நெஞ்சை நிமிர்த்தும் சலீம்
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போல சிலர் லஞ்ச லாவண்யத்திற்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர். சகாயம் ஓரளவு அதிகாரம் மிகுந்த பொறுப்பில் லஞ்ச ஊழலுக்கு எதிராக அறப்போர் புரிகிறார் எனில் இந்தக் கட்டுரையின் கதாநாயகன் அப்துல் சலீம் உள்ளாட்சியில், பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரிந்து லஞ்ச ஊழலுக்கு எதிராக போர்ப்பரணி பாடி வருகிறார்.2014-ல் அவரது மேஜையில், மலையாள மொழியில் அறிவிப்பு ஒன்றை வைத்திருக்கிறார். உங்களுக்காக உழைக்க அரசாங்கம் நாளொன்றுக்கு 811 ரூபாய் தருகிறது. மாதத்திற்கு 24 ஆயிரத்து 330 ரூபாய் தருகிறது. எனது சேவையில் திருப்தி இல்லையென்றால் என்னிடம் நேரடியாகக் கூறுங்கள். இந்த வாசகங்கள் சமூக ஊடகங்களில் பரவி அவரை ஒரு கதாநாயகன் நிலைக்கு உயர்த்தியது.
http://makkalurimai.com/index.php/stories/20-india/558-abdul-saleem-govt-employee-kerala-anti-briber