வைக்கோல் போர் நாய்
ஆராய்ச்சிகள் பல செய்தே
ஆழ்கடல் முத்தெனப்
படைத்திடுறார் அறிஞர்கள்
படைப்புகள் பல
அடுக்கடுக்காய் அலமாரிகள் பலவற்றி லவை
அனந்த சயனம் போல்
அதனிடையே ஆனந்த சயனத்தில்
வைக்கோல் போர் நாயென
பட்டு மெத்தை
விரித்த கட்டிலினிலே
படுத்துள்ளார் பண்ணையார்
கழுதை அறியாது கற்பூர வாசனை என்பார்
பண்ணையார் அறிவார் நிச்சயமாய்ப்
புத்தக வாசனை என்பேன் நான்
அப் பண்ணையார் யார்
என்னையா பார்த்தேன்
கண்ணாடியில் இறைவா நான்?

நடராஜன் கல்பட்டு 10-06-2014
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே