"யா" என்ற நூல்

2 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 21, 2022, 4:32:50 AM10/21/22
to வல்லமை, hiru thoazhamai
ஞானம் என்பது தமிழ்ச்சொல் என்று, தனது "யா" என்ற நூலில் நிறுவுகிறார் அருளியார். அவரது ஆய்வினை சுருக்கமாக இங்கே பதிவிட்டுள்ளேன்.
யா: கருமைக் கருத்து மூலவேர்
யா>ஞா [யகர - ஞகரத் திரிபு]
யா>ஞா>ஞா+டு> ஞாடு>ஞாடு+அம்>(ஞாடம்)>ஞாட்டம்>நாட்டம்
ஞாடு>நாடு>நாடு+தல்>நாடுதல்
நாட்டம் = கண்
(காண்க : மலைபடு 46, புறம் 62:16)
நாட்டம் = (கண்)>(பார்வை)>நோக்கம்
"நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்கு" (தொல்.பொருள்.களவி:5)
நாட்டம்>நோக்கம் =ஆராய்ச்சி
(காண்க : தொல்.பொருள் : 3:33;2, தொல்.சொல்.குற்:78-5, புறம் 35-14)
நாட்டம்>(கண்)>(பார்வை)> (நோக்கம்)>(ஆராய்ச்சி)>கணியம்
"சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்று" (பதிற்றுப்: 211)
ஞாடு>நாடு = கண், பார், ஆராய், தேடு
நாடுதல் = ஆராய்தல் (குறள் 518, 520)
நாடாது = ஆராயாது (குறள் 791, அகம் 268:7)
நாடுதல்= (ஆராய்தல்)>தேடுதல்
நாடுதல்= விரும்புதல்
ஞாடு>ஞோடு (உயிரியைபு மாற்றம்)
ஞோடு>நோடு
நோடுதல் = காணுதல்
நோடு>நோடு+அம்>நோட்டம் = நோக்கம்
கண்+நோட்டம் = கண்ணோட்டம்
ஞாடு என்ற சொல்லின் உயிரியைபு மாற்றத்தால் திரிபெய்திய நோடு என்ற வினைச்சொல் வடிவம் நமது இலக்கியங்களுள் காணப்பெறவில்லை. கூட்டுச்சொல்லாக மட்டுமே ஆளப்பட்டுள்ளது.
காண்க: கண்ணோக்கு, நோட்டம், நோட்டமிடுதல், நோட்டம் பார்த்தல்
தமிழிய மொழிகள் சிலவற்றுள் இச்சொல்:
மலையாளம் : நோட்டம்
கன்னடம் : நோடு, நொடிசு, நோட்டகா
குடகு : நோட்டி
துளு : நோட்டா
யா>ஞா+கு>ஞாகு>ஞோகு>ஞோக்கு>நோக்கு
நோக்கு = பார்வை, கூர்த்த பார்வை
நோக்கு+அல் = நோக்கல் = பார்த்தல்
காண்க: பதி 27:1, மலை : 240, அகம் 297:97, நற் : 82:5, கலி 49:8
நோக்கு = கண்
யா என்னும் கருமைக் கருத்து மூலவேரின்று (யா>ஞா>(ஞா+கு)>ஞாகு>ஞோகு>ஞோக்கு>நோக்கு என்றவாறு உருவாக்கப்பெற்ற காண் என்னும் பொருட்பாடுடைய சொல்- அக்காணுதல் தொழிலை நிகழ்த்தும் உறுப்பாகிய கண்ணுக்கும் வழங்கத் தலைப்பட்டது.
"மலர்ந்த நோக்கின் .... சேயிழை" (பதிற் 65:7...10)
"மாழை நோக்கின், காழ் இயல் வன முலை" (அகம் 116:8)
நோக்குதல் வினை, காட்சியறிவையும் வழங்குவதால் "கண்டறிதல்" என்னும் பொருட்பாட்டிற்கும் வளர்ந்தது.
ஒருவனுக்கு ஓர் அறிவுச் செய்தியை நாம் விளக்கிய பின்னர் - அவனிடம் "நான் கூறியது என்ன என்று தெரிகிறதா?" என்று கேட்போமாயின்- அவன் அதற்கு தெரிகிறது என்றோ தெரியவில்லை என்றோ பதிலளிப்பதனுள்ளும்- காட்சிப் பொருளானது - அறிந்து கொள்ளுகைப் பொருளுக்கு வளர்ந்து நின்றுள்ள நம்மின் மொழியியன்மை வளர்ச்சி வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
காட்சி என்னும் சொல்லே - "அறிவு" என்னும் பொருட்பாட்டில் தமிழில் வளர்ந்து செழித்து நின்றமையும் - இவ்விடத்திற் கருதுதற்குரியது.
காட்சி = காணுதல்
(காண்க: புறம் 236:10-12, சிறு 136-139, நற் 397 : 1-3)
காட்சி = அறிவு
(காண்க : புறம் 170:2-4, 213:4-6, பெரும் 445, குறிஞ்சி 15-18, மலை 49,50)
காட்சி என்னும் சொல் "அறிவு" என்ற பொருளுக்கு ஆகி நன்கு வளர்ச்சியெய்திய பின்றை - அறிவுப் பொருண்மை சான்ற நூலுக்கும் வளர்ந்த உண்மையும் இவ்விடத்திற் குறிப்பிடத்தக்கதாகும்.
(காண்க: புறம் 192 : 8-12)
நோக்குதல் (கண்ணால் நோக்குதல்) என்னும் கருத்து நிலைக்குப் பின்னர் - "மனத்தால் நோக்குதல்" என்றவாறான அடுத்த படிநிலைக்கு வளரத் தொடங்கியமைக்கு (நோக்கு +அல்+நோக்கம்) நோக்கனோக்கம் என்ற கூட்டுச் சொல்லையே சான்றாக நோக்கி உண்மை அறியலாம்.
"நோக்கல் நோக்கம்" (தொல்.சொல்.வேற் 10:1)
நச் உரை: கண்ணால் நோக்கும் நோக்கமன்றி - மனதால் நோக்கும் நோக்கம்- அதாவது "கருதுதல்"
நோக்கு = அறிவு
"நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும்" (மதுரை :517-518)
[ உரை : கூரிய அறிவினையுடைய ஓவிய வினைஞரும்]
நோக்கு+அம் >நோக்கம் = அறிவு
"முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு" (மலை :75)
[உரை : முற்றுங் கொடுப்பினும் அமைதி பிறவாத அறிவுடனே ]
யா>ஞா>ஞா+டு>ஞாடு+அம்>(ஞாடம்) >ஞாட்டம்>நாட்டம்
ஞாடு>ஞோடு>நோடு>நோடு+அம்>(நோடம்)>நோட்டம்
ஞா>ஞா+கு>ஞாகு>ஞோகு>ஞோக்கு>நோக்கு
"கண்" என்னும் அடிப்படைப் பொருளையும் - அதன்வழியே கண்ணாற் காணுகை, மனதாற் காணுகை, அறிகை, ஆராய்கை என்றவாறு பொருள் விளக்கங்களையும் பெற்று வளர்ந்த "நாட்டம்" என்னும் சொல்லுக்கும் -
கண்ணால் பார், உற்று நோக்கு, ஆராய் என்றவாறான பொருள்களில் வளர்ந்து சென்ற "நோடு" என்னும் வினைச்சொல்லின் வழி எழுந்த தொழிற்பெயரான "நோட்டம்" என்ற சொல்லுக்கும்-
கண்ணால் பார், மனத்தால் காண், கருது, அறி என்றவாறான பொருள்களில் வளர்ந்து சென்ற "நோக்கு" என்னும் வினைச்சொல் வடிவினின்று எழுந்த தொழிற்பெயர்களான "நோக்கு", "நோக்கம்" ஆகிய சொற்களுக்கும்-
கருமைக்கருத்து மூலவேராகிய "யா" என்னும் ஒலியே கருவாகும். அக்கரு மூல வேர் - அடுத்த படிநிலைகளில் மூக்கொலியாகச் சிறந்து திரிபுற்று - "ஞா" என்னும் கிளை வேரையும் , "ஞோ" என்னும் கிளை வேரினின்று கிளைத்த பக்கவேரையும் பெற்றது.
"காண்" என்பதுவே, இவ்விருவகை வேர்களுக்குமான கருப்பொருள் ஆகும்.
இவ்விருவகை வேர்களும், இந்திய-ஐரோப்பிய மொழிகள் பலவற்றினுள் அறிகைக் கருத்துக்கும் அதன்வழி வளர்ந்த பொருள் விரிவாக்கங்கள் பலவற்றிற்கும் அடிப்டைகளாக நின்றிலங்குகின்றன.
கிரேக்கம்:
ஞோ(gno) = know
gnosis = knowledge
gnome = opinion
gnomon = indicator
gnostos = unknown
gnomon =judge
இலத்தீன்:
Gnostic = relating to knowledge
Cognoscere = ascertain
Ignorantia = Ignorance
யா>ஞா
ஞா+அனம்>ஞானம் = காட்சியறிவு, அறிவு
(அனம் : ஓர் ஈறு)
[ஒ.நோ: மா+அனம் =மானம்
தா+அனம் = தானம்]
ஞானம் =அறிவு
(காண்க : நாலடி :308-2, 311:3-4, பழ : 298:2-3, சிறுபஞ்: 34:4, மணி : 23-138, 30-262)
ஞானம் = கல்வி (சூடா.நி)
ஞானம் = மெய்யறிவு
"ஞானந் தன்னை நல்கிய நன்மையும்" (திருவாச 2:74)
ஞானம் = மெய்யறிவு நூல் (சூடா.நி)
சில கூட்டுச்சொற்கள்:
ஞானக்கண், ஞானக்காட்சி, ஞானச்சுடர், ஞானப்பிள்ளை, ஞானப்பெண், ஞானன் (அறிவில் முதிர்ந்தோன்)
'ஞா' என்ற ஒலிப்பு தமிழில் உள்ளது போல் சிறப்புறவும், தனிப்பெறவுமான தெளிந்த அமைப்பு வடிவில் - சமற்கிருதத்திலோ அல்லது அம்மொழிக்கு மூலவகைப்பட்ட கிரேக்கத்திலோ இல்லவேயில்லை என்னும் உண்மையும்- "ஞா" என்னும் செப்பத் தமிழ் ஒலிப்பே - gno, gna, gn என்றவாறான பல்வேறு மூலவொலித் திரிபுகளாக - மேலை ஆரிய இனமொழிகள் பலவற்றிலும் இந்திய-ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் படிந்துள்ளன என்னும் உண்மையும் நன்கு உளங்கொள்ள வேண்டிய செய்திகளாகும்.
ஞா+அகம்>ஞாவகம் = அகக்காட்சி, நினைவு
ஞாவகம்>ஞாபகம்
------------------
ஞானம் என்ற சொல் தமிழ்ச்சொல்லே என்று நிறுவிய
அருளியாருக்கு மிக்க நன்றி.
"யா" என்ற நூலைப் பெற : 9791331700/9487146002
மின்னெழுத்தில் வடித்தது,
பெஞ்சமின் பிராங்கிளின். பி
2- துலை- 2022
(19-10-2022) — தமிழ் உடன்
Reply all
Reply to author
Forward
0 new messages