வணக்கம் நண்பர்களே
வைகாசி மாதம் நடைபெற்ற தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டியின் முடிவுகள் 30/06/2012 அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில் முதற்பரிசாக வெற்றி பெற்றவருக்கு இலவச இணைய தளம் அறிவிக்கப்பட்டிருந்தது.
முதற்பரிசை பெற்ற திரு. தனலட்சுமி கண்ணன் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 'இணைய தள பெயர்' மற்றும் 'வடிவமைப்பு' செய்யப்பட்டுள்ளது.
அந்த இணைய தளத்தை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
தவத்தமிழ் மன்றம் (http://thavathtamilmanram.in/)
என்பது வெற்றி பெற்ற இணையதளம் ஆகும்.
தவத்தமிழ் மன்றம் மேன்மேலும் வெற்றி பெற தமிழ் நண்பர்கள் இணையதளம் சார்பில் எங்கள் இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இணைய தளத்தை பற்றிய தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் ad...@thavathtamilmanram.in என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் முகவரி in...@tamilnanbargal.com என்பதற்கோ அனுப்பி வைக்கலாம்.
தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டியில் கலந்து கொண்டு மேலும் பல இணைய தள நட்பு உருவாக்க அன்புடன் அழைக்கிறோம்.
நன்றிகள்
தமிழ் நண்பர்கள்
கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)