பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு

30 views
Skip to first unread message

Oru Arizonan

unread,
Apr 15, 2022, 2:19:58 AM4/15/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai, சி. ஜெயபாரதன்
என் புதினத்தின் அறிமுகமும், முதல் அத்தியாயமும் "கல்கி"யில் வெளிவந்திருக்கிறது. சுட்டிகள் கீழே:  தமிழன்னையுடன் எதிர்காலத்துக்குப் பயணித்து, படித்துக் கருத்துப் பதியுங்கள்.


பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 


Oru Arizonan

unread,
Apr 19, 2022, 1:49:54 PM4/19/22
to S. Jayabarathan, தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, kanmani tamil, Anna Kannan, rajam, nandhitha kaapiyan
நண்பர் ஜெயபாரதன்,
தங்கள் அன்புகலந்த ஆசிக்கு மிக்க நன்றி.  என்னை எழுதுவிக்க ஊக்குவித்த தங்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Apr 22, 2022, 8:02:42 PM4/22/22
to தமிழ் மன்றம், தமிழ் வாசல், vallamai, சி. ஜெயபாரதன்


என் புதினத்தின் மூன்றாம் அத்தியாயம் "கல்கி"யில் வெளிவந்திருக்கிறது. சுட்டி கீழே:  தமிழன்னையுடன் எதிர்காலத்துக்குப் பயணித்து, படித்துக் கருத்துப் பதியுங்கள்.
 

Oru Arizonan

unread,
Apr 29, 2022, 11:11:21 AM4/29/22
to vallamai, தமிழ் மன்றம், தமிழ் வாசல், Buhari, சி. ஜெயபாரதன், Anna Kannan, crselv...@gmail.com, இலக்குவனார் திருவள்ளுவன், kanmani tamil
எனது புதினம் 'பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு' - பாகம் 1, அத்தியாயம் 5 கல்கியில் வெளிவந்துள்ளது.  படித்துக் கருத்துப் பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Apr 30, 2022, 10:44:18 AM4/30/22
to தமிழ் மன்றம், vallamai, தமிழ் வாசல், Buhari, Anna Kannan, crselv...@gmail.com, இலக்குவனார் திருவள்ளுவன், kanmani tamil
நண்பர் ஜெயபாரதன்,
தங்கள் கருத்துக்கு நன்றி.  தமிழகத்தில் மட்டுமல்லாது, புலம்பெயர்ந்த தமிழரும் தம் தாய்மொழியாம் தமிழைப் புறக்கணிப்பதை கண்கூடாகக் கண்டு மனம் வெதும்பிவருகிறேன்.    அந்த வசை வந்து சேரலாமா, அது நம் காதில் விழலாமா என்று அன்று அன்று அமரகவி பாரதி சொன்ன கவிதைதான் என் நினைவுக்கு வந்தது.  இப்படிச் சென்றால், தமிழன்னை நம்மை எங்கு அழைத்துச் செல்வாள் என்ற மனவருத்தம்தான் என்னை அப்படித் தொடங்க வைத்தது. சிலசமயம், அதிர்ச்சி மருத்துவம் நமக்குத் தேவை.

என் புதினம் தமிழருக்கு அவர்மொழி மீது பற்று வைக்க ஒரு அறைகூவலாக விளங்க வேண்டும் என்பதே என் அவா.
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்
======


On Fri, Apr 29, 2022 at 8:38 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
//நண்பர் அரிசோனா மகாதேவன்
////மெல்லத் தமிழினிச் சாகும், அந்த
மேற்கு மொழிகள் புவிமிகை ஓங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமே?  //

இப்படி எதிர்மறை உட்கருத்தாகக் கொண்டு நாவல் துவங்குவது வையகத் தமிழருக்கு வருத்தம் அளிக்கிறது.

சி. ஜெயபாரதன், கனடா//

Oru Arizonan

unread,
May 3, 2022, 12:25:34 PM5/3/22
to தமிழ் மன்றம், சி. ஜெயபாரதன், தமிழ் வாசல், vallamai, Buhari, Anna Kannan, crselv...@gmail.com, இலக்குவனார் திருவள்ளுவன், kanmani tamil
என் புதினம் 'பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு', பாகம் 1, அத்தியாயம் 6 கல்கியில் வெளிவந்திருக்கிறது.  படித்து அங்கு நிறை-குறை கருத்துப் பதியுங்கள்.


பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
May 11, 2022, 5:31:39 PM5/11/22
to தமிழ் மன்றம், சி. ஜெயபாரதன், தமிழ் வாசல், vallamai, Buhari, Anna Kannan, crselv...@gmail.com, இலக்குவனார் திருவள்ளுவன், kanmani tamil

என் புதினம் 'பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு', பாகம் 1, அத்தியாயம்7ம், நினைவூட்டலும் கல்கியில் வெளிவந்திருக்கிறது.  படித்து அங்கு நிறை-குறை கருத்துப் பதியுங்கள்.


Oru Arizonan

unread,
May 11, 2022, 5:35:03 PM5/11/22
to தமிழ் மன்றம், சி. ஜெயபாரதன், தமிழ் வாசல், vallamai, Buhari, Anna Kannan, crselv...@gmail.com, இலக்குவனார் திருவள்ளுவன், kanmani tamil

என் புதினம் 'பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு', பாகம் 1, அத்தியாயம்7ம், நினைவூட்டலும் கல்கியில் வெளிவந்திருக்கிறது.  படித்து அங்கு நிறை-குறை கருத்துப் பதியுங்கள்.
இரண்டாம் பாகத்தில் பொன்னின் செல்வன் இராஜராஜ சோழரைச் சந்திக்கலாம். அவரது தமிழ்க்கனவையும் அறிந்துகொள்ளலாம்.
--

Oru Arizonan

unread,
May 12, 2022, 3:03:41 PM5/12/22
to S. Jayabarathan, vallamai, தமிழ் வாசல்
நண்பர் ஜெயபாரதன்,

கருத்துக்கு நன்றி.  ஒவ்வொரு அத்தியாயத்திலும், இடமும், காலமும் குறிப்பிட்டுள்ளேன்.
முதல் பாகம் பொதுஆண்டு 2411 என்றும் குறிப்பிட்டுள்ளேன்.
அதிர்ச்சி நாடகத்துக்கான காரணங்கள்:
1.  நான் சென்னையில் குழந்தைகளுக்கான தமிழ்ப்புத்தகங்கள்  வாங்கச் சென்றபோது நிகழ்ந்தவை:  ஒரு புத்தகக் கடையில் நான் தமிழில் பேசினும், விற்பனையாளர் ஆங்கிலத்தில் பேசினார்.  அப்பெரிய கடையில் தமிழ்ப் புத்தகங்கள் அதிகம் இல்லை.  இரண்டாவது கடையில் தமிழ்ப் புத்தகப் பிரிவை நிர்வகித்த பெண்ணுக்கு இந்தியைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.  அங்கிருந்த ஒரு தமிழ்ப்பணிப்பெண்ணிடம் அதைப்பற்றி விசாரித்தபோது, தான் கருப்பாக இருப்பதால், தனக்கு அந்த வேலை கிடைக்காது என்றும், அக்கடைக்கு வருபவர்களுக்கு இந்தி தெரிவதால், இந்தி மட்டும் தெரிந்த பெண் வேலை செய்வது விற்பனையைப் பாதிக்காது என்றும் தெரிவித்தாள்.
2.  கனடாவில் வசிக்கு என் நண்பர் தனது தமிழ்பேசும் மகனுக்கு மணமகள் தேடிச் சென்றபோது, தமிழ்நாட்டில் பிறந்துவளர்ந்த அப்பெண்ணுக்குத் தமிழ் தெரிவில்லை என்று அந்த நண்பர் என்னிடம் அலுத்துக்கொண்டார்.
3.  என் உறவினர் மகன் ஒருவன் என்னுடன் துணிக்கடைக்குச் சென்றபோது அங்கிருந்த விற்பனையாளர்களுடன் இந்தியில் பேசினான்.  அவர்களுக்கு நன்றாகத் தமிழ் தெரிந்தும்கூட.  அத் துணிக்கடை மேலாளர் வடவராக இருந்தும் நல்ல தமிழில் என்னுடன் பேசினார். 

இக்காரணங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தந்தன.  நான் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற இருபத்தைந்தாண்டுகளில் சென்னையில் இப்படி நிகழ்ந்தால், நானூறு ஆண்டுகளில் தமிழ்நாடு எப்படி மாறும் என்று எண்ணினேன்.  புதினத்தின் முதல்பாகத்தின் கரு உருவாகியது. இருபத்தைந்தாம் நூற்றாண்டில் அது நிகழ்கிறது.

தென்னகத்தையே ஒருகுடைக்குள் கோலோச்சிய மன்னர்களின் பேரரசு எப்படி அழிந்தது என்ற வரலாற்றைப் படித்தேன்.  இரண்டாம், மூன்றாம், நான்காம் பாகங்களுக்கான கரு கிடைத்தது.

தமிழன்னையுடன் கற்பனையில் பயணித்துப் புதினத்தை உருவாக்கினேன். அது பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டுவரை செல்கிறது.

அதிர்ச்சியுடன் தொடங்கினால்தான் வாசகர்கள் தொடர்ந்து படிப்பர்.  ஆகவேதான் முதலில் அதிர்ச்சி கொடுக்கும் முதல் பாகம் உருவாகியது.  தொடர்ந்து படியுங்கள். 

நிறை குறைகளை எழுதுங்கள்.  அதுதான் எழுதிய எனக்கு உற்சாகத்தைத் தரும்.
  

On Thu, May 12, 2022 at 10:47 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
//நண்பர் அரிசோன மகாதேவன்,

ஒவ்வோர் புதின வெளியீட்டில் காலம் குறிப்பிடும் போது, நேரம், இடம், பொழுது அத்துடன் முன் கதை என்று சுருக்கிக் கூறினால், தொடர்ந்து படிப்போருக்கும், புதிதாய்த் துவங்கு வோருக்கும் காட்சி தெளிவாய்த் தெரியும்.  

நீங்கள் எழுதுவது ஒரு எதிர்காலக் கற்பனை நாடகம்.  அதிர்ச்சி நிகழ்ச்சி !

அத்துடன் ஏனிந்த அதிர்ச்சி நாடகம் ? என்னும் வாசகர் பின்னோட்டத்துக்கு இடையுரை ஒன்று எழுதினால் ஆசிரியர் குறிக்கோள் விளங்கும்.  இப்போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் வாசகருக்கு ஓர் உணர்ச்சி.

கனிவுடன்,
சி. ஜெயபாரதன்//

Oru Arizonan

unread,
May 17, 2022, 1:20:33 PM5/17/22
to தமிழ் மன்றம், சி. ஜெயபாரதன், தமிழ் வாசல், vallamai, Buhari, Anna Kannan, crselv...@gmail.com, இலக்குவனார் திருவள்ளுவன், kanmani tamil, Satish Kumar Dogra
என் புதினம் 'பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு', பாகம் 2ன் தொடக்கம் கல்கியில் வெளிவந்திருக்கிறது.  இனி புதினம் பண்டைய வரலாற்றுக் கதையாகத் தொடரும்.  சோழருக்கும், பாண்டியருக்கும் பிறவிப்பகை தோன்றும் காரணம் அதில் புரியும்.  பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு என்ன என்பதும் அடுத்தடுத்த அத்தியாங்களில் வெளிவரும். 
படித்து அங்கு நிறை-குறை கருத்துப் பதியுங்கள்.  சுட்டியை உங்கள் நண்பர் குழாமுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 
https://kalkionline.com/ponniyin-selvanin-tamil-kanavu-part-2-tiruppani-thuvakkam/

meena muthu

unread,
May 21, 2022, 1:08:45 AM5/21/22
to thamiz...@googlegroups.com
திரு அரிசோனன் அவர்களுக்கு, 
“பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு” வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
ரொம்ப சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது 
மிக மிக அருமை!!
வாழ்த்துகள்!!நன்றி.



Sent from my iPhone

On 18 May 2022, at 1:20 AM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thamizhvaasal/CAAGyNr%2BPOwAoTy-NZ7t7F5V-fMJdAR-EwKEavTaNUO8-1FfAUQ%40mail.gmail.com.

Oru Arizonan

unread,
May 21, 2022, 6:10:44 PM5/21/22
to தமிழ் வாசல், Meena Muthu
உயர்திரு மீனா அவர்களே,

பாராட்டுக்கு மிக்க நன்றி. அருள்கூர்ந்து தங்கள் கருத்தைக் கல்கி இணையத்தில் பதிகிறீகளா?  என் தொடரைப் படிக்கும் அனைவரும், கல்கி இணையத்தோரும் மகிழ்வடைவார்கள்.
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

On Fri, May 20, 2022 at 10:08 PM meena muthu <ranga...@gmail.com> wrote:
//திரு அரிசோனன் அவர்களுக்கு, 
“பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு” வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
ரொம்ப சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது 
மிக மிக அருமை!!
வாழ்த்துகள்!!நன்றி.//

Oru Arizonan

unread,
May 27, 2022, 12:10:12 PM5/27/22
to தமிழ் மன்றம், சி. ஜெயபாரதன், தமிழ் வாசல், vallamai, இலக்குவனார் திருவள்ளுவன்
என் புதினம் 'பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு', பாகம் 2, அத்தியாயம் 2, கல்கியில் வெளிவந்திருக்கிறது.  தாய்மொழியில் பேசமறுக்கும் தனயனைக் கண்ட தாயின் மனநிலை எப்படியிருக்கும், சோழருக்கு எதிராக எப்படிச் சிங்களவரும், பாண்டியரும் இணைந்து செயல்படுகின்றார் என்பதைக் காணுங்கள்.
படித்து அங்கு நிறை-குறை கருத்துப் பதியுங்கள்.  சுட்டியை உங்கள் நண்பர் குழாமுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 

Oru Arizonan

unread,
Jun 3, 2022, 3:19:57 AM6/3/22
to தமிழ் மன்றம், சி. ஜெயபாரதன், தமிழ் வாசல், vallamai, இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்த் திருப்பணித் திட்டத்தின் விவரம் என்ன? அதன் ஆலோசகர் யார்? நாலாம் அத்தியாயத்தில் விடை கிடைக்கும். படித்துக் கருத்துப் பதியுங்கள்.
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 
பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு - இரண்டாம் பாகம் - அத்தியாயம் 4 - kalkionline

Oru Arizonan

unread,
Jun 21, 2022, 7:10:27 PM6/21/22
to vallamai, தமிழ் மன்றம், சி. ஜெயபாரதன், தமிழ் வாசல், இலக்குவனார் திருவள்ளுவன்

On Sat, Jun 18, 2022 at 1:20 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
<//கருவூர்த்தேவர் இராஜராஜசோழச் சக்ரவர்த்திக்கு அளித்த தமிழ்வளர்க்கும் திட்டத்தை — தங்கச்சுருளில் எழுதப்பட்ட திட்டத்தைத்  தன்னுள் பேணிப் பாதுகாத்த குழல்>
இந்த குழல் கங்கைகொண்ட சோழபுரத்தில் அகப்பட்டது ஏன் என புரியவில்லை.//
அது புதினத்தைத் தொடர்ந்து படித்தால் தெரியும்.  முதலில் சொன்னால் தற்கால நிறுத்தம் (suspense) கெட்டுவிடுமே!
பொறுமை வேந்தரே, பொறுமை.
வெள்., 17 ஜூன், 2022, பிற்பகல் 5:16 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
<//தன் வழுக்கைத் தலையைத் தடவிக்கொள்கிறார், சோம்காந்த்.>
 வழுக்கைக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கலையா? அட தேவரே!
//
சோம்காந்துக்கு வழுக்கைத் தலையுடன் இருப்பது பிடித்திருக்கிறதோ, என்னவோ?
 
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 
Reply all
Reply to author
Forward
0 new messages