
தமிழ்ப் பொழில் இதழ்களில் வ. உ. சிதம்பரம் பிள்ளை எழுதிய திருக்குறள் கட்டுரைகள்.--பாயிரவியல்கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமைஅறன்வலியுறுத்தல்திருவள்ளுவர் திருக்குறள், பாயிர ஆராய்ச்சி -- வ. உ. சிதம்பரம் பிள்ளைIபாயிர ஆராய்ச்சி, திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல (பக்கம்-233) என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. தமிழ்ப் பொழில் (5/6), பக்கம்: 232-237.IIபாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. 'வழிபடு கடவுள் வாழ்த்து' (நூலாசிரியர் கடவுளை வணங்கி வேண்டுதல்), 'ஏற்புடைக் கடவுள் வாழ்த்து' (நூலை வாசிப்பவர் கடவுளை வணங்குவதற்காக எழுதப்படுவது) என இருவகைப்படும். திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம் வள்ளுவரால் எழுதப்பட்டதல்ல . தமிழ்ப் பொழில் (5/9&10), பக்கம்: 329-334.IIIபாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. தொல்காப்பிய இலக்கணத்தைப் பின்பற்றிய வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் காணப்படுவது போன்று மெய்ப்பொருளை உயர்திணை ஆண்பாலாகக் குறிப்பிட வழியில்லை. மெய்ப்பொருளை மனித உருவாக, அது தாள் முதலியவற்றை கொண்டதாகக் காட்டுவதும் பொருந்தவில்லை. சொற்குற்றம், பொருட்குற்றம் கொண்ட இக்குறட்பாக்களை வள்ளுவர் இயற்றினார் என்று கூறுவது, வள்ளுவரைப் புலவரல்லர் என்று கூறுவதற்கு ஒப்பாகும். தமிழ்ப் பொழில் (5/11&12), பக்கம்: 447-455.IVபாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து; வேண்டுதல் வேண்டாமை குணநலன்கள் இல்லாதிருப்பது கடவுளின் இலக்கணமா? அல்லது துறவியின் இலக்கணமா? சொற்குற்றம் பொருட்குற்றம் கொண்ட "வேண்டுதல் வேண்டாமை" குறளை வள்ளுவர் எழுதியிருக்க வழியில்லை. அவ்வாறே, "இருள் சேர் இருவினையும் சேரா", "பொறி வாயில் ஐந்தவித்தான்" ஆகிய குறள்கள் இறைவனைக் குறிக்கவில்லை, துறவியைக் குறிக்கின்றன என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. தமிழ்ப் பொழில் (6/11&12), பக்கம்: 456-462.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.
வடதிசை என்பது அறத்திற்கானதாகும். இதில் மாற்றம் இல்லை.
ஆனால் பின்னாளில் குபேரன் இலங்கையிலிருந்து இமயம் சென்று விட்டபடியாலும், வீரபாண்டின் வடக்கே சென்று மேருவைச் செண்டால் அடித்துப் பொதிந்திருந்த பொன்னை எடுத்து வந்த காரணத்தாலும் வடதிசையானது செல்வத்திற்கும் ஆனது.
வள்ளுவர் வடதிசையை அறத்திற்கு மட்டுமே கொண்டு, அன்ற்வலியுறுத்தல் பாடியுள்ளதால், திருக்குறளின் காலம் குபேரனுக்கும் முந்தியது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
திருக்குறளின் பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களும் திசைதெய்வங்களை வணக்கிப் பாடப்பட்டுள்ளன என்பதை இன்னும் விரிவான விளக்கங்களுடன் வீடு திரும்பியதும் எழுதுகிறேன்.
அத்துடன் தாங்கள் குறிப்பிடும்
தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்பத் தொல்காப்பியத்தின் பாயிரமே அமைந்துள்ளதா ?
இது இப்படி யிருக்கத் திருக்குறளின் பாயிர அதிகாரங்களை தொல்காப்பிய நூற்பாவுடன் ஒப்பிடுவதால் ஏற்படும் பிழைகளையும் எழுத முற்படுகிறேன்.
அன்பன்
கி. காளைராசன்