கவிஞர் ஃபஹீமா ஜஹானும், நானும் இணைந்து மொழிபெயர்த்த கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் 'தலைப்பற்ற தாய்நிலம்' எனும் சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல், இவ் வருடத்தின் முதலாவது தொகுப்பாக தற்பொழுது வெளிவந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.
எழுநா, நிகரி பதிப்பகங்களின் இணைந்த வெளியீடாக வெளிவந்திருக்கும் இத் தொகுப்பின் நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் மாதங்களில் கீழுள்ள நாடுகளில் நடைபெற உள்ளது.
ஏப்ரல், 2013 - லண்டன், நோர்வே மே, 2013 - கனடா, ஸ்விட்ஸர்லாந்து
இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் வசிப்பவர்கள் கீழுள்ள முகவரியில் தொடர்பு கொள்வதன் மூலம், இத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.
Discovery Book Palace (P)Ltd No.6, Magavir Comlex, 1st Floor Munusamy Salai, K K Nagar West
Chennai – 600078 Tamil Nadu, India.