காது குத்தலுக்கு தேவர் அளித்த விளக்கம்

35 views
Skip to first unread message

Thevan

unread,
Jun 18, 2012, 7:39:57 AM6/18/12
to anb...@googlegroups.com, beyo...@googlegroups.com, canad...@googlegroups.com, currentt...@googlegroups.com, dinamo...@googlegroups.com, eelatami...@googlegroups.com, elanth...@googlegroups.com, ethi...@googlegroups.com, germa...@yahoogroups.com, housto...@googlegroups.com, il...@googlegroups.com, indonesia...@googlegroups.com, indray...@googlegroups.com, kee...@googlegroups.com, malaysianta...@googlegroups.com, minT...@googlegroups.com, musli...@googlegroups.com, mutht...@googlegroups.com, naalo...@googlegroups.com, naamt...@googlegroups.com, nallana...@googlegroups.com, namak...@googlegroups.com, namb...@googlegroups.com, namtho...@googlegroups.com, nanji...@googlegroups.com, oviyat...@gmail.com, paga...@googlegroups.com, panb...@googlegroups.com, periyarvizhippuna...@googlegroups.com, pira...@googlegroups.com, puduvai...@googlegroups.com, save-...@googlegroups.com, sira...@googlegroups.com, Tamil2...@googlegroups.com, tamila...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamilmusl...@googlegroups.com, tamiln...@googlegroups.com, thamil...@yahoogroups.com, thamiz...@googlegroups.com, thamizhe...@googlegroups.com, thami...@googlegroups.com, thamizh...@googlegroups.com, thami...@googlegroups.com, thantha...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, thiruma...@googlegroups.com, unita...@googlegroups.com, vijaymakk...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamilmanram, உலகத்தமிழ், தமிழாயம்
முத்துராமலிங்கத் தேவர் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது... தெய்வ பக்தி மிகுந்தவர். அவரது சமகாலத்து அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

சிவகங்கை மன்னர் சண்முகராஜாவின் மகன் கார்த்திகேய வெங்கடாஜலபதி ராஜாவின் காதணி விழாவில் கலந்து கொண்டு, தேவர் பேசினார். அவரது அந்தப் பேச்சு, எந்தத் தொகுப்பிலும் இதுவரை வெளிவரவில்லை... எதிர்பாராத விதமாக என்னிடம் சிக்கியது அந்த தொகுப்பு. பேச்சில் இருந்து ஒரு பகுதி...

காது குத்தல், கல்யாணம் என்ற வைபவம் தமிழன் மட்டுமே ஒரு தெய்வ வழிபாடாகக் கொண்டாடும் வைபவம். சிவகங்கை அரண்மனையில் கோலாகலமாக நடத்தப்பட வேண்டிய இந்த வைபவம், தென்னவராயன் புதுக்கோட்டை கிராமத்தில், பொட்டலில் அமைந்திருக்கும் அய்யனார் கோவிலில் ஏன் நடக்கிறது?

தமிழன் இறை பக்தி மிகுந்தவன். தனக்குக் குழந்தை பிறந்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து தன் குழந்தையின் 
முகமண்டலத்தைப் பார்க்கிறான்; மூக்கை பார்க்கிறான்; அழகான வாயைப் பார்க்கிறான்.
அதே சமயம், குழந்தையின் காதைப் பார்க்கிறான்; அதன் வடிவத்தைப் பார்க்கிறான். தனக்கு இந்த குழந்தை பாக்கியத்தை அளித்த இறைவனின் ஓங்கார வடிவமாக காது அமைந்திருப்பதை எண்ணி மகிழ்கிறான்.

ஓங்கார வடிவமாக அமைந்துள்ள ஆண்டவனுக்கு நன்றி செலுத்த எண்ணி, தன் குழந்தைக்கு முதன், முதலாக கொண்டாடும் வைபவத்தை, காது குத்து கல்யாணமாக நடத்தி, ஓங்கார வடிவத்திற்கு நிரந்தர காணிக்கையாக, தங்கத்தாலான ஒரு ஆபரணத்தை காதில் அணிவித்து, அதையே ஒரு விழாவாக நடத்துகிறான்.

கடவுள் நாத வடிவம்; அந்த நாதத்தை அறிவது காது தான். காதின் வழியாகத் தான் ஆதிகாலத்தில் மனிதன் ஞானம் பெற்றான். அதை உணர்ந்து காதணி வைபவத்தை இறைவனுக்குச் செய்யும் தொண்டாக எண்ணினான் தமிழன்.
வினாயகரை வணங்கும் போது, "துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!' என்று வணங்குகிறான். பிள்ளையாரை ஞானக் கடவுளாகத் தமிழன் உணர்ந்து, தான் வணங்கும் போது, இரு காதுகளையும் இழுத்து வணங்கி, தலையில் குட்டிக் கொள்கிறான், ஏன்?

பழங்காலத் தமிழன் உடற்கூறு சாத்திரத்தை நன்குணர்ந்தவன். காதின் வழியாகச் செல்லும் சிறு நரம்புகள் இயங்கித் தான், தலையில் இருக்கும் மூளைக்கு ஞானம் செல்கிறது என்பதை உணர்ந்திருந்தான்.

ஆசிரியரிடம் படிக்க, குழந்தையை சேர்க்கும் தாய், "ஐயா, நல்லா காதை திருகி, தலையில் குட்டி சொல்லிக் குடுங்க...' என்பாள். ஏன் காதை திருகச் சொல்ல வேண்டும்? தலையில் குட்டச் சொல்ல வேண்டும்?

காதிற்கு சுறுசுறுப்பு ஏற்படுத்தி, தூங்கும் மூளையை எழுப்பி விடத்தான் காதை முறுக்கி, தலையில் குட்டச் சொல்கின்றனர். மூக்கைத் திருகவோ, கையை முறுக்கவோ சொல்வதில்லை!

— இப்போதெல்லாம் பள்ளியில் மாணவன் காதை வாத்தியார் திருகி, தலையில் குட்டினால், பெற்றோர் கச்சை கட்டி சண்டைக் கோழியாக அல்லவா மாறி விடுகின்றனர்.

--


அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு நாட்டில் நீதி வழங்குவதற்கான ஏற்பாடாகும். - அரிஸ்டாட்டில்


Regards,

Thevan, 
Mumbai.

 


Sridhar Kannan

unread,
Jun 18, 2012, 8:51:12 AM6/18/12
to thiruma...@googlegroups.com
இந்த செய்தியை எவன் கேட்டான்.



2012/6/18 Thevan <apth...@gmail.com>

--
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
** கட்சியின் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிய
*** தலைவரின் அறிக்கைகள், நிகழ்வுகள், அனைத்தையும் காண
**** www.thiruma.in பாருங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்மண் படியுங்கள் : www.thamizhmann.in
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

anbu selvam

unread,
Jun 18, 2012, 9:40:32 AM6/18/12
to thiruma...@googlegroups.com
மதிப்பிற்குறிய தேவன் அவர்களே!
தேவையான செய்திகளை மட்டும் பதிவு செய்யுங்கள்,
முத்துராமலிங்கத்தேவனை புகழ்ந்து எழுதும் நீங்கள் அவர் செய்து அட்டூழியங்களை ஏன் பதிவு செய்ய யோசிக்கிறீர்கள்???

ஈழம் தொடர்பான உங்களின் பதிவுகளை விரும்பிப்படித்தவன் நான்(ஒரு காலத்தில்) ஆனால் உங்களின் ஆதிக்க சிந்தனையை என்னாலும் எம் தோழர்களாலும் மிக விரவிலேயே உணர முடிந்தது.

சாதியை கையில் பிடித்துக்கொண்டு தமிழ்தேசியம் பேசும் எந்த நய வஞ்சகர்களாலும் ஈழத்தை வென்றெடுக்க முடியாது. உங்களின் பல கருத்துக்களுக்கு நான் பதிலெழுத விரும்பியதே இல்லை ஆனால் நீங்கள் அடிக்கடி இந்த முத்துராமலிங்கனை தூக்கி பிடித்து எழுதுவதை இனியும் என்னால் சகித்துக்கொள்ள முடிய வில்லை.

எந்த குழுமத்தில் எதேதோ கருத்துக்களை பதிவு செய்யும் நீங்கள் பரமக்குடி துப்பாக்கி சூடு விழுப்புரம் காவல் துறையின் அத்து மீறல் இப்படி தலித்துகள் மீது தொடுக்கப்படும் அடக்கு முறைகளுக்கெல்லாம் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்??? இது தானே உங்களின் தமிழ் தேசியம்..

புரட்சியாளர் அம்பேத்கரின் படத்தை கொச்சை படுத்தியதற்கு எழுதாத உங்கள் பேனா முத்துராமலிங்கனை தூக்கிப்பிடிக்க எழுதுகிறது.

போதும் தோழரே!
இந்த பொய் முகத்தை கிழித்தெறிந்து விட்டு உன்மையான முகத்தோடு தெலிவான சிந்தனையோடு தூய்மையான ஈழ உனர்வோடு கருத்துக்களை பதிவிட வாருங்கள்.

சாதியத்திற்கெதிராகவும் ஈழ விடுதலை உணர்வோடும்
கீழ்.கா.அன்புச்செல்வன்
தலைமை அலுவலக செயலாளர்
அனைத்துப்பொறியாளர் பேரவை


 

2012/6/18 Sridhar Kannan <sridh...@gmail.com>



--





Kanagasabai A

unread,
Jun 18, 2012, 11:04:34 AM6/18/12
to thiruma...@googlegroups.com

எதற்காக இந்த  கதை .

jayabal jsolaiarunan

unread,
Jun 18, 2012, 11:09:15 AM6/18/12
to thiruma...@googlegroups.com
ஆக்கப் பூர்வமான செய்திகளை அனுப்புங்கள். தேவையற்ற தேவர் கதை நமக்கெதற்கு?


2012/6/18 Kanagasabai A <kanaga...@gmail.com>



--

தேர்வடம் பிடிக்க நீளும் கையை, ஜாதித் தமிழனின் கை 
தட்டிவிடும் என்றால் 
தமிழ்த் தேசியம் எந்த தறுதலைகளுக்கு 

-மக்கள் பாவலர் இன்குலாப்.


gomugan kalai

unread,
Jun 19, 2012, 7:50:16 AM6/19/12
to thiruma...@googlegroups.com

திரு தேவன் அவர்களை எனது முக நூலில் இருந்து விலக்கி விட்டேன் .
சில நல்ல கருத்துக்களை அவரிடமிருந்து இழந்தாலும் ,அவரது நேர்மை அற்ற குழப்பமான சாதிய அணுகுமுறை ஒரு காரணம் என்றாலும் , அவரது அன்பு தோழர்களின் கருத்துகள் கேவலமாக ,
ஆதிக்க போக்குடன் உள்ளது அவையும் எனது முக பக்கத்திற்கு வருகிறது , அதற்க்கு பதில் கூறி அவர்களை தெளிய வைப்பது ,போதையில் உள்ளவர்களை தெளிய வைப்பதை காட்டிலும் கடினமான செயல் என்பதால் ,அதில் இருந்து விலகி செல்லவதே எனது முதல் நோக்கம் என்பதால் இதை செய்ய வேண்டி இருந்தது .
2012/6/18 jayabal jsolaiarunan <jsolai...@gmail.com>

Kothandaraman Raji

unread,
Jun 19, 2012, 11:11:23 AM6/19/12
to thiruma...@googlegroups.com
அதெல்லாம் கடவுள் பெயரை சொல்லி , அவனை உயர்ந்தவனாக காட்டினானே  அவனுக்கு தேவை . சமத்துவ சமுதாயம் நாடும் என் போன்றவர்களுக்கு எதற்கு?


From: gomugan kalai <gomu...@gmail.com>
To: thiruma...@googlegroups.com
Sent: Tuesday, 19 June 2012 4:50 AM
Subject: Re: [:::VCK:::] காது குத்தலுக்கு தேவர் அளித்த விளக்கம்

chandra mohan

unread,
Jun 20, 2012, 2:16:11 AM6/20/12
to thiruma...@googlegroups.com
very nice line
Reply all
Reply to author
Forward
0 new messages