Re: [MinTamil] திருவள்ளுவர் திருக்குறள், பாயிர ஆராய்ச்சி -- வ. உ. சிதம்பரம் பிள்ளை

176 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 19, 2017, 10:42:14 AM11/19/17
to mintamil, vallamai, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan
வணக்கம்.

பாயிரம் நூலுக்கு முன்னுரைதிருக்குறளின் 1) கடவுள் வாழ்த்து 2) வான் சிறப்பு 3) நீத்தார் பெருமை 4) அறன் வலியுறுத்தல் என்ற முதல் நான்கு அதிகாரங்களில் உள்ள நாற்பது குறட்பாக்களே பாயிரம் என்று அழைக்கப்படுகின்றன,
பாயிர அதிகார அமைப்பு முறை
 ஐயன் திருவள்ளுவரின், இறைவன் பற்றிய கருத்துக்கள் பெரும்பாலானவற்றைப் பாயிரத்தின் முதல் அதிகாரத்தில் மட்டுமே காணலாம், பாயிர அதிகார அமைப்பு முறையில் கடவுள் வாழ்த்திற்குப் பின் இரண்டாம் அதிகாரமாக வான் சிறப்பும்.  மூன்றாம் அதிகாரமாக நீத்தார் பெருமையும். நான்காம் அதிகாரமாக அறன் வலியுறுத்தலும் கூறப்பட்டுள்ளது,  இந்த அதிகார அமைப்பு முறையை ஆராயாத அறிஞர்களே இல்லை எனலாம்,
முதல் அதிகாரமாகக் கடவுள்வாழ்த்தும், இரண்டாம் அதிகாரமாக வான் சிறப்பும்,  மூன்றாம் அதிகாரமாக நீத்தார் பெருமையும், நான்காம் அதிகாரமாக அறன் வலியுறுத்தலும் பாடப் பெற்றதன் காரணம் இதுநாள் வரை ​தெளிவாக அறியப்பட வில்லை, 
இவ்வாறான பாயிர அமைப்புமுறை தமிழ் மொழியின் பிறநூல்கள் எதிலும் காணப்பட வில்லை,  பிறநாட்டு நூல்களிலும் மற்ற பிறமொழி நூல்களிலும் இம் முறை இல்லை,
பாயிர அமைப்பு முறைபற்றி அறிஞர்களின் கருத்து1) கொடிநிலை. கந்தழி. வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன ஸ்ரீன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – என்ற தொல்காப்பிய இலக்கணத்துடன் ஒப்பிட்டும்
2) நன்னூல் கூறும் பாயிர இலக்கணத்திற்கு ஒப்ப திருக்குறள் பாயிரம் அமைக்கப்படவில்லை எனவும்.
3) கடவுள் வாழ்த்து என்பது அருக சரணம்
   வான் சிறப்பு என்பது சித்த சரணம்
   நீத்தார் பெருமை என்பது சாது சரணம்
   அறன் வலியுறுத்தல் என்பது தர்ம சரணம்
 என்றும்
4) "பாயிரமல்லது பனுவலன்று்" - பாயிரம் இல்லாதவை நூல்களே அல்ல என்பதால்  திருக்குறளுக்குப் பிற்சேர்க்கையாக இப்பாயிரம் சேர்க்கப்பட்டது என்றும்
5) பாயிரத்தைச் சைனசமய வழிபாட்டுடன் ஒப்பிட்டும் பொருள் கண்டுள்ளனர்,

முதல் முப்பது குறள்களும்  திருவள்ளுவர் இயற்றியதே அல்ல.  பிற்காலத்தில் சேர்க்கப்பட்டன என்ற ஒரு கருத்தும் கப்பலோட்டிய தமிழன் வ,உ,சி, யிடம் இருந்தது,
மேலே குறிப்பிடப்பெற்றுள்ள எதிர்மறைக் கருத்துகள் அனைத்தும் அப்படியே ஏற்பதற்கல்ல என்று தக்க சான்றுகளுடன் அறிஞர் பெருமக்கள் நிறுவியுள்ளனர்,
மெய்ப்பொருள் காண்பதே ஆய்வு


நான்கு அதிகாரங்களும் நான்கு திசை தெய்வங்களையும் வணங்கி எழுதப்பட்டன.  இந்த நான்கு அதிகாரங்களும் நான்கு வேதங்களின் சாரம் ஆகும்.


அன்பன்
கி.காளைராசன்


2017-11-18 8:36 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தமிழ்ப் பொழில் இதழ்களில்  வ. உ. சிதம்பரம் பிள்ளை  எழுதிய திருக்குறள் கட்டுரைகள்.

பாயிரவியல்
கடவுள் வாழ்த்து
வான்சிறப்பு
நீத்தார் பெருமை
அறன்வலியுறுத்தல்

திருவள்ளுவர் திருக்குறள், பாயிர ஆராய்ச்சி -- வ. உ. சிதம்பரம் பிள்ளை

I
பாயிர ஆராய்ச்சி, திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல (பக்கம்-233) என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து.   தமிழ்ப் பொழில் (5/6), பக்கம்: 232-237.

II
பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. 'வழிபடு கடவுள் வாழ்த்து' (நூலாசிரியர் கடவுளை  வணங்கி வேண்டுதல்), 'ஏற்புடைக் கடவுள் வாழ்த்து' (நூலை வாசிப்பவர் கடவுளை வணங்குவதற்காக எழுதப்படுவது) என இருவகைப்படும். திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம் வள்ளுவரால் எழுதப்பட்டதல்ல . தமிழ்ப் பொழில் (5/9&10), பக்கம்: 329-334.

III
பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. தொல்காப்பிய இலக்கணத்தைப்  பின்பற்றிய வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் காணப்படுவது போன்று மெய்ப்பொருளை உயர்திணை ஆண்பாலாகக் குறிப்பிட வழியில்லை.  மெய்ப்பொருளை மனித உருவாக, அது தாள் முதலியவற்றை கொண்டதாகக் காட்டுவதும் பொருந்தவில்லை. சொற்குற்றம், பொருட்குற்றம் கொண்ட இக்குறட்பாக்களை வள்ளுவர் இயற்றினார் என்று கூறுவது, வள்ளுவரைப் புலவரல்லர் என்று கூறுவதற்கு ஒப்பாகும். தமிழ்ப் பொழில் (5/11&12), பக்கம்: 447-455.

IV
பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து; வேண்டுதல் வேண்டாமை குணநலன்கள் இல்லாதிருப்பது கடவுளின் இலக்கணமா?  அல்லது துறவியின் இலக்கணமா?  சொற்குற்றம் பொருட்குற்றம் கொண்ட "வேண்டுதல் வேண்டாமை"   குறளை வள்ளுவர் எழுதியிருக்க வழியில்லை.  அவ்வாறே, "இருள் சேர் இருவினையும் சேரா", "பொறி வாயில் ஐந்தவித்தான்"  ஆகிய குறள்கள் இறைவனைக் குறிக்கவில்லை, துறவியைக் குறிக்கின்றன  என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. தமிழ்ப் பொழில் (6/11&12), பக்கம்: 456-462.



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 20, 2017, 11:44:31 AM11/20/17
to mintamil, Kalai Email, vallamai, Oru Arizonan, naga rethinam, thiruppuvanam

வணக்கம்.

வடதிசை என்பது அறத்திற்கானதாகும்.  இதில் மாற்றம் இல்லை.
ஆனால் பின்னாளில் குபேரன் இலங்கையிலிருந்து இமயம் சென்று விட்டபடியாலும், வீரபாண்டின் வடக்கே சென்று மேருவைச் செண்டால் அடித்துப் பொதிந்திருந்த பொன்னை எடுத்து வந்த காரணத்தாலும் வடதிசையானது செல்வத்திற்கும் ஆனது.

வள்ளுவர் வடதிசையை அறத்திற்கு மட்டுமே கொண்டு, அன்ற்வலியுறுத்தல் பாடியுள்ளதால்,  திருக்குறளின் காலம் குபேரனுக்கும் முந்தியது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

திருக்குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் திசைதெய்வங்களை வணக்கிப் பாடப்பட்டுள்ளன என்பதை இன்னும் விரிவான விளக்கங்களுடன் வீடு திரும்பியதும் எழுதுகிறேன்.

அத்துடன் தாங்கள் குறிப்பிடும்
தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்பத் தொல்காப்பியத்தின் பாயிரமே அமைந்துள்ளதா ?
இது இப்படி யிருக்கத் திருக்குறளின் பாயிர அதிகாரங்களை தொல்காப்பிய நூற்பாவுடன் ஒப்பிடுவதால் ஏற்படும் பிழைகளையும் எழுத முற்படுகிறேன்.

அன்பன்
கி. காளைராசன்

Reply all
Reply to author
Forward
0 new messages