கரிநாள் என்றால் என்ன?

52 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 30, 2014, 7:12:19 AM1/30/14
to mintamil, thiruppuvanam, Palanichamy Shanmugam

கரிநாள் என்றால் என்ன?

தினசரிநாட்காட்டிகளில், 

சித்திரை 6,15

வைகாசி 7, 16, 17

ஆனி 1,6

ஆடி 2, 10, 20

ஆவணி 2, 9, 28

புரட்டாசி 16, 29

ஐப்பசி 6, 20

கார்த்திகை 1, 4, 10, 17

மார்கழி 6, 9, 11

தை 1, 2, 3, 11, 17

மாசி 15, 16, 17

பங்குனி 6, 15, 19

என 35 நாட்களைக் கரிநாள் என்று குறித்துள்ளனர்.

இந்நாட்களில் விசேடங்கள் ஏதும் நடத்தக்கூடாது என்கின்றனர்.

இந்நாட்களில் கிழமை, திதி, கோள் (கிரகங்கள்), பட்சம் (வளர்பிறை தேய்பிறை) இவற்றின் அடிப்படையில் அமையால், நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன.  அதாவது எல்லா ஆண்டுகளிலும் இதே தமிழ்த் தேதியில் இந்நாட்கள் கரிநாட்களாகவே சொல்லப்படுகின்றன.


கரிநாட்கள் என்றால் என்ன?

ஏன் இந்நாட்களைக் கரிநாட்களாகக் குறிக்கின்றனர்?

அறிந்தோர் கூறி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


அன்பன்

கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 14, 2018, 11:07:17 AM12/14/18
to mintamil, thiruppuvanam
“கரி நாளை ‘மாத தியாஜ்ஜியம்’ என குறிப்பிடுவர். ‘தியாஜ்ஜியம்’ என்றால் ‘விலக்கப்பட வேண்டியது’ என்று பொருள். முகூர்த்த நூல்களில் லக்கின தியாஜ்ஜியம், வார தியாஜ்ஜியம், திதி தியாஜ்ஜியம், நட்சத்திர தியாஜ்ஜியம் என சுப காரியங்களுக்கு விலக்கப்பட வேண்டிய காலங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதுபோல் கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை.” 

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 14, 2018, 11:09:57 AM12/14/18
to mintamil, thiruppuvanam
“கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை”  என்பதால்,  இந்நாட்களில் பிரளயம் கடல்கோள் (சுனாமி) முதலான பேரழிவுகள் ஏற்பட்டுத் தமிழர்கள் பெரிதும் அழிந்து போன நாட்களாக இருக்கலாமோ? அதனால் இந் நாட்களை நினைவுநாட்களாகக் கருதித் தமிழர் துக்கம் அனுஷ்டிக்கின்றனரோ? என்ற ஐயம் எனக்கு.
உதாரணமாகச் 
சுனாமி வந்த டிசம்பர் 26ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,
கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,
இந்தக் கரிநாட்கள் தமிழரின் துக்கநாட்களாக இருக்குமோ?

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 15, 2018, 8:42:36 AM12/15/18
to mintamil, thiruppuvanam
On Fri, 14 Dec 2018 at 21:39, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
“கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை”  என்பதால்,  இந்நாட்களில் பிரளயம் கடல்கோள் (சுனாமி) முதலான பேரழிவுகள் ஏற்பட்டுத் தமிழர்கள் பெரிதும் அழிந்து போன நாட்களாக இருக்கலாமோ? அதனால் இந் நாட்களை நினைவுநாட்களாகக் கருதித் தமிழர் துக்கம் அனுஷ்டிக்கின்றனரோ? என்ற ஐயம் எனக்கு.
உதாரணமாகச் 
சுனாமி வந்த டிசம்பர் 26ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,
கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,
இந்தக் கரிநாட்கள் தமிழரின் துக்கநாட்களாக இருக்குமோ?

photo (2).JPG
காரணகாரியங்களை அறிந்தோ அறியாமலோ நாட்டுக்கோட்டை நகரத்தார் தொன்றுதொட்டுச் சில வழிபாடுகளை மரபு மாறாமல் செய்து வருகின்றனர்.  அதில் சிறப்பாகக் கருதவேண்டிய ஒன்று உள்ளது.  ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கல் அன்று, நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் “விளக்குச் சட்டி - விளக்கு எடுத்தல்” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.  இதில் முதுமக்கள்தாழி போன்று அடிப்பாகம் கூம்பு வடிவத்தில் உள்ள ஒரு சட்டிக்குள் அவர்களது முன்னோர்களுக்குப் படையல் வைத்து விளக்கையும் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.  பொங்கல் நாளான்று எல்லா நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் இவ்வாறு அவரவர் முன்னோர்களுக்குச் சட்டிக்குள்  படையல்இட்டு விளக்கு ஏற்றி வழிபடுகின்ற காரணத்தினால், அன்றைய தினமே நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முன்னோர்கள் பெரிதும் இறந்துபட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.  அதாவது அவர்கள் பூம்புகாரில் வாழ்ந்த காலத்தில் தை முதல்நாள் பொங்கல் நாளில் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.
கரிநாட்கள் என்றால் என்ன? 
கரிநாட்கள் ஏன் துக்கநாட்களாகக் கொண்டாடப்படுகிறது என்ற சிந்தனைகளுடன், 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 16, 2018, 2:20:24 AM12/16/18
to mintamil, thiruppuvanam, Kalai Email


On Sun, 16 Dec 2018 at 03:37, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Saturday, December 15, 2018 at 5:42:40 AM UTC-8, கி. காளைராசன் wrote:


On Fri, 14 Dec 2018 at 21:39, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
“கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை”  என்பதால்,  இந்நாட்களில் பிரளயம் கடல்கோள் (சுனாமி) முதலான பேரழிவுகள் ஏற்பட்டுத் தமிழர்கள் பெரிதும் அழிந்து போன நாட்களாக இருக்கலாமோ? அதனால் இந் நாட்களை நினைவுநாட்களாகக் கருதித் தமிழர் துக்கம் அனுஷ்டிக்கின்றனரோ? என்ற ஐயம் எனக்கு.
உதாரணமாகச் 
சுனாமி வந்த டிசம்பர் 26ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,
கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,
இந்தக் கரிநாட்கள் தமிழரின் துக்கநாட்களாக இருக்குமோ?

photo (2).JPG
காரணகாரியங்களை அறிந்தோ அறியாமலோ நாட்டுக்கோட்டை நகரத்தார் தொன்றுதொட்டுச் சில வழிபாடுகளை மரபு மாறாமல் செய்து வருகின்றனர்.  அதில் சிறப்பாகக் கருதவேண்டிய ஒன்று உள்ளது.  ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கல் அன்று, நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் “விளக்குச் சட்டி - விளக்கு எடுத்தல்” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.  இதில் முதுமக்கள்தாழி போன்று அடிப்பாகம் கூம்பு வடிவத்தில் உள்ள ஒரு சட்டிக்குள் அவர்களது முன்னோர்களுக்குப் படையல் வைத்து விளக்கையும் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.  பொங்கல் நாளான்று எல்லா நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் இவ்வாறு அவரவர் முன்னோர்களுக்குச் சட்டிக்குள்  படையல்இட்டு விளக்கு ஏற்றி வழிபடுகின்ற காரணத்தினால், அன்றைய தினமே நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முன்னோர்கள் பெரிதும் இறந்துபட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது.  அதாவது அவர்கள் பூம்புகாரில் வாழ்ந்த காலத்தில் தை முதல்நாள் பொங்கல் நாளில் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.


/////அவர்கள் பூம்புகாரில் வாழ்ந்த காலத்தில் தை முதல்நாள் பொங்கல் நாளில் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.//////



இங்கு புகாரின் அழிவோடு  கொண்டு இணைக்கப்படுவதால் எனது கருத்து...

மணிமேகலை கூறுவது - சோழன் இந்திரவிழா எடுக்கத் தவறியதால் ஆழிப்பேரலையால் புகாரைக் கடல் கொண்டது.

இது ஒரு வரலாற்றுக் குறிப்பு என்ற நிலைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அடுத்த படியாக இந்திரவிழா கொண்டாடப்பட்ட காலம் சித்திரைத்திங்கள் முழுநிலவு முதற்கொண்டு தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு.  இன்றும் இந்திரவிழாவின் எச்சமாக சித்திராபௌர்ணமி ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படுகிறது. 
நான் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் முழுமையாகப் படிக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்தவரையில்,
இந்திரவிழா கொண்டாடப்பட்ட காலம் சித்திரைத்திங்கள் முழுநிலவு முதற்கொண்டு தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு”  என்பதற்கு மணிமேகலையிலோ சிலப்பதிகாரத்திலோ சான்றுகள் இல்லை.  கடல்கோள் (சுனாமி) உண்டான நாள் பற்றியும் குறிப்புகள் இல்லை.
சான்றுகளைக் காட்டினால் நன்று.

 
 

மணிமேகலையின் அடி தொட்டுச் சென்றால்.....இந்திரவிழா சித்திரை என்றால் தையில் கொண்டாடப்படும் போகிக்கும் இந்திரவிழாவுக்கும் புகாரைக் கடல் கொண்டதற்கும் தொடர்புப்படுத்த இயலாது.  
ஏன்?
சித்திரைக்குப் பின்னரே தைமாதம் வருகிறது.
எனவே, மணிமேகலையில் இந்திரவிழா சித்திரை என்று கூறியிருந்தாலும்,
சித்திரையில் இந்திரவிழா நடத்தாத காரணத்தினால் தைமாதத்தில் கடல்கோள் ஏற்பட்டது என ஏன் கொள்ளக் கூடாது?


1) கடல்கோள் நாட்டுக்கோட்டை நகரத்தார் புகாரிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர்.
2) தை1 பொங்கல் நாளன்று நாட்டுக்கோட்டை நகரத்தார் அனைவரும் விளக்குச்சட்டியில் விளக்கு ஏற்றி அவர்களது முன்னோர்களை வழிபடுகின்றனர்.
3) இந்த விளக்குச்சட்டியானது அச்சுஅசலாக முதுமக்கள்தாழி போன்றே உள்ளது.
4)   பிரளயத்தில் மற்றொரு பிரளயம் கோர்த்ததாகப் புராணம் குறிப்பிடுகிறது.  அதாவது அடுத்தடுத்துக் கடல்கோள்கள் நடைபெற்றுள்ளன.
5) கரிநாட்கள் தை1,2,3 என அடுத்தடுத்த நாட்களில் உள்ளது.
இந்தக் காரணிகளால் நான் சுனாமி உண்டான நாள் தை1 ஆக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages