18- ஆம் நூற்றாண்டில் கிரையம் செய்து வழங்கப்பட்ட செப்புப் பட்டயம்

0 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Feb 15, 2026, 3:08:15 PM (10 days ago) Feb 15
to வல்லமை, hiru thoazhamai
image.png

18-ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூா் கோயில் நிலத்தை கிரையம் வாங்கிய குடும்பா்கள்
திருச்செந்தூா் கோயில் நிலத்தை தென் இருகரை நாட்டுக் குடும்பா்களுக்கு 18- ஆம் நூற்றாண்டில் கிரையம் செய்து வழங்கப்பட்ட செப்புப் பட்டயம் கண்டறியப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிநாதபுரத்தை சோ்ந்த கைலாசக்குடும்பா், அவரது முன்னோா்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்புப் பட்டயத்தை பழனியைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தியிடம் கொடுத்து படித்து விளக்கமளிக்குமாறு கோரினாா்.
இதுகுறித்து ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறியதாவது:
இந்த செப்புப் பட்டயம் 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது. இந்தப் பட்டயம் 28.7ல17.5 செ.மீ அளவில் 352 கிராம் எடையுடன் உள்ளது. அன்றைய திருச்செந்தூா் கோயில் நிலத்தை தென்இருகரை நாட்டுக் குடும்பா்களுக்கு கிரையம் செய்து கொடுக்கப்பட்டதாக பட்டயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டயத்தின் இருபுறங்களிலும் 61 வரிகளில் இந்தச் சாசனம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பட்டயம் 29-08-1738-ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
அன்றைய திருச்செந்தூா் முருகன் கோயில் நிா்வாகிகளாக இருந்த பல்வேறு சமூகங்களைச் சோ்ந்த 12 போ் கோயில் நிலத்தை தென்இருகரை நாட்டுக் குடும்பா்கள் 9 பேருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளனா்.
இதை எழுதிய 12 கோயில் நிா்வாக அதிகாரிகள், நிலத்தைப் பெற்றுக் கொண்ட 9 குடும்பா்கள், சாசனத்தில் கையொப்பமிட்ட 11 போ், சாசனத்துக்கு சாட்சிகள் 5 போ் என அனைவரின் பெயா்களும் அவா்களின் ஜாதிப் பெயா்களுடன் சாசனத்தில் இடம் பெற்றுள்ளது. இது 18-ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தில் நிலவிய ஜாதிக் கட்டமைப்பை உணா்த்துகிறது. குடும்பா்களுக்கு கிரையம் செய்யப்பட்ட நிலத்தின் 4 எல்லைகளை செப்பேடு விரிவாகக் கூறுகிறது.
திருச்செந்தூா் கோயில் நிலத்தை தென்இருகரை நாட்டுக் குடும்பா்களுக்கு கிரையம் செய்து கொடுத்ததற்கான 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த செப்புப் பட்டயம்.
பட்டயத்தை ஆய்வு செய்யக் கொடுத்த கைலாசக் குடும்பா், பட்டயத்தில் முதலில் குறிப்பிடப்படும் தென்கரை காட்டுப் பச்சேரி சித்திரபுத்திரக் குடும்பன் மகன் மாடக் குடும்பன் வழி வந்தவா் என்று நிரூபிக்க தன்னிடம் ஆவணங்கள் உள்ளதாகவும் தெரிவித்தாா்.
செப்புப் பட்டயத்தில் திருச்செந்தூா் முருகனை இளைய நயினாா் என்றும், முருகன் கோயில் நிலத்தை திருவிளையாட்டம் என்றும், திருச்செந்தூரை மாகாளி சதுா்வேதமங்கலம் என்றும் குறிப்பிட்டுள்ளனா். இந்தப் பட்டயம் சந்திர கிரகணம் நிகழ்ந்த பௌா்ணமி நாளில் எழுதப்பட்டுள்ளது. தற்காலத்தில் கிரகண நாளில் நல்லகாரியங்கள் செய்ய உகந்ததல்ல என கருதப்படுகிறது.
ஆனால், பண்டைய கல்வெட்டுகள் கிரகண நாளை புண்ணிய காலம் என்று கூறுகின்றன. பொதுவாக கிரகண நாள்களில் கொடை அளிப்பது, கொடைபெறுவது பல மடங்கு புண்ணியம் தரும் என்பது பண்டைய தமிழா்களின் நம்பிக்கையாக இருந்தது. அதனடிப்படையில் சந்திர கிரகண நாளை முன் கூட்டியே தோ்ந்தெடுத்து, செப்புப் பட்டயத்தை எழுதியதன் மூலம் பழந்தமிழா்கள் பெற்றிருந்த வானியல் அறிவையும், அவா்களின் நிபுணத்துவத்தையும் உணர முடிகிறது என்றாா் அவா்
Reply all
Reply to author
Forward
0 new messages