உன் மடி மீது என் தலை சாய்த்து தூங்காத
உன் நினைவுகளால் நீ தாலாட்டும் போது
நான் அதில் துயில நினைக்கிறேன் ஒரு யுகம்!

கண்மூடி துயில் கொள்ளும் போது
தூங்காத உன் நினைவுகள் மட்டுமே
விழித்திருக்கிறது என் கனவுகளாக!

நீ சண்டையிட்டு பேசாது போன தருணங்களை
நினைவூட்ட விரும்பாமல் கண்களையே பார்க்கிறேன்
நீ கண்களில் சிக்கி சிவந்து நெஞ்சில் ஒரு விரலால் கோலமிடுகிறாய்
நீ சண்டையிட்டது என் கனவில் என்பது புரிந்தது!

உனைப் பார்த்த முதல் நொடி கிடைத்த
உன்னுடன் வாழப்போகும் இன்பம் மறுபடி எனக்குள்
கனவில் ஒரு யுகம் வாழ்ந்துவிட்டு
காலையில் நீ முத்தமிட்டு எழுப்பும் போது!

நீ முத்தமிட்டு எழுப்பினாய், நான் விழித்துப்பார்க்க
நீ இன்னும் அழகாக தூங்குகிறாய்...
உன் கனவில் நான் முத்தமிட்டு எழுப்பும் வரை
உன் தூங்கும் அழகை இரசிக்கிறேன் நான் விழித்தபடி!

வினோத் கன்னியாகுமரி
URI: http://tamilnanbargal.com/node/41700
கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)