கல்யாணமாம் கல்யாணம்!

238 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
May 1, 2011, 3:35:28 AM5/1/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com



ம்ம்ம்ம்ம், இந்த கீதா என்ற பெயர் ரொம்பவே பொதுவாய்ப் புழங்கும் பெயர் என்றாலும் எங்க வீட்டில் அம்மா வழியிலும், அப்பா வழியிலும் இன்று வரை நான் ஒருத்திதான் கீதா. கல்யாணம் ஆகி வந்ததும், இங்கே சொந்தங்களிலே ஒன்றிரண்டு கீதாக்கள் இருக்கின்றனர். வலை உலகுக்கு வந்தப்போ கீத்ஸ் னு ஒருத்தர் எழுதிட்டு இருந்தார். அவங்க அப்போ நிறைமாசக் கர்ப்பம் என்பதால் அதிகமாய் இணையம் வரமுடியலை. அப்புறமாக் குழந்தை பிறந்துக் கொஞ்ச நாட்கள் எழுதினாங்களோ என்னமோ தெரியலை. ஆனால் இணையத்திலும் சில காலம் செங்கோல் செலுத்திட்டு இருந்தேன். இப்போ இரண்டு வருஷமா கீதா அசல், கீதா சந்தானம், கீதா 6 என்று சிலர் வந்திருக்காங்க. இப்போ சீதா லக்ஷ்மியைக் கவனிப்போமா??

பள்ளியிலே என் பெயரை சீதாலக்ஷ்மி என்று கொடுத்தது செல்லாமல் போச்சுனு சொல்லிட்டேன் இல்லையா?? தாத்தாக்களைத் தவிர வேறே யாருமே சீதானு கூப்பிட்டதில்லை. அம்மாவுக்கு செண்டிமெண்ட். சீதை கஷ்டப் பட்டாளே அது மாதிரிக் கஷ்டப்படணும்னு. அதோட என்னோட இந்தப் பெயர் கொண்ட பாட்டியும் கஷ்டப் பட்டிருக்காங்க. பெரியவங்க பெயர் என்ற காரணமும் சேர்ந்து கொள்ளவே நிரந்தரமாய் கீதாவானேன். ஆனால் கல்யாணத்திற்குப் பையர் பார்க்கையிலே ஜாதகத்திலே கீதா என்ற பெயரே கொடுக்கலை. சீதாலக்ஷ்மி என்ற பெயர்தான் இருந்தது. என்னோட கணவர் வீட்டிலே அவருடைய கொள்ளுப்பாட்டி பெயர் சீதா லக்ஷ்மி. கொள்ளுத்தாத்தா பெயர் சாம்பசிவம். ரெண்டு பேரும் இப்போ நாங்க ரெண்டு பேரும் எப்படி எல்லாத்திலேயும் காண்ட்ராஸ்டா இருக்கோமோ அதே போல் இருப்பாங்களாம். ஆனால் ரெண்டு பேருமே நல்ல செல்வாக்கோட இருந்திருக்காங்க. சாம்பசிவம் தாத்தா நாச்சியார் கோயிலின் பெருமாள் கோயில், உப்பிலியப்பன் கோயில் போன்ற கோயில்களில் தர்மகர்த்தாவாக (அறங்காவலர்) இருந்திருக்கிறார். அதோடு உள்ளூரின் பெருமாள் கோயிலும் சேர்ந்து கொண்டது. (இந்தப் பெருமாளுக்குத் தான் இப்போ திருப்பணி நடக்கிறது. கும்பாபிஷேஹம் தேதி வைச்சு தேர்தல் அறிவிப்பினாலே தள்ளிப் போயிருக்கு.) 

கொள்ளுத்தாத்தா பெயரைத் தான் என் கணவருக்கு வைச்சிருக்காங்க. ஆகவே எங்களுக்குக் கல்யாணத்தின் போது ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது முதல்லே என்னோட பெயரைப் பார்த்திருக்காங்க. அதிலேயே அவங்க டோட்டலா சந்தோஷமாயிட்டாங்களாம். ஆஹா, இந்த மாதிரிப் பெயர்ப் பொருத்தம் கிடைக்கறது ரொம்பவே அரிதுனு நினைச்சு ஜாதகத்தைக் காட்டினால்,அங்கே இரண்டு, மூன்று பேர் ஜோசியம் பார்ப்பாங்க. எல்லாருமே ஒரே வாக்கா இவங்க பூர்வ ஜன்மத்திலேயும் தம்பதிகள், அதனாலே இவங்களுக்குள்ளே தான் கல்யாணம் நடக்கும் அப்படினு சொல்லி இருக்காங்க. உடனே எங்க வீட்டுக்கும் ஜாதகம் வந்தது. எங்க வீட்டிலே இந்தப்பெயர்ப் பொருத்தம் பத்தி எல்லாம் அப்போத் தெரியாது. மாப்பிள்ளை வீட்டுக்கு என் ஜாதகம் எங்க சித்தப்பா மூலமாப் போச்சு. உடனே அவங்க வீட்டிலே இருந்து என் சித்தப்பா மூலமாவே இவர் ஜாதகம் வந்தது. மாப்பிள்ளை வீட்டில் பொருத்தம் பார்த்தாச்சு என்பதும் ஜாதகம் வந்தப்போ எங்களுக்குத் தெரியாது. அப்போல்லாம் மாப்பிள்ளை வீட்டில் அவ்வளவு சுலபமாப் பெண் வீட்டில் வலுவிலே போய்ச் சொல்ல மாட்டாங்க. 

எங்க அப்பாவும் ஜாதகம் பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவரே. ஜாதகம் பார்த்துச் சொல்லும் ஜோசியரும் உள்ளதை உள்ளபடியே சொல்லக் கூடியவர். அப்படி ஒருவரை அவருக்குப் பின் இன்று வரை நாங்க கண்டதில்லை. ஜோசியரும் பார்த்துட்டு , என் அப்பாவிடம் இந்த வரன் தான் முடியும். இவங்க போன ஜன்மத்துத் தம்பதிகள், இந்தப் பிறவியிலும் சேரப் போறாங்கனு சொல்லி இருக்கார். என் அப்பாவுக்கு முதல் ஆக்ஷேபம் மாப்பிள்ளை தஞ்சாவூர்க்காரர் என்பது, இரண்டாவது ஆக்ஷேபம் அப்போ அவர் புனாவில் இருந்தார். அவ்வளவு தொலைவெல்லாம் பெண்ணை அனுப்ப முடியாது என்று அப்பாவுக்கு இஷ்டமில்லை. அதற்கு முன்னால் டெல்லியில் இருந்து ஒரு வரன் வந்ததை இதே காரணத்தைச் சொல்லி அப்பா நிராகரித்திருந்தார். ஆகவே அக்கம்பக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களான திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் இருக்கும் பையர்களாகவே பார்த்துக்கொண்டிருந்தார். அப்படி ஒன்றிரண்டு வரவும் வந்தது. அவங்களும் போட்டோவைப் பார்த்துட்டு நேரிலே பேசறதுக்கும் வரச் சொல்லி இருந்தாங்க. ஆகவே அப்பாவுக்குத் திருச்சி வரன் ஒன்று தான் முடிக்க எண்ணம். அப்பா திருச்சிக்குப் போனார்.

அப்போல்லாம் பெண் வீட்டில் நேரே பையர் வீட்டுக்குப் போய் செய்முறைகள், சீர், செனத்திகள் என்று எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு அப்புறமே பெண் பார்க்க வருவார்கள். பெண் பார்த்துவிட்டுச் சீரில் குறைகள் என்று பெண்ணை விடவேண்டாம்னு எண்ணமோ என்னமோ! எல்லாம் பேசி முடிச்சாலே பாதிக் கல்யாணம் முடிஞ்சாப்பலனு சொல்வாங்க. அப்படியும் சிலர் வீடுகளிலே பெண்பார்த்துப் பிடிச்சும், சீர் செனத்திகள் பிடிச்சும் வேறு ஏதேனும் காரணங்களால் நடக்காமலும் போனது உண்டு. ஆனால் எங்க ஜோசியரோ அப்பாவிடம் இதெல்லாம் நடக்காது. உங்க பெண்ணுக்கு அந்தப் பையர் தான். நீங்க பண்ணி வைக்கலைனா அந்தப் பையரே வந்து பண்ணிக்கொண்டு போயிடுவார்னு அடிச்சுச் சொல்லிட்டார். ஆனாலும் அப்பா கேட்கவில்லை. பையர் எங்கேயோ புனாவில் இருக்கிறார். அவர் வந்து பெண்ணைப் பார்த்துப் பிடிச்சு, சம்பந்தம் பேசினு எவ்வளவோ இருக்கு. கையிலே வெண்ணெய் இருக்கு, நெய்க்கு அலைவானேன்னு திருச்சி கிளம்பினார்.

Geetha Sambasivam

unread,
May 1, 2011, 3:36:56 AM5/1/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com


கல்யாணமாம் கல்யாணம் ! பயமுறுத்திய தோடு!

திருச்சி மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரே பையர். ஏதோ கெமிக்கல் கம்பனி?? சரியா நினைவில் இல்லை. திருச்சிக்குள்ளேயோ அல்லது சுற்றுவட்டாரத்திலோ வேலை. தில்லை நகரில் வீடு. பையரின் அப்பா சங்கரமடத்தில் மிகவும் ஈடுபாடு. இந்த ஜாதகம் திருச்சியிலே பல்லாண்டுகளாய் இருந்த என்னோட ஒண்ணு விட்ட பெரியப்பா ஒருத்தர் மூலமா வந்தது. அவங்க ரொம்பவே வற்புறுத்தினதோடு இல்லாமல் குழந்தையை, (ஹிஹிஹி, மீ ஒன்லி) நாங்க ரெண்டு பேரும் கிட்ட இருந்து கண்ணும், கருத்துமாக் கவனிச்சுப்போம்னு உறுதிமொழி வேறே. அப்பா திருச்சியில் அவங்க வீட்டிலே போய் இறங்கி அந்தப் பெரியப்பாவையும் அழைத்துக்கொண்டு பையர் வீட்டுக்குப் போயிருக்கார். பையரின் அப்பா க்ஷேமலாபங்கள் விசாரிச்சு முடிஞ்சதும் நேரடியாக விஷயத்துக்கு வந்துட்டார். பெண்ணுக்கு வைரத் தோடு போடுவீங்களானு கேட்டிருக்கார். அது வரைக்கும் அப்பா இதை நினைச்சே பார்க்கலை. என்றாலும் சமாளிச்சுட்டுப் போடறேன்னு சொல்லி இருக்கார். வைர மூக்குத்தி? அது ஏற்கெனவே இருக்கு. இது அப்பா. 

ம்ம்ம்ம்ம்ம், தோடு வாங்கியாச்சா? வாங்கணுமா??

இனிமேல் தான் வாங்கணும், இப்போத் தானே உங்க அபிப்பிராயம் தெரிஞ்சது. "அப்பா.

நான் சொல்ற இடத்திலே, நாங்க காட்டற வைரக்கற்களை வாங்கி எங்க தட்டான் கிட்டேத்தான் கட்டணும். நீங்க வாங்கறதெல்லாம் சரிப்படாது.

தோடு எங்க பொண்ணுதானே போட்டுக்கப் போறா? அவளுக்கும் பிடிக்கணுமே!

நாங்க சொல்ற தோட்டைத் தான் அவ போட்டுக்கணும்

அப்பாவுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டிருக்கும் நிச்சயமா. நாம அப்போவே புரட்சிப் பெண்ணில் ஒருத்தியாகத் தீவிரமாக இருந்தோமே! தினமும் ஏதானும் ஒரு விஷயத்துக்கு எனக்கும் அப்பாவுக்கும் யுத்தம் வரும்.

நாளைக்குக் கல்யாணமாகிப்புருஷன் வீடு போனால் தெரியும், இந்த அப்பாவோட அருமை!"

தெரியட்டும், தெரியட்டும், அவங்க வீட்டிலும் பொண்ணுங்க இல்லாமலா இருக்கும்! கூடப் பிறந்தவங்களோட சண்டை போடாமலா இருப்பாங்க?

விஷயம் வேறே ஒண்ணும் இருக்காது. அண்ணா அப்போவே ஹோசூரில் வேலைக்குப் போய்விட்டார். ஆகையால் இருந்தது தம்பியும் நானும் மட்டும் தான். தம்பிக்குத் தட்டலம்பிப் போட்டிருக்க மாட்டேன். அல்லது சாப்பிட்ட தட்டை அவரே அலம்பட்டும்னு சொல்லி இருப்பேன். இப்படி ஏதாவது ஒண்ணு. அதே தம்பியும் நானும், அவருக்குத் தமிழ்க் கட்டுரை எழுதவும், படம் வரையவும் கூட்டுச் சேர்ந்துப்போம். அதனாலே இதை எல்லாம் லக்ஷியமே பண்ணறதில்லை. ஆனால் அப்பாவுக்குத் தம்பியை நான் படிக்கவிடாமல் கெடுக்கிறேன்னு ஒரு எண்ணம். அதோட அவருக்குத் தமிழில் அவ்வளவா எழுத வராதுங்கறதாலே நான் எழுதிக் கொடுப்பேன். அதுவும் பிடிக்காது. ஆகையால் எப்போவும் அப்பாவுக்கும், எனக்கும் ஏழாம் பொருத்தம் தான். ஆனால் அம்மா ஏதானும் செய்து கொடும்மானு கேட்டாலும், அலக்ஷியமாக போம்மா, நான் படிக்கணும் தான்! ஹிஹிஹி, அப்போப் படிச்சுட்டு இருந்தோமுல்ல! அம்மாவும் ரொம்பச் சொல்ல மாட்டாங்க தான். ஏன்னா அம்மா சித்திகளின் பிரசவத்திற்கு உதவிக்குப் போறச்சே எல்லாம் ஸ்கூலுக்குப் போறச்சே கூட சமையலையும் முடிச்சுட்டுத் தான் போயிருக்கேன். அதனால் பொண்ணுக்கு வேலை தெரியும், நம்ம கிட்ட சலுகைனு புரியும். ஆனால் அப்பாவுக்கோ அவர் சொன்னால் உடனே செய்தாகணும். அப்படி இருக்கையில் போற இடத்திலும் மாமனார் இப்படி இருந்தால்???? அப்பாவின் கண்ணெதிரே காட்சிகள் ஓடி இருக்கும்னு நினைக்கிறேன். ஆனால் உள்ளூர அப்பாவுக்கே பிடிக்கவும் இல்லை.

அடுத்து நகைகள் பத்திப் பேச்சு. நகைகள் எல்லாம் பண்ணி வச்சாச்சு, அவள் ஸ்கூல் முடிக்கிறதுக்கு முன்னாடியே பண்ணிட்டேன். அப்பா/

அதெல்லாம் ஒத்துக்க முடியாது. இப்போ என்ன வயசு உங்க பொண்ணுக்கு? பதினெட்டு முடிஞ்சு பத்தொன்பதா?? ஹும், நாலு வருஷத்துக்கு மேல் இருக்குமே பண்ணி. எல்லாம் பழசாப் போயிருக்கும்

பாலிஷ் பண்ணிடறேன். எங்க கடைக்காரர்ட்டே சொன்னால் வைரப் பாலிஷ் கூடக் கொடுத்துத் தருவார்.

அதெல்லாம் வேண்டாம்னேன். நீங்க அந்த நகைகளை என் கிட்டேக் கொடுங்க. நான் எல்லாத்தையும் எங்களுக்குப் பிடிச்சாப்பல மாத்திடறேன். 

தூக்கிவாரிப் போட்ட அப்பா அப்போ புடைவைகள், சோமன்கள் எல்லாம்??

எல்லாத்துக்கும் பணத்தைக் கொடுங்க, நாங்க இங்கே திருச்சியிலேயே வாங்கிடறோம்.

அப்பாவுக்குச் சுரத்தே இல்லை. இப்போவே இவ்வளவு கெடுபிடின்னா அப்புறமா என்னென்ன கேட்பாரோ?

அப்புறமா வருஷாந்திரச் சீரெல்லாம்???

அததுக்கு யாருக்கு என்ன செய்யணுமோ ஒரு லிஸ்ட் கொடுக்கிறேன். அதுப்படி செய்யணும்.

சரி. அப்பா திரும்பிவிட்டார். அங்கே எதுவும் பேசாமல் வந்ததே பெரிய விஷயம், சாதாரணமாய்ப் படபடவெனப் பொரியும் சுபாவம் கொண்டவர் பெண்ணுக்குக் கல்யாணம் என்பதால் பொறுத்துக்கொண்டாரோ என்னமோ, தெரியலை. அன்னிக்கே கிளம்பி மதுரைக்கும் வந்தாச்சு. இங்கே வந்து ஆகாயத்துக்கும் பூமிக்கும் ஒரு குதி குதிச்சார் பாருங்க. நாங்கல்லாம் நடுங்கிப் போயிட்டோம்.

கல்யாணமா பேசறார் அந்த மனுஷன்?? வியாபாரம், இதிலே சங்கரமடத்துக்கு நெருக்கம்னு வேறே பீத்தல். இருக்கட்டும், இவர் இப்படி எல்லாம் கேட்கிறதை நான் அவர் இருக்கிற சங்கர மடத்துக்கே எழுதிடறேன். ஒரே கத்தல்.

மெல்ல மெல்லப் பெரியப்பா, பெரியம்மா, மாமாக்கள், என்னோட அம்மாவழிப்பாட்டி எல்லாருக்கும் விஷயம் போக எலலாரும் வந்து சங்கர மடத்துக்கு எழுதிடறேன்னு அவருக்கு பதில் போடச் சொன்னாங்க. சரினு அப்பாவும் அந்தப் பையரின் அப்பாவுக்கே சங்கரமடத்தில் இருந்து கொண்டு நீங்க இப்படிக் கேட்டது, பேசியது எதுவும் சரியில்லை. அதனால் சங்கரமடத்திற்கு நான் எழுதி இவற்றை எல்லாம் சொல்லிட்டு அவங்க செய்யலாம்னு சம்மதம் கொடுத்தால் நீங்க சொல்றாப்போலவே செய்துடறேன் என்று எல்லாரையும் சாட்சி வைத்துக்கொண்டு எழுதிப் போட்டுவிட்டார். அங்கே இருந்து பதிலே இல்லை.

. ஹோசூரில் இருந்த அண்ணாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைனு லெட்டர் வரவே அம்மாவை மட்டும் அப்பா அனுப்பிட்டுத் தம்பி அப்போ பியுசி படிச்சுட்டு இருந்தார். அவரோட பரிக்ஷை முடிஞ்சதும், எல்லாருமா வரோம்னு சொல்லி என்னையும், தம்பியையும் மட்டும் இங்கே வைச்சுக்கொண்டார். அதுக்குள்ளே எங்க சித்தப்பா ஜாதகம் பார்த்தாச்சா, பார்த்தாச்சானு லெட்டருக்கு மேலே லெட்டர் அப்பா பாட்டுக்கு அதை எல்லாம் படிச்சுட்டு நிதானமா எங்க கிட்டே மைசூருக்குப் பக்கத்திலே மேல்கோட்டையில் வைரமுடிசேவை பார்க்கப் போறேன். நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருங்க. அவன் காலேஜ் போனதும் நீ க்ளாசுக்குப் போ. காலம்பர அவனுக்குக் காபி போட்டுக் கொடுத்துட்டு க்ளாசுக்குப் போனு ஏகத்துக்கு எனக்கு மட்டும் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) புத்திமதி சொல்லிட்டுப் போயிட்டார். வீட்டுக்காரங்களும், நாங்களும் அடுத்தடுத்து இருந்ததால், ஒண்ணும் பயமில்லை. வீட்டு வாசல் ஒரே வாசல் தான். வீட்டுக்காரங்க போர்ஷனுக்குள் நுழைஞ்சு அவங்க ஹால் வழியா அவங்களுக்குத் தெரிஞ்சு தான் யார் வந்தாலும் உள்ளே வரணும். 

நானும் தம்பியும் மட்டும் தான் இருந்தோம். அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. ஒருநாள் காலம்பர நான் சமைச்சுச் சாப்பிட்டு விட்டு என்னோட அக்கவுண்டன்சி கிளாசுக்குக் கிளம்பிட்டிருந்தேன். அப்போ வாசல்லே யாரோ எங்க அப்பா பேரைச் சொல்லிக்கேட்டுட்டு இருந்தது காதில் விழுந்தது. யாருனு பார்த்தா, சித்தப்பாவோட தம்பி. நான் அடிக்கடி வங்கி பரிக்ஷை எழுத சென்னை போயிட்டிருந்தப்போ எல்லாம் சித்தி வீட்டில் தான் தங்குவேன். சித்தப்பாவோட தம்பிக்கு அப்போக் கல்யாணம் ஆகலை. அதுக்கு அப்புறம்தான் கல்யாணம் ஆச்சு. அந்தக் கல்யாணத்துக்கு நானும், அப்பாவும் போறதா இருந்து போக முடியலை. போயிருந்தால் ஒருவேளை அங்கேயே என்னோட கல்யாணமும் நிச்சயிக்கப் பட்டிருக்குமோ?



Geetha Sambasivam

unread,
May 1, 2011, 3:37:42 AM5/1/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
எல்லாரையும் விடறதில்லைனு ஒரு முடிவு கட்டிட்டோமுல்ல. நல்லா அநுபவிங்க!

2011/5/1 Geetha Sambasivam <geetha...@gmail.com>





360.gif

sk natarajan

unread,
May 1, 2011, 7:31:20 AM5/1/11
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com
கீதாம்மா இதை படிச்சவுடனே  உங்க அவரை பார்க்கணும் பல கேள்விகள் கேட்கனும் என்று தோன்றியது
அப்போ நிறைய மலரும் நினைவுகள் கிடைக்குமே :))))


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  http://tamizhswasam.blogspot.com/
குழுமம்    :   http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/5/1 Geetha Sambasivam <geetha...@gmail.com>



ம்ம்ம்ம்ம், இந்த கீதா என்ற பெயர் ரொம்பவே பொதுவாய்ப் புழங்கும் பெயர் என்றாலும் எங்க வீட்டில் அம்மா வழியிலும்,

Geetha Sambasivam

unread,
May 1, 2011, 7:35:27 AM5/1/11
to thamiz...@googlegroups.com
வாங்க, வாங்க, எங்க வீட்டுக்கு எப்போ வேணா வரலாம்.  சொல்லிட்டு வந்தீங்கன்னா சாப்பிட ஏதேனும் பண்ணி வச்சுடுவேன்.  இல்லாட்டாலும் பரவாயில்லை.  கேசரியும், பஜ்ஜியும், காபியும் கை கொடுக்கும்.   தொடர்ந்து படிங்க.  வலை உலகில் சமீபத்தில் மிக ஆதரவைப் பெற்ற ஒரே பதிவாக்கும்! அதான் இங்கேயும் எல்லாரையும் பயமுறுத்தலாம்னு எண்ணம்!

2011/5/1 sk natarajan <sknatar...@gmail.com>
கீதாம்மா இதை படிச்சவுடனே  உங்க அவரை பார்க்கணும் பல கேள்விகள் கேட்கனும் என்று தோன்றியது
அப்போ நிறைய மலரும் நினைவுகள் கிடைக்குமே :))))


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  http://tamizhswasam.blogspot.com/
குழுமம்    :   http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/5/1 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

329.gif
360.gif

sk natarajan

unread,
May 1, 2011, 7:46:37 AM5/1/11
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com
கீதாம்மா  என்ன ஒரு நடை
கோர்வையான  செய்திகள்
அருமை
தொடருங்கள் , பக்கத்திலே இருந்து சொல்வது போல ஒரு பிரமை
நன்றி அம்மா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  http://tamizhswasam.blogspot.com/
குழுமம்    :   http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/5/1 Geetha Sambasivam <geetha...@gmail.com>


sk natarajan

unread,
May 1, 2011, 7:51:51 AM5/1/11
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
அழைப்பிற்கு நன்றி
முன்கூட்டியே சொல்லிவிட்டு ஒரு நாள் வருகின்றேன்
தொடர்ந்து பயமுறுத்துங்கள் :))))
329.gif
360.gif

Innamburan Innamburan

unread,
May 1, 2011, 10:10:58 AM5/1/11
to thamiz...@googlegroups.com
1.’...இப்போ நாங்க ரெண்டு பேரும் எப்படி எல்லாத்திலேயும் காண்ட்ராஸ்டா
இருக்கோமோ அதே போல் இருப்பாங்களாம்...’

=> அன்னிக்கி பாக்கச்சவே நினைச்சேன்!

2.’...என் அப்பாவுக்கு முதல் ஆக்ஷேபம் மாப்பிள்ளை தஞ்சாவூர்க்காரர்...’

=> வபையான பாயிண்ட்!

3. ‘..அக்கம்பக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களான திருச்சி,


திருநெல்வேலி போன்ற இடங்களில் இருக்கும் பையர்களாகவே

பார்த்துக்கொண்டிருந்தார்...’

=> எங்க பெரியண்ணா, ‘வடக்கே, நான் சம்பந்தம் பாக்கல்லை.’

      நான்: அப்டீனா?

      அவர்: சேனங்குளத்துக்கு வடக்கே!

4.’...அங்கே எதுவும் பேசாமல் வந்ததே பெரிய விஷயம்...’

=> ஆமாம்! எங்க அப்பாவுக்கு சம்பந்தி மாமி மேலே, கண்டதை கேட்டான்னு
கோபம். என்ன பண்ணார், தெரியுமோ? ஒரு இருபது பேரை இழுத்துண்டு, என்
தங்கையை பார்க்கப்போனார். சம்பிரதாயமா, சம்பந்தி மாமா,‘சாப்ட்றேளா?’
என்று கேட்டார். இவர் ‘ஓ’ ந்னார். மாமி மாங்கு, மாங்குனு
சமைத்துப்போட்டாள். அப்றம், அவா இரண்டு பேரும் அடிச்சுப்பான்னு சொல்லி
ஆனந்தப்பட்டார், அப்பா.

5.‘...என்னோட அக்கவுண்டன்சி கிளாசுக்குக் கிளம்பிட்டிருந்தேன்..’

=> இதென்ன கூத்து! இனிமேல் சாக்கிரதையாக இருக்கேன்.

இன்னம்பூரான்
01 05 2011

vishalam raman

unread,
May 1, 2011, 10:11:35 AM5/1/11
to thamiz...@googlegroups.com
  • அன்பு கீதா  ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது உங்கள் அனுபவத்தைப் படித்து என் அனுபவம் ஞாபகம் வந்தது நாங்கள் இருவரும் நிச்சியதார்த்தம் வரை ஒருவர்க்கொருவர் பார்த்துக்கொள்ளவேயில்லை .இது எப்படி  இருக்கு?

2011/5/1 Geetha Sambasivam <geetha...@gmail.com>
எல்லாரையும் விடறதில்லைனு ஒரு முடிவு கட்டிட்டோமுல்ல. நல்லா அநுபவிங்க!


2011/5/1 Geetha Sambasivam <geetha...@gmail.com>





360.gif

Geetha Sambasivam

unread,
May 1, 2011, 11:15:18 AM5/1/11
to thamiz...@googlegroups.com

அன்னிக்கி பாக்கச்சவே நினைச்சேன்!//

அனுபவம் பேசுது.

வபையான பாயிண்ட்!//

ஹிஹிஹி


இதென்ன கூத்து! இனிமேல் சாக்கிரதையாக இருக்கேன்.//

அதை ஏன் கேட்கறீங்க?? உங்களுக்கெல்லாம் போட்டியா வந்துடப் போறேன்னு தான் அவசரம் அவசரமாக் கல்யாணம் பண்ணி வச்சுட்டார் அப்பா!

மதுரையிலே பெண்களுக்கான பாலிடெக்னிக்கில் D.Com., னு ஒரு பட்டயப் படிப்பு உண்டு.  அதான் படிச்சுட்டு இருந்தேன்.  பள்ளியிலேயே விருப்பப் பாடமா எடுத்தது புக் கீப்பிங், டைப்ரைட்டிங், அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ் னு இப்போச் சொல்றதை அப்போ Commercial Practise ங்கற பேரிலே படிச்சேன்.  தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம், சமூகவியல் தவிர மேலும் நான்கு பாடத் திட்டங்கள்.  மொத்தம் எட்டு உண்டு. இரண்டு வேளையும் தேர்வு இருக்கும்.  மத்தப் பசங்க எல்லாம் ஒரே வேளை எழுத நாங்க மட்டும் ரெண்டு வேளை எழுதுவோம்.


2011/5/1 Innamburan Innamburan <innam...@gmail.com>
329.gif
360.gif

Geetha Sambasivam

unread,
May 1, 2011, 11:15:55 AM5/1/11
to thamiz...@googlegroups.com
நன்றி விசாலம், நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த நாள் ஞாபகமே தனிதானே.

2011/5/1 vishalam raman <rvis...@gmail.com>
  • அன்பு கீதா  ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது உங்கள் அனுபவத்தைப் படித்து என் அனுபவம் ஞாபகம் வந்தது நாங்கள் இருவரும் நிச்சியதார்த்தம் வரை ஒருவர்க்கொருவர் பார்த்துக்கொள்ளவேயில்லை .இது எப்படி  இருக்கு?

Geetha Sambasivam

unread,
May 2, 2011, 6:34:45 AM5/2/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com


கல்யாணமாம் கல்யாணம்! பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்!

வாசலில் வந்தது என்னோட சித்தப்பாவின் தம்பி. அவருக்குத் தாமதமாய்க் கல்யாணம். கல்யாணத்தின்போது நான் சின்னமனூரில் இன்னொரு சித்தி வீட்டில் இருந்தேன். திரும்பி வந்ததும் உடனேயே அம்மா ஹோசூர் கிளம்பியதால் நான் மதுரையிலேயே வீட்டில் இருந்தேன். சின்னச் சித்தப்பா உள்ளே வந்தார். காலம்பர சாப்பிட்டுட்டேன் என்று சொன்னார். அதனால் அவசரம் அவசரமா உப்புமா பண்ணிக் காப்பியும் போட்டுக் கொடுத்தேன். அவர் எல்லாம் சாப்பிட்டுவிட்டு, ஜாதகம் பத்திப் பேச ஆரம்பித்தார். நான் அப்பா, அம்மா ஊரில் இல்லைனு சொல்லியும் கேட்கவில்லை. "அந்தப் புனாப் பையர் என்னோடசொந்த மச்சினர் தான், வேறே யாரும் இல்லை. நீ என் கல்யாணத்துக்கு வந்திருந்தியானா அப்போவே பார்த்திருக்கலாம். உன்னைப் பத்தி நாங்க நிறையச் சொல்லி இருக்கோம் அவங்க வீட்டிலே. அவங்க ஆவலோடு இருக்காங்க. நாங்க தான் தலை தீபாவளிக்குப் போறச்சே உன் ஜாதகத்தை எடுத்துண்டு போய்க் கொடுத்தோம். தாராளமாப் பார்க்கச் சொல்லு அப்பாவை!" என்று சொன்னார். அப்பா கிட்டே சொல்லிடறேன்னு சொன்னேன். அப்புறம் கொஞ்ச நேரம் பேசிட்டுக் கிளம்பிட்டார். அப்பா வந்ததும் விஷயத்தைத் தெரிவித்தேன். வேறே வேலை இல்லை. புனாவிலெல்லாம் இருக்கிறவருக்கு எப்படிக் கொடுக்கிறது? அதுவும் மிலிடரியிலே வேலைனு வேறே சொல்லறாரே! அது நமக்குச் சரிப்படாதுனு அந்த விஷயத்தை அதோடு முடித்துவிட்டார். ஜாதகம் வந்தப்போ வேலை சரியாப் போடலை. இப்போ சின்னச்சித்தப்பா வந்து தான் வேலை பத்திச் சொன்னார்.

அப்பா வேறே ஜாதகம் பார்க்க ஆரம்பிக்க, எங்க ஜோசியரோ விடாமல் அந்தப் பையனைப் பாருங்க. வேறே ஜாதகம் நான் பார்த்துத் தரேன். ஆனால் அது தான் நடக்கும்னு விடாமல் சொன்னார். அப்போ சென்னையிலிருந்து என் சித்தப்பாவே ( அசோக மித்திரன்) வேறே ஏதோ விஷயத்துக்காக மதுரை வந்தவர் எங்க வீட்டுக்கும் வந்தார். அப்பாவிடம் ரொம்ப நேரம் பேசி எல்லாத்தையும் எடுத்துச் சொல்லிட்டு, நீங்க நேரே போய்ப் பாருங்க. அவங்க ஊருக்குப் போற வழி இது. இப்படிப் போகணும். நீங்க வேணும்னா முன்னாடி சொல்ல வேண்டாம். சொல்லாமலேயே போய்ப் பாருங்க. பிடிச்சால் மேற்கொண்டு பெண்பார்க்க வரச் சொல்லுங்கனு அப்பாவோட மனசுக்கு ஏத்தாப்போல் சொன்னார். அப்போல்லாம் பிள்ளை வீட்டை ஜாதகம் பொருந்தின உடனேயே நேரில் போய்ப் பார்த்துக் கொண்டு வந்துடுவாங்க.

அதனால் அப்பாவும் ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டு சம்பிரதாயப்படி ஜாதகம் மாற்றவேண்டும் என்பதால் என்னோட ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார். கும்பகோணம் போய் அங்கிருந்து நன்னிலம் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டு கூந்தலூர் என்னும் ஊரில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து அரசலாற்றைத் தாண்டி என் மாமனார், மாமியார் இருந்த கருவிலிக்குப் போகவேண்டும். அந்த நாட்களில் அரசலாற்றில் கல்பாலம் போடப் படவில்லை. மூங்கில் பாலம் தான். ;அதோடு கருவிலிக்குப் பேருந்தும் போகாது. கூந்தலூர் அருகே இருக்கும் எரவாஞ்சேரி தான் கொஞ்சம் பெரிய கிராமம். அந்தக் கிராமத்துக்கே நான் கல்யாணம் ஆகிப் போன அந்த வாரம் தான் கும்பகோணம் ராமன் அண்ட் ராமன் பேருந்து விட்டாங்க. அது வரைக்கும் கூந்தலூரில் பேருந்து குறிப்பிட்டது தான் நிற்கும். ஆகவே முன் கூட்டிச் சொன்னால் தான் நல்லது. வண்டி கட்டிக்கொண்டு போய்க் கூட்டி வர முடியும்.

கூந்தலூருக்கோ, எரவாஞ்சேரிக்கோ வண்டி வரணும்னா, (மாட்டு வண்டிதான்) அரசலாற்றில் இறங்கித் தான் வரணும். ஆற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும் நாட்களிலும், (அப்போ காவிரிப் பிரச்னை இவ்வளவு இல்லை, அரசலாற்றில் கோடையில் கூடக் கொஞ்சமாவது தண்ணீர் ஓடும்.)மற்றக் கோடை நாட்களிலும் வண்டியைப் பிரித்து மாட்டை அவிழ்த்து ஓட்டி விடுவாங்க. அதுக்கு முன்னாடி வண்டியிலே வரும் பிரயாணிகள் இறங்கிக்கொண்டு மூங்கில் பாலம் வழியாஅக்கரைக்குப் போவாங்க, அவிழ்த்து விட்ட மாடுங்க மெதுவாப் போய் அக்கரைக்குப் போய்க் காத்துட்டு இருக்கும். இங்கே வண்டியை ஆற்றில் இறக்குவாங்க. அக்கம்பக்கம் எப்படியும் நாலைந்து ஆட்கள் தோப்புக்களில் வேலை செய்துட்டு இருப்பாங்க. வண்டி வரதைப் பார்த்துட்டுக் கூப்பிடாமலேயே வருவாங்க. சிலர் வீடுகளில் பண்ணை ஆட்கள் வண்டியோடயே வருவாங்க. எல்லாருமா வண்டியை ஆற்றில் தள்ளிக்கொண்டு போய் அக்கரையில் மேட்டில் ஏத்துவாங்க. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் கூந்தலூர், அல்லது இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் எரவாஞ்சேரி. அங்கே போய்ப் பேருந்தில் வரவங்களைக் கூட்டி வருவாங்க. 

திரும்பி வரச்சே மறுபடியும் அதே. ரிவர்ஸில். அப்புறமா ஊருக்கு வரவரைக்கும் நடுவில் குளங்கள் தான் காணலாம். முட்டை ஆறு என்னும் இன்னொரு ஆறு மூன்று கிலோ மீட்டர் தள்ளிப் பரவாக்கரை போகும் வழியில் இருக்கு. இந்த இரண்டு ஆறுகளுக்கும் நடுவில் தான் எங்க மாமனார் மாமியார் இருந்தாங்க. வயல்கள் எல்லாம் எதிரேயே இருந்தன. அப்பாவோ சொல்லாமல் இல்லை கிளம்பி வந்திருக்கார். அதனால் கூந்தலூர் வந்து அங்கே இறங்கியதும், வழி கேட்டுக்கொண்டு மூங்கில் பாலம் வழியா நடந்தே போயிருக்கார். நல்ல வெயில் காலம், பங்குனி மாசம். பாவம், வேர்க்க விறுவிறுக்கப் போய் மாமனார் பெயரைச் சொல்லி விசாரிக்க, வீட்டுக்கு எதிரேயே இருக்கும் பள்ளியில் படிச்சுட்டு இருந்த என் குட்டி மைத்துனன்,சாப்பிடறதுக்காக வீட்டுக்குப் போயிட்டிருந்தவன், அப்போ நாலு முடிந்து ஐந்தாம் வயசு, எங்க அப்பாவைப் பார்த்துட்டு, வாங்க மன்னியோட அப்பாவா நீங்கனு கேட்டுட்டு உடனே வீட்டுக்கு ஓடித் தகவல் சொல்லி இருக்கார். மன்னியோட அப்பா வரார்னு.

கிராமம் வேறே. வீட்டு வாசலில் அக்ரஹாரத்தின் அனைத்து மக்களும் கூட அப்பா உள்ளே எண்ட்ரி. உள்ளே போனதும், அப்பாவுக்குக் காப்பி கொடுத்து சாப்பாடு போட்டுட்டு, அப்புறமாப் பேசி இருக்காங்க. சம்பந்தம் கலக்கும் முன்னே சாப்பிட அப்பா யோசிக்க என் மாமனார் இந்தக் காலத்தில் அதெல்லாம் பார்க்கவேண்டாம். நானே என் மனைவியைப் பார்க்கப் போனப்போ அங்கே தான் சாப்பிட்டேன்னு சொல்லிவிடவே எல்லாம் முடிச்சுட்டு, பெண் பார்க்க வரதைப் பத்திப் பேச ஆரம்பிக்க, என் மாமனாரின் அண்ணாவும் அங்கே தற்செயலாக வந்தவர், தன் பெண்ணுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருப்பதாயும் மே மாதம் ஒன்றாம் தேதி கல்யாணம் என்றும் கல்யாணத்துக்கு அவசியம் வரணும் என்றும் சொல்லி இருக்கார். என் மாமனாரும் எங்க பையரும் இந்தக் கல்யாணத்துக்கு வரப் போகிறதாலே வந்த உடனே பெண் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கார். சரினு ஒத்துக்கொண்டு அப்பா வந்துவிட்டார். வருஷப் பிறப்பு கழிஞ்சு பெண் பார்க்கத் தேதியை அங்கேயே நிச்சயம் பண்ணிக்கொண்டு வந்துவிட்டார். 

வந்து சொன்னார் பெண்பார்க்க வரப் போறதை. அப்போப் பார்த்துக் கோடைக்கட்டி என் முகத்தில். அதெல்லாம் ஒன்றோ இரண்டோ இல்லை. முகம் முழுதும். பெரிசு பெரிசாக் கட்டிகள். எல்லாத்திலேயும் கறுப்பாய்க் கண் மாதிரி இருக்கும். அது உடைஞ்சு ரத்தம் வரும். கீழே குனிய முடியாது. வலி தாங்காது. ஏற்கெனவே டாக்டரிடம் காட்டிட்டு இருந்தேன். அவரோ வருஷா வருஷம் வருது, ஒண்ணும் புதிசில்லையே, மெதுவாத் தான் சரியாகும்னு சொல்றார். பெண் பார்க்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. இந்த மூஞ்சியைப் பார்த்துட்டு என்ன சொல்வாங்களோ/. அம்மாவுக்குக் கவலை. எல்லாருக்கும் சொல்லியாச்சு. என் மாமா வீட்டில், பெரியப்பாக்கள், சின்னமனூரில் இருந்து சித்தி எல்லாரும் தயாராயிட்டாங்க. சின்னமனூர்ச் சித்தி மட்டும் அம்மாவுக்கு உதவ வேண்டி முன்னால் வந்தாங்க. என் முகத்தைப் பார்த்துட்டு உடனேயே அவங்களுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா சித்தப்பாவுக்குத் தகவல் கொடுக்க சித்தப்பாவும் வந்துட்டார்.

உடனேயே சித்தப்பா ஊசியாலே என்னைக் குத்த ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு இரண்டு முறை நான்கு விதமான ஊசிமருந்துகளைக் கலந்து போட்டிருக்கார். கட்டி உடையாது. அமுங்கும் என்றும் சொன்னார். ராஜ வைத்தியம் நடந்தது. அதோடு வரவங்களை வரவேற்கவும் ஏற்பாடுகள். எங்க வீட்டிலே இரு தரப்பிலும் மனிதர்கள் நிறைய. முக்கியமானவங்க வரவும் வருவாங்க. என்பதால் அப்பா சமையலுக்கு ஆள் போட்டுவிட்டார். வெளி ஊரிலிருந்து பிள்ளை வீட்டுக்காரங்க வரதாலே அவங்களுக்கு ஊர் திரும்பற வரைக்கும் கவனிக்கணும்னு என்னோட பெரியப்பா வீட்டிலே தங்கவும் ஏற்பாடுகள் பண்ணியாச்சு. ஒருவழியாப் பிள்ளை வீட்டுக்காரங்க எப்போ வராங்கங்கறதுக்குத் தந்தி வந்தது. அப்போல்லாம் தொலைபேசி இல்லை. இமெயில், எறும்பு மெயில் கிடையாது, செல் கிடையாது. அவசரம்னா உடனே தந்திதான். உடனேயே வந்தும் சேரும். அதைப் பார்த்துட்டு அப்பாவும், தம்பியும் ஸ்டேஷன் போய் அழைத்துக்கொண்டு வந்து பெரியப்பா வீட்டில் விட்டுட்டு வந்தாங்க. மறுநாள் காலையிலே பெண் பார்க்கணும்.






LK

unread,
May 2, 2011, 6:37:28 AM5/2/11
to thamiz...@googlegroups.com

தொடரட்டும் தொடரட்டும்
2011/5/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com



 

shylaja

unread,
May 2, 2011, 6:39:02 AM5/2/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
த்ருஷ்டியா இருக்கும்...சரியாச்சா அப்புறம்? பொண்ணு பாக்கவரச்சே என்ன பாட்டு பாடினீங்க கீதா?
நீங்க முடிங்க நான் ஆரம்பிக்கிறேன் அப்றோமா:):)  என்னது எல்கே  அரங்கனார்லாம் எங்க ஓடறாங்க?:):)

2011/5/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
 
 ஷைலஜா
 

பருந்தாட் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை, விட்டு சித்தன் கோதைசொல்,
மருந்தாம் என்று, தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ், பிரியாது என்றும் இருப்பார்களே!


Geetha Sambasivam

unread,
May 2, 2011, 6:39:14 AM5/2/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com


கல்யாணமாம், கல்யாணம்! தொடர்ச்சி

எல்லாரும் பெண் பார்க்கும் சீனுக்கு ஆவலோடு காத்துட்டு இருக்கீங்க. அதிலே ஒண்ணும் சிறப்பான செய்திகள் கிடையாது. சப்புச் சப்புனு தான் இருக்கும். இப்போப் போல அப்போல்லாம் பெண்ணும், பிள்ளையும் பேசிக்கிறதோ, அப்புறமும் கடிதத் தொடர்போ அல்லது, தொலைபேசியில் தொடர்பு வைச்சுக்கிறதோ, வெளியே போறதோ கிடையாது. மறுநாள் காலையிலே விடிஞ்சதும், விடியாததுமாய்க் காப்பி போடச் சொல்லி என் தம்பியும், அவனோட நண்பன் கிருஷ்ணன் என்னும் பையருமாய்க் காப்பியை ஒரு கூஜாவில் விட்டுப் பெரியப்பா வீட்டுக்கு எடுத்துண்டு போனாங்க. பெரியப்பா வீடு கிட்டத்தான் நடந்து போகும் தூரம். அதுக்குள்ளே அங்கே பெரியம்மாவே காப்பி போட்டுக் கொடுத்துட்டு, அவங்களைத் தயார் செய்து அழைத்து வர வண்டியெல்லாம் ஏற்பாடு பண்ணி வைச்சுட்டாங்க. காலை ஏழரைக்குள் அவங்க வரதுக்கு நல்லவேளைனும், ஒன்பது மணிக்குள்ளாகப் பெண்ணைப் பார்த்துடணும்னும் ஏற்பாடு. என்னோட இரண்டு மாமாக்கள், மாமிகள், சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, இன்னொரு பெரியம்மா(பெரியப்பா இல்லை) இரண்டு பெரியப்பா வழி அண்ணன்மார்கள்னு வீடு நிறைய ஜே ஜேனு கூட்டம். இந்த அழகிலே என்னோட சித்திக்கு என்னுடைய சிநேகிதிகள் யாருமே வரலைனு குறை. கூடத் துணைக்கு ஒருத்தருமே இல்லையே உன் வயசுக்காரங்கனு சொல்லிட்டே இருந்தாங்க. 

சாதாரணப் புடைவைதான் கட்டுவேன், நகையெல்லாம் போட்டுக்க மாட்டேன்னு நான் அடம் பிடிக்கப் பெரியவங்க என்னைப் படுத்தி எடுக்க, என் கிட்டே இருக்கிற பட்டுப் புடைவைகளில் ஒண்ணைக் கட்டிப்பேன்னு சொல்ல, அதையும் கேட்காத பெரியவங்க சித்தியோட காஸ்ட்லி புடைவையை எனக்குக் கட்டிக்கச் சொல்லி வற்புறுத்திக் கட்ட வைச்சாங்க. சும்மாவே எனக்குக் கொஞ்சம் சில துணிகளெல்லாம் உறுத்தல் இருக்கும். அதோட வெயிலுக்கு வந்த வேனல் கட்டியின் இம்சை வேறே. கட்டியாலே முகம் சிவந்ததா, கோபமா, இல்லாட்டிப் பெண்பார்க்க வரதினாலே வெட்கமானு கேட்கிற அளவுக்கு முகம் ஜிவு ஜிவுனு இருந்தது எனக்கே தெரிஞ்சது. அம்மாவுக்கோ வருத்தம் தாங்கலை. சாதாரணமாக எல்லாரையும் வம்பு பண்ணிண்டுச் சிரிச்சுண்டு, சீண்டிண்டு இருக்கும் எனக்கு இது எல்லாம் அவஸ்தையா இருந்ததுனு புரியலை. என்னோட இயல்பை மீறி நாடகத்திலே வேஷம் போடறாப்போல் இருந்தது. ஆனால் வேறே வழியே இல்லை. எல்லாரும் வெட்கம் அவளுக்குனு சொல்ல, நானும் பேசாமல் வாயை மூடிண்டேன். 

பெரியப்பாவும், பெரியம்மாவும், அண்ணாவுமாய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை அழைச்சிண்டு வந்து எங்க போர்ஷனுக்கு மேல் இருக்கும் மாடிக்குப் போயிட்டாங்க. முதல்நாளே மாடி அறையைப் பெருக்கித் துடைச்சு நான் தான் கோலம் போட்டு வைச்சிருந்தேன். ஹிஹிஹி, அப்போல்லாம் கோல எக்ஸ்பர்ட்ங்கறதாலே சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களில் எல்லாம் கூப்பிடுவாங்க கோலம் போட. இங்கேயும் கோலம் நானே போட்டிருந்தேன். கீழே நாங்க இருக்க முதல்லே டிபன் கொடுக்கணும்னு சொல்லி என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் டிபனைக் கொடுக்கச் சொல்லிட்டாங்க. சரினு எல்லாருமாய் டிபன் சாப்பிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னைச் சாப்பிட்டியானு ஒருத்தரும் கேட்கலை. எனக்குக் கொடுக்கவும் இல்லை. அதுக்கப்புறமாய்ப் பெண்ணை அழைச்சிண்டு வாங்கனு கூப்பிடவே, சித்தி என்னை அழைச்சுண்டு மாடிக்குக் கூட்டிச் சென்றார். பொதுவாகவே மதுரைப் பக்கம் பெண்களுக்கு அநாவசியக் கூச்சம்னு நான் பார்த்ததில்லை. எல்லாரையும் கண்களுக்கு நேரேயே பார்த்துப் பேசுவோம். அதனால் எனக்கும் கூச்சம்னு எதுவும் இல்லை, தோன்றவும் இல்லை. நன்றாகவே பார்த்தேன். அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, எம்புட்டு உயரம்! இதான் முதலில் தோன்றியது. அவங்களுக்கும் தோணி இருக்கும். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை. என்னோட மாமியாருக்குப் பிடிச்சதுனு அவங்க சாப்பிடும்போதே புரிஞ்சு போச்சு எங்களுக்கெல்லாம். மிச்சம் இருப்பது என் மாமனாரும், என் கணவரும் தான். குட்டி மைத்துனரும் கூட வந்திருந்தாலும் அவர் அப்போக் குழந்தை! அப்போ எல்லாம் பெண்ணும், பிள்ளையும் தனியாப் பேசிக்கிறதுனு கிடையாது. பொதுவாய் என் மாமனார் ஓரிரு கேள்விகள் கேட்க நான் பதில் சொன்னேன். பாடத் தெரியுமானு கேட்டதுக்குத் தெரியாதுனு சொன்னேன். என் கணவர் தனியா எதுவும் கேட்கலை. அப்புறமாக எல்லாருமாய் அங்கேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மேலே செய்ய வேண்டிய கல்யாண ஏற்பாடுகள் பற்றியே பேச்சு நடந்ததால், நிச்சயம் செய்வதற்கு நாள் பார்த்துவிட்டு பிள்ளை வீட்டில் கடிதம் போட்டதும், வேலை துவங்கவேண்டும் என்ற அளவில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மதியம் சாப்பாடும் ஆனதும், அவங்க சொந்தக் காரங்க காந்திகிராமத்தில் இருப்பதால் அங்கே போயிட்டு ஊருக்குப் போகப் போவதாய்ச் சொல்லவும், அப்பா அப்படியே என் பாட்டிக்கு மாப்பிள்ளையைக் காட்டவேண்டும் என்று கூறிவிட்டு டிவிஎஸ் நகரில் இருந்த என் மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அதற்கு முந்தைய வருஷம் தான் தாத்தா இறந்து போயிருந்ததால் அப்புறம் பாட்டி வெளியேயே வரவில்லை. கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கும் மேல் குடும்பம் நடத்தி இருக்கார். ஐந்து வயசில் கல்யாணம் ஆகி இருந்தது அவருக்கு. அங்கே கூட்டிப் போய்விட்டுப் பின்னர் மதுரை செண்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் அப்பா அவங்களை காந்தி கிராமத்துக்கு பஸ்ஸில் ஏற்றி விட்டார். திரும்பி வருகையில் அப்பா முகம் சுரத்தாகவே இல்லை. என்னனு எங்களுக்கு யாருக்கும் புரியவில்லை.

மறுநாள் அப்பாவைப் பார்க்க அப்பாவின் இன்னொரு நண்பர் வரவே அவரிடம் அப்பா முதல்நாள் பிள்ளை வீட்டுக்காரங்க வந்ததையும், திரும்பிப் போகும்போது என் மாமனார் பெண் உயரம் கம்மி, பிள்ளைக்கு ஏற்ற உயரம் இல்லைனும் பேசிக்கொண்டதாயும், பிள்ளையின் அத்தை பெண் ஒருத்தி இருப்பதால் அவளும் உயரமாயும் இருப்பாள் என்பதால் அதையே முடிச்சுடலாமா என யோசித்துக்கொண்டு பேசிக்கொண்டதாயும் சொன்னார். அப்போப் பார்த்து எங்க ஜோசியர் மாமா வந்தார். அவர் ரொம்ப ஏழை. எல்லாருக்கும் ஜோசியம் பார்க்கவும் மாட்டார். பார்த்ததுக்குப் பணமும் வாங்க மாட்டார். எப்போவானும் அவருக்குத் தேவை அவசியம் என்று தோன்றினால் மட்டுமே அப்பாவிடம் வந்து பணம் வாங்கிப்பார். கூடியவரையில் திரும்பக் கொடுப்பார். அப்பா வேண்டாம்னாலும் விட்டதில்லை. எதாவது அவசியம் என்றால் அன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்து சாப்பாடு போடுங்கனு கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். ரொம்ப ஆசாரம் என்பதால் அன்னிக்கு வீட்டில் யாருக்கானும் அசெளகரியம், வீட்டு விலக்கு என்று தெரிந்தால் உள்ளேயே வரவும் மாட்டார். அப்படிப் பட்டவர் அவர் சொல்லித் தான் அப்பா இந்த வரன் விஷயத்திலேயே இறங்கி இருந்தார். இப்போ அவர் பெண் பார்த்துவிட்டுப் போனது என்ன ஆச்சுனு கேட்க வந்தவரை அப்பா ஒரு பிடி பிடித்துவிட்டார். முதல்லேயே வேண்டாம்னு சொன்னேன். இப்போப் பாருங்க பெண்ணைப் பார்த்துட்டு இப்படிப் பேசிக்கறாங்கனு சொல்லி விட்டார். ஆனால் அவரோ அசரவே இல்லை. மறுபடியும் ஜாதகத்தைப் பாருங்கனு அப்பா சொல்ல, "தேவையே இல்லை. :" னு சொல்லிட்டு ஏதோ மனக்கணக்காய்ப் போட்டுவிட்டு, "உங்க பெண்ணுக்கு இந்தப் பிள்ளைதான். அடுத்த மாசத்துக்குள்ளாகக் கல்யாணம் ஆகிடும். வைகாசி மூணாம் தேதிக்குள் உங்க பொண்ணுக்குக் கல்யாணம் இதே பிள்ளையோட நடக்கும்." னு சொல்லிட்டு வேறே எதுவும் பேசாமல் கிளம்பிட்டார். தள்ளாடிட்டு போனவரை அப்பா கூப்பிட்டு, சாப்பிட்டுட்டுப் போங்கனு சொல்ல, "இன்னிக்கு எனக்கு இங்கே போஜனம் இல்லைனு தெரிஞ்சு தான் வந்தேன். நான் அப்புறமா வரேன்"னு சொல்லிட்டுப் போயிட்டார்.

அப்பா சொன்னதற்கு ஏற்பப் பெண் பார்த்துவிட்டுச் சென்ற உடனேயே எக்ஸ்ப்ரஸ் தபாலில், (அப்போல்லாம் உண்டு, உடனே பட்டுவாடா பண்ணுவாங்க) பெண் பிடித்திருக்கிறது என்றும் ஆனால் உயரம் கம்மி என்பதால் யோசிப்பதாயும், மேலும் கல்யாணத்தை மதுரையில் நடத்தப் போவதாய் என் அப்பா கூறியதால் அவங்க தரப்பில் 200 பேருக்கும் மேல் கல்யாணத்துக்கு வருவாங்க என்றும் அதுக்காகச் சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்யமுடியுமா என்றும் கேட்டிருந்தார்கள். இல்லை எனில் கல்யாணத்தைக் கும்பகோணத்தில் நடத்தவேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். கடிதத்தைப் படிச்சதுமே அப்பாவுக்குப் பிடிக்கலைனு சொல்லாம ஏதோ சுத்தி வளைக்கிறாங்கனு புரிஞ்சு போய் வேறே ஜாதகங்களைப் பார்க்கலாம்னு சொல்லிட்டார். ஆனால் எங்க ஜோசியரோ, "அந்தப்பையரே இந்தப் பெண் தான் வேண்டும்னு தானே வருவார்!" என்று சத்தியமே செய்தார்









LK

unread,
May 2, 2011, 6:40:32 AM5/2/11
to thamiz...@googlegroups.com
எங்கயும் ஓடலை. கீதா மாமி கல்யாண புராணத்தை பதிவில் படிக்கிறேன். அதான் இங்க கமென்ட் போடலை. நீங்க ஆரம்பிங்க . நான் இப்பவே சீட் போட்டுட்டேன்

2011/5/2 shylaja <shyl...@gmail.com>



--

Geetha Sambasivam

unread,
May 2, 2011, 6:42:16 AM5/2/11
to thamiz...@googlegroups.com
ஹிஹி, கல்யாணத்தப்போக் கூட கட்டிகள் இருந்தன.  எல்கே எங்கேயும் போகலை, அவருக்கு போர் அடிச்சிருக்கும், ஏற்கெனவே படிச்சுட்டு இருக்காரே என்னோட வலைப்பக்கத்திலே. பாட்டெல்லாம் பாடி மிரட்டலை,  அதோட அவங்க குடும்பம் வேறே பாட்டுக்காரக் குடும்பம், வம்பு!


அரங்கனார் மெதுவாத் தான் வருவார்.

2011/5/2 shylaja <shyl...@gmail.com>
த்ருஷ்டியா இருக்கும்...சரியாச்சா அப்புறம்? பொண்ணு பாக்கவரச்சே என்ன பாட்டு பாடினீங்க கீதா?
நீங்க முடிங்க நான் ஆரம்பிக்கிறேன் அப்றோமா:):)  என்னது எல்கே  அரங்கனார்லாம் எங்க ஓடறாங்க?:):)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
 
 

329.gif
360.gif

Geetha Sambasivam

unread,
May 2, 2011, 6:42:41 AM5/2/11
to thamiz...@googlegroups.com
அதே, அதே!

2011/5/2 LK <karthik.lv@gmail.com>
எங்கயும் ஓடலை. கீதா மாமி கல்யாண புராணத்தை பதிவில் படிக்கிறேன். அதான் இங்க கமென்ட் போடலை. நீங்க ஆரம்பிங்க . நான் இப்பவே சீட் போட்டுட்டேன்

2011/5/2 shylaja <shyl...@gmail.com>
த்ருஷ்டியா இருக்கும்...சரியாச்சா அப்புறம்? பொண்ணு பாக்கவரச்சே என்ன பாட்டு பாடினீங்க கீதா?
நீங்க முடிங்க நான் ஆரம்பிக்கிறேன் அப்றோமா:):)  என்னது எல்கே  அரங்கனார்லாம் எங்க ஓடறாங்க?:):)

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--


360.gif

Geetha Sambasivam

unread,
May 2, 2011, 6:43:07 AM5/2/11
to thamiz...@googlegroups.com
இன்னிக்கு என்னமோ இன்னும் மின்சாரம் போகலை, ஆனால் மின் அழுத்தம் அதிகமா இருக்கு!

2011/5/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>
320.gif
360.gif

coral shree

unread,
May 2, 2011, 6:43:36 AM5/2/11
to thamiz...@googlegroups.com
எனக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது கீதா. சுவாரசியமாக இருக்கிறது படிப்பதற்கு.......தொடருங்கள். நன்றி.

2011/5/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>









--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Tthamizth Tthenee

unread,
May 2, 2011, 7:04:37 AM5/2/11
to thamiz...@googlegroups.com
இதோ பாருங்க என்னை அனாவசியமா தூண்டி விடாதீங்க
 
அப்புறம் நான் பொண்ணு பார்த்த கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிருவேன்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/5/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>

LK

unread,
May 2, 2011, 7:05:51 AM5/2/11
to thamiz...@googlegroups.com
எழுதுங்க சார். படிக்க நான் இருக்கேன்

2011/5/2 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

shylaja

unread,
May 2, 2011, 7:06:28 AM5/2/11
to thamiz...@googlegroups.com
தேனிசார்  எழுதுங்கோ எழுதுங்க   உங்க எழுத்தைப்படிக்க ஓடோடிவரும் எங்களை ஏமாத்திடாதீங்க  :0

2011/5/2 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
 
 ஷைலஜா
 

பருந்தாட் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை, விட்டு சித்தன் கோதைசொல்,
மருந்தாம் என்று, தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,

பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ், பிரியாது என்றும் இருப்பார்களே!


Geetha Sambasivam

unread,
May 2, 2011, 7:12:40 AM5/2/11
to thamiz...@googlegroups.com
சிங்கார வேலனே தேவா!

2011/5/2 shylaja <shyl...@gmail.com>
தேனிசார்  எழுதுங்கோ எழுதுங்க   உங்க எழுத்தைப்படிக்க ஓடோடிவரும் எங்களை ஏமாத்திடாதீங்க  :0

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--

shylaja

unread,
May 2, 2011, 7:16:24 AM5/2/11
to thamiz...@googlegroups.com
ஜானகிதே........வி ராமனைத்தே........டி இருவிழிவாசல் திறந்திருந்தாள்........:):):)

2011/5/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>
சிங்கார வேலனே தேவா!



--
 

Jeevaa KS

unread,
May 2, 2011, 7:18:49 AM5/2/11
to thamiz...@googlegroups.com
கெட்டி மேளங்கொட்டுற கல்யாணம்
தங்கத்தாலிக் கட்டுற கல்யாணம்

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2011/5/2 shylaja <shyl...@gmail.com>

LK

unread,
May 2, 2011, 7:21:54 AM5/2/11
to thamiz...@googlegroups.com
ஜீவாவோட கல்யாணக் கதை எங்கே

2011/5/2 Jeevaa KS <jee...@gmail.com>



--

shylaja

unread,
May 2, 2011, 7:26:28 AM5/2/11
to thamiz...@googlegroups.com
ஜீவா நிச்சயதார்த்தம் நான் போனேன்  அடேயப்பா  என்னையெல்லாம் கண்டுக்கவே இல்ல: சார் அப்டி ஒரு சிலிர்ப்புல இருந்தார்!:)

Jeevaa KS

unread,
May 2, 2011, 7:51:20 AM5/2/11
to thamiz...@googlegroups.com
அய்யடா... பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும். பொண்ணை மேடைல விட்டுட்டு ஃப்ரண்டுங்களோடவே இருந்தாங்கன்னு இன்னைக்கும் சொல்லுவாங்க அவங்க வீட்ல... ஆமா.

எந்தா எல்.கே சாரே. நீங்க சொல்லுங்க. எங்க வீட்டுக் கல்யாணம் ஒண்ணும் அவ்வளவு சுவாரசியம் இல்லை. பொண்ணு பாத்தோம். நிச்சயம் ஆச்சும்.  ரெண்டு மாசம் கழிச்சு டும்.டும். அவ்ளோ தான் என் கதை முடிஞ்சுட்டுது

Tthamizth Tthenee

unread,
May 2, 2011, 7:56:36 AM5/2/11
to thamiz...@googlegroups.com
 
"டும்.டும். அவ்ளோ தான் என் கதை முடிஞ்சுட்டுது"
 
 
அட  எதுக்கு? இப்பிடி சலிச்சிக்கறீங்க?
 
எல்லாருக்கும் அப்பிடித்தேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/5/2 Jeevaa KS <jee...@gmail.com>
330.gif

LK

unread,
May 2, 2011, 7:57:26 AM5/2/11
to thamiz...@googlegroups.com
// அவ்ளோ தான் என் கதை முடிஞ்சுட்டுது//
அண்ணி வந்தாச்சே அப்புறமும் ஏன் சலிப்பு

2011/5/2 Jeevaa KS <jee...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 2, 2011, 8:39:24 AM5/2/11
to thamiz...@googlegroups.com
1. 'குட்டி மைத்துனன்...நாலு முடிந்து ஐந்தாம் வயசு... வாங்க மன்னியோட அப்பாவா நீங்கனு கேட்டுட்டு...'
=> ரொம்ப ரொம்ப சூட்டிகையான பையர் போல இருக்கு. வருமுன் காப்போன்! இப்போ ஐ.ஏ.எஸ்ஸோ?

2. அடிக்கு அடி 'பையர்' என்றால், சேடாத்திரி கிட்ட வத்தி வச்சுறுவேன்!

3. உங்க 'பையர்' எவ்வளவோ தேவலை. மருவாதையா பொண்ணோட பேச்சுக் கொடுக்கல்லை, தமிழ்த்தேனி மாதிரி.

இன்னம்பூரான்
02 05 2011

Geetha Sambasivam

unread,
May 2, 2011, 11:06:06 AM5/2/11
to thamiz...@googlegroups.com
நிச்சயதார்த்தத்திலே பின்னே பெண்ணைப் பார்க்காமல் நம்மளையா பார்ப்பார்??

2011/5/2 shylaja <shyl...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 3, 2011, 1:22:26 AM5/3/11
to thamiz...@googlegroups.com
1. 'குட்டி மைத்துனன்...நாலு முடிந்து ஐந்தாம் வயசு... வாங்க மன்னியோட அப்பாவா நீங்கனு கேட்டுட்டு...'
=> ரொம்ப ரொம்ப சூட்டிகையான பையர் போல இருக்கு. வருமுன் காப்போன்! இப்போ ஐ.ஏ.எஸ்ஸோ?//

இல்லை, அண்ணாக்கள் ரெண்டு பேரும் பி.காமோட நிறுத்திட்டு வேலைக்குப் போயாச்சு, இவர் அதுக்கப்புறம் ஐசிடபுள்யூஏ., சி.ஏ. ஏ.சி.எஸ்.னு எல்லாமும் முடிச்சுட்டு  ஏர் போர்ட் அதாரிடிலே சீனியர் மானேஜர் ஃபைனான்ஸ்!


2. அடிக்கு அடி 'பையர்' என்றால், சேடாத்திரி கிட்ட வத்தி வச்சுறுவேன்!//

செய்ங்க, அவருக்கும் எனக்கும் ஏற்கெனவே ஏழாம்பொருத்தம்.


2011/5/2 Innamburan Innamburan <innam...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 3, 2011, 1:50:23 AM5/3/11
to thamiz...@googlegroups.com


2011/5/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

> 1. 'குட்டி மைத்துனன்...நாலு முடிந்து ஐந்தாம் வயசு... வாங்க மன்னியோட அப்பாவா
> நீங்கனு கேட்டுட்டு...'
> => ரொம்ப ரொம்ப சூட்டிகையான பையர் போல இருக்கு. வருமுன் காப்போன்! இப்போ
> ஐ.ஏ.எஸ்ஸோ?//
>
> இல்லை, அண்ணாக்கள் ரெண்டு பேரும் பி.காமோட நிறுத்திட்டு வேலைக்குப் போயாச்சு,
> இவர் அதுக்கப்புறம் ஐசிடபுள்யூஏ., சி.ஏ. ஏ.சி.எஸ்.னு எல்லாமும் முடிச்சுட்டு 
> ஏர் போர்ட் அதாரிடிலே சீனியர் மானேஜர் ஃபைனான்ஸ்!
>=> அதே! கணக்குலே புலி; நிதியின் நிதி!

>
> 2. அடிக்கு அடி 'பையர்' என்றால், சேடாத்திரி கிட்ட வத்தி வச்சுறுவேன்!//
>
> செய்ங்க, அவருக்கும் எனக்கும் ஏற்கெனவே ஏழாம்பொருத்தம்.
=> எனக்கும் தான். ஜூட்!

LK

unread,
May 3, 2011, 1:53:47 AM5/3/11
to thamiz...@googlegroups.com
//எனக்கும் தான். ஜூட்!//

எல்லோருக்கும்தான் 

2011/5/3 Innamburan Innamburan <innam...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

meena muthu

unread,
May 3, 2011, 7:43:26 AM5/3/11
to thamiz...@googlegroups.com
:)))))

Geetha Sambasivam

unread,
May 5, 2011, 5:44:50 AM5/5/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
பிள்ளை வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கும் விஷயம் தெரிந்து என் மாமாக்கள், பெரியப்பா, அண்ணாக்கள் எல்லாரும் வந்துவிட்டனர். வீடே ஒரே பரபரப்பு. ஒருபக்கம் வேண்டாம், விட்டுடலாம் என்ற கட்சி, இன்னொரு பக்கம் அதெல்லாம் வேண்டாம், நேரிலே போய்ப் பார்த்தால் சரியாகும் என்ற கட்சி. என்ன செய்யறதுனு அப்பாவுக்குப் புரியலை. ஏற்கெனவே என் கணவரோட பெரியப்பா பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி அந்தக் கல்யாணத்திற்குத் தான் அவர் புனாவிலிருந்தே வந்திருந்தார். அந்தக் கல்யாணத்திற்கு வரச் சொல்லி அந்தப் பெரியப்பாவும் பத்திரிகை அனுப்பி இருந்தார். ஆனால் போவதா, வேண்டாமானு அப்பாவுக்குப் புரியலை. அந்தக் கல்யாணத்திற்கு இரண்டு நாட்களே இருக்கையில் மீண்டும் ஒரு பத்திரிகை வந்தது. தப்பாய் அனுப்பிட்டாங்களோனு பார்த்தால் விலாசம் எல்லாம் சரியா இருந்தது. ஆனால் முன்னால் விலாசம் எழுதின கையெழுத்து இல்லை. அதோட இந்தக் கவர் நன்கு ஒட்டி இருந்தது. கல்யாணப்பத்திரிகைக் கவரை ஒட்ட மாட்டாங்களே! அதை நான் தான் வாங்கினேன். ஏதோ விஷயம் இருக்குனு உள் மனதுக்குப் புரிய அப்பா ஸ்கூலில் இருந்து வரும் வரைக்கும் காத்திருந்தோம். எங்க வீட்டில் ஒரு பழக்கம். கடிதம் யாருக்கு வந்ததோ அவங்க தான் பிரிச்சுப் படிச்சுட்டு அப்புறமா மத்தவங்களோட பகிர்ந்துக்கறது எல்லாம். என் சிநேகிதிகளின் கடிதம் என்றாலும் கூட அப்பாவோ, அம்மாவோ பிரிக்க மாட்டாங்க. நான் வர வரைக்கும் காத்திருக்கும்.

அப்பா ஸ்கூலில் இருந்து வந்ததும், கடிதம் வந்திருப்பது அறிந்து பிரித்துப் பார்த்தார். அதிலே ஒரு இணைப்புக் கடிதத்தில் கல்யாணத்துக்குக் கட்டாயமாய் வருமாறும், வந்து பேசிக்கொண்டு நிச்சயத்தையும் செய்து கொண்டு போகலாம் என்றும் எழுதி இருந்தது. அதுவரையிலும் என் மாமனார் பேரில் வந்த கடிதங்களில் எல்லாம் எழுதப் பட்ட எழுத்து இல்லை என்பது அப்பாவுக்கும் புரிந்தது. ஒருவேளை மாப்பிள்ளையே எழுதி இருப்பாரோ? என்றால் அவங்க அப்பா, அம்மா சொல்லாமல் நாம் எப்படிப் போறது? மறுபடி குழப்பம். உள்ளூரிலேயே இருந்த பாட்டி, மாமாக்கள், பெரியப்பா, பெரியம்மா போன்றோருடன் மீண்டும் வட்டமேஜை மாநாடு நடந்தது. பெருவாரியான விருப்பம் போகும்படியே சொல்ல அப்பாவும் சரினு சம்மதிச்சுப் போகறதுக்கு ஆயத்தம் செய்தார்.

கல்யாணத்துக்கு முதல்நாளே போய்விடுவதாயும், அன்றே பேச்சு வார்த்தைகளை முடித்துக்கொண்டு, எல்லாமும் கூடி வந்தால் கல்யாணத்தன்று சம்பிரதாயத்துக்குப் பாக்கு,வெற்றிலை மாற்றிக்கொண்டு பின்னர் ஒரு நல்லநாள் பார்த்து லக்னப்பத்திரிகை வாசிக்க ஏற்பாடு செய்யலாம் என்று பெரியப்பா கூற அப்பாவும் அரை மனசாக் கிளம்பினார். ஏனெனில் லக்னப்பத்திரிகை வாசிக்கும் விழா நிகழ்வைப்பெரிய அளவில் செய்ய அப்பா திட்டம் போட்டுக்கொண்டிருந்தார். இப்போ இந்தப் பேச்சு வார்த்தை எப்படி முடியும் என்று கூற முடியாத நிலையில் எல்லாருமே போகவும் முடியாது. எல்லாரும் போயிட்டு அங்கே ஒண்ணும் சரிப்பட்டு வரலைனா அவமானமும், வருத்தமும் மிஞ்சும். அப்பா மட்டும் போயிட்டுப் பாக்கு, வெத்திலை மாத்திண்டு வந்ததும், திரும்ப லக்னப்பத்திரிகை விழாவுக்குப் பிள்ளை வீட்டில் சம்மதிக்கணும். அது அவங்க வீட்டில் அவங்க பொறுப்பில் செய்யவேண்டியது. இதான் அப்பாவுக்கு யோசனை. மேலும் தஞ்சைப் பக்கம் பாக்கு,வெற்றிலை மாற்றுவதோடு சரினும், ரொம்பப் பெரிசா எல்லாம் பண்ணறது இல்லை என்றும் என்னோட மாமனார், மாமியார் சொல்லி இருந்தாங்க. ஆண்கள் மட்டுமே கூடிப் பேசிப் பாக்கு,வெற்றிலை மாத்திப்பாங்க என்றும், பெண்கள் அந்த விசேஷத்துக்கு அதிகமாய்க் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் சொல்லி இருந்தாங்க.

அப்பா கல்யாணத்துக்கு முதல் நாளே காலையிலே கிளம்பிட்டார். சாயந்திரம் மாப்பிள்ளை அழைப்பின் போது சத்திரத்துக்குப் போயிடுவேன்னு சொல்லி இருந்தார். ஆகவே அன்னிக்குப் பேசி முடிச்சுண்டு, பாக்கு,வெற்றிலை மாற்றவும், கல்யாண முஹூத்தத்துக்கும் நாள் குறித்துக்கொண்டு வருவதாயும் மாப்பிள்ளையின் பெரியப்பா பெண்ணின் கல்யாணம் முடியும் வரை தங்கப் போறதில்லை என்றும் சொல்லி இருந்தார். ஆகவே நாங்க அப்பாவை மறுநாளே மதியம் சாப்பாட்டுக்கே எதிர்பார்த்தோம். ஆனால் அப்பா அன்று வரவில்லை. என்னனு புரியலையே என்று யோசித்தோம். வந்தால் தான் தெரியும் விஷயம்,. இப்போ மாதிரி தொலைபேசியா? செல்பேசியா? ஆகவே கட்டாயமாய்க் காத்திருக்கணும். மறுநாள் காலையில் தான் வந்தார். வந்தவர் உடனே எதுவும் பேசவில்லை. வந்து, எப்போதும் போல் கொண்டு போன பையை ஸ்வாமி அலமாரிக்குக் கீழே வைத்துவிட்டுக் குளித்துச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் மெதுவாய்ச் சொன்னார். இன்னியிலே இருந்து பதினைந்தாம் நாள் கல்யாணம். நிச்சயம் பண்ணியாச்சு என்று. 

அம்மாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் ஒரே பெண்ணின் நிச்சயத்தின் போது தான் உடனிருக்கவில்லை என்ற வருத்தமும். என்றாலும் கேட்டாள்: என்னிக்கு லக்னப் பத்திரிகை வாசிக்கிறாங்களாம்? 

அதெல்லாம் நேத்தே வாசிச்சாச்சு. நேத்துச் சாயங்காலம் முடிச்சுட்டாங்க. மாப்பிள்ளைக்கு லீவு கிடையாதாம். கல்யாணம் முடிஞ்சதுமே ஒரு வாரத்திலே திரும்பப் புனா போகணுமாம், அவங்க பெரிய பொண்ணு கூட பிலாயிலே இருந்து வந்திருக்காங்க. அவங்களும் சீக்கிரம் திரும்பிடுவாங்களாம். எங்க பெரிய பொண்ணு இருக்கிறச்சேயே கல்யாணத்தை முடிக்கணும்னு சொல்லிட்டாங்க. 

ஏன் இப்படிப் பண்ணிட்டீங்க?" அம்மா.

பின்னே? என்னை என்ன பண்ணச் சொல்றே? அவங்க இது போதும்னு சொல்லிட்டாங்க. சரி, சரி ஆகட்டும், இன்னிக்கு நல்லநாள்னா ஆகவேண்டிய வேலையை ஆரம்பிக்கலாம். பக்ஷணம் எல்லாம் நிறைய வைக்கணும், பெரிய குடும்பம். சமையல்கார மாமிக்குச் சொல்லி அனுப்பணும், முன்னாடி நீ மன்னியைக் கூப்பிட்டு என்னிக்கு மஞ்சள் இடிக்கிறது? தோழிப்பொங்கல் என்னிக்குனு எல்லாம் முடிவு பண்ணிக்கோ. 

கல்யாண வேலை ஆரம்பம் ஆனது. அது சரி, திடீர்னு எப்படிக் கல்யாணத்துக்கு ஒத்துண்டாங்க? இதன் பின்னணியில் நடந்தவைக்குக் காத்திருங்கள். இந்தியா- இலங்கை மாட்ச் முடியட்டும். சொல்றேன். வேடிக்கை என்னவென்றால் எனக்கே இப்போத் தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் முழுசாத் தெரியும். அதுவரைக்கும் ஆங்காங்கே ஒருத்தரொருத்தர் சொன்னதும், கேட்டதும் தான்.  சும்மாவே சனி, ஞாயிறுன்னா ஈ ஓடும் வலை உலகிலே. இப்போக் கேட்கவே வேண்டாம். யாருமே வரமாட்டாங்க!












Geetha Sambasivam

unread,
May 5, 2011, 5:50:04 AM5/5/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com


கல்யாணமாம், கல்யாணம், தொடர்ச்சி!

எனக்கு இருப்பது ஒரே பொண்ணு. அவளுக்கு இப்படியா நிச்சயம் பண்ணிண்டு வரணும்? இன்னொரு பெண்ணா இருக்கா? அவளுக்கு நன்னாச் செய்து பார்க்கலாம்னு சொல்றதுக்கு? "அம்மாவின் புலம்பலோடு ஆரம்பித்தன கல்யாண வேலைகள். அன்றைய நாளே நன்றாக இருந்ததாலும், திங்கட்கிழமை என்னோட நக்ஷத்திரத்துக்கு ஏற்றதென ஏற்கெனவே ஜோசியர் சொல்லி இருந்ததாலும் அன்றே கல்யாணவேலைகளை ஆரம்பிக்க முடிவு செய்யப் பட்டது. தம்பியை அனுப்பிப் பத்திரிகை அடிக்க மாதிரிகள் கொடுத்தார் அப்பா. அண்ணாவுக்குத் தந்தி கொடுக்கச் சொன்னார். அக்கம்பக்கம் இருக்கும் சுமங்கலிகளும், தகவல் தெரிந்து, என்னோட பெரியம்மாவும் வந்து சேர, மஞ்சள் இடித்து அன்றைய வேலையைத் தொடங்கினார்கள். சமையல்கார மாமிக்குச் சொல்லி அனுப்பப் பட்டது. பக்ஷணங்களுக்குத் தேவையான சாமான்களின் லிஸ்ட் போடப் பட்டது. வாடிக்கை நெய்க்காரப் பாட்டியை எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுண்டு வர என் தம்பிக்கும், அவன் நண்பனுக்கும் உத்தரவிடப் பட்டது. இரண்டு நாளைக்குள்ளாக ஒரு நல்ல நாளில் புடைவை வாங்க முடிவு செய்யப் பட்டது. ரவிக்கைகளைத் தைக்க டெய்லர் இருந்தாலும் எனக்கும் தையல், எம்ப்ராய்டரி தெரியும் என்பதால் அவசரமாய் வேண்டுபனவற்றை நானே தைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப் பட்டது. புடைவை வாங்க என்னையும் அழைத்துச் செல்லவேண்டும் என்று என் மாமிகள், அம்மா போன்றோர் சொல்ல அப்பா திட்டமாக மறுத்துவிட்டார். கடைசியில் என் பெரியம்மா, அம்மா, அப்பா, மாமிகள் போய்த் தான் புடைவை வாங்கி வந்தனர். மஸ்டர்ட் கலரில் ஊசிவாணம் புடைவை நிச்சயதார்த்தத்துக்கும், ஊஞ்சல் புடைவை பச்சைக்கலரிலும், இன்னொரு புடைவை இங்க்லீஷ் பச்சை என்று சொல்வார்கள் அந்தக் கலரிலும், சுமங்கலிப் பிரார்த்தனைக்கு ப்ரவுன் கலரிலும் புடைவைகள் வாங்கப் பட்டிருந்தன. எங்க ஊர்ப்பக்கம் திருமணம் ஆகாத பெண்களுக்கும் சுமங்கலிப் பிரார்த்தனைப் புடைவை உண்டு. ஏனென்றால் குழந்தையாகவோ திருமணம் ஆகாமலோ கன்னிப் பெண்கள் இறந்திருப்பார்கள். அவர்கள் நினைவாகக் கொடுப்பார்கள். சிலசமயங்களில் மற்ற அந்நியரின் வீடுகளின் பெண்களை அழைத்தும் கொடுப்போம். நவராத்திரியில் இதைக் கட்டாயமாய்ச் செய்து வருகிறோம். இப்போ என் கல்யாணம் என்பதால் பெரியம்மா எனக்குத் தான் கொடுக்கணும், அது தான் குடும்ப வழக்கம் என்று சொல்லிவிட்டார்.

மதுரை, திருநெல்வேலிப் பக்கங்களில் மாப்பிள்ளை வீட்டிலேயே கல்யாணப் பெண்ணுக்கு நாலு புடைவைகள் எடுப்பாங்க. நிச்சயதார்த்தம், கல்யாணக்கூரை, கிரஹப் பிரவேசம், நலுங்கு விளையாடல் என நாலு புடைவைகள் எடுப்பாங்க. என்னோட இரு பெரியப்பா பெண்களுக்கும் அப்படித் தான் நடந்தது. ஒருத்தர் என் அம்மாவழிச் சொந்தம், இன்னொருத்தர் எங்க பக்கத்துவீட்டிலே இருந்தவங்க தம்பி. ஆகவே பழக்கவழக்கம் எல்லாம் ஒண்ணாய் இருந்தது. ஆனால் இங்கே மாப்பிள்ளை வீட்டில் நாங்க எதுவும் எடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம். அப்புறமா அப்பா வற்புறுத்திக் கூரைப்புடைவை மட்டுமாவது எடுக்கணும்னு சொல்லிட்டு வந்திருந்தார். அரை மனசாய் ஒத்துண்டாங்கனு சொல்லிண்டிருந்தார். இப்படிச் சின்னச் சின்னதாய் சில கசமுசாக்கள் இருந்தாலும் கல்யாண வேலைகள் தொடர்ந்து நடந்தன. அவங்க வீட்டிலே போடும் திருமாங்கல்யத்தையும் இங்கேயே செய்யச் சொல்லி இருப்பதால் மாங்கல்யத்துக்குப் பொன் உருக்க நாள் பார்க்க வேண்டி ஜோசியருக்குச் சொல்லி அனுப்பினார் அப்பா. நாள் பார்த்துப் பொன் உருக்கித் தான் அப்போல்லாம் மாங்கல்யம் செய்வாங்க. ஆசாரி வீட்டுக்கு வந்து பூஜைகள் செய்து, பொன்னை வாங்கி ஸ்வாமி காலடியில் வைத்து வேண்டிக்கொண்டு, கையோடு கொண்டு வரும் பொன் உருக்கும் உலையில் போட்டு உருக்கி மாங்கல்ய அச்சில் அதை ஊற்றி மீண்டும் ஸ்வாமி காலடியில் வைத்துவிட்டு எடுத்துச் செல்வார். அதன் பின்னர் மாங்கல்யம் செய்யப் பட்டு பாலிஷ் எல்லாம் போடப் பட்டு நல்ல நாள் பார்த்து மஞ்சள், குங்குமத்துடன் அவரே கொண்டு வந்து கொடுப்பார். இப்போல்லாம் பொன் உருக்கறதில்லை என்றாலும் கூடியவரையிலும் நல்ல நாளைப்பார்த்து ஆர்டர் கொடுப்போம். அதுவும் எங்க குடும்பத்துக்கு ராசியான கடைனு திநகரில் ராமநாதன் கடை மட்டுமே. அங்கே தான் திருமாங்கல்யம் செய்வோம். நல்லி கடையில் கூரைப்புடைவை. (இப்போது)

அதற்குள்ளாக அங்கே பத்திரிகை அடிச்சுப் பத்திரிகைகளை எங்க சொந்தக்காரங்களுக்குக் கொடுக்கவேண்டி ஒரு பார்சலில் அனுப்பி இருந்தாங்க. மொத்தமாய் வந்த பத்திரிகைகளைத் தவிர்த்து ஒரு தனியான ஒரு கவரில் என் பெயருக்கும் ஒரு பத்திரிகை வந்தது. அதைத் தான் முன்னாடியே எழுதிட்டேன், பின்னூட்டமாக. அதை அனுப்பியது என் கணவர் தான் என்பதை அப்புறமாத் தெரிந்து கொண்டேன். இப்போ இந்தக் கல்யாணம் நிச்சயம் ஆனதின் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என் அப்பா சொன்னாப்போல் மாமனாருக்கு நான் உயரம் குறைவு என்பதால் கொஞ்சம் அரை மனசாய் இருந்திருக்கிறது. ஆகவே என் கணவரிடம் சொல்லி இருந்திருக்கிறார். அவர் என்னோட அப்பா எதிரே ஒண்ணும் சொல்லவில்லை. ஆனால் ஊருக்குப் போனதும் பேச்சு வார்த்தை நடந்ததில், என் கணவரோட அத்தை பெண் கல்யாணத்துக்கு இருப்பதால் அவங்களையே பார்க்கலாம் என மாமனார் முடிவாய்ச் சொல்லி இருக்கிறார். வரப் போகும் பெரியப்பா பெண் கல்யாணத்துக்கு அவங்களும் வருவாங்க என்பதால் அன்னிக்குப் பேசி முடிவு பண்ணிப் பாக்கு வெற்றிலை மாற்றிடலாம்னு சொல்லி இருந்திருக்கிறார். என் கணவர் மறுத்திருக்கிறார். சொந்தமே வேண்டாம்னு சொன்னாராம். அவங்க அம்மாவும் சொந்தமே வேண்டாம். எல்லாரையும் சொந்தத்திலேயே கொடுத்தாச்சு. இனிமேலாவது வெளியே இருந்து வரட்டும்னு சொல்லி இருக்காங்க.

இது இப்படியே இருக்க என் கணவர் அவரோட பெரியப்பா கூப்பிட்டதாலும், பெரியப்பாவிடம் இது குறித்துப் பேசவும் பக்கத்து ஊரான பரவாக்கரைக்குப் போயிருக்கார். அங்கே விஷயத்தைச் சொல்லி இருக்கார். தன்னோட அப்பா அத்தை பெண்ணைத் தான் பண்ணிக்கணும்னு சொல்லுவதையும் தனக்கு இஷ்டமில்லை என்றும் மதுரைப் பெண்ணைத் தான் பண்ணிக்க ஆசைப்படுவதாயும் சொல்லி இருக்கிறார். அப்போ பெரியப்பா அவரிடம் அவரை நானும் பார்த்தேன். நல்லவங்களாத் தான் தெரியுது. ஒரு கடிதம் எழுதிப் போட்டு வரவழை. பேசலாம்னு சொல்லவே, என் மாமனார் நிபந்தனைகள் போட்டுக் கடிதம் எழுதச் சொன்னதை என் கணவர் கூறவே, அவர் யோசித்துவிட்டு, அந்தப் பெண்ணின் அப்பாவை நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கு வரச் சொல்லி இருக்கேன். வந்தாலும் வருவார். நீ எதுக்கும் இன்னொரு பத்திரிகையை அனுப்பிக் கட்டாயம் வரச் சொல்லு. அப்போ நிச்சயம் பண்ணிக்கலாம்னு உன் அப்பா எழுதறாப்போலவே எழுதிடு. என்று சொல்லி இருக்கிறார். இவர் யோசிக்க, உன் அப்பாவிடம் நான் பேசிக்கறேன். என்று அவர் தைரியம் கொடுத்திருக்கிறார். ஆகவே அப்படியே எழுதி அனுப்பிட்டார்.

ஆனால் கல்யாணத்துக்கு முதல்நாளான சனிக்கிழமையே போன அப்பா மறுநாள் காலை முஹூர்த்தத்துக்கும் போகலை. அன்று மாலை தான் போயிருக்கிறார். அதுக்குள்ளே இங்கே அத்தை வீட்டுக்காரருக்கும், என் மாமனாருக்கும் பேச்சு வார்த்தை மும்முரமாய் ஆகிவிட்டிருக்கிறது. அத்தையும் தன் அண்ணா பிள்ளைக்குப் பிடிக்கலை என்பதாலும் உறவு வேண்டாம் என்பதாலும் மறுத்திருக்கிறார். ஆனாலும் அவங்க இரண்டு பேரும் விடலை. விடாமல் பேசி எல்லாரையும் ஒத்துக்க வைக்கப் பார்த்திருக்காங்க. என் கணவருக்கோ காலம்பரவே வரேன்னு சொன்ன மனுஷன் சாயந்திரம் வரைக்கும் வரலையேனு ஒரே டென்ஷனா இருந்திருக்கு. அதுக்குள்ளே வேறு வழியில்லாமல் அத்தை சம்மதிக்க ராகு காலம் முடிஞ்சு பாக்கு வெற்றிலை மாத்தலாம்னு சொல்லி இருக்காங்க. 

அப்போத் தான் போயிருக்கார் என்னோட அப்பா. கூடவே ஸ்வாமிமலையில் அவரின் சிநேகிதர் வீட்டு மனுஷர்கள். கையிலே பழம், பாக்கு, வெற்றிலை, பருப்புத் தேங்காய், திரட்டுப் பால் சகிதம், மாப்பிள்ளைக்கு வேஷ்டிகள் என ஏற்பாடாய்ப் போய்விட்டார். அப்பாவுக்குக் கும்பகோணம் வந்ததுமே தகவல் தெரிந்து விட்டது, இன்னொரு அத்தையின் மூலம். மாப்பிள்ளைக்கு நம்ம பெண்ணைத் தான் பிடிச்சிருக்கு என்பதும், அவளைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப் படறார் என்பதும் கும்பகோணத்திலேயே இருந்த அத்தை சொல்லி இருக்காங்க. உடனேயே அப்பா அத்தையிடம் சொல்லிட்டு ஸ்வாமி மலைக்குப் போய் அவரோட சிநேகிதர்கள் வீட்டிலே சொல்லி, எல்லாம் பண்ண ஏற்பாடு செய்திருக்கிறார். என்னதான் சீக்கிரம் பண்ணினாலும் அப்போல்லாம் ரெடிமேடாக எதையும் வச்சுக்க மாட்டாங்க இல்லையா? ஆகவே வீட்டிலே எல்லாத்தையும் பண்ணி எடுத்துண்டு வரதுக்குச் சாயந்திரம் ஆகி இருக்கு.

ஆனால் இந்த ஏற்பாடை என் கணவரும் அவரோட பெரியப்பாவும் சேர்ந்து செய்தாங்க என்பது எனக்கு ஒரு வருஷம் முன்னாடித் தான் தெரியும். அது வரைக்கும் என் மாமனார் வீட்டிலே சொன்னது:
ஒரே பெண்ணைத் தான் பார்ப்பேன்னு என் கணவர் சொல்லிட்டிருப்பாராம். நாலைந்து பெண்கள் பார்க்கமாட்டேன் பார்க்கும் முதல் பெண்ணைத் திருமணம் செய்துப்பேன், எப்படி இருந்தாலும், அவங்க வீட்டிலே என்ன செய்தாலும், செய்யாட்டியே கூட. என்று சொல்லுவாராம். அதனால்தான் உன்னை விடலைனு சொல்லுவாங்க. பல வருஷங்கள் கழிச்சு இப்போத் தான் பின்னணிக்கதை எனக்குத் தெரிய வந்தது. அதுவும் தற்செயலான ஒரு பேச்சு வார்த்தையில்.















Geetha Sambasivam

unread,
May 5, 2011, 5:54:22 AM5/5/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
இணையம் சரியானதும் பின்னூட்டங்களுக்கு பதில் தரேன்.  மிகுந்த சிரமத்தோடு பதிவிட வேண்டி இருக்கு. :(

2011/5/3 meena muthu <ranga...@gmail.com>
:)))))

Innamburan Innamburan

unread,
May 5, 2011, 9:37:28 AM5/5/11
to thamiz...@googlegroups.com, innamburan88
சிரமம் என்ன சிரமம்! ஏதோ விஷயம் இருக்குனு உள் மனதுக்குப்
புரிஞ்சப்பறம்... எத்தனை வருஷம் ஆனாலும் சிரமம் என்ற பேச்சே கிஐயாது,
அதுவும், புக்காத்து பெரியப்பா, அபரஞ்சித் தங்கமா வாய்த்த போது.

எதற்கும் ருக்மணி கல்யாண வைபோகம் பாடிய 'கீதா சரிக செப்தாரு' என்று நான்
பதிவு செய்த 'அம்மா சொல்படி ராஜூ: 5' லிருந்து ஒரு பகுதி:
=>
."..அப்பாவுக்கு செட்டியார் வீட்டில் நல்ல பெயர். அவர்கள் கார் வாங்கி,
அதில் வெள்ளித்தகடு போட்டு இருக்கும். அந்தக்காரில் தான் என் அப்பா
போவார். 17 நான் ஐந்தாவது பெண்ணாம். அதனால் எனக்கு 10 வயது ஆவதற்குள்
நல்ல காலம் என்று என் அம்மா சொல்லிக்கொண்டிருப்பாள்? இப்படியிருக்கும்
போது தான் எனக்குக் கல்யாணம் செய்யவேணும் என்று என் அப்பா நினைத்தார்.
ஆனால், அரியக்குடி என்ற ஊரில் என் பெரி (ய) அத்தை இருந்தாள். எனக்கு
நினைவு இருக்கிறது. அந்த அத்தைக்கு ஒரு பிள்ளை தான்.18 அதனால், அத்தை என்
அப்பாவிடம் வந்து உன் பெண்ணை என் பிள்ளைக்குக் கொடு என்று கேட்டாள்.
அதற்கு அப்பா சொன்னது என்னவென்றால், வயது அதிகம், வேண்டாம் என்று சொல்லி
விட்டார். அதற்குள் என் அத்தை வந்து என் மைத்துனர் பிள்ளை இருக்கிறான்.
நல்ல சம்பாத்தியம். நல்ல வேலை பார்க்கிறான். அவனுக்குக் கொடு என்றாள்.
அதையும் அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், பையனுக்கு மூலா
நக்ஷத்திரம் என்று வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எங்கல் வீட்டுக்குப்
பக்கத்தில் திருவித்யானம்19, கல்யாணம் எல்லாம் செய்து வைக்கிற வாத்தியார்
ஒருவர் இருந்தார். அவர் வந்து என் அப்பாவிடம் ஒரு ஜாதகம் வந்திருக்கிறது.
அதை உன் பெண்ணுக்கு பார்க்கலாம் என்று சொன்னாராம். என் அப்பா அந்த
ஜாதகத்தைப் பார்த்தாராம். ஜாதகம் பொருத்தமாக இருக்கிறது என்று
தெரிந்ததும் என்ன செய்வது என்று யோசித்துப்பார்க்கும் போது,
கும்பகோணத்தில் ரெட்டிராயர் குளத்தெருவில், என் அப்பாவுடைய மாமா பிள்ளை
இருந்தார். அவருடைய பெயர் ஆராவமுது. 20 அவருக்கு லட்டர் (போட்டு)
கேட்டார்களாம். அவர் வந்து என் தம்பி பெண்ணுக்குத் தான் பார்த்தது.
பொருத்தம் இல்லை என்பதால் உனக்கு அனுப்பும்படி என் தம்பி சக்கரவர்த்தி
எழுதியிருந்தான். அதனால் உடனே உனக்கு அனுப்பினேன். அவர்கள் நல்லவர்கள்
தாம். சக்கரவர்த்தி சாத்தூரில் ஸ்கூல் வாத்தியாராக இருக்கிறான். அங்கு
தான் அந்த பையனும் இருக்கிறான். பையன் நன்றாக இருப்பான். வேலை நல்ல
கெவர்மெண்ட் வேலை. அதனால் சாத்தூருக்கு லட்டர் போட்டு தெரிந்து கொள்
என்று அந்த ஆராவமுது லட்டர் போட்டுவிட்டாராம். பிள்ளைவீட்டுக்காரர்களும்
ஜாதகம் பொருத்தம் என்றும் லட்டர் போட்டுவிட்டார். அதனால், என் அப்பா உடனே
சாத்தூருக்குப் போய் பிள்ளையைப் பார்த்து எல்லா விஷயங்களையும் தெரிந்து
கொண்டு ஊருக்கு வந்து விட்டார். என் அம்மாவிடம் பையன் நன்றாக
இருக்கிறான், எனக்கு பிடித்து விட்டது; அவர்கள் பூர்வீக ஊர்
கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிறதாம். அவர்களுக்கு லட்டர் போட்டு
கேட்கிறேன் என்று சொன்னாராம். அதன்படி அவர்களுக்கு என் (அப்பா) லெட்டர்
போட்டாராம். 21.........."

இன்னம்பூரான்

05 05 2011

vishalam raman

unread,
May 5, 2011, 12:03:35 PM5/5/11
to thamiz...@googlegroups.com
என்னவிருந்தாலும் அந்தக்கால கல்யாணம்போல் வருமா இந்தக்கால கல்யாணம் . அது
ஒரு தனி த்ரில் தான் ,பழையகால ஞாபகம் அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது கீதா

2011/5/5 Innamburan Innamburan <innam...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
May 6, 2011, 4:35:13 AM5/6/11
to thamiz...@googlegroups.com
இன்னம்புராருக்கும், விசாலத்துக்கும் நன்றி. ஆமாம், அந்தக் காலக் கல்யாணம் பற்றி இந்தக்காலப் பிள்ளைகள் அறிய வேண்டியே இந்தத் தொடரை இப்போ எழுதறேன்.

2011/5/5 vishalam raman <rvis...@gmail.com>
360.gif

Tthamizth Tthenee

unread,
May 6, 2011, 4:53:14 AM5/6/11
to thamiz...@googlegroups.com
மொத்தமாய் வந்த பத்திரிகைகளைத் தவிர்த்து ஒரு தனியான ஒரு கவரில் என் பெயருக்கும் ஒரு பத்திரிகை வந்தது. அதைத் தான் முன்னாடியே எழுதிட்டேன், பின்னூட்டமாக. அதை அனுப்பியது என் கணவர் தான் என்பதை அப்புறமாத் தெரிந்து கொண்டேன்
 
 
 
ஓ  இப்பிடியெல்லாம்  அட்வான்ஸா பண்ணிட்டு  அந்தக் காலக் கல்யாணம்னு சொன்னா எப்பிடி?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/5/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>
330.gif

Jeevaa KS

unread,
May 6, 2011, 4:58:46 AM5/6/11
to thamiz...@googlegroups.com

2011/5/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

மொத்தமாய் வந்த பத்திரிகைகளைத் தவிர்த்து ஒரு தனியான ஒரு கவரில் என் பெயருக்கும் ஒரு பத்திரிகை வந்தது. அதைத் தான் முன்னாடியே எழுதிட்டேன், பின்னூட்டமாக. அதை அனுப்பியது என் கணவர் தான் என்பதை அப்புறமாத் தெரிந்து கொண்டேன்
 
 
 
ஓ  இப்பிடியெல்லாம்  அட்வான்ஸா பண்ணிட்டு  அந்தக் காலக் கல்யாணம்னு சொன்னா எப்பிடி?
 
அன்புடன்


அதானே ?

ட்ரெயினிங் ரூமில் இருந்து
ஜீவ்ஸ்
330.gif

Tirumurti Vasudevan

unread,
May 6, 2011, 5:31:15 AM5/6/11
to thamiz...@googlegroups.com
ஜீவ்ஸை காணலைன்னு ப்ராது கொடுத்துகிட்டு இருக்காங்க!
என்ன ட்ரெய்னிங்க்?

2011/5/6 Jeevaa KS <jee...@gmail.com>

அதானே ?

ட்ரெயினிங் ரூமில் இருந்து
ஜீவ்ஸ்



--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

shylaja

unread,
May 6, 2011, 5:49:00 AM5/6/11
to thamiz...@googlegroups.com


2011/5/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

ஜீவ்ஸை காணலைன்னு ப்ராது கொடுத்துகிட்டு இருக்காங்க!
என்ன ட்ரெய்னிங்க்?<<<<<<<<<
 
ஏதோ ட்ரெயினிங் ! தான்  பிசின்னு காமிச்சிக்கதான்!
ஷைலஜா(சமையலறையிலிருந்து):):)

2011/5/6 Jeevaa KS <jee...@gmail.com>
அதானே ?

ட்ரெயினிங் ரூமில் இருந்து
ஜீவ்ஸ்



--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
 
 ஷைலஜா
 

பருந்தாட் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை, விட்டு சித்தன் கோதைசொல்,
மருந்தாம் என்று, தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,

பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ், பிரியாது என்றும் இருப்பார்களே!


Tirumurti Vasudevan

unread,
May 6, 2011, 5:51:39 AM5/6/11
to thamiz...@googlegroups.com
கொடுக்கறாரா, வாங்கிக்கறாரா?

2011/5/6 shylaja <shyl...@gmail.com>

ஏதோ ட்ரெயினிங் ! தான்  பிசின்னு காமிச்சிக்கதான்!
ஷைலஜா(சமையலறையிலிருந்து):):)

shylaja

unread,
May 6, 2011, 5:54:31 AM5/6/11
to thamiz...@googlegroups.com
ரொம்ப அவசியம்/?:) சமையலறைல என்ன பண்றீங்கன்ணு கேட்க முடியலயாக்கும்?:):) அதை என்ன ஏதுன்னு கேட்டுக்கறது கிடையாதாக்கும்?:)

2011/5/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Tirumurti Vasudevan

unread,
May 6, 2011, 5:58:06 AM5/6/11
to thamiz...@googlegroups.com
ச்சே ச்சே மத்தவங்க சமையலறையில எட்டிப்பார்க்கிறது இல்லை. ஒரு வேளை மை.பா பண்ணிகிட்டு இருந்தா? :-)))))

2011/5/6 shylaja <shyl...@gmail.com>

ரொம்ப அவசியம்/?:) சமையலறைல என்ன பண்றீங்கன்ணு கேட்க முடியலயாக்கும்?:):) அதை என்ன ஏதுன்னு கேட்டுக்கறது கிடையாதாக்கும்?:)

LK

unread,
May 6, 2011, 5:58:54 AM5/6/11
to thamiz...@googlegroups.com
சாம்பார் இல்லை ரசம் இல்லை ஒரு மைபா 

2011/5/6 shylaja <shyl...@gmail.com>



--

shylaja

unread,
May 6, 2011, 6:02:16 AM5/6/11
to thamiz...@googlegroups.com
:):):)  அட்சயதிதியை முன்னிட்டு இன்றுஜில்லுன்னு முதல்ல ஒரு பானகம் அப்றோமா புளியோதரை தேங்காய்சாதம்  மாங்காய் சாதம்  வெள்ரிக்கா பச்சடி 
சேமியா பாயசம்  வடாம் அப்பளம் தான்:):)  பக்கத்துல ஒரு வெங்கடாசலபதி கோயில்போய் கோவிந்த நாமாவளி சொல்லிப்பாடிவிட்டுவந்தாச்சு.(ஆமா இவ்ளோ யார் கேட்டாங்கன்னு நான் சொல்றேனோ?:)

Tirumurti Vasudevan

unread,
May 6, 2011, 6:11:38 AM5/6/11
to thamiz...@googlegroups.com
எல்லாம் எங்க வ.எ கொட்டிக்கத்தான், வேறே என்ன? ம்ஞ் ம்ஞ் ம்ஞ்.....

2011/5/6 shylaja <shyl...@gmail.com>

:):):)  அட்சயதிதியை முன்னிட்டு இன்றுஜில்லுன்னு முதல்ல ஒரு பானகம் அப்றோமா புளியோதரை தேங்காய்சாதம்  மாங்காய் சாதம்  வெள்ரிக்கா பச்சடி 
சேமியா பாயசம்  வடாம் அப்பளம் தான்:):)  பக்கத்துல ஒரு வெங்கடாசலபதி கோயில்போய் கோவிந்த நாமாவளி சொல்லிப்பாடிவிட்டுவந்தாச்சு.(ஆமா இவ்ளோ யார் கேட்டாங்கன்னு நான் சொல்றேனோ?:)

Tirumurti Vasudevan

unread,
May 6, 2011, 6:12:06 AM5/6/11
to thamiz...@googlegroups.com
எல்கே பசிக்கலை?

2011/5/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

எல்லாம் எங்க வ.எ கொட்டிக்கத்தான், வேறே என்ன? ம்ஞ் ம்ஞ் ம்ஞ்.....

LK

unread,
May 6, 2011, 6:12:30 AM5/6/11
to thamiz...@googlegroups.com
அதுவும் குறிப்பா இந்த தம்பியோட 

2011/5/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

LK

unread,
May 6, 2011, 6:13:44 AM5/6/11
to thamiz...@googlegroups.com
இப்பதான் மேனேஜர் கூட வெளில சாப்டுட்டு வந்தேன் 

shylaja

unread,
May 6, 2011, 6:13:31 AM5/6/11
to thamiz...@googlegroups.com
:):):)  மிச்சம் இருக்கு  :)

2011/5/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Tthamizth Tthenee

unread,
May 6, 2011, 6:14:52 AM5/6/11
to thamiz...@googlegroups.com
பக்கத்துல ஒரு வெங்கடாசலபதி கோயில்போய் கோவிந்த நாமாவளி சொல்லிப்பாடிவிட்டுவந்தாச்சு
 
 
நாமாவளி  பாடும்போதுகூட   
 
 இன்றுஜில்லுன்னு முதல்ல ஒரு பானகம் அப்றோமா புளியோதரை தேங்காய்சாதம்  மாங்காய் சாதம்  வெள்ரிக்கா பச்சடி 
சேமியா பாயசம்  வடாம் அப்பளம் தான்:):) 
 
இத்தனை நாமாவளிகளும் மனசிலே வந்திருக்குமே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/5/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
330.gif

shylaja

unread,
May 6, 2011, 6:16:50 AM5/6/11
to thamiz...@googlegroups.com
வந்துதான் சாப்பிட்டேன் அதனால அப்போ அதெல்லாம் நினைவுக்கு வரல!

2011/5/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
330.gif

LK

unread,
May 6, 2011, 6:17:32 AM5/6/11
to thamiz...@googlegroups.com
appa neenga samaikalai 

2011/5/6 shylaja <shyl...@gmail.com>



--
330.gif

shylaja

unread,
May 6, 2011, 6:19:11 AM5/6/11
to thamiz...@googlegroups.com
ஆமாம் இந்தவீட்டு இல்லத்தரசிதான் சமைச்சாங்க.ஆனா இது என்வீடு.  வீட்டுக்குப்பேருகூட மிதிலா:)
330.gif

sk natarajan

unread,
May 6, 2011, 6:35:16 AM5/6/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
உங்களோடவே பயணித்தது போல இருந்தது
உங்களின் எழுதும் திறன் அபாரம்  கீத்தாம்மா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  http://tamizhswasam.blogspot.com/
குழுமம்    :   http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/5/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 6, 2011, 6:37:09 AM5/6/11
to thamiz...@googlegroups.com


'மொத்தமாய் வந்த பத்திரிகைகளைத் தவிர்த்து ஒரு தனியான ஒரு கவரில் என் பெயருக்கும் ஒரு பத்திரிகை வந்தது. அதைத் தான் முன்னாடியே எழுதிட்டேன், பின்னூட்டமாக. அதை அனுப்பியது என் கணவர் தான் என்பதை அப்புறமாத் தெரிந்து கொண்டேன்...' என்று சொன்னா
 
=> 'ஓ  இப்பிடியெல்லாம்  அட்வான்ஸா பண்ணிட்டு  அந்தக் காலக் கல்யாணம்னு சொன்னா எப்பிடி?' என்று கேட்கும், அன்புடைய தமிழ்த்தேனீ !

=> கேளுமையா நிஜக்கதையை, 'என் இன்னம்பூர் தாத்தாவுக்கு கல்யாணம். ஊர்கோலம் பல்லக்கில். அன்று சிறு பெண் (பிற்காலம் என் பாட்டி) ஆகிய மணப்பெண்ணால் பல்லக்கில் ஏறமுடியவில்லை. தாத்தா தூக்கி வைத்துக்கொண்டாராம். அவர்கள் இல்லறம்: ந்ருஸிம்ஹஸ்வாமியும், மஹாலக்ஷ்மி தாயாரும் போல.

இன்னம்பூரான்
06 05 2011
330.gif

Jeevaa KS

unread,
May 6, 2011, 7:24:27 AM5/6/11
to thamiz...@googlegroups.com
Database Training :D I am learning

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2011/5/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 6, 2011, 7:25:03 AM5/6/11
to thamiz...@googlegroups.com
அது  சரி  இன்னம்பூராரே
 
அப்போ  இருந்த நிலைமைக்கு   தூக்கி பல்லக்கில் வைத்துக்கொள்ளலாம்
 
ஆனால் இப்போ  அது முடியாது
 
ஏன்னா ந்ருசிம்ஹ ஸ்வாமி   திடகாத்திரம் உள்ளவராக இருந்தார்,  லஷ்மியும்
  சின்னப் பொண்ணா இருந்தா
 
நாம பெத்து வளக்கற நம்ம பொண்ணுகளை  மடியிலே உக்காரவெச்சிண்டு  மாப்பிள்ளைக்கு  தாரவாத்துக் குடுக்கறதுக்குள்ளேயே மூச்சு வாங்கிப் போறது
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 


 
2011/5/6 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
364.gif
1A5.gif
330.gif

Innamburan Innamburan

unread,
May 6, 2011, 7:39:34 AM5/6/11
to thamiz...@googlegroups.com
அநாவசியாம, மாட்டிக்கணும், மாட்டிக்கணும்னு தவிக்கிறீர். தனி மடலுக்குக்குட பதில் போரதில்லை. வந்து சாத்றேன்.



LK

unread,
May 6, 2011, 7:40:24 AM5/6/11
to thamiz...@googlegroups.com
வேடிக்கை பார்க்க நான் இருக்கேன் 

2011/5/6 Innamburan Innamburan <innam...@gmail.com>
அநாவசியாம, மாட்டிக்கணும், மாட்டிக்கணும்னு தவிக்கிறீர். தனி மடலுக்குக்குட பதில் போரதில்லை. வந்து சாத்றேன்.



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Tirumurti Vasudevan

unread,
May 6, 2011, 7:41:40 AM5/6/11
to thamiz...@googlegroups.com
தனி மடல்லே சாத்தினா எப்படி வேடிக்கை பார்க்கிறது? :-)))

2011/5/6 LK <karthik.lv@gmail.com>
வேடிக்கை பார்க்க நான் இருக்கேன் 



Tirumurti Vasudevan

unread,
May 6, 2011, 7:42:41 AM5/6/11
to thamiz...@googlegroups.com
தேனீ, சாஸ்திரப்படி அது தப்பு! பழக்கத்தை மாத்த முடியலே.

2011/5/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

நாம பெத்து வளக்கற நம்ம பொண்ணுகளை  மடியிலே உக்காரவெச்சிண்டு  மாப்பிள்ளைக்கு  தாரவாத்துக் குடுக்கறதுக்குள்ளேயே மூச்சு வாங்கிப் போறது
 
1A5.gif

Tirumurti Vasudevan

unread,
May 6, 2011, 7:43:16 AM5/6/11
to thamiz...@googlegroups.com
ஹா! ஆசான் மாணவரானாரா? ஐயகோ!

2011/5/6 Jeevaa KS <jee...@gmail.com>

Database Training :D I am learning

LK

unread,
May 6, 2011, 7:43:50 AM5/6/11
to thamiz...@googlegroups.com
//சாஸ்திரப்படி அது தப்பு! பழக்கத்தை மாத்த முடியலே.//

விளக்கம் ப்ளீஸ் 

2011/5/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
1A5.gif

LK

unread,
May 6, 2011, 7:44:44 AM5/6/11
to thamiz...@googlegroups.com
//ஹா! ஆசான் மாணவரானாரா? ஐயகோ!//

அனைவரும் எதோ ஒரு சமயத்தில் மாணவர்கள்தானே

2011/5/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
ஹா! ஆசான் மாணவரானாரா? ஐயகோ!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Tirumurti Vasudevan

unread,
May 6, 2011, 7:52:31 AM5/6/11
to thamiz...@googlegroups.com
பால்யம் திரும்புதா? :-))

2011/5/6 LK <karthik.lv@gmail.com>
//ஹா! ஆசான் மாணவரானாரா? ஐயகோ!//

அனைவரும் எதோ ஒரு சமயத்தில் மாணவர்கள்தானே



LK

unread,
May 6, 2011, 7:54:30 AM5/6/11
to thamiz...@googlegroups.com
ஆமாம் 

2011/5/6 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
பால்யம் திரும்புதா? :-))
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Tthamizth Tthenee

unread,
May 6, 2011, 7:58:06 AM5/6/11
to thamiz...@googlegroups.com
தனி மடல் போட்டீரா?
 
வரலையே
 
வந்தா பதில் போடாம இருப்பேனா?
 
சாத்துங்கோ சாத்துங்கோ  நன்னா சாத்துங்கோ
 
நான் சாதுங்கோ!
 
சாத்துமுறை வந்தா சாத்தித்தான் ஆகணும்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/5/6 Innamburan Innamburan <innam...@gmail.com>
அநாவசியாம, மாட்டிக்கணும், மாட்டிக்கணும்னு தவிக்கிறீர். தனி மடலுக்குக்குட பதில் போரதில்லை. வந்து சாத்றேன்.



Geetha Sambasivam

unread,
May 10, 2011, 4:13:04 AM5/10/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com

கல்யாணமாம், கல்யாணம் தொடர்ச்சி

என்னோட மாமனார் என்னை மருமகளாக ஏற்கத் தயங்கினாலும் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களில் குறை எதுவும் வைக்கவில்லை. திருமணம் ஆனதும், பெரிய அளவில் கிரஹப் பிரவேசத்துக்கு ஏற்பாடுகள் பண்ணப் போவதாய்த் தகவல் கிடைத்தது. என் மாமனாரின் கூட ஒரே அண்ணன் தான். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே என் கணவர் தான் மூத்தவர் என்பதால் குடும்பத்திற்கே முதல் மருமகள். அது அங்கே ஒரு புறம் இருக்க, இங்கே எல்லா பட்சணங்களும் செய்து கொண்டிருந்தார்கள். வீடு தனி வீடெல்லாம் இல்லை. ஒரு வீட்டின் போர்ஷன் தான். தேங்காய் எண்ணெயும், நெய்யுமாகக் கலவையாக வாசனை அடிக்க அங்கேயே உட்கார்ந்து ஒரு பக்கம் நான் தையல் மிஷினை ஓட்டித் தைக்க என்று பரபரப்பாக இருந்தன நாட்கள். இதற்கு நடுவில் பந்தக்கால் முஹூர்த்தம் பார்த்தாயிற்று. என்னோட இரண்டு பெரியப்பா பெண்களில் ஒருத்தருக்கு நாங்க குடி இருந்த வீட்டிலேயே திருமணம் நடந்தது. பக்கத்து வீட்டையும் சேர்த்து வாசலில் பந்தல் போட்டுக் கல்யாணம். கொஞ்சம் தள்ளி இருந்த ஓர் உறவினர் வீட்டில் பிள்ளை வீட்டுக்காரங்கள் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எதிரே இருந்த என் பெரியப்பா வீட்டில் கல்யாணத்திற்கு வேண்டிய மளிகை சாமான்கள், காய்கறிகள், பூ, பழங்கள் என அனைத்தையும் இறக்கிவிட்டுக் காவலுக்கு என்னோட பெரிய அண்ணா(பெரியப்பா பிள்ளை) இருந்தார். சமையல், சாப்பாடு அங்கேயே இன்னொருத்தர் வீட்டில்.

இன்னொரு பெரியப்பா பெண்ணிற்கு தானப்பமுதலி அக்ரஹாரத்தில் இருந்த மங்கள நிவாஸ் என்னும் கண் ஆஸ்பத்திரிக் கட்டிடத்தில் கல்யாணம். அது எல்லா விசேஷங்களுக்கும் குறைவான வாடகை வாங்கிக்கொண்டு கொடுப்பாங்க. பெரியப்பா அந்த அறக்கட்டளையில் உறுப்பினர்தான். அவர் சொன்னால் கிடைச்சுடும். பெரியப்பாவும் சொல்லத் தயாராய் இருந்தார். ஆனால் கூட்டம் நிறைய வந்தால் சமாளிக்க முடியாது என நினைத்த அப்பா, நகரத்தை விட்டுத் தள்ளி என் மாமா வீடு கட்டி இருந்த டிவிஎஸ் நகரில் திருமணம் நடத்தத் தீர்மானித்துவிட்டுப்பத்திரிகையிலும் அந்த விலாசத்தையே கொடுத்துவிட்டார். இது கொஞ்சம் பெரியப்பாவிற்கும், மற்ற உறவினர்களுக்கும் அதிருப்தியைக் கொடுத்தாலும் என் அப்பாவை மீறி எதுவும் யாரும் பேச முடியாது என்பதால் பேசாமல் இருந்துவிட்டார்கள். ஆகவே பந்தக் கால் முஹூர்த்தத்திற்கு என்னையும் அழைத்துச் செல்லவேண்டும் என்ற ஒரு முடிவு எடுக்கவே, அப்படியே அங்கேயே நான் தங்கிவிடவேண்டும், திரும்ப நாங்க இருக்கும் வீட்டுக்கு வந்து கொண்டிருக்க வேண்டாம் என அப்பா சொல்லி, என்னைப் பெட்டியைத் தயார் பண்ணச் சொன்னார். சுமங்கலிப் பிரார்த்தனை, சமாராதனை போன்றவற்றை நடத்த நாங்க இருந்த வீட்டில் இடம் போதாது என்பதால் பெரியப்பா வீட்டில் நடத்தத் தீர்மானித்திருந்தார்கள். அங்கே மாமிகள் அந்த விசேஷத்தில் பங்கெடுக்க வருகையில் என்னை அழைத்து வரலாம் எனவும், அல்லது முதல்நாளே என் தம்பி போய் அழைத்து வந்துகொள்ளலாம் எனவும் முடிவு செய்தாயிற்று. நாளைப் பந்தக்கால் முஹூர்த்தம். முதல் நாளே நான் மாமா வீட்டுக்குச் செல்ல நல்ல நேரம் குறித்தாயிற்று. நாங்க இருந்த மேலாவணி மூல வீதியில் இருந்து மாமா வீடு இருந்த டிவிஎஸ் நகருக்கு நடந்தே பலமுறை போயிருக்கேன். ரயில் பாதையோடு நடந்தால் குறுக்கு வழி. பேருந்திலும் போயிருக்கேன். அப்போ திருப்பரங்குன்றம் செல்லும் 19-ம் எண் பேருந்து அங்கே பழங்காநத்தத்தில் நிற்கும். பழங்காநத்தத்தில் இறங்கிக் கோவலன் பொட்டலைக் கடந்து தான் டிவிஎஸ் நகருக்குள் போகணும். கோவலன் பொட்டலைத் தாண்டுவதைச் சிலர் எதிர்த்தாலும், டிவிஎஸ் நகரும், அதன் எதிரே சத்யசாயி நகரும் வந்ததும், கோவலன் பொட்டல் பற்றிய ஒரு மூட நம்பிக்கை அறவே ஒழிந்தது என்றே சொல்லவேண்டும்.

ஆனால் இப்போ நான் போவது அப்படி எல்லாம் இல்லை. நானும், என் தம்பியுமாக டிவிஎஸ் நகர் வீட்டுக்குச் செல்ல ரிக்ஷாவுக்கும் சொல்லியாச்சு. நடந்தே போன எனக்கு வந்த வாழ்வு! ))) ஆனால் இம்முறை போனால் திரும்ப வீட்டுக்கு வர மாட்டேன். அங்கே இருந்து நேரே கும்பகோணம், அப்புறம் கிராமம். அதுக்கப்புறமா அவங்க அநுமதிச்சாத் தான். பெட்டியைத் திறந்து எல்லாவத்தையும் ஒரு முறை பார்த்தேன். இறை அருளால் எனக்கு உடைகளுக்கு எப்போவுமே குறை இருந்ததில்லை. கல்யாணத்துக்கு எடுத்த பட்டுப்புடைவையைத் தவிரவும் என்னிடம் ஐந்து பட்டுப்புடைவைகள் இருந்தன. உடை விஷயத்தில் எதை எடுத்துக்கிறது, எதை வைக்கிறது என்பதில் குழப்பம் எதுவும் இல்லை. ஆனால் புத்தகங்கள்?? அப்போவே என்னிடம் சின்ன அளவில் புத்தக சேமிப்பு உண்டு. உ.வே.சா. நினைவு மஞ்சரி, கூடக் குடி இருந்த திருநெல்வேலி மாமா கொடுத்த அன்பளிப்பு, பாரதியார் பற்றிய புத்தகங்கள், தனிப்பாடல் திரட்டு 1 பொன்னியின் செல்வன் அப்போ இரண்டாம் முறையாகக் கல்கியில் வெளி வந்த நேரம். அதன் பைண்டிங் புத்தகங்கள். சாண்டில்யனின் நாவல்கள். கணையாழியின் தொகுப்புகள், (சித்தப்பா அப்போக் கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்ததால் ஒவ்வொரு இதழ்க் கணையாழியும் எங்களுக்கு வரும்) நா.பார்த்தசாரதியின் புத்தகங்கள் என ஒரு சின்ன நூலகமே இருந்தது. அதோடு நான் தையலுக்குப் பயன்படுத்தும் நூல்கண்டுகள், எம்ப்ராய்டரிக்குப் பயனாகும் நூல்கண்டுகள், (கடைகளுக்குத் தைச்சுக் கொடுப்பேன்) ஊசி வகைகள், தைக்கக் கொடுத்த துணிகள், தையல் மிஷின் என எல்லாத்தையும் இங்கேயே விட்டுட்டா போகணும்?? தையல் மிஷினையும், புத்தகங்களையும் மட்டும் கையோடு எடுத்துண்டு போயிடலாமா?? யோசனை, யோசனை, யோசனை. அம்மா அதை எல்லாம் இப்போ தூக்கிண்டு போக முடியாது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சா தனிக்குடித்தனம் வைச்சா அப்போ நாங்க தூக்கிண்டு வந்து உன் கிட்டேயே கொடுப்போம். எங்கேயும் போகாது உன் சாமான்கள் எல்லாம் என்றாள். என் கணவர் கல்யாணம் முடிஞ்சதும் ஒரு வாரத்திலே புனா கிளம்புவதால் என்னையும் அழைத்துப் போகப் போகிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனால் நல்ல நாளும் குடித்தனம் வைக்கனு பார்த்துக்கொண்டிருந்தாங்க. அடக்கடவுளே!இப்போ என்ன பண்ணறது?? வெளியே போன அப்பா திரும்ப வந்து கிளம்ப நேரமாச்சு, இன்னுமா கிளம்பலை என அவசரப்படுத்த என்னோட கவலையை அம்மா சொல்ல, அப்பாவுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வர எனக்கு இனம் புரியா அழுகை வந்தது. சும்மாவே தம்பிக்கும் எனக்கும் இந்தப் புத்தக விஷயத்தில் சண்டை வரும். இப்போ எல்லாத்தையும் அவன் எடுத்துக் கொண்டு விடுவானோ? கஷ்டப் பட்டு சேர்த்தது. பைண்டிங் செய்து கொண்டு வரது தம்பிதான். ஆனாலும்........ எப்போ வேணாலும் எடுத்துப் படிக்க முடியாதே. அழ ஆரம்பித்தேன்.

என் புத்தகங்களை விட்டுட்டுப் போகமாட்டேன். 
















Geetha Sambasivam

unread,
May 10, 2011, 4:14:20 AM5/10/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
ஹும், என்னோட அப்பா கிட்டே எல்லாம் என்ன பிடிவாதம் பிடிச்சாலும் நடக்காது. புத்தகங்களை எடுத்துச் செல்ல அப்பாவின் அநுமதி கிடைக்கவில்லை. (திவா, சந்தோஷமா இருக்குமே) புடைவையோ, நகையோ எத்தனை வேண்டுமானாலும் வாங்குவார். செலவு பண்ணமாட்டார்னு இல்லை. ஆனால் அவரோட எண்ணமே பெண்கள் என்றாலே புடைவை, நகை, பாத்திரம், பண்டங்கள் என்று தான் ஆசைப்படுவார்கள், படணும் என்று. அப்போப் பல பெண்களும் இப்படி ஒரு ஆசைக்கு அடிமையாகத் தான் இருந்தார்கள் என்பதும் உண்மையே. நாங்க குடி இருந்த வீட்டிலே கூடவே குடித்தனம் இருந்த மாமி எல்லாம் மாசம் ஒரு புதுப்புடைவையாவது வாங்குவாங்க. இல்லைனா வீட்டில் ரகளை நடக்கும், பார்த்திருக்கேன். ஹிஹி, நாம தான் அநியாயத்துக்கு விசித்திரப் பிறவியாய்ப்போயிட்டோமா! தீபாவளிப் பட்டாசில் இருந்து அண்ணா, தம்பியோட போட்டி போடுவோமில்ல! அதே போல் படிப்பிலும் போட்டிதான். ஆனால் எனக்குப் புத்தகங்கள் கிடைக்காது. மகளே உன் சமர்த்து! எப்படிப் புத்தகம் வாங்கிப்பியோ, எப்படிப் படிப்பியோ உன் பாடுனுடுவார் அப்பா. புத்தகங்கள் வாங்கித் தந்ததே இல்லைனு தான் சொல்லணும், பெரியப்பா வீட்டிலும், மாமா வீட்டிலும் உதவுவாங்க. என்றாலும் அக்கவுண்டன்சி புத்தகம் யாரிடமும் இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கேன். அப்பா படிச்சது சுப்ரமணிய ஐயர் என்பவர் போட்ட அக்கவுண்டன்சி புத்தகம். அதைத் தேடி எடுத்துக்கொடுத்துட்டு இதுவே ஜாஸ்தினு சொல்லிட்டார் அப்பா. அப்புறமா அப்பாவின் நண்பர் ஒருத்தர் தன்னுடைய பாட்லிபாய் புத்தகத்தைக் கொடுத்து உதவினார். படிச்சுட்டுத் திருப்பிக் கொடுக்கணும்னு நிபந்தனையோட. இப்போ நான் படிக்கிறதே நின்னு போச்சே! இன்னும் அழுகை வந்தது. பாட்லிபாய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போக முடியாது. இன்னொருத்தரோடது. அதோட அங்கே போய்ப் படிக்க முடியாதே. அழுகையுடன் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அப்பா ஒரு சத்தம் போட்டார். “அங்கே போய் மாமியார், மாமனாருக்கு ஒத்தாசையா இருக்காமப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போய்ப் படிச்சுண்டா உட்காரப் போறே? இங்கே மாதிரி புத்தகமும் கையுமா அங்கே எல்லாம் இருக்க முடியாது. அதை நினைவில் வச்சுக்கோ!” என ஒரு அதட்டுப் போட்டார். அம்மா சமாதானத்துக்கு வந்து, “உன்னோட அலமாரியிலேயே வச்சுட்டுப் பூட்டிடு, நாங்க யாரும் எடுக்க மாட்டோம். நீ அப்புறமா வரும்போது, போகும்போதுகொஞ்சம் கொஞ்சமா எடுத்துக்கொண்டு போகலாம்.” என்று சொல்ல அரை மனசாப் புத்தகங்களை விட்டுவிட்டு, என்னோட எம்ப்ராய்டரி நோட்டுப் புத்தகம், ஆட்டோகிராஃப் நோட்டுப் புத்தகம்னு எல்லாத்தையும் எடுத்து வைச்சேன். ஆட்டோகிராஃபிலே டிடிகேயிடம் கையெழுத்துவாங்கியதில் இருந்து பல முக்கியமானவங்க கிட்டே வாங்கின கையெழுத்தெல்லாம் இருந்தது.

ஒரு மாதிரியா பாக்கிங் முடிச்சுட்டு ரிக்க்ஷா வந்ததும் அம்மா சாமி படத்துக்கு எதிரே உட்கார வைச்சு விபூதி, குங்குமம் இட்டுவிட்டு, வேப்பிலை சொருகி, வாசலில் சூரைத் தேங்காய் விட்டுவிட்டுத் தம்பியோட என்னை அனுப்பி வைச்சாங்க. மாமா வீட்டுக்கு வந்தாச்சு. மறுநாள் காலையிலே பந்தக்கால் முஹூர்த்தம். அப்பா, அம்மா காலையிலே வருவாங்க. அன்று மாலை வழக்கம் போல் குளிக்கப் போனேன். கல்யாணத்திற்கு என நகைகள் போட்டிருந்தேன். காதிலே தோடு வேறே புதுசா கனம், தாங்கலை. எல்லாத்தையும் கழட்டி விட்டு இருக்கணும் போல் ஒரு ஆசை. குளிக்கையில் நகைகளைக் கழட்டிட்டு அங்கேயே பாத்ரூமில் ஒரு பக்கமாய் சோப்புப் பெட்டியில் வைச்சேன். எப்போதுமே சோப்புப் பெட்டியைக் கையோடு எடுத்து வரது வழக்கம். குளிச்சுட்டும் கையோடு எடுத்துக்கொண்டு போவேன். அன்னிக்கு என்னமோ மறந்துட்டு வெளியே வந்துட்டேன். சுத்தமா நகைகள் நினைவே இல்லை. வெளியே வந்து மாமாக்களோட சிரிப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். எங்க அப்பா இல்லைனாத் தான் எங்க வீட்டிலே நாங்க எல்லாம் குதியாட்டம் போடுவோம். அப்பாவுக்கு பயம். ஆனால் இங்கே மாமா வீட்டில் கொஞ்சம் கூட பயமோ, வெட்கமோ, தயக்கமோ இருக்காது. ஒரே சிரிப்பும், விளையாட்டுமாய்த் தான் இருப்போம். அதுவும் எல்லாருக்கும் பள்ளி விடுமுறை. கல்யாணத்துக்கு என என் சித்தி குழந்தைகள் எல்லாரும் வந்திருந்தாங்க. மாமா வீட்டில் தாத்தா, பாட்டி, மூன்று மாமாக்கள், மாமிகள், குழந்தைகள் எனக் கூட்டுக் குடும்பமாய்த் தான் இருந்தாங்க. அதனால் அவங்க வேறே. எல்லாருமாய் விளையாடினோம். ட்ரேட் விளையாட்டு, சீட்டுக்கட்டில் செட் சேர்க்கிறது, ஆஸ் விளையாட்டு, பரமபத சோபானம் என எல்லாரும் தனித்தனியாகவும், குழுவாகவும் விளையாடுவோம்.

கடைசி மாமாவும் என் பெரியம்மா பிள்ளை(அண்ணா)யுமாகக் காரம் போர்ட் விளையாடினாங்க. மாமா வேணும்னே சீண்டுவார். அப்படி ஒருமுறை சீண்டும்போது காரம்போர்டின் காய்களை என் முகத்திலே வந்து விழ வைச்சார். வேணும்னு தான் பண்ணினார் என்பது புரிந்தது. கோபத்தோடு கையாலே அதை எடுக்கும்போது தான் கவனித்தேன், கைகளில் ஏதோ வெறுமை. ம்ம்ம்ம்?? என்ன ஆச்சு?? கல்யாணத்துக்கு எனப் போட்டுக்கொண்ட கண்ணாடி வளையல்கள் தங்க நிறம் கொண்டவை. அவை இருந்தன. ஆனால் தங்க வளையல்கள்?? அவசரம் அவசரமாய் இரண்டு கைகளையும் பார்த்தால் வளையல்களே இல்லை. என்னையும் அறியாமல் கழுத்தைத் தடவிப் பார்த்தேன். கழுத்திலும் எவையும் இல்லை. காது?? நல்லவேளை, வைரத்தோடு! கழட்டவில்லை. இருக்கு. மூக்கு?? ம்ம்ம்ம் மூக்குத்தியும் இருக்கு. அப்போ வளையல்கள், சங்கிலி, நெக்லஸ் போன்றவைதான் காணோமா? எங்கே வைச்சேன்?? ஆஹா, குளிக்கப் போனப்போக் கழட்டினோமே. சட்டுனு குளியலறைக்குப் போய்ப் பார்த்தேன். அங்கே என்னோட சோப்புப் பெட்டி மட்டுமே வைச்ச இடத்தில் இருந்தது. எனக்கப்புறம் யாரு குளிக்கப் போனாங்க?? ஒவ்வொருத்தரா விசாரிச்சேன். யாருமே நாங்க பார்க்கவே இல்லைனுட்டாங்க. அதிர்ச்சி அடைந்தேன். அப்பாவுக்கு என்ன பதில் சொல்றது?? 








meena muthu

unread,
May 10, 2011, 6:31:23 AM5/10/11
to thamiz...@googlegroups.com
யப்பா...!! ஸஸ்பென்ஸ் தாங்கலைம்மா... :))))

2011/5/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

LK

unread,
May 10, 2011, 6:33:07 AM5/10/11
to thamiz...@googlegroups.com
சீக்கிரம் அடுத்த பாகம் வரட்டும் 

2011/5/10 meena muthu <ranga...@gmail.com>
யப்பா...!! ஸஸ்பென்ஸ் தாங்கலைம்மா... :))))


2011/5/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>
கல்யாணமாம், கல்யாணம், தொடர்ச்சி

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Geetha Sambasivam

unread,
May 10, 2011, 6:39:22 AM5/10/11
to thamiz...@googlegroups.com


2011/5/10 meena muthu <ranga...@gmail.com>
யப்பா...!! ஸஸ்பென்ஸ் தாங்கலைம்மா... :))))


2011/5/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>
கல்யாணமாம், கல்யாணம், தொடர்ச்சி

329.gif
360.gif

Geetha Sambasivam

unread,
May 10, 2011, 6:39:53 AM5/10/11
to thamiz...@googlegroups.com


2011/5/10 LK <karthik.lv@gmail.com>
சீக்கிரம் அடுத்த பாகம் வரட்டும் 






--



 

--
329.gif

Innamburan Innamburan

unread,
May 10, 2011, 7:20:39 AM5/10/11
to thamiz...@googlegroups.com

  1. என் கணவர் தான் மூத்தவர் என்பதால் குடும்பத்திற்கே முதல் மருமகள்.’


=> பெரிய மன்னினா, பெரிய மன்னி தான், வஸந்தா மாதிரி. என் அப்பாவுக்கு அவள் தான் மந்திரி.


  1. ‘டிவிஎஸ் நகருக்கு நடந்தே பலமுறை போயிருக்கேன்.’


=> இந்த மாமியை தெரியுமோ? (attached)


3.‘ஆட்டோகிராஃபிலே டிடிகேயிடம் கையெழுத்துவாங்கியதில் இருந்து பல முக்கியமானவங்க கிட்டே வாங்கின கையெழுத்தெல்லாம் இருந்தது. ‘


=> இதை படிச்சுட்டு, எனக்கு அழுகையே வந்தது. லூயி ஃபிஷர், ஸர் ஐவர் ஜென்னிங்ஸ், டீ டீகே எல்லார்ட்ட வாங்கின என்னொட ஆட்டோகிராஃப் புக்கை, என் கல்யாணத்தின் போது நான் பிராக் பார்த்துக்கொண்ட்இருக்கும்போது, என் அத்தான்  (காலிப்பயல்) லவிட்டிட்டான்.


  1. ஆமாம்! கிர்க்கியில் வேலை பார்த்த எஸ்.ஆர்.ஸ்வாமியை தெரியுமோ?


இன்னம்பூரான்

10 05 2011 
Pattu.jpg

Geetha Sambasivam

unread,
May 10, 2011, 8:34:27 AM5/10/11
to thamiz...@googlegroups.com
அட?? பார்த்தாப்போல் தான் இருக்கு! ம்ம்ம்ம்ம்ம்???? (அசோகமித்திரன்) சித்தப்பாவின் அக்கா பெயரும் பட்டு தான்,, அவங்களும் இப்படித் தான் இருப்பாங்க.


சார், நான் லூயி ஃபிஷரை, ஸர் ஐவர் ஜென்னிங்ஸை  எல்லாம் பார்த்தது கூடக் கிடையாது.  டிடிகே கூடப் பேசி இருக்கேன். :))))))

ஆமாம்! கிர்க்கியில் வேலை பார்த்த எஸ்.ஆர்.ஸ்வாமியை தெரியுமோ?//

ம்ஹும் தெரியாதே!


2011/5/10 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
360.gif

sk natarajan

unread,
May 10, 2011, 8:31:03 PM5/10/11
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com
திக் திக் ........... என மனம் பதறும் படி நிறுத்தி இருக்கீங்க .......
பெண்ணாய் பிறந்தால் எவ்வளவு கஷ்டம்  இல்லை
ம்ம்ம்ம்ம்ம்ம் ..............
கலக்கறீங்க ............அப்படி இப்படி நகர விடாமல் உங்கள் எழுத்தால் கட்டிப் போட்டுள்ளீர்கள்
நன்றி கீதாம்மா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  http://tamizhswasam.blogspot.com/
குழுமம்    :   http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/5/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 11, 2011, 3:50:42 AM5/11/11
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com
அதெல்லாம் கஷ்டம் ஒண்ணும் இல்லை சா.கி.நடராஜன் அவர்களே, பெண்ணாய்ப் பிறந்ததுக்கு நான் பலமுறை பெருமைப் பட்டிருக்கேன்.  இன்னொரு ஜன்மம் எடுத்தாலும் பெண்ணாகவே பிறக்கவும் ஆசை! நன்றி உங்கள் பாராட்டுக்கு.

2011/5/11 sk natarajan <sknatar...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 11, 2011, 4:07:42 AM5/11/11
to thamiz...@googlegroups.com
'பெண்ணாய் பிறக்கலாகாதா?' என்ற கட்டுரையை மட்டுறுத்தலில் வைத்திருக்கிறேன். தக்கதொரு தருணம் வந்தால்................!'


2011/5/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 11, 2011, 4:11:47 AM5/11/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com

கல்யாணமாம், கல்யாணம் - தொடர்ச்சி!

நான் குளிச்சுட்டு வரச்சேயே கழுத்திலே நகைகள் இல்லைனு என்னோட பாட்டி பார்த்திருக்காங்க. அம்மாவோட அம்மா. ஹிஹிஹி, என் கல்யாணத்தின் போது அவங்களுக்கு 62 வயசுக்குள்ளேதான். என் அம்மாவுக்கு 40 ஆகலை. அப்பாவுக்கு 50 ஆகலை. )))) இப்போல்லாம் 60 வயசுக்குத் தான் முதல் பேரனோ, பேத்தியோ! அதுங்க கூட ஓடியாட முடியாமத் தவிக்கற தாத்தா, பாட்டிகள். இதை எல்லாம் யோசிச்சுத்தான் அந்தக் காலங்களிலே அப்படிப் பண்ணினாங்களோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மெயின் சப்ஜெக்டை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேனே. ஹிஹிஹி, இந்த அரசியலில் புகுந்தால் அப்புறமா நாட்டுமக்களைக் கவனிக்கணுமேனு கவலைதான் முன்னுக்கு வருது! கொஞ்ச நேரம் அரசியலை ஒதுக்கி வச்சுடலாம். பாட்டி பார்த்துட்டு என்னைக் கேட்கணும்னு இருக்கிறதுக்குள்ளே எனக்கு அடுத்துக் குளிக்கப் போன என் பெரியம்மா பெண் நகைகளைப்பார்த்துட்டா. இப்போவும் இங்கே அம்பத்தூரிலே தான் இருக்கா அவளும்! அவ அதை எடுத்துட்டு வந்து என்கிட்டே கொடுக்க வரச்சே கடைசி மாமா பார்த்துட்டு அதை வாங்கி ஒளிச்சு வைச்சுட்டார். பாட்டியையும், என்னோட அக்கா(பெரியம்மா பெண்)வையும் வாயைத் திறக்கக் கூடாது, அவளா கவனிக்கிறாளா பார்ப்போம்னு சொல்லி இருந்திருக்கார். ஹிஹிஹி, என்னோட கல்யாணம்னு நினைப்பு இல்லைனா கவனிச்சிருப்பேனா? சந்தேகமே. ஆனால் வெளி வீட்டுக்கல்யாணங்களுக்கு எல்லாம் நகைகள் போட்டுட்டுப் போறதில்லை என்பதால் அந்த எண்ணமே வந்திருக்காது.  கடைசியில் எப்படியோ கண்டு பிடிச்சுட்டுக் கவலையாப் போச்சு. பாட்டிட்ட கேட்கும்போது பாட்டி என்கிட்டே, “அப்படி என்ன மறதி? இன்னும் இரண்டு நாளில் கல்யாணமாகிப் புக்ககம் போகப் போறே! கழுத்திலிருந்து நகையைக் கழட்டினாக் கையோடு பெட்டியில் வைச்சுப் பூட்டணும்னு நினைவு வராதா? தோணாதா? போய் உன் மாமாவைக் கேள்!” னு சொல்லிட்டாங்க.

மாமா முதலில் ஒத்துக்கவே இல்லை. தெரியவே தெரியாதுனு சாதிச்சுட்டார். அப்புறமா ராத்திரி சாப்பாடும் வேண்டாம்னு நான் ரொம்பவே வருத்தமா இருக்கிறதைப் பார்த்துட்டு, ஸ்வாமி அறைக்குப் போய் 108 தோப்புக்கரணம் போடச் சொன்னார். போட்டேன். (யாரானும் சிரிச்சா பார்த்துக்குங்க!) அதுக்கப்புறமா கடுமையான கண்டிப்புடனும், நிபந்தனைகளுடனும் நகைகளை மாமா கொடுத்தார். ஆனால் என்னோட தாத்தா மட்டும் இருந்திருந்தா என்னை இப்படியெல்லாம் அழ விட்டிருக்க மாட்டார். குழந்தையை ஏன்ப்பா தொந்திரவு செய்யறீங்கனு மாமாக்களைக் கண்டிச்சிருப்பார். நான் ரொம்பவே செல்லம் தாத்தாவுக்கு. மறுநாள் அதிகாலையிலேயே பந்தக் கால்முஹூர்த்தம் நடந்து முடிந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை நல்ல நாளாய் இருந்ததால் அன்று சுமங்கலிப் பிரார்த்தனை, அதற்கடுத்த சனிக்கிழமை வெங்கடாசலபதி சமாராதனை. ஆகையால் அன்று மாலையே என்னைப் பெரியப்பா வீட்டில் கொண்டுவிடும்படி சொல்லிட்டு அப்பா போயிட்டார். நகை விஷயம் அப்படியே மூடி மறைக்கப் பட்டது. அப்பாவிடம் யாரும் மூச்சுக் காட்டவில்லை. அம்மாவுக்கு மட்டும் தெரியும். இதற்குள்ளாக ஹோசூரிலிருந்து என்னோட அண்ணா என் கல்யாணத்துக்காக லீவு எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். அண்ணா அங்கே இருந்தப்போ நாங்களும் அடிக்கடி ஹோசூர் போவோம். எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர்களிலே ஹோசூரும் ஒண்ணு. அங்கிருந்த மலைக்கோயிலுக்கு சாயந்திரம் மூணு மணிக்கு மெதுவா ஏற ஆரம்பிச்சு மேலே போய் தரிசனம் பண்ணிண்டுக் கீழே இறங்கி வரச்சே ஏழு மணிஆகும். ஆனாலும் அலுப்பே தெரியாது. அண்ணாவையும் பார்க்கணும், எனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கார்னு பார்க்கணும்னு ஆசை. ஆனால் எங்க வீட்டுக்கு இப்போ வரவேண்டாம், நல்ல நாள், நல்ல வேளை பார்த்துப் போயாச்சு, இனிமேலே திரும்பி வரச்சே கல்யாணம் முடிஞ்சு பால், பழம் சாப்பிடத் தான் வரணும்னு அப்பா சொல்லிட்டார். கொஞ்சம் ஏமாற்றம் தான்! 

மறுநாள் பெரியப்பா வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை முடிந்தது. அன்று மாலையே எல்லாருக்கும் புடைவை வைச்சுக் கொடுக்க எல்லாருமே புதுசு கட்டிக்கொண்டோம். அதற்கடுத்த மறுநாள் சமாராதனை. முன்பெல்லாம் சமையலுக்கு நேரம் ஆச்சுனா என்ன சமாராதனைக்கா சமைக்கிறே எனக் கேலி செய்வாங்க. உண்மையில் அப்போல்லாம் சமாராதனை என்றால் அவ்வளவு விமரிசையாக நடக்கும். எங்க தெருவே அன்னிக்கு எங்க வீட்டில் சமாராதனையில் கலந்து கொள்வதோடு எல்லாருக்குமே சாப்பாடும் இருக்கும். சமைக்கிறதுக்கு வெளி ஆட்கள் எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் நபர்கள் தான். வீட்டுக்கார மாமி ஒரு வேலையை எடுத்துப்பாங்க. என்னோட அம்மா, பெரியம்மாக்கள் சமையலில் ஈடுபடுவாங்க. பெரிய பெரிய வெண்கலப் பானையில் சர்க்கரைப் பொங்கல், சாதம் வடிச்சு, ஈயம் பூசிய அண்டாக்களில் ரசம், சாம்பார், மோர்க்குழம்பு, வடை எனத் தயாராகும். குறைந்த பட்சமாக புரட்டாசி மாச சமாராதனைக்கே நூறு பேர் சாப்பிடுவாங்க. இது கல்யாண சமாராதனை. கேட்க வேண்டுமா? அதிலும் எங்க அப்பா வீட்டில் பெரியப்பா பெண்களுக்குக் கல்யாணம் ஆகி இருந்தாலும் அப்பா தலை எடுத்துச் செய்யும் முதல் கல்யாணம். அம்மா வீட்டிலோ அம்மாவின் அக்கா பெண்ணுக்குக் கல்யாணம் இன்னும் நிச்சயம் ஆகவில்லை. ஆகவே திருமணம் நடக்கப் போகும் முதல் பேத்தி நான் தான். மாமாக்களில் முதல் மாமாவுக்குத் தான் பெண். அவள் என்னைவிட நாலைந்து வயசு சின்னவள்.

அதனால் கூட்டம் சமாராதனையிலேயே கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது புரிய வந்தது. சுற்றம், சூழ என்பது அந்தக் காலங்களில் நிஜமாகவே பின்பற்றப்பட்டதோடுவருபவர்கள் உதவியாகவும் இருப்பார்கள். சமாராதனை முடிந்து நாங்க திரும்ப ராத்திரி ஆச்சு. கிட்டத்தட்ட ஒன்பது மணிக்கும் மேல் எல்லாரும் படுத்துக்கொண்டிருந்தோம். அப்போ வெளியே கல்யாணப்பந்தல் அலங்காரங்களைக் கவனித்துக்கொண்டிருந்த என்னுடைய மூணாவது மாமாவும், கடைசி மாமாவும் உள்ளே வந்து பாட்டியை எழுப்பினார்கள். அம்மா, அப்பா மறுநாள் காலை தான் வரப்போறாங்க. ஞாயிற்றுக்கிழமை தான் நாந்தி, விரதம் எல்லாம். அதனால் விடிகாலையில் கிளம்பி வருவாங்க. பாட்டியை எழுப்பின மாமாக்கள் , “அம்மா, சம்பந்தி வீட்டிலே எல்லாரும் வந்துட்டாங்க. அதிலும் மாப்பிள்ளையும், அவங்க அம்மா, அப்பாவும் வந்துட்டாங்க. “ என அறிவித்தனர். பாட்டிக்கு ஒரு நிமிஷம் புரியவே இல்லை. சனிக்கிழமை இரவு வண்டியில் கிளம்பி ஞாயிறு காலை மதுரையை வந்தடையும் வண்டியில் அல்லவோ வரதாகச் சொன்னார்கள்? இப்போ எந்த ரயில் வந்தது?? ரயிலில் வரலையாம். பஸ்ஸிலே வந்திருக்காங்க. மிச்சம் பேரும் அடுத்தடுத்த பஸ்ஸில் வந்துட்டு இருக்காங்களாம்.” கடைசிமாமாவின் நியூஸ். மாப்பிள்ளை வீட்டார் தங்க மாமா வீட்டுக்குப் பக்கத்து வீடு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அந்த வீட்டு மனுஷங்க கதவைப் பூட்டிக்கொண்டு தூங்கிட்டாங்களே. காலையிலே ஒழிச்சுத் தரேனு சொல்லி இருந்தாங்களே! இப்போ அவங்களை எப்படி எழுப்பறது?



Innamburan Innamburan

unread,
May 11, 2011, 4:22:59 AM5/11/11
to thamiz...@googlegroups.com

ஒகடி: 'அதை எல்லாம் யோசிச்சுத்தான் அந்தக் காலங்களிலே அப்படிப் பண்ணினாங்களோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :

=> அதா அன்று. மற்றும் சில நுட்பங்கள்.

இரண்டு:'..மெயின் சப்ஜெக்டை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேனே. ..'

=> அதான் வண்டியை திருப்பிவிட்டேன்.

மூடு: ஹோசூர் கால்நடை பண்ணையின் நிலபரப்பு இங்கிலாந்தின் சமவெளிகளைப்போல. சீதோஷ்ணமும் கிட்டத்தட்ட, அப்படி. அங்கே தங்க்யிருந்த ஒரு மாதம் விடுமுறை போல், பிறகு கிடைக்கவில்லை.

இன்னம்பூரான்
11 05 2011

Tirumurti Vasudevan

unread,
May 11, 2011, 4:29:27 AM5/11/11
to thamiz...@googlegroups.com
அட! எங்கப்பா அங்கேதான் பட்டுப்பண்ணையில் வேலை பார்த்தார்!

2011/5/11 Innamburan Innamburan <innam...@gmail.com>

மூடு: ஹோசூர் கால்நடை பண்ணையின் நிலபரப்பு இங்கிலாந்தின் சமவெளிகளைப்போல. சீதோஷ்ணமும் கிட்டத்தட்ட, அப்படி. அங்கே தங்க்யிருந்த ஒரு மாதம் விடுமுறை போல், பிறகு கிடைக்கவில்லை.

Geetha Sambasivam

unread,
May 11, 2011, 4:43:48 AM5/11/11
to thamiz...@googlegroups.com
ஹோசூரிலே தான் என் அண்ணாவுக்கு முதல் அப்பாயிண்ட்மெண்ட், அங்கே நாங்க இருந்திருக்கோம், என் கல்யாணத்துக்கு அண்ணா அங்கிருந்துதான் மதுரை வந்தார். மலைக்கோயில் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கால்நடைப்பண்ணையும் பார்த்திருக்கேன்.

2011/5/11 Innamburan Innamburan <innam...@gmail.com>

--

sk natarajan

unread,
May 11, 2011, 5:45:35 AM5/11/11
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com
ம்ம்ம்ம்ம்ம்  .............உங்களைப் போல ஒரு ட்விஸ்ட் கொடுத்து நிறுத்த யாராலையும் முடியாது
எனக்கு பிறந்த வீட்டைப் பிரிந்து புதிய இடத்திற்கு (புகுந்த இடம் )செல்லப் போகும்  முன்னிரு நாட்களில்
மணப் பெண்ணின்  மன  நிலையை அறிய ஆசை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  http://tamizhswasam.blogspot.com/
குழுமம்    :   http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/5/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 11, 2011, 7:14:58 AM5/11/11
to thamiz...@googlegroups.com
திரு.நடராஜன்,

எதற்கும் சகுந்தலையிடம் ஒரு வார்த்தை கேட்டு பாருங்களேன்.

Geetha Sambasivam

unread,
May 12, 2011, 9:13:05 AM5/12/11
to thamiz...@googlegroups.com, tamizhs...@googlegroups.com

கல்யாணமாம் கல்யாணம், தொடர்ச்சி!

மாப்பிள்ளை வீட்டில் எல்லாரும் காலையிலே வருவாங்க. குறைஞ்ச பக்ஷமாய் 200 பேர் வருவோம்னு சொல்லி இருக்காங்க. அதனால் வண்டி வேண்டும் என அப்பா, சம்பந்திகளுக்கும் அவங்க குடும்பத்துக்கும் இரண்டு காரும், மத்தவங்களுக்கு இரண்டு வானும் ஏற்பாடு பண்ணி இருந்தார். என்னோட சொந்த அண்ணாவும், பெரியப்பா வழி அண்ணாவும், பெரியம்மாவோடு போய் அழைத்துவரணும்னு ஏற்பாடு. ஆனால் அவங்க எல்லாம் டவுனிலே இருக்காங்க. அதுக்குள்ளே இங்கே இவங்க வந்தாச்சு. காலையிலே வரேன்னு சொன்னவங்க திடீர்னு இப்போ வரப் போறது யாருக்குத் தெரியும்?? மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்திக் கொட்டி உள்ளே அழைக்கணும். அதோட ஏற்பாடு பண்ணி இருக்கிற வீட்டிலே இருக்கிறவங்களை வேறே எழுப்பித் தொந்திரவு செய்யணும். வீட்டைக் காலையிலே தான் ஒழிச்சுக் கொடுக்கிறேன்னு சொல்லி இருந்தாங்க. என்னோட பாட்டி மாமிகளை எழுப்பி அவங்களை வரவேற்கச் சொல்லிட்டு, பக்கத்து வீட்டிலேயும் ஆளை அனுப்பி எழுப்பச் சொன்னாங்க. மாமிகள்போய் ஆரத்தி எடுத்து வரவேற்றுப் பக்கத்து வீட்டிலே கொண்டு விட்டுட்டு, சாப்பாடு பத்தி விசாரிச்சாங்க. எல்லாரும் சாப்பிட்டு வந்தோம்னு சொல்லவே, அவங்க படுக்க ஏற்பாடு பண்ணிக் கொடுத்துட்டு வந்தாங்க. இந்த அமர்க்களத்தோட சமையல்காரங்க குழுவும் வந்து சேரவே அவங்களுக்கு வேண்டிய சாமான் எடுத்துக்கொடுத்துட்டு மாமி, பாட்டி எல்லாம் அதிலே பிசி ஆனாங்க. மறுநாள் தயாராக வந்த வண்டிகளை அவங்க வீட்டுக்கு வந்ததுக்கு மட்டும் ஆன தொகையைக் கொடுத்துத் திருப்பி அனுப்பவேண்டி வந்தது.

எல்லாரும் என்னைக் கேலி செய்தாங்க. மாப்பிள்ளைக்கு அவசரம் பாரு, உன்னைப் பார்க்கறதுக்குனு ஒரு நாள் முன்னாடி வந்துட்டாரேனு. காலம்பர விடிஞ்சது. அப்பாவுக்குச் செய்தி சொல்ல மாமா ஒருத்தர் சைகிளில் கிளம்பிப்போனார். யார் வீட்டிலேயும் தொலைபேசி கிடையாது அப்போ. மாமா அந்தப் பக்கம் போயிருப்பார், இந்தப்பக்கம் அப்பா வந்துட்டார். அப்பா முகமே சரியாய் இல்லை. என்னமோ ஏதோனு நினைச்சா, மாப்பிள்ளை வீட்டிலே இருந்து யாருமே வரலைனு சோகத்தோட சொன்னார். அதுக்குள்ளே அம்மாவும், மற்ற உறவினர்களும் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிக்க, மாப்பிள்ளையும் அவங்க அம்மா, அப்பாவும் முதல் நாளே வந்துவிட்ட செய்தி அப்பாவுக்குச் சொல்லப் படவே அப்பாவும், அம்மாவும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவங்க வீட்டின் மிச்ச உறவினர்களும் வர எங்க பக்கத்து உறவினர்களும் சேர்ந்து கொள்ள வீட்டில் இடம் போதவில்லை. அதுக்குள்ளே என்னோட பெரிய நாத்தனார் என்னைப் பார்க்கணும்னுஅங்கே வர அவங்க என்னைப் பார்த்துட்டு ஏதோ ஸ்கூல் போற பொண்ணு போலனு நினைச்சிருப்பாங்க போல. அப்புறமா நான் தான் கல்யாணப்பொண்ணுனு எல்லாரும் சத்தியமே செய்து கொடுத்ததோடு, அவங்க தம்பியையும் கேட்டுக்கச் சொன்னாங்க.

அதுக்குள்ளே எல்லாருக்கும் காபி வரவே, அங்கே இருந்தவங்களுக்கு ஒருத்தரும் மாப்பிள்ளை வீட்டிற்கு இன்னும் இரண்டு பேரும் காபியை எடுத்துச் செல்லக் கூடவே என் பெரியம்மாவும், பெரியப்பாவும் போனாங்க. அப்போல்லாம் மாப்பிள்ளை வீட்டில் வரும் நபர்கள், கல்யாண மாப்பிள்ளை உட்படக் கல்யாணம் நடக்கும் இடத்துக்கே வந்து சாப்பிடறது, காபி, டிபன் சாப்பிடறது எல்லாம் கிடையாது. அநேகமான திருமணங்கள் வீடுகளிலேயே நடைபெறும். வீடுகளும் திருமண விருந்தினர்களைத் தாங்கும் அளவிலேயே கட்டப் பட்டிருக்கும். அப்படி இல்லை என்றாலும் மதுரையில் ஒரு வசதி என்னவென்றால் அந்தக் காலகட்டங்களில் தெருவும், சரி, ப்ளாட்பார்ம் என்னும் நடைமேடையும் சரி சுத்தமாகவே இருந்தது. தினமும் சுகாதாரப் பணியாளர்கள் வந்து தெருவைச் சுத்தம் செய்வார்கள். வீட்டின் முன்னர் இருந்த நடைமேடைகளும் அந்த அந்த வீட்டுக்காரர்களால் சுத்தமாய்ப் பெருக்கப் பட்டுக் கோலங்களோடு காட்சி அளிக்கும். ஆகவே நடைமேடையில் அக்கம்பக்கத்து வீடுகளையும் சேர்த்துப் பந்தல் போட்டு, மணல் நிரவி, கொட்டகை அலங்காரம் செய்து கல்யாண மேடை கட்டித் திருமணங்கள் நடக்கும். இதற்கென அப்போதைய முனிசிபாலிட்டியின் அநுமதி ஒன்றுதான் தேவை. அதுவும் எந்தவிதமான இடையூறுகளும் இன்றிக்கிடைத்தன. அது ஒரு காலம்! ((( என் கல்யாணமும் மாமா வீட்டு வாசலில் அக்கம்பக்கம் மூன்று வீடுகளையும் சேர்த்துப் பந்தல் போட்டுத் தான் நடந்தது. :D எங்கேயோ போயிட்டேனே. மாப்பிள்ளை வீட்டில் சாப்பிட வரமாட்டாங்கனு சொன்னேன் இல்லையா?? அதனால் அவங்க தங்கும் இடத்திற்கே எல்லாமும் போகும். ஒருவேளை சத்திரங்களில் திருமணம் நடந்தாலும் அவங்களுக்கென ஒதுக்கி இருக்கும் அறைகளில் சாப்பாட்டுக் கூடமும் ஒன்று கட்டாயம் இருக்கும். அங்கே எல்லாவற்றையும் எடுத்துப் போய்ப் பரிமாறுவார்கள். தனிப்பட்ட சிறப்பான கவனிப்பு இருக்கும். சாப்பாடும், பரிமாறும் ஆட்களும் மட்டும் போனால் போதாது. கூடவே பெண் வீட்டில் பெரியவங்க யாரானும் இரண்டு பேரோ, நான்கு பேரோ போகவேண்டும். ஆகவே என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் காபி, டிபனோடு போனாங்க. அப்படியே கல்யாணத்துக்கு முதல் நாள் நடக்கும் விரதம்/நாந்தி போன்றவற்றிற்கு அவங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கவேண்டும். இப்போ இந்த விரதம்/நாந்தி பற்றிய ஒரு சின்ன அறிமுகம் பார்த்துட்டு மேலே தொடரலாமா??



இந்த நாந்தி என்பது குடும்பத்தின் முன்னோர்களுக்கான ஒரு சடங்கு. இதைக் கல்யாணங்களில் செய்வது நல்லது. முன்னோரின் ஆசிகளும், வாழ்த்துகளும் கிடைக்கும் என்பதோடு அவங்க அநுமதியையும் பெற்றுக்கொள்வதற்காக எனச் சொல்வது உண்டு. ஆனால் இதையும் திருநெல்வேலிக் காரங்க செய்யறதில்லை. அவங்களுக்குக் கல்யாணத்தில் நாந்தி செய்வது அச்சானியம் என்று சொல்வதுண்டு. தஞ்சை, மதுரை மாவட்டங்களில் இது கட்டாயமாய் இடம் பெறும். குடும்ப வழக்கத்தைப் பொறுத்து புரோகிதர்கள் வருவாங்க. ஒன்பது பேர் கட்டாயம்னு சில குடும்பங்களில் உண்டு. அன்னிக்குக் கல்யாணத்துக்கு வந்திருக்கும் விருந்தினர் அனைவருமே டிபன், காபி சாப்பிட பெண் வீட்டில் பெண்ணின் அம்மா, அப்பா, கல்யாணப் பெண், பிள்ளை வீட்டில் பிள்ளையின் அப்பா, அம்மா, கல்யாணப் பிள்ளை மட்டும் எதுவுமே சாப்பிடாமல் இவற்றை முடித்த பின்னரே சாப்பிட வேண்டும். அதுவும் ஒரு சிலர் வீடுகளில் இதற்கெனத் தனிச் சமையலும் உண்டு.

எங்க அப்பா, அம்மா, இங்கே மாமா வீட்டின் வாசல் பந்தலில் என்னையும் வைத்துக்கொண்டு விரதம் ஆரம்பிக்க மாப்பிள்ளை வீட்டில் அவங்க தங்கி இருக்கும் இடத்திலேயே விரதம், நாந்தி போன்றவற்றைச் செய்து கொள்வதாய்ச் சொல்லிட்டாங்க. தாலி கட்டும் முன்னர் பிள்ளையும் பெண்ணும், மணவறையில் ஒரே இடத்தில் அமரக் கூடாது என்பது அவங்க சொன்ன காரணம். இங்கே பந்தலுக்கு வந்தால் மணமேடையிலேயே அவங்க ஒரு பக்கமும், நாங்க இன்னொரு பக்கமும் உட்காரணும். அதைத் தவிர்க்க வேண்டி அப்படிச் சொன்னாங்க. அதோடு அன்று மாலை நடக்க இருக்கும் நிச்சயதார்த்ததிற்கும் பெண்ணுக்குத் தனியாகவும், மாப்பிள்ளைக்குத் தனியாகவுமே நடத்தவேண்டும் என்பதையும் வற்புறுத்திச் சொன்னார்கள். தஞ்சைப் பக்கங்களில் பெண்ணையும், பிள்ளையையும் ஒன்றாய் உட்கார்த்தி வைத்து நிச்சய தார்த்தம் செய்ய மாட்டாங்களாம். எங்களுக்கு அது வழக்கமில்லை என்றார்கள். சரினு அவங்க அங்கேயே விரதம் பண்ண ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. முதல் பிரச்னை கோலத்தில் ஆரம்பம். :))))))))))


Geetha Sambasivam

unread,
May 12, 2011, 9:13:53 AM5/12/11
to thamiz...@googlegroups.com
=> அதா அன்று. மற்றும் சில நுட்பங்கள்.//

சொல்லலாமே? தெரிஞ்சுக்கலாம்.

2011/5/11 Innamburan Innamburan <innam...@gmail.com>

--

Tirumurti Vasudevan

unread,
May 12, 2011, 9:49:16 AM5/12/11
to thamiz...@googlegroups.com
உங்க கல்யாண இன்விடேஷன் எங்கே??

2011/5/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கல்யாணமாம் கல்யாணம், தொடர்ச்சி!

Innamburan Innamburan

unread,
May 12, 2011, 9:55:10 AM5/12/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
இது ஒரு கல்யாணத்தின் நிஜக்கதை. பெண் பார்க்க வந்து விட்டு, அதற்கும் முந்திய காலத்தில் 'பார்த்தும், பேசியும், மணமுடிச்சும் போட்ட அதிகப்பிரசங்கி ராஜு வை போல் இல்லாமல், பேசாமடந்தனான பையர் ஒருவர், தனிமடல் அழைப்பிதழ் வைத்தும், கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாலேயே, முந்திரிக்கொட்டை மாதிரி குதித்து வருகை தர...இளசுலே பசங்களுக்கு கல்யாணம் செய்தால், பேத்தி துரத்தல் போன்ற விளையாட்டுக்கள் எளிது என்று ஒருவர் கூற=>ஒரு உரையாடல்:

மற்றொருவர்:  அதா அன்று. மற்றும் சில நுட்பங்கள்!

முதல்வர்: சொல்லலாமே? தெரிஞ்சுக்கலாம். 

 
தயங்கி, தயங்கி, இரண்டாமவர்: சொல்லலாம். ஆனப்பாருங்கோ! இந்தக்காலத்திலே, கலி முத்திடித்தோல்லியோ!  வழுக்கைத்தலை மாப்பிள்ளையாகவும் (இளவரசர் வில்லியம்.) நரை ஓடும் தலையுமாக பெண்ணும் ( காதரீன் தலையை பார்க்கவிடவில்லை!) வந்து நிக்கறா. தமிழ்த்தேனி சொல்றமாதிரி அப்பன்காரன் மடியெல்லாம் கனக்கறது! முதல் நாளே ரிஸெப்ஷனாம்! இரண்டும் சிரிச்சு, சிரிச்சு பேசிக்கிறதுகள். அந்தக்காலத்துலே, பொண்ணு என்ன, பையரே வெட்கப்படுவார்! அதோட, அறியாப்பருவமும், அறியும் ஆர்வமும் கூடினால், கை மட்டுமா கூடறது? கையோட கையா, பெரிய நாத்தனார் கேட்டாளாம்! (கற்பனை) 'வளைகாப்புக்கு, உங்க அப்பா, கெம்பு வளை போடுவாரோ?ந்னு.

இன்னம்பூரான்
12 05 2011

Geetha Sambasivam

unread,
May 12, 2011, 11:06:18 AM5/12/11
to thamiz...@googlegroups.com
என்னோட வளைகாப்புக் கெம்பு வளை வச்சிருக்கேன் மாட்டுப்பெண்ணுக்காக!

2011/5/12 Innamburan Innamburan <innam...@gmail.com>
360.gif

Geetha Sambasivam

unread,
May 12, 2011, 11:06:58 AM5/12/11
to thamiz...@googlegroups.com
ஹை, அதிலிருந்து வருஷம் தெரிஞ்சுக்கலாம்னா?? காட்ட மாட்டேனே! இத்தனை க்ளூ கொடுத்திருக்கேன், கண்டு பிடிங்க! சொல்லப் போறதில்லையே!

2011/5/12 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
--
329.gif
333.gif

Innamburan Innamburan

unread,
May 12, 2011, 11:35:18 AM5/12/11
to thamiz...@googlegroups.com
என்னே ஆரூடம்! கண்டு கொண்டேனே கெம்பு வளையை. வருஷம் கண்டுபிடிப்பதை ஷைலஜாவுக்கு விட்டு வைத்திருக்கிறேன்.


2011/5/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>
329.gif
333.gif
B68.gif

Jeevaa KS

unread,
May 12, 2011, 11:37:44 AM5/12/11
to thamiz...@googlegroups.com
1948 வது வருஷமா ? ( ஒரு அஞ்சு முன்ன பின்ன இருந்தாலும் பரவால்ல... கொஞ்சம் மார்க்கு பாத்து போட்டுக் குடுங்க )
*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2011/5/12 Innamburan Innamburan <innam...@gmail.com>
B68.gif
It is loading more messages.
0 new messages