தாளமுத்து நடராசன் விருது பெற்றது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்
குவைத் நாட்டில் கடந்த பதினான்கு ஆண்டுகளாக குவைத் வாழ் தமிழ் மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் மக்களுக்கு கல்வி, சமயம், சமூகம், வேலை வாய்ப்பு, பொது நலன், ஆரோக்கியம், தேசியம், ஒருமைப்பாடு, விளையாட்டு போன்ற தளங்களில் பல்வேறு சேவைகளை சிறப்பாக செய்துக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு குவைத் செந்தமிழர் பாசறை, "மொழிப்போர் ஈகியர் தாளமுத்து நடராசன் விருது" அளித்து சிறப்பு சேர்த்தது.
செந்தமிழர் பாசறை குவைத் மண்டலத்தின் 11வது உள் அரங்க கூட்டம் மற்றும் 2019ஆம் ஆண்டிற்கான முதல் மாதாந்திர அரங்க நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை குவைத் அப்பாசியாவில் உள்ள தாஜ் ஆரியாஸ் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மொழிப்போர் ஈகியர் தாளமுத்து நடராசன் விருதை குவைத் செந்தமிழர் பாசறையின் தலைவர் வே. அருள் செபஸ்தி மற்றும் வளைகுடா நாடுகள் துணை ஒருங்கிணைப்பாளர் கல்யாண முருகேசன் ஆகியோர் வழங்க குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ பெற்றுக் கொண்டதுடன் தமிழர்களின் முகவரி தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவ்விருதில் "குவைத் தேசத்தில் வாழும் தமிழ் உறவுகளிடம் மத நல்லிணக்கத்தையும், தாய்மொழி தமிழையும் தொடர்ச்சியாக வளர்த்து வருகின்ற குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு "மொழிப்போர் ஈகியர் தாளமுத்து நடராசன்" நினைவாக பாராட்டு சான்றிதழை மகிழ்ச்சியுடன் வழங்குகின்றோம்" என குறிப்பிடுகிறது குவைத் செந்தமிழர் பாசறை.
நிகழ்ச்சியில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக்குழு செயலாளர் நீடுர் கே. முஹம்மது சித்தீக் உள்ளிட்ட குவைத்தின் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்றனர். பாசறையின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
https://www.facebook.com/q8tic/posts/2574482292625590
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
+965 9787 2482
www.k-tic.com