ஓம்

24 views
Skip to first unread message

போதிசத்துவர்

unread,
Mar 2, 2010, 12:05:11 AM3/2/10
to thiyanam
“ஓம்” மந்திரம் உலகில் தோன்றிய முதல் ஒலியாகக் கருதப்படுகிறது.
வேதங்களும், அதைப் பின்பற்றும் உபந்யாசர்கள், ரிஷிகள், ஞானிகள், யோகிகள்
அனைவரும் இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. அது கடவுளின் ஒலி வடிவம்
என்றும் பல இடங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. இது உண்மைதானா? உண்மை
என்றால் எத்தனை பேருக்கு இதை உண்மை என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய மனோபாவம்
உள்ளது? இன்றைய காலத்தில் கல்வி கற்று தர்க்க அறிவு வளர்ந்துவிட்டதால்
எதையும் நம்பாத சூழல் வளர்ந்துள்ளது. இந்தச் சூழல் மூட நம்பிக்கைகளை
ஒழிக்க முற்பட்டாலும் பலர் உண்மையையும் சேர்த்தே ஒழிக்கிறார்கள். “ஓம்”
மந்திரத்தின் பலன் பற்றி பல இடங்களில் பேசப்பட்டாலும், அதன் தோற்றம்
பற்றிய கேள்வி எனது நட்பு வட்டாரத்தில் எழுந்ததனால் விளைந்த கட்டுரை இது.

“ஓம்” தான் முதல் ஒலியா? அதை எப்படி நம்புவது?

நம்முடைய தமிழ்த் தாத்தா “வள்ளுவர்” நமக்காக திருக்குறளைக் கொடுத்து
இருக்கிறார். அது உலகம் முழுவதுக்கும் பொதுவான விதிகளைக் கொடுத்துள்ளது
என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் முதல் குறளில் இருந்தே என்
பயணத்தைத் துவக்குகிறேன்.

முதல் குறள்:

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.”

பொருள்:

உலகில் வழங்கி வரும் எல்லா எழுத்துகளும் “அ” என்ற எழுத்தை முதலாக உடையன.
அது போல உலகம் கடவுளை முதன்மையாக உடையது.

உங்களில் பலருக்கு இது ஏதோ பரிட்சைக்குப் படித்து எழுதுவது என்பது
போலத்தான் இருக்கும். இங்கு உள்ள இரண்டு வரிகளும் உங்களுக்கு மிக்க
பரிட்சையமான ஒன்றே. அதற்கு உண்டான விளக்கமும் நீங்கள் அறிந்ததே. ஆனால்
எத்தனைபேர் இதை ஆழமாக உணர்ந்தீர்கள்?

1. அதெப்படி அனைத்து எழுத்துகளுக்கும் “அ” முதல் ஆகும்?

2. தமிழில்தான் முதல் எழுத்து “அ”. உலகில் உள்ள மற்ற எல்லா மொழிகளுக்கும்
முதல் எழுத்து “அ” கிடையாது. பின்னர் எப்படி இந்தக் கூற்று உலகம்
முழுவதுமாக (2000 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து இன்றுவரை)
ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அதற்கான விளக்கத்தை என்னால் முடிந்தவரை உங்களுக்குப் புரியவைக்கிறேன்.

முதலில் எழுத்து என்பது என்ன? மனிதன், தான் உச்சரிக்கும் ஒலியின்
குறியீடுதான் எழுத்து. அதாவது “க” என்ற உங்கள் உச்சரிப்பைக் (ஒலியை)
குறிக்க பயன்படுத்துவதே “க” என்ற எழுத்து. அப்படியானால் வள்ளுவர் சொல்ல
வருவது உலகில் உள்ள எல்லா ஒலிக்கும் “அ” என்ற ஒலியே ஆதாரம். (மூலம்;
அதாவது source, origin). இது எப்படி உண்மை? மனிதன் எழுப்பும் ஒலியை
விடுங்கள், நாம் இன்னும் சற்று ஆழமாகச் செல்வோம். நாம் உயிர் வாழ ஆதாரத்
தேவையான காற்றை எடுத்துக் கொள்வோம். காற்று மலைகளின் மேல் மோதி எழுப்பும்
ஓசை என்னவாக இருக்கும்? சற்று யோசித்தால் உங்கள் அனைவராலும் அதை ஊகிக்க
முடியும். முதலில் “அ”, பின்னர் “உ” இவை இரண்டும் கலந்த கலவையாக
இருக்கும். முதலில் “அ” தான், பின்னர் தான் “உ”. ( காற்றின் ஒலி “உஸ்ஸ்”
என்று சொல்ல முனையாதீர்கள். அடைத்து வைத்த காற்று வெளிவந்தால்தான்
அவ்வாறு ஒலிக்கும் ). “அ” என்ற ஒலியை எழுப்ப முயலும்போது உதடுகளைக்
குறுக்கினால் வருவது “உ”. (உச்சரித்து பாருங்கள், உண்மை புரியும்).
காற்று மலைகளின் மேல் மோதும்போது “அ”, அது பின்னர் குறுகிய பாதையிலோ
அல்லது கீழிறங்கினாலோ “உ” என்ற ஒலி பிறக்கும்.

(காற்றின் ஒலியை ஊகிக்க முடியாதவர்களுக்கு, ஒரு செயல்முறை விளக்கம்: ஒரு
காலி சொம்பு அல்லது டம்ளர் அல்லது சிறிய பாட்டிலை எடுத்துக் கொள்ளவும்.
அதை, உங்கள் காதை முழுமையாக மூடியவாறு வைத்து அப்போது வரும் சத்தத்தைக்
கவனியுங்கள். எழும் ஒலி “உ”-ஆக இருக்கும். இப்போது அந்தப் பொருளை சிறிது
வெளியே எடுத்தும் மீண்டும் காதின் அருகே கொண்டு சென்றும் பாருங்கள்.
மீண்டும் மீண்டும் இதையே செய்து பாருங்கள். “அ” மற்றும் “உ” ஒலிகளை
நீங்கள் கேட்கலாம். உங்கள் காதருகே கொண்டு செல்லும்போது காற்று குறுகிய
பாதைக்குள் செல்வதால் “உ”, வெளியே எடுக்கும்போது விரிந்த பாதையில்
செல்வதால் “அ”. இயல்பான காற்று விரிந்த பாதையில்தான் இருக்கிறது. ஆகவே
முதல் ஒலி “அ” தான் என்பது உறுதி.)

இதையே வள்ளுவர் எல்லா எழுத்துகளுக்கும் (ஒலிகளுக்கும்) முதல் “அ”
என்றார். இத்தனை ஆழமான கருத்தை சொல்ல வள்ளுவர் எடுத்துக் கொண்டது மூன்று
வார்த்தைகள் மட்டுமே. இது இம்மையைப் ( இவ்வுலகம்) பற்றிய உண்மை.
மறுமையைப் (மறுவுலகம்) பற்றிய உண்மையைக் கூற மீதி நான்கு வார்த்தைகளை
எடுத்துக் கொண்டார். இந்த அளவிற்கு நுண்மையாக வள்ளுவர் ஆராய்ந்து
இருப்பதால்தான்,

“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள். “

என்றார் ஒளவையார்.

இவர் மட்டுமல்ல, உலகமே இன்றளவும் வள்ளுவன் சொன்ன கருத்துகளை ஏற்றுக்
கொள்கிறது. திருக்குறள் முக்காலத்துக்கும் சொல்லப்பட்ட உண்மை.

(அறிவியல் ஆதாரம்: பூமியில் முதலில் இருந்தது காற்றும் பாறையும் (மலை)
மட்டுமே. நிலம் என்ற ஒன்று இருந்தால் ஆகாயம் என்பது “default”. காற்று
குளிர்ந்தால் நீர். கல்லும் கல்லும் மோதினால் நெருப்பு. (முதலில்
நெருப்பில் இருந்து பிறந்த கல்தான் பூமி என்பது தனிக் கதை). நீரில்
இருந்து தான் உயிர்கள்.)

“அ” மற்றும் “உ” என்ற இரண்டு ஆதார ஒலிகளைப் புரிந்துகொண்ட நாம் அடுத்து
செல்லவிருப்பது “ம்” ஒலிக்கான ஆராய்ச்சி.

இந்தப் பிரபஞ்சமே அதிர்வுகளால் ஆனது என்பது அறிவியல் கூற்று. இயக்கம்
அல்லது வடிவம் என்ற ஒரு இருந்தாலே அதிர்வு என்பது நிச்சயம். இந்த அதிர்வை
(ஒலியை) எவ்வாறு குறியீடு செய்ய முடியும்? மனிதனால் கேட்க கூடிய
ஒலியளவில் இருந்தே ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். ஒரு மெல்லிய நீண்ட கம்பியை
எடுத்துக் கொள்வோம். அதன் இரு முனைகளையும் நீட்டிப் பிடித்து அதன்
நடுவில் மெதுவாகத் தட்டி அதிர்வை ஏற்படுத்தினால் எழும் ஒலியில் “ம்” என்ற
ஒலி பிரதான பங்கு வகிப்பதை உணர முடியும். ஆக அதிர்வுகளின் ஒலி வடிவம்
“ம்”. (தனியே அமர்ந்து “ம்” என உங்களால் முடிந்தவரை சத்தமாக
நீண்டநேரத்திற்கு (அடிவயிற்றில் இருந்து ) ஒலித்துப் (சொல்லி) பாருங்கள்.
உடலின் எந்த ஒரு பாகத்தின் அசைவும் இல்லாமல் (ஏன், நாக்கை கூட அசைக்கத்
தேவை இல்லை) நீங்கள் உங்கள் உடல் முழுவதும் ஓர் அதிர்வை உணரலாம்.)

ஒலிகளுக்கு எல்லாம் முதலாவதான “அ”, பின்னர் “உ”, பின் உடல் முழுவதும்
அதிர்வை ஏற்படுத்தும் “ம்” இவை மூன்றும் சேர்ந்தால் “அஉம்” . இதுவே
பின்னர் மருவி ” ஓம்” ஆனது. (”அ”, “உ” இரண்டையும் சேர்த்துச் சொன்னாலே
அது “ஒ” போல்தான் இருக்கும்.) இதைத்தான் உயிர்களுக்கு ஆதார ஒலி “ஓம்”
என்கிறது இந்து மதம்.

(அட! ஓர் ஆச்சர்யம்! ….. ஆன்மிகம் என்பது உடல், உயிர் சக்தியை
மேம்படுத்தி மனிதன் தன் வாழ்வில் இன்புற்று இருக்க வழி காட்டுவதே ஆகும்.
“ஓ” என்பது உயிர் எழுத்து, “ம்” என்பது மெய் (உடல்) எழுத்து. ஏதோ புரிகிற
மாதிரி இருக்கிறதா? புரிந்துகொள்ள முயலாமல் நீங்கள் கொட்டாவி சத்தமாகவோ/
சத்தமில்லாமலோ விட்டால்கூட வரும் ஒலி ” அ…..உ….ம்” தான்.)

“ஓம்” தான் உயிர்களின் ஆதார ஒலி; இந்த “ஓம்” என்ற ஒலி நம் பிராண
சக்தியோடு நெருங்கிய தொடர்பு உடையது. அந்தத் தொடர்பு பற்றி அறிய
விவேகானந்தர் கருத்துகள் உதவும்.

Reply all
Reply to author
Forward
0 new messages