தொலப்ப்பியத் தொடர்

56 views
Skip to first unread message

Selvi Shankar

unread,
Jun 18, 2008, 10:56:14 AM6/18/08
to tholka...@googlegroups.com
அன்பர்களே !!
 
தொடருவோம் - இதுவரை எழுதியதைப் படித்தேன் - நானும் தொடருகிறேன். வரவேற்பினை, புரிதலை, அங்கீகரித்தலை வைத்து மேலும் தொடருவோம்.

--
அன்புடன் ..... செல்வி ஷங்கர்

Selvi Shankar

unread,
Jun 18, 2008, 11:00:21 AM6/18/08
to tholkappiyam

chandramouli Ganapathy

unread,
Jun 18, 2008, 11:00:43 AM6/18/08
to tholka...@googlegroups.com
வாங்க செல்வி அம்மா. நீங்க எழுதணும் நாங்க படிக்கணும்...:)

2008/6/18 Selvi Shankar <selvish...@gmail.com>:

Selvi Shankar

unread,
Jun 18, 2008, 11:05:12 AM6/18/08
to tholkappiyam

அன்பர்களே !!

முதல் பதிவினிலேயே - அதுவும் தலைப்பினிலேயே
தட்டச்சுப் பிழை - வருந்துகிறேன் -

திருத்த வழி இல்லையா ?
> > --- Hide quoted text -
>
> - Show quoted text -

Jeevaa KS

unread,
Jun 19, 2008, 5:16:13 AM6/19/08
to tholka...@googlegroups.com

எந்தப் பதிவைக் குறிப்பிடுகிறீர்கள் ?
2008/6/18 Selvi Shankar <selvish...@gmail.com>:



--
*ஜீவ்ஸ்*

Jeevaa KS

unread,
Jun 19, 2008, 8:15:06 AM6/19/08
to tholka...@googlegroups.com


31 அ இ உ அம் மூன்றும் சுட்டு.


பெயரைச் சார்ந்து வரும் சுட்டெழுத்துக்கள் -

*( முடிந்த வரையில் நடை  முறையில் உள்ள) உதாரணம் தேவை *

32 ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.


வார்த்தைகளின் முடிவில் வினாவாக வரும் ?


*( முடிந்த வரையில் நடை  முறையில் உள்ள) உதாரணம் தேவை *

33 அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.



இது புரியல. உதாரணத்துடன் கொஞ்சம் விளக்கம் தேவை

அன்புடன்

J

Selvi Shankar

unread,
Jun 19, 2008, 1:11:03 PM6/19/08
to tholkappiyam
எடுத்துக்காட்டும் உரையும்
---------------------------------------------
31 : அ இ உ அம் மூன்றும் சுட்டு.

அ இ உ -என்ற இம்மூன்றும் பெயரைச் சார்ந்து வரும் சுட்டெழுத்துகளாகும். .
உ என்பது தற்போது வழக்கிலில்லை.

எ.கா : அது இது உது

அச்சிறுவன், இப்பெண், அவ்விடம், இவ்விடம், அப்பொருள், இப்பொருள்,
அக்காலம், இக்காலம், அவ்விலை, இவ்விதழ், அச்சிறப்பு, இப்புகழ்

32 : ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.

ஆ, ஏ, ஓ என்ற மூன்றெழுத்துகளும் வினா எழுத்துகளாக வரும்.

எ.கா : அவனா?, ஏன்?, ஏது?,அவளோ ?

33 : அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.

எழுத்துகள் தமக்கு விதிக்கப்பட்ட மாத்திரை அளவு கடந்து
ஒலித்தலும்,ஒற்றெழுத்துகள் தம் மாத்திரையிலிருந்து நீண்டொலித்தலும்
உண்டு.

விளித்தல் பொருளிலும் இசைப்பாடலிலும் இவ்வாறு ஒலிக்கும் என்று புலவர்
கூறுவர்.

எ.கா :கெடுப்பதூஉம், எடுப்பதூஉம், கலங்ங்கு, இலங்ங்கு, உழாஅர்.

பாடல்களில் எழுத்துகள் நீண்டு ஒலிப்பதுமுண்டு.

அன்புடன் ...... செல்வி ஷங்கர்

Hari Krishnan

unread,
Jun 19, 2008, 9:56:24 PM6/19/08
to tholka...@googlegroups.com


2008/6/19 Selvi Shankar <selvish...@gmail.com>:
எடுத்துக்காட்டும் உரையும்

32 : ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.

ஆ, ஏ, ஓ என்ற மூன்றெழுத்துகளும் வினா எழுத்துகளாக வரும்.

எ.கா : அவனா?, ஏன்?, ஏது?,அவளோ ?
 
ஆ ஏ ஓ என்று வினவுப் பொருளில் பயன்படும் என்றால், அவை சொற்களின் இறுதி ஒலியாக ஒலிக்கும் என்பது சூத்திரத்தால் சுட்டப்படும் விதி.
 
அவனா, அவனோ என்பன போலவே,
 
அப்படியும் ஆனதே?
போனதும் உண்டே?
 
என்றெல்லாமும் வினா வகைகள் வழக்கில் இருந்தன. அப்படி வினா எழுப்பும் வழக்கம் இப்போது அருகிவிட்டது என்றாலும்,
 
'ஏண்டா இப்படி மொறைக்கற?  இப்ப என்ன சொல்லிட்டேன்?  எதுக்கு இவ்ளோ கோவம்?'
 
'பின்னே? நான் இவ்ள நேரம் இங்க காத்திட்டிருக்கேன்... என்னப் பாக்கவே பாக்காம பராக்குப் பாத்துட்டிருந்தா?'
 
இந்த உரையாடலில், 'பின்னே?' என்ற இடத்தில் ஏகாரம் வினாவாக எழுகிறது அல்லவா, அதுபோன்ற இடங்களில் சிலசமயங்களில் தற்போதும் ஏகாரம் வினாவாகப் பயன்படுவது உண்டு. 
 
ஏன் ஏது என்ற எடுத்துக்காட்டுகள் இங்கே பொருந்தா.  மொழியீற்று ஒலிகள் அவை.  (அதாவது ஒரு வார்த்தைக்குக் கடைசியில் ஒலிக்கும் ஒலி.)  ஏன், ஏது என்பன வார்த்தையின் தொடக்கத்தில் ஒலிக்கும் ஒலிகள். 

--
அன்புடன்,
ஹரிகி.

ஆயில்யன்

unread,
Jun 20, 2008, 2:38:49 AM6/20/08
to tholka...@googlegroups.com
தமிழ் இலக்கணம் சம்பந்தமான இந்த தகவல்களால் திரும்பவும் நான் மாணவன் ஆகின்றேன்!
 
தமிழ் இலக்கணத்தில் இலக்கு இல்லாது ஏனோதானேவென்று படித்து முடித்த வருடங்கள் இப்போது என்னை வருத்தப்படவைக்கின்றன!
 
 
ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கின்றேன்!
 


 
2008/6/20 Hari Krishnan <hari.har...@gmail.com>:

Selvi Shankar

unread,
Jun 23, 2008, 1:43:20 PM6/23/08
to tholkappiyam
வினா எழுத்துகள் அகவினா புறவினா என இரு வகையிலடங்கும்.
ஏன் ஏது என்பது அகவினா - பிரிக்க முடியாதது - பிரித்தால் பொருளில்லை
அவனே - அவனா - பின்னே - அவனோ - என்ற சொற்களில் வினா எழுத்துகள் பிரிந்து
பொருள் தரும். இது புற வினா

பிரிக்க முடியாதது - அக வினா
பிரிக்க முடிந்தது - புற வினா

அன்புடன் .... செல்வி ஷங்கர்
-----------------------------------------------------

On Jun 20, 6:56 am, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/6/19 Selvi Shankar <selvishanka...@gmail.com>:

Selvi Shankar

unread,
Jun 23, 2008, 1:45:48 PM6/23/08
to tholkappiyam
இப்பதிவினில் "ஏன் ஏது என்பது" என்பதை " ஏன் ஏது என்பன" என்று திருத்திப்
படிக்கவும்

செல்வி ஷங்கர்
------------------------------

> > ஹரிகி.- Hide quoted text -

Hari Krishnan

unread,
Jun 25, 2008, 10:42:14 PM6/25/08
to tholka...@googlegroups.com


2008/6/23 Selvi Shankar <selvish...@gmail.com>:

வினா எழுத்துகள் அகவினா புறவினா என இரு வகையிலடங்கும்.
 
விளக்கத்துக்கு நன்றி.
 
அகவினா, புறவினா என்பனவற்றை வரையறுக்கும் தொல்காப்பிய அல்லது நன்னூல் சூத்திரங்கள் எவை?  எந்தப் பிரிவில் இவை இடம்பெறுகின்றன? 

Selvi Shankar

unread,
Jun 26, 2008, 11:19:42 AM6/26/08
to tholkappiyam
ஹரிகி,

நன்னூல் எழுத்ததிகாரம்விளக்க உரையில் இவற்றுக்கு விரிவான சான்றுகள்
உள்ளன.

நூற்பா : 67

எ யா முதலும் ஆ ஓ ஈற்றும்
ஏ இருவழியும் வினாவா கும்மே ! - ந.சூ

தொல்காப்பியத்தில் நூற்பா : 32

ஆ ஏ ஓ அம்மூன்றும் வினா என்று மட்டுமே உள்ளது. சான்றுகளினால் அகவினா
புறவினா என இங்கு உணரப்படும்.

அன்புடன்
செல்வி ஷங்கர்
-----------------------------------------------------------------
On Jun 26, 7:42 am, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/6/23 Selvi Shankar <selvishanka...@gmail.com>:
Reply all
Reply to author
Forward
0 new messages