1. எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும் கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும் ++ 2. வெருளி நோய்கள் 446 – 450 : இலக்குவனார் திருவள்ளுவன்

4 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 25, 2025, 7:03:18 PM (6 days ago) Sep 25
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

வெருளி நோய்கள் 446 – 450 : இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்      26 September 2025      கரமுதல


(வெருளி நோய்கள் 441-445 : தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 446 – 450

  1. உலர் சளி வெருளி – Mucophobia

உலர் சளி தொடர்பான வரம்பு கடந்த பேரச்சம் உலர்சளி வெருளி.
சளியில் உள்ள தொற்றுயி நுண்மிகள் மூலம் பன்றிக்காய்ச்சல் முதலான நோய்கள் பரவுவதால், சளிமீதான பேரச்சம் வருகிறது. இருமலைத் தூண்டும்; சோர்வை உண்டாக்கும்; பொதுவான நலிவை ஏற்படுத்தும்; பல நாட்களுக்கு உடலைப் பாதிக்கக்கூடும்; என்ற காரணங்களால் உலர்சளி மீது பேரச்சங்கள் வருகின்றன.
Nakusophobia என்பதையும் உலர்சளி வெருளி என முன்பதிப்பில் குறித்திருந்தேன். எனினும் இதை ஆசனவாய் வெருளி என்பதுதான் பொருத்தமாக இருக்கும். எனவே இப்பதிப்பில் எடுத்து விடடேன்.
00

  1. உலூசி நேசிப்பு வெருளி – Lovesyouphobia

உலூசி ஆடர்லி என்னும் புகழ்வாணர், அவருடன் இருப்போர் மீதான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் உலூசி நேசிப்பு வெருளி.
பொறாமையின் காரணமாகவும் இவ்வெருளி உருவாகலாம்.
‘உந்தன் நேசிப்பு’ வெருளி என்று நேர் பொருளாகச் சொல்லாமல் தெளிவு கருதி உரியவர் பெயரைக் குறிப்பிட்டு உலூசி (ஆடர்லி) நேசிப்பு வெருளி எனக் குறித்துள்ளேன்.
சிலர் அப்படி ஒன்றும் உலூசி ஆடர்லி தொடர்பில் பேரச்சம் கொண்டவர் இல்லை. எனவே, இதனை வெருளிப்பட்டியலில் இருந்து எடுத்துவிடலாம் என்கின்றனர்.
புகழ்வாணர் வெருளியைச் சேர்ந்தது.
00

  1. உலூசியானா வெருளி – Louisianaphobia

உலூசியானா(Louisiana) மாநிலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் உலூசியானா வெருளி.
ஐக்கிய அமெரிக்காவில் 18 ஆவது மாநிலமாக 1812 இல் இணைந்தது உலூசியானா. இதன் தலைநகரம் பாடன் இரெளசு(Baton Rouge).
00

  1. உலூயிகி வெருளி – Luigiphobia

காணாட்டப் புனைவுரு உலூயிகி (Luigi )குறித்த வரம்பற்ற பேரச்சம் உலூயிகி வெருளி.

00

  1. உலை வெருளி – Fornaciphobia

உலை/ சூளை (furnace) குறித்த வரம்பற்ற பேரச்சம் உலை வெருளி.
fornaci என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பொருள் உலை/சூளை.
00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,

வெருளி அறிவியல் தொகுதி 1/5

++

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும் கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும்


ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன் 
     26 September 2025      கரமுதல


(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 :

ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும்

கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும்

இக்கோப்பில்,

“கை குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்கப்படும்’ என உள்ளது.

“கை’ என்பது  ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும். ஓரெழுத்துச் சொல்லிற்குப் பின்பும் வல்லினம் மிக வேண்டும்.

கைக்குழந்தை

தீத்தடுப்புப் பயிற்சி

தைத்திங்கள்

ஈத்தொல்லை

கேள்வி: ஓரெழுத்து ஒரு மொழி’ சிலவாகத்தானே இருக்கும்.

பதில் : இல்லவேயில்லை.

ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாய் அமையும் சிறப்பு தமிழில் தான் மிகுதியாக உள்ளது. நன்னூலார், நெடில் எழுத்துக்களில் உயிர், 6 மகர வரிசை 6 குறில் எழுத்துகளில் நொ, து ஆகிய சேர்ந்து 42 என்கிறார்.

 கு.கௌ, பி, வே எனச் சிறப்பில்லாதன 4 உள்ளன என்றும் குறிப்பிடுகின்றார்.

உயிர் நெடிலில்

 ஆ- பசு, ஈ- உயிரினம்; கொடுத்தல், ஊ-இறைச்சி, ஏ- அம்பு, ஐ -அழகு; தலைவன், ஓ-மதகு நீர் தாங்கும் பலகை எனப் பொருள். ஒள என்றால் “கடிதல்’ என்றும் “பூமி’ என்றும் பொருள் உள்ளனவாதலின் இதுவும் “ஒரெழுத்து ஒரு சொல்லே.

க, ச, வ வரிசைகளில்

நன்னான்கு

கா-சோலை

கூ-கூவு

கை – உடலின் உறுப்பு:

கோ- அரசன்

சா- இறப்பு

சீ- இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு, சீழ்

சே-எருது

சோ-மதில்

வா – வரச்சொல்லுதல்

வி -விசும்பு, காற்று

வீ-வீழும்பூ,

வை- வைத்தல், கூர்மை,

வெள-கவருதல்

(ஐந்தாவதாக வி சேர்க்கப்பட்டுள்ளது.)

த, ந, ப வரிசைகளில்

ஐந்தைந்து

தா-தரச் சொல்லுதல்:

தீ -நெருப்பு:

து-உப்பு:

தூ-ஊன்:

தே-தெய்வம்;

தை-தைத்திங்கள்:, தைத்தல்:

நா-நாக்கு:

நீ -முன்னிலைச்சுட்டு;

நே-அன்பு;

நை-நொந்துபோதல்;

நொ-துன்பப்படுதல்;

நோ-நோய்;

பா-பாட்டு,

பூ-மலர்,

பே-நுரை,

பை-நிறம்; அழகு; பொருள்வைப்பதற்குரிய பை

போ-போதல்

மா-மாமரம்; பெரிய,

மீ-மேல்,

மூ-முதுமை

மே-அன்பு,

மை-கண்மை; அச்சு மை;

மோ-முகருதல்)

யா வரிசையில் 1

யா-யாவை, மர வகை, கரி மரம்

குறில் எழுத்துகளில், அ, இ, உ மூன்றும் அப்பக்கம், இப்பக்கம், உட்பக்கம் எúச் சுட்டுப் பொருள் தருவன.

 “உ’கரச் சுட்டு இப்பொழுது பயன்பாட்டில் இல்லை எனினும், “ஊழையும் உப்பக்கம் காண் பர்’ எனும் குறள்அடிபோன்று “ஒ’ என்றால் “ஒற்றுமையாயிரு’ “தகுதியாயிரு’ எனப் பொருள்கள் உள்ளன. எனவே 12 உயிர் எழுத்துமே ஓரெழுத்து ஒரு சொல் ஆகும்.

பின்னர் வந்தவர்கள் மேலும் சில ஓரெழுத்தொரு மொழிகளைக் குறித்துள்ளனர்.

இவ்வாறு வேறு எந்த மொழியிலும் ஓரெழுத்து ஒரு மொழிகள் மிகுதியாக இல்லை என்பதும் தமிழுக்குரிய சிறப்புகளில் ஒன்றாகும்.

கேள்வி: தைத்திங்கள் என்பது போன்று பிற மாதங்களுக்கு அடுத்து வல்லினம் மிகாதா?

பதில்: தைத்திங்கள் என்பது இருபெயரிட்டு பண்புத் தொகையாகும். மாரிக்காலம், முல்லைப்பூ போன்றவையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.

அனைத்து மாதங்களின் பெயர்களும் திங்கள் என்பதுடன் சேருகையில் “இருபெயரெட்டுப் பண்புத் தொகையாய்’ விளங்கி வல்லெழுத்து மிகும்.

தைத்திங்கள் மாசித்திங்கள், “பங்குனித் திங்கள், சித்திரைத் திங்கள், வைகாசித் திங்கள், ஆனித் திங்கள், ஆடித் திங்கள், ஆவணித் திங்கள், புரட்டாசித் திங்கள், ஐப்பசித் திங்கள், கார்த்திகைத் திங்கள், மார்கழித் திங்கள் என வரும்

கேள்வி: கிழமைகளில் இவ்வாறு வல்லின எழுத்து மிகுதியாய் வருமா?

பதில்: ஞாயிறு என்பதுடன் “கிழமை’ சேரும்பொழுது, ஞாயிற்றுக் கிழமை என வரும்.

செவ்வாய்க் கிழமை

வெள்ளிக் கிழமை

சனிக்கிழமை அல்லது காரிக்கிழமை

எனப் பிற கிழமைகளில் வல்லின எழுத்து இடையில் வரும்.

மேலும்

மழைக்காலம்

கோடைக்காலம்

பிச்சிப் பூ

மல்லிகைப்பூ

தாமரைப்பூ

அல்லிப்பூ

எனபன போல், பிற இடங்களிலும் வரும்.

மாதம் தமிழ்ச் சொல்லா?

வானியல் அறிவியல் மிகச்சிறந்த நிலையில் தமிழர்கள் இருந்துள்ளனர். நிலா பூமியைச் சுற்றும் கால அளவைக் கொண்டு ஒரு காலப்பகுப்பை வகுத்துள்ளனர். திங்களை அடிப்படையாகக் கொண்ட கால அளவைக் கொண்டு ஒரு காலப்பகுப்பை வகுத்துள்ளனர். திங்களை அடிப்படையாகக் கொண்ட அளவு என்பதால் “திங்கள்’ எனப் பெயரிட்டனர். நிலவின் மற்றொரு பெயர் மதி. மதியை அடிப்படையாகக் கொண்டு “மதியம்’ “மாதம்’ என உருவாகியுள்ளது. “மதியம்’ என்றால் நண்பகலன்று.

மாதம் மாசம் ஆனது இருப்பினும்

திங்கள் என்பது சிறப்பான சொல்லாகும்.

கேள்வி: ஆங்கில மாதங்களில் பெயர்களுக்குப் பின்னும் வல்லினம் மிகுமா?

மார்ச்சு, ஏப்பிரல், சூன், ஆகசுட்டு ஆகிய 4 மாதங்கள் நீங்கலாகப் பிற மாதங்களில்

சனவரித் திங்கள், பிப்ரவரித் திங்கள், மேத் திங்கள், சூலைத் திங்கள், செப்டம்பர்த் திங்கள், அக்டோபர்த் திங்கள், நவம்பர்த் திங்கள், திசம்பர்த் திங்கள் என வல்லின எழுத்து மிகுதியாய் வரும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

++




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages