அந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களுக்கு சில அறிவுரைகள்

52 views
Skip to first unread message

radika

unread,
Sep 8, 2016, 10:41:26 AM9/8/16
to குடும்பம் - இன்பம் – அனுபவங்கள்:

அந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களுக்கு சில அறிவுரைகள்

அந்தரங்கங்களை


      நீங்க யாரை வேண்டும் என்றாலும் காதல்  பண்ணுங்க. ஆனா கண்ணை மூடிகிட்டு நம்பாதிங்க. கொஞ்சமாவது மனசாட்சி உள்ளவனா, நல்லவனா பாருங்க. அது தெரியாம வெப் கேம்ல. ஸ்மார்ட் போன் காமராவில். விடியோ கேம் காமராவில்  எல்லாவற்றையும் காட்டுவது அது அந்த வயதில்  இயல்புதான், வெளிநாட்டில் அது எப்பொழுதும் உள்ளது. மனசாட்சி உள்ளவர்கள்: . அப்படியே வெளியே தெரிந்தாலும் யாரும் அதை பெரிதாக  எடுத்து கொள்ள மாட்டார்கள். .நிர்வாணம் ஒரு கலை  என நினைப்பவர்கள். பீச், ஸ்விம்முங்க்  பண்ணுகின்ற இடத்தில் எல்லாம் தெரியுமாறுதான் இருப்பார்கள். பொது இடத்தில் முத்தம் இடுவது சகஜம்..நாமும்  அவர்கள் மாதிரி போட்டோ எடுத்து அனுப்புவது எல்லாம் வேண்டாம். தூக்கி நெட்ல போட்டு போய்கிட்டே இருப்பார்கள்.

      டேட்டிங், ஹனிமூன் போகின்ற  தம்பதிகளே! வயதான தம்பதிகளும் அப்ப சான்ஸ் கிடைக்கவில்லை இப்பபகிடைத்து உள்ளது என உங்க பொண்டாட்டி / மேல் உள்ள ஆசை, காதல், காம வெறியில் அவர்களை  விதவிதமான உடைகளில் , ஆடை இருந்தும், ஆடை இல்லாமல் கவர்ச்சியாக  வித விதமான போஸ்ல போட்டோ எடுப்பதை இப்ப செல்ஃபி மாதிரி ஆர்வம் அதிகமாக உள்ளது. .சிலர் தங்கள் உடலுறவு காட்சிகளையும்  எடுத்து எப்படி காதல் பண்ணுகின்றோம். என் பார்த்து மகிழ்கின்றார்கள். அது ஸ்மார்ட் போனா, இல்லை விடியோ காமராவா  இல்ல வெப் காமாரா எதுவாக இருந்தாலும்  தனி மெமரி கார்டு உபயோகபடுத்தவும், அதிலும்  அதனுடன்  சரியான தனி பாஸ்வோர்ட் உபயோகபடுத்தவும், பிறகு அவற்றை எல்லாம் உங்க  தனியாக பிரைவேட்  ஆக உள்ள  எடுத்து செல்ல க்கூடிய  ஹார்ட் டிஸ்க்கில்  காப்பி பண்ணி மெமரிகார்டில் உள்ளவற்றை அழித்து விடவேண்டும். சில தம்பதிகள் வேண்டும் என்றே நெட்டில் போட்டு விட்டு  எவனோ தங்களுக்கு தெரியாமல்  லோடு பண்ணிவிட்டான் என தெரியாதமாறு நடிப்பார்கள். வெளிநாட்டில்  தங்களது முதலிரவுகாட்சிகளை நேரடியாக லைவ் ஆக காட்டுவார்கள், அதை அவர்கள் பெருமையாக  பேசுவார்கள், ஆனால் நமது ஊரில்  தெரிந்தால் ஆணுக்கு  எந்த பிரசினையும் இல்லை பெண்ணிற்குதான் பிரசினை. பெரும் பணக்காரர்களுக்கு பிரசினை  இல்லை. மற்றவர்களுக்குதான் பிரசினை.எக்காரணத்தைகொண்டும் உங்க அந்தரங்கம் எடுத்த  காமரா உள்ள போனோ.  கம்பியுட்டரா, லெப் டாப்போ  எதுவாக இருந்தாலும் யாரிடமும் குடுக்க கூடாது. அப்படி இல்லைனா தனி மெம்மரி கார்ட். போர்டபில் ஹார்ட் டிஸ்க்  பாஸ்வோர்ட் உள்ளதாக உபயோக படுத்தவும், .  பாஸ்வோர்ட் உபயோக படுத்தவும், சில பேர். ஊர் சுற்றி போட்டோ எல்லாம் எடுப்பது அதை  மெம்மரி கார்டில் அந்தரங்க போட்டோவும் எடுக்கறது, அதுக்கு அப்புறம் அந்தரங்க போட்டோ எல்லாம் கம்பியூட்டருக்கு மாத்திட்டு டெலிட் பண்ணிட்டு பிரிண்டிங் கொடுக்கறது. ஆனா இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு அழிக்கபட்ட போட்டோஸ் தேடி எடுக்கறதே சிலருக்கு வேலை. சுலபமா உங்க பர்சனல் லைப் நெட்க்கு போய்டும்.

சில அதிமேதாவிங்க செல்போன்ல மெம்மரி கார்டுக்கு லாக் போட்டு இருக்கும் தைரியத்தில் யாரிடம் வேண்டுமானலும் செல்போனை கொடுத்துட்டு போறது. அப்புறம் எப்படி வெளியே போச்சினு அழறது. அதே மாதிரி லாப்டாப்ல இருக்க ப்ரவுசர்ல பாஸ்வேர்ட் எல்லாம் சேவ் பண்ணி வைக்கிறது. அதுக்கு அப்புறம் அந்த லாப்டாப் நண்பர்கள் கிட்ட கொடுக்கறது. அவங்க ப்ரவுஸர் ஓப்பன் பண்ணதும் அது தானா உங்க மெயில் உள்ள போய்டும். உங்க ராணுவ ரகசியமும் போகும். அதனால லாப்டாப்பில் எப்பவும் இரண்டு அக்கவுண்ட் வச்சி இருங்க. இல்லைனா guest அக்கவுண்ட் ஆன் பண்ணி வைங்க.

     டெக்னிக்கல் சிங்கங்கள்கிட்ட Remote Access (அவங்க உங்க கம்பியூட்டர் ஸ்கீரின் பாக்கறது, உங்க கம்பியூட்டரை ஆப்ரேட் பண்றது) கொடுத்தா வேலை முடிஞ்சதும் அந்த சாப்ட்வேரை (Teamviewer, logmein) தூக்குங்க. அவசர உதவி ஏதாவது தேவைபட்டு உங்க -மெயில் பாஸ்வேர்ட் கொடுத்து இருந்தா அதையும் மாற்றுங்கள். யாரையும் நம்பாதிங்கன்னு சொல்ல வரவில்லை. உங்க நம்பிக்கை வேற எதிலாவது காட்டுங்க.

            முகத்தை காட்டாமல் மற்றவற்றை எல்லாம் காட்டி நெட்டில்  போடுபவர்கள் அதிகம். அது அவரவரது  உரிமை.  கணவனாக இருக்கட்டும், காதலனாக இருக்கட்டும், உங்க நம்பிக்கை உரியவராக இருக்கின்றாரா என பார்க்கவும், சில பேர் பின்னால்  சண்டை  வரும்பொழுது அதை வைத்து உங்களை மிரட்ட கூட  செய்யலாம், ஆனால் இப்பொழுது உள்ள பெண்கள் விவரமாக உள்ளனர் , பயபடுவது இல்லை ,  தங்களது சுதந்திரத்தில் யாரும் தலை யிட முடியாது. என தெளிவாக எங்கு   கம்பேளண்ட் பண்ண வேண்டுமோ அங்கு  கம்பிளைண்ட் பண்ணி , உண்டு இல்லை   என ஆக்கி விடுவார்கள்.

     காதல் புனிதமானது . அழகு என்பது  ரசிக்க கூடியது , அது அவரவர் மனதை பொறுத்தது. வாழ்க்கை நமதுகையில்தான் உள்ளது , ஆனால் நம்மை  சுற்றி உள்ள உலகம்   சரி  இல்லாத பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும், வெளிநாட்டில்   அதிக பிரசினைகள் வராது . தனி மனித ஒழுக்கம் உள்ளது.இந்தியாவில்  ஊழல் மலிந்து, நிர்வாகம் லஞ்சத்தில் முழ்கி உள்ளது. எப்படியாவது பிழைக்கலாம் என்ற மன நிலை உள்ளவர்கள் உள்ள உலகத்தில்  நாம்தான் கவனமாக இருக்க வேண்டும், ,

     காதல் புனிதமானது , அது எந்த வயதிலும்  வரலாம். தம்பதியர்  நன்கு வாழ்க்கையை அனுபவிக்கவும்,கவனமாக இருக்கவும், தங்களது குடும்ப விஷயங்களை தெரியபடுத்தவேண்டாம்.நம்பிக்கை உரியவர்களிடம்  பகிர்ந்து கொள்ளலாம். அழகு ஆராதனை பண்ணுவதற்குதான் . அழகை காட்டுவதற்குதான் மறைப்பதற்கு அல்ல . வாழ்க்கையை அனுபவியுங்கள். .

Reply all
Reply to author
Forward
0 new messages