வணக்கம் நண்பர்களே,
திரை குறுக்கெழுத்துப் புதிர் - 19 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
1. பவளமணி பிரகாசம்
2. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
3. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
4. முத்து சுப்ரமண்யம்
5. K.R.சந்தானம்
6. ராமையா நாராயணன்
7. பாலாஜி
8. மாதவ் மூர்த்தி
9. நாகமணி ஆனந்தம்
10. சாந்தி நாராயணன்
11. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
12. தமிழ்
13. ஸ்ரீதரன் துரைவேலு
14. சௌதாமினி சுப்பிரமணியம்
15. சுரேஷ் பாபு
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.
வழக்கமாய் விடைகள் அனுப்பும் பல நண்பர்கள் நினைவூட்டியபின்னும் ஏனோ விடைகளை அனுப்பவில்லை. அதிக நண்பர்கள் பங்கேற்று விடைகளை அனுப்பினால் நான் மிகவும் மகிழ்வேன்.
விடைகளும் விளக்கங்களும்:
1. ஆண் வாரிசு உண்டு என்று உள்ளங்கையில் காட்டும் மீன்வடிவக் கோடு (5) - மச்சரேகை மீன்வடிவக் கோடு = மச்சரேகை ( ஆண் வாரிசு உண்டு என காட்டுவது) 4. முதலில் தோன்றி நடுவில் பாழான நண்பா! (2) - தோழா தோ (முதலில் தோன்றிய) + ழா (நடுவில் பாழான) = தோழா (நண்பா) 6. தழும்பு சுரண்டி எடுத்தவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி (4) - எத்தன் எடுத்தவன் - வடு (தழும்பு) = எத்தன் (ஏமாற்றுப் பேர்வழி) 7. சக்கையின்றி சவடால் அடிக்க துள்ளுவது கொடுஞ்செயல் (4) - அடாவடி சவடால் + அடிக்க - சக்கல் (சக்கை) = வடா அடி = அடாவடி (கொடுஞ்செயல்) 9. ஆயுதம் இன்றி கிருஸ்தவ ஆலயத்து அன்னை வணங்கும் தாய்ப்பசு? (5) - மாதாகோமாதா மாதாகோவில் (கிருஸ்தவ ஆலயம்) - வில் (ஆயுதம் = மாதாகோ + மாதா (அன்னை) = மாதாகோமாதா (தாய்ப்பசு) 12. நேர்மையுள்ள காசு? (4) = நாணயம் நாணயம் = நேர்மை = காசு 14. உட்கார வந்தவன் கடைசியில் சாகமாட்டான் (4) - அமரன் அமர (உட்கார) + ன் (கடைசியில் வந்தவன்) = அமரன் (சாகாதவன்) 16. விலாங்கு மீன் படை? (2) - சேனா சேனா = படை = விலாங்கு மீன் 17. பாலைவனத்தில் பொய்த்தோற்றம்? (3,2) - கானல் நீர் கானல் நீர் ( பொய்த்தோற்றம்) நெடுக்காக:2. சுயமரியாதை இழந்து கலங்கி சன்மானம் தந்த மாமன் சந்திரன் (5) - சந்தமாமா சன்மானம் +தந்த - தன்மானம் (சுயமரியாதை) = சந்த + மாமா (மாமன்) = சந்தமாமா (சந்திரன்) 3. முதலும் முடிவுமாய் கையேந்தி நின்ற குற்றவாளி (2) - கைதி கையேந்தி = (முதல் = கை; முடிவு = தி) = கைதி (குற்றவாளி) 4. இரண்டாவதாக கட்டிய பொன்வளை உள்ளே வெடிமருந்துச்சுருள் (3) - தோட்டா இரண்டாவதாக கட்டிய = ட் + தோடா (பொன்வளை) = தோட்டா (வெடிமருந்துச்சுருள்) 5. நன்கு கடித்து குதறி குத்துவிட்டான் கூத்தாடி (4) - நடிகன் நன்கு + கடித்து - குத்து = நன் கடி = நடிகன் (கூத்தாடி) 7. மகளிர் விளையாட்டை முடிக்காத தாய் (3) - அம்மா அம்மானை (மகளிர் விளையாட்டு) - னை (முடிக்காத) = அம்மா 8. மத்தியில் நாங்கள் திரும்பிய எங்கள் தேசம் (4) - நம்நாடு நடு (மத்தி) + ம்நா [திரும்பிய நாம் (நாங்கள்)] = நம்நாடு 10. பிறந்த வீட்டில் தலையணை இன்றி இருக்க ஆசை (3) - தாகம் தாயகம் (பிறந்த வீடு) - ய (தலை யணை) = தாகம் = ஆசை 11. காமராஜ் மரணத்தால் அரைகுறையாய் கட்டப்பட்ட மாளிகை (5) - தாஜ்மகால் காமஜ் தால் (அரைகுறையாய்) = தாஜ்மகால் 13. முதியவனாய் விட்டுவிட்டு கலக்கத்தில் ஓடும் ஆறு (3) - யமுனா முதியவனாய் (விட்டுவிட்டு) = முயனா = யமுனா 15. எங்குமே காணாத பெண்ணின் பெயர் (2) - மேகா எங்குமே காணாத |
ராமராவ்