"மாப்ள ! IPL ல புறக்கனிக்கப்போறேன் "
"ஏண்டா ?"
"இலங்கை வீரர்கள் விளயாடுராய்ங்கள்ல ?"
"இந்திய வீரர்களும் , தமிழ்நாட்டு வீரர்களும் கூடத்தான் விளையாடுறாங்க !"
"ஆமால்ல "
"ஆமாம்"
"அப்போ என்னடா பண்றது ?"
"என்னத்த என்னடா பண்றது ?"
"IPL ல "
"பாரு"
தப்பில்லையா ?
"அது என்ன சீன் படமா ? உனக்கு யாரு தப்புன்னு சொன்னது ?"
"அதான் CM சென்னையில இலங்கை வீரர்கள் விளையாடக்கூடாதுன்னு சொன்னாங்களே ?"
"அதான் விளயாடலையே ! அப்புறம் என்ன ?"
"ஏண்டா குழப்புற ? அப்போ IPL பாக்கலாமா ?"
"அது உன்னோட இஷ்டம் !"
"ஏண்டா இப்பிடி எதுராவே பேசுற ?"
"பாவி ! நா என்னடா எதிரா சொன்னேன் ?"
"இல்லடா நான் பாக்கப் போறதில்ல"
"ஏண்டா ?"
"இலங்கை நாய்கள் நம்மாளுகள கொடும படுத்துரானுங்க அதனால !"
"நீ பாக்கலேன்னா கொடும பண்ண மாட்டாங்களா ?"
"உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லடா"
"என்னைய ஏண்டா திட்டுற ?"
"பின்ன நான் எவ்வளவு உணர்ச்சிகரமா பேசிட்டு இருக்கேன் ஆனா நீ தட போட்டுகிட்டே இருக்கியே ?"
"சரிடா நீ IPL பாக்காத !"
(அடுத்த நாள் தொலைபேசியில் )
"என்னடா பண்ணிட்டு இருக்க ?"
"மேட்ச் பாத்துட்டு இருக்கேன் "
"பாக்கபோறதில்லேன்னு சொல்லிட்டு போன ?"
"ஆமாண்டா ! அப்புறம் நீ சொன்னத யோசிச்சு பாத்தேன் . நம்ம பாக்காதனால என்ன ஆகப்போகுது ? அதனால பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் ! நீயும் வாடா மேட்ச் பாக்கலாம் "
"இல்லடா ! நான் IPL பாக்கப் போறதில்ல , புறக்கணிக்கிறேன் !!"
**********************************************