ஒருவார்த்தை... அதன் அர்த்தம்!

353 views
Skip to first unread message

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 8, 2013, 12:31:04 PM3/8/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்
முடிந்த மட்டில் ஏதோ ஒரு தமிழ் வார்த்தையை எடுத்து அதற்குண்டான அர்த்தத்தை எல்லாருடனும் சேர்ந்து  விளங்கிக் கொள்ள முயலும் ஒரு  கூட்டு முயற்சி இது. விருப்பம் உள்ள யாரும் இதில் கலந்துக் கொள்ளலாம்.

****

கிராமங்களில் பொதுவாக பாத்திரத்திற்குப் புழங்கி வந்த ஒரு சொல் "ஏனம்".

இந்த ஏனத்திற்கு வேறென்ன அர்த்தங்கள் இருக்கிறதென்று பார்ப்போமா ?

ஏனம் - கருவி, பாத்திரம், பன்றி, காட்டுப் பன்றி, ஓலைக் குடை , பாவம் ( Sin/Offence )


Iyappan Krishnan

*>*<*
மூடர்களிடம் பேச, மௌனத்தையே  சிறந்த மொழியென தேர்ந்தெடுக்கிறேன்.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

PRASATH

unread,
Mar 8, 2013, 12:41:36 PM3/8/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்
அட்டடத்து மேல ஏறும் போது காலை சரியா கதவு கொண்டியில ஒரு காலையும் மாடத்து மேல இன்னொரு காலையும் வைச்சு ஏறு...
 
மேல இருக்குற முட்டு மரத்துக்கு மோதாம முல்லுவாசியை எடுத்துப் போடு...
 
அப்படியே அந்த துடைப்பத்தால மேல இருக்குற ஒட்டடையை சுத்தம் பண்ணிட்டு இறங்கு...
இதுல எது புது வார்த்தை... எந்தெந்த வார்த்தைகளுக்கு பல பொருள் இருக்குனு சொல்லுங்க... நானும் தெரிஞ்சுகிடுறேன்...
2013/3/8 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 8, 2013, 12:56:06 PM3/8/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
அட்டம் - குறுக்கு குறுக்காக இருக்கும் சட்டங்கள் மேல்  தடுப்பு ஏற்படுத்தி உருவாக்கப் பட்ட இடம்.  அட்டம் = அஸ்டம் என்பதை இப்படிச் சொல்வார்கள்.  எட்டு = அட்டம்.  சாதிக்காய்க்கும் அட்டம் என்று ஒரு பெயர் உண்டு.

கொண்டி - கதவின் குடுமி.
//வருவார் கொழுநர் எனத்திறந்தும். வாரார் கொழுநர் எனவடைத்தும் திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திறமினோ//
அதாவது கதவுக்கு மூடத் திறக்க ஏதுவாய் பழைய காலக் கதவுகளில் செய்யப் படுவது. ( எப்படி சொல்றது இதை ? ) ஒற்றைக் கீல் அமைப்பு  சரி படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.


இது தவிர்த்து வேற  எந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியல?  ( ஆமா முல்லுவாசின்னா என்ன? )



Iyappan Krishnan

*>*<*
மூடர்களிடம் பேச, மௌனத்தையே  சிறந்த மொழியென தேர்ந்தெடுக்கிறேன்.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/3/8 PRASATH <pras...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

PRASATH

unread,
Mar 8, 2013, 3:09:04 PM3/8/13
to தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், பண்புடன், தமிழ்த்தென்றல்
ஆக்சுவலா முள்ளுவாசி அப்படின்னு இருந்திருக்கணும்...

கூகுள் டிரான்ஸ்லேட்டர் சதி...

முள்ளுவாசி, வயல் வேலைக்கு உபயோகப்படும் ஒரு கருவி. சிறு செடிகளைச் சுற்றி இருக்கும் முட்புதர்களை அகற்ற இதுதான் சரி...

முட்களை அகற்றுவதால் இந்த பெயர்...

எனது தந்தை காலத்தில் இருந்து எனக்கு தெரிந்து எனது சந்ததிக்குத் தெரியாமல் போக வாய்ப்பிருக்கும் எங்கள் வீட்டில் இருக்கும் சில ஆயுதங்களின்/பொருட்களின் பெயர்கள்.

சனிக்கி = மண்வெட்டி
கலக்கட்டு = கடலைச் செடி நட பயன்படுத்தப்படும் ஆயுதம்
முள்ளுவாசி = முட்களை அகற்ற பயன்படும் ஆயுதம்
கோடாலி - கோடாரி
பாதாள கொலுசு = கிணற்றில் விழும் பொருட்களை எடுக்க உதவும் ஆயுதம்
கலப்பை 
கார்
நுகத்தடி
பரம்பு
மூக்கனாங்கயிறு
கன்னிப்பூட்டு
மொடங்கினி
கத்தி
கையரிவாள்
அரை மானம்(இரும்பு/ஸ்டீல்)
முழு மானம்
தண்ணி வள்ளம்
அளவு வள்ளம்
சுத்தி
கடப்பாரை
வெத்தலைவெட்டி
கரனை
மட்டக்கோல்

இப்போதைக்கு நினைவுக்கு வந்தது இவ்ளோ தான்...


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

PRASATH

unread,
Mar 8, 2013, 3:31:00 PM3/8/13
to தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்
//அட்டடத்து மேல ஏறும் போது காலை சரியா கதவு கொண்டியில ஒரு காலையும் மாடத்து மேல இன்னொரு காலையும் வைச்சு ஏறு...
 
மேல இருக்குற முட்டு மரத்துக்கு மோதாம முல்லுவாசியை எடுத்துப் போடு...
 
அப்படியே அந்த துடைப்பத்தால மேல இருக்குற ஒட்டடையை சுத்தம் பண்ணிட்டு இறங்கு...
இதுல எது புது வார்த்தை... எந்தெந்த வார்த்தைகளுக்கு பல பொருள் இருக்குனு சொல்லுங்க... நானும் தெரிஞ்சுகிடுறேன்..//

அட்டடம் = அட்டம் என்பதன் மருவிய சொல்... ஊர் வழக்கு...

கதவு கொண்டி = கதவு குடுமி/கதவு தாழ்ப்பாள் குடுமியும் தாழ்ப்பாளும் வேற வேறன்னாலும் குடுமி மேல கால் வைக்கவும், தாழ்ப்பாளுல காலை வைக்கவும் கொண்டினு சொல்வாங்க... 

மாடம் = ஹ்ம்ம்... அகல் மாடம், புத்தக மாடம் அப்படின்னு நிறைய இருக்கு... மாடம் என்பது சுவர் கட்டும் போது கால் கல்/ அரை கல்/ நாலு கல் இப்படி பல அளவுல கல்லை வைக்காம சுவரைக் கட்டி இருப்பாங்க. நாலு கல் விட்டு கட்டப்பட்டிருக்கும் மாடம் எல்லாம் சின்ன அலமாரி அப்படின்னு வச்சுக்கிடலாம். எங்க வீட்டுல மாடம் முக்கோண/ சதுரம்/ செவ்வகம் இப்படி மூனு வடிவத்துலயும் இருந்தது... பொதுவா முக்கோண வடிவத்தில் இருக்கும் சிறு மாடங்கள் விளக்கை வைக்க கட்டுனாங்கனு நான் நினைக்குறேன். ஏன்னா எங்க வீட்டுல இந்த சின்ன மாடங்களை சீமெண்ணெய் புட்டி விளக்கு வைக்கவே பயன்படுத்துனோம்.

சீமெண்ணெய் புட்டி = மண்ணெண்ணெய் விளக்கு = புட்டினு ஏன் சொல்றோம்னா இது எல்லாம் நாங்களே தயாரிக்குற விளக்குங்க. விவசாயத்துக்கு மருந்து அடிச்சு காலியான டப்பா, இல்லை கீழ கிடக்குற பிராந்தி பாட்டில், மருந்து பாட்டில் இதை எல்லாம் எடுத்து வந்து அதைச் சுத்தமா கழுவி வெய்யில்ல காய வைச்சு, அதுக்குப் பின்னாலயும் உள்ள ஒட்டி இருக்குற சின்ன சின்ன தண்ணீர் துளியை ஒரு வேஸ்ட் துணியை ஒரு குச்சியில சுத்தி உள்ள விட்டு சுத்தமா துடைச்சு அதுல மண்ணெண்ணெய் ஊத்தி, அந்த டப்பா மூடியில கோணி ஊசியில ஓட்டை போட்டு வேஸ்ட் துணியைத் திரியா திரிச்சு மூடிக்கு வெளியே கொஞ்சம் துணியை விட்டுட்டு மத்ததை பாட்டிலுக்குள்ள இருக்குற மண்ணெண்ணெய்ல நனையப் போட்டு பாட்டிலை மூடிடுவோம்...

கோணி ஊசி = கோணிப்பை தைக்க பயண்படும் பெரிய ஊசி

முட்டு மரம் = தூளத்தை தரையில இருந்து இல்லை அட்டத்துல இருந்து தாங்கிப் பிடிக்கும் பில்லர் போன்ற மரம்.

அட்டத்துல இருந்து ஆரம்பிக்கும் முட்டு மரம் சின்னதா இருக்கும் அதனால வெயிட்டைத் தாங்கணும்ன்றதுக்காக பக்கம் பக்கமா வைச்சி இருப்பாங்க...

தூளம் = ஓட்டையும் ஓட்டைத் தாங்கி இருக்குற மூங்கில்களையும் தாங்கிப் பிடிக்கும் கிடைமட்டமா இருக்கும் மரம். இந்த தூளங்களுக்கு மத்தியில மரப்பலகை போட்டு தான் பெரும்பாலும் அட்டம் செய்வாங்க...

ஒட்டடைன்னா என்னனு தெரியும்னு நினைக்குறேன்...

2013/3/8 PRASATH <pras...@gmail.com>

sk natarajan

unread,
Mar 8, 2013, 7:24:23 PM3/8/13
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்
அருமையான முயற்சி
தொடருங்கள் .....ஜீவ்ஸ்
நானும் வருவேன் ....

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்


sk natarajan

unread,
Mar 8, 2013, 7:28:46 PM3/8/13
to thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
கார் , கரனை ,மொடங்கனி , கன்னி பூட்டு ------ இதற்கு  அர்த்தம் தேவை 
தண்ணி வள்ளம்,அளவு வள்ளம் ---- வள்ளம் என்றாலே தண்ணீர் தானே  -- இதற்கும் அர்த்தம் தேவை 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/3/9 PRASATH <pras...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 8, 2013, 10:12:36 PM3/8/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
வாங்க வாங்க. நீங்க இல்லாமலா?


Iyappan Krishnan

*>*<*
மூடர்களிடம் பேச, மௌனத்தையே  சிறந்த மொழியென தேர்ந்தெடுக்கிறேன்.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/3/9 sk natarajan <sknatar...@gmail.com>

PRASATH

unread,
Mar 10, 2013, 8:07:22 AM3/10/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல்
கார் - இது ஏர் ஓட்டப் பயன்படும் ஐயா... ஏரின் முனையிலே இருக்கும் கூர்மையான பகுதி.

கரனை - மேஸ்திரிகள் பூச்சு வேலைக்கு பயன்படுத்தும் கரண்டி தான்...

மொடங்கனி - என்பது சிறிய கத்தி...அரிவாள் போல இருக்கும்... ஆனா அரிவாளில் இருக்கும் கருக்குகள் இருக்காது. 

கன்னிபூட்டு - இது மாட்டின் மூக்கனாங்கயிறையும் கழுத்திக்கயிறையும் இணைத்து கட்ட பயன்படுவது...

வள்ளம் - படி தெரியுமில்லை ஐயா.. ஒரு படி அரை படி... அது மாதிரி இது கொஞ்சம் பெருசு...

தண்ணி வள்ளம் - மூன்று படி அளவு கொள்ளளவு கொண்டது. இதுக்கு ஏன் தண்ணி வள்ளம்னு பேரு வந்துச்சு... விவசாயக் கூலிகளாக தண்ணீர் பாய்ச்ச வரும் கூலிகளுக்கு கூலி அளப்பது இந்த மூன்று படி வள்ளத்தில் தான் அப்ப எல்லாம்... அதனால...

அளவு வள்ளம் - ஐந்து படி அளவு கொள்ளளவு கொண்டது. அளவு வள்ளத்தில் தான் வியாபாரம் செய்வார்கள். வியாபரிகளுக்கு அளப்பது இந்த அளவு வள்ளத்தில்...

வல்லம் - இது தங்கத்தை அளக்கும் அளவு முறையில் ஒன்னு.

2013/3/9 sk natarajan <sknatar...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 10, 2013, 9:15:23 AM3/10/13
to panb...@googlegroups.com, thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்
//கார் , கரனை ,மொடங்கனி , கன்னி பூட்டு ------ இதற்கு  அர்த்தம் தேவை 
தண்ணி வள்ளம்,அளவு வள்ளம் ---- வள்ளம் என்றாலே தண்ணீர் தானே  -- இதற்கும் அர்த்தம் தேவை //

பிரசாத்,

கார் -  கருமை, கார்க்காலம், நீர், கருங்குரங்கு,  வெள்ளாடு  என பல அர்த்தம் வருகிறது.  அரிசியின் ஒருவகையும் கூட கார் என்று வரும். ஆனால் இது எப்படி  ஏர் முனைக்கு வந்தது என்று தெரியவில்லை

கரனை என்றொரு வார்த்தை தவறு.   கரணை என்று சொல்ல வேண்டும். எங்கப்பா எல்லாம் கொல்ட்று என்பார்கள். ( கொல்லறு  என்பதின் மருவு வார்த்தை ).  வீடு கட்டும் போது மேஸ்த்திரி உபயோகிக்கும் கரண்டி போன்ற ஆனால் தட்டையான வடிவம் கொண்ட கருவி.

வெள்ளம் என்றால் தான் தண்ணீர். வள்ளம் என்றால்  அரை மரக்கால் கொண்ட கொள்ளவு.  எட்டு படிகள் கொண்டது ஒரு மரக்கால்.  மேலும்  அதிக விவரங்களுக்கு
http://mpmathivanan.blogspot.in/2013/02/blog-post_27.html. மிக விரிவாக பண்டைய  அளவைகள் குறித்த பதிவு. ( வள்ளம் பற்றி அதில் இல்லை)

சுவாரசியமாக மரக்கலம் ( மரக்கால் ) & வள்ளம் இரண்டும் தோணிக்கும் பொருந்துகிறது.

கன்னி பூட்டு. முதன் முறையாக கேள்விப் படுகிறேன்.

PRASATH

unread,
Mar 10, 2013, 10:08:37 AM3/10/13
to தமிழ் வாசல், Groups, தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்

2013/3/10 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>


பிரசாத்,

கார் -  கருமை, கார்க்காலம், நீர், கருங்குரங்கு,  வெள்ளாடு  என பல அர்த்தம் வருகிறது.  அரிசியின் ஒருவகையும் கூட கார் என்று வரும். ஆனால் இது எப்படி  ஏர் முனைக்கு வந்தது என்று தெரியவில்லை

அண்ணே,

ஏர் முனைக்கு கார்னு பேர் இல்லை... கார் என்பது ஏரின் முனையில் பூட்டப்படும் ஒரு கூரிய அமைப்பு கொண்ட பொருள்... போட்டொ எடுத்து அனுப்புறேன்...

கரனை என்றொரு வார்த்தை தவறு.   கரணை என்று சொல்ல வேண்டும். எங்கப்பா எல்லாம் கொல்ட்று என்பார்கள். ( கொல்லறு  என்பதின் மருவு வார்த்தை ).  வீடு கட்டும் போது மேஸ்த்திரி உபயோகிக்கும் கரண்டி போன்ற ஆனால் தட்டையான வடிவம் கொண்ட கருவி.

சரி, கரணை... கொல்ட்று அப்படின்னும் சொல்லுவாய்ங்க... 
வெள்ளம் என்றால் தான் தண்ணீர். வள்ளம் என்றால்  அரை மரக்கால் கொண்ட கொள்ளவு.  எட்டு படிகள் கொண்டது ஒரு மரக்கால்.  மேலும்  அதிக விவரங்களுக்கு
http://mpmathivanan.blogspot.in/2013/02/blog-post_27.html. மிக விரிவாக பண்டைய  அளவைகள் குறித்த பதிவு. ( வள்ளம் பற்றி அதில் இல்லை)

நானும் வள்ளம்  அப்படின்னு தானே சொல்லி இருக்கேன்...ஐந்து படிகள் அளவு கொண்ட அளவு வள்ளமும், மூன்று படிகள் அளவு கொண்ட தண்ணி வள்ளமும் வீட்டில இருக்கு... ரெண்டுலையும் நெல்லை அளந்திருக்கேன் நான்...

மேலும் நீங்க கொடுத்த சுட்டியைப் பார்த்தேன்... முதல்ல லாபம்னு தான் சொல்லி அளப்போம். இது நெல்லுக்கு மட்டுமில்லை... தேங்காய் அளக்கும் போது முதல் இரண்டு காயை லாபம்னு சொல்லி தான் அளப்போம். அப்புறம் அளந்து முடிச்சுட்டு வள்ளத்தை வெறும் வள்ளமா வைக்க மாட்டோம், நாலு நெல் போட்டு தான் வைப்போம். அளக்கும் போதும் முதல்ல ஒரு கைப்பிடி நெல்லை சாக்குல போட்டு அப்புறம் தான் லாபம்னு ஆரம்பிப்போம்...


சுவாரசியமாக மரக்கலம் ( மரக்கால் ) & வள்ளம் இரண்டும் தோணிக்கும் பொருந்துகிறது.

கன்னி பூட்டு. முதன் முறையாக கேள்விப் படுகிறேன்.

மூக்கனாங்கயிறுலர்ந்து ஒரு இரண்டு இரும்பு வளையம் சேர்ந்தாப்புல இருக்கும்.

இதைப் பூட்டுவதற்கு பூட்டு கயிறு வாங்கணும்.  

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 11, 2013, 5:58:59 AM3/11/13
to பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்
G+ ல் மாணிக்க வாசகருடைய நீத்தல் விண்ணப்பம்  குறித்துப் பேசும் போது  கிடைத்த ஒரு வார்த்தை

தோளாச்சுரை.

அகிலா ஸ்வாமி12:32 PM
Reply
துளையிடப்படாத சுரை. அதுக்குள்ள எதுவும் நுழையாது. இதுவும் மாணிக்கவாசகரோட சொல்லாடல்தான்.

மனம் நெகிழாமல் நான் துளைக்கப் படாத ஒரு சுரைக்காயைப் போன்று இருந்தால், இதனால் நீ வாழ்ந்து விட்டாயோ? உடம்பிலே முன்னரே புகுந்த உன்னையறிந்து, இளகிப் பூரிக்கும் மனத்தை, நீ அருள் புரியும் காலமானது கொடுமையை யுடைய எனக்கு, கூடுவது எப்பொழுதோ?

http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=8&Song_idField=8132

பத்தாவது பாடல்
____

Reply all
Reply to author
Forward
0 new messages