Re: என்னத்தைச் சொல்ல

1 view
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 22, 2019, 3:08:08 AM6/22/19
to Kalai Email, thiruppuvanam
தினமலர் செய்தி.
திருப்புவனம் : திருப்புவனம், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் முதியோர்கள் பலரையும் வெளி மாவட்டங்களில் இருந்து காரில் கொண்டு வந்து அனாதையாக விட்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.  திருப்புவனம் காசியை விட வீசம் அதிகம் என போற்றப்படும் புண்ணிய ஸ்தலமாகும். இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு காரியங்களை காசியில் செய்வதை காட்டிலும் திருப்புவனத்தில் செய்வது மிகவும் புண்ணியத்தை தரும் என இந்துக்கள் நம்புகின்றனர்.
திருப்புவனம் அருகே புகழ் பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் உள்ளது. இக்கோயிலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் பராமரிக்க முடியாத முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்டோரை இரவில் காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.சுயமாக எந்த காரியமும் செய்ய முடியாமல் உள்ள முதியோரை விட்டு செல்வதால் உணவு, தண்ணீர் இன்றி பரிதாபமாக அலைவது மிகவும் வேதனைக்குரிய செயலாக உள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் உணவு, தண்ணீர் கொடுப்பதால் ஓரளவிற்கு உயிர் பிழைத்து வரும் இவர்கள் பராமரிப்புஇல்லாததால் வெயிலிலும் குளிரிலும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். 
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தின் முன்கடந்த சில நாட்களுக்கு முன் முதியோர் ஒருவர் உயிரிழந்தார். மடப்புரத்திலும் ஒரு முதியவர் உயிரிழந்தார்.நேற்றுகாலை மடப்புரம் கோயில் வாசலில் காலணி பாதுகாப்பு அறையில் வயதான பெண் உயிரிழந்து கிடந்தார். வெள்ளிக்கிழமைஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் பெண்மணி இறந்தது பக்தர்களை வேதனைக்குள்ளாக்கியது.
.... ....
https://www.dinamalar.com/news_detail.asp?id=2303366

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 22, 2019, 9:45:13 AM6/22/19
to mintamil, Kalai Email, thiruppuvanam
ஐயா ‘இ’னா அவர்களுக்கு வணக்கம்.

On Sat, 22 Jun 2019 at 15:33, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
விசனம் தருவது மட்டுமல்ல; பயங்கரமான செய்தி.

ஆமாம் ஐயா.
இது போன்று இராமேசுரத்தில் நடக்கும்.
இப்போது திருப்பூவணத்திலும் மடப்புரத்திலும் நடக்கிறது😢

திருப்பூவணத்தில் இவ்வாறு கோயில் வாளாகம் அருகே அனாதையாகத் திரியும் முதியவர்களைக் காப்பாற்றி ஆதரவு அளிக்க இலவச முதியோர் இல்லம் ஒன்றை நண்பர் ஒருவர் துவக்கினார்.
ஆனால் அதில் பல சட்டச் சிக்கல்கள் தோன்றின.  
தினமும் முதியவர்களின் உடல்நலனைப் பார்த்துக் கொள்ள ஒரு மருத்துவரை நியமனம் செய்ய வேண்டுமாம்.
தீயணைப்புத்துறையினரின் அனுமதி பெற வேண்டுமாம்.
கட்டிடப் பொறியாளரின் அனுமதி பெற வேண்டுமாம்.
காவல்துறையினரின் அனுமதி பெற வேண்டுமாம்.
இவ்வளவையும் எளிதாகச் செய்ய இயலாமல் போனது.

அம்மையார் செயலழிதா அவர்களது ஆட்சியில் கோயில்களில் தினசரி அன்னதானத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இது போன்று,   திருப்பூவணம் முதலான முத்திதரும் கோயில்களில் முதியோர் காப்பகங்களைத் தமிழக அரசு துவக்கி நடத்திடலாம்.

அன்பன்
கி.காளைரசான்

-- 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 25, 2019, 12:46:21 AM6/25/19
to mintamil, Kalai Email, thiruppuvanam
தினமலர் செய்தி -
திருவாடானை: கிராம கணக்கை தர மறுத்ததால் அதிருப்தியடைந்த முதியவர், ஆணுறுப்பை அறுத்து மரத்தில் தொங்கவிட்டார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சிவனுார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் 60. இவர், அக்கிராமத்தில் உள்ள வேலாயுதசாமி கோயில் வரவு, செலவு கணக்கை கேட்டதாகவும், இதற்கு ஒரு தரப்பினர் கொடுக்க மறுத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த முருகன் கோயில் முறைகேடுகள் குறித்து இரு வெள்ளை பேப்பரில் எழுதி, அதை 100 ஜெராக்ஸ் எடுத்து கிராமத்தினரிடம் கொடுத்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் கோயில் முன்பு நின்றிருந்த முருகன் தனது ஆணுறுப்பை அறுத்து கோயில் முன்புள்ள மரத்தில் வைத்துவிட்டு மயங்கி கிடந்தார். கிராமத்தினர் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.டாக்டர்கள் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2305356

என்னத்தைச் சொல்ல ?  

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 29, 2019, 1:39:39 AM6/29/19
to mintamil, Kalai Email, thiruppuvanam
செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
தினத்தந்தி செய்தி - https://www.dailythanthi.com/News/Districts/2019/06/29004619/Awful-near-PudukkottaiCollege-student-trying-to-take.vpf

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 7, 2019, 10:04:33 AM7/7/19
to mintamil, Kalai Email, thiruppuvanam
வெள்ளைச்சாமி கொத்தனார் வேலை செய்து வருகிறார். மனைவி செல்லம்மாளும் கணவரோடு சேர்ந்து சித்தாள் வேலை செய்து வந்தார். வேலை முடித்து திரும்பும்போது மதுக்கடையில் இருவரும் சேர்ந்து மது வாங்கி வீட்டில் வைத்து குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு மாதவன் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார்.
தனது பெற்றோர் மது அருந்திவிட்டு அடிக்கடி சண்டை போடுவதால், அதே பகுதியில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு மாதவன் சென்று விடுவார். இந்நிலையில், வீட்டில் நேற்றிரவு வெள்ளைச்சாமி, செல்லம்மாள் ஆகியோர் மது அருந்திய நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, வெள்ளைச்சாமி தனது மனைவியை கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளத்தூர் காவல் நிலையத்தில், வெள்ளைச்சாமி சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://www.polimernews.com/view/69243-மனைவியை-கட்டையால்-அடித்துக்-கொன்ற-கணவர்..!

என்னத்தைச் சொல்ல  😢 
Reply all
Reply to author
Forward
0 new messages