பிப்ரவரி 10, துபாய் சோனாப்பூரில் அமீரக காயிதெமில்லத் பேரவை நடத்தும் மீலாதுப் பெருவிழா
துபாய் : துபாய் சோனாப்பூர் எம்.பி.எம். எம்.பி.எம். கேம்பில் 10.02.2012 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மீலாதுப் பெருவிழா நடைபெற இருக்கிறது.
மீலாதுப் பெருவிழாவிற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்குகிறார். துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்துகிறார்.
துபாய் ஈமான் அமைப்பின் மீலாத் சிறப்புச் சொற்பொழிவாளர் மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் முனைவர் அன்வர் பாதுஷா உலவி விழாப் பேருரை நிகழ்த்துகிறார்.
அனைவரும் வருகை தந்து விழாவினைச் சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு
050 51 96 433 / 055 408 2008 / 055 41 45 064 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.