சரண கீதம்
இரவு பகல் பாராமல் மாடாய் உழைத்து ஓடாய்த்தேயும் தலித் மக்களை எச்சை சோற்றை பிச்சை எடுக்கவைக்கும் உலக மகா சுரண்டல் பொருளியலுக்கு எதிராக கிளர்த்தெழுந்து போர்ப்பரணி பாடவேண்டிய எம் தலித் இளஞ்சிங்கங்களை காயடித்து , மொட்டையடித்து சரண கீதம் பாடவைக்கும் தலித் அரசியலை முதலில் ஒழித்துக்கட்டவேண்டும். ஆம், சாதிய விடுதலைக்கு ஒரே தீர்வான பொருளியல் தீர்வை நோக்கி நகரவேண்டுமென்றால், புத்தம் சரணம் கச்சாமி என்று சரண கீதம் பாடவைத்து தலித்துகளை மடைமாற்றும் தலித் ஆன்மீக அரசியலை முதலில் ஒழிக்கவேண்டும்!
வாழ்க அண்ணல்; வளர்க பெரியார் !!
--செல்வா