குரான் முரண்பாடுகள்-3

21 views
Skip to first unread message

உண்மையடியான்

unread,
Nov 14, 2008, 12:39:57 PM11/14/08
to இஸ்லாம் உண்மைகள்
குர்-ஆன் சொல்கிறபடி இயல்பிற்கு மாறாக ஒரு அற்புதமான முறையில் ஒரு
குழந்தை பிறந்து, அவர் நல்வழிப்படுத்தினால் யூதர்கள் நல்வழிப்படுவார்கள்
என்று அல்லா திட்டமிட்டார் அல்லது நினைத்தார். ஆனால் அல்லாவின்
திட்டத்திற்கு எதிராக யூதர்கள் இயேசுவை கொலை செய்ய திட்டமிட்டார்கள்.
அப்படியானால் அல்லாவின் திட்டம் நடைபெறவில்லை, அப்படித்தானே. யூதர்கள்
இயேசுவிற்கு என்ன செய்வார்கள் என்று அல்லாவிற்கு தெரியவில்லை. பிறப்பு
அற்புதமாக இருந்தால், யூதர்கள் நிச்சயமாக இயேசுவை நம்புவார்கள் என்று
அல்லா "தவறாக" முடிவு செய்துவிட்டார்.
இயல்புக்கு மாற்றமாக ஒரு அத்தாட்சி மிக்க இறைத்தூதரை அனுப்புவோம் என்ற
இறைவனின் "ஏற்பாடு" அல்லது "திட்டம்" யூதர்களால் பொய்யாக்கப்பட்டது
இல்லையா?

ஆனால், இயேசுவின் வருகையின் நோக்கத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது
என்று பாருங்கள்.

1. ஏதோன் தோட்டத்தில் ஆதாம் பாவம் செய்ததால், தேவனோடுள்ள தன் உறவு
முறிந்துவிட்டது.

2. மனிதன் வம்சத்தில் பிறக்கும் ஒரு வித்தினால்( மனிதனால்) உன் தலை
நசுக்கப்படும் என்று தேவன் சாத்தனுக்குச் சொல்கிறார்.

3. கன்னியின் வயிற்றில் ஒருவர் பிறந்து, சிலுவையில் உலகத்தின் எல்லாருடைய
பாவங்களுக்காக மரிப்பார், பிறகு உயிரோடு எழுந்திருப்பார் என்று தேவன்
இயேசுவின் பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள்
மூலமாகச் சொன்னார்.

4. தேவதிட்டத்தின் படியே இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார்,
சிலுவையில் மரித்தார், உயிரோடு எழுந்தார்.

யேகோவா தேவனின் திட்டம் அப்படியே நிறைவேறியது, ஆனால் அல்லாவின் திட்டம்
நிறைவேறவில்லை.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part2.html


http://justdialislam.blogspot.com/2008/11/3.html
Reply all
Reply to author
Forward
0 new messages