18/7/2023 ஆடிப்பூசம் அன்று வடலூர் பெருவெளி லட்சுமி சந்திரன் அறக்கட்டளை மண்டபத்தில் நடந்த வடலூர் புனித பூமி மூன்றாவது ஆலோசனை கூட்டத்தில் ஆன்மநேய சன்மார்க்க உறவுகள் கலந்து கொண்டு நிறைவேற்றிய தீர்மானங்கள் 😗
1.அமைப்பின் பெயரை *வடலூர் புனித பூமி இயக்கம்* என்று ஏகமனதாக வடலூர், பார்வதிபுரம், கருங்குழி,மேட்டுக்குப்பம் கிராம மக்கள் மற்றும் அனைத்து மாவட்ட சன்மார்க்க அன்பர்களும் சேர்ந்து தீர்மானம் செய்யப்பட்டது
2.இயக்கத்தின் பொருப்பாளர்களை தேர்வு செய்யப்பட்டது .
3.வடலூர் ஞானசபையிலிருந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக நடைபயணம் செய்து கோரிக்கை மனு கொடுத்தல் என தீர்மானம் செய்யப்பட்டது.
4.1000த்திற்கும் மேற்ப்பட்ட கூட்டம் சேர்த பிறகே நடைபயணத்தின் தேதி அறிவிக்கப்படும் என தீர்மானம் செய்யப்பட்டது.
5.முதல்வர் ,மாவட்ட ஆட்சியர் ,நகராட்சி இவ்விடங்களுக்கு மனுவை கடிதம் வாயிலாக அனுப்புதல்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
ஆன்ம நேய உறவுகள் அனைவருக்கும் வணக்கம் . 🙏
பூசத்தன்று புனித பூமி இயக்கத்தின் ஆலோசனை கூட்டத்திற்கு எங்களின் அழைப்பை ஏற்று பெரும்பான்மையாக வந்து கலந்துக் கொண்ட அனைவருக்கும் தயவான நன்றிகளை இக்குழுவின் நிர்வாகத்தினர் தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🔥🙏