தொல்லியலில் ஆர்வம் உள்ள இமான் என்பவர் தென்பெண்ணை ஆற்று மணலில் தாம் கண்ட பானை ஓடுகளில் உள்ள குறியீடுகளை படமாக அவரது முகநூல் பதிவில் பகிர்ந்துள்ளார். அவற்றை ஆழ்ந்து கூர்ந்து நோக்கியத்தில் ஒரு ஓட்டில் ஊ என்ற தமிழி எழுத்து எதிர்திசையில் எழுதப்பட்டிருந்தது. மேலும் கூர்ந்து நோக்குகையில் சிந்து எழுத்து ககரம் நாம வடிவில் ⊃
நடுவில் கிடைமட்டமாக எழுதப்பட்டிருந்தது. இது வட பிராமியில் Ga ஆகும். உச்சியில் சிந்து எழுத்தில் ஒரு சிறு கோடு னகர மெய்யை குறிக்க எழுதப்பட்டுள்ளது. இவற்றை சேர்த்து எழுதினால் ஊகன் என்ற சொல் வருகிறது. ஊகன் என்ற சொல்லுக்கு புலி என்று பொருள். இதை பார்த்தால் கொங்கு பகுதியில் பறவையை, விலங்கை தம் இனப் பெயராக கொண்ட வழக்கம் தான் இங்கே நினைவிற்கு வருகிறது. எனவே இது சங்ககால பானை ஓடு எனக் கொள்ளலாம். இந்த பானைஓடு சங்க கால மக்கள் வாழ்வியலில் சிந்து எழுத்து அன்றாட பயன்பாட்டில் இருந்துள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த ஊகன் என்ற சொல் அண்மையில் நான் படித்த எகிப்து கல்லறை கையெழுத்தில் "பண்ணக் கொன் ஊகன் நரன் கண்டா அரணன்" என்ற சிறு வாக்கியத்தில் இடம்பெற்றது நினைவில் கொள்ளத்தக்கது. இதன் பொருள் தலைவன் கொன்ற புலி இறந்ததை ஆளுநர் கண்டார் என்பதே.
தற்போது தென்பெண்ணை ஆற்றில் மேற்புற கள ஆய்வில் கண்டெடுத்த குறியீடு ஓடுகள், வட்டச்சில்லு மற்றும் இரும்பு கழிவு..