சுய போதினி

2 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Aug 19, 2016, 11:38:51 PM8/19/16
to தமிழ் சிறகுகள், Thamizhthendral, வல்லமை, நட்புடன், அந்தியூரன் பழமைபேசி, அப்பண்ணா கோலாலம்பூர், vallamai editor, பவளஸ்ரீ, palsuvai

 

சுய போதினி

 

கனவு காண் கனவு காண்

நித்திரையில் காணும் கனவை அல்ல

நித்திரை போக்கிடும் கனவினைக் காண்

என்றார் மா மேதை அப்துல் கலாம்

 

உடல் விட்டு வெளியேறி

உற்றுப் பார் உன்னையே நீ

கற்றிடுவாய் பலவும்

வெற்றுக் குடம் என நினைத்த

உனைப் பற்றி நீ

 

என்ன இல்லை உன்னுள்ளே

இல்லையா ரசனை

ரசித்திட அழகினை

இல்லையா திறமை

வடித்திட வரிகளில் அவ் வழகினை

 

இறைவன் தந்தார் ஐம்புலன்

கண்டு களிக்கப் பலவும்

உண்டு படுத்து உருண்டால் போதாது

கண்டு களித்தவை வரிந்திடு வரிகளில் நீ

கண்டு அதைக் கொள்வார் பிறர்

உள்ளத்துள் மகிழ்ச்சி

 

வாழ்ந்தால் யான் கண்ட இன்பம் இவ் வையகம் பெறுக என

வாழ்த்திடுவார் உனை யுன் வரிகள் படிப்போர்

வான் புகழ் எய்திடுவாய் நீயும் ஒரு நாள்


 20-08-2016                     நடராஜன் கல்பட்

 

 

 

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Reply all
Reply to author
Forward
0 new messages