ஒளவையின் அனுபவ முதுமொழி
ஒருநாள் உணவை ஒழியென்றால்
ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது - நல்வழி (ஒளவையார்)
விளக்கம்
ஒரு நாள் எனக்கு பசி வேண்டாம் அமைதியாக இரு என்று
சொன்னால் வயிரே நீ கேட்க மாட்டாய், சரி உணவு அதிகமாக கிடைக்கிறது ஆகையால் இரண்டு மூன்று
நாட்களுக்கு தேவையானவற்றை இன்றே நிரப்பிக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய். நாள்
தவறாமல் ஒவ்வொரு வேளையும் உன்னை நிரப்புவதே பெரும் வேலையாக இருக்கிறது , உன் தேவைக்காகவே
பலருடன் போராட வேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது துன்பத்தை தருகிறது.
இப்பாடலில் ஒளவை உடலின் வரையறை குறித்த ஓர் உண்மையை உணர்த்துகின்றாள். அது உணவைத் தவிர்க்கவும் முடியாது, கூட்டவும் முடியாது என்பதே.
இது மட்டுமே அல்ல. நிற்கின்ற போது உடலுக்கு இரண்டு சதுர அடி நிலத்தில் மட்டுமே நின்று ஆக்கிரமிக்க முடியும். அடுத்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நின்றிருக்கிற இடத்தை விட்டுக்கொடுத்தால் மட்டுமே அடுத்த இடத்தில் இரண்டு அடியை ஆக்கிரமித்து நிற்க முடியும். படுத்தால் கூட இந்த வரையறை தான். உடலின் அளவிற்கே படுக்கும்போது இடத்தை ஆக்கிரமிக்க முடியும். இப்படி உடல் சார்ந்த எல்லாமே அனுபவிக்கப்படும் போது அதற்கு வரையறை உண்டு. இதை உணராத முட்டாள் மனிதன் தன் தேவைக்கு மீறி பணம் பொருளை ஈட்டுகிறான், சேமிக்கின்றான். ஆனால் அவனது வாழ்நாளில் அவனால் தான் ஈட்டி சேமித்த எதையும் முழுவதுமாக அனுபவிக்க முடியவில்லை. அப்படியே செத்துப் போகிறான். அதை இன்னொருவர் அனுபவிக்கின்றனர். இந்த மிகைப் பணத்தை ஈட்டி சேமிக்க அவன் தன் கீழ்ப் பணியாற்றுவோரின் உழைப்பை சுரண்டுகிறான். குறைந்த சம்பளம் கொடுக்கிறான். தான் விற்கும் பண்டத்திற்கு அதிக விலை வைத்து நுகர்வோரின் கைப்பணத்தை விரைந்து கரையச் செய்கிறான். இப்படி இரண்டு வகையில் மக்கள் பணத்தை சுரண்டி கொழுக்கிறான் ஒரு முதலாளி/பணக்காரன்.
தான் ஈட்டிய பணத்தைக் கொண்டு பெருமளவில் நிலம் வாங்குகிறான், பொன் பொருள் வாங்குகிறான். ஒன்றுக்கு பத்து வீடு, பத்து கார், 10 சட்டை துணியே போதும் என்ற நிலையில் 50-60 சட்டை துணி. இவற்றில் எதையும் அவன் ஒரே காலத்தில் அனுபவிக்க முடியாது என்பதற்கு அவனை அடக்கிக் ஆட்டிக் கொண்டிருக்கும் உடல் வரையறையே சான்று . இந்த நிலையில் அவன் தான் ஈட்டி சேமித்த பொருளை பிறர் எவரும் அனுபவிக்க முடியாதபடி வேலியிடுகிறான், தன் பெயரில் உரிமை எழுதிக்கொள்கிறான். இப்படி செல்வர் ஒவ்வொருவரும் சேமிக்கிற பொருளை தானும் அனுபவிக்காமல் பிறரையும் அனுபவிக்கவிடாமல் செய்கிற செயலைத்தான் capitalist முன்னேற்றம், வளர்ச்சி என்கின்றனர். இது யாருக்கு பயன்? இத்தனை பயன்படாமல் போகும் பணமும் பொருளும் இயற்கை மீது தனது தொடர் தாக்குதலால் அழித்து ஈட்டப்பட்டவை தானே. இப்படி வீணாகும்படி இயற்கை அழிக்கப்படாமல் இருந்தால் அது பிற உயிர்களுக்கும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படுவதாக இருக்கும் அன்றோ? ஆனால் இந்த இயற்கை அழிப்பை சட்டத்தின் மூலம் அரசுகள், நீதிமன்றங்கள் முன்வந்து ஆதரிக்கின்றன. ஆயுதப் படையும் காவல்துறையும் மனிதனின் இந்த இயற்கை அழிப்பு அராஜக செயலுக்கு முட்டு கொடுக்கின்றன. இதை தான் பிரபாது து ரஞ்சன் சர்க்கார் கருத்தியல் நெருக்கடி (ideological crisis) என்கிறார்.
இப்படி பயன்படாமல் வீணடிக்கப்பட பணம் ஈட்டும் செயலை கல்லூரிப் பேராசிரியர் ஆதரித்து பேசுகின்றார். எப்படி? இப்படி செய்தால் தான் தொழில்வளம் பெருகுமாம், வேலைவாய்ப்பு கிட்டுமாம்!! ஐந்துதலைமுறை முன் அரசகுடியாய் இருந்த வீட்டில் பிறந்து இன்று பொழுதிற்கு ஒரு வீட்டில் ஓசிச்சோறு உண்பவனும் இந்த செயலை ஆதரித்து நான் கூட எதிர்காலத்தில் பெரும்செல்வனாக ஆகிடுவேன் என்று கற்பனையில் இந்த செயலை ஆதரிக்கிறான். இப்படி எளியோருக்கு இந்த வீண்பட பணம் ஈட்டும் செயலலை கண்டிக்காமல் ஆதரிப்பதால் இவர்கள் முதலாளிகள் இல்லையாயினும் இவர்களும் capitalistகள் தான். இதனால் தான் நான் capitalist என்பதை முதலாளி என்னாமல் முதல்நெறியாளர் என்று மொழிபெயர்த்தேன். capitalist என்ற சொல் முதலாளியை மட்டுமே குறிக்கவில்லை என்பதால தான் ஆங்கிலத்திலேயே capitalism, capitalist என்றே எழுதத் தலைப்பட்டேன்.
இந்த இயற்கை அழிப்பு செயலை capitalism, communism செய்வதால் இரண்டும் பார்வைக்கு வேறாகத் தெரிந்தாலும் இரண்டும் ஒன்றே. இதனால் தான் capitalist நாடுகளில் காணப்படும் அத்தனை குற்றம் குறைகளும் கம்யூனிஸ்டு நாடுகளிலும் காணப்பட்டன. நல்ல வேலையாக communism கோர்பச்சேவ் என்ற நல்ல மனிதரால் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் செய்த பெரும் தவறு தற்சார்பு பண்டமாற்றுக் கால கிராமிய பொருளியல் உற்பத்தி அணுகுமுறையை விடுத்து capitalism காலூன்ற அடிகோலியதே.
இந்த பலசுக்கல் (decentralised) பொருளியல் அணுகுமுறையில் மக்கள் தாம் வாழ்ந்த இடத்திலேயே காலம் காலமாக இடப்பெயராமல் வாழ்ந்தனர். தாத்தா -மகன்- பேரன் என்று கூட்டாக ஒரே வீட்டில் வாழ்ந்தனர். ஒற்றைத்திறல் (centralised) பொருளியல் அணுகுமுறையில் மனைவி ஒரு இடத்தில் வேலைசெய்ய கணவன் வேறு ஒரு இடத்தில் வேலைசெய்கிறான். பிள்ளை இன்னொரு இடத்தில் தங்கிப் படிக்கிறான். இவர்கள் வேலை செய்யும் ஊருக்கு அருகேயே குடிஇருந்து மாதம் ஒரு முறை மட்டுமே சந்தித்துக்கொள்கின்றனர். அதன்போது மகன் தந்தை இருவரும் மலர் கொத்து கொடுத்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுகின்றனர். மனைவி கணவனை சந்திக்கும் போது இதே போல இருவரும் மலர்கொத்துக்களை மாற்றிக் கொள்கின்றனர். இது தான் அமெரிக்க வாழ்க்கை. ஆக இந்த ஒற்றைத்திறல் (centralised) பொருளியல் அணுகுமுறை குடும்ப அமைப்பையே சீர்குலைத்துவிட்டது. முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன. முதியோருக்கு ஓய்வூதியம் என்பது அமெரிக்க அரசிற்கு ஒரு கூடுதல் நிதிச் சுமையாகிவிட்டது.
இந்த ஒற்றைத்திறல் (centralised) பொருளியல் அணுகுமுறையில்தான் முன் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு வேற்றுமைப்படுத்தம் (discrimination) வெகுவாக அதிகரித்துவிட்டது. இதை அலுவலகத்தில் பணிபுரிவோரால் உயர்பதவி அடுக்கு, படிப்பு, சம்பளம் இவற்றை வைத்து புதுவித ஏற்றத்தாழ்வு சமூகத்தில் உண்டாகிவிட்டதை நன்றாக உணந்து கொள்ளமுடியும். இக்காலத்தே இந்த ஒற்றைத்திறல் பொருளியல் தொழில் அணுகுமுறையால் பல புதிய படிப்புகள் அறிமுகமாகி பல பல்கலைக்கழங்கங்கள் நிறுவக் காரணமாயின. Ph D படிப்போ அல்லது , master degree படிப்போ பெற்ற ஒரு பெண் தனக்கு ஈடாக படித்தவரையே மணமகனாக தேர்வு செய்ய விரும்புகிறாள். ஒருபோதும் இளநிலை அறிவியல் / கலை பட்டம் முடித்த ஆடவரைத் அவள் தேர்வதில்லை. இது தான் இதில் வேடிக்கை. என்ன படித்தாலும் அது சில மாதங்களில் மறந்து போகப்போகிறது. ஒரு Msc கணக்கியல் படித்த பெண்ணுக்கு B.A. பொருளியல் பட்ட மாணவர் அளவு கூட அவளுக்கு பொருளியல் பற்றி அறிவு கிடையாது. இப்படி இருக்க இந்த சமூகம் எப்படி முதுநிலை படித்த பெண் இளநிலை படித்தவரை விட உயர்ந்தவர் என்று கருதுகிறது? இரண்டு புலமும் வேறு வேறாயிற்றே? பொருளியல் அறிவில் கணக்கியலில் முதுநிலை பட்டம் பெற்றவரை விட பொருளியலில் இளநிலை பெற்றவர் தானே அறிவில் உயர்ந்தவர்? ஆனால் ஏரணமின்றி கணக்கியலில் முதுநிலை பட்டம் பெற்ற பெண் தன்னைவிட படிப்பில் குறைந்தவன் என்று B.A. பொருளியல் பட்டதாரியை மணமகனாக தேர்வுசெய்யாமல் மறுதலிக்கிறாள். கேட்டால் அது அந்தஸ்து குறைவு என்கின்றனர் பெண்ணின் வீட்டார். ஒரு தொழிற்கூடத்தில் ஒருவருடைய வேலைநிகழ்த (performance) திறத்தைப் பார்க்காமல் உயர்கல்வி வைத்தே உயர்பதவி தரப்படுகிறது. இது ஒருவகை உழைப்பு சுரண்டல் தானே? அப்படி உயர்கல்வி படித்த எவரோ ஒருவர் உயர்பதவி ஏற்று இன்னொருவரது உழைப்புத்திறத்தை தான் நிகழ்த்தியதாக காட்டித்தானே ஊக்கத்தொகை (incentive) கைச்செலவு பணம் (perk) என இன்னும் பல சலுகைகளைப் பெறுகிறார்? வேடிக்கை என்னவென்றால் இப்படி வேற்றுமைப்படுத்தம் அதிகம் உள்ள அறிவியல், தொழில்நுட்பத்தில் உயர்ந்த நாடுகளைப் போல இந்தியர் தமிழர் இருக்கவேண்டு என்று சாதி, மதம் உள்ளிட்ட ஏற்றத் தாழ்வுகள் அகலவேண்டும் என்போர் விரும்புகின்றனர். இந்த centralised பொருளியலில் சமத்துவம் சாத்தியப்படவே படாது என்பதை அவர்கள் (ஈவேரா உள்ளிட்டோர்) ஏன் புரிந்து கொள்ளவில்லை?
எனவே centralised, import - export பொருளியல் அணுகுமுறையில் இப்படி எல்லாம் கேடு உண்டாகிவிட்டது சொல்லினால் தான் மக்கள் capitalism குறித்த பொய் பிம்பத்தை கைவிட்டு அதற்கு சிறந்த மாற்று எது என்று கேள்வி எழுப்புவர். மீண்டும் பண்டமாற்று கால கிராமிய பலசுக்கல் பொருளியல் அணுகுமுறையே சிறந்தது என்ற முடிவுக்கு வருவர். இனி பலசுக்கல் பொருளியல் அணுகுமுறையை எப்படி அமலாக்குவது என்று தெளிவுபடுத்தினால் மக்கள் அதை இனிதே ஏற்பர்.
மேலைநாடுகளில் அவ்வந்நாட்டுப் பரப்பில் நாட்டின் மொத்த மக்கள் தொகையை வகுத்தால் ஆசியாவைவிட ஒரு சதுர கிலோமீட்டருக்கு மிகக் குறைவான மக்களே வாழ்கின்றனர். அதிலும் 1% குறைவான மக்களே வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். இருந்தும் அங்கே அதிக நிலப்பரப்புகள் மக்கள் வாழாத வெற்றிடமாகவே உள்ளன. இது ஏன்? என்ன காரணம்? மக்கள் அனைவரும் வேலைவாய்ப்பு, படிப்பு, மருத்துவம், கேளிக்கை இவற்றுக்காக நகரங்களில் குமிந்து வாழும் கட்டாய நிலை உள்ளது. இந்த நிலை ஒற்றைத்திறல் (centralised) பொருளியல் அணுகுமுறையால் உருவானது தான். பல சுக்கல் (decentralised) பொருளியல் உற்பத்திமுறையை அந்நாடுகளில் அமல்படுத்தியிருந்தால் இத்தகு பெருநகரங்கள் உருவாகியிருக்கவேமாட்டா. நகரங்களில் ஏற்பட்ட இடநெருக்கடி, நிலமதிப்பு உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்பில் வாழவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுவிட்டது. கிராமங்களில் கிடைக்கின்றன பெரிய வீடு, அங்குள்ள அமைதியான சூழல், காற்று, ஒலி, நீர், நிலத்தில் உள்ள மாசற்ற நிலை நகரங்களில் இருப்பதில்லை. அடுக்குமடிக் குடியிருப்பால், மக்களின் நகர வாழ்க்கைக் குடியிருப்பால் இயல்பாக ஒரு குறுகிய நிலப்பரப்பில் குறைந்த அளவில் வாழும் மக்களால் ஏற்படும் அழுத்தத்தைவிட அதே அளவு இடப்பரப்பில் அதிக மக்கள் இருப்பது அந்நிலப்பரப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தூய காற்று, நீர், வெளிச்சத் தேவையில் இந்த அழுத்தம் அதிகம் உணரப்படுகிறது. இதுபோதாதென்று மக்கள் வெளியேற்றும் மலம், சிறுநீர் தொழிற்சாலைகள் வெளியேறும் கழிவுகள் இவற்றால் ஒருபெரிய சாக்கடைக் கால்வாயையே இந்நகரங்களில் நிர்வாக அமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சாக்கடை நாட்டில் உள்ள ஏரி, ஆறு, கடல் ஆகியவற்றில் கலக்கவிடப்பட்டு பிற உயிர்கள் வாழஇயலா நிலையை உருவாக்கி சுற்றுச்சூழலை கெடுக்கிறது. சூழலியல் கேடு மனித நாகரிகத்தையும் பிற உயிரிகளின் வாழ்க்கையையும் அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
இந்த அடுக்குமாடி கட்டிடத்தால் இரும்பின் தேவை, சுதையின் (cement) தேவை, கருங்கல் (blue metal) தேவை பன்மடங்கில் புதிதாக ஏற்பட்டுள்ளது. இதற்காக புதுப்புது இடங்களில் கனிம சுரங்கம், மலைவெடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதால் இயற்கை மீது இன்னும் அதி கூடுதலான தாக்குதல் அல்லவா மனிதனால் நிகழ்த்தப்படுகிறது? இரும்பு, சுதை, கருங்கல்சல்லி, செங்கல் ஆகியவற்றைத் தவிர்த்து அடுக்குமாடியே அல்லாத தனிவீடுகளை உலகம் முழுதும் உள்ள பழங்கால மண்வீடு தொழில்நுட்பத்தில் 20 ஆண்டிற்கு நிலைத்தால் போதும் என்ற திட்டத்தில் அமைக்கலாமே? தனிவீடுகளில் மக்கள் வெளியேற்றும் மலம், மூத்திரத்தை வெளியே செல்லவிடாமல் மலத்தை ஏதேனும் ஒரு கரைசலால் கரைத்து நீரை நீராவியாக அந்த வீட்டிலேயே உருமாறச்செய்தால் பாதாள சாக்கடைக்கும், சாக்கடை கால்வாய்க்கும் தேவை ஏதும் இராதே!! இதனால் சாக்கடைநீர் ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளை மாசுபடுத்துவதை தடுக்கலாம் அல்லவா? ஆனால் தனிவீட்டில் இந்த சாக்கடையை நீராவிஆக்குவது போல அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழ்த்த இயலாது. ஏனென்றால் தனிவீட்டில் 5-6 பேர் தான் வாழ்கின்றனர் ஆனால் அடுக்குமாடியில் ஆயிரக்கணக்கான மக்கள் அல்லவா வாழ்கின்றனர்? எனவே நகரில் அடுக்குமாடி குறியிருப்புகளை கட்டுவதற்கு தடை போட வேண்டும். இதை மனைத்தொழில் (real estate) செய்வோர் தம் நலம் பாதிக்கப்படும் என்பதால் எதிர்க்கவே செய்வர். மனைத்தொழில் நடத்துவோர் எல்லாம் பெரு முதலாளிகள். இதனால் தான் அர்குமியியம் (capitalism) தடை செய்யப்படவேண்டும், ஒற்றைத்திறல் (centralised) பொருளியல் அணுகுமுறை கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இடங்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை தான் இந்த இடம் சிறந்த இடம், இந்த இடம் மட்டம் என்றெல்லாம் இடத்தில் இல்லை. இந்த மதிப்பெல்லாம் மனிதர் செயற்கையாக உண்டாக்கியதே. எனவே மக்கள் நகர வாழக்கையை தவிர்த்து பிற இடங்களில் வாழும்படியான பொருளியல் சூழலை உருவாக்க வேண்டும். இதற்கு பல சுக்கல் (decentralised) பொருளியல் அணுகுமுறையை நடைமுறைப்படுத்தினால் தான் இது சாத்தியமாகும். இதையும் அர்குமியர் (capitalist) எதிர்ப்பர். ஏனென்றால் இதில் அவர்களால் அதிக லாபம் ஈட்ட முடியாது என்பதே.
கெப்பிட்டலிச நாடுகளில் தன்னலத்திட்டம் கொண்ட தனிஆள்கள் ஒற்றைத்திறல் (centralised) அணுகுமுறையில் உற்பத்தி, சந்தையிடுதல் பொருளியலை நடத்துகின்றனர். கம்யூனிசத்தில் அவ்வந் நாட்டரசுகளே ஒற்றைத்திறல் அணுகுமுறையில் உற்பத்தி, சந்தையிடுதல் பொருளியலை நடத்துகின்றன. இதுவே இரண்டிற்குமான வேறுபாடு. கம்யூனிச அரசுகளான உரசியாவும் சீனமும் அவற்றின் கூட்டுநாடுகளும் தொழிலாளரின் ஈடுபாடற்ற போக்கால் தாமாகவே முன்வந்து தமது நாட்டில் தாம் முன்னெடுத்த ஒற்றைத்திறல் (centralised) பொருளியல் அணுகுமுறையை கைவிட்டுவிட்டன. ஆனால் அதை தனியார் முயற்சியாக ஆக்கிவிட்டுவிட்டன. இதனால் கம்யூனிசம் உலகைவிட்டு ஒழிந்தது. இதை பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் இயற்கைக்கு முரணான சாவு என்கிறார். ஆனால் அர்குமியம் (capitalism) உலகில் இயற்கை சாவடையும் என்கிறார். இயற்கை சீற்றம், இயற்கை பேரழிவு, பெருந்தொற்று நோய் பரவல் இவற்றால் ஏற்படும் தடையால் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்து போகும் போது இனியும் தம்மால் லாபத்தில் வணிகத்தை நடத்த முடியாது என்று கருதி தொழில் நடத்தும் முதலாளிகள் தாமாகவே தொழில் நடத்துவதை நிறுத்திவிடுவர். இது ஒருவகை அவநம்பிக்கை (pessimism). இதனால் மக்கள் மேலும் இடர்படுவர். capitalism மேலும் சுண்டிச்சுருங்கி அழிந்து போகும். இயற்கை சாவு என்பதை இயற்கையால் சாவு என்றும் கொள்ள இடம் உண்டு.
கம்யூனிசம், அர்குமியியம் (capitalism) இரண்டும் உலகைவிட்டு ஒழிந்தாலும் மக்கள் வாழ்வு தொடர வேண்டும் அல்லவா? அதை ஏற்றுமதி - இறக்குமதி ஒழிந்த பல சுக்கல் (decentralised) அணுகுமுறையில் மேற்கொள்வது எப்படி என்று இன்னொரு புதிய பதிவில் பார்ப்போம்.
Self-centred philosophies create differences among human beings and balkanise the human society. Matter-centred philosophies create disparity, destroying peace in the universe. In the present world we are seeing two theories moving side by side – the self-centred theory of capitalism and the matter-centred and dogma-centred theory of communism. Capitalism cannot serve humanity, while communism failed to serve humanity. Both capitalism and communism are dying. Capitalism will die a natural death, while communism died an unnatural death.