காதலனான சில மணித்துளிகளில்! - தெய்வீக காதல்?

2 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Aug 3, 2012, 4:29:51 AM8/3/12
to

காதலனான சில மணித்துளிகளில்! - தெய்வீக காதல்?

URI: http://tamilnanbargal.com/node/42111

பதிந்தது vinoth நாள் புத, 01/08/2012 - 2:45pm

நீ என்னை கடந்து போகும் போது
எனை வசீகரித்து இழுப்பது எது?
போட்டி போட்டு நிற்கிறது
உன் தலை சூடிய மல்லிகையும்!
உன் நெற்றியின் சந்தண தீற்றலும்!
உன் காந்த கண்களும்!

    heart   

கோவில் மணி அடித்து நீ
கன்னத்தில் போட்டுக்கொள்ளும்
அழகை இரசிக்கத்தான்
தலைகீழாக தவம் செய்கிறதோ
கோவில் மணி?

    heart   

நீ சாமி கும்பிடும் அழகில்
நானும் ஒரு சிலையாகி விட்டேன்!
நீ அழகா சிலை அழகா
உனைத்தான் கும்பிட தோன்றுகிறது!

    heart   

தெய்வீக வாசம் வாங்கி
கோவில் பிரகாரத்தை
அடிஅடியாய் வைத்து சுற்றுகிறாய்
உன் நடை அழகில் நானும்
சுற்றி வருகிறேன் உனை!

    heart   

நீ தீபத்தை தொட்டு வணங்கி விட்டு
எனை பார்க்கிறாய்
நானும் அதை வணங்கிவிட்டு
நம் காதலக்கு அக்னி சாட்சியானதாக
கற்பனை செய்து கொள்கிறேன்!

    heart   

மோதிர விரலால் சந்தணம் தொட்டு
யாரோ ஒரு குழந்தைக்கு
நெற்றியில் போட்டு விடுகிறாய் நீ
எனக்கும் எனக்கும் என
என் மனமும் கெஞ்சுகிறது
ஒரு குழந்தை போல!

    heart   

நான் கோவிலுள் நுழையும் போது
நீ கோவில் பிரசாதம் வாங்கிவிட்டு
படிகளில் இறங்கி வருகிறாய்
என் கால்கள் கோவிலுக்குள் செல்ல மறுக்கிறது
நான் தேவியை தரிசித்து விட்டேன்!

    heart        heart        heart   

(இந்த கவிதையும் காதலும் கற்பனையே)

வினோத் கன்னியாகுமரி
URI: http://tamilnanbargal.com/node/42111



--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)


Reply all
Reply to author
Forward
0 new messages