(வெருளி நோய்கள் 456 – 460 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 461 – 465
உறைபனி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உறைபனி வெருளி
சிலர் பனிக்கட்டி தொடர்பான பனிச்சறுக்கு விளையாட்டு போன்றவற்றில் மரணப் பயத்தைச் சந்திருக்கலாம் அல்லது பனிச் சூழல் காரணமாகச் சாலை வழுக்கல் போன்றவற்றால் ஊர்தி நேர்ச்சி(விபத்து) நேர்ந்திருக்கலாம் அல்லது பனி தொடர்பான நோய்களோ இன்னல்களோ பிறருக்கு வந்ததைக் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது கதைகளில் படித்தோ திரைக்காட்சிகளில் பார்த்தோ இருக்கலாம். இதனால் அளவு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர். இவர்களுள் பலர் பனிபாலேட்டைக்கூட(ice cream) உட் கொள்ள மாட்டார்கள்.
pago என்னும் கிரேக்கச் சொல்லிற்குப் பனி எனப் பொருள்.
00
உறைந்த உணவு (frozen food )தொடர்பான மிகையான பேரச்சம் உறையுணா வெருளி.
உணவு வெருளி(Cibophobia) உள்ளவர்களுக்கு உறையுணா வெருளி வர வாய்ப்புள்ளது.
ஊட்டச்சத்து இழப்பு, தீய கொழுப்புகள், உறைந்த உணவுகளில் சேர்க்கப்படும் சருக்கரைகள், இவற்றை உட்கொள்ளுவதால் உடல் பருமன், இதய நோய், சிலவகையான புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு முதலியன உறையுணாவால் ஏற்படும் என்பதால் உறைவுணா மீது வெருளி வருகிறது.
00
தங்குமிடம் குறித்த அளவுகடந்த பேரச்சம் உறைவக வெருளி.
hotel என்பதை நாம் உணவகம் என்று மட்டும் பார்க்கிறோம். பெரிய தங்குமிடங்களை hotel என்று சொல்வதை மறந்து விடுகிறோம். எனவே, உறைவதற்கான – தங்குவதற்கான – விடுதியை உறைவகம் என்று இங்கே குறித்துள்ளேன். தங்கும் விடுதியில் அவப்பெயர் தரும் நிகழ்வுகள் நேருமோ, மது, மாது ஆகியவற்றின் மூலம் கவர விரும்பும் முறையற்றவர்களின் தொல்லைகள் இருக்குமோ, குடும்பத்தினருடன் தங்குவதற்கு ஏற்றதுதானா? கொசு, பூச்சி முதலானவற்றின் தொல்லைகள் இருக்கும் என்பனபோன்ற அச்சங்கள் பலவும் தங்குமிடம் குறித்து எழும். இந்நிலை வரம்பு கடக்கும் பொழுது உறைவக வெருளியாகிறது.
deversora என்னும் இலத்தீன் சொல்லுக்கு வாடகை விடுதி, தங்குமிடம் என்று பொருள்.
காண்க: உணவு விடுதி வெருளி – Cauponaphobia
00
உற்சாகம் குறித்த வரம்பற்ற பேரச்சம் உற்சாக வெருளி.
உற்சாகம் அல்லது பேரார்வம் அல்லது கிளர்ச்சியால் தவறான முடிவு எடுக்கப்படுமோ என்று கவலையுற்றுப் பேரச்சம் கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
----
(வெருளி நோய்கள் 461 – 465 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 466 – 470
466. ஊக்கிசை வெருளி – Zorevophobia
ஊக்கிசை (Jazz Music) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஊக்கிசை வெருளி.
முதலில் அகராதிப் பொருள் அடிப்படையில் ஆரவார இசை எனக் குறிப்பிட்டிருந்தேன். இயாசு / jazz என்பதன் மூலப் பொருள் ஊக்கம் என்பதாகும். எனவே, ஊக்குவிக்கும் இவ்விசையை ஊக்கிசை எனக் குறித்துள்ளேன்.
00
ஊஞ்சல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊஞ்சல் வெருளி.
ஊஞ்சல் ஆடும் பொழுது கீழே விழ நேரிடலாம், ஊஞ்சல் சுற்றிக் கொள்வதால் மயக்கம் வரலாம், போன்ற கவலகளால் பேரச்சம் கொள்கின்றனர்.
ஊசல் வெருளி(Pendulaphobia) உள்ளவர்களுக்கு ஊஞ்சல் வெருளி வர வாய்ப்பு உள்ளது.
kounயo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அசைதல்.
இச்சொல்லில் இருந்துதான் அசையும் ஊஞ்சலைக் குறிக்கும் என்னும் சொல் உருவானது.
ஊடகம் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊடக வெருளி.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது, செய்தித்தாள்களைப் படிப்பது இணையத்தில் உலாவுவது என ஊடகச் செயல்பாடுகளின்மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.
சிறுவர்கள் சில நேரங்களில் பெரியவர்களும் துயரச் செய்திகளைப் பார்க்க அல்லது கேட்க நேருவதால் ஊடகம் மீது வெறுப்பு கொள்வது உண்டு. அரசியல் வாதிகளும் புகழ் வாணர்களும் அதிகாரிகளும் பிறரும் ஊடகத்தில் தங்களைப்பற்றிய தவறான செய்தி வெளிவருதல் அல்லது கமுக்கமான செய்தியை வெளிக் கொணர்தல் ஆகியன் நேர்ந்தால் அல்லது நேரும் என அறிய வந்தால், அல்லது அவ்வாறு வந்த செய்தி மேலும் விரிவாக வந்து அவமானத்தை ஏற்படும் என அஞ்சினால் ஏற்படும் பேரச்சமே இது.
00
ஊட்டா (Utah) மாநிலம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ஊட்டா வெருளி.
இது, 4.01.1896 இல் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 45ஆவதாகச் சேர்ந்த மாநிலமாகும். இம்மாநில மக்கள், பழக்க வழக்கங்கள், நாகரிகக் கூறுகள், பொருள்கள், அடையாளங்கள் என ஊட்டா தொடர்பானவற்றில் ஏற்படும் தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
ஊது சுடர்[blow torche blowlamp (UK) ] குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊது சுடர் வெருளி.
ஊது சுடர் என்பது பொற்கொல்லர்களாலும் கம்மியர்களாலும் பயன்படுத்தப்படுவதாகும். விழிப்புடன் கையாளாவிட்டால் உடலில் பட்டுத் தீக்காயங்கள் அல்லது வேறு இடர்களை உருவாக்கி விடும். எனவே, கவனமாகக் கையாள்வது குறித்துக் கவலைப்பட்டும் பயன்படுத்தத் தெரியாதவர் யாரும் பயன்படுத்தி இன்னல் நேருமோ என்றும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: தொடர்ச்சி)
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 :
ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும்
கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும்
இக்கோப்பில்,
“கை குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்கப்படும்’ என உள்ளது.
“கை’ என்பது ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும். ஓரெழுத்துச் சொல்லிற்குப் பின்பும் வல்லினம் மிக வேண்டும்.
கைக்குழந்தை
தீத்தடுப்புப் பயிற்சி
தைத்திங்கள்
ஈத்தொல்லை
கேள்வி: ஓரெழுத்து ஒரு மொழி’ சிலவாகத்தானே இருக்கும்.
பதில் : இல்லவேயில்லை.
ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாய் அமையும் சிறப்பு தமிழில் தான் மிகுதியாக உள்ளது. நன்னூலார், நெடில் எழுத்துக்களில் உயிர், 6 மகர வரிசை 6 குறில் எழுத்துகளில் நொ, து ஆகிய சேர்ந்து 42 என்கிறார்.
கு.கௌ, பி, வே எனச் சிறப்பில்லாதன 4 உள்ளன என்றும் குறிப்பிடுகின்றார்.
உயிர் நெடிலில்
ஆ- பசு, ஈ- உயிரினம்; கொடுத்தல், ஊ-இறைச்சி, ஏ- அம்பு, ஐ -அழகு; தலைவன், ஓ-மதகு நீர் தாங்கும் பலகை எனப் பொருள். ஒள என்றால் “கடிதல்’ என்றும் “பூமி’ என்றும் பொருள் உள்ளனவாதலின் இதுவும் “ஒரெழுத்து ஒரு சொல்லே.
க, ச, வ வரிசைகளில்
நன்னான்கு
கா-சோலை
கூ-கூவு
கை – உடலின் உறுப்பு:
கோ- அரசன்
சா- இறப்பு
சீ- இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு, சீழ்
சே-எருது
சோ-மதில்
வா – வரச்சொல்லுதல்
வி -விசும்பு, காற்று
வீ-வீழும்பூ,
வை- வைத்தல், கூர்மை,
வெள-கவருதல்
(ஐந்தாவதாக வி சேர்க்கப்பட்டுள்ளது.)
த, ந, ப வரிசைகளில்
ஐந்தைந்து
தா-தரச் சொல்லுதல்:
தீ -நெருப்பு:
து-உப்பு:
தூ-ஊன்:
தே-தெய்வம்;
தை-தைத்திங்கள்:, தைத்தல்:
நா-நாக்கு:
நீ -முன்னிலைச்சுட்டு;
நே-அன்பு;
நை-நொந்துபோதல்;
நொ-துன்பப்படுதல்;
நோ-நோய்;
பா-பாட்டு,
பூ-மலர்,
பே-நுரை,
பை-நிறம்; அழகு; பொருள்வைப்பதற்குரிய பை
போ-போதல்
மா-மாமரம்; பெரிய,
மீ-மேல்,
மூ-முதுமை
மே-அன்பு,
மை-கண்மை; அச்சு மை;
மோ-முகருதல்)
யா வரிசையில் 1
யா-யாவை, மர வகை, கரி மரம்
குறில் எழுத்துகளில், அ, இ, உ மூன்றும் அப்பக்கம், இப்பக்கம், உட்பக்கம் எúச் சுட்டுப் பொருள் தருவன.
“உ’கரச் சுட்டு இப்பொழுது பயன்பாட்டில் இல்லை எனினும், “ஊழையும் உப்பக்கம் காண் பர்’ எனும் குறள்அடிபோன்று “ஒ’ என்றால் “ஒற்றுமையாயிரு’ “தகுதியாயிரு’ எனப் பொருள்கள் உள்ளன. எனவே 12 உயிர் எழுத்துமே ஓரெழுத்து ஒரு சொல் ஆகும்.
பின்னர் வந்தவர்கள் மேலும் சில ஓரெழுத்தொரு மொழிகளைக் குறித்துள்ளனர்.
இவ்வாறு வேறு எந்த மொழியிலும் ஓரெழுத்து ஒரு மொழிகள் மிகுதியாக இல்லை என்பதும் தமிழுக்குரிய சிறப்புகளில் ஒன்றாகும்.
கேள்வி: தைத்திங்கள் என்பது போன்று பிற மாதங்களுக்கு அடுத்து வல்லினம் மிகாதா?
பதில்: தைத்திங்கள் என்பது இருபெயரிட்டு பண்புத் தொகையாகும். மாரிக்காலம், முல்லைப்பூ போன்றவையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.
அனைத்து மாதங்களின் பெயர்களும் திங்கள் என்பதுடன் சேருகையில் “இருபெயரெட்டுப் பண்புத் தொகையாய்’ விளங்கி வல்லெழுத்து மிகும்.
தைத்திங்கள் மாசித்திங்கள், “பங்குனித் திங்கள், சித்திரைத் திங்கள், வைகாசித் திங்கள், ஆனித் திங்கள், ஆடித் திங்கள், ஆவணித் திங்கள், புரட்டாசித் திங்கள், ஐப்பசித் திங்கள், கார்த்திகைத் திங்கள், மார்கழித் திங்கள் என வரும்
கேள்வி: கிழமைகளில் இவ்வாறு வல்லின எழுத்து மிகுதியாய் வருமா?
பதில்: ஞாயிறு என்பதுடன் “கிழமை’ சேரும்பொழுது, ஞாயிற்றுக் கிழமை என வரும்.
செவ்வாய்க் கிழமை
வெள்ளிக் கிழமை
சனிக்கிழமை அல்லது காரிக்கிழமை
எனப் பிற கிழமைகளில் வல்லின எழுத்து இடையில் வரும்.
மேலும்
மழைக்காலம்
கோடைக்காலம்
பிச்சிப் பூ
மல்லிகைப்பூ
தாமரைப்பூ
அல்லிப்பூ
எனபன போல், பிற இடங்களிலும் வரும்.
மாதம் தமிழ்ச் சொல்லா?
வானியல் அறிவியல் மிகச்சிறந்த நிலையில் தமிழர்கள் இருந்துள்ளனர். நிலா பூமியைச் சுற்றும் கால அளவைக் கொண்டு ஒரு காலப்பகுப்பை வகுத்துள்ளனர். திங்களை அடிப்படையாகக் கொண்ட கால அளவைக் கொண்டு ஒரு காலப்பகுப்பை வகுத்துள்ளனர். திங்களை அடிப்படையாகக் கொண்ட அளவு என்பதால் “திங்கள்’ எனப் பெயரிட்டனர். நிலவின் மற்றொரு பெயர் மதி. மதியை அடிப்படையாகக் கொண்டு “மதியம்’ “மாதம்’ என உருவாகியுள்ளது. “மதியம்’ என்றால் நண்பகலன்று.
மாதம் மாசம் ஆனது இருப்பினும்
திங்கள் என்பது சிறப்பான சொல்லாகும்.
கேள்வி: ஆங்கில மாதங்களில் பெயர்களுக்குப் பின்னும் வல்லினம் மிகுமா?
மார்ச்சு, ஏப்பிரல், சூன், ஆகசுட்டு ஆகிய 4 மாதங்கள் நீங்கலாகப் பிற மாதங்களில்
சனவரித் திங்கள், பிப்ரவரித் திங்கள், மேத் திங்கள், சூலைத் திங்கள், செப்டம்பர்த் திங்கள், அக்டோபர்த் திங்கள், நவம்பர்த் திங்கள், திசம்பர்த் திங்கள் என வல்லின எழுத்து மிகுதியாய் வரும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்