எல்லா அண்டங்களையும் ,
எல்லா உலகங்களையும் ,
எல்லா உயிர்களையும் ,
எல்லா பொருள்களையும் ,
மற்ற எல்லாவற்றையும்
தோற்றுவித்தும் ,
விளக்கம் செய்வித்தும் ,
துரிசு நீக்கு வித்தும் ,
பக்குவம் வருவித்தும் ,
பலன் தருவித்தும்
எங்கும் பூரனராகி விளங்குகின்ற ஓர்
உண்மை கடவுள் உண்டென்றும் ,
அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்யின் ,
"அக்கடவுள் திருவருள்" நமது கருந்த்தின் கண் வெளிப்பட்டு விளங்கும் என்றும்,
அத திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி , மூப்பு, பயம் , துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து,
எக்காலத்தும் ,
எவ்விடத்தும் ,
எவ்விதத்தும் ,
எவ்வளவும்
தடை படாத பேரின்ப சித்தி பேரு வாழ்வை அடைதல் கூடும் என்றும் ,
எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மை பட உணர்த்தி அருள பெற்றோம்.
அவ்வுணர்ச்சியை பெற்றது தொடங்கி ,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி