You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to thiru thoazhamai
இலங்கை ஒரே நாடு என்றால் தன் நாட்டுத் தமிழ் மக்களையே கொன்றொழித்த /- தமிழ் ஈழம் தனி நாடு எனில், அண்டை நாட்டுத் தமிழர்களை அழித்தொழித்த மிகப் பெரும் அவலத் துயரத் திங்கள் மேத் திங்கள்! துயரம தந்தவர்கள் துரத்தப்படுவது எப்போது?
பெண்களைக் கொடூரமாகக் கொன்ற பின்பும் சிங்களர்கள் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டு கயமைக்கு இரையாக்கிய துயரத் திங்கள் மேத்திங்கள்.கயவர்கள் எமனுக்கு இரையாவது எப்போது?
உலகத்தில் எங்கே துன்பம் நேர்ந்தாலும் குரல் கொடுத்து உதவும் தமிழ் நாட்டினர் எல்லையில் சொந்தங்கள் கொடுமைக்கு ஆளானாலும் ஊமை ஆனதால் 200,000 தமிழர்கள் படுகொலையான பெரும் துயர நாள் இன்று (18/5). இறந்தவரை வணங்கி, இனி இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி இடச் செய்வோம்! தமிழ் ஈழம் மலரட்டும்!