உங்கள் வாழ்த்துகளோடு
...............................................
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயங்கிவரும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை சார்பாக மூன்று நாட்கள் இணையவழி (zoom) பன்னாட்டு சன்மார்க்க பயிற்சி பட்டறை நடைபெறுகிறது. வரும் 25.05.2021 முதல் 27.05.2021 வரை தினம் தோறும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி பட்டறையில் உலகெங்கும் உள்ள சன் மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். சன்மார்க்க கல்வியையும், வள்ளல் பெருமானின் சிந்தனைகளையும் உலகெங்கும் கொண்டு செல்லும் நோக்கத்தோடு நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்காணும் பதிவுப் படிவத்தில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளும்படியும் வேண்டுகிறோம். நிகழ்வு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும் சரியாக 5.50 மணிக்கு இணையத்தில் நுழையும் படியும் கேட்டுக் கொள்கிறோம். மூன்று நாட்களும் முறையாக கலந்து கொள்பவர்களுக்கு பன்னாட்டு மின் சான்றிதழ் வழங்கப்படும். சன்மார்க்க அன்பர்கள், சன்மார்க்க கல்வியில் விருப்பம் உள்ளவர்கள், சன்மார்க்கத்தை அறிந்து கொள்ள நினைப்பவர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்
நன்றி
முனைவர் பா மஞ்சுளா
பொறுப்பாளர்
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்