--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
அது ஒடனேயேவா கூப்டுச்சு? ஆயிரம் ஆயிரம் வருஷம் போராடி பாத்து மிடிலன்னுதானே அப்பாலிக்கா கூப்டுச்சு? :-))
ஆக மொத்தத்துல நம்பிக்கை முக்கியம்னு படத்தை முடிச்சார் இந்த கதை சொன்ன பெரியவர்.
--
:)) பெரியவர் ஏதும் தப்பா சொல்லிட்டாரா ?
அச்சமயத்தில், மிகுதியான துன்பத்தில் இருந்த போதிலும் தன் பூர்வ ஜென்ம வாசனை காரணமாக, கஜேந்திரனுக்கு இறை பக்தியும் ஞானமும் பிறந்தன.இந்த ஞானம்தான் சரியான நேரத்துக்கு வராமல் போகிறது அதற்காகத்தான் அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன் என்கிறார் ஆழ்வார்
இல்லணே, அது அப்ரிசியேஷன்!போற போக்கில இன்னொரு கருத்து பாத்தீங்களா? பல பிரச்சினைகளும் கொஞ்சம் ஆறப்போட்டா தானே சரியாயிடும்!
ஆனாலும் போறப்போக்கிலே அண்ணேன்னு விளிச்சதுக்கு மாபெரும் கண்டனங்கள்.
பிரச்சினையே ஆறுபக்கம் ஆறப்போட்ட துணிய ஆரும் பாக்காம மிதிச்சுட்டுப் போனதால வந்தது தானே :)))ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டதால சரியாய்டுச்சுங்கறீங்களா ?
முதன் முதலா ட்ரங்க் கால் கண்டுபுடிச்சதே திருவாளர் கஜேந்திரன் தாங்கற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும் :)))
ஓ அப்பைடியா? மிஸ்ட் கால் கண்டு புடிச்சது ஆர்ணே?
மிஸ்டு கால்... மிஸ்டர் முதலை & கஜேந்திரனார் அண்ட் கோ தான். காலை எடுத்துட்டு இருந்தா... அது கஜேந்திரனுக்கு மிஸ்டு கால் தானே :)))
மறுக்கா மறுக்கா அண்ணே அண்ணேன்னு சொன்னா அவ்ளந்தான். மீ தி கோபமுலு... ஒச்சுலு... அழுதுலு...
காலை எடுத்துட்டு இருந்தா... அது கஜேந்திரனுக்கு மிஸ்டு கால் தானே :)))
வந்த காலை எடுக்கலை. அதனால் அது முதலைக்கு மிஸ்ட் கால்.
நிர்க்குண நிராகார பரம்பொருளை போற்றுவதான இந்தத் துதி,
--
எழுதணும்ன்னு நினைச்சு ஏனோ நடக்கவே இல்லை!
--
அதென்ன மீனமர் பொய்கை ? மீன் எங்கயாவது உக்காருமா ?
--
பொய் கையில உக்காரும்!
மீன் எங்கையும் உக்காந்தா மாதிரி தெரியல. அதேன் மீனமர் பொய்கைன்னு சொன்னார் ஆழ்வார் அதுக்கு எனக்கு விளக்கம் தெரிஞ்சாகனும்.
பா மாடும் என்ன செஞ்சது? 4 ந்னு போடலை?
மீனமர், கானமர் , தேனமர் இதுக்கு விளக்கம்
அதாவது, வண்டுகள் ரீங்காரம் (ஹ்ரீங்காரம்) செய்து கொண்டு தேனை மலர்களிலிருந்து எடுப்பதால், எச்சில் என்று அதனை விலக்காது, பூஜைக்கு ஏற்கிறோமாம்!.
சரிங்க்கா இன்னோரு கேள்விக்கும் பதில் சொல்லிட்டீங்கன்னா... ஐயாம்தி ஹாப்பி ஆகிடுவேன். அட்லீஸ்ட் ஏதோ இன்னைக்கு கத்துக்க முடிஞ்சுதுன்னு/
--
பகவானின் திருநாமத்தைச் சொல்வதால், செய்கிற செயல் புனிதமடைகிறது என்பதை விளக்க, இந்த உதாரணம் சொல்லிக் கேட்டிருக்கேன்.. அதாவது, வண்டுகள் ரீங்காரம் (ஹ்ரீங்காரம்) செய்து கொண்டு தேனை மலர்களிலிருந்து எடுப்பதால், எச்சில் என்று அதனை விலக்காது, பூஜைக்கு ஏற்கிறோமாம்!.
து³க்தாப்தௌ கு³ருதரபாரதோ நிமக்னே |
தே³வேஷு வ்யதி²ததமேஷு தத்ப்ரியைஷீ
ப்ராணைஷீ: கமட²தனும்ʼ கடோ²ரப்ருʼஷ்டா²ம் || ( ஸ்ரீமந் நாராயணீயம்).
செருமிகு வாளெ யிற்ற அரவொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை யொன்று நின்று முதுகிற் பரந்து சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை யன்ன தன் மை அடலாமை யான திருமால் நமக்கொ ரரணே.
செருமிகு வாளெ யிற்ற அரவொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை யொன்று நின்று முதுகிற் பரந்து சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை யன்ன தன் மை அடலாமை யான திருமால் நமக்கொ ரரணே.
அட???? என்னோட ம.ம.க்கே புரியுது, ஆசானுக்குப் புரியாமலா இருக்கும்?😂😂
திருமகள், தன் திருக்கரங்களில், சுயம்வர மாலையை எடுத்துக் கொண்டு, மெதுவான நடையில், பாதங்களில் சிலம்புகள் ஒலிக்க, வெட்கம் நிறைந்த திருமுகத்துடன், எம்பெருமானை நாடி, நடந்தாள்....
அனைத்து தேவர்களும் குணவான்களாக இருந்தாலும், அவர்களிடம், கோபம், காமம் முதலிய குற்றங்கள் முற்றிலும் நீங்கவில்லை!.. எனவே, எப்போதும், எல்லா நற்குணங்களுடனும் திகழும் பகவானிடத்தில், திருமகளின் திவ்யமான மாலை சமர்ப்பிக்கப்பட்டது!.. எம்பெருமான், தாயாரை ஏற்றுக் கொண்டான்!..
அனைத்துலகங்களுக்கும் தாயாக விளங்குபவளும், தன்னைத் தவிர, வேறிடத்தில் பற்றில்லாதவளுமாகிய ஸ்ரீதேவியை, தன் திருமார்பில் தாங்கிப் பெருமைப்படுத்தினான் எம்பெருமான்!...திருமாலின் திருமார்பில் பிரகாசித்த ஸ்ரீலக்ஷ்மி தேவியின் கடைக்கண் பார்வையால், உலகனைத்தும் செழிப்புடையதாயிற்று...
( உரஸா தரஸா மமா நிதை²னாம்ʼ
பு⁴வனானாம்ʼ ஜனனீமனன்யபா⁴வாம் |
த்வது³ரோவிலஸத்ததீ³க்ஷணஸ்ரீ
பரிவ்ருʼஷ்ட்யா பரிபுஷ்டமாஸ விஸ்²வம் || ( ஸ்ரீமந் நாராயணீயம்) ).
மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே. (நம்மாழ்வார்).
அண்ணல்செய் தலைகடல் கடைந்த்து அதனுள் கண்ணுதல் நஞ்சுணக்
கண்டவனே விண்ணவ ரமுதுண அமுதில்வரும் பெண்ணமு
துண்டவெம் பெருமானே ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக்
கருளுதியேல், வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே. (திருமங்கையாழ்வார்).
மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே. (
திரிவக்கரையின் கூனை நிமிர்த்தியதைச் சொல்லி இருப்பாங்க! பதில் வரப்போவதில்லை என்றாலும் சொல்லாமல் இருக்க முடியலை! :)
திரிவக்கரையின் கூனை நிமிர்த்தியதைச் சொல்லி இருப்பாங்க! பதில் வரப்போவதில்லை என்றாலும் சொல்லாமல் இருக்க முடியலை! :)
மிக்க நன்றி ஆசானே!.. ஆமா!.. அது என்ன நடுவில சிந்தனை ?!!..:)!.
மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!
வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே.
உண்டை வில் தெரித்தது ராமனாச்சே ? கோவிந்தன் இங்க எங்க வந்தான் ? ????????
அது விசிலடிக்கிறதாக்கும். அதெல்லாம் திவாஜிண்ணா மாதிரி என்ன மாதிரி சின்னப்பசங்களுக்கு மட்டும்தான் தெரியுமாக்கும்.
குணக்கடலான இராமபிரான்மேல் குற்றம் ஏறாதவாறு ஆழ்வார் பாதுகாக்கிறார். கூனியின் கூன்மேல் எய்தவன் இராமன் என்றாலும்கண்ணன் விஷமக்காரன் எனப் பெயர் பெற்றுள்ளதால் குற்றத்தை அவன்மீது ஏறிடுகிறார்.
அது விசிலடிக்கிறதாக்கும். அதெல்லாம் திவாஜிண்ணா மாதிரி என்ன மாதிரி சின்னப்பசங்களுக்கு மட்டும்தான் தெரியுமாக்கும்.
குணக்கடலான இராமபிரான்மேல் குற்றம் ஏறாதவாறு ஆழ்வார் பாதுகாக்கிறார். கூனியின் கூன்மேல் எய்தவன் இராமன் என்றாலும்கண்ணன் விஷமக்காரன் எனப் பெயர் பெற்றுள்ளதால் குற்றத்தை அவன்மீது ஏறிடுகிறார்.
தெரிஞ்சோ தெரியாமலோ எத்தனையோ தப்புகள் செய்றேன். ஸ்ரீராமர் மேல பழி விழாம, நம்ம விஷமக்காரக் கண்ணன் அவரைக் காப்பாத்தினா மாதிரி, என்னையும் காப்பாத்தணும்!..குலசேகராழ்வார், முகுந்த மாலையில், 'மாபீர் மந்தமநோ விசிந்த்ய பஹூதா' என்று தைரியம் சொல்லி, பகவானை வேண்டிக்கச் சொல்றார்.நானும் பிரார்த்திக்கிறேன்!...
நாம் தாயாரிடம் பிரார்த்திப்போம் , அவர் கேட்பார் - ச்ருணோதிபகவானையும் அதைக் கேட்கச் செய்வார் - ஸ்ரீணாதிஅதனால்தான் பிராட்டியின் திருநாமம் “ஸ்ரீ:”
த்வத்த: ஸுதாஹரணயோக்யப²லம்ʼ பரேஷு த³த்த்வா
க³தே த்வயி ஸுரை: க²லு தே வ்யக்ருʼஹ்ணன் |
கோரே(அ)த² மூர்ச²திரணே ப³லிதை³த்ய மாயா
வ்யாமோஹிதே ஸுரக³ணே த்வமிஹாவிராஸீ: || ( ஸ்ரீமந் நாராயணீயம்).
தஸ்யாவதௌ த்வயி நிலீனமதேரமுஷ்யா:
ச்யாமச் சதுர்புஜ வபு: ஸ்வயமாவிராஸீ: |
நம்ராம்ʼ ச தாமிஹ பவத்தனயோ பவேயம்ʼ
கோ³ப்யம்ʼ மதீ³க்ஷணமிதி ப்ரலபன்னயாஸீ: (ஸ்ரீமந் நாராயணீயம்).
( ஆநீத - மாஸு² ப்ருʼகு³பிர் -மஹஸாபி பூதைஸ்
த்வாம்ʼ ரம்ய ரூப-மஸுர: புளகாவ்ருʼதாங்க³: |
பக்த்யா ஸமேத்ய ஸுக்ருʼதீ பரிநிஜ்ய பாதௌ³
தத்தோய -மன்வத்⁴ருʼத மூர்த்தனி தீர்த்த² தீர்த்த²ம் || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).
வ்யாதன்வானே முமுசுர்ருʼஷய: ஸாமரா: புஷ்பவர்ஷம் |
தி³வ்யம்ʼ ரூபம்ʼ தவ ச ததி³த³ம்ʼ பச்யதாம்ʼ விச்வபாஜா
முச்சைருச்சைரவ்ருʼதத³வதீக்ருʼத்ய விஸ்வாண்ட³பாண்ட³ம் ||
கண்ணனை நினை மனமே.. பகுதி 16. வாமனாவதாரம்!!!.
பகவானுடைய திவ்ய ரூபம், பிரம்மாண்டத்தையும் தாண்டி, மேலும் மேலும் வளர்ந்தது..பகவான் த்ரிவிக்ரம ஸ்வரூபனாகி, மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்தருளினான்.ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.என்று, திருமங்கையாழ்வார் எம்பெருமானைத் துதிக்கிறார்!!..பிரம்ம தேவர், தம் சத்ய லோகத்தில் பகவானின் திருவடி நுனியினை தரிசித்து, பேரானந்தமடைந்தார். தம் கமண்டலத்தின் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். அந்த தீர்த்தமே, ஆகாய கங்கையானது.. மேலுலகங்களில் வசிப்பவர்கள், பகவானின் திருவடி தரிசனத்தால் மகிழ்ந்து, ஆன்ந்தமாக நாட்டியமாடினர்.( த்வத்பாதா³க்ரம்ʼ நிஜபத³க³தம்ʼ புண்ட³ரீகோத்பவோ(அ)ஸௌகுண்டீ³தோயைரஸிசத³புனாத்யஜ்ஜலம்ʼ விஸ்வலோகான் |ஹர்ஷோத்கர்ஷாத் ஸுப³ஹு கே²சரைருத்ஸவே(அ)ஸ்மின்பேரீம்ʼ நிக்னன்புவனமசரஜ்ஜாம்ப³வான் பக்திஸா²லீ ||( ஸ்ரீமந் நாராயணீயம்) ).ஜாம்பவான், மகிழ்ச்சி மிக்கவராக, பேரிகையை முழக்கிக் கொண்டு உலகைப் பிரதக்ஷிணம் செய்தார்...ஸ்ரீமந் நாராயணீயம், ஜாம்பவானை, 'ஜாம்பவான் பக்திசாலீ' என்று போற்றுகிறது..ஜாம்பவான், வாமனாவதார காலத்திலேயே இருந்தாரா என்றால் ஆம்!!!!.. வாமனாவதாரம், ஸ்ரீராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் என்று மூன்று அவதாரங்களையும் தரிசிக்கும் பேறு பெற்ற பக்திமான் அவர்!!..இவ்விதம், பகவானின் திரிவிக்ரமராக தோன்றியருளிய மஹோத்சவம் கொண்டாடப்படுகையில், அசுரர்கள், தம் தலைவனின் உத்தரவின்றி போர் துவக்கி, பகவானின் பணியாட்களால் வெற்றி கொள்ளப்பட்டனர்.அப்போது மஹாபலி, 'முன்பு யாரால் ஜெயிக்கப்பட்டோமோ, அந்த பகவானே நம் முன் நிற்கிறார்!!!.. யுத்தம் செய்வதால் என்ன பயன்?!!' என்று அசுரர்களைக் கேட்க, அந்த வார்த்தைகளின் உண்மை புரிந்ததால், அசுரர்கள், பாதாளம் சென்று விட்டனர்.
கருடன், பாசக்கயிறுகளால் மஹாபலியைப் பிணைத்தார்!!!...மண்ணளந்து, விண்ணளந்து நின்ற திரிவிக்ரம மூர்த்தி, மஹாபலியைப் பார்த்து, உரத்த குரலில், 'நீ உலக நாயகனல்லவா?.. மூன்றாவது அடியை வைக்க இடம் காட்டு!!!'...என்று கேட்க, மஹாபலி, சிறிதும் நடுக்கமின்றி, 'என் தலையின் மீது தங்கள் திருவடியை வைத்தருளுங்கள்' என்று பதிலுரைத்தான்!!..
பகவானின் சொல்லொணா கருணையும், பக்தனது விவரிக்க இயலாத பெருமையும் இங்கு ஒருங்கு விளங்குகிறது!!..பகவானுக்கு அனைவரும் குழந்தைகளே!.. அவருக்கு பேதங்களில்லை.. பலி, உத்தம குணங்கள் பலவற்றைக் கொண்டவனாயினும், அவனது ஆணவம், அவன் பகவானின் பரிபூரண அருளைப் பெறுவதற்கு தடையாக இருந்தது!.. அதை அகற்றி, அவனுக்கு அருள் புரிய பகவான் திருவுளம் கொண்டான். வாமன ரூபத்தில் வந்து, உலகளந்த பெருமானாகி, எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன், அனைத்திற்கும் காரண கர்த்தா தானே என்பதை உணர்த்தினான்!!!.. உலகனைத்தையும் படைத்து, காத்து அழித்தலை, சிறு பிள்ளை விளையாட்டுப் போல் சங்கல்ப மாத்திரத்தில் எளிதில் செய்ய வல்ல எம்பெருமான் முன், 'நானே உலக நாயகன்' என்று சொன்ன பலியின் செயல் நகைப்புக்கு உரியதாயினும், அதுவே, அவனது அழியாத வாழ்வுக்கு காரணமாயிற்று. ஆணவம், வெறுப்பு, பகை முதலான எதிர்மறை உணர்வுகளும், பரம மங்களங்களைத் தரவல்ல பகவானை நோக்கித் திருப்பப்பட்டால் நலமே தரும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்!!..>>>அருமை.அசுரனாயினும் மஹாபலியின் பக்தி, போற்றுதலுக்குரியது!!.. பிரஹலாதனின் பேரனல்லவா?!!.. உலகெல்லாம் இரண்டடிக்குப் போதாவிட்டாலும், பக்தனாகிய என் தலை, மூன்றாவது அடிக்குப் போதுமானது என்ற பலியின் தீர்மானம், உறுதியான பக்தியால் விளைந்த உயர்ந்த சாதனையன்றி வேறென்ன?!!..பகவானின் சாந்நித்யமே, பலியின் ஆணவத்தை அகற்றி, அவனைப் புனிதனாக்கியது!!..>>>ஓங்கி உலகளந்தவனின் மகிமையை மஹாபலியின் பக்தி மேன்மையை அழகாக சிறப்புடன்விளக்கிய பார்வதிக்கு பாராட்டு!
( தொடர்ந்து தியானிப்போம்!!.).
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஓங்கி உலகளந்தவனின் மகிமையை மஹாபலியின் பக்தி மேன்மையை அழகாக சிறப்புடன்விளக்கிய பார்வதிக்கு பாராட்டு!
பலி, பாதாள லோகம் செல்லும் வேளையில், வருடத்திற்கொரு நாள் பூலோகம் வந்து, தன் மக்கள் சுகமாக இருப்பதைப் பார்த்துச் செல்ல வேண்டும் என்று வரம் கோரியதாகவும், பகவானும் அதற்கு அருளியதாகவும் சில புராணங்கள் கூறுகின்றன. இதையொட்டியே, பரசுராம க்ஷேத்ரமாகிய கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையும், தீபாவளி அமாவாசைக்கு மறு நாள், 'பலி பாட்டிமை, பலி பிரதிமா, பலி பாத்யமி' என்றும் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையில், இந்தப் பண்டிகை மிக முக்கியத்துவம் பெறுகிறது.>>>வாமன அவதார மகிமை விவரம் அருமை..ஆண்டாள் மிகவும் போற்றி திருப்பாவையில் இந்த அவதாரத்தை பாசுரங்களில் கொண்டாடுவாள்.
வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின் எஞ்சாஇணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள். (பேயாழ்வார்).<< ஆழ்வார்பெருமானின் பொருத்தமான பாடலுடன் இடுகை சிறப்பு..மச்சத்தில் பாருவின் மிச்சத்திறமை கண்டு மெச்ச
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.