தெய்வக்குழந்தை நடந்து வரும்போது இன்னும் பல பொருட்கள் உடன்வரக் காண்கிறார். பக்திப் பரவசத்தில் பாடல் பெருகுகிறது. குழந்தை, பெண்குழந்தையல்லவா? தாயார் தலைவாரிப் பூச்சூடி விட்டிருக்கிறாள். கரிய மேகம் போன்ற தண்மையான குழல், அக்குழலில் அணிந்துள்ள பூமாலையில் […]
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 209 ) Posted: 15 Sep 2016 04:16 PM PDT அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் எனும் நம்பிக்கையுடன் இதோ அடுத்த மடலில் உளக்கருத்தைப் பரிமாற வந்திருக்கிறேன். உலகம் இடமிருந்து வலமாகச் சுழல்கிறது., இரவும், பகலும் மாறி மாறி வருகிறது, கோடையும், வசந்தமும் சுற்றிச் சுற்றிச் சுழல்கிறது இலையுதிர்கிறது, மீண்டும் தளிர்க்கிறது. ஆம் இவையெல்லாம் இயற்கையின் நியதிகள். அதே இயற்கையின் செயற்பாடுதான் மனிதர்களின் வாழ்வும். எம் வாழ்க்கையிலும் சில இயற்கை நியதிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றின் சுழற்சியோடு மனிதன் சேர்ந்து இயங்கும்வரைதான் மனிதனின் […]
|
Posted: 16 Sep 2016 10:39 PM PDT ’’இன்று புரட்டாசி சனிக்கிழமை….ஏழு கொண்டல வாடாவுக்கு ஏற்ற நாள்….! கேசவ்வின் கண்ணன் புல்லாங்குழல் ‘’நாத விந்து கலாதீ நமோ நம’’….! ”நாதவிந்து கலாதீ நமோ நம மெட்டு”….! —————————————————————– பொது ——— பெருமாள் திருப் புகழ்…. “ஏழு கொண்டல வாடா நமோ நம ஏளும் நஞ்சணை சேடா நமோ நம ஏறும் அன்பர்கள் தோழா நமோ நம -குருபீஷ்மர் ஆயி ரம்புகழ் நாமா நமோ நாம தேச மெங்கிலும் ஆழ்வார் கள்பாடிய ஆயி ரம்தொழு மாலே நமோ […]
|
|
பூர்வப் பூமியின் இடைப் பகுதி [Mantle] மோதலில் புலம் பெயர்ந்து நிலவாக உருண்டிருக்கலாம் Posted: 16 Sep 2016 10:29 PM PDT [செப்டம்பர் 14, 2016] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ பூமியின் உடற் தட்டிலிருந்து சிதைந்தது நிலவு ! வாரிசுச் சந்ததி யாய்ப் பூமிக்கு வந்தது நிலவு ! பூமித் தாய்முகம் பார்த்துத் தன் ஒருமுகம் காட்டி எப்போதும் வலம் வருவது நிலவு ! அண்டையில் ஒரு சமயம் சுற்றிய உண்டைக் கோள் “தியா” பூமி வயிற்றிலே மோதித் திரண்டது நிலவு என்ப தொரு கதை ! பூமியும் நிலவும் ஒரே பிண்டத்திலே உண்டான உண்டைக் கட்டிகள் […]
|
|
அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார்சதுர்த்தி பிரம்மோத்சவம் Posted: 16 Sep 2016 09:46 PM PDT ஒரு அரிசோனன் பிள்ளையார் சதுர்த்தி ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. இந்நன்நாளைக் கணேச சதுர்த்தி, விநாயக சதுர்த்தி என்றும் அழைக்கிறார்கள். இந்தியாவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை அமெரிக்காவிலும் இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. அப்படியிருக்கையில் முழுமுதற் கடவுளாக ஆனைமுகன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அது கொண்டாடப்படாமலிருக்குமா என்ன! ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழா பிரம்மோத்சவ மாகப் பதினோரு நாள்கள் அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் கொண்டாடப்படுவதுபோல இவ்வாண்டும் கொண்டாடப்பட்டது. . இவ்வாண்டும் இத்திருநாளைக் கொண்டாட ஒருமாதம் முன்னதாகவே ஏற்பாடுகள் துவங்கின. […]
|
|
Posted: 16 Sep 2016 09:39 PM PDT கவிக்கோ ஞானச்செல்வன்
|
|
Posted: 16 Sep 2016 09:24 PM PDT கிரேசி மோகன் ——————————————— பயந்த ரதிவசந்தன் பின்தொடர காமன் உயர்ந்த இமயம் அமைந்த -நயனனுதல் ஆண்டவன் ஆசிரமம் மாண்டாலும் வெற்றியை வேண்டியவன் சென்றான் விரைந்து….(146) சிவத்தோடு சேர்ந்தங்கு சித்தம் ஒருமித்த தவத்தோர் தரத்தை தகர்க்க -அவித்தைக்(கு) இசைந்த களத்தை இயற்றுவோன் ஆனான் வசந்த ருதுவாய் வனத்து….(147) மாற்றான் மனைவிரும்பும் மூடனால் பத்தினி ஆற்றாமை கொள்ளும் அவலமாய் -மாற்றத்தால் விண்முகம் பானு வடக்கேக தென்திசை தன்முகம் கொண்டாள் துயர்வு….(148) தளிர்பெண் சிலம்புத் திருவடி பட்டு துளிர்க்கும் அசோகமரம் […]
|
vallamai |
|
தன்வந்திரி பீடத்தில் காவிரி நீர் வேண்டி கார்த்தவீரார்ஜுனர் ஹோமம் Posted: 18 Sep 2016 08:45 AM PDT தன்வந்திரி பீடத்தில் காவிரி நீர் வேண்டி கார்த்தவீரார்ஜுனர் ஹோமம் இன்று 18.09.2016 நடைபெற்றது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய, பீடத்தில், ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் இன்று 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 11. மணியளவில் காவிரி நீர் பிரச்சினை சுமுகமாக முடிந்து, தமிழகத்துக்கு நியாயமான முறையில் நீர் வரத்து கிடைக்கவும், கர்னாடக வாழ் தமிழ் மக்கள் இழந்த நிம்மதியை மீண்டும் பெறவும் தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு சிறப்பு ஹோமமும், […]
|
|
ஆரம்பிக்கிறது சர்வதேச புத்தகக் கண்காட்சி. செல்ல நீங்கள் தயாரா? Posted: 18 Sep 2016 12:51 AM PDT எம். ரிஷான் ஷெரீப் “A reader lives a thousand lives before he dies, said Jojen. The man who never reads lives only one.” ― George R.R. Martin, A Dance with Dragons, Chapter 34 இலங்கையின் இலக்கிய மாதமான செப்டம்பரின் ‘சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’ 16.09.2016 முதல் கொழும்பில், BMICH (Bandaranaike Memorial International Conference Hall – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு […]
|
|
தமிழகத்து கவிஞர் மு.முருகேஷூக்கு குவைத் நாட்டில் இலக்கிய விருது Posted: 19 Sep 2016 08:00 AM PDT சென்னை. செப்.18. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷூக்கு குவைத் நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் கவிஞர் மு.முருகேஷ். கடந்த முப்பதாண்டு காலமாக தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள், 6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100–க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் […]
|
Posted: 19 Sep 2016 07:01 AM PDT ”பகவான் உவாச’’….! ————————————————– ’’மடிதனில் குந்தி மகனேகாண்!, மந்தி வடிவினில் மாருதி விண்ணில் -கொடிதனில் வெற்றிவேல் வீரவேல் வாக்குறுதி செய்வதை, பற்றுவில் காண்டீபம் பாண்டு’’….! “வாகனம் தெய்வம், வழித்துணை ஆண்டவன், போகும்நம் பாதை பகவானே, -நீகனம், தன்செயலென்(று) எண்ணி ,தலைமேல் சுமக்கின்றாய், என்செயல் ஆனால் இறகு(பீலி மயில்)”…..கிரேசி மோகன்….
|
|
தமிழில் மரியாதைச் சொற்கள் .. (2) Posted: 19 Sep 2016 04:02 AM PDT |
|
கவிக்கோ ஞானச்செல்வன்
|
|
வள்ளுவம் வலியுறுத்தும் புலால் மறுப்பு! Posted: 18 Sep 2016 07:05 PM PDT -மேகலா இராமமூர்த்தி ’வாழ்க்கை வாழ்வதற்கே’ என்று மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் எவ்வாறு வாழ்வது? அதற்கென்று ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்ற கேள்வி உடனே நம் மனத்தில் எழுகின்றது. இதற்கான விடையைத் தன் அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏட்டில் எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் ஒரு மாமனிதர்! அவர் வேறுயாருமல்லர்… சிந்தனைத் தெளிவும் கருத்துச் செறிவும் மிளிர ஒன்றரை அடிகளிலேயே வாழ்வின் நீள அகலங்களை அளந்துவிட்ட நீடுபுகழ் வள்ளுவரே அந்த மாமனிதர்! […]
|
|
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 73 Posted: 18 Sep 2016 06:59 PM PDT பாப்பிரஸ் அருங்காட்சியகம், வியன்னா, ஆஸ்திரியா முனைவர்.சுபாஷிணி பண்டைய எழுத்து ஆவணங்களைப்பற்றி ஆராய முற்படும்போது கல்வெட்டு ஆவணங்களைப் போலவே நமக்கு பேப்பிரசில் கீறப்பட்ட ஆவணங்களும் கிடைக்கின்றன. மிகப்பழமையான பேப்பிரஸ் ஆவணங்கள் எகிப்தின் செங்கடல் பகுதியைச் சுற்றி செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்றன. இன்றைக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பேப்பிரஸ் ஆவணங்கள் கி.மு.2560- கி.மு2550 எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க பேப்பிரஸ் ஆவணங்கள் உலக அதிசயங்களில் ஒன்றான கீசே பிரமிட் கட்டப்பட்ட இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளை பதிவனவாக அமைந்துள்ளன. உலகின் ஏனைய பாகங்களை […]
|
Posted: 18 Sep 2016 06:38 PM PDT ”எந்தவேலை செய்தாலும் தொந்தரவாய்த் தோணுதே இந்தநிலை ஏனெனக்கு நந்தலாலா -அந்தநாளில் ஆளாள் குறைதீர்க்க ஆதரித்தோய் இன்றுமட்டும் வாளா(து) இருப்பதேன் வா”…. ”எந்தவேலை ஆனாலும் எந்தவேளை ஆனாலும் நந்தலாலா நிந்தன் நினைவாக -அந்தரங்க பாவம் தனில்மூழ்கி பார்க்கும் இடத்திலெல்லாம் நீவந்து நீலமாய் நில்”….கிரேசி மோகன்….!
|
|
Posted: 18 Sep 2016 06:34 PM PDT -மலர் சபா மதுரைக் காண்டம் – அழற்படு காதை பிராமண பூதம் பசுமையான முத்துவடம் பூண்ட நிலவுபோல் மிக்க ஒளி பொருந்திய உடல் உடையவன்; ஒளிரும் முத்துகளால் செய்த அணிகள் அணிந்தவன்; வெண்தாமரை, அறுகம்புல், நந்தியாவட்டைப்பூ இவற்றைத்தன் தலையில் அணிந்தவன்; நுட்பமான நுரை போன்ற மெல்லிய ஈர ஆடையைத் தன் மேனியில் அணிந்தவன்; மலராத வட்டிகை, விளம்பொரி, வன்னிகை, சந்தனம், கொட்டம் ஆகிய வாசனைப் பொருட்களைச் சேர்த்து அரைத்துப்பூசிய மார்பை […]
|
|
Posted: 18 Sep 2016 06:34 PM PDT கிரேசி மோகன் ——————————————– வனமென்ற நங்கை வசந்தனுடன் சேர்ந்த கணத்தில் பலாசக் கிளையில் -மினுமினுத்த கூன்பிறை மொட்டுக்கள் கீறும் நகமாக காண்பது காளிதாசன் கண்….(152) மஞ்சாடி பூக்களவள் செஞ்சாந்து, சுற்றிவரும் அஞ்சாத வண்டுகள் ஆங்கேபொட்(டு) -அஞ்சனம் மாந்தளிர் வாயதரம் மேவிய செந்நிறத்தால் காய்ந்த மதுஸ்ரீ கதிர்….(153) பருவருது கண்டு முரளமர பூக்கள் விரவுமது கண்ணிலே வீழ்ந்தும்-திரளும் இலையுதிர் காற்றுக் கெதிராக ஓடும் கலைமான்கள் கொள்ளும் களிப்பு….(154) தீந்தமிழ்க்(கு) ஈடாக ஆண்குயில் கூவுதல் மாந்தளிர் உண்டதால் மட்டுமன்று -தான்திமிர் […]
|
|
Posted: 18 Sep 2016 05:06 PM PDT நிர்மலா ராகவன் காதலாவது, கத்தரிக்காயாவது! தந்தையை இழந்திருந்த கமலியின் தாய் `அன்பு’ என்பதையே அறியாது, யார் வீட்டிலோ வளர்ந்திருந்தாள். அவள் வளர்ந்த விதத்திலேயே மகளையும் வளர்த்தாள். நான்கு மாதக் குழந்தையையே அடித்து நொறுக்குவாள். பள்ளிக்கூடத்துக்குச் சென்று வந்தாலும், பத்து வயதில்கூட கமலிக்கு எழுதப் படிக்க வரவில்லை. யார் எது பேசினாலும், முதுகில் அடி வைத்தால்தான் அவளுக்குப் புரியும் என்ற நிலை வந்தவுடன்தான் விழித்துக்கொண்டார் அவளுடைய தந்தை. விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டில் கொண்டு விட்டுவிட்டுப் போய்விடுவார். தன் […]
|
|
பாமரகீர்த்தி [3] இன்னம்பூரான் பக்கம் [8] Posted: 18 Sep 2016 05:05 PM PDT -இன்னம்பூரான் 18 09 2016 சமுதாயத்தையே பல நூற்றாண்டுகளாகப் பாமரனைப் பற்றிய மறதி நோய் பரவலாக ஆட்கொண்டிருப்பதைக் கண்டு வருந்தினோம். பகிர்வார்கள் தென்படாததால், நேற்றைய பாமரனின் கீர்த்தியைப் பாடாவிடின், இன்றே அவரை மறந்துவிடுவார்கள் என்பது திண்ணம். அதனால்தான் அவசரம், பொறுமையின்மை. சமுதாய அக்கறையின்மையைப் பொறுத்தார் பூமி ஆளலாம்; தரிசு பூமியை. ஆனால், அவர்களால் தரணி ஆள முடியாது. உங்களுக்கு மாரியப்பனை தெரியுமோ? தெரிந்திருக்காது. தற்பொழுது பாழடைந்த மண்டபத்தின் தூண்கூட, ‘அவன் இங்கு தான் இளைப்பாறினான்; ஒரு கல்வெட்டு […]
|
|
Posted: 18 Sep 2016 05:02 PM PDT எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா உலகத்தில் பிறந்திடுதல் உயர்வான நிலயென்று உம்பர்களே எண்ணுவதாய் உரைத்திடுவார் வாசகரும் உலகத்தில் பிறந்தாரோ பிறப்பதனை உணராமல் பித்தேறி பலசெய்து பேதலித்துநிற்கின்றார் ! மானிடராய் பிறந்துவிடல் மாநிலத்தில் பெரும்பயனே ஆறறிவை பெற்றுநிற்கும் அருமையவர்க்கு அமைந்ததுவே தாறுமாறாய் நடக்காமல் தடம்புரண்டு போகாமல் நேரான வழிசெல்ல நிற்கிறதே அறிவாகும் ! அறிவுபெற்ற மனிதனிடம் அசிங்கம்பல இருக்கிறது ஐந்தறிவு ஜீவன்கூட அசிங்கம்பல செய்வதில்லை பேரறிவு பெற்றுவிட்டோம் எனவெண்ணி நின்றுநிதம் […]
|
|
Posted: 18 Sep 2016 04:56 PM PDT க. பாலசுப்பிரமணியன் பார்வையும் பொருளும் கற்றலில் மூளை எப்படிப்பட்ட விந்தையான செயல்களை மிகவும் எளிதாகவும் துல்லியமாகவும் ஓவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையிலும் செய்கின்றது என்பதை அறிந்தால் இதற்குப் பின் இருக்கும் சக்தியின் வளமையை நாம் கணிக்கவே முடியாது.! நாம் ஏதாவது ஒரு பொருளைப் பார்த்ததும் அந்தப் பொருளின் பரிமாணங்களையும் அதன் தேவைகளையும் அதன் தாக்கங்களையும் அதனுடன் சம்பந்தப்பட்ட உணர்வுகளையும் மூளை நமக்கு ஒரு நொடியின் மிகச்சிறிய விழுக்காட்டில் அள்ளித்தருகிறது. ஆனால் நாம் பார்க்கும் பொருளின் உண்மையான பதிவு நமக்கு […]
|
|
Posted: 18 Sep 2016 04:47 PM PDT -தமிழ்த்தேனீ ஏங்க நீங்க எழுதற எல்லாக் கதையையும் படிச்சுப் பாத்தேன்; அதென்ன நம்மைச் சுத்தி நடக்கறதையே கதையா எழுதறீங்க. நமக்குத் தெரிஞ்சவங்க யாரு படிச்சாலும் அது யாரோட கதைன்னு உடனே புரிஞ்சுக்குவாங்க என்றாள் குற்றம் சாட்டும் பாவனையில் ஆனந்தவல்லி. திடுக்கிட்டு நிமிர்ந்த எழுத்தாளர் தமிழ்த்தேனீ. சுதாரித்துக் கொண்டு சாரதா நம்மைச் சுத்தி நடக்கறதைத்தான் கிரகிச்சுக் கதை எழுதணும். எழுத முடியும். இது வரைக்கும் நடக்கறதை வெச்சிக் கதை எழுதறவங்கதான் அதிகம். ஏன் தெரியுமா? நடக்காததை கற்பனை செஞ்சு கதை எழுதினா படிக்கறவங்களுக்கு அது புரியாது. அதுனாலே படிக்கறவங்களுக்கு புரிஞ்சாதான் அது ஒரு கதையோட வெற்றி. அது மட்டுமில்லே நம்மைச் சுத்தி நடக்கறதை கூர்ந்து […]
|
|
Posted: 18 Sep 2016 04:38 PM PDT –செண்பக ஜெகதீசன் முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு. (திருக்குறள் -786: நட்பு) புதுக் கவிதையில்… உள்ளத்தில் கள்ளம்வைத்து, உதட்டில் புன்னகை மலரக் கொள்வதல்ல உண்மை நட்பு… அன்புகொண்ட உளத்துடன் அகம் மகிழக் கொள்வதுதான் அசல் நட்பு…! குறும்பாவில்… மலர்ந்த முகம்மட்டும் காட்டி வருவதல்ல உண்மை நட்பு, அன்பொடு அகமகிழ வருவதுதான் அது…! மரபுக் கவிதையில்… உள்ளத் துள்ளதை மறைத்தேதான் –உதட்டில் காட்டிடும் புன்னகையால் கொள்ளும் உறவு நட்பல்ல! –காட்டும் வேடம் […]
|
|
Posted: 18 Sep 2016 04:10 PM PDT ரா.பார்த்தசாரதி உலகில் மூன்று பங்கு தண்ணீரால் நிரம்பியதே ஏனோ மாநிலத்திற்கு, மாநிலம் கலகம் ஏற்பட்டதே , வேற்றுமையில் ஒற்றுமை என்பது பொய்யானதே, தண்ணீரால் மாநிலத்தில் ரத்தவெள்ளம் ஆனதே ! சுதந்திரம் அடைந்தது முதல் நதிநீர் இணைப்பு இன்னும் இவை காகித திட்டமே என மக்களின் நினைப்பு, நதிநீர் மாநிலத்தின் வேளாண்மைக்கு முக்கியத்துவம் ஆனதே விவசாயிகளின் கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டமும் நியாயமானதே ! வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் என்றும் கெடுவதில்லை இது மாநிலத்திற்கும், மத்திய அரசிற்கும் பொருந்தாமலில்லை நீதி […]
|
|
Posted: 18 Sep 2016 04:00 PM PDT ரா. பார்த்தசாரதி தனிமையையும், நிம்மதியையும் தேடாத மனிதன் இல்லை? எங்கே என்று பலரிடம் கேட்டும் சரியான பதில் இல்லை, ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நினைக்காத நாள் இல்லை துறவிகள் காட்டிற்கு சென்றது தவத்திற்கா,தனிமைக்கா என்றறியவில்லை! நிம்மதியும், தனிமையும் எங்கே கிடைக்குமென மனிதன் எண்ணினான் , அங்கே ஓர் இடம் தனக்கு வேண்டும் என்றான் , இருந்த இடத்தினிலே நிம்மதியும்,தனிமையும் கிடைக்குமா? இவை இரண்டும் மனம் மௌனமாய் இருந்தால் ஈடேறுமா ? நிம்மதியும், தனிமையும் அமைதியான […]
|
Posted: 21 Sep 2016 06:58 AM PDT கரதூ ஷணர்கள் பரலோகம் செல்ல நரவேஷம் இட்டாய்கண் ணர்க்குமுன் -வரவர்ஷம்(வர மழை) அண்டர்கோன்(இந்திரன்) கர்வமாய், ஆவினம் காத்திட சுண்டுவிரல் கொண்டாய்கல்(கல் -கோவர்த்தன கிரி)KEY….கிரேசி மோகன்….! KEY -SOLYUTION….!
|
Posted: 21 Sep 2016 06:54 AM PDT கிரேசி மோகன் ————————————- நெறியா புருவம் நகரா இமைகள் புரியாதோர் அஞ்சிடும் பார்வை -சரிவாக தேசொளி மூவிழியால் நாசி நுனியினை ஈசனார் நோக்கு இருப்பு….(170) மின்னலிடி இல்லாத மேகமாய், பொங்கலை இன்னதென்(று) அறியாத தண்ணீராய் -விண்ணென காற்றற்று நிற்கும் குத்து விளக்காயுள் காற்றடக்கி காட்சி கொடுப்பு….(171) முண்டக நூலினை மிஞ்சிடும் மென்மையும் கண்டுமதி மங்கும் கிளரொளியும் -மண்டையின் உச்சிக்கண் தோன்றும் ஒளிக்குவமை தந்தமர்ந்தான் சச்சிதா னந்த சிவன்….(172) ஒன்பது வாயிற்கண் ஓடாது யோகத்தால் தன்பதுமை நெஞ்சை தன்னகத்துக் […]
|
Posted: 20 Sep 2016 06:25 PM PDT கிரேசி மோகன் ——————————————— தத்தத் தனதத்தத் தனதன தத்தத் தனதத்தத் தனதன தத்தத் தனதத்தத் தனதன-தனதான(முத்தைத் தருபத்தித் திருநகை மெட்டு) ——————————————————————————————- பெருமாள் திருப் புகழ்…. “பெற்றப் பிணிமுற்றப் பிணமென பக்கத் தினில்சுற்றத் தினரழ முற்றத் தினில்வைத்துக் கிரியைகள் -நிறைவேற சத்தத் தொடுவொற்றைப் பறையெழ பச்சைப் பனைமெத்தைத் துயிலுற இட்டுச் செலும்பெற்றப் பயலுகள் -இடுகாடு சிற்றப் பனகத்துப் புறமதில் இக்கட்டு டல்கட்டுக் கதையென புத்திக் கறிவித்தக் கிரிவளர் -ரமணேசர் உற்றச் சுகமுற்றுச் சரணுற பக்திப் புனலிட்டுப் […]
|
|
Posted: 20 Sep 2016 05:06 PM PDT பவள சங்கரி அருள்மிகு கோவர்த்தனநேசன் ஆலயம் – மதுரா மாயக்கண்ணன் குழந்தையாக அவதரித்த புனித பூமி மதுரா. இந்தியத் திருநாட்டின் எண்ணற்ற புனிதமான வழிபாட்டுத் தலங்களில் இதுவும் முக்கியமான ஒரு தலம். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 100வது தலம் இது. பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என ஐம்பெரும் ஆழ்வார்களால் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது. ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம் இது: மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் […]
|
|
Posted: 22 Sep 2016 09:04 AM PDT கிரேசி மோகன் ——————————– ரத்தினப் பூஅசோகம் முத்தாக சிந்துவாரம் பத்தரை மாத்துப்பொன் கர்ணிகாரம் -அத்தனை போதும் அணியிருந்த போதும் வசந்தத்தின் போதணிந்தாள் பார்வதிஅப் போது….(176) மலைப்பூங் கொத்தால் மளுக்கென்று சாயும் தளிர்க்கொடி போலத் துவண்ட -மலைப்பெண் செங்கதிர் வண்ணத்தில் சேலையில் போந்துகனக் கொங்கையாள் ஆனாள் கொடி….(177) மோகமவன் நாணுக்கு மாற்றாய் மகிழம்பூ நாகமென மாலையை நுண்ணிடையில் -மேகலையாய் பத்திரமாய் வைத்தனன், பார்வதி சாயுமதை தத்தளித்தால் தாங்கித் தடுத்து….(178) வாசிவாசி என்றென்றும் நாசி சுவாசிக்கும் வாசம் முகர்ந்திட வண்டுவந்து […]
|
|
Posted: 22 Sep 2016 05:32 AM PDT கிரேசி மோகன் ———————————— அறுபடையோன் புகழ்…. —————————————— திருவேரகம்(சுவாமி மலை)…. ————————————- குந்திக்கால் மண்டியிட்டு கூப்பியக் கைகொண்ட தந்தைக்கு சொன்ன தனயனை -சிந்தைக்குள் வேராக ஊன்றி விருட்ஷமாய் நட்டிடு ஏரகச் செல்வனை ஏத்து….(1) பழமுதிர்சோலை ——————– கூப்பாடு போட்டவுடன் கும்பல் கூடிடும் தோப்பாய் இருந்து தனிமரமாய் -மூப்பால் கிழமுதிரும் போதேனும் கந்தன்கை கோர்க்க பழமுதிர் சோலைக்குள் புகு….(2) திருத்தணி ————– விருத்தனாய் வந்து குறத்தியைக் கூடி திருத்தணி மேவும் தலைவா -மருத்துவன் வைதீஸ் வரன்பெற்ற வேலா யுதாவாழ்வில் […]
|
Posted: 22 Sep 2016 05:24 AM PDT “கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு காந்தள்(ல்)தான் எனக்குப் பிடிச்ச மலரு கண்ணன்தான் எனக்குப் பிடிச்ச பவரு” “பேய்ந்த மழைக்கு பத்திரமாய் மானத்தில், வேய்ந்தனன் குன்றுகோ வர்த்தனம், -காந்தல், ருசிகண்ட கோகுலக் கன்று, கண்ணன் பசிகொண்டு பாயுது பார்”…..கிரேசி மோகன்….
|
|
Posted: 21 Sep 2016 07:14 PM PDT பவள சங்கரி ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ… குழந்தையின் தாலாட்டு! இந்த இரு சொற்களில் எத்தனைத் தத்துவங்கள்! தால் என்பது நாவைக் குறிக்கும் சொல். நாவை ஆட்டி இசையாய் எடுத்து, ஊட்டி செல்லக்குழந்தையை ஆராட்டுதல் “தாலாட்டு” எனப்படுகிறது. இந்தத் தாலாட்டில் வல்லினமும், மெல்லினமும் தவிர்த்து, இடையினத்தில் மென்மையாக இசைப்பதே இனிய தாலாட்டுப் பாடலாம். (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்) இதுவே குழந்தைகளை அமைதியாக உறங்கச்செய்து, மூளை வளர்ச்சியையும் ஊக்குவித்து, குழந்தையை அமைதியான சூழலில் வளரச்செய்கிறது. […]
|
|
Posted: 23 Sep 2016 03:24 AM PDT கிரேசி மோகன் ————————————————– ஒயிலாய் குறத்தி ஒருபக்கம், வேழ மயிலாள் மறுபக்கம் மேவ -மயிலம் அமர்ந்த முருகா அருள்வாய் எனக்கு திமிர்ந்த ஞானத் துணிவு….(1) மோனை எதுகையாய் ஆனை குறவள்ளி மானை மணந்த தமிழழகா -சேனை தளபதியே சூரன் தலைபறித்த சூரா உளமதிலே உட்கார் உவந்து….(2) வள்ளி மகளோடு புள்ளி மயிலேறும் வெள்ளி மலையோன் விழிமைந்தா -உள்ளிருக்கும் ஆன்ம குகனே அகந்தை அழித்தெனக்கு வான்வசம் ஆக்கிட வா….(3) விடையேறு பாகன் விழிவந்த வேலா படையேறி வாழ்கின்ற […]
|
|
Posted: 22 Sep 2016 11:39 PM PDT மீ.விசுவநாதன் எவ்வுரு வானால் எனக்கென்ன – உனை எளிதினில் உணர்ந்திட முயல்கின்றேன் ஒவ்வொரு பாவாய் “நா”வைத்து – உன் ஒளிமிகு அடிகளில் பயில்கின்றேன் ! சப்தமாய் வாக்கில் வரும்போது – உன் சத்திய ஒலிதனைக் கேட்கின்றேன் கொப்பெலாம் சாயக் காற்றடித்தால் -உன் குரல்தரும் இசையென ரசிக்கின்றேன் ! தீபமாய் நின்று எரிகையிலே – உன் தெளிவுரு அழகினைத் தொழுகின்றேன்! கோபமாய்க் கடலாய்க் குதிக்கையிலே -வன் கொடுமையை எதிர்க்கிற குணங்கண்டேன் ! மண்ணிலே வாழும் உயிரெல்லாம் – […]
|
Posted: 22 Sep 2016 09:37 PM PDT ”’ஆலா பனைசெய்து , ஆவை மடியிறுத்தி தாலேலோ பாடுகிறான் தூங்கவைக்க , -மாலோலன்: வண்ணமிகு கேசவ் வரைந்தனுப்பும் வாத்ஸல்யக் கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!
|
|
Posted: 22 Sep 2016 04:57 PM PDT – எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா மழையின் பொறுமையினால் மாவெள்ளம் தான்குறையும் மாபூமி பொறுமையினால் மக்களெலாம் வாழுகிறார் இரவின் பொறுமையினால் இன்பமெலாம் விளைகிறது இறைவனது பொறுமையினால் இயக்கமே நடக்கிறதே! தாயின் பொறுமையினால் தான்குழந்தை வளர்கிறது தந்தையின் பொறுமையினால் தான்நிமிர்ந்து நிற்கிறது குருவின் பொறுமையினால் குணம்பெற்று உயர்கிறது குவலயத்தில் பொறுமையது கொடையாக விளங்குதன்றோ! தருமனது பொறுமையினால் சன்மார்க்கம் உயர்ந்ததுவே சகுனியது பொறையின்மை சதியாகக் குவிந்ததுவே இமயமாய்ப் பாண்டவரை எல்லோரும் மதிப்பதற்கு ஏற்றதொரு வலிமைதந்த இலக்கணமே […]
|
|
Posted: 22 Sep 2016 04:46 PM PDT -க.பிரகாஷ் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வசப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்ததால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளைச் சேமித்துக் கொள்ளலாம். என விஞ்ஞான வளர்ச்சி குறிப்பிடுகின்றது. ஆனால் அத்தனையும் நினைவில் நிறுத்துவது கடினம் என்கின்றனர். நினைவு நமது நினைவாற்றலுக்கு முதன்மையான காரணமாக இருப்பது மூளையாகும். மூளையில் பெருமூளை, சிறுமூளை, முகுளம் போன்ற பகுதிகள் இருந்தாலும், பெருமூளையின் பெரும்பங்கே நினைவாற்றலின் சேமிப்பு […]
|
|
Posted: 22 Sep 2016 04:42 PM PDT -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா மனிதனது மனமெல்லாம் மதம்நிறைந்தே இருக்கிறது மதமகன்று போவதற்கு மதமொன்றே உரமாகும் மதமதனை மனிதவினம் மயக்கமுடன் நோக்குவதால் மதவாதம் மனிதனையே மாண்டுவிடச் செய்கிறது! யானைக்கு மதமேறின் பாகனையே கொன்றுவிடும் ஞானமின்றி இருப்பாரின் மதவெறியோஅழித்துவிடும் நானென்னும் ஆணவத்தால் நல்மதமும் கெடுகிறது நம்பினார்க் கெடுவதில்லை நால்வேதம் சொல்கிறது! பலமதங்கள் பலகருத்தைப் பலவழியில் பகன்றாலும் பாரிலுள்ள மதமனைத்தும் பாதகத்தைப் பகரவில்லை பண்புநிறை உள்ளமொடு பலருமே வாழ்கவென்று பக்குவமாய்ச் சொல்லுவதைப் பலருமே கேட்பதில்லை! எந்த மதமானாலும் சொந்தம் […]
|
|
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . ( 210 ) Posted: 22 Sep 2016 04:00 PM PDT சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்புடன் கூடிய வணக்கங்கள். நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது நமது எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொண்டு பிறப்பதில்லை. காலநதியின் ஓட்டத்தில் நாம் வகுத்துக் கொண்டு செல்லும் இலக்கைச் சிலர் அடைகிறோம். சிலர் தாம் போட்ட இலக்கை விட்டு காலத்தின் வேகத்தினால் வேறு பாதையில் இழுத்துச் செல்லப்பட்டு தாம் எதிர்பார்த்திராத இலக்கினை எட்டுகிறார்கள். இதுதான் நம் வாழ்க்கையின் எளிமையான யதார்த்தம். இவ்வுலகத்தில் நம் மத்தியில் பலர் ஊடல் ஊனமுற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் […]
|
|
’உந்து தமிழ் கந்தன் களிப்பு’’….! Posted: 24 Sep 2016 09:13 AM PDT கிரேசி மோகன் —————————————————– பாம்பணைப் பள்ளிப் பெருமாள் மருகோனைத் தாம்புனைந்தார் சந்தத் தமிழ்கொண்டு -பாம்பன் குமர குருதாசர் கூறு கவசம் அமரநிலை சேர்க்கும் அமுது….(7) சாம்பவி புத்திரனே சம்பு புதல்வனே மாம்பழ வாயன் மருகோனே -பாம்பன் அடிகள் அழைக்க அழகுமயில் ஏறி சடுதியில் வந்தோய் சரண்….(8) தந்தைக்கு மிக்கதோர் மந்திரம் கூறிய எந்தையே ஏரகக் கந்தனே -முந்தைப் பழவினைகள் போக்கி புதுவினைக்கு ஞானக் கிழவனாய் வந்தெனையாட் கொள்….(9) ஆறு முகம்கொண்டோய் ஆறு படைநின்றோய் கோறும் அடியார் […]
|
|
பெருமாள் திருப் புகழ்…. திருவள்ளுர் வீர ராகவ பெருமாள் Posted: 24 Sep 2016 09:06 AM PDT கிரேசி மோகன் திருவள்ளூர் திரு.என்.சி.ஸ்ரீதர் அவர்களின் உபயத்தால் ஒரு அம்மாவசையில், அவர் துணை திரு.நாராயணன் அழைத்துச் செல்ல ‘’வீர ராகவப் பெருமாளை’’ தரிசித்தேன்(மாளைய அம்மாவசை ஸ்பெஷல்)….!ஆஹா ஏரிகாத்த ராமர்”எவ்வுள்” எனக் கேட்க ,சாலிஹோத்ர ரிஷி காட்டிய அவ்வுள்ளில் காட்டில் நடந்த களைப்பும் ,ராவணனைக் கொன்ற சோர்வும் தீர…. (திரு +எவ்வுள்+ஊர்-திருவள்ளூர்) ….வீர ராகவ பெருமாள் சாலியர் மீது கரத்தை வைத்து கிடந்த சயனக் கோலத்தில் காட்சி தருகிறார் என்பது ஸ்தல புராணம்…. பெருமாள் திருப் புகழ்…. திருவள்ளுர் […]
|
|
போட்ட காசை எடுத்தால் போதும் : தயாரிப்பாளருக்கு கே. பாக்யராஜ் யதார்த்த வாழ்த்து! Posted: 24 Sep 2016 12:29 AM PDT ‘அய்யனார் வீதி ‘ படக்கதை. இப்படத்தில் ஐயராக பாக்யராஜும், ஐயனாராக பொன்வண்ணனும் நடித்துள்ள னர்.. ஜிப்ஸி என். ராஜ்குமார் இயக்கியுள்ளார். யூ.கே..முரளி இசையமைத்துள்ளார். ஸ்ரீசாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல், விஜயசங்கர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கேவி ஸ்டுடியோவில் இன்று நடந்தது. பொதுவாக சினிமா விழாக்களில் வாழ்த்திப் பேசும்போது ‘இந்தப்படம் நூறுநாள் ஓடவேண்டும்’,’ வெற்றிவிழாவில் சந்திப்போம் ‘என்றெல்லாம் மிகையாகப் பேசி வாழ்த்துவதுண்டு. இன்றைய சினிமா சூழலில் நூறுநாள் ஓடுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகும்.. […]
|
|
Posted: 24 Sep 2016 12:12 AM PDT ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நட்பையும், பாசத்தையும் சொல்லும் அய்யனார் வீதி ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல். விஜயசங்கர், இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அய்யனார் வீதி’. முக்கிய கதாபாத்திரத்தில் புரட்சி திலகம் K.பாக்கியராஜ், பொன்வண்ணன் நடிப்பில், கதாநாயகனாக யுவன், கதாநாயகிகளாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் அறிமுகமாகிறார்கள். மேலும் சிங்கம்புலி, ராஜா, வின்சென்ட்ராய், செந்தில்வேல், விஜயசங்கர், தாஸ் பாண்டியன், முத்துக்காளை, மார்த்தாண்டம், கோட்டைப்பெருமாள் மற்றும் பலமுன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பாஸ்கரன் எழுத, […]
|
Posted: 23 Sep 2016 11:05 PM PDT ”துளஸிமா டத்தருகில் தாமோ தரனார் அலஸிமாடை ஆச்சாரம் ஆக்கி -கலஸம் வழிந்திட கீதகோ விந்தத்தை மத்தாம் கழியால் கடைகின்றான் காண்”…. “வாமத்தில் மத்து, வலத்தினில் கோமாதா ஜாமத்தில் கண்ணன் ஜனித்தது, -பூமத்ய, பாரம் குறைக்கவல்ல, பாகவத ஓவியக் காரனிவன் கேசவ்கா க”…. ”நீலம்பா ரித்த நவநீதன் கைகளில், பாலின்ப வெண்ணை பிசுபிசுக்க, -காலின்பம் கொண்டு பருகுகிறாள் கோமாதா;, கோலமிதை விண்டுரைத்த கேசவ் வியப்பு’’….கிரேசி மோகன்….
|
|
Posted: 23 Sep 2016 07:47 PM PDT சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++ புதுத் தொடுவான் விண்கப்பல் மெதுவாய் நெருங்கி புளுடோ நீர்ப்பனி எழுச்சி காட்டும். அணுசக்தி உந்து ஆற்றலில் மிகுந்த வேகத்தில் கடந்து செல்கிறது விண்கப்பல். புளுடோ வையும் சாரன் துணைக் கோளையும், நாற்பது ஆண்டுக்கு முன் பறந்த முதலிரு வாயேஜர் விண்ணூர்திகள் காணாத புது விந்தைகள் காணும் ! புளுடோ வுக்கும் அப்பால் பறந்து கியூப்பர் வளையத்தின் கோள்களை உளவச் செல்லும் ! சூரிய மண்டலத்து வால்மீன் மந்தையின் […]
|
|
Posted: 25 Sep 2016 09:05 AM PDT செல்வரகு ஜஸ்ட் பீட் இட் புதுயுகத்தின் வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல் கல்லாக தமிழகத்தின் சிறந்த இசைக்குழுவிற்கான பிரம்மாண்ட தேடல் நிகழ்ச்சி ” ஜஸ்ட் பீட் இட்” தமிழகம் முழுவதும் முதற்கட்ட தகுதிசுற்றை நடத்தி வருகிறது. அதகளமான கோவை, நெல்லை ஆடிஷன்சை தொடர்ந்து திருச்சியில் NITT – வளாகத்தில் இசைக்குழுவிற்கான ஆடிஷன்ஸ் நடைபெறவுள்ளது. இந்த ஜஸ்ட் பீட் இட் – திருச்சி ஆடிஷன்ஸில் கலந்து கொள்ள 4 – 8 பேர் கொண்ட குழுவாக தங்கள் […]
|
Posted: 24 Sep 2016 11:10 PM PDT இன்று கேசவ் கிருஷ்ணரைப் பார்த்ததும் , நண்பர் இரா.முருகர் சார், அனுப்பிய பத்து வயது MS அம்மா பாடிய ”மரகத வடிவும்” திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் பாடல், நினைவுக்கு வந்தது….அந்த தாக்கத்தில் எழுதியது….! ”மரக தவடிவை ,மாவிலைப் பச்சை நிறமது நெஞ்சில் நிறைய, -பரகதி மோட்சம் கொடுத்திடும் மோகன ரூபனின் காட்சிக்கு கேசவ் கரம்”….! ”மரகத மேனி,மாந்தளிர் பச்சை நிறமது நெஞ்சில் நிறைய, -நரகதில் வீழாது மோட்சத்தில் வாய்த்திடும் வாழ்வுனக்கு: கூழாகும் வெவ்வினைகள் காண்”….! நிவேதனம் ————– திருக்கண் ணமுது, […]
|
|
Posted: 24 Sep 2016 06:30 PM PDT கிரேசி மோகன் ————————————- ஆகாச கங்கையில் ஆதவன் கைகளால் வேகா(து) உலர்த்திய வாரிசத்தின் -யோகீசர் சூடும் மணிச்சரத்தை செய்யகை பார்வதிதென் நாடுடையோன் முன்வைத்து நிற்பு….(189) நிச்சயமாய் அன்பர் நிவேதனம் ஏற்றிடும் அச்சிவன் மாலையை ஆகம்கொள் -அச்சமயம் சம்மோ ஹனஅம்பை தம்வா கனவில்லுக்(கு) அம்மால் அனங்கன் அளிப்பு….(190) சந்திரன் தோன்றிட சற்றே கலக்கமுற்று வெண்திரை கொந்தளிக்கும் வாரிதியாய் -தன்திரம் கொஞ்சம் கலைய ,கனியிதழ் பார்வதியை நஞ்சுண்டோன் மூவிழியால் நோக்கு….(191) கேசரங்கள் கொண்ட கதம்பமொத்த அங்கங்கள் ஆசையுடன் கூர்ச்செரிந்து […]
|
|
Posted: 26 Sep 2016 04:05 AM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ராமச்சந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 0110.2016) வரை உங்கள் கவிதைகளை […]
|
Posted: 26 Sep 2016 02:22 AM PDT ’’நந்தகோ பாலா நவனீ தசோரரே பந்தம் நமக்கிடையே பால்திருத்தாள் , -முந்தைய வெவ்வினைகள் வாட்டுதே வாடா(து) இருந்திட செவ்விளநீர் பாய்ச்சு சகா(தோழா)’’….கிரேசி மோகன்….!
|
|
”உந்து தமிழ் கந்தன் களிப்பு”….! Posted: 26 Sep 2016 02:18 AM PDT கிரேசி மோகன் ——————————————————— மைபூசும் மாதர்வாய் பொய்பேசப் புல்லரித்து கைகூசும் காலம் கலவிடுவாய் -தைபூச நன்நாளின் தெய்வத்தை நெஞ்சில் நிறுத்திடுவீர் பண்ணாத பாவமும் பாழ்….(13) சுரமகள் அத்தி குறமகள் வள்ளி இருபுறம் சுத்தி இழைய -அறுபடை வீட்டில் வசித்திடும் வேலா மயிலேறி பாட்டில் வருவாய் பறந்து….(14) கண்ணனுன் காதலன் கந்தனுன் காவலன் எண்ணனும் நெஞ்சேநீ எந்நாளும் -முன்னவன் மாலனும் பின்வந்த வேலனும் நம்வாழ்வில் காலமும் நேரமும் காண்….(15) மயிலவர்க்கு கொண்டை மயிலிவர்க்கு அண்டை சயிலம் இருவர்க்கும் ஜாகை […]
|
|
Posted: 25 Sep 2016 05:09 PM PDT -மலர் சபா மதுரைக் காண்டம் – அழற்படு காதை அரச பூதம் வெற்றி பொருந்திய வெங்கதிர் போன்ற மேனியுடையவன்; ஒளி குன்றாத மணிகளைக் கழுத்தில் அணிந்தவன்; உச்சந்தலையில் முடி முதல் கால்களில் கழல்வரை அரசர்க்குரிய அணிகள் அணிந்தவன்; செண்பகம், கருவிளை,செங்கூதளம் ஆகிய பூக்களோடு குளிர்ச்சியான நீர்ப்பூக்களையும் சேர்த்துத் தொடுத்த மாலை அணிந்தவன்; பலவகைப் பூக்களால் ஆன அசைந்தாடும் […]
|
|
Posted: 25 Sep 2016 05:00 PM PDT நிர்மலா ராகவன் நாமகரணங்கள் கதை 1: `டார்லிங்!’ புதிதாக மணமானவர்கள் இப்போது தம் கணவரையோ, மனைவியையோ விளிக்கும் விதம் இது என்றுதான் நினைத்திருந்தேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி கணவரை இப்படி அழைப்பது கண்டு வியந்து போனேன், `ஆகா! கல்யாணமாகி பத்து வருடங்களுக்குப் பின்னரும் இவளுக்கு இவ்வளவு காதலா!’ என்று. ஒரு நாள் இருவரும் ஏதோ வாக்குவாதம். இறுதியில், அதற்கு மேலும் பொறுக்க முடியாத மனைவி, “ஷட் அப், டார்லிங்!” என்றாளே பார்க்க வேண்டும்! எனக்குச் சிரிப்புதான் […]
|
|
Posted: 25 Sep 2016 04:46 PM PDT -தமிழ்த்தேனீ “நீ என்னை ரொம்ப நல்லவன்னு நெனைக்காதே! நான் அவ்ளோ நல்லவன் இல்லே” என்றார் கார்த்திகேயன். திடுக்கிட்டாள் சௌதாமினி. “என்னது ஏன் இப்பிடி உளர்றீங்க…என்ன ஆச்சு உங்களுக்கு உடம்பு சரியில்லையா?” என்றாள் பதட்டத்துடன். “அடேடே பயந்துட்டியா…? பயப்படாதே! ஆனா நான் சொன்னது உண்மை” என்றார் கார்த்திகேயன். “என்ன விளையாட்டு இது? உங்களுக்கு வயசு ஐம்பது!“ என்றாள் சௌதாமினி. “அதுனாலே என்ன? நான் குழந்தையாப் பொறந்து வாலிபப் பருவத்தை அடைஞ்சுதானே இப்போ ஐம்பதை எட்டி இருக்கேன். புரியுதா… நானும் […]
|
|
சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல் Posted: 25 Sep 2016 04:44 PM PDT -க.பிரகாஷ் விருந்தோம்பல் விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவுமுறை. பொதுவாக விருந்தோம்பல் உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பதுண்டு. ஆங்கிலத்தில் விருந்தோம்பல் என்ற சொல்லுக்கு ‘ஹாஸ்பிட்டாலிட்டி’ என்று குறிப்பிடுகின்றனர். இது இலத்தீன் மொழிச் சொல்லான ஹாஸ்பெஸ் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இச்சொல்லோ ‘அதிகாரம் கொள்ளல்’ எனப் பொருள்படுவதான ‘ஹாஸ்டடிஸ்’ என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ‘ஹோஸ்ட்’ என்பதன் பொருள் சொற்சார்ந்து அப்படியே உரைப்பதாயின் அந்நியர்களின் பெருமகன் எனப் பொருளாகும். ஹோமரின் […]
|
|
Posted: 25 Sep 2016 04:43 PM PDT க. பாலசுப்பிரமணியன் மூளையின் பாதிப்புகளும் கற்றலும் கற்றலின் போது மூளையின் பல பாகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. பார்க்கின்ற ஒவ்வொரு வார்த்தையின் எழுத்துக் கூட்டங்களையும் அதனுள் அமர்ந்துள்ள கருத்துப் பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து மூளை அதன் பொருளை எளிதாக நமக்கு கொடுக்கின்ற ஒரு செயல் விந்தையானது மட்டுமல்ல, அது மிகவும் துரிதமானது. அதே போல் காதில் விழுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் அலசி ஆராய்ந்து அது எந்த மொழியைச் சார்ந்தது என்று அறிந்து அதற்க்கான பொருளை நமக்கு எடுத்துரைப்பதும் ஒரு […]
|
|
Posted: 25 Sep 2016 04:37 PM PDT –செண்பக ஜெகதீசன் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். (திருக்குறள் -71: அன்புடைமை) புதுக் கவிதையில்… அடைத்திடும் தாழ்ப்பாளில்லை அன்புக்கு, அன்புகொண்டோரின் துன்பங்கண்டு உடைத்துவரும் கண்ணீரே ஊரறியக் காட்டிவிடும் உள்ளத்து அன்பை…! குறும்பாவில்… அன்பை அடைத்திடத் தாழ்ப்பாளில்லை, அதுவாய் வெளிவரும் கண்ணீராய் அன்புகொண்டோரின் துன்பம் கண்டு…! மரபுக் கவிதையில்… அன்பை அடைத்துத் தடுத்திடவே -அடைக்கும் தாழ்ப்பாள் ஏதுமில்லை, அன்பு கொண்டோர் வாழ்வினிலே -அடையும் துன்பம் தனைக்கண்டே, இன்னல் இவர்க்கே வந்ததுபோல் […]
|
Posted: 27 Sep 2016 11:51 PM PDT ”புஜேந்திரர் மல்லில், நிஜேந்திரர் சொல்லில், கஜேந்திரர் கத்த கருட -விஜயேந்த்ரர், அந்தநாள் ஆதிமூலம், இந்தநாள் கீதைமூலம், வந்தனன் நந்தன் வளர்ப்பு’’….கிரேசி மோகன்….!
|
Posted: 27 Sep 2016 07:22 PM PDT கிரேசி மோகன் —————————————————— சிலம்பும் சிலம்பணி செவ்வேள் கழலும் புலம்பும்புள் சேவலும் போகக் -கிளம்பத் தயாராக நிற்கும் தணிகைவேல் நீல மயூரமும் எண்ண முருகு….(25) மலையளவு குற்றமும் மங்கிடும், பொங்கும் அலையுலவு செந்தூர் அழகன் -சிலையுருவை எண்ணித் துதிப்போர்க்கு ஏத்திப் புகழ்வோர்க்கு நுண்ணிய நூலாய் நலிந்து….(26) கதிராய் வெளிப்பட்டு கார்த்திகை மாதர் உதிர முலைப்பாலை உண்டு -அதிரும் அயில்வேலை அன்னை அளித்திட வாங்கும் துயில்வோன் மருகன் துணை….(27) சொந்தம் எனக்குநீ பந்தம் எனக்குநீ தந்தை எனக்குநீ தாயாராய் […]
|
|
Posted: 27 Sep 2016 07:14 PM PDT இசைக்கவி ரமணன் கண்ணிருந் தென்னபயன்? நீ காட்டவில்லை உன்வடிவை, நீ பெண்பிறந் தென்னபயன்? என் பேதைமையைத் தீர்க்கவில்லை மண்ணிருந் தென்னபயன்? இன்னும் மண்டியிட வில்லைவிண் எண்ணரிய பேரழகே! என்னெதிரே வா உடனே! உன்னருகே நானிருந்தால், அடி உனக்குமொரு துணையிருக்கும் என்னருகே நீயிருந்தால், அடி என்றென்றும் தமிழிருக்கும் வன்னங்கள் களைந்தாலோ, அடி வானுண்மை புரிந்துவிடும் இன்னுமென்ன தயங்குகிறாய் என்னெதிரே வா உடனே! வில்லாலே உயிர்கொல்வார் வீரத்தால் நிலம்கொள்வார் பல்கலையால் புகழ்கொள்வார் பணக்காரர் பொருள்கொள்வார் சொல்லாலே உயிர்தரவே சுடராக […]
|
Posted: 27 Sep 2016 06:37 PM PDT கிரேசி மோகன் —————————————— முன்னை எனையழைக்க மாற்றுப் பெயர்கூற கண்ணை மகரந்தம் கூசிட -உன்னை மேகலையால் கட்டிமலர் முண்டகத்தால் மொத்தியது ஆகலையால் அற்றதோ அன்பு….(207) ரதிநீ மனதில் ரமிக்கிறாய் என்று பதிநீ புகன்றது பொய்யே -அதுவே நிஜமானால் நிற்பேனா நெற்குதிராய் அந்தோ எஜமான்தன் அஸ்திக்(கு) எதிர்….(208) மறுவுலகு ஏகிடும் மன்மதா உந்தன் அருகிருக்க நானும் அடைவேன் -வெறுவுலகு ஆதலால் பூதலம் ஆனதுன் சாதலால் காதலுன் கைரேகைக் கோடு….(209) போதிரவு போர்த்திடும் போதிலே காதலியை மோதிடும் மேக […]
|
|
Posted: 27 Sep 2016 05:04 PM PDT பி. தமிழ்முகில் சிறகை விரித்திடு சித்திரப் பெண்ணே ! உலகிற்கே பொதுவான வானம் – அது உன்னையும் ஏந்திக் கொள்ள எந்நாளும் தயாரே ! அடிமைத் தளைகளை உடைத்தெறிந்து உன்னதமாய் உலகை வலம் வா ! அடக்கமும் அமைதியும் உன்னுள் இருக்கட்டும் ! வீரமும் விவேகமும் விழிப்புடனே இருக்கட்டும் ! அச்சமும் நாணமும் கொண்டிருந்த காலம் மலையேறட்டும் ! தைரியமும் தெளிவும் எப்போதும் உனக்கு துணையாகட்டும் ! ரவுத்திரம் பழகு ! வேதனை சோதனை என […]
|
|
Posted: 27 Sep 2016 04:51 PM PDT -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா கறுப்பென்றால் வெறுக்கின்றார் காறியும் உமிழ்கின்றார் கறுத்தநிறம் கொண்டோரை வெறித்தனமாய்த் தாக்குகிறார் நிலத்திலுள்ள கறுப்பரெல்லாம் நிமிர்ந்துநிற்கும் நிலைபார்த்து வெறுத்தவரே வியக்கின்றார் விருப்பமின்றிப் பார்க்கின்றார்! காந்தியைக் கறுப்பரென்று காலாலே மிதித்தார்கள் கருணையின்றி அவர்வாழ்வில் கஷ்டம்பல கொடுத்தார்கள் சாந்திதனை வேண்டியவர் சாப்பிடவே மறுத்ததனால் கறுப்பரெனப் பார்த்தவரே கதிகலங்கிப் போனார்கள்! கறுப்பினத்தை விலங்கெனவே கண்டுநின்ற கூட்டத்தார் கனவுகாணா வகையினிலே கறுப்பரே தலைமையானார் வெறுத்தொதுக்கி நின்றவினம் பொறுத்தொதுங்கிப் போகாமல் வீரமுடன் எழுந்ததனால் வெற்றிகொண்டே நிற்கிறதே! வான்கறுக்கா […]
|
|
Posted: 27 Sep 2016 04:48 PM PDT -மகாதேவ ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா பிறப்பறியாத் தமிழன்னை பெற்ற மைந்தன் சிறப்புடனே தமிழ் கற்றுத் தேறிநின்றார் உவப்புடனே தமிழ்தன்னை உளத்தில் ஏற்றி ஓயாமல் தமிழ்சிறக்க உழைப்பை ஈந்தார் களைப்பின்றிப் பலநூல்கள் கருத்தாய்த் தந்தார் கற்றவரும் மற்றவரும் விரும்பி யேற்றார் தனித்தமிழே உயிராக எண்ணி நின்றார் தன்பெயரைத் தனித்தமிழாய் ஆக்கிக் கொண்டார்! மறைமலையார் பெயர்கேட்கின் மகிழ்ந்திடுவாள் தமிழன்னை குறையில்லாத் தமிழ்வளரக் குதித்திட்டார் களமதனில் சிரமீது தமிழ்வைத்தார் சிந்தையெலாம் தமிழ்நிறைத்தார் பலமொழிகள் தமிழ்மீது படையெடுக்கத் தடையானார் தமிழ்மொழியின் தூய்மையது […]
|
|
Posted: 29 Sep 2016 09:00 AM PDT பவள சங்கரி தலையங்கம் பிரதமர் மோதி அவர்களின் நிதானமான உறுதியான, தீர்க்கமான முடிவுகளும், தெளிவான சிந்தனைகளும் நம் நாட்டை வல்லரசாக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமரின் சீரிய திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தில் இந்தியா தலை நிமிர்ந்துள்ளதும் கண்கூடு. வானியலிலும் விண்ணை நோக்கி நமது பெருமை செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்புத் துறை, வாணிகம், இந்தியாவின் பாதுகாப்பு என ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் பெருமைகொள்ளத்தக்க வகையில் நம் பிரதமரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. உலகம் முழுவதும் […]
|
Posted: 29 Sep 2016 08:47 AM PDT கிரேசி மோகன் ———————————————————— மனத்துள்ளான் பூச தினத்துள்ளான் வள்ளி வனத்துள்ளான் சூரன்மேல் வைத்த -சினத்துள்ளான் அண்ட கனத்துள்ளான் ஆதி கணத்துள்ளான் விண்ட ஷணத்துள்ளான் வேல்….(37) ஆனைக்(கு) இளையானை ஆனைக் களியானை ஆணை அமரர்க்(கு) அளிக்கின்ற -ஆணை வணங்கி எழுவானை வள்ளிகல் யாணம் இணங்கிய யானை அணைப்பு….(38) அய்யம் தகளியா ஐந்துபுலன் நெய்யாக பொய்யாம் விளக்கேற்றப் போந்தேனே -அய்யா விளக்குமாறு என்னை விலக்கிடாது உன்னை விளக்குமாறு வெண்பாவில் வா….(39) சுட்ட பழமா! சுடாத பழமாவென்(று) இட்டனை அவ்வைக்(கு) இடையூறு […]
|
|
Posted: 29 Sep 2016 07:08 AM PDT நிர்மலா ராகவன் “எனக்குப் பொறந்த பிள்ளைக்கு அப்பாவா! அந்த நாலு பேத்தில எவனோ ஒருத்தன்!” இடது கையை வீசி, அலட்சியமாகச் சொன்ன அந்தப் பெண் காளிக்குப் பதினாறு வயது என்றாளே இல்லத் தலைவி, மிஸ்.யியோ (YEO)! கூடவே நான்கைத் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றியது சங்கீதாவுக்கு. சிறகு முளைக்குமுன் பறக்க ஆசைப்பட்டு, கூட்டிலிருந்து தரையில் விழுந்து, பூனை வாயில் மாட்டிக்கொள்ளும் பறவைக் குஞ்சுபோல்தான் இவளும்! இவளுடைய நல்ல காலம், உடலெல்லாம் குருதியாக, நிலைகுலைந்த ஒற்றை ஆடையுடன் இலக்கின்றி […]
|
Posted: 28 Sep 2016 09:57 PM PDT ”விருந்தா வனத்தோன் வரைந்தான் டயரி, கருந்தா மரைக்கண்ணன் கொஞ்சி:, -விருந்தாக, தாயினும்சா லப்பரிந் தூட்டும் வடபத்ர சாயியைக்கண்(டு) ஆயி(தாய்ப் பசு) சிலிர்ப்பு”….கீரேசி மோகன்…!
|
vallamai |
|
2030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம். Posted: 01 Oct 2016 10:05 AM PDT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village ++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் கால் வைத்து நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா மீண்டும் விண்ணுளவுப் பயணம் துவங்கும் வெண்ணிலவில் குடியேற ! நுண்ணிய ஏழு கருவிகள் மண்தளப் பரப்பை விரிவாய்ப் பதிவு செய்யும். துருவப் பகுதியில் ராக்கெட் ஒன்றை நிலவுமேல் தாக்கிடச் செய்து தளத்தில் குழி பறித்து தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள் மண்ணுளவு செய்யும் ! வெண்ணிலவில் குடியேறத் திட்டமிட்டுள்ளது ரஷ்யா ! நிலவில் […]
|
|
Posted: 30 Sep 2016 06:23 PM PDT பவள சங்கரி பிள்ளைகள் பலகோடி, அத்தனையும் உனைநாடி உன்பதம் தேடி வாழும்வழி தாங்கும்கதி தேடும் உயிர்கள்! சூழும்துயர் நீங்கும்சதி நாடும் மனங்கள் காக்கும்வரம் நாளும் தரும் அன்னையே! வீழ்த்தும் கபடம் தாக்கும் பாகாசுரன்களை பாட்டுக்கொரு புலவனும் பாருக்கொரு ஞானியும் ஊர்தோறும் உழவனும் சோறுக்கென சேறும் வாழ்வுக்கொரு வீணையும் பாரதத்திற்கொரு வீரமும் அளித்தவள் அவளே அன்னை பராசக்தி! வினையகற்றும் வீரமாகாளியாய் பசியாற்றும் அன்னபூரணியாய் வழிகாட்டும் வாணியாய் குடிகாக்கும் கோமாதாவாய் தயைபுரியும் தாமரைக்கண்ணியாய் மகாபைரவி, சாம்பவி, நாதரூபிணி, நாராயணி, ஓங்காரி, […]
|
|
Posted: 30 Sep 2016 05:09 PM PDT இசைக்கவி ரமணன் உந்தன் பிள்ளை நான், என்றும் எந்தன் அன்னை நீ ஏங்கியேங்கி அழுவதுதான் என்றன் வாழ்க்கையோ? என்னைப் பார்த்துச் சிரிப்பதுதான் உன்றன் பாசமோ? என்ன சொந்தமோ? என்று வந்த பந்தமோ? மந்திரங்க ளாலுனக்கு மாலை சூட்டுவார், கனல் மணமணக்கும் சொல்லெடுத்துக் காலில் தூவுவார் சந்திரனை சூரியனைச் சடையில் பூட்டுவார், அந்தி சாயும்பொழுதில் தேன்குழைத்துச் சாந்து சாற்றுவார் ஏதுமின்றி அம்மாநான் ஏங்கி நிற்கிறேன் எல்லோரும் சென்றபின்பும் எதிரில் நிற்கிறேன் உன்னையன்றிக் காரணங்கள் இருக்க முடியுமா? உன்முன் […]
|
|
Posted: 30 Sep 2016 04:52 PM PDT க. பாலசுப்பிரமணியன் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கண்ணுக்குள் ஒளியாகி கொலுவிருக்கும் கல்யாணியே! காலங்கள் முப்பொழுதும் கருணைதரும் காமாட்சியே! கனவொடும் நனவோடும் உறவாடும் அருளாட்சியே ! கனிவான மனம்கொண்டு கைகொடுக்கும் கருமாரியே ! முத்தாகி வருவாய் உடலனைத்தும் வித்தே! பித்தாகி உனைப்போற்ற சத்தாகும் அருமருந்தே! கற்றாழை கருநாகம் புடைசூழ அமர்வாய் புற்றேறி குடிகொண்டு புவனமே காப்பாய் ! தீச்சட்டி தந்தாலும் தீதில்லா அன்புடையோய் தீமிதித்து வந்தோரை தினம்காக்கும் பண்புடையோய்! தாயென்று உனைப்போற்றும் நித்தம் தரணியெல்லாம் […]
|
vallamai |
|
Posted: 01 Oct 2016 08:50 PM PDT பவள சங்கரி நம் முன்னாள் பிரதமர் உயர்திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் இன்று பிறந்த தினம். அவர் சிறுவனாக பள்ளி செல்லும்போது அவரும் நம் இந்தியாவும் மிகவும் ஏழ்மையில் இருந்த காலகட்டம் அப்பொழுது ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் நிலைமை. பாலம் கட்ட வசதியில்லாத நம் பாரத மாதா.. சாஸ்திரிக்கு படகில் செல்ல காசில்லாமல், புத்தகங்களை துணியில் கட்டி தலையில் சுமந்துகொண்டு, ஆற்றில் நீச்சல் அடித்து அன்றாடம் அதே ஈர உடையுடன் பள்ளி செல்வாராம்.. அப்படியெல்லாம் […]
|
|
Posted: 01 Oct 2016 05:21 PM PDT -எம் .ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா பசித்திருந்தார் தனித்திருந்தார் விழித்திருந்து செயற்பட்டார் பழிபாவம் தனைவெறுத்துப் பக்குவமாய் வாழ்ந்திருந்தார்! தனக்கெனவே பலகொள்கை இறுக்கமாய்க் கடைப்பிடித்தார் தளர்ந்துவிடும் வகையிலவர் தனைமாற்ற விரும்பவில்லை! பொறுப்புகளைப் பொறுமையுடன் பொறுப்பேற்றே ஆற்றிநின்றார் வெறுத்தாலும் பலவற்றை விருப்பமுடன் அவர்செய்தார்! மற்றவரை மனம்நோக வைக்காமல் இருந்துவிட மனத்தளவில் வேதனையை வைத்துவிட்டார் மாமனிதர்! தன்வீட்டை நினையாமல் தாய்நாட்டை நினைத்துநின்றார் தாய்சொல்லைத் தட்டாத தனயனாம் காந்திமகான்! தாய்சொல்லே வேதமாய் தான்மனத்தில் கொண்டதனால் தாய்நாட்டின் விடுதலைக்காய் தனையிழக்கத் துணிந்துநின்றார்! […]
|
|
Posted: 01 Oct 2016 04:59 PM PDT இசைக்கவி ரமணன் ஏறெழுந்து வந்துநெஞ்சைக் கூறுபோடும் தங்கமே! என்றன் கனவில் கவியில்வந்து இடிசிரிக்கும் சிங்கமே! என்னை ஏறெடுத்துப் பார்த்துவிட்டால் ஏதுனக்கு பங்கமோ? எனக்கும் உனக்கும் இடையினிலே எவர்வகுத்த சுங்கமோ! தேரெழுந்த தாயிதயம் ஊர்திரண்ட தாகமனம் யாரெந்தக் கொடியசைக்கக் காத்திருக்கிறாய்? அடி யாமளையே யார்வரவைப் பார்த்திருக்கிறாய்? தேரழுந்தித் தெருநொறுங்கி ஊர்சிரிக்கவா? என்றோ தீர்ந்தகதை தொடர்தல்கண்டு பார்விழிக்கவா? கார்குழலை மின்னெடுத்துக் கட்டமுயலும் அழகியே! கட்டளைக்குக் கவிதைகேட்கும் கர்வமிக்க அரசியே! ஊர்விழுந்து நானெடுத்த பிச்சையெலாம் போதுமே! உன் உதடுபட்டென் உச்சிகுளிரும் ஒற்றைமுத்தம் […]
|
|
Posted: 01 Oct 2016 04:33 PM PDT மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் மங்காத ஒளிப்பிழம்பே ! மாதவனின் உடன்பிறப்பே ! மலையரசன் குலவிளக்கே ! மாங்காட்டின் தவத்திருவே ! மகேசனின் மனம்கவர்ந்த மாமதுரை மீனாட்சி மலரடி போற்றுகின்றேன் ! மனமிறங்கி வந்திடுவாய் ! செங்கமலம் கரும்பேந்தி நின்றாயே காமாட்சி சீறிவரும் கங்கைக் கரையினிலே விசாலாட்சி செவ்விதழ் கிளியேந்தி கைகொடுக்கும் மீனாட்சி சிந்தையிலே கோலோச்சும் சிவகாமி அரசாட்சி ! அழகுக்குப் பொருளாகி அகிலமெல்லாம் காப்பவளே அகமெல்லாம் உள்ளடக்கி மோனத்தில் முதிர்ந்தவளே! அசையாத […]
|
vallamai |
|
Posted: 03 Oct 2016 02:37 AM PDT பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்? ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை ( 08.10.2016) வரை உங்கள் கவிதைகளை […]
|
|
Posted: 02 Oct 2016 05:07 PM PDT இசைக்கவி ரமணன் மலருக்குத் தேனழகோ மணமழகோ நிறமழகோ? என் மனதுக்கு நீயன்றி மற்றழகொன் றேது? மறையெல்லாம் சொன்னாலும் மற்றொருசொல் லேது? சிலருக்கே திருவுண்டு சிலருக்கே அறிவுண்டு சிலருக்கோ நீசிரித்துச் சேர்ந்த அருளுண்டு சிறுபிள்ளை என்னெஞ்சில் நீதானே உண்டு! நாடகமாய் இவ்வையம் பூடகமாய் மனிதமனம் கூடெங்கும் நுழைந்துமலர் சூடுமுன் கரத்தால், உன்னைத் தேடுவதே இவரிங்கே ஆடுவதும் பாடுவதும்! தேடுவோர்கள் தேட, பதம் சூடுவோர்கள் சூட, நிதம் வாடுவோர்கள் வரிசையிலென் வாழ்க்கை ஆடுதே! இதில் ஏடும் இசையும் உன் […]
|
|
இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-27 Posted: 02 Oct 2016 04:52 PM PDT மீனாட்சி பாலகணேஷ் பாண்டியன்மகள் ஊசலாடும் அழகு! அரண்மனை நந்தவனம் இளம்பெண்களின் சிரிப்பொலியாலும், கிளிமொழியான அவர்கள் பேச்சொலியாலும் கலகலக்கிறது. அரசகுமாரி தடாதகைப்பிராட்டி நந்தவனத்தில் தன் தோழிகளுடன் ஊசலாடி விளையாடிக்கொண்டிருக்கிறாள். நந்தவனத்தில் மலர்ந்துள்ள பலவிதமான பூக்களிலும், இந்த இளம்மங்கையர் சூடியுள்ள பூக்களிலும் மூழ்கித் தேனைமாந்தி, ரீங்காரமிடுகின்றன வண்டுகள். அந்த ஓசை, ‘தடாதகையின் மெல்லிடை ஒசிகின்றதே, அது வருந்துமே,’ எனும் ஏக்கத்தால் அவை ஒலியெழுப்புவது போலுள்ளதாம். அதற்கேற்ப, அவளும் தான் அமர்ந்துள்ள பொன்னூஞ்சலை உதைத்து ஆடுகிறாள். காலில் அணிந்துள்ள பாதசரங்களும், தண்டையும் […]
|
|
Posted: 02 Oct 2016 04:47 PM PDT க. பாலசுப்பிரமணியன் காசி ஸ்ரீ விசாலாட்சி கங்கைக் கரையினிலொரு கலங்கரை விளக்கம் காசினி காத்திடும் கருணையின் வடிவம் கண்களில் அருளை வெள்ளமாய் பெருக்கும் கலங்கிடும் நெஞ்சிற்குக் காசியில் தரிசனம் ! வேதங்கள் ஒலித்திடும் வேஷங்கள் கலைந்திடும் வேள்விகள் வளர்ந்திடும் விளக்கங்கள் கிடைத்திடும் வென்றதும் வீழ்ந்திடும் வீழ்ந்ததும் வென்றிடும் விடியலில் கங்கையில் விசாலாட்சி தரிசனம் ! அன்னையின் கண்களில் கருணையின் வெள்ளம் அம்மையின் கால்களை கங்கையே தழுவும் ஆசையைத் துறந்தோர் அவளிடம் புகலிடம் அடைக்கலம் […]
|
|
Posted: 02 Oct 2016 04:46 PM PDT -மலர் சபா மதுரைக் காண்டம் – அழற்படு காதை பவளம் போன்ற சிவந்த நிற மேனியுடையவன்; ஆழமான கடல்சூழ் உலகை ஆள்கின்ற மன்னனைப் போல முரசு, வெண்கொற்றக்குடை, வெண் சாமரம், நெடுங்கொடி, புகழ்வாய்ந்த அங்குசம், வடிவேல், வடிகயிறு இவற்றைக் கையில் ஏந்தியவன்; எண்ணில் அடங்காத பகை அரசர்களைப் போரில் புறமுதுகிட்டு ஓடச் செய்தவன்; இந்நிலவுலகம் முழுவதையும் தன் குடையின்கீழ்க் கொண்டுவந்து செங்கோல் செலுத்தி, தீவினைகளை அகற்றி, வெற்றிகள் கொண்டு, தன்பெயரை […]
|
|
Posted: 02 Oct 2016 04:42 PM PDT -செண்பக ஜெகதீசன் அழுக்காறு எனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். (திருக்குறள் -168: அழுக்காறாமை) புதுக் கவிதையில்… பொறாமை என்பது பெரும் பாவி, அது சேர்ந்தவரின் செல்வத்தையெல்லாம் அழித்து, செலுத்தி அவரைத் தீயவழியில் சேர்த்துவிடும் கொடுநரகில்! குறும்பாவில்… பொறாமைக் குணம் பெரும்பாவியாய்ப் போக்கடித்துச் செல்வத்தை, சேர்ந்தவர்க்குத் தீய வழிகாட்டித் தீர்த்துக்கட்டிவிடும்! மரபுக் கவிதையில்… மண்ணில் மனித வாழ்வினிலே -மற்றவர் மீது பொறாமையென்பது, கண்ணிய மில்லாப் பாவியாகிக் -கொண்டவன் சேர்த்த செல்வத்தையே […]
|
|
Posted: 02 Oct 2016 04:31 PM PDT நிர்மலா ராகவன் பொறுத்துப்போகவேண்டுமா, ஏன்? சீனாவில் ஒரு நாளைக்கு இருநூறு பேர், `எங்கள் தாம்பத்தியம் தொடர்ந்து நடக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்களேன்!’ என்று ஷி என்கிற கவுன்சிலரிடம் வந்தவண்ணம் இருக்கிறார்களாம். இவர்களில் எழுபது சதவிகிதம் படித்து, உத்தியோகம் பார்க்கும் பெண்கள். ஐந்து வருடங்களுக்குள் திருமணம் புரிந்தவர்கள். கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருக்கிறான் என்பதுடன், ஒருவரை ஒருவர் எப்படிப் பொறுத்துப்போவது என்பதில்தான் குழப்பம். புக்கக்கத்தினருடன் ஒத்துப்போக முடிவதில்லை என்பதும் ஒரு காரணமாம். (ஆதாரம்: […]
|
|
படக்கவிதைப் போட்டி 80-இன் முடிவுகள் Posted: 02 Oct 2016 04:31 PM PDT -மேகலா இராமமூர்த்தி கரைநோக்கிப் பாய்ந்துவரும் கடலலைகளைத் தன் ஒளிப்படப்பெட்டிக்குள் அடக்கி நம் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கிறார் திரு. ராமச்சந்திரன். இதனைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் நம் நன்றிக்கு உரியவர்கள்! பொறுமைக்கு இலக்கணமான நிலமகளும், வாரி வழங்கும் வள்ளன்மைமிகு அலைமகளும், அவ்வப்போது தன்னிலை திரிந்து சீற்றம் கொண்டு, நிலநடுக்கத்தையும், ஆழிப்பேரலையையும் தோற்றுவித்து மக்களை நிலைகுலைய வைத்தாலும், பின்னர்ச் சீற்றம் தணிந்து, புவிவாழத் தம்மையே தந்துவிடும் தியாகவுள்ளத்தினர்! நிலமகளும் […]
|
|
தமிழ் இலக்கியங்களில் தாவர அறிவியல் Posted: 02 Oct 2016 04:31 PM PDT -சு.விமல்ராஜ் சங்க இலக்கியங்கள் பழையனவற்றைப் பாதுகாக்கின்ற ஆவணங்களாக விளங்குகின்றன. பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து அதன் முழுமைத்தன்மையைச் சிதைத்துவிடாமல் மிக நுணுக்கமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த இலக்கியங்கள் மிகச்சரியான சான்றுகளாக விளங்குகின்றன. தமிழர்களின் இந்த நுணுக்கம், வானியல்,தாவரவியல்,விலங்கியல்,உளவியல், மொழியியல் போன்ற பல்துறைப் புலமை இவைகளெல்லாம் பல நூற்றாண்டுகள் காடு, மலை, கடல், விலங்கு, பறவை, வானம் என்ற இயற்கையின் எல்லா நிலைகளையும் அதன் ஆழ அகலங்களில் நுழைந்து அனுபவித்து வாழ்ந்ததன் மூலம் பெற்ற பட்டறிவின் வெளிப்பாடே என்று […]
|
|
Posted: 02 Oct 2016 04:00 PM PDT சித்ரப்ரியங்கா ராஜா அடே மனிதா நினைவில் நிறுத்து ஆபத்தான புகையை குறைத்து இதயத்தை நீ தான் காத்திடுவாயே ஈடில்லா வாழ்வு வாழ்ந்திடுவாயே உள்ளம் என்பது கோயில் ஆகும் ஊறு தான் வரின் இதயமே வாடும் எல்லா நாளும் கவலையை குறைத்து ஏறு போல் வலிமை இதயத்தே நிறுத்து ஐயம் தவிர்த்து இதயம் பல வெல்வாய் ஒற்றுமை பேணியே நல்வழி செல்வாய் ஓய்வெடுத்து நீயும் இதயத்தை காத்து கோவிலாய் அதில் நீ சுடரேற்றிடுவாய்
|
|
Posted: 03 Oct 2016 11:50 PM PDT எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள் எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத் தின்னும் பசியவள் தீராத தாகமவள் உண்ணா முலையவளை உண்….(1) கத்தி , உடுக்கை,கபாலம், திரிசூலம் சக்தி கரமுற்ற ஆயுதங்கள் -பக்தி இலாதோர் இதயச் சிலாவைப் பிளந்து பலாவின் சுளையைப் புதைக்கும்….(2) அழுதாலும் பிள்ளைக்(கு) அவள்தான் பொறுப்பு பழுதான பின்பும் பரிவை -விழுதாய்ப் பொழிவாள் எமது பராசக்தி, நெஞ்சே தொழுவாய் அவளைத் தொடர்ந்து….(3) அச்சுறுத்தும் பூதமா? அன்றிமாத்ரு பூதமா? எச்சரிக்கை யோடுன்னை உச்சரிப்பதா? -நச்சரவம் மாண்டோர் […]
|
|
பிறந்தநாள் கொண்டாடவில்லை ; முதல்வர் நலம் பெற வேண்டும் அது போதும் : விஜய டி ராஜேந்தர் பேட்டி Posted: 03 Oct 2016 07:23 PM PDT செல்வரகு இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி ராஜேந்தர், தன் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துப் பேசினார். அவர் பேசிய போது, ” பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லையா ஏன்? இன்று என் பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை.கொண்டாடாததற்கு முதல்வர் உடல்நிலை காரணம். தமிழகமுதல்வர் மருத்துவமனையில் இருக்கிற இந்தச் சூழலில் அவர் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதைத் தவிர வேறு ஒரு […]
|
|
Posted: 03 Oct 2016 07:12 PM PDT பவள சங்கரி தலையங்கம் மத்திய அரசிற்கு உச்சநீதி மன்றம் நான்கு நாட்களுக்குள் காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. அப்போதைய அரசு வழக்கறிஞர் இதை ஏற்றுக்கொண்டு அரசிடம் கூறி ஆவண செய்வதாகக் கூறிவிட்டு வந்தார். ஆனால் நேற்று, அரசாங்க தலைமை வழக்கறிஞர் இதன் சார்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி பஞ்சாபையும், ஆந்திராவையும் மேற்கோள் காட்டி காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்க இயலாது என்று தெரிவித்துள்ளனர். அதற்கு காரணங்கள் பலவற்றை சுட்டிக்காட்டுகின்றனர். காவேரி மேலாண்மை ஆணையத்தை […]
|
|
Posted: 03 Oct 2016 05:05 PM PDT இசைக்கவி ரமணன் பச்சைரத்தம் சொட்டச்சொட்டப் பட்டைநாக்கு பளபளக்கப் பரபரப்பாய் எதைவிழுங்கப் பார்த்திருக்கிறாய்? நீ படைக்குமுன்னே யாவும்விழுங்கித் தீர்த்திருக்கிறாய்! அச்சமஞ்சும் உன்வடிவை அகம்குலைக்கும் உன்னுருவை அள்ளிப்பருகத் துள்ளிவந்த பிள்ளையைப் பாராய்! அவன் அழகுத்தமிழின் மழலைகேட்க அம்மா வாராய்! இச்சைபோன்ற இடரையெலாம் மிச்சமின்றி விழுங்கிவிடு என்னையுன்றன் பிள்ளையாக வளையவரவிடு, என்றுமெதிரில் நின்றுனன்பில் அளையும்சுகம்கொடு! கச்சைக்கட்டிக் கொண்டுவரும் கவலையைப் பொசுக்கியந்தக் கனலையென்றன் கவிதையிலே சுருதியாக்கிடு! என்னைக் கன்னித்தமிழ் மின்னலுக்குக் கருவியாக்கிடு! (1) இந்த உலகம் நொந்த உலகம் இவர்மனத்தில் தினம்கலகம் […]
|
|
Posted: 03 Oct 2016 04:20 PM PDT க. பாலசுப்பிரமணியன் கன்னியாகுமரி தேவி குமரி அம்மன் நீலக்கடலோரும் நிற்கின்ற நீலியே குமரியே ! நிலமகளும் அலைமகளும் கலைகொடுத்த செல்வியே நிலவோடு கதிரும் எழுந்திடுமே நின்விழியிலே ! நிழலான வாழ்விற்கு நிஜம்காட்டும் மாயே! அலையோசை கடலோரம் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க அரியணைகள் துறந்தோர் அடைக்கலமாய் காத்திருக்க அகத்தினையும் செகத்தினையும் வென்றிடவே வழிகாட்டி அருளாட்சி செய்கின்ற எழில்ராணி அபிராமி ! கடல்காற்றின் கானத்திற்கு காதணிகள் அசைந்திருக்க களையான மூக்குத்தி கலங்கரை ஒளிபெருக்க கருங்குழலை அன்றலர்ந்த மலர்கள் […]
|
Posted: 03 Oct 2016 09:45 AM PDT ”நவையூறும் நாவில் சுவையூறச் செய்து அவையேறும் வாழ்வை அளிப்பாய் -இவையாவும் பெற்றிட வெண்பாக்கள் குற்றம் குறையின்றி சொற்றுளியால் சீராய் செதுக்கு”….(1)…. ”நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம் பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில் அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு கலையாளை சேரக் கவி….(2) ”நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில் கலைவாணி வந்து குடியேறும் வண்ணம் அலைபாய்ந் திடா(து) அடங்கு….(3) ”ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை பாயப் பொழிவாள் […]
|
Posted: 02 Oct 2016 09:40 AM PDT படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாய், வேலொத்து பாயும் வசவு ….(1) வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய் மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி ஞானத்தை நானுற நல்கு ….(2) அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர் மாற்றுத் துணியாய் மனது ….(3) கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும் வல்லமை வீரம் வணங்கிடும் […]
|
Posted: 01 Oct 2016 09:37 AM PDT “பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்; வீடு வரையுறவு வீதி வரைமனைவி காடு வரைநெற்றிக் காசு” “சாந்த சொரூபியாய் ஆந்தையின் மீதமர்ந்த கோந்தை இவள்பேர்சொல் கேசவா; -தாந்திரிக அன்னையே வாஞ்சையாய் ஆரோ கணிக்கவா என்னையுன் வாகனமாய் ஏற்று”….கிரேசி மோகன்….
|
|
யாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – தொடக்க விழா, நூல்கள் வெளியீட்டு விழா! Posted: 04 Oct 2016 06:03 PM PDT மு.இளங்கோவன் அன்புடையீர், வணக்கம். தமிழ் இலக்கியப் பரப்பினுள் ‘யாழ்’ குறித்துப் பரவியிருந்த செய்திகளைத் தொகுத்துத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் யாழ்நூல் என்னும் பெயரில் அரிய ஆய்வுநூல் வழங்கிய தவத்திரு விபுலாநந்த அடிகளார் அவர்கள் பன்முக ஆளுமைகொண்ட அறிஞராவார். இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைத்தீவில் பிறந்த இவர் இராமகிருட்டின மடத்தின் துறவி; இராமகிருட்டின விசயம், வேதாந்த கேசரி, பிரபுத்த பாரதம், விவேகானந்தன் ஆகிய இதழ்களின் ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; பாரதியின் படைப்புகளைக் கல்வியுலகில் முதலில் வரவேற்றுப் போற்றியவர்; இலங்கையில் பல்வேறு […]
|
Posted: 04 Oct 2016 05:03 PM PDT ”கோளரி மாதவன் கோகுலம் சென்றதைக் காளியறி வித்தனள், கந்தன்கை -வேலெரி எட்டாத ஆகாசத்தில், எட்டாவது தோன்றலை, சட்டாம்பிள் ளைகம் சனுக்கு”….கிரேசி மோகன்….
|
|
Posted: 04 Oct 2016 05:03 PM PDT இசைக்கவி ரமணன் ஆயிரம் பேர்களால் என்ன? அவை யாவுமுன் கால்மூடும் மலரே! வாயி லிருப்பதா வாக்கு? அது வயிரவீ உன்மனப் போக்கு! பாயில் கிடக்கவா வாழ்வு? உன் பாலிப்புக் கதுதானே தாழ்வு? தேயா இருளெலாம் போக்கு! என் சித்தத்தில் முத்தத்தைத் தேக்கு! நின்னையே கதியெனக் கொள்வார், அவர் நிம்மதி இலாமலே திரிவார் நின்னையே பொய்யெனச் சொல்வார், அவர் நிலமெலாம் செல்வத்தி லாள்வார் நின்மனம் ஏதடி பிச்சி? இன்னும் நிற்கி றோமேயுனை மெச்சி! நின்னிலே ஏதோ இருக்கும்! […]
|
|
Posted: 04 Oct 2016 04:59 PM PDT க. பாலசுப்பிரமணியன் புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி மூத்தவளே ! மூவுலகும் முக்கண்ணால் அறிந்தவளே ! முழுமதியின் அமுதெடுத்து முக்காலம் தருபவளே ! மூவுலகின் உயிரினங்கள் முன்னின்று காப்பவளே ! மூடமதியன் மகிடனுக்கு முடிவினைத் தந்தவளே ! புதிதாய் நித்தம் புதுவையில் பூப்பவளே ! பொழுதும் மதியாய் புலனில் நிற்பவளே ! விதியை கதியாய் வாழ்வினில் வடித்தவளே! விழுதாய் நின்று வினைகள் தீர்ப்பவளே ! கடலில் நதியில் கனிவுடைக்காற்றில் கண்டேன் ! கதிரில் கனியில் […]
|
|
மெய்ஞ்ஞான இலக்கியத்தின் உச்சம் அல்லது வீழ்ச்சி! Posted: 04 Oct 2016 04:42 PM PDT –எம். ஜெயராமசர்மா B.A Hons, Dip.in.Ed, Dip.in.Soc, M.Phil Edu, SLEAS. முன்னாள் கல்வி இயக்குநர், விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர், மெல்பேண், அவுஸ்திரேலியா இலக்கியம் என்பதற்குப் பலவிதமான விளக்கங்கள் பலராலும் கூறப்படுகிறது. இலக்கு + இயம் இலக்கியம். அதாவது ஓர் இலக்கை நோக்கமாகக் கொண்டதுதான் இலக்கியம் என்பதாகும். இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்றும் சொல்லப்படுகிறது. உணச்சியுடன் கூடியதுதான் இலக்கியம் என்றும் சொல்லப்படுகிறது. அறம், பொருள், இன்பம் […]
|
|
“கரையைத் தேடும் அலைகள்” – நூல் மதிப்புரை Posted: 04 Oct 2016 04:35 PM PDT உமாஸ்ரீ நான் ரசித்த புத்தகம் – லக்ஷ்மி ரமணனின் “கரையைத் தேடும் அலைகள்” சிறுகதை எழுதுவது ஒரு கலை. சிறப்பாகச் சிறுகதை எழுதுவது ஒரு தனித்திறமை. எழுத்தாளர் லக்ஷ்மி ரமணனிடம் அது மிகுதியாக இருக்கிறது. லக்ஷ்மி ரமணன் ஒரு அருமையான எழுத்தாளர். குடத்திலிருக்கும் விளக்குப் போல் அடக்கம் மிகுந்தவர். வாசகர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர். அவர் எழுதிய ”கரையைத் தேடும் அலைகள்” என்னும் புத்தகத்தைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஒரு நாவலும், ஒரு குறு நாவலும், ஒன்பது […]
|
|
Posted: 04 Oct 2016 04:00 PM PDT ராஜகவி ராகில் உன்னிடம் குதிரையிருக்கலாம் குதிரை நீயென ஆசைப்படு உன் கால்களால் நடக்கவும் ஓடவும் பாயவும் குதிக்கவும் விரைந்து கடக்கவும் உன் கால்கள் சக்கரங்கள் உன் கால்கள் சிறகுகள் உன்னை நகர்த்திச் செல்லவும் உயரம் ஏறி நீ தொடவும் பறந்து வானம் பிடிக்கவும் அறுந்து போன ஒற்றைச் செருப்பு ஒரு கால் உடைந்த ஆசனம் என எண்ண இயந்திரம் உன் எரிபொருள் பெறுமாகிடின் உயிர்க்கும் உன் அவ நம்பிக்கை […]
|
|
Posted: 04 Oct 2016 03:32 PM PDT ரா.பார்த்தசாரதி கண்ணியம், ஒழுக்கமற்ற கனவான்களின் விமர்சனமும், தங்கள் கொள்கைகளை மறந்து பின்பற்றுவது போன்ற நடிப்பும் உங்கள் பிறந்த நாளை விடுமுறைக்காக ஏற்படுத்தினாலும், உங்கள் புகழும் மாண்பும் மங்க போவதில்லை ! அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மையை கடைபிடித்தவரே உங்களிடம் உண்மையே உன் விலை என்ன கேட்கும் கனவான்கள் உள்ளனரே சத்ய சோதனை என்பது காட்சி பொருளாய் இருப்பது புத்தகத்தில் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் இது சோதனையாய் இருப்பது மட்டுமே ! கைராட்டை சுற்றி […]
|
|
Posted: 04 Oct 2016 03:05 PM PDT ( எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா ) காரிருக்கு வீடிருக்கு கையினிலும் பணமிருக்கு பலபேரின் நட்பிருக்கு பரிசுகளும் குவிந்திருக்கு என்றாலும் மனத்தளவில் என்னவோ குறையிருக்கு எதுவென்று தெரியாமல் ஏக்கமே நிறைந்திருக்கு ! முதுமைவரும் காரணமா முறுவல்வர மறுப்பதுவா தனிமைவரும் எனும்நினைப்பு தலைதூக்கி வருவதுவா ஓடியோடி உழைத்துவாங்கி உள்வீட்டில் சேர்த்ததெலாம் யாரினிமேல் பார்த்திடுவார் எனுமெண்ணம் எழுவதுவா ! பிறந்தநாள் வருவதனை பெரும்பாலும் விரும்பவில்லை குறைந்தநாள் ஆகிடுமோ எனுமேக்கம் வந்துநிற்கும் பட்சணங்கள் […]
|
|
Posted: 06 Oct 2016 08:20 AM PDT நிர்மலா ராகவன் “ஏதாவது கடுதாசி வந்திருக்கா?” சாதாரண குமாஸ்தாவாக இருந்த குஞ்சிதபாதத்திற்கு தினமும் அதிமுக்கியமான கடிதங்கள் வந்து குவியும் என்பதில்லை. இருந்தாலும், தான் வீடு திரும்பியாயிற்று என்பதைத் தெரிவிப்பதுபோல், அதே கேள்வியைத் தினமும் கேட்கத் தவறமாட்டார். “ஆமாம்! நமக்கு யார் இருக்காங்க, அன்னாடம் எழுத!” என்றபடி, கோப்பையில் தேத்தண்ணீரை எடுத்து வருவாள் திலகம். அன்று அவளுடைய பதிலில் சிறிது மாற்றம். “இந்தாங்க. ஒங்க மகன் பள்ளிக்கூடத்திலிருந்து!” “என்னாவாம்?” “யாருக்குப் புரியுது மலாயில எழுதினா!” அசுவாரசியமாக நோட்டம் விட்டவருக்கு […]
|
Posted: 05 Oct 2016 05:05 PM PDT கேசவ், எனக்கென்னவோ அம்பாள் பார்வைக்கு ‘’நெமிலி பாலாம்பிகையாகத்’’ தோன்றினாள்…. ஓலை ஜபமணி மாலை அபயமொடு காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி வருபவர் வாழ்வில் வளம்…. ”த்யான த்யாத்ரு த்யேய ரூபி” —————————————– எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள் எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத் தின்னும் பசியவள் தீராத தாகமவள் உண்ணா முலையவளை உண்….கிரேசி மோகன்….
|
|
Posted: 05 Oct 2016 05:00 PM PDT இசைக்கவி ரமணன் உன்களிப்பு தர்மம் உன்விருப்பம் சிருஷ்டி உன்னிமைப்பு மாயம் உன்னிமைப்பே முக்தி! என்னசொல்லி என்னசெய்து உன்னை அறிவது? எங்கு மெதுவு மானவுன்னை என்று காண்பது? என்றோநீ வைத்தபுள்ளி எட்டும்வரையிலே, நீ எழுதும்கதை சொந்தக்கதை யாகத் தொடருது உன்னை மீறி எண்ணமொன் றிருக்க முடியுமா? உனதல்ல எனதென்று தடுக்க முடியுமா? உள்ளமென்னும் பள்ளமெங்கும் பாயும் வெள்ளமே! உயிரில் நின்றும் கண்ணில்படா உச்சக் கள்ளமே! என்வினைகள் பிறவி உன்மறைப்பு வாழ்க்கை என்மறப்பு மரணம் என்னநியாயம் தர்மம்? கட்டுவதும் […]
|
|
Posted: 05 Oct 2016 04:47 PM PDT பவள சங்கரி எத்தனை எத்தனை பிறவியம்மா எல்லாம் உன் அருளம்மா அத்தனையும் பாவங்களன்றி வரமாக்கிய வடிவுடைநாயகியே நாடகமான வையகத்தில் பூடகமான மனமின்றி சேடகனாய் வாழாமல் சிறகடித்து சிறந்திருக்கருள்வாயே வாதமும் விநோதமும் வாழ்வானதும் நாதமும் வேதமும் கரைசேர்ப்பதும் சகாராவிலும் மொட்டவிழ்வதும் சகலகலாவல்லி நின் திருவிளையாடல் கருத்திலுறை காத்தியாயினி கடம்பவனத்தின் காவல்காரி நீ அடங்காதார் மனக் கூட்டிலும் அகம்நிறைந்து முகமலரச் செய்பவள்! அன்புறுவாய் அகிலம் ஆள்பவள் காளி புன்முறுவாய் புவியாவும் பொழிபவள் பூமாரி நான்மறை வித்தாய்த் திகழ்பவள் தேவி […]
|
|
Posted: 05 Oct 2016 04:31 PM PDT க. பாலசுப்பிரமணியன் தாய் மூகாம்பிகை காலடிச் சங்கரன் சந்தங்கள் கேட்டதும் காலடி பூமியில் வைத்திட வந்தவளே! காலையில் பகவதி மாலையில் சரஸ்வதி கருணையில் காவிரி காலத்தின் அறிவொளி ! முதுகலை அறிந்தவள் மூகனை அழித்தவள் முத்தமிழ் தந்தவள் முடிவின்றிக் கொடுப்பவள் பாரதி ! சாரதி ! பார்கவி ! பைரவி ! பங்கய மேலுறை மங்கள மோகினி ! வல்லமை வாக்கினில் நல்லவை நாக்கினில் வளர்த்திடும் அறிவினில் வாழ்ந்திடும் வேணி வண்டினம் சேர்ந்திடும் […]
|