மாயோன் மேய - தொல்காப்பிய சிறப்பு

3,108 views
Skip to first unread message

K. Saravanan

unread,
Mar 18, 2011, 8:01:48 AM3/18/11
to inaiat...@googlegroups.com, panb...@googlegroups.com, thiru-th...@googlegroups.com
மாயோன் மேய - தொல்காப்பிய சிறப்பு

பொ.சரவணன்
பாடல்:

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5

Forest
பொருள்:

'மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய
மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய
உலகமும் வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி,
மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.'

தவறுகள்:

இப்பாடலின் முதல் வரியில் 'காடுறை' என்ற சொல்லில் 'டு' என்ற எழுத்துப்பிழையும், நான்காம்
வரியில் 'பெருமணல்' என்ற சொல்லில் 'ண' என்ற எழுத்துப் பிழையும் உள்ளது. இவை எவ்வாறு
பிழைகள் ஆகின்றன என்று காணும் முன்னர் இப்பாடலில் உள்ள நயங்களைக் காணலாம்.

தொல்காப்பியர் ஒவ்வொரு உலகத்தின் பெயரையும் நேரிடையாகக் கூறாமல் மறைமுகமாக உணரும்
வண்ணம் இப்பாடலை இயற்றி உள்ளார். மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகம் (மைவரை உலகம்) என்று
மலையினையும், இனியநீரைக் கொண்ட உலகம் (தீம்புனல் உலகம்) என்று வயலையும் பெரும் ஓசையினைக்
கொண்ட உலகம் (பெருமதில் உலகம்) என்று கடலையும் குறிப்பிடுகிறார். இவ்வாறு மற்ற மூன்று
உலகங்களின் பெயர்களை மறைமுகமாகக் கூறுபவர் காட்டை மட்டும் நேரடியாகக் கூறுவாரா?.
'காடுறை உலகம்' என்பதில் அந்த உலகத்தின் பெயராகிய காடு என்னும் சொல் வெளிப்படையாக
வந்துள்ளது. இவ்வாறு வருவது பிழை ஆகும்.

அன்றியும் ஒவ்வொரு உலகத்தைக் குறிப்பிடும் போது அந்த உலகத்தில் உள்ள சிறப்புப் பொருளைக்
கூறி அதன் மூலம் அந்த உலகத்தின் பெயரை உணர வைப்பது தான் தொல்காப்பியரின் உத்தி என்பதால்
காட்டு உலகத்தில் உறையும் ஏதோ ஒன்றைக் குறிப்பிடவே 'கா..றை உலகம்' என்கிறார். மேலும்
'காடுறை' என்ற சொல்லுக்கு 'காடு உறையும்' என்று பிரித்துப் பொருள் கொண்டாலும் அது
பிழையாகவேத் தோன்றுகிறது. ஏனென்றால் காடு என்பது ஒரு வகை நிலம். அது எங்கே
உறையும்?. எனவே 'காடுறை' என்னும் சொல்லில் பிழை உள்ளதை அறியலாம்.

அடுத்து நான்காம் வரியில் வரும் 'பெருமணல் உலகம்' என்பதற்கு 'பெரும் மணற்பரப்பை உடைய
உலகம்' என்பது பொருள் ஆகும். மணற்பரப்பு என்பது கடலுக்கு மட்டுமின்றி ஆற்றுக்கும்
உரியது. 'பெரும் மணற்பரப்பினை உடைய உலகம்' என்று கூறினால் அது கடலையும் குறிக்கும்
ஆற்றையும் குறிக்கும். இதனால் நெய்தலா மருதமா என்ற நில மயக்கம் ஏற்படும் என்பதால்
தொல்காப்பியர் இப்படி ஒரு பொதுவான சொல்லைக் (மணல்) கூறி இருக்க முடியாது என்று
உறுதியாகச் சொல்ல முடியும். 'தீம்புனல் உலகம்' என்று ஏற்கெனவே மூன்றாம் வரியில்
மருதத்தைக் கூறி விட்டாரே பின்னர் என்ன குழப்பம்? என்ற கேள்விக்கு விடை இது தான்:
'தொல்காப்பியர் சிறந்த அறிவாளி. இலக்கண விதிகளை வகுத்து மொழி வழக்கில் தெளிவு
ஏற்படச்செய்த பெருந்தகையாளர். அவர் தனது நூலில் பொருள் குழப்பம் ஏற்படும்படியான சொற்களைப்
பயன்படுத்தி இருக்க மாட்டார்'. எனவே 'பெருமணல்' என்ற சொல் பிழையானது தான் என்பதை அறியலாம்.

திருத்தங்கள்:

'காடுறை' என்ற சொல்லுக்குப் பதிலாக 'கானுறை' என்று இருக்க வேண்டும். கானுறை =
கான்+உறை. கான் என்றால் வாசனை என்று பொருள். 'கானுறை உலகம்' என்றால் 'வாசம் உறையும்
உலகம்' அதாவது காடு என்று பொருள். 'பெருமணல்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பெருமதில்'
என்று வந்திருக்க வேண்டும். மதில் என்ற சொல்லுக்கு 'ஓதை அதாவது அலைஓசை' என்று பொருள்.
(நன்றி: பிங்கல நிகண்டு - பாடல் எண்: 628).'பெருமதில் உலகம்' என்றால் 'பெரும் ஓசையினை
உடைய உலகம்' அதாவது கடல் என்று பொருள்.

நிறுவுதல்:

இப்பாடலை மேலோட்டமாகப் பார்த்தால் வெறும் நிலப்பாகுபாடு மட்டுமே தெரியும். ஆராய்ந்து
பார்த்தால் மட்டுமே தொல்காப்பியரின் நுண்ணறிவும் அழகியல் நோக்கும் புலப்படும். நிலத்தை
அடையாளம் காட்ட அவர் எடுத்துக் கொண்ட பொருள்கள் மிக அருமையானவை; அவற்றைப் பயன்படுத்தி
அவர் விளக்கியுள்ள தன்மையோ அதிசயக்கத் தக்கது. நிலங்கள் ஐந்து என்பதைப் போல நம் புலன்களும்
ஐந்து. ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு புலனுக்கு இன்பம் தரவல்லது என்னும் கருத்தில் பாலை
நீங்கலான ஏனை நான்கு நிலங்களில் உள்ள சிறப்புப் பொருட்கள் மெய் நீங்கலான ஏனை நான்கு
புலன்களுக்கு எவ்வாறு இன்பம் தரவல்லது என்று இப்பாடலில் கூருகிறார். அவ்வாறு கூறுவதன்
மூலமாகவே அந்தந்த நிலத்தின் பெயரையும் அறியச் செய்கிறார். தொல்காப்பியரின் இந்த உத்தி
கீழே விளக்கப்பட்டுள்ளது.

கண்களைக் கட்டிவிட்டு ஒருவரை காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்லுங்கள். எதையும்
பார்க்காமலேயே அது ஒரு காடு என்று அவரால் கூறிவிட முடியும். எப்படி?. காடு என்பது
பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும் பெரிய நந்தவனம்; இந்த மலர்களின் வாசமும், இலைகள்,
கொடிகள் மற்றும் பழங்களின் வாசமும் இணைந்து காட்டிற்குள் நுழைபவரைத் தன் வாசனையால்
வரவேற்கும். இந்த வாசனைக்கு 'கான்' என்றொரு பெயர் உண்டு. கான் உடையதால் காட்டிற்கு
'கானகம் (கான்+அகம்)' என்றொரு பெயரும் உண்டு. காட்டிற்கே உரிய இந்த சிறப்பு இயல்பினை
உணர்ந்த தொல்காப்பியர் 'காடு' என்று நேரடியாகக் கூறாமல் 'வாசம் உறையும் உலகம்' என்று
பொருள்படும்படி 'கான் உறை உலகம்' என்று முதல் வரியில் கூறுகிறார். ஐம்புலன்களில்
மூக்கிற்கு இனிய வாசனையைத் தருவதாக முல்லை நிலத்தை அவர் கூறியிருக்கும் பாங்கு இங்கே
உணர்ந்து மகிழத்தக்கது.

கருமையாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் மேகங்களின் அழகே தனி தான். இதில்
வெண்மேகங்கள் கரிய நிற மலைகளின் மேல் வெண்ணிற ஆடை போலப் படிந்திருக்குமே அந்தக்
கண்கொள்ளாக் காட்சியைக் கண்டிருக்கிறீர்களா? நீங்கள் கண்டிருக்கிறீர்களோ இல்லையோ தொல்காப்பியர்
இக்காட்சியைக் கண்டு தன் மனதைப் பறிகொடுத்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். பாருங்கள்,
'மலை' என்று கூறாமல் 'மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகம்' என்று இரண்டாம் வரியில் (மை =
மேகம்; வரை = எல்லை) எவ்வளவு நயமாகச் சொல்லுகிறார். அன்றியும் சில நேரங்களில் மலையே
தெரியாத அளவுக்கு மேகங்கள் மூடியிருக்கும். ஆனாலும் அங்கே மலை இருப்பதை ஒருவர்
தூரத்தில் இருந்துகொண்டே அங்கிருக்கும் மேகக்கூட்டத்தை வைத்து அடையாளம் காணமுடியும்.
ஐம்புலன்களில் கண்ணுக்கு இனிய காட்சியைத் தருவதாக குறிஞ்சி நிலத்தை அவர் கூறியிருக்கும்
பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.

முல்லையை வாசனையாலும் குறிஞ்சியை மேகக்காட்சியாலும் அறிந்துகொள்வது போல மருதநிலத்தை
அங்கே உள்ள நீரின் சுவையால் அறிந்து கொள்ளலாம். இனிய சுவையினை உடைய நீர் மருத நிலத்தின்
சிறப்புப் பொருள் ஆகும். ஆறு,குளம்,ஏரி,கிணறு என்று பலவகையான நீர்நிலைகளை உடைய
மருதநிலத்தை 'தீம்புனல் உலகம்' என்று ஐம்புலன்களில் நாவிற்கு இனிய நீரினால் அறியவைத்த
பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.

கடற்கரைக்குச் சென்று அமர்ந்துகொண்டு கண்களை மூடியவாறு கடல் அலைகளின் ஓசையைத் தொடர்ந்து
கேட்டிருக்கிறீர்களா?. அது ஒரு சுகமான அனுபவமாய் இருக்கும். அந்த ஓசையில் உலகத்தை
மறந்து உங்கள் மனம் ஒருமைப்படும். கடல் அலைகளின் இந்த ஓசைக்கு 'ஓதை' என்று பெயர். கண்ணை
மூடிக்கொண்டு இருந்தாலும் அருகில் கடல் இருப்பதை இந்த ஓதையால் ஒருவர்
அறிந்துகொள்ளமுடியும். கடலுக்கே உரிய இந்த சிறப்பு இயல்பினை அறிந்த தொல்காப்பியர்
'கடல்' என்று நேரடியாகக் கூறாமல் 'பெரும் ஓசை உடைய உலகம்' என்று பொருள்படும்படி
'பெருமதில் உலகம்' என்று நான்காம் வரியில் கூறுகிறார். ஐம்புலன்களில் காதிற்கு இனிய
ஓசையைத் தருவதாக நெய்தல் நிலத்தை அவர் கூறியிருக்கும் பாங்கு இங்கே உணர்ந்து மகிழத்தக்கது.

தொல்காப்பியர் கையாண்டுள்ள இந்த உத்தி எவ்வளவு நேர்த்தியானது என்பதை அறிந்திருப்பீர்கள்.
இதில் இருந்து இப்பாடலின் சரியான பொருளையும் அறிந்திருப்பீர்கள். அது இது தான்: '
மாயோன் ஆகிய திருமால் பொருந்திய வாசனை உறையும் உலகமும் சேயோன் ஆகிய முருகன்
பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய
புனலை உடைய உலகமும் வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெரும் ஓசையினை உடைய உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய முறையால் சொல்லப் படும்.'

சரியான பாடல்:

'மாயோன் மேய கானுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமதில் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.'

- பொ.சரவணன் (vaen...@gmail.com)

--
க. சரவணன்
உதவிப்பேராசிரியர். தமிழாய்வுட்துறை
அரசு கலைக்கல்லூரி [தண்ணாட்சி]
கரூர். 639005
தொலைபேசி: 04324255558
அலைபேசி: 9787059582, 9677170008.
ப்மின்னங்ஜல்
: ksnan...@gmail.com
ச்கைப்: ksnanthusri


Periannan Chandrasekaran

unread,
Mar 18, 2011, 11:00:47 AM3/18/11
to thiru-th...@googlegroups.com, K. Saravanan
ஐயா
பழைய செய்யுள்களைப் பயிலும்பொழுது மிகவும் கவனம் தேவை.
ஒரே ஓசையில் பலபொருள்கள் உண்டு; அவற்றில் ஓரிரு பொருள்மட்டுமே இன்று பரவலாக வழங்கும். மேலும் செந்தமிழ்மொழியின் அரிய தொடர்ச்சியினால் இதுபோல் எக்கச்செக்கமாகக் குழப்பும்படிக்குப் பலசொற்கள் உண்டு; மேலும் இலக்கணச்சொல்லமைப்புகளும் உண்டு
எனவே பழைய உரையையோ பழைய இலக்கியத்தின் பலபடியான பொருள்களைச் சொல்லும் சென்னை அகராதி (இலெக்குசிக்கன்) போன்றவற்றையோ ஆராய்ந்தபின்னே பொருள் கொஞ்சமாவது தெரிந்ததென்று நினைக்கவேண்டும். அதற்குப் பிறகு அதற்கி இணையான மரபுகள் வழக்குகள் உண்டா என்று ஆராயவேண்டும்.

இங்கே இளம்பூரணர் உரையைக் கண்டால் உடனே தெரியும் தொல்காப்பியத்தில் தவறில்லை என்றும் அதனை ஓதுவோரிடத்தில்தான் என்றும்:
இளம்பூரணர் உரை: "மாயோன் மேய காடுறை உலகமும் = மாயவன் மேவிய காடு பொருந்திய உலகமும்"...
எனவே அந்தத் தொல்காப்பியப்பாவிலே உறைதல் என்றால் பொருந்துதல் என்று பொருள் என்பது வெளிப்படை.
மேலும் உறைதல் என்று நாம் சொல்லிவழங்கும் கருத்துக்கும் அடிப்படைப்பொருள் பொருந்துதல் என்பதனை அறியவேண்டும். எனவே இது பெரிய மருட்கையான பொருட்புதுமையும் அன்று.


எனவே  தொல்காப்பியத்தில் தவறு என்று பெரிய பேச்சிலே முனையும் முன் நாம் பழஞ்செய்யுளை  உணரும் பதச்செவ்வியிலே உறைந்திருக்கிறோமா என்று ஆராய முனைவது தனிமாந்தனுக்கு மட்டுமன்றித் தமிழர்க்கு மட்டுமாயன்றி மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. ஏனெனில் வேண்டாத புரளிகளைக் கிளப்பி மக்களிடைய குழப்பம், அறியாமை, வெறுப்பு, வெறிகளை ஊட்ட மிகவும் இது போன்ற தவறுகள் உதவும்.
இப்படிப்பட்ட சமுதாய வெறுப்பூட்டலுக்கு எடுத்துகாட்டாக அறியாமை மிஞ்சிய சிலர் தேவாரத்திலே கற்பழிக்க என்ற சொல்லைக் கேட்டுவிட்டுச் சம்பந்தர் சமணரின் பெண்களைக் கற்பழிக்கப் பாடுகிறார் என்று பேசுகிறார்கள்.
இவர்களுக்குக் கற்பு என்ற சொல் பழைய செய்யுள்களிலே கல்வி என்ற பொருளிலே வழங்குவதைச் சிறிதும் உணராமையால் இந்த வெறுப்பான பேச்சு எழுகிறது.
http://mujeebu.blogspot.com/2009/04/blog-post_21.html; அந்தப் பதிவாளரின் கூற்றினை இங்கே பெரிய கூச்சத்தோடே மீண்டும் இடுகிறேன்:

"அந்த மூன்று வயது குழந்தைக்கு மார்பில் அல்லாது கிண்ணத்தில் பால் கொடுத்தாரோ. இந்தத் திருஞானசம்பந்தன் சமணப் பெண்களைக் கற்பழிக்க அருள் கோரி ''பெண்ணகத்து எழில்சாக்கியப் பேய் அமண் தென்னற் கற்பழிக்கத் திருவுள்ளமே" என்று ஆணாதிக்க இறைவனை வேண்டிப் பாடியவர் அல்லவா. இவர்தான் தனது சொந்த ஆணாதிக்க வக்கிரத்தை மிருக நிலையில் புணர்ந்து வெளிப்படுத்துகின்றார். மனிதப் புணர்ச்சியைவிட மிருகப்புணர்ச்சி தாழ் நிலை விலங்குக்குரிய தாழ்ந்த நிலையல்லவா? இதை இறைவன் செய்தான் என்பதும், அதைக் கற்பனை பண்ணிப் பாடுவதும் கேவலம்கெட்ட இழிந்த பண்பாடாகும்;. இந்தத் தேவாரத்தைச் சொல்லி நாம் பாடுவதும் எமது முட்டாள்த்தனத்துடன் கூடிய அறிவின்மையில்தான்."

சங்கப் பாட்டிலே கூடத் தொலையாக் கற்ப என்று சேரனைப் பதிற்றுப்பத்துப் பாடுவதையும் காணலாம். "நீங்காத கல்வி உடையவனே" என்கிறது; அபிராமி அம்மைப்பதிகம்த்திலே "கலையாத கல்வியும் குறையாத வயதும்" என்பதுவும் இதுவே. எனவே சமணரின் சமயக் கல்வி கற்பித்ததனை  அழிக்கத் திருவுள்ளமே என்று சொல்கிறார் என்பதைத் தெளியவேண்டும்.

எனவே தொல்காப்பியத்திலே தவறில்லை; பழஞ்செய்யுளை உணரத் தகுந்த கற்புத்தான் ( = கல்வி) இன்று தேவை.

நன்றி
பெரியண்ணன் சந்திரசேகரன்

2011/3/18 K. Saravanan <ksnan...@gmail.com>


--
உங்கள் தோழமை தேவை என நாங்கள் விரும்பியதன்அடிப்படையில் அல்லது நீங்கள் இக்குழுவினரின் தோழமை தேவை என விரும்பியதன் அடிப்படையில் இச் செய்தி தங்கட்கு அனுப்பப்படுகிறது. உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள  thiru-th...@googlegroups.com மின்வரிக்கு அனுப்புக. எனினும் தங்களால் இக்குழுவில் தொடர இயலா நிலை இரு்பபின்,  thiru-thoazham...@googlegroups.com மின்வரிக்குத் தெரிவிக்கவும். தோழமை பற்றி அறிய  http://groups.google.com/group/thiru-thoazhamai?hl=ta காண்க.
தோழமையுடன்



--
Periannan Chandrasekaran

Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள

unread,
Mar 18, 2011, 7:45:12 PM3/18/11
to thiru-th...@googlegroups.com
அன்புள்ள சரவணன் அவர்களுக்கு, 
வணக்கம்.

 'சரவணம்' எனப் பெயரிட்டுப் 'புதிய காப்பியம்' ஒன்று எழுதுங்கள். 

கடலோர நிலத்தில் மணல்தானே இருக்கும். 

காடு என்னும் சொல் சங்க இலக்கியங்களில் உள்ளதை அறிவீர்கள்

உள்ளதை உணருங்கள். உணர்த்துங்கள். நீங்கள் உணர்வதை உள்ளதாக்காதீர்கள்.

ஆராயுங்கள். அழிக்காதீர்கள். 

'தொல்காப்பியச் சிறப்பு' என ஒற்று மிகும்.

அன்புள்ள

2011/3/18 K. Saravanan <ksnan...@gmail.com>
--
உங்கள் தோழமை தேவை என நாங்கள் விரும்பியதன்அடிப்படையில் அல்லது நீங்கள் இக்குழுவினரின் தோழமை தேவை என விரும்பியதன் அடிப்படையில் இச் செய்தி தங்கட்கு அனுப்பப்படுகிறது. உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள  thiru-th...@googlegroups.com மின்வரிக்கு அனுப்புக. எனினும் தங்களால் இக்குழுவில் தொடர இயலா நிலை இரு்பபின்,  thiru-thoazham...@googlegroups.com மின்வரிக்குத் தெரிவிக்கவும். தோழமை பற்றி அறிய  http://groups.google.com/group/thiru-thoazhamai?hl=ta காண்க.
தோழமையுடன்



--
பொதுவன் அடிகள் 
22, 13-வது தெரு, தில்லை கங்கா நகர், சென்னை 600 061

Dr.Sengai Podhuvan
Phone: (91-44) 2267 0203 Cell (91) 99406 41510 

Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள

unread,
Mar 18, 2011, 7:54:27 PM3/18/11
to thiru-th...@googlegroups.com
பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்கள் 'கற்பு' என்னும் சொல்லின் பொருளைக் காட்டி விளக்கியுள்ள பாங்கினை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.
அன்புள்ள

2011/3/18 Periannan Chandrasekaran <peric...@gmail.com>



--

Gnaanapragaasan e.bhu

unread,
Mar 19, 2011, 7:35:00 AM3/19/11
to தோழமை
அற்புதம்! அற்புதம் ஐயா! தங்களுடைய இந்த ஆராய்ச்சி வெகு அற்புதமானது!
உடனே இதை 'இன்ட்லி' இணையத் திரட்டியில் பதிவேற்றப் போகிறேன். மேலும்
மேலும் இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தங்களிடமிருந்து
எதிர்பார்க்கிறோம்.

இப்படிக்கு,
தமிழார்வலன்:
--இ.பு.ஞானப்பிரகாசன்.

> - பொ.சரவணன் (vaend...@gmail.com)


>
> --
> க. சரவணன்
> உதவிப்பேராசிரியர். தமிழாய்வுட்துறை
> அரசு கலைக்கல்லூரி [தண்ணாட்சி]
> கரூர். 639005
> தொலைபேசி: 04324255558
>   அலைபேசி: 9787059582, 9677170008.
> ப்மின்னங்ஜல்

> : ksnanthu...@gmail.com
> ச்கைப்: ksnanthusri

Periannan Chandrasekaran

unread,
Mar 19, 2011, 10:56:05 AM3/19/11
to thiru-th...@googlegroups.com
கற்பு என்ற சொல் பெண்ணின் பண்புக்கும் மட்டுமண்றி மற்ற தொடர்பற்ற பொருள்களிலும் பண்டை வழங்கியதைச் சிக்காகோப் பல்கலை இணையத்தளத்திலே காணும் சென்னையகராதியிலே தொகுத்துள்ளதில் காண்க:
கற்பு. 1. Conjugal fidelity, chastity; பதிவிரதா தருமம். வான்றரு கற்பின்(மணி. 22, 53). 2. (Akap.) Life of a householder after his union with a bride of his choice had been ratified by marriage ceremonies; களவுக்கூட்டத்துக்குப்பின் தலைவன் தலைவியை விதிப் படி மணந்து இல்லறம்புரியும் ஒழுக்கம். (நம்பியகப். 26.) 3. Malabar jasmine, an emblem of female chastity; முல்லை. (திவா.) 4. Learning, study, knowledge; கல்வி. உலகந்தாங்கிய மேம்படு கற்பின் (பதிற்றுப். 59, 8). 5. Meditation; தியானம். பல புவனமு நின்பாற் கற்புவைத்துய்ய (திருவிளை. மாயப். 29). 6. Workmanship; வேலைப்பாடு. கற்பார் புரிசை (திவ். பெரியதி. 5, 1, 4)

 
நன்றி
பெரியண்ணன் சந்திரசேகரன்

2011/3/18 Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள <podh...@gmail.com>



--
Periannan Chandrasekaran

Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள

unread,
Mar 19, 2011, 8:05:56 PM3/19/11
to thiru-th...@googlegroups.com
பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்களின் நுழைபுலத்தைப் பாராட்டுகிறேன். 
வளர்க அவர் தொண்டு.
அன்புள்ள

2011/3/19 Periannan Chandrasekaran <peric...@gmail.com>

Sengai Podhuvanar செங்கைப் பொதுவன் \ பொதுவன் அடிகள

unread,
Mar 19, 2011, 8:14:34 PM3/19/11
to thiru-th...@googlegroups.com
பேராசிரியர் சரவணனைப் போல இப்படியும் பழம் புலவர்களைக் குத்திக் கொல்லலாம்.

2011/3/19 Gnaanapragaasan e.bhu <e.bhu.gnaa...@gmail.com>
--
உங்கள் தோழமை தேவை என நாங்கள் விரும்பியதன்அடிப்படையில் அல்லது நீங்கள் இக்குழுவினரின் தோழமை தேவை என விரும்பியதன் அடிப்படையில் இச் செய்தி தங்கட்கு அனுப்பப்படுகிறது. உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள  thiru-th...@googlegroups.com
மின்வரிக்கு அனுப்புக. எனினும் தங்களால் இக்குழுவில் தொடர இயலா நிலை இரு்பபின்,  thiru-thoazham...@googlegroups.com
மின்வரிக்குத் தெரிவிக்கவும். தோழமை பற்றி அறிய
http://groups.google.com/group/thiru-thoazhamai?hl=ta காண்க.
தோழமையுடன்
Reply all
Reply to author
Forward
0 new messages