1. புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம்: அரசர் தொடர்ச்சி ++ 2. மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 9, 2022, 7:01:24 PM1/9/22
to thiru thoazhamai, தமிழ் மீட்சிப் பாசறை, 119maa27s...@gmail.com, Raghavendra A, Headmaster - MM Higher secondary school, Thirunagar, 40. Anuragam Kalaignaan, ap.a...@gmail.com, ayyanathan k, Balakrishnan Thirugnanam, Bharathy S, sivakumar pandari, Chandra Sekar, தமிழ் யாப்பியல் ஆய்வாளர் பேரவை, World Tamil Forum, kavia...@yahoo.co.in, Chandar Subramanian, kalvettu, ymha.vaddukoddai, Kanagu Chandran, manjula.k, mkindu, Mumbai Kumanarasa Lemuriya Publications, lankasri, ne...@tamilwin.com, online...@thehindutamil.co.in, Newsofthe Transtamils, poongundran, kunathogai kunathogai, SENTHIL KUMARAN, Dhinasari, drtami...@gmail.com, Gnanam Magazine - ஞானம், hills...@gmail.com, IE Tamil, Murugesan M., in...@tyouk.org, jeyamohan....@gmail.com, kambane kazhagam, kanagad...@gmail.com, Karthikasa...@gmail.com, 156. karu Murugesan, KaviMari Kaviarasan, kavitha directions, Kaviyodai, kovai...@gmail.com, Lakshmi Kumaresan, manaa lakshmanan, me...@tyouk.org, mgayat...@gmail.com, Mu.ilangovan ??.?????????, mullaicharamtamil, nagg...@yahoo.com, Vairamuthu, pandiya raja, puduvaibloggers kuzhu, tamil_ulagam kuzhu, kuzhu, tamilmanram kuzhu, தமிழ் சிறகுகள், thamizh...@googlegroups.com, theyva-thamizh, வல்லமை, pulavar...@gmail.com, puviya...@hindutamil.co.in, r.divyar...@gmail.com, sa...@thehindutamil.co.in, Sarala M.S, Seetha Ramachandran, Arivukkarasu Su, tamizham...@gmail.com, Thakatuur Sampath, thamizhmu...@gmail.com, thi...@journalist.com, Viduthalaidaily Viduthalai, vaanila sri, Elangkumaran Nallathambi, Vijaya Raghavan, riaz66...@gmail.com, vrtami...@gmail.com, பொழிலன், p.kalai...@gmail.com, poova...@gmail.com, pon malar, yuvar...@gmail.com, ldml...@gmail.com, vydh...@yahoo.com, esukur...@gmail.com, drkadavur...@gmail.com, lalithas...@gmail.com, vathi...@gmail.com, josephse...@gmail.com, gganesh....@gmail.com, advocate....@gmail.com, gitasr...@gmail.com, ilakkanat...@gmail.com

மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

 அகரமுதல







மகாத்மா காந்தியின்   75-ஆவது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

அன்புள்ள
தம்பி தங்கைகளுக்கு,
வணக்கம்.

“எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை அன்பளிப்பாகப் பெறுங்கள்!


விளக்கம் இதோ:
நம் நாட்டு விடுதலை மூலம் உலகிற்கே அகிம்சைப் பாடம் நடத்திய அண்ணல் காந்தியை நம்மில் ஊறியிருந்த வன்முறை உணர்வுகளுக்கு நாமே பலியாக்கினோம். எனினும் அகிம்சைக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அது அமைந்தது அல்லவா?

அகிம்சைக்கு மேலும் வலுவூட்ட அகிலத்தையே ஆன்ம சக்தியால் நிரப்ப வேண்டிய அகிம்சைப் பணியாளர்களாய் நாம் ஒவ்வொருவரும் இன்று பரிணமிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

‘உங்களுக்குள் பொங்கித் ததும்பும் அகிம்சைச் சக்தியின் மூலம் உங்களுடைய அன்றாடப் பிரச்சினைகளை சுயக்கட்டுப்பாடு, சுயச்சார்புடன் எவ்வாறு அமைதியாகத் தீர்த்துக் கொள்கிறீர்கள்’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டு 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, வரும் சனவரி 20-ந்தேதிக்குள் எமக்குக் கிடைக்குமாறு  அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்புங்கள்.

வயது வரம்பு: 10 முதல் 25 வயது வரை உள்ள  மாணவர் அல்லது மாணவர் அல்லாதோர்.

கட்டுரையாளர் தமது பெயர், வயது, படிப்பு அல்லது பணி, அஞ்சல் முகவரி, பேசி எண் அல்லது மின்னஞ்சல் விவரங்களைத் தெளிவாகத் தரவேண்டும்.


சிறந்த நூறு கட்டுரையாளர்களுக்குப் பரிசு நூல்ப்பெட்டி காந்தி நினைவு தினமான சனவரி 30க்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கப்படும்.


கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி: செயலர், காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை- 600 018. மின்னஞ்சல்: kulandha...@gmail.com

 

தரவு –  முதுவை இதாயத்து


++

புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம்: அரசர் தொடர்ச்சி

 அகரமுதல



(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 16-20 தொடர்ச்சி)

இராவண காவியம்: பாயிரம்  21-25

வேறு

  1. படியிடை முத்தமிழ்ப் பாவல ராகவும்

கடியுடையத் தமிழகக் காவல ராகவும்

வடிவுடை முதுதமிழ் மரபினின் மேவிய

முடியுடை மூவர்தம் மொய்கழல் போற்றுவாம்.

  1. இலங்கையை யடைதர இளையபாழ்ம் பாவியும்

அலங்கியே யாரியர்க் கடிமையாய்ப் படையொடு

தலங்கியே யெதிர்வரக் கண்டுமத் தமிழ்மனங்

கலங்கிடா விறையவன் கழலிணை போற்றுவாம்,

வேறு

  1. கொண்டோன் களப்படவக் கொலைகார ஆரியருங்

கண்டே யிரங்கக் கணவ னுடனவிந்து

தண்டாத் தகையதரிழ்த் தாய்மானங் காத்துயர்ந்த

வண்டார் குழலி மலர்ச்சிலம்பை வாழ்த்துவமே).

முப்பால்-வேறு

24.மெய்வ கைதெரி மேலவர் போலயாம்

செய்வ தின்னசெய் யாதன வின்னென

உய்வ கைமுழு தோர்ந்து பழந்தமிழ்

ஐயர் யாத்த வறத்தினைப் போற்றுவாம்.

  1. திருவுங் கல்வியுஞ் செய்தொழின் மேன்மையும்

மருவு நண்பு மருவலர் தன்மையும்

செருவு மாட்சித் திறன்முத லாகிய

பொருவி லாத பொருளினைப் போற்றுவாம்.

தொடரும்

இராவண காவியம்

புலவர் குழந்தை

குறிப்பு:

  1. அலங்குதல்- தத்தளித்தல். கலங்குதல்-இல்

செயல் புரிதல்


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages