இந்த கட்டுரை மருத்துவ கவுன்சலின்
தளத்தில் உள்ள விபரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது
அந்த விபரங்களில் சில வழுக்கள் உள்ளன (உதாரணம் ஸ்டான்லி மருத்துவமனை
ஆரம்பிக்கப்பட்ட வருடம்). இருந்தாலும் அவற்றை திருத்தவில்லை. அத்தளத்தில்
உள்ள தரவுகளை அப்படியே பயன் படுத்தியுள்ளேன்
முதலில், ஒவ்வொரு வருடமும் எத்தனை மருத்துவக்கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன என்று பார்ப்போம்
1944 வருடம் வரை வருடந்தோறும் ஒன்று அல்லது இரண்டு கல்லூர்களே
துவக்கப்பட்டுள்ளன. 1946ஆம் வருடம் 5 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. அதன்
பிற்கு கூட வருடந்தோறும் பத்திற்கு குறைவான கல்லூரிகளே துவக்கப்பட்டுள்ளன்.
ஒரே ஒரு விதிவிலக்காக 1963ஆம் ஆண்டு மட்டும் பத்து கல்லூரிகள்
துவக்கப்பட்டுள்ளன
அதன் பிறகு 1998 வரை வருடத்திற்கு பத்திற்கும் குறைவான கல்லூரிகளே
துவக்கப்பட்டுள்ளன. 1999ஆம் ஆண்டிற்கு பின்னரே வருடத்திற்கு பத்திற்கும்
அதிகமான மருத்துவ கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன
மேலே நாம் பார்த்தது, பொதுக்கணக்கு. இனி இந்த கல்லூரிகள் யாரால் (அரசு,
தனியார், டிரஸ்ட்) துவக்கப்பட்டுள்ளன என்பதை அடுத்த படத்தில் பார்க்கலாம்
இதில் அரசு, மத்திய அரசு (பாதுகாப்பு அமைச்சகம்), மும்பாய் மாநகராட்சி,
சொசைட்டி, டிரஸ்டி, தனியார், பல்கலை கழகம் என்று பிரித்து பார்த்தால்,
- முதலில், சுதந்திரம் வரை மெதுவான நிதானமான வளர்ச்சி
- 1970கள் வரை அரசு கல்லூரிகள் அதிகரிப்பு
- 1970களில் அதே நிலை
- அதன் பிறகு அரசு கல்லூரிகளின் வளர்ச்சி குறைவு
- 1980 வரை பெரும்பாலும் அரசு கல்லூரிகளே துவக்கப்பட்டுள்ளன (நீல நிற
கோடு) அதன் பிறகு அதிக அளவில் தனியார் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன
- 1990க்கு பிறகு தனியார் மருத்துவ கல்லூரிகளின் அசுர வளர்ச்சி
- தற்சமயம் அரசு கல்லூரிகளை விட தனியார் கல்லூரிகள் அதிகம் துவக்கப்பட்டுள்ளன என்பதையும் அறியலாம்
இதையே வேறொரு கோனத்தில் பார்க்கலாம்
இதில் பச்சை நிறக்கோடு - தனியார் கல்லூரிகளை குறிக்கிறது. சிகப்பு நிற கோடு
அரசு கல்லூரிகளை குறிக்கிறது. மஞ்சள் நிறக்கோடு மொத்த கல்லூரிகளை
குறிக்கிறது
ஏற்கனவே பார்த்த அனைத்து விபரங்களையும் இந்தப்படத்தின் மூலம் எளிதில்
அறிந்து கொள்ளலாம். அது தவிர இதில் இருந்து 2006ஆம் ஆண்டில் தனியார்
கல்லூரிகளின் எண்ணிக்கை அரசு கல்லூரிகளின் எண்ணிக்கையை விட அதிகரித்து
விட்டது என்பதையும் அறிந்து கொள்ளலாம்
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 134 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன
- இதில் அரசு கல்லூரிகள் 34 மட்டுமே
- 103 கல்லூரிகள் தனியாரால் துவக்கப்பட்டுள்ளன
2000ஆம் வருடத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டுள்ள 34 அரசு மருத்துவக்கல்லூரிகளில்
- ஆந்திர பிரதேச அரசு நான்கு கல்லூரிகளையும்
- அசாம் அரசு ஒரு கல்லூரியையும்
- சட்டீஸ்கர் அரசு இரண்டு கல்லூரிகளையும்
- டெல்லி அரசு ஒரு கல்லூரியையும்
- கர்நாடக அரசு ஆறு கல்லூரிகளையும்
- மத்திய பிரதேச அரசு ஒரு கல்லூரியையும்
- மகாராஷ்டிர அரசு மூன்று கல்லூரிகளையும்
- மனிப்பூர் அரசு ஒரு கல்லூரியையும்
- பாண்டிச்சேரி அரசு ஒரு கல்லூரியையும்
- ராஜஸ்தான் அரசு ஒரு கல்லூரியையும்
- தமிழ்நாடு அரசு ஏழு கல்லூரிகளையும்
- திரிபுரா அரசு ஒரு கல்லூரியையும்
- உத்திர பிரதேச அரசு ஒரு கல்லூரியையும்
- உத்திராஞ்சல் அரசு இரண்டு கல்லூரிகளையும்
- மேற்கு வங்க அரசு இரண்டு கல்லூரிகளையும் துவக்கியுள்ளது
கடந்த பத்தாண்டுகளில் அதிக அளவு அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டது தமிழ் நாட்டில் தான்
சொல்லப்போனால் 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் 20 சதம் (அதாவது ஐந்தில் ஒன்று) தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இந்த நூற்றாண்டில் தமிழகம் 7, ஆந்திரா 4, கர்நாடகம் 6, மகாராஷ்ட்ரா 3 என்று
20 கல்லூரிகள் இந்த நான்கு மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை
படிக்கும் போது உங்களுக்கு நமது உள்துறை அமைச்சர் கூறியது (
P. Chidambaram told U.S. Ambassador Timothy Roemer
that India would have registered higher growth rates if the country had
comprised only what are now its southern and western parts.) நினைவிற்கு
வருகிறதா
பின் குறிப்பு : குறுஞ்செய்திகளிலும், மின்னஞ்சல்களிலும், வலைத்தளங்கிலும்
அபாரமாக வளர்ந்து வரும் குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களின் அரசுகள் இந்த
நூற்றாண்டில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியை கூட துவக்கவில்லையா என்று
நீங்கள் கேட்டால் - - - ஹி ஹி ஹி என்பதை தவிர வேறு பதில் இல்லை