குரான் முரண்பாடுகள்-6

6 views
Skip to first unread message

உண்மையடியான்

unread,
Nov 14, 2008, 12:42:29 PM11/14/08
to இஸ்லாம் உண்மைகள்
மரியாளுக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியை தூதன் சொன்னதாக குர்-
ஆனில் இரண்டு இடங்களில் வருகிறது குர்-ஆன் 3:42 , 45 மற்றும் குர்-ஆன்
19:17-19. மரியாளிடம் பேசியது ஒரு தூதனா? அல்லது பல தூதர்களா?

குர்-ஆன் இயேசுவைப் பற்றிப் பேச பேச பல தவறுகளையும், முரண்பாடுகளையும்
செய்துள்ளது. குர்-ஆன் 3:42, 45 வசங்கள் சொல்கின்றன "மரியாளிடம் பல
தூதர்கள் பேசினார்கள்". குர்-ஆன் 19:17-19 வசங்கள் சொல்கின்றன
"மரியாளிடம் ஒரு தூதன் பேசினான்".

1. பல தூதர்கள் பேசினார்கள் (குர்-ஆன் 3:42, 45):

அல்லா கீழ்கண்ட வசனங்களில் "மலக்குகள்" (தூதர்கள்) என்று பன்மையில்
சொல்வதைக் காணலாம்.

3:42 (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ்
உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும்
ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட
(மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்),

3:45 மலக்குகள் கூறினார்கள்; 'மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து
வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி)
நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்.
அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும்
(இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

2. ஒரு தூதன் பேசினான் குர்-ஆன் 19:17-19:

கீழ்கண்ட வசனங்களில் அல்லா ஒரு தூதனை அனுப்பியதாகவும், மரியாள் ஒரு
தூதனிடம் பேசியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

19:17 அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு
திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை
(ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில்
தோன்றினார்

19:18 (அப்படி அவரைக் கண்டதும்,) 'நிச்சயமாக நாம் உம்மை விட்டும்
ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால்
(நெருங்காதீர்)" என்றார்.

19:19 'நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை
உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்.

மேலே சொன்ன வசங்களை நாம் பார்த்தால், இந்த முரண்பாடு மிக சுலபமாக
புரியும். சில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அல்லா இரண்டுமுறை தூதர்களை
அனுப்பினார். முதல் முறை பல தூதர்களை அனுப்பியதாகவும், மரியாளின்
சந்தேகம் முழுவதுமாக தீர்ப்பதற்கு மறுபடியும் ஒரு தூதனை அனுப்பியதாகச்
சொல்கிறார்கள். ஆனால் இதுவும் சரியான பதிலில்லை. காரணம் இரண்டு முறையும்
மரியாள் ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்.

19:20 அதற்கு அவர் (மர்யம்), 'எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான்
நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன்
உண்டாக முடியும்?" என்று கூறினார்

3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும்
தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக
முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான்
நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன்
அதனிடம் 'ஆகுக" எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது."

எனவே, இது ஒரு குர்-ஆனின் முரண்பாடு தான். சில இஸ்லாமியர்கள்
சொல்கிறார்கள், தூதர்கள் இரண்டு முறை மரியாளை சந்திக்கவில்லை, ஒரு
முறைதான். பின் ஏன் அல்லா "தூதர்க்ள்" என்றுச் சொல்கிறார் என்று
கேட்டால் ? சொல்லப்பட்ட செய்தியின் நிமித்தமாகவும், காபிரியேல் தூதனின்
தனித்தன்மையின் நிமித்தமாகவும் மரியாதைக்காக "தூதர்கள்" என்றுச் சொன்னார்
என்றுச் சொல்கிறார்கள். இதுவும் ஒரு சரியான பதிலாக இல்லை.

உதாரணம்: "முதலமைச்சர் வந்தார்" என்பதைவிட "முதலமைச்சர் வந்தார்கள்"
என்று பன்மையில் மரியாதைக்காக சொல்வார்கள் என்று உதாரணம் காட்டுவார்கள்
சில இஸ்லாமியர்கள்.

இந்த உதாரணத்திலும் உள்ள ஒரு தவறு என்னவென்றால், "பன்மை" சேர்க்கப்படுவது
பெயர்ச்சொல்லுக்கு (NOUN க்கு) இல்லை வினைச்சொல்லுக்கு (VERB க்கு)
ஆகும்.

ஒரு முதலமைச்சரை குறிப்பிடும் போது :

"முதலமைச்சர்கள் வந்தார்கள்" என்றுச் சொல்லமாட்டார்கள், ---> NOUN க்கு
பன்மை சேர்க்கப்பட்டுள்ளது. இது தவறு, இது ஒருவரைக் குறிக்காது.

"முதலமைச்சர் வந்தார்கள்" என்று தான் ஒரு முதலமைச்சருக்கு மதிப்பு
தரும்போது சொல்வார்கள். VERB க்கு பன்மை சேர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், அல்லா "தூதர்கள்" என்று NOUN க்கு பன்மை சேர்த்துயிருப்பதினால்,
கண்டிப்பாக பல தூதர்களை குறிக்கிறதே தவிர மதிப்பின் காரணமாக அல்ல.

இதைப்பற்றி இஸ்லாமியர்களின் பதில் என்ன? அதற்கு மறுப்பு என்ன என்பதை
இங்கு விவரமாக காணலாம். Question and Answers on this issue

நடந்து முடிந்த நிகழ்ச்சியை சொல்லும் போது குர்-ஆன் பல தவறுகளையும்
முரண்பாடுகளையும் செய்துள்ளது. எனவே, குர்-ஆன் சொல்லும் இயேசுவின்
பிறப்பின் நிகழ்ச்சி ஒரு திரித்து சொல்லப்பட்டது என்பது
தெளிவாகப்புரியும்..


http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part3.html

http://justdialislam.blogspot.com/2008/11/6.html
Reply all
Reply to author
Forward
0 new messages