வேங்கையின் மைந்தன்

21 views
Skip to first unread message

ennar

unread,
Jul 22, 2018, 9:23:06 PM7/22/18
to தென்னவன்

கவிஞர் த.. சுந்தரராசன் அவர்கள் எழுதிய வேங்கையின் வேந்தன் கவி நாடகத்தை தங்களுக்கு இணையத்தில் வழங்குவதில் நான் பெருமை கொள்கிறேன் இது முழுக்க முழுக்க

சுந்தரராசன் எழுதியது தான்

 

அங்கம் 1

சோழமன்னன் விஜயாலயனும் அவன் அமைச்சர் கொடும்பாளூர் வேளிரும் அரசியல் நிலைப்பற்றிப் பேசுகின்றனர்.

பல்லவரைத் துணையாகக் கொண்ட பாண்டியரை எதிர்க்கும் போதெல்லாம் வென்றால் பலன் பல்லவர்க்கு; தோற்றால் இழப்பு சோழர்க்கு என்றால் அவர் துணை நம்கு எதற்கு? ' என்றான் சோழன். அதற்கு வேளிர் 'மறுமுறை பாண்டியர் படை எடுத்தால் பல்லவரை நாம் கேடயமாகப் பயன் படுத்த வேண்டும். அதனோடு நீர் வாள்மேல் கொண்டுள்ள நம்பிக்கையை உம் வழித்தோன்றல் ஆதித்தனிடம் தந்து விட்டு மூளையை நம்பும்; நமக்கு வெற்றி கிட்டும், என்றார். சரி என்ற சோழன் ஆதித்தனையும் முத்தரையனையும் ஒற்றாடப்பாண்டி நாட்டுக்குச் செல்லப் பணிக்கிறான்.

 

விஜயாலயன்:

கூறும், கொடும்பாளூர் வேளிரே! எம்வேலில்

கூருண்டு பாய்ச்சக் குறிதான் தெரியவில்லை...!

வேம்பெடுத்துப் பூச்சூடும் வேந்தனவன் அம்பெடுத்து

வீம்பெடுத்த சோழர் குடமூக்கில் வீசினான்முன்!

வாள் கொடுத்தோம், வாளுக்கு யாமும் எமக்காகத்

தோள்கொடுத்தார் பல்லவர்கள், தோற்றோம்;

அவர்வென்றார்

தோற்றதனால் யாமிழந்தோம் சோணாட்டின தென்பகுதி;

தோற்றதனால் யாதிழந்தார் சொல்லும் அப் பல்லவர்கள்?

மீண்டும் அரிசிலாற் றங்கரையில் வேலெடுத்த

பாண்டியர்கள் ஓர்பக்கம், பல்லவர்கள் எம்பக்கம்!

தென்பாண்டி வேந்தன்தன் சித்தத்திலும் சோழ

மண்தீண்டா வாறுநாம் வாட்டி விரட்டிவிட்டோம்.

யாம்பெற்ற தென்னஅவ் வெற்றியினால்? பல்லவர்கள்

தாம்பெற்றார் யாம்வென்ற சோழத் தரையெல்லாம்!

'வென்றால் பலன்அவர்க்கு' தேர்றறால் இழப்பெமக்கு'

என்றால் துணைஎதற்கு? சொல்லும் நீர்

 

வேளிர்:

இட்டஓர் நெல்

கட்டுக் கதிராகும் காவிரிபாய் சோழமன்னா!

மட்டுப் படாச்சினத்தை மாற்றித்தாம் கேட்டருள்க.

போரெடுத்துச் சோணாட்டு மண்ணின் புதுப்பகைவர்

யாரடுத்தார் என்றாலும் தாமே எழுந்திடுவார்

பல்லவர்கள் காக்கநமை...

 

விஜ:

பாம்பிடமிருந்து

வல்லூறு காத்த மணிப்புறாதான் நாமங்கு!

 

வேளிர்:

வல்லூறாய்ப் பல்லவரை எண்ணல் வலிவின்மை

கொல்லென்று கூறி எதிர்த்தல் அறிவின்மை.

புல்லுருவி போலே நாம் பல்லவஆல் பொந்தினிலே

மெல்ல வளர்ந்ததையே வீழ்த்தல் மதியடைமை!
வளரும்..2

 

வேளிர்:

வல்லூறாய்ப் பல்லவரை எண்ணல் வலிவின்மை

கொல்லென்று கூறி எதிர்த்தல் அறிவின்மை.

புல்லுருவி போலே நாம் பல்லவஆல் பொந்தினிலே

மெல்ல வளர்ந்ததையே வீழ்த்தல் மதியுடைமை!

விஜ:

வேளிரே! ஆண்டுமக்கு மேலேற மேலேற

வாளில் மதிப்புக் குறைந்துகொண்டு போகிறதோ?

வீச்சுக்கத் திக்கு விழிஇமைக்கா வீரன்நான்:

சூழச்சிக்கே கோழைநான். சொல்லுவதைக கேளுங்கள்

சோணாட்டில் சூழ்ச்சி நரியிடத்திலே யிருந்தும்

நானோட்ட எண்ணி நலிகின்றேன். என்னிடத்தில்

சொல்லிவிட்டீர் நீர் இச்சொல்! சொன்னஆள் வேறென்றால்

பல்லிவால் போல்துடிக்கும் பாழ்நாக்கும் துண்டாகி!

 

வேளி:

தங்கம் கதிர்காய்த்துச் சாய்ந்தாடும் நாட்டரசே!

சிங்கத்தைப் பார்த்துச் சிறுநரியாய் ஆகென்று கூறுவேனோ?

 

விஜ:

பின்னென்ன கூறகின்றீர்?

 

வேளி:

கொள்கையில் தான்

மாறுவேனோ, கோனாட்டு மண்ணில் பிறந்தேன் நான்?

சீற்றமிகு சிங்கம் சிறுநரியின் சூழ்ச்சிக்குத்

தோற்றிடுதல் தீதென்றே சொல்கின்றேன், பேரரசே

 

விஜ:

யார்பே ரரசன்? இருப்பதெல்லாம் சோணாட்டின்

ஓர்கூறு! யானோ ஒருசிற் றரசன்.

வளைவாழ் எலியும் வயல் சொந்தம் பேசும்

நிலையேஇப் பட்டம்! நினைவோடு பேசும்.

 

வேளி:

குகைவாழ்ந்தும் சிங்கம் கொடுங்காட்டின்கோ தான்!

வகைதொகையாய்க் கூறுகின்றேன் மன்னா! பெருங்காஞ்சித்

தெள்ளா றெறிந்தான் சிறந்தபுகழ் தாலாட்டப்

பல்லவர்கள் சேனை பலத்தோடு வாழ்கின்றார்

ஆற்றல் அறியாமல் யாமெதிர்த்தல் ஆழ்ந்தகுளச்

சேற்றில் மதயானை சிக்கினாற்போல் ஆகும்.

உமைவேண்டிக் கேட்கின்றேன் பல்லவரை உற்ற

சுமை தாங்கி ஆக்கி அதில் சோழர் சுமைவைப்பீர்!

 

விஜ:

என்றால்?...

 

வேளிர்:

புனல் நாட்டின் தோல்வி இழப்பெல்லாம்

நன்றாகப் பல்லவர்தோள் நாகரிக மாய்ஏற்றும்.

 

விஜ:

எப்படித்தான் கூடும்?

 

வேளிர்:

எழில்மயில்கள் பெண்களொடு

தப்படிதான் இட்டுச் சதிர் பழகும் தஞ்சைநகர்க்

கோட்டையை நோக்கிக் குறிவைக்கும் பாண்டியராம்

ஈட்டிமுனை பாயுமொரு வேங்கையாய் இல்லாமல்

பல்லவரைக் கேடயமாய் நன்கு பயன்படுத்தி

வெல்லும்போர் செய்வதையே வேந்தே நான் வேண்டுகின்றேன்

வெற்றிமங்கை அன்றுதான் வீரமணப் பந்தலிலே

உற்ற மங்கை என்றமர்வாள் உம்பக்கம், பேரரசே!

 

விஜ:

கோனாடு, கோளரிகள் வாழ்குகைதான் என்றிருந்தேன்;

ஆனால் அதுவோ நரிக்குகைதான் என்கின்றீர்!

வாள்மாற்றல் உண்டு வளைந்தொடிந்தால், கொண்டகுறிக்

கோள்மாற்றல் என்றுமில்லை கோனாட்டு வேளிரே!

யார் என்னைக் கைவிடினும் நான் அஞ்சேன். என்றென்றும்

நீர் என்னைப் பின்தொடர்வீர் என்று நினைத்திருந்தேன்.

நானிலத்தில் நம்பஇனி நல்லஒரு ஆளில்லை;

நான்நிலத்தில் ஓர்தனியாள், நல்லதுணை என்போர்வாள்!

 

வேளிர்:

சீற்றக் குளிர்காற்று தீண்ட முகிலுணர்ச்சி

மாற்றி மழையாய்ப் பொழிந்து விட்டீர் மாமன்னா!

தண்டிப்பேன் என்றுஎன் தலைவாங்கும் நான்மகிழ்வே:

துண்டிப்பேன் அன்பைஎனச்சொல்லிஎனைக் கொல்லாதீர்.

நீர் நினைப்பு; நானோ செயல்என்று நீள்பொன்னிப்

பார்நினைக்க நான்வாழ்ந்தேன் பார்த்திபா! அந்தகைய

என்மீதோ நம்பிக்கை இல்லை என உரைத்தீர்?

கண்ணையே நம்பா இமை உண்டோ காவலனே?

பேரரசே! சோணாட்டைப் பேரரசாய் ஆக்கிடுவோம்...?

 

விஜ:

நேரரசே இல்லாத பேரரசாய்

 

வேளிர்:

நின்று

நிலைக்கத்தான் வேண்டுமெனமில்நெஞ்சு பொருந்தி

இழக்கத்தான் வேண்டும் சிலவற்றை யாமும்

 

விஜ:

இளவரசன் என்மகனை யானிழந்த போதும்

உளமதிர மாட்டேன்உறுதிகுலையேன் நான்

 

வேளிர்:

நானிதனை எண்ணி நவிலவில்லை , மாமன்னா!

வான்பெற்று வட்டநிலா இழந்தால் ஏதுபயன்?

தங்களிடம் தான்நான் தயவாகக் கேட்கின்றேன்.

 

விஜ:

தங்கு தடையின்றிச சாற்றும்.......

 

வேளிர்:

'தருகிறேன்

என்றுரைத்தால் சொல்லுகின்றேன் என்வேந்தே, ' இல்லை' எனில்

நின்று நிலைக்காது நீர் நினைக்கும் பேரரசு!

 

விஜ:

சொல்லும் தருகிறேன்----

 

வேளிர்:

தோய்ந்தேன்நான் தேன்கடலில்

வெல்லும் இனிச்சோழப் பேரரசு வேந்தே!

திருவாழத் தேடி வருவீடாம் தங்கள்

கருவூலத் தைக்கேட்கவில்லைநான் காவலனே!

கேட்டால்நீர் தந்திடுவீர் என்பதனால் கேட்கவில்லை!

ஈட்டிமுனை புண்ணால் இசைவரைந்த மார்பா!

கரிகாலன் கைச்சுவையைக் கண்ட அந்த வீரம்

உறைவாளைக் கேட்கின்றேன், உம்பொருட்டே கேட்கின்றேன்

 

விஜ:

வாளில்லா வேந்தனா? பல்லில்ல வேங்கையா?

வேளிரே வேடிக்கை!

 

வேளிர்:

முத்தரையர் முள்காத்த தஞ்சை முழுமலரைக்

கொத்தோடு கொத்திவந்த போதினில்நான் உம்தனித்த

வாள்வீச்சைக் கண்டிருந்தேன்; மாற்றார் தமதாயுள்

நாள்வீழ்ச்சி இன்றோடே என்றோடல் நான்காணேன்!

மார்தட்டி வந்து நின்ற மாறவர்மன் மற்றும்வாள்

கூர்தட்டி வீழ்ந்தான் குளிரரிசில் ஆற்றருகே!

அன்றோவாள் வேண்டும் , அதனால்நான் பார்த்திருந்தேன்;

இன்றோவாள் வேண்டாம் "இழந்துவிடும்" என்கின்றேன்.

வாளுக்கு நீரில்லை மற்றிளங்கோ இன்றிருந்து,

மூளைக்கு நீரேதான் வேறில்லை மூண்டெழுப்பும்.

வீச்சுவாள் நீரிழக்க வேண்டாம் எனச்சோழ

ஆட்சிஇழக்க அகமகிழ்கொள் வீரோ?

 

விஜ:

இழக்கமாட்டேன் என்னாட்டின் ஆட்சி; இழந்தால்

பிழைக்கமாட்டேன்! பின்னர் உயிரோடிருக்கமாட்டேன்

வேளிரே! நீர் என்னை வென்றுவிட்டீர் வாய்ப்பேச்சில்,

வாள் உறையை விட்டு வராமல் இனிக் கண்ணுறங்கும்.

கூர்வாளால் பேரரசைக் கொள்ளமுடியாதென்றீர்

மாறாக் கூர்த்த மதியாலே கூடுமோ?

 

வேளிர்:

கூடும், குலவேந்தே! கூறுங்கள்;சீறும்பாம்பு

ஆடி அடங்கல் அதட்டலுக்கா? பாட்டுக்கா?

 

தொடரும் 3

விஜ:

பாண்டியர்கள் நம்மேல் பழிவாங்கச் சேனையுடன்

மீண்டும் வராவிட்டால் வீண் அன்றோ உம்திட்டம்?

 

வேளி:

தேரோடும் மாமதுரைத் தென்னன் வரகுணனோ

வீர வெறியன். விளைந்தசமர் தாம் இழந்த

சோணாட்டைக் கைப்பற்றிக் கொண்டங்கே ஓர் வெற்றித்

தூணாட்ட வந்திடுவான் தோள் தட்டிக் கட்டாயம்!

 

விஜ:

பாண்டியர்கள் வந்தாலும் பல்லவர்கள் நாமெதிர்க்க

வேண்டாம் என இருந்து விட்டால் நீர் என்செய்வீர்?

 

வேளி:

ஆழ்கடல்சூழ் மல்லை அபரா ஜிதவர்மன்

கோழை, பயங்கொண்டான் சூழ்ச்சிக்குறிப்புணரான்

கோனாடு வீழ்தால் குழவிப் பருவத்துச்

சோணாடு வீழும்பின் பல்லவரும் தூளாவர்.

ஆக அரசே! அவன்வராமல் போகமாட்டான்!

வாகை நமக்குத்தான் மாமன்னா மாலையிடும்!

 

விஜ:

மெய்யென்றே நம்புகின்றேன் வேளிரே! என்சினத்தால்

கையில் நரம்பு புடைக் கஇனிக் காணமாட்டீர்:

நெற்றி நரம்பு புடைத்தெழவே நீர்காண்பீர்!

முற்ற முடிவில்நீர் சொன்னபடி பாண்டியரைத்

தூளடிக்க நானுந்தான் சூள்கொட்டி, என்வீர

வாளெடப்பேன் வைர உறைவிட்டு; பின் அவ்வாள்

என்றும் உறைபுகாது; என்பகைவர் மார்பினிலே

சென்று புகுந்து புகுந்துஇற்றுத் தேங்ந்துவிடும்!!

நிற்கட்டும் இப்பேச்சு! நேரில் மதுரைக்கு

மற்கட்டுத் திண்தோள் மறவொற்றர் பத்துப்பேர்

சென்ற யவன வணிகருடன் செல்லவிட்டோம்,

அன்றுநின்று இன்றுவரை ஏதும் அறியோம்யாம்.

 

வேளி:

சேதி வராமலில்லை வந்த அந்தச் சேதியிலே

ஏதும் புதிதில்லை என்பதனால் சொல்லவில்லை.

வேற்று யவனர்கள் வேண்டுமானால் செல்லும் அன்றிக்

காற்றும 'கயல்காசு' , இலையென்றால் கோட்டை

விடமாட்டோம், என்றாராம். மேலும் கிடைக்கும்

மடல்மாற்றம் கண்டுதான்...

{ஒரு வீரன்வந்து)

வீரன்:

மன்னா! மதுரை

மருதன் பெருஒற்றர் தங்கள்.....

 

விஜ:

வரச்சொல்

மருதன்:

திருவடிகட் கென்வணக்கம்..

 

விஜ:

சென்ற பிறர் எங்கோ!

 

மரு:

இறந்தார்கள். யானோ இறந்து கொண்டேதான்

விரைந்து வந்தேன் வேந்தே!

{என்று கூறி விழுகின்றான் அரசர் அவனை தூக்கி}

 

விஜ:

மெதுவாய் எழு மருதா!

கட்டாரி உன்முதுகில்! வீரக்கயமை இதைத்

துட்டர் எவர் செய்தார்? சற்றிருநீ, நானே

எடுக்கின்றேன்..

{எடுத்தெறிந்து விட்டு }

எங்கே மருத்துவர்?

 

மரு:

வேந்தே!

துடிக்கும் என் ஆவிச் சுடர்தூண்ட ஆள்வேண்டாம்

பெற்றோம் கயற்காசு. பின்நுழைந்தோம் கோட்டையுள்

சற்றினார் ஆபத் துதவிகள்தாம் சூழ்ச்சியாலே

மற்றையோர் மாய்ந்தார், வகையாக நான் மட்டும்

எற்றிவந்தேன். வல்லத்தின் எல்லை கடக்கையில்

கட்டாரி பாய்ச்சிவிட்டான் காவலனே! உம் கையால்

தொட்டீர், அதிலேநான் சொர்க்க சுகம் கண்டேன்.

(என்று கூறி இறக்கின்றான்)

 

விஜ:

(தன் கழுத்தில் அணிந்திருந்த ஆத்தி மாலையைக்கழற்றி)

வீரத்தைக் காதலித்தாய், சாவை மந்தித்டாய்!

ஆரத்தை நான் உனக்கு ஆத்தியால் சூட்டுகின்றேன்,

(அவன் உடலைக் கொண்டு செல்கின்றனர்)

வேளிரே! வேறு புதுவழியைக் கூறுங்கள்

நாளா வதற்குள். வணிகர்எனில் நம்பமாட்டார்.

தக்க புதுவேடம் வேண்டுமே, சந்தேகம்

எக்காரணம் கொண்டும் ஏற்படாமல் அங்குலவ!

 

வேளி:

வேறு புதுவேடம்? வேந்தே தெரியவில்லை

தாறுமா றாகிவிட்டால்?

 

விஜ:

சாவில் சுகம் காண்போம்:

முத்தெடுக்கும் நாட்டான் வணங்கா முடிகூட

முத்தமிழ் என்றிட்டால் முழுதும் வணங்கிவிடும்

சோணாட்டார் எம்மருமைத் தோழர் புகழ்ச்சேந்தன்

மீனாட்டில் இன்று கவியாய் விளங்குகின்றார்.

சோழ நிலக்கிழாரின் சொந்தஇரு மைந்தர்கள்

ஆழத் தமிழ் பயில அங்கு வருவதாகச்

சாக்கிட்டுச் கூர் அறிவில் சாணை பிடித்திட்ட

தோட்கட் டுடையாரைத் தூண்டிஅனுப்பவேண்டும்.

 

வேளி:

யார்மன்னா அவ்விருவர்?

 

விஜ:

என்வாள் வழித்தோன்றல்

நீர் சொன்ன வீரன், நிறையிளங்கொ ஓர் ஆன்!

 

வேளி:

ஆரசே, இளவரசா?

 

விஜ:

ஆம் அமைச்சே.....

 

வேளி:

வேண்டாம்,

திறல்மாறன் முத்தரையன் உண்டவனைச் செல்லென்போம்

 

விஜ:

முத்தரையன் வேல்வீச முள்முனையும் தாப்பாது!

ஒத்திளங்கோ வாள்வீச ஓர்தலையம் தாப்பாது!

சொல்லிவிடும்; ஒற்றாடத் தோழனொடு நம்மிளங்கோ

செல்ல விடும் தென்பாட்டிச் சீமைக்கு. பாய்குதிரை

கட்டவிழ்த்துப் போயிருக்க வேண்டும் கதிர்க்கரத்தால்

மொட்டவிழ்க்கக் காலைவரும் முன்!

விஜ:

பாண்டியர்கள் நம்மேல் பழிவாங்கச் சேனையுடன்

மீண்டும் வராவிட்டால் வீண் அன்றோ உம்திட்டம்?

 

வேளி:

தேரோடும் மாமதுரைத் தென்னன் வரகுணனோ

வீர வெறியன். விளைந்தசமர் தாம் இழந்த

சோணாட்டைக் கைப்பற்றிக் கொண்டங்கே ஓர் வெற்றித்

தூணாட்ட வந்திடுவான் தோள் தட்டிக் கட்டாயம்!

 

விஜ:

பாண்டியர்கள் வந்தாலும் பல்லவர்கள் நாமெதிர்க்க

வேண்டாம் என இருந்து விட்டால் நீர் என்செய்வீர்?

 

வேளி:

ஆழ்கடல்சூழ் மல்லை அபரா ஜிதவர்மன்

கோழை, பயங்கொண்டான் சூழ்ச்சிக்குறிப்புணரான்

கோனாடு வீழ்தால் குழவிப் பருவத்துச்

சோணாடு வீழும்பின் பல்லவரும் தூளாவர்.

ஆக அரசே! அவன்வராமல் போகமாட்டான்!

வாகை நமக்குத்தான் மாமன்னா மாலையிடும்!

 

விஜ:

மெய்யென்றே நம்புகின்றேன் வேளிரே! என்சினத்தால்

கையில் நரம்பு புடைக் கஇனிக் காணமாட்டீர்:

நெற்றி நரம்பு புடைத்தெழவே நீர்காண்பீர்!

முற்ற முடிவில்நீர் சொன்னபடி பாண்டியரைத்

தூளடிக்க நானுந்தான் சூள்கொட்டி, என்வீர

வாளெடப்பேன் வைர உறைவிட்டு; பின் அவ்வாள்

என்றும் உறைபுகாது; என்பகைவர் மார்பினிலே

சென்று புகுந்து புகுந்துஇற்றுத் தேங்ந்துவிடும்!!

நிற்கட்டும் இப்பேச்சு! நேரில் மதுரைக்கு

மற்கட்டுத் திண்தோள் மறவொற்றர் பத்துப்பேர்

சென்ற யவன வணிகருடன் செல்லவிட்டோம்,

அன்றுநின்று இன்றுவரை ஏதும் அறியோம்யாம்.

 

வேளி:

சேதி வராமலில்லை வந்த அந்தச் சேதியிலே

ஏதும் புதிதில்லை என்பதனால் சொல்லவில்லை.

வேற்று யவனர்கள் வேண்டுமானால் செல்லும் அன்றிக்

காற்றும 'கயல்காசு' , இலையென்றால் கோட்டை

விடமாட்டோம், என்றாராம். மேலும் கிடைக்கும்

மடல்மாற்றம் கண்டுதான்...

{ஒரு வீரன்வந்து)

வீரன்:

மன்னா! மதுரை

மருதன் பெருஒற்றர் தங்கள்.....

 

விஜ:

வரச்சொல்

மருதன்:

திருவடிகட் கென்வணக்கம்..

 

விஜ:

சென்ற பிறர் எங்கோ!

 

மரு:

இறந்தார்கள். யானோ இறந்து கொண்டேதான்

விரைந்து வந்தேன் வேந்தே!

{என்று கூறி விழுகின்றான் அரசர் அவனை தூக்கி}

 

விஜ:

மெதுவாய் எழு மருதா!

கட்டாரி உன்முதுகில்! வீரக்கயமை இதைத்

துட்டர் எவர் செய்தார்? சற்றிருநீ, நானே

எடுக்கின்றேன்..

{எடுத்தெறிந்து விட்டு }

எங்கே மருத்துவர்?

 

மரு:

வேந்தே!

துடிக்கும் என் ஆவிச் சுடர்தூண்ட ஆள்வேண்டாம்

பெற்றோம் கயற்காசு. பின்நுழைந்தோம் கோட்டையுள்

சற்றினார் ஆபத் துதவிகள்தாம் சூழ்ச்சியாலே

மற்றையோர் மாய்ந்தார், வகையாக நான் மட்டும்

எற்றிவந்தேன். வல்லத்தின் எல்லை கடக்கையில்

கட்டாரி பாய்ச்சிவிட்டான் காவலனே! உம் கையால்

தொட்டீர், அதிலேநான் சொர்க்க சுகம் கண்டேன்.

(என்று கூறி இறக்கின்றான்)

 

விஜ:

(தன் கழுத்தில் அணிந்திருந்த ஆத்தி மாலையைக்கழற்றி)

வீரத்தைக் காதலித்தாய், சாவை மந்தித்டாய்!

ஆரத்தை நான் உனக்கு ஆத்தியால் சூட்டுகின்றேன்,

(அவன் உடலைக் கொண்டு செல்கின்றனர்)

வேளிரே! வேறு புதுவழியைக் கூறுங்கள்

நாளா வதற்குள். வணிகர்எனில் நம்பமாட்டார்.

தக்க புதுவேடம் வேண்டுமே, சந்தேகம்

எக்காரணம் கொண்டும் ஏற்படாமல் அங்குலவ!

 

வேளி:

வேறு புதுவேடம்? வேந்தே தெரியவில்லை

தாறுமா றாகிவிட்டால்?

 

விஜ:

சாவில் சுகம் காண்போம்:

முத்தெடுக்கும் நாட்டான் வணங்கா முடிகூட

முத்தமிழ் என்றிட்டால் முழுதும் வணங்கிவிடும்

சோணாட்டார் எம்மருமைத் தோழர் புகழ்ச்சேந்தன்

மீனாட்டில் இன்று கவியாய் விளங்குகின்றார்.

சோழ நிலக்கிழாரின் சொந்தஇரு மைந்தர்கள்

ஆழத் தமிழ் பயில அங்கு வருவதாகச்

சாக்கிட்டுச் கூர் அறிவில் சாணை பிடித்திட்ட

தோட்கட் டுடையாரைத் தூண்டிஅனுப்பவேண்டும்.

 

வேளி:

யார்மன்னா அவ்விருவர்?

 

விஜ:

என்வாள் வழித்தோன்றல்

நீர் சொன்ன வீரன், நிறையிளங்கொ ஓர் ஆன்!

 

வேளி:

ஆரசே, இளவரசா?

 

விஜ:

ஆம் அமைச்சே.....

 

வேளி:

வேண்டாம்,

திறல்மாறன் முத்தரையன் உண்டவனைச் செல்லென்போம்

 

விஜ:

முத்தரையன் வேல்வீச முள்முனையும் தாப்பாது!

ஒத்திளங்கோ வாள்வீச ஓர்தலையம் தாப்பாது!

சொல்லிவிடும்; ஒற்றாடத் தோழனொடு நம்மிளங்கோ

செல்ல விடும் தென்பாட்டிச் சீமைக்கு. பாய்குதிரை

கட்டவிழ்த்துப் போயிருக்க வேண்டும் கதிர்க்கரத்தால்

மொட்டவிழ்க்கக் காலைவரும் முன்!
வளரும்..4

 

 

வருகிறான் விசயாலய சோழன் சங்க காலத்திற்கு பிறகு தமிழகத்தில் தஞ்சையில் மறுபடியும் சோழர் ஆட்சியை அமைத்தவன் இவனே

 

1.விசயாலய சோழன் (850 – 880 , 836 – 870 )

2. 2. ஆதித்த சோழன் த/பெ. விசயாலய சோழன் 871-907

3.1ம் பராந்தக சோழன் த/பெ. ஆதித்த சோழன்907-955

4.கண்டராதித்த சோழன் த/பெ. 1ம் பராந்தக சோழன் இரண்டாவது மகன் 950-957

5.அரிஞ்சயன் த/பெ. 1ம் பராந்தகனின் 3வத மகன் 956-957

6.2ம் பராந்தகன் த/பெ. அரிஞ்சயன் 957-970

7.உத்தமசோழன் த/பெ. கண்டராதித்த சோழன் 973-985

8.1ம் ராஜராஜன் த/பெ. 2ம் பராந்தகன் 985-1014

9.1ம் ராஜேந்திரன் த/பெ. 1ம் ராஜராஜ ன் 1012-1044

10.1ம் ராஜாதிராஜன் த/பெ. 1ம் ராஜேந்திரன் மூத்தமகன் 1018-1054

11.ராஜேந்திர சோழதேவன் த/பெ. 1ம் ராஜேந்திரனின் 2வது மகன் 1051-1063

12.வீரராஜேந்திர சோழன் த/பெ. ராஜேந்திர சோழதேவன் 1063-1070

13.ஆதிராஜேந்திர சோழன் த/பெ. வீரராஜேந்திர சோழன் 1067-1070

14.1ம் குலோத்துங்க சோழன் Җ ராஜேந்திர சோழன் மகளின் மகன் 1070-1120

15.விக்ரமசோழன் த/பெ. 1ம் குலோத்துங்க சோழன் 1118-1135

16.2ம் குலோத்துங்க சோழன் த/பெ. விக்ரமசோழன்1133-1150

17.2ம் ராஜராஜ சோழன் த/பெ. 2ம் குலோத்துங்க சோழன் 1146-1163

18.2ம் ராஜேந்திர சோழன் Җ 2ம் ராஜராஜனின் மைத்துனன் 1163-1178

19.3ம் குலோத்துங்கள் த/பெ. 2ம் ராஜராஜ சோழன் 1178-1218

20.3ம் ராஜராஜசோழன் த/பெ. 3ம் குலோத்துங்கள் 1216-1256

21.4ம் ராஜேந்திரசோழன் த/பெ.3ம் ராஜராஜசோழன் 1246-1279

 

இவனைப் பற்றிய ஒரு கற்பனை நாடக்தை லலோய கல்லூரியின் தமிழ் பேராசியர் கவிஞர்.த. அ. சுந்தரராசன் அவர்களிடம் தோன்றிய நாடகம்.

 

வான் பெற்று வட்டநிலா இழந்தால் ஏது பயன்?

 

சீறும் பாபம்பு ஆடி அடங்கல் அதட்டலுக்கா? பாட்டுக்கா?

 

இழுத்த வாட் கெதிரிகள் எழுத்தா ணிகள?

 

வண்டறியாமல் இருக்க முல்லை மணத்திறகு முக்காடு இடுகிறாய்

 

எரித்திடும் தீயை இள நிலா வாழ்த்துமா?

 

வேடம் அம்பைப் புறாவும் விரும்புமா?

 

பட்டடைக்கல் நீர் , அவரோ சம்பமட்டி; நான்...நடுவில் சுட்டெடுத்த ஓர் இரும்புத் துண்டு

 

தீக்கு இலவம் பஞ்சு நிபந்தனைகள் செப்ப வந்தால் வாங்க்கழகு என்றதனைக் கேட்கும் வழக்கமுண்டோ?

 

வீர வழுதுமரம் புல்லுருவி வீழ்த்திடுமா?

 

(டைப்பிங்கில் உள்ளது)

இது கட்டியமல்ல வரயிருப்பதை முன்பகர்வது காண்க:

 

வாணன்: (தனிமையில்)

முன்புள சிறந்த மதுரை மூதூர்

கன்னல் தமிழின் பிறப்பிடம்!

கலைகளின் இருப்பிடம்

ஆனால் இன்றோ,

தேமா புளிமா தேடிய கவிஞர்

பாய்மா கைம்மா தேடுகின் றார்கள்!

இரததினம் இரகதம் விலைபேசி னோர்கள்

இரத்தத்தை இன்று விலைபேசு கின்றார்;

பாலவி ஆடை பதமுணர்ந் தோர்கள்

வேலாவி குடிக்கும். விதம்கற் கின்றானர்!

வெட்கச் சிவக்கும் குமாரிகள் இன்று

விழித்துப் பார்த்தால்

கறந்தபால் காய்ச்சிய பாலாய்ச் சுண்டும்!

ஈயமர்ந் திட்டால் இதயம் துடிக்கும்

தாயும்இன்றுதான் பெற்ற

சேயின் மார்பிலே

விழுப்புண் மாலையைக் காண விழைகிறாள்!

எல்லாரிடத்திலும் எதனி டத்திலும்

எல்லா இடத்திலும் போர்வெளி; வெறிப்போர்!

முதுமையினால் தளர்ந்தவனும், உடம்பில் தொண்ணூற்றாறு காயவடுக்கள் உள்ளவனும், கால்களில் பட்ட கொடிய காயத்தினால் எழுந்து நிற்கும் சக்தியை இழந்தவனுமான அக்கிழவன் எப்படியோ யுத்த அரங்கத்துக்கு வந்து விட்டான். பல்லவ சைன்யம் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடக்கே போய்விட்டால், சோழநாடு மறுபடியும் நெடுங்காலம் தலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த அந்தக் கிழச் சிங்கத்தின் கர்ஜனை, பல்லவர் கட்சியில் எஞ்சியிருந்த வீரர்களுக்குப் புத்துயிர் அளித்தது.

"ஒரு யானை! எனக்கு ஒரு யானை கொடுங்கள்!" என்றான்.
"நமது யானைப்படை முழுதும் அதமாகிவிட்டது; ஒன்றுகூடத் தப்பவில்லை" என்றார்கள்.
"ஒரு குதிரை! ஒரு குதிரையாவது கொண்டு வாருங்கள்!" என்று சொன்னான்.
"உயிருள்ள குதிரை ஒன்று கூட மிஞ்சவில்லை" என்று சொன்னார்கள்.
"சோழநாட்டுச் சுத்தவீரர்கள் இருவரேனும் மிஞ்சி உயிரோடு இருக்கிறார்களா? இருந்தால் வாருங்கள்!" என்று கிழவன் அலறினான்.
இருவருக்குப் பதிலாக இருநூறுபேர் முன்னால் வந்தார்கள்.
"இரண்டு பேர் - தோளில் வலிவும் நெஞ்சில் உரமும் உள்ள இரண்டு பேர் - என்னைத் தோள் கொடுத்துத் தூக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் இரண்டு இரண்டு பேராகப் பின்னால் வந்து கொண்டிருங்கள். என்னைச் சுமக்கும் இருவர் விழுந்தால், பின்னால் வரும் இருவர் என்னைத் தூக்கிக் கொள்ளுங்கள்!" என்றான் அந்த வீராதி வீரன்.

அப்படியே இரண்டு பீமசேனர்கள் முன்னால் வந்து அந்தக் கிழவனைத் தோளில் தூக்கிக்கொண்டார்கள்.
"போங்கள்! போர் முனைக்குப் போங்கள்!" என்று கர்ஜித்தான்.
போர்க்களத்தில் ஓரிடத்தில் இன்னமும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தெற்கத்தி மறவர்கள் எஞ்சி நின்ற பல்லவ வீரர்களைத் தாக்கிப் பின்வாங்கச் செய்து கொண்டே வந்தார்கள்.

இருவருடைய தோள்களில் அமர்ந்த கிழவன் அந்தப் போர் முனைக்குப் போனான். இரண்டு கைகளிலும் இரண்டு நீண்ட வாள்களை வைத்துக் கொண்டு திருமாலின் சக்ராயுதத்தைப் போல் சுழற்றிக்கொண்டு, எதிரிகளிடையே புகுந்தான். அவனைத் தடுக்க யாராலும் முடியவில்லை. அவன் புகுந்து சென்ற வழியெல்லாம் இருபுறமும் பகைவர்களின் உடல்கள் குவிந்து கொண்டேயிருந்தன.

ஆம்; இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காகப் பின்வாங்கிய வீரர்கள் பலரும் முன்னால் வந்தார்கள். கிழவனுடைய அமானுஷ்ய வீரத்தைக் கண்டு முதலில் சிறிது திகைத்து நின்றார்கள். பிறகு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு தாங்களும் போர் முனையில் புகுந்தார்கள்.

அவ்வளவுதான்; தேவி ஜயலஷ்மியின் கருணாகடாட்சம் இந்தப் பக்கம் திரும்பிவிட்டது.

பல்லவர் படைத் தலைவர்கள் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரை போகும் யோசனையைக் கைவிட்டார்கள்.

மூன்று வேந்தர்களும் தமக்குரிய மூலபல வீரர்கள் புடைசூழப் போர் முனையில் புகுந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டிய வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள். பிறகு அவர்கள் பாண்டிய நாட்டின் எல்லைக்குச் சென்றுதான் நின்றார்கள்.

கங்க மன்னன் பிரிதிவீபதி அன்றையப் போரில் செயற்கரும் செயல்கள் பல புரிந்த பிறகு தன் புகழுடம்பை அப்போர்க் களத்தில் நிலைநாட்டி விட்டு வீர சொர்க்கம் சென்றான்.

இக் கிழவன் தான் விசயாழய சோழன்

(பொன்னியின் செல்வனில் இருந்து)

சரி விசயாழய சோழனைப் பற்றிப் பேசுகிறோமே! அவனது முன்னோர்கள் யார்? சூரிய குலத்தவன் என சொல்லுகிறோமே எப்படி இப்பொது அதைப் பார்ப்போமா?

எல்லா வரலாற்றுக்கும் முதன்மையானவர் திருமால். அவரது உந்தியினின்றும் தோன்றியது செந்தாமரை மலர் , அதிலிருந்து நான்முகன் தோன்றினார், அவனிடமிருந்து பெருமைக் குரிய மரீசி என்னும் அரசன் தோன்றினார். உயிர்களிடத்தில் அன்பு மிகுந்த மரீசி காசிபனை மகனாகப் பெற்றான். அவன் ஒளிக் கதிர்களையுடைய சூரியனைப் பெற்றான்.

 

மனு என்பவன் சூரயனுக்கு மகனாகப் பிறந்து உலகினைக் காப்பாற்றினான். அவன் தன்னுடைய சிறந்த மகனை ஒரு பசுவின் கன்றுக்குச் சமம் என்று கருதினான். எல்லாரும் வியப்புறும் படி அவனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதி வழங்கினான். இத்தகைய மனு நீதிச் சோழனுக்கு மகன் என்று சொல்லும்படியாக இக்குவாகு என்பவன் பிறந்தான்.

 

இக்குவாகுவுக்கு மகனாக விகுட்சி என்பவன்பிறந்தான், இவனது மகன் ககுத்தன், ககுத்தன் மிகவும் வலிமையுடையவன்; பகைவரை வெல்லுமளவுக்குப் போர் புரியக் கூடியவன். இவன் மிகுந்த ஆற்றலையுடைய செயல் பல புரிந்து, ஆயிரங் கண்களை யுடைய யானையை வாகனமாக் கொண்டான். இந்திரன் ஐராவதம் என்னும் யானையில் ஊர்ந்து வெற்றி கொண்டது போல, இவனும் ஒரு களிற்றில் ஊர்ந்து, தன்னை எதிர்த்துப் போர் புரிந்த அசுரர்களை எல்லாம் வென்று வெற்றிக் கொடி நாட்டினான்.

 

இயல்பிலேயே கோபத்தைக் கொண்டது புலி, சாதுவான தன்மையுடையது மான். புலிக்கு விருப்பமான உணவு மானிறைச்சி. அவ்வாறு இருந்தும் அவ்விரண்டும் ஒரே துறையில் ஒன்றா இருந்து நீர் பருகும்படி பசி, பகை முதலியவற்றைப் போக்கிய வலிமையுடையவன் மாந்தாதா என்னும் சோழ மன்னன். அவன் உலகத்துள்ள உயிர்களிடத்தில் செலுத்திய அருளின் தன்மையால் ஆட்சி புரிந்தான். முசுகுந்தன் என்ற மன்னன் போர்க்களத்தில் புகுந்து இமையவர் உலகம் முழுவதையும் எவ்விதத் தீங்குமின்றிக் காவல் புரிந்து அரசோச்சிக் காப்பற்றிய புகழ்த் தன்மையை உடையவன் ஆவன்.

 

பிருதுலாட்சன் என்னும் சோழ மன்னன் திருப்பாற்கடலை மந்தர மலையை இட்டுக் கலக்கினான். அதிலிருந்து இனிய சாவாமருந்தாகிய அமுதம் உண்டாயிற்று. அதனைத் தேவர்கள் உண்ணுமாறு கொடுத்தான். சிபி என்ற சோழ மன்னன் ஒரு புறா அடைந்த துன்பத்தை நீக்குவதற்காக ஒப்பற்ற தராசுத் தட்டில் தன் உடல் சதையை அறுத்து வைத்தான். அது புறாவின் எடைக்குச் சமமாக ஆகவில்லை. அதனால், அவனாகவே அந்தத் தட்டில் ஏறி அமர்ந்தான், அப்பொழுதுதான் எடை சரியாயிற்று தராசில் சிபிச் சக்கரவர்த்தியின் உடல் நிறுக்கப்பட்டது போல உலக மக்களின் உள்ளமாகிய தராசில் சிபியின் புகழ்உடம்பும் அளந்து அறியப்பட்டது.

 

கலிங்கத்து பரணியிலிருந்து

தொடரும்.........

 

 

சுராதிராசன் என்பவன் முற்காலத்தில் முதல் சோழனாகப் பிறந்தான். அவனது மரபிலுதித்த இராசகேசரி ,பரகேசரி என்னும் இருவரும் தங்களுடைய கட்டளைகளால் ஏழு வகை தீவுகளையுடைய இந்த உலகம் முழுவதையும் காப்பாற்றி புலிக்கொடியினால் ஆணைசெலுத்தி ஒருவர் பின் ஒருவாராக ஆட்சிபுறிந்தனர்.

'இதுவே நீதியாகும் ' என்று கூற்றுவனுக்கு எடுத்துரைத்தவன் கிள்ளிவளவன் என்னும் சோழனாவான். குடகு மலையைக் குடைந்து காவிரியாற்று நீரை சோழ நாட்டிற்கு கொண்டு வந்து ஓடச்செய்தவன் கவேரன் என்பவன் ஆவான். மிருத்யுசித் என்னம் அரசன் தன் நாட்டில் திடீர் சாவு ஏற்படாமல் எமனிடத்தில் வெற்றி கொண்டான். இம் மூவரும் பெரு வெற்றியுடன் வாழ்ந்த சோழமன்னர்கள் ஆவார்கள்.

சித்திரன் என்னும் சோழன், தன் துகில் கொடியில் இந்திரனை புலிக்கொடியாகக் கொண்டவன்; அதனால் ' வியாக்கிரகேது' என்னம் சிறப்புப் பெயரையும் பெற்றான். சமுத்திரசித் என்னும் சோழன் கப்பல் போக்கு வரவுக்காக பூசந்தியை வெட்டி மேல் கடலையும் கீழ் கடலையும் ஒன்று சேர்த்து சலசந்தியாக்கினான். நீர் வேட்க்கையால் வருந்திய ஐந்து இயக்கர்களுக்கு தன்னுடைய ஐந்து ரத்த குழாய்களையும் அறுத்துக் கொடுத்து உதவிய வலிமையுடைவன் பஞ்சபன் என்னும் சோழ மன்னன் ஆவான் . நீர் நிரைந்த பெரிய கடலிடத்தே செலுத்திய கப்பல் போர்புரிதற்கு காற்றில்லாமையால் ஓட வில்லை. அப்பொழுது ஒரு சோழன் வளிச்செல்வனை வரவழைத்து ஏவல் கொண்டான் . அவ்வளவு வல்லமையுடைய சோழனை' வாதராசனை பணிக்கொண்டவன்' என்று கூறுவர்

 

அசுரர்கள் வானில் உலாவும் மூன்ற அச்சமுண்டாக்கும் மதில்களைக் கொண்டு பலருக்கும் தீங்கிழைத்தனர். அவற்றை அழித்து பெருமைக் கொண்டவன் தூங்கெயில் எறிந்த சோழ மன்னன் ஆவான். இரத்தின கற்கள் பதித்த ஒளிவீசும் தனது விமானத்தை வானில் உயர்ந்து பறக்கும் படி செய்தவன் உபரிசரன் என்னும் சோழன் ஆவான். பாண்டவர்கள் பாரதப் போரை முடிக்கும் வரையிலும் தளராமல் நின்று தருமனது கடல் போன்ற பெரிய படைக்கு உதவிபுரிந்தான் ஒரு சோழ மன்னன்.

 

கிள்ளி வளவன் குகைஒன்றின் வழியாக தனிமையில் நடந்து சென்றான்; அங்கு ஒரு நாக கன்னியைக் கண்டான். அவள் முல்லை மொக்குப் போன்ற பற்களையம், வேல் போன்ற விழிகளையும் உடையவளாக விளங்கினாள். நாகர்களின் கண்மணி அனைய அந்நாகர் கன்னிகையைக் கிள்ளிவளவன் மணம் புரிந்து கொண்டான். சோழன் செங்கணானுக்கம் சேரன் கணைக்கால் இரும்பொறைக்கும் போர் ஏற்பட்டது. அப் போரில் சோழன் வெற்றி பெற்றான்; வென்றவன், சேரனைச் சிறைப் பிடித்துக் காலில் விலங்கு பூட்டி வைத்திருந்தான். சேரனின் ஆசிரியப் பெருந்தகையாகிய பொய்கையார் 'களவழி நாற்பது' என்னும் நூலைப் பாடிச் சோழனைச் சிறப்பித்தார். அதனால் சேரன் காலில் பூட்டிய விலங்கைச் சோழன் வெட்டி எறிந்து அவனுக்குத் திரும்பவும் ஆட்சியை அளித்தான்.
கலிங்கத்து பரணியிலிருந்து

தொடரும்.........

 

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages