நமக்குப்பிடித்த இலக்கிய நயமான பாடல்கள்.

219 views
Skip to first unread message

shylaja

unread,
Nov 18, 2017, 2:26:40 AM11/18/17
to தமிழ் வாசல்

தோயும் வெண்தயிர் மத்தொலி துள்ளவும் 
தூய வெள்வளை வாய்விட்டரற்றவும் 
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும் 
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.
 

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் இந்தப்பாடலுடன் நமக்குப்பிடித்தபாடலை அளித்து  அதன் ஆழ்ந்த நயமான பொருளை அலசும் விதமாக இந்த இழையை துவக்குவோம்!
 இந்தப்பாடலை  அளித்து ஆஹா ஆஹா என மகிழ்ந்த ஐயப்பன்  சற்றே விவரிக்கவேண்டும் இதன் அழகான பொருள் நயத்தை. கம்பன்  என்றால் ராம அம்பு போல  தாவிவந்துவிடும் ஐயப்பா    வா  வா!!!

--
ஷைலஜா
















Mohanarangan V Srirangam

unread,
Nov 18, 2017, 2:29:22 AM11/18/17
to தமிழ் வாசல்
அருமையான இழை. 

பழத்தைக் கொடுத்து நாடகத்தைத் தொடங்குகிறீர்! இதுவும் ஈசன் விளையாட்டு. 

ஞானப்பழத்தை......ஞானப்பழத்தைஈஈஈஈ..ரசமந்தினொடும்ம்ம்ம் 

:-) 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Nov 18, 2017, 4:23:25 AM11/18/17
to தமிழ் வாசல்
ஞானப்பழமிருக்கட்டும் ...நீர் உண்ட  இலக்கியப்பழத்தின்  சாறினைச்சற்றேப்பிழியும்:):)
--
ஷைலஜா













உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே! – திருவாசகம்:39-3

Mohanarangan V Srirangam

unread,
Nov 18, 2017, 4:53:36 AM11/18/17
to தமிழ் வாசல்
அய்யிய்யே... இப்பதான ஸூஸ் போட்டுக் குடிச்சோம்... அப்பாலிக்கி பாப்போம் :-)

shylaja

unread,
Nov 18, 2017, 4:56:26 AM11/18/17
to தமிழ் வாசல்
எஸ்கேப்  எஸ்கேப்!    ஐயப்பூ கவனி அரங்கனாரை!!!

Tthamizth Tthenee

unread,
Nov 18, 2017, 8:24:48 AM11/18/17
to thamizhvaasal
சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி 
பொழிந்தால் தவறேதுமில்லை ஐயனே
அக்கரை கொண்டால் ஐயம்மின்றி எக்கரையும்
தாண்டும்  அரங்கா இக்கரை தாண்டு

அன்புடன்
தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது



9840686463   9840884852




shylaja

unread,
Nov 18, 2017, 10:40:18 AM11/18/17
to தமிழ் வாசல்
2017-11-18 18:54 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி 
பொழிந்தால் தவறேதுமில்லை ஐயனே
அக்கரை கொண்டால் ஐயம்மின்றி எக்கரையும்
தாண்டும்  அரங்கா இக்கரை தாண்டு

அக்கறை  ....ஐந்துதடவை தேனி சார்! இல்லேன்னா  திவாஜீஜீ  சிரிஞ்சோட வந்துடுவார்!!!!! 

Tthamizth Tthenee

unread,
Nov 18, 2017, 1:47:55 PM11/18/17
to thamizhvaasal
சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி 
பொழிந்தால் தவறேதுமில்லை ஐயனே
அக்கறை கொண்டால் ஐயமின்றி எக்கரையும்
தாண்டும்  அரங்கா இக்கரை தாண்டு

அக்கறை
அக்கறை
அக்கறை
அக்கறை
அக்கறை           கொண்டமைக்கு  நன்றி

Iyappan Krishnan

unread,
Nov 18, 2017, 2:06:04 PM11/18/17
to தமிழ் வாசல்
ம்ம்ம்மாட்டிக்கினேனா :))

சரி வந்து ஏதும் உளறி வைக்கிறேன். என்ன செய்ய



முதலில் இந்த பாடலுக்கு நான் தரும் விளக்கங்கள் என்னுள் உதித்தவையாக இருக்க வாய்ப்பில்லை.  கேள்வி ஞானம், மனதில் ஊறிப் போயிருப்பவையே. யார் சொன்னது என்பது சட்டென்று நினைவுக்கு வரவில்லை. 

இவற்றின் கருத்துகளின் மூலம், கம்பராமாயண முற்றோதல் குழுவாக இருக்கலாம், சுகி சிவம், இலங்கை ஜெயராஜ், பேராசிரியர் கோ. சத்தியசீலன்,  திருச்சி கல்யாண ராமன், வேளுக்குடி, கவிக்கோ அப்துல் ரஹ்மான்,  திருமுருக கிருபானந்த வாரியார்,  வைமுகோ போன்ற பெரியவர்களின் பேச்சுகள், எழுத்துகளில் அறிந்தவையாக இருக்கலாம். ஆகவே இது என்னுடைய சொந்த கருத்தாக கருத வேண்டாம். 

நினைவில் இருந்து ஏதோ ஒரு கவியரங்கம் அல்லது கம்பன் கழகப் பேச்சில்  கேட்டதாகத்தான் நினைக்கிறேன். தேடி கிடைத்தால் அதை முழுவதுமாக பகிர்கிறேன். 
*******************


தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்.
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்.
தேயும் நுண் இடை சென்று வணங்கவும்.
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.

இந்தப் பாடலுக்கு மேலோட்டமான அர்த்தத்தை முதலில் பார்த்துவிடுவோம்.    

தோயும் வெண் தயிர் = தோய்ந்து கொண்டிருக்கும் வெண்மை நிற தயிர். ( தோய்ந்த அல்ல.. தோயும் )
மத்தொலி துள்ளவும் = மத்தொலி துள்ளவும்.. அதாவது விட்டு விட்டு  ஒலிக்கவும்

ஆய ( தூய என்பது பாட பேதம் ) வெள் வளை வாய்விட்டு அரற்றவும் =  கலை நயம் மிக்க நுணுக்கம் மிகுந்த  வெண்ணிற வளையல் வாய்விட்டு அரற்றவும்
தேயும் நுண் இடை =   மெலிந்த நுண்ணிய  இடை
சென்று வணங்கவும் =  இடையானது முன் புறம் வளைதல் வணங்குதலைப் போல் இருக்கிறதாம். 
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் = ஆயர் பெண்களின் அழகிய கைகள் நோவதால்  வருந்துகிறார்கள். 

.. 

அடுத்த விளக்கம் 

வெண்மை என்றால் மொத்தம் மூன்று பொருள்கள். 

வெண்மை - நிறம்
வெண்மை - இளமை
வெண்மை - அறிவில்லாதவன்.
-----------------

தயிருக்கு எப்படி இளமை பொருந்தும் ?  இது செந்தயிர் இல்லை.. தோய்ந்து கொண்டிருக்கும் இளந்தயிர்.   தோய்ந்து கொண்டிருக்கும் தயிரை கடைந்தால்  உடனடியாக வெண்ணெய் கிடைக்காது... நிறைய கடைய வேண்டும். அதனால் தான்  ஆயர்கள் எளிதாக  வெண்ணெய் எடுக்க இயலாமல்  கைகள் வருந்தி கடைகிறார்களாம். 

இளமையான  வெள்ளை வளையலாம்.  வளையல் எப்படி வெண்மையாக இருக்கும் ? அது சங்கை கடைந்தெடுத்து எடுக்கப்பட்ட வளையல் ஆகையால் வெள் வளையல். அதுவும் நிறைய வேலைப்பாடுகள் கொண்டது. 


 

வளையல் இளமை எப்படி பொருந்தும் ? வளையல் போட்டிருப்பது புதியது என்று கொள்வோம். நீண்டகாலம்  அணிந்த வளையல் அழுக்குச் சேர்ந்து அது வெண்ணிறம் குறைந்து பழுப்பு நிறம் சேர்ந்துக் கொள்ளும். ஆக இது வெள் வளையல் . 

-----------------

அடுத்த விளக்கம். 

தயிருக்கு என்னங்க அடிப்படை ? தயிரானால் அதை மத்தால் கடைந்து அதனின்று வெண்ணெயை எடுத்து ஆக வேண்டும். அந்த உண்மை தெரிந்தும் அது  ஓசையிட்டு துள்ளுகிறது.  தன் இயல்பு இது தான் என்று தெரிந்தும் அதை ஏற்காமல் துள்ளலிட்டு ஓசை இட்டு அரற்றுகிறது. ஆகவே முட்டாள் தயிர்.

வளையல் என்பதன் அடிப்படை இயல்பு  என்ன ? அது  கையில் அணிந்த பின்பு  முன்பும் பின் அலைந்தாகவேண்டும். கலகலக்கவேண்டும் . அந்த இயல்பு தெரிந்தும் அய்யய்யோ  நாம் இப்படி இடிபடுகிறோமே என்று வாய் விட்டு அழுகிறதாம்.    கம்பனின் வார்த்தையை நன்றாக கவனிக்க வேண்டும்.   வாய் விட்டு அரற்றவும் என்கிறானே தவிர்த்து ஒலிக்கிறது என்று சொல்லவில்லை. ஆகவே அது தன் இயல்பு இது தான் என்று தெரிந்தும் அது அழுவதால் அது முட்டாள் வளையல். 

வெண்மை அப்படிங்கற வார்த்தையின் அத்தனை அர்த்தமும் இதில் பொருத்திப் பார்க்க முடிகிறது என்றால் இது கவிச்சக்கரவர்த்தியின் மேன்மை மிகு கவிதையன்றி வேறென்னவாக இருக்க முடியும் ??

அன்புடன் 
ஐயப்பன் 





Iyappan Krishnan

unread,
Nov 18, 2017, 2:10:56 PM11/18/17
to தமிழ் வாசல்
அது பாட்டுக்கு அது.. இது பாட்டுக்கு இது.. கூட்டத்தில் இருந்து  அரங்கனார் எஸ்கேப்  ஆகறார்... விடாதீங்கோ... எல்லாரும் வாங்க கெட்டியா புடிச்சுக்கிடலாம். 


Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

shylaja

unread,
Nov 18, 2017, 10:29:53 PM11/18/17
to தமிழ் வாசல்
2017-11-19 0:36 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
ம்ம்ம்மாட்டிக்கினேனா :))

சரி வந்து ஏதும் உளறி வைக்கிறேன். என்ன செய்ய>>>>  உளறலும் நன்றே!
 
அன்னை வடிவை அகக்கண்ணால் காணுமன்பன்
தன்னைத் திதிகேட்கச்சட்டென்று, - துன்னிருளை
வெல்லும் முழுமதி விண்ணிலின்று தோன்றுமென்ற
சொல்லும் உளறலோ சொல்! 

முதலில் இந்த பாடலுக்கு நான் தரும் விளக்கங்கள் என்னுள் உதித்தவையாக இருக்க வாய்ப்பில்லை.  கேள்வி ஞானம், மனதில் ஊறிப் போயிருப்பவையே. யார் சொன்னது என்பது சட்டென்று நினைவுக்கு வரவில்லை. 

இவற்றின் கருத்துகளின் மூலம், கம்பராமாயண முற்றோதல் குழுவாக இருக்கலாம், சுகி சிவம், இலங்கை ஜெயராஜ், பேராசிரியர் கோ. சத்தியசீலன்,  திருச்சி கல்யாண ராமன், வேளுக்குடி, கவிக்கோ அப்துல் ரஹ்மான்,  திருமுருக கிருபானந்த வாரியார்,  வைமுகோ போன்ற பெரியவர்களின் பேச்சுகள், எழுத்துகளில் அறிந்தவையாக இருக்கலாம். ஆகவே இது என்னுடைய சொந்த கருத்தாக கருத வேண்டாம். 

நினைவில் இருந்து ஏதோ ஒரு கவியரங்கம் அல்லது கம்பன் கழகப் பேச்சில்  கேட்டதாகத்தான் நினைக்கிறேன். தேடி கிடைத்தால் அதை முழுவதுமாக பகிர்கிறேன். 
*******************


தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்.
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்.
தேயும் நுண் இடை சென்று வணங்கவும்.
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.

இந்தப் பாடலுக்கு மேலோட்டமான அர்த்தத்தை முதலில் பார்த்துவிடுவோம்.    

தோயும் வெண் தயிர் = தோய்ந்து கொண்டிருக்கும் வெண்மை நிற தயிர். ( தோய்ந்த அல்ல.. தோயும் )>>>>தோயும் என  கம்பன்  அளித்தவிதம்  அருமை அருமை! 
மத்தொலி துள்ளவும் = மத்தொலி துள்ளவும்.. அதாவது விட்டு விட்டு  ஒலிக்கவும்

ஆய ( தூய என்பது பாட பேதம் ) வெள் வளை வாய்விட்டு அரற்றவும் =  கலை நயம் மிக்க நுணுக்கம் மிகுந்த  வெண்ணிற வளையல் வாய்விட்டு அரற்றவும்
தேயும் நுண் இடை =   மெலிந்த நுண்ணிய  இடை>>>இங்க  தேய்ந்துகொண்டிருக்கிற  இடை எனலாமோ?
 
சென்று வணங்கவும் =  இடையானது முன் புறம் வளைதல் வணங்குதலைப் போல் இருக்கிறதாம். 
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் = ஆயர் பெண்களின் அழகிய கைகள் நோவதால்  வருந்துகிறார்கள். 

.. 

அடுத்த விளக்கம் 

வெண்மை என்றால் மொத்தம் மூன்று பொருள்கள். 

வெண்மை - நிறம்
வெண்மை - இளமை
வெண்மை - அறிவில்லாதவன்.>>வெள்ளந்தி எனும் சொல் இதிலிருந்துவந்திருக்கலாம்.. அறிவில்லாதவன் என்பதைவிட  வெகுளி பொருத்தமாக இருக்கும்  ஆனால்   ஐயப்பன் சொன்ன பொருள்தான் இலக்கணப்படி சரியாக இருக்கவேண்டும்.
-----------------

தயிருக்கு எப்படி இளமை பொருந்தும் ?  இது செந்தயிர் இல்லை.. தோய்ந்து கொண்டிருக்கும் இளந்தயிர்.   தோய்ந்து கொண்டிருக்கும் தயிரை கடைந்தால்  உடனடியாக வெண்ணெய் கிடைக்காது... நிறைய கடைய வேண்டும். அதனால் தான்  ஆயர்கள் எளிதாக  வெண்ணெய் எடுக்க இயலாமல்  கைகள் வருந்தி கடைகிறார்களாம். 

இளமையான  வெள்ளை வளையலாம்.  வளையல் எப்படி வெண்மையாக இருக்கும் ? அது சங்கை கடைந்தெடுத்து எடுக்கப்பட்ட வளையல் ஆகையால் வெள் வளையல். அதுவும் நிறைய வேலைப்பாடுகள் கொண்டது. 


 

வளையல் இளமை எப்படி பொருந்தும் ? வளையல் போட்டிருப்பது புதியது என்று கொள்வோம். நீண்டகாலம்  அணிந்த வளையல் அழுக்குச் சேர்ந்து அது வெண்ணிறம் குறைந்து பழுப்பு நிறம் சேர்ந்துக் கொள்ளும். ஆக இது வெள் வளையல் . >>ஆஹா வளையல் படத்தையும்போட்டு கம்பனை நம் மனவலைக்குள்  தள்ளியாயிற்றா?:)

-----------------

அடுத்த விளக்கம். 

தயிருக்கு என்னங்க அடிப்படை ? தயிரானால் அதை மத்தால் கடைந்து அதனின்று வெண்ணெயை எடுத்து ஆக வேண்டும். அந்த உண்மை தெரிந்தும் அது  ஓசையிட்டு துள்ளுகிறது.  தன் இயல்பு இது தான் என்று தெரிந்தும் அதை ஏற்காமல் துள்ளலிட்டு ஓசை இட்டு அரற்றுகிறது. ஆகவே முட்டாள் தயிர்.>>>>>:) நல்லவிளக்கம்.

வளையல் என்பதன் அடிப்படை இயல்பு  என்ன ? அது  கையில் அணிந்த பின்பு  முன்பும் பின் அலைந்தாகவேண்டும். கலகலக்கவேண்டும் . அந்த இயல்பு தெரிந்தும் அய்யய்யோ  நாம் இப்படி இடிபடுகிறோமே என்று வாய் விட்டு அழுகிறதாம்.    கம்பனின் வார்த்தையை நன்றாக கவனிக்க வேண்டும்.   வாய் விட்டு அரற்றவும் என்கிறானே தவிர்த்து ஒலிக்கிறது என்று சொல்லவில்லை. ஆகவே அது தன் இயல்பு இது தான் என்று தெரிந்தும் அது அழுவதால் அது முட்டாள் வளையல். 

வெண்மை அப்படிங்கற வார்த்தையின் அத்தனை அர்த்தமும் இதில் பொருத்திப் பார்க்க முடிகிறது என்றால் இது கவிச்சக்கரவர்த்தியின் மேன்மை மிகு கவிதையன்றி வேறென்னவாக இருக்க முடியும் ??>>>>கம்பனை  என்னென்பது!  சக்கரவர்த்தியைவிட உயர்வான  பட்டம் அவனுக்குக்கொடுக்கவேண்டும்..  இங்கிவரை யாம் பெறவே  யாம் தமிழராய்ப்பிறந்தோம்!  

அன்புடன் 
ஐயப்பன் 





--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Nov 18, 2017, 10:31:35 PM11/18/17
to தமிழ் வாசல்
வகுப்பில்  தலை சிறந்தமாணவர் என்ற பட்டத்தை தேனி சாருக்கு அளிக்கறேன்! திவாஜீஜீக்கு இப்போ இல்ல:):):)

Innamburan S.Soundararajan

unread,
Nov 18, 2017, 10:46:24 PM11/18/17
to thamizhvaasal
ஞானப்பழமிருக்கட்டும் ...நீர் உண்ட  இலக்கியப்பழத்தின்  சாறினைச்சற்றேப்பிழியும்:):)

பிழிய, பிழிய, மகிழ முடியும்.
மகிழ, மகிழ, மனம் இளகும்.
இளக, இளக, துவளும் சிந்தனைகள்.
இளக, இளக, கம்பனும் மகிழ்வார்.


Mohanarangan V Srirangam

unread,
Nov 18, 2017, 11:02:29 PM11/18/17
to தமிழ் வாசல்
நல்ல பாடலைச் சொன்ன ஷைலுக்காவிற்கும் 
நய உரை அளித்த ஐயப்பருக்கும் 
கடலெனத் திரண்டிருக்கும் இலக்கிய நேசர்கள் சார்பாக 
நன்னிகள். ஹி ஹி சும்மா சொல்லிப் பார்த்தேன்... :-))

Vasudevan Tirumurti

unread,
Nov 18, 2017, 11:31:01 PM11/18/17
to thamiz...@googlegroups.com
2017-11-19 9:01 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
வகுப்பில்  தலை சிறந்தமாணவர் என்ற பட்டத்தை தேனி சாருக்கு அளிக்கறேன்! திவாஜீஜீக்கு இப்போ இல்ல:):):)

அக்கிரமம்
​. நா கடேசி பெஞ்சுக்கு போறேன்! கர்ர்ர்ர்ர்ர்!​



பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 19, 2017, 4:56:13 AM11/19/17
to தமிழ் வாசல்

//////அக்கிரமம்
​. நா கடேசி பெஞ்சுக்கு போறேன்! கர்ர்ர்ர்ர்ர்/////

நானும் அதே!!.அதே!!!.

பார்வதி இராமச்சந்திரன் .

   

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 19, 2017, 4:58:58 AM11/19/17
to தமிழ் வாசல்
எல்லாருடைய பங்களிப்பையும் பார்க்கும் போது, எனக்கு கடசி பெஞ்சு தான் கரெட்டு!.

shylaja

unread,
Nov 19, 2017, 5:48:36 AM11/19/17
to தமிழ் வாசல்
உயர்ந்தவர்கள்(உயரமா இருக்கறவங்கன்னும்  சொல்லலாம்) எப்பவும் கடேசி    பெஞ்ச் தான்...:):)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Nov 19, 2017, 5:49:37 AM11/19/17
to தமிழ் வாசல்
2017-11-19 15:26 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:

//////அக்கிரமம்
​. நா கடேசி பெஞ்சுக்கு போறேன்! கர்ர்ர்ர்ர்ர்/////

நானும் அதே!!.அதே!!!.>>ஆட்டோவச்சி  வந்து உதைப்பேன்:):)  சமத்தா  ஒரு பாட்டு  போட்டு விளக்கு ஆம்மா:):)

பார்வதி இராமச்சந்திரன் .

   

On Nov 19, 2017 10:01 AM, "Vasudevan Tirumurti" <agni...@gmail.com> wrote:

2017-11-19 9:01 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
வகுப்பில்  தலை சிறந்தமாணவர் என்ற பட்டத்தை தேனி சாருக்கு அளிக்கறேன்! திவாஜீஜீக்கு இப்போ இல்ல:):):)

அக்கிரமம்
​. நா கடேசி பெஞ்சுக்கு போறேன்! கர்ர்ர்ர்ர்ர்!​



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Nov 19, 2017, 5:50:52 AM11/19/17
to தமிழ் வாசல்
நன்னிகள். ஹி ஹி சும்மா சொல்லிப் பார்த்தேன்... :-))>>> அப்டியே  விரும்பின பாடலையும் சொல்லிப்பாக்லாமே:)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2017, 1:30:17 AM11/20/17
to தமிழ் வாசல்
இனிது நாற்பது என்னும் நூலில் ஒரு வெண்பா - 

வருவாய் அறிந்து வழங்கல் இனிதே 
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே 
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் 
திரிபின்றி வாழ்தல் இனிது. 

*** 

மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் எழுதியது. 

*

shylaja

unread,
Nov 20, 2017, 1:34:06 AM11/20/17
to தமிழ் வாசல்
2017-11-20 12:00 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இனிது நாற்பது என்னும் நூலில் ஒரு வெண்பா - 

வருவாய் அறிந்து வழங்கல் இனிதே 
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே 
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் >>>  பெட்டவை  அர்த்தம்  சொன்னால்  முன்கூட்டி நன்றி.  பாடல எளிமை ஆனாலும் தாங்கள்  விளக்கம் அளித்தால் மகிழ்ச்சி!
 
திரிபின்றி வாழ்தல் இனிது. 

*** 

மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் எழுதியது. 

*

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2017, 1:38:07 AM11/20/17
to தமிழ் வாசல்
அர்த்தம் எல்லாம் ஆசானைத்தான் கேட்கோணும். மீ ஆல்ஸோ வெய்யிட்டிங்கு :-))

Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2017, 1:41:41 AM11/20/17
to தமிழ் வாசல்
ஏன் பார்வதின்னு ஒத்தர் இருக்காங்களே. அவங்கள எதுவுமே கேட்க மாட்டீங்களா ? :-) 

shylaja

unread,
Nov 20, 2017, 1:44:30 AM11/20/17
to தமிழ் வாசல்
அதான  பாத்தேன்  பாட்டுபோட்டதே  பெரிய சமாச்சாரமாம்!:):) இல்லீங்களா திவாஜிஜீ?:)

shylaja

unread,
Nov 20, 2017, 1:45:24 AM11/20/17
to தமிழ் வாசல்
பாரு இங்க வந்து பாரு ! யாரோ ஒருத்தங்க  தூங்கற(மதுரை)புலியை சீண்டறாங்க:)

shylaja

unread,
Nov 20, 2017, 1:47:06 AM11/20/17
to தமிழ் வாசல்
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.

சிதலை  அதாவது - கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை

,மதலையாய் அதன் வீழ் ஊன்றியாங்கு - ....அதன் விழுதுஅதனைத் தூணாக நின்று தாங்குவதுபோல,

 குதலைமை தந்தை கண் தோன்றில் .....-தன் தந்தையினிடத்தில் தளர்ச்சி தோன்றினால்

,தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும்... - அவர் பெற்ற மகன் தானே முன் நின்று தந்தை

 செய்யவேண்டிய  காரியங்களை செய்யும்போது அவருக்கு ஏற்பட்டுரிக்கும் தளர்ச்சி மறைந்துபோகும்


குடும்பம் தனது காலத்தோடு அழிந்துவிடாமல் தனது முதுமை காலத்தில் ஆலமர விழுது போல பிள்ளைகளும் வழிவழியாக தம் குடி காப்பர் என்னும் கருத்தினைக்கொண்ட இந்த நாலடியார் செய்யுள் நன்றாக இருக்கிறது அல்லவா!!!

பிகு..நாங்கள்ளாம்  பாட்டுபோட்டு விளக்கமும் சொல்வோம் ...அலட்டல் அறியா அன்பு மக்கள் குழாமுடையோம்!!!!


)


2017-11-20 12:03 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2017, 1:49:31 AM11/20/17
to தமிழ் வாசல்
2017-11-20 12:14 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
அதான  பாத்தேன்  பாட்டுபோட்டதே  பெரிய சமாச்சாரமாம்!:):) இல்லீங்களா

 
திவாஜிஜீ?:) 

யார் இவர்? திவா ஜி கேள்விப் பட்டிருக்கிறோம். :-) 

shylaja

unread,
Nov 20, 2017, 1:51:59 AM11/20/17
to தமிழ் வாசல்
உஷ்ஷ்ஷ்:)  அவர் டாக்டர்  ஆகவே இரட்டிப்பு மரியாதை!!!

Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2017, 1:56:31 AM11/20/17
to தமிழ் வாசல்
பெட்டவை என்றால் விரும்பியவை என்று பொருளாம்

Iyappan Krishnan

unread,
Nov 20, 2017, 2:00:33 AM11/20/17
to தமிழ் வாசல்
ஆஹா வெண்பா ரொம்ப அழகு.


நான் எழுதுவதெல்லாம் வெறும் வெண்பாவா தான் இருக்கு :(( ( ரிமம்பர் .. வெண்மை = அறியாமை )  


Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Iyappan Krishnan

unread,
Nov 20, 2017, 2:02:03 AM11/20/17
to தமிழ் வாசல்
/சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.
​//

ஆலம் விழுதினைப் போல், உறவு ஆயிரம் வந்துமென்ன
என் வேரென நீ இருந்தாய்..
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்.. 

அப்படிங்கறாரே கண்ணதாசன் ??​

Iyappan Krishnan

unread,
Nov 20, 2017, 2:03:09 AM11/20/17
to தமிழ் வாசல்
ஹலோ 

//நானும் அதே!!.அதே!!!.
​//

ஆட்டோ வச்சு வீட்டுக்கு வந்து.. ... என்னால முடியலைன்னாலும் ஷைலஜாக்காவ விட்டு தலை மேல கொட்டச்சொல்லுவேன்... ஆமா 

Iyappan Krishnan

unread,
Nov 20, 2017, 2:04:02 AM11/20/17
to தமிழ் வாசல்
//அக்கிரமம்
​. நா கடேசி பெஞ்சுக்கு போறேன்! கர்ர்ர்ர்ர்ர்!​//

கர்ர்ர்ர் வந்து கீதாம்மாவோட ட்ரேட் மார்க்.. அவங்க எங்க ஆளே காணோம் ? உங்க பதிவு மட்டும் படிச்சுட்டு அப்படியே காணாமப் போயிடறாங்களே ? ஏன் ?


Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

2017-11-19 10:00 GMT+05:30 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:

shylaja

unread,
Nov 20, 2017, 2:11:23 AM11/20/17
to தமிழ் வாசல்
கண்ணதாசன்  சினிமாக்காக  அப்படி எழுதி இருக்கலாம்!!!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Iyappan Krishnan

unread,
Nov 20, 2017, 2:13:56 AM11/20/17
to தமிழ் வாசல்
ஹ்ம்ம்.. இருக்கலாம். 

பல பாடல்களை நினைவுப் படுத்திட்டது... 

“ வசந்தங்கள் வாழ்த்தும் பொழுதில் உனது கிளையில் பூவாவேன்
இளையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் “

கவிப்பேரரசு வைரமுத்து.. 

Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2017, 2:24:49 AM11/20/17
to தமிழ் வாசல்
இஃதோர் அருமையான பாடல் - 

இனிய வாய்மையும் வீரமும் எழில்பெறுந் திருவும் 
முனிவர் போற்றிடு ஞானமும் முதற்குண வளமும் 
புனித வாழ்க்கையும் புலமையும் பொதுநலப் பணியும் 
மனித ராகிய தேவரின் மாண்பிவை யாமே ! 

எழுதியவர் யோகி சுத்தாநந்த பாரதியார், பாரத சக்தி மஹா காவியம். 

அர்த்தம் கேட்கணும்னா திரு மதுரபாரதியிடம் - :-) முன்னாடியே சொல்லிட்டேன். 

***

shylaja

unread,
Nov 20, 2017, 2:29:43 AM11/20/17
to தமிழ் வாசல்
நல்ல பாடல்தான். இனிய வாய்மையும்.....உண்மைக்கு இனிமை அடைமொழியாய்  வருகிறது!! முதற்குண வளமும்  என்பது  குறிப்பாக எநதகுணத்தை  சொல்கிறது என ஓரிரண்டு  புரியவில்லை  , முழுக்க
அர்த்தம்  கேட்க அவசியமே இல்லை எனினும் ம பா  ஸார்  விளக்கம் வாசிக்கவும் விருப்பம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2017, 2:50:24 AM11/20/17
to தமிழ் வாசல்
அனுமானைப் பற்றி யோகி சுத்தாநந்தபாரதியார் - 

ஆசை மாக்கடல் கடந்தனன் அச்சுதன் பணிக்கே 
ஓசை மாக்கடல் கடந்தனன் அரக்கரை ஒறுக்கப் 
பூசன் மாக்கடல் கடந்தனன் பொருவரு வீரா 
வேச மாக்கடல் ஆனவன் வெற்றிமா ருதியே. 

***

shylaja

unread,
Nov 20, 2017, 2:52:13 AM11/20/17
to தமிழ் வாசல்
ஆஹா  ஆஹா!  வேசமாக்கடல்   மட்டும் பொருள் சொல்லவும்.. 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Madhurabharati

unread,
Nov 20, 2017, 2:59:10 AM11/20/17
to ”தமிழ்வாசல்”
பொருவரு
வீராவேச மாக்கடல்
என்று வாசித்தால் புரியும்.

ம.பா.

Iyappan Krishnan

unread,
Nov 20, 2017, 3:01:27 AM11/20/17
to தமிழ் வாசல்
​அது வீராவேச மாக்கடல்​


Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

2017-11-20 13:21 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

shylaja

unread,
Nov 20, 2017, 3:01:35 AM11/20/17
to தமிழ் வாசல்
ச்சே.....இப்படிவாசிக்கததவறிய என் தலையில் நானே குட்டிக்கறேன்  நன்றி மபா சார்...அருமையான  பாட்டு!!!

shylaja

unread,
Nov 20, 2017, 3:04:40 AM11/20/17
to தமிழ் வாசல்
ஆமாம்  புரிஞ்சுது ஐயப்ஸ் ..! அழகான  பாட்டு...எளிய வார்த்தைகளில் என்ன ஒரு ஏற்றம்!! 

Iyappan Krishnan

unread,
Nov 20, 2017, 3:16:49 AM11/20/17
to தமிழ் வாசல்
தினமும் சொல்றதுக்கு நல்லாருக்கும் போலயே.. நன்றி நன்றி :)


Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

--

Iyappan Krishnan

unread,
Nov 20, 2017, 3:19:06 AM11/20/17
to தமிழ் வாசல்

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே


காதலின் பயணம் பாருங்க.. 

முதல்ல வெறும் பேரு தாங்க கேட்டது.. ஆர்வம் அப்படியே புடிச்சுக்கிட்டது.. ... 

அவன் நாமங்கேட்டாள்...  முடிவில்
தன் நாமம் மறந்தாள்..... 


( அன்றொருநாள் அவனுடைய பேரைக் கேட்டேன்..
அடுத்த நாள் அவனுடைய ஊரைக் கேட்டேன் 

-- கண்ணதாசன் )

Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2017, 3:38:28 AM11/20/17
to தமிழ் வாசல்
கண்ணனைப் பற்றி ஒரு பாடல் - 

ஊதினான் குழல் உயிர்களின் உளத்தினைக் கவர்ந்தான் 
கோதி லார்தமைக் காத்தனன் கொடியரைக் குமைத்தான் 
ஆதி பாரத மாக்கினான் அறம்வளர் கண்ணன் 
ஓதினான் அருட் கீதையை உலகமின் புறவே ! 

*** 
யோகி சுத்தாநந்தபாரதியார் 
*

Iyappan Krishnan

unread,
Nov 20, 2017, 4:13:08 AM11/20/17
to தமிழ் வாசல்
// 
ஊதினான் குழல் உயிர்களின் உளத்தினைக் கவர்ந்தான் 
கோதி லார்தமைக் காத்தனன் கொடியரைக் குமைத்தான் 
ஆதி பாரத மாக்கினான் அறம்வளர் கண்ணன் 
ஓதினான் அருட் கீதையை உலகமின் புறவே ! 
​ //​

​குமைத்தான் ​== வருத்தினான். 



Innamburan S.Soundararajan

unread,
Nov 20, 2017, 5:05:09 AM11/20/17
to thamizhvaasal
ஆட்டோ வச்சு வீட்டுக்கு வந்து.. ... என்னால முடியலைன்னாலும் ஷைலஜாக்காவ விட்டு தலை மேல கொட்டச்சொல்லுவேன்... ஆமா 
~அவள் கொட்டமாட்டாள். தேளா என்ன? குட்டச்சொல்லுங்கள். அனுபவசாலி.

Iyappan Krishnan

unread,
Nov 20, 2017, 6:10:24 AM11/20/17
to தமிழ் வாசல்
கொட்டு சரி தான்.

 கொட்டு koṭṭu (p. 146)

கொட்டு koṭṭu கிறேன், கொட்டினேன், வேன், கொட்ட, v. a.To strike, to beat a drum, a tambourine, &c., to play on an indtrument of music, பறைகின்னரமுதலியகொட்ட. 2. To hammer, beat, malleate--as a brazier, கம்மியரடிக்க. 3. To clap the hands, கைகொட்ட. 4. To dance--as in the கும்மி dance; to frolic, கும்மியடித்தாட. 5. To clap or stick on, to daub sandal or fragrant pastes on the body, அப்ப. (p.) 6. To sting --as a reptile or insect, தேள்முதலியகொட்ட. 7. To cuff, குட்ட. 8. (Sans. Khót'a.) Wils. p. 275. To cast, pour out-as corn, sand, &c., from a basket or sack; to throw or cast into a vessel, sack; &c.; to pour forth, போட. 9. To shed--as leaves, fruits, &c., சொரிய. 1. v. n. To be shed or cast out, to fall, சிந்த.கொட்டினாற்றேள் கொட்டாவிட்டாற்பிள்ளைப்பூச்சி. If it sting, it is a scorpion; if not, it is a harmless gryllus; i. e. we call things good or bad according to their effect on us.



--

shylaja

unread,
Nov 20, 2017, 9:03:16 AM11/20/17
to தமிழ் வாசல்
இ சார்னா இ சார் தான்! கொட்டுக்கு ஷொட்டு!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Tthamizth Tthenee

unread,
Nov 20, 2017, 9:17:01 AM11/20/17
to thamizhvaasal
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ  இன்னம்புராரே  எதுக்கு யாரை  ரெபர் பண்ணனும்னு உங்களுக்கு நன்னாவே தெரியும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது



9840686463   9840884852





--

Innamburan S.Soundararajan

unread,
Nov 20, 2017, 9:43:15 AM11/20/17
to thamizhvaasal

Vasudevan Tirumurti

unread,
Nov 20, 2017, 10:17:52 AM11/20/17
to thamiz...@googlegroups.com
சட்டாம்பிள்ளைம்மா! // பாடல எளிமை // ஒழுங்கா பத்து தரம் எழுதுங்க! 
2017-11-20 12:14 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
அதான  பாத்தேன்  பாட்டுபோட்டதே  பெரிய சமாச்சாரமாம்!:):) இல்லீங்களா திவாஜிஜீ?:)
2017-11-20 12:08 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
அர்த்தம் எல்லாம் ஆசானைத்தான் கேட்கோணும். மீ ஆல்ஸோ வெய்யிட்டிங்கு :-))
2017-11-20 12:03 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
2017-11-20 12:00 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இனிது நாற்பது என்னும் நூலில் ஒரு வெண்பா - 

வருவாய் அறிந்து வழங்கல் இனிதே 
ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே 
பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் >>>  பெட்டவை  அர்த்தம்  சொன்னால்  முன்கூட்டி நன்றி.  பாடல எளிமை ஆனாலும் தாங்கள்  விளக்கம் அளித்தால் மகிழ்ச்சி!
 
திரிபின்றி வாழ்தல் இனிது. 

*** 

மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் எழுதியது. 

*

Tthamizth Tthenee

unread,
Nov 20, 2017, 10:25:33 AM11/20/17
to thamizhvaasal
சரித்திரம் திரும்புகிறது  டீச்சரம்மாவுக்கே


அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது



9840686463   9840884852





shylaja

unread,
Nov 20, 2017, 10:32:31 AM11/20/17
to தமிழ் வாசல்
ஒருபுள்ளி வைக்கவில்லையென்றால்  இப்படியா துள்ளிவந்து அதட்டுவது?  என்னைச்சொல்லிக்குற்றமில்லை அது கணிணி செய்த குற்றம் ஜீ கணிணி செய்தகுற்றம் ஜீ:):)

shylaja

unread,
Nov 20, 2017, 10:35:12 AM11/20/17
to தமிழ் வாசல்
தேனிசார் உங்களை தலை சிறந்தமாணவர் என்று புகழ்ந்தமைக்கு  கொஞ்சம்  சப்போர்ட் பண்ணி இருக்கணும். ..தவறிவிட்டதால் இனி அந்தப்பட்டம் கிடையாது:):)

Tthamizth Tthenee

unread,
Nov 20, 2017, 10:40:16 AM11/20/17
to thamizhvaasal
அடடா  நான் அதைக் கவனிக்கவில்லையே   ஷைலஜாவுக்கு  ஜே

Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2017, 10:43:01 AM11/20/17
to தமிழ் வாசல்
ஜே ஜே ஜே :-)

shylaja

unread,
Nov 20, 2017, 10:44:35 AM11/20/17
to தமிழ் வாசல்
அரங்கனாரை இப்போ யார் ஜே போடச்சொன்னதாம்?:) என்னவோ  போங்க...கலிகாலம்:):)

Tthamizth Tthenee

unread,
Nov 20, 2017, 11:27:13 AM11/20/17
to thamizhvaasal
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ நல்ல  மனிதர்

Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2017, 10:18:01 PM11/20/17
to தமிழ் வாசல்
இரண்டே வரிதான் ஆனாலும் என்ன கச்சிதம் ! ண்ணங்குன்னு விஷயத்தின் தலையில் அடித்தால் போல் சொல் பிரயோகம். 

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் 
என்னும் போது இறை உன்னுமின் நீரே. 

- நம்மாழ்வார் 

***

Innamburan S.Soundararajan

unread,
Nov 20, 2017, 10:56:05 PM11/20/17
to thamizhvaasal
ஏன் இப்டி துமிலோ பவது? ஷை நல்ல மனுஷி. பாடாய் டபாய்க்கலாமோ?

--

shylaja

unread,
Nov 20, 2017, 11:16:46 PM11/20/17
to தமிழ் வாசல்
ஆழ்வார்பெருமானின் அற்புதவரிகள் ! வள்ளுவரும்

நில்லா யாக்கை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை'' என்கிறார்.

 நிலையாமையைக் குறித்து பாடாத கவிஞர்கள் இருக்கமுடியுமா!
  பேசாத சான்றோர்களுமில்லை.  
யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, உறவுகள் நிலையாமை . நிலையாமைகளைக் குறித்தே பேசுகிறார்கள், பாடுகிறார்கள் 
 எது நிலையானது என்று உணர வேண்டும் என்பதற்காகத்தான். நிலையாமையில் ஊறித் திளைத்து அஞ்ஞானத்தில் வீழ்ந்து கிடக்கும் மனதிற்கு நிலையான பொருளை உணர முடிவது சாத்தியமில்லைதான்

  ஞானியைப் பொறுத்த வரை இந்த உலகாய வாழ்வில் விழிப்பும் கனவும் ஒன்றுதான். கனவைப் போன்று இவ்வுலக வாழ்வும் நிலையற்றதுதான் என்பதை உணர்ந்தவரே ஞானி. எனவே கனவைப் போன்றே இவ்வுலக வாழ்விலும் விழிப்புடன் நின்று செயல்பட வேண்டும் என்கிறார்கள் போலும்!

2017-11-21 8:47 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Nov 20, 2017, 11:18:07 PM11/20/17
to தமிழ் வாசல்
இ சார்! பரிவுக்கும் பாசத்துக்கும் நன்றி!!!
 யார்க்கும் அஞ்சோம்!:):) (உம்மாச்சி காப்பாத்து:))

Iyappan Krishnan

unread,
Nov 21, 2017, 1:28:17 AM11/21/17
to தமிழ் வாசல்
​​இந்த வரிகளில் உள்ள சொற்களை நினைத்துத்தான் வியக்கிறேன். மின்னல் - கணத்தில் இருந்து மறைவது. பயனற்றது. வெறுமனே கண்ணைப் பறிப்பது. பயனற்ற ஒளி வெறும் பகட்டுப் பளிச்சு.

இப்படி நிலையற்றதாம் இந்த உடல்.

சரி. இப்படி ஸ்திரமற்ற ஆக்கையில் குடிகொண்டது எது?

மன் உயிர். - நிலைத்த, மறையாத, அழியாத, நித்தியமாக மன்னும் இந்த உயிர்.

என்ன ஒரு விரசம்! தன்னில் தான் நித்தியமான உயிர் ஏன் இந்த மின் போன்று நிலையில்லா தேகத்தில் குடிகொண்டது? தான் என்றும் வாழ்வதற்கான ஆசையினால்.

என்னய்யா இது.... தானோ நிலையான உயிர். அப்புறம் எதுக்கு உடலில் வாழ்வு? புலன் நுகர்வுகளில் ஆசை. என்ன அவ்வளவு ஆகப்பெரியதா இந்த புலன் நுகர்வுகள்? இல்லை. அல்பம், அசுகம்.

அப்புறம் எதுக்காக முடையா இந்த அல்ப அசுகங்களை இச்சித்து... போங்கப்பா....

அதுதான் வாழ்க்கையின் விரசமே. இதற்கு ஏன் என்ற விடை தேடுவது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் இந்த விரசத்தை உணர வேண்டுமே. சும்மா அவர் சொன்னார், இவர் புத்தகம் எழுதினார், என்ன அருமையான செய்யுள் என்று நயம் சுவைத்துப் போனால் என்ன பயன்.

வாழ்க்கையில் ஒரு கட்டம் வருகிறது. என்று எக்கணம் தெரியாது. திடீரென்று, நப்பு நசை ஆசை மயக்கம் எல்லாம் பொடிந்து, பொசுங்கி விழுகிறது.

வாழ்க்கை மூடு மறைவின்றி, நிர்தாட்சண்யமாக தான் உள்ளது உள்ளபடி தெரிகிறது.

மின்னின் நிலையில... இந்த ஆக்கைகள்

இதிலா இவ்வளவு நாள் இப்படி உழுதேன்... சீ... சீ...

ஆனால் நானோ யார்... இதில் புரளும் ஒரு புழுவா? இல்லை. மன் உயிர். நித்திய நிலைப்பேறு உடைய ஜீவன். ஆத்மா.

போதுமே. இந்த ஆத்மா என்று உணர்ந்தால்... போதுமே.. அதோடு ஏறக்கட்டிவிடலாமே.

என்னும் போது - என்று நீங்கள் உணரும் போது, அப்படியே உறைந்து விடாதீர்கள். ஆக்கை வழிகளில் அலையுண்ட நீங்கள் ‘அப்பாடா’ என்று உங்கள் ஆத்மாவை உணரும் நேரத்தில் சுணங்கி இருந்து விடுவீர்கள். அது பெரும் ஆபத்து. இந்த ஆத்மாவின் இலட்சியம் இறைவனை உணர்வதே அன்றி, தான் ஆகிய ஆத்மாவில் திருப்தி கொண்டு தேங்கிவிடுவது அன்று.

ஒரு பெரும் ஆபத்தில் தப்பித்த நீங்கள், இன்னொரு விதமான ஆபத்தில் ஏமாந்துவிடாதீர்கள்.

என்னும் போது இறை உன்னுமின் நீரே.

இந்த ஆத்மாவிற்கும் ஆத்மாவாய் இருக்கும் இறையைப் பற்றுங்கள்.

*

​இந்த விளக்கத்தை ஒருத்தர் சொன்னார் . ( அவர் யாருன்னு அப்புறம் சொல்றேன் அவரும் நிதமும்  பக்தியில் ஆழ்வார் தான்  ). பாருங்கக்கா வந்து இந்த விளக்கத்துக்கும் விளக்கம் சொல்லுவாங்கன்னு எதிர் பார்க்கிறேன். ​


Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

2017-11-21 8:47 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Nov 21, 2017, 1:32:55 AM11/21/17
to thamizhvaasal
ஒளிகூட்டும்  மின்சாரம் எளிதிலே  உடையும்  கண்ணாடியின் உள்ளே தானே ஒளிர்கிறது, அதற்கு தெரியும்  நிலையில்லாத  எளிதில் உடையக் கூடைய கண்ணாடி   போதும்   நிலையில்லா  வாழ்க்கை  வாழ  என்று , நிரந்தரமாய்க் குடியேற  தேவையில்லை ஆத்மா. அப்படி நிரந்தரமாய்க் குடியேறினால்  அது ஆத்மா  அல்ல  என்றே தோன்றுகிறது   யாக்கை வாடகை வீடுதான்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது



9840686463   9840884852





--

Iyappan Krishnan

unread,
Nov 21, 2017, 3:17:50 AM11/21/17
to தமிழ் வாசல்
​ஒரு பட்டிமன்றத்துல அறிவொளி கேக்கறார் :))

ஒரு சைக்கிள் சக்கரம்  சுத்துனா சத்தம்  உங்களுக்கு காதுல விழுமா
விழும்
ஒரு மோட்டர் சைக்கிள் சக்கரம்  சுத்துனா காதுல விழுமா
விழும்
கார் வீல் சுத்துனா சத்தம் காதுல விழுமா ​
விழும்.. 

ஆனா இந்தா பெரிய பூமி, அது சுத்துனா அந்த சத்தம் ஏன் காதுல விழல 

:))))

Tthamizth Tthenee

unread,
Nov 21, 2017, 3:46:06 AM11/21/17
to thamizhvaasal
பல பேரு நம்ம காதிலே  பூ சுத்தறாங்க  அதோட சத்தமே  நமக்கு கேக்க மாட்டேங்குது  பூமி சுத்தற சத்தம் எப்பிடிக் கேக்கும்  😊

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது



9840686463   9840884852





Iyappan Krishnan

unread,
Nov 21, 2017, 3:56:45 AM11/21/17
to தமிழ் வாசல்
​​“தோகையும் பிரிந்தனள் எந்தை துஞ்சினன்
வேக வெம்பழி சுமந்து உழல வேண்டலேன்;
ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம்;
ஏகுதி ஈண்டு நின்று இளவலே! “ என்றான்.

கட்டினவளும் பிரிஞ்சுட்டா, எங்கப்பாவும் போயிட்டார். இனி உலகத்தின்  பழியையும் சுமந்து கிட்டு நான் இருந்து என்ன பண்ணப் போறேன்..  நான் இந்த பூதத்துக்கு உணவா போயிடறேன்.. நீ தப்பிச்சுப் போய்டுடா லக்‌ஷ்மணா அப்படின்னு ராமன் சொல்றான்.. 



அப்ப இலக்குவன் உளவியல் ரீதியா இராமனை எதிர் கொள்கிறான். 

கம்பன் காட்டும்  உளவியல் மிகவும் நுட்பமானது.. 


“என்தாய், ‘உன்முன் ஏவிய
    யாவும் இசை; இன்னல்
பின்றாது எய்திப் பேர்
    இசையாளற்கு அழிவு உண்டேல்,
பொன்றா முன்னம் பொன்றுதி ‘
    என்றாள்; உரை பொய்யா
நின்றால் அன்றோ நிற்பது
    வாய்மை நிலை அம்மா? ‘‘

எங்கம்மா சொல்லி அனுப்பிருக்காங்க.. நீ உங்கண்ணனோட திரும்பி வீட்டுக்கு வரதுனா வா.. இல்லாட்டா அவனுக்கு ஒரு தீங்கு நேர்ந்து அவனுக்கு அழிவு இருக்கிறதுனு வச்சுக்கோ.. அவனுக்கு முன்னாடி  நீ போய்டு.... அப்படின்னு சொல்லிருக்காங்க..  அதை மீற முடியுமா, அம்மாவின் சொல்லை மீற முடியுமா ?

அப்படிங்கறான்.  

இராமன் சீதையைக் காட்டிலும்  இலக்குவன் மீது அன்பு அதிகம் கொண்டவன்.  

நீருள எனில் மீனுள அப்படின்னு இலக்குவனைச் சொன்னதற்கு காரணம் அது தான். அதாவது நீர்  வற்றிப் போனால் மீனும்  அதனுடன் சேர்ந்து உயிர் விட்டுடும்.   ஆனால் தாமரை அப்படி அல்ல.  தண்ணீர் இல்லை எனினும் கிழங்கில்  ஒடுங்கிவிடும். பின் நீர் வந்தவுடன் மீண்டும் பூத்துவிடும்.  சீதையை தாமரைக்கு ஒப்பிடுவது அதனால் போலும். 


இலக்குவன் இப்படிச் சொன்னதும், இராமனால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியுமா ?


மேலும் உளரீதியாக இராமனை இலக்குவன் நெருங்குகிறான். 

இதப்பாரு ராமா..  நீ இப்ப செத்துப் போய்ட்டா, பாரேன், இவனுக்கு போரிடக் கூட தெம்பில்ல... கட்ன பொண்டாட்டிய ஒருத்தன் தூக்கிட்டுப் போய்ட்டான், அவளைக் காப்பாத்தவும் கூட முடியாம செத்துப் போய்ட்டான் அப்படினு ஊருலகம் பேசுமே ... 

“தணிக்கும் தன்மைத்து அன்று
    எனின் அன்று, இத்தகை வாளால்;
கணிக்கும் தன்மைத்து அன்று,
    விடத்தின் கனல் பூதம்
பிணிக்கும் கையும், பெய்
    பில வாயும் பிழையாமல்
துணிக்கும் வண்ணம் காணுதி;
    துன்பம் துற ‘‘ என்றான்.

துன்பத்தை விடு அண்ணனே,  இவனை பாத்துக்கலாம் ... எவ்ளவோ பாத்துட்டோம்.. இதைப் பாக்க மாட்டோமா அப்படின்னு ஒரு மன உறுதியைக் கொடுக்கிறான் இல்லையா ?

அதனால் தான் 

“ தம்பியொடு தோள்வலி போம் “ அப்படின்னு எழுதி வச்சாங்க.. 

கம்பன்... உளவியலின்  உச்ச கட்டம்.. நிறைய இடங்களில் இதைப் பார்க்கலாம்... 


shylaja

unread,
Nov 21, 2017, 8:57:32 AM11/21/17
to தமிழ் வாசல்
சிறப்பான  விளக்கம்  கம்பனின் உளவியல் பொதிந்த பாடல்கள்  பல இருக்கின்றன.. இயன்ற
போது இப்படி அளிக்கலாம் ஐயப்ஸ்!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Mohanarangan V Srirangam

unread,
Nov 21, 2017, 9:43:31 AM11/21/17
to தமிழ் வாசல்
சலங்கை சத்தம் கேக்குதிய்யா..... 

லேசா கொடி மாதிரி ஆடுது 

என்னாது? 

ஐயப்ப்ஸுவோட அருமையான விளக்கம். 

(சும்மா வடிவேல் ரஜினி குரலில் படிக்கவும் :-) )

Iyappan Krishnan

unread,
Nov 21, 2017, 9:52:33 AM11/21/17
to தமிழ் வாசல்
​இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே... .

( வடிவேலு குரலில் படிக்கவும் )​

Mohanarangan V Srirangam

unread,
Nov 21, 2017, 10:16:54 AM11/21/17
to தமிழ் வாசல்
ஒரு கடவுளுக்கு ஒருவர் ஆராதனை செய்ய நினைக்கிறார். 

என்ன படையல் வைத்து ஆராதனை செய்வது? 

பழம், பணியாரங்கள், பொங்கல் - ஆம் வைத்தாயிற்று. ஆனாலும் ஒரு ஸ்பெஷல் 
பிரசாதம் வைக்கிறார் பாருங்கள்! 

நாராய ணாய நமவென்னு நன்னெஞ்சர் 
பாராளும் பாதம் பணிந்தேத்து மாறறியேன் 
காராரு மேனிக் கருணா கரமூர்த்திக் 
காரா தனையென் னறியாமை யொன்றுமே. 

***

Iyappan Krishnan

unread,
Nov 21, 2017, 11:25:54 AM11/21/17
to தமிழ் வாசல்
ஆஹா.. ஆஹா... 

ஏதில்லை உன்னிடம் என்றுயான்  யோசித்தேன் 
ஓதியதில் ஒன்று மறிந்திலேன் எந்தையே
வாதில்லை, யாவையும் வார்த்தவன் நீயன்றோ
கோதுடை என்குணத்தை  கொல்


அன்புடன்
ஐயப்பன். 


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 21, 2017, 11:54:24 AM11/21/17
to தமிழ் வாசல்
கொஞ்சமே கொஞ்சம் நேரம் ப்ளீஸ்!..இழையைப் படிச்சு, மலைச்சுப் போயிருக்கேன்!!!!!... 

பார்வதி இராமச்சந்திரன் .

   

Iyappan Krishnan

unread,
Nov 21, 2017, 12:01:28 PM11/21/17
to தமிழ் வாசல்
​//ஏதில்லை உன்னிடம் என்றுயான்  யோசித்தேன் 
ஓதியதில் ஒன்று மறிந்திலேன் எந்தையே
வாதில்லை, யாவையும் வார்த்தவன் நீயன்றோ
கோதுடை என்குணத்தைக்  கொல்//
 
ஒற்றுப் பிழை.

பாருங்கக்கா..  கொஞ்சமே கொஞ்சநேரம் முடிஞ்சுடுச்சு.. வாங்க

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 23, 2017, 11:04:53 AM11/23/17
to தமிழ் வாசல்
/////இந்த ஆத்மா என்று உணர்ந்தால்... போதுமே.. அதோடு ஏறக்கட்டிவிடலாமே. 

என்னும் போது - என்று நீங்கள் உணரும் போது, அப்படியே உறைந்து விடாதீர்கள். ஆக்கை வழிகளில் அலையுண்ட நீங்கள் ‘அப்பாடா’ என்று உங்கள் ஆத்மாவை உணரும் நேரத்தில் சுணங்கி இருந்து விடுவீர்கள். அது பெரும் ஆபத்து. இந்த ஆத்மாவின் இலட்சியம் இறைவனை உணர்வதே அன்றி, தான் ஆகிய ஆத்மாவில் திருப்தி கொண்டு தேங்கிவிடுவது அன்று /////. 

இறைவனின் கருணையின்றி, அவன் தாள் பற்றினாலன்றி தன்னை உணர்தல் சாத்தியமா?!!..'தத்வமஸி' என்பது மஹா வாக்கியமல்லவா?!!..ஆசான் சொல்ல விழைவதாக நான் நினைப்பது, உலகியலின் நிலையாமை புத்தியில் உறைக்கும் போதே, இறைவன் பால் நோக்கம் திரும்புதல் நன்று. பற்றுக பற்றற்றான் பற்றினை என்பதற்கிணங்க, இறை மீது வைக்கும் பற்று, உலகியல் பற்றை விரட்டும். நிலைக்காது என்று தெரிந்தும், அதிலேயே உழல்வதை நிறுத்தும். தானும் அதுவும் ஒன்றே என்பதாகவே தன்னை அறிதல் சாத்தியப்படும்!..  

தொடர்ந்து, 'முற்றும்  ம்மையே தமக்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை' என்று, ஆசானே சொல்வாரென்று எதிர்பார்க்கிறேன்!..


பார்வதி இராமச்சந்திரன்.


2017-11-21 11:58 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 23, 2017, 11:06:26 AM11/23/17
to தமிழ் வாசல்
ஆமா, கீதாம்மா எங்க போனாங்க... சீக்கிரம் வாங்க!!..


பார்வதி இராமச்சந்திரன்.


2017-11-23 21:34 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

Iyappan Krishnan

unread,
Nov 23, 2017, 12:19:36 PM11/23/17
to தமிழ் வாசல்
இது அரங்கரின் உரை.  காப்பி பேஸ்ட் மட்டும் என்னுது. 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 23, 2017, 9:00:00 PM11/23/17
to தமிழ் வாசல்
ந்தோஓ...ஓஓஓடீர்ர்ர்றேன் கடசி பெஞ்ச்சுக்கு!...

shylaja

unread,
Nov 26, 2017, 1:34:12 AM11/26/17
to தமிழ் வாசல்
ஹலோ பாரு!  உங்க மதுரைக்காரரு  பாடினபாட்டைப்போட்ட்டுவிட்டு கடசிபெஞ்சுக்கு  ஓடு.

சரி இந்தப்பா  கேள்விப்பட்டிருக்கீங்களாப்பா?:)

சந்தப்பா, விருத்தப்பா, கலிப்பா, வெண்பா
தாழிசைப்பா ,கொச்சகப்பா , தனிப் பாவுக்கும்
விந்தை யப்பாவாகிய கிரந்தப் பாவும்
வெல்லப் பாவது போல விகடப் பாவும்
எந்தப்பா வுரைத்திடினும் ஒரு பேறில்லா
ஏதப்பா விக்குநின திணைப் பாதத்தைக்
கந்தப்பா முருகப்பா போரூர் வாழ்வே
கையப்பா மெய்யப்பா காட்டப் பாவே.''

ஷைலஜா





மாசில் வீணையும் மாலை மதியமும்  
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே  
ஈசன் எந்தை இணையடி நீழலே.

Mohanarangan V Srirangam

unread,
Nov 26, 2017, 1:38:07 AM11/26/17
to தமிழ் வாசல்
அப்பப்பா இத்தனைப்பா அடுக்காதப்பா 
எப்பப்பா இந்தப்பா கற்றாயப்பா 
சுப்பப்பா சொன்னப்பா சொகுசப்பா 
சூப்பரப்பா ஷைலப்பா போட்டதப்பா. 

:-))  

***

shylaja

unread,
Nov 26, 2017, 1:40:50 AM11/26/17
to தமிழ் வாசல்
சூப்பரப்பா ஷைலப்பா போட்டதப்பா. <<<போட்ட(து) தப்பா?:)

:-))  

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Mohanarangan V Srirangam

unread,
Nov 26, 2017, 1:41:29 AM11/26/17
to தமிழ் வாசல்
சொன்னேனாப்பா? :-)

shylaja

unread,
Nov 26, 2017, 1:42:53 AM11/26/17
to தமிழ் வாசல்
 ஐ(யோ)யப்பா:):) எங்கப்பா?:)

Tthamizth Tthenee

unread,
Nov 29, 2017, 8:25:41 AM11/29/17
to thamizhvaasal

பொன்னும் பொருளும் நல்கும் பதிகம்
===========================

இடரினும் தளரினும் எனதுறு நோய் 
தொடரினும் உனகழல் தொழு தெழுவேன் 
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை 
மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் 
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும் போய் 
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன் 
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப் 
போழிள மதிவைத்த புண்ணியனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் 
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா உன்னை 
மனவினும் வழிபடல் மற்வேன் அம்மான் 
புனல்விரி நறுங் கொன்றைப் போதணிந்த 
கனல்எரி அனல்புல்கு கையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் 
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் 
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக் 
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் 
மும்மதில் எரி எழ முனிந்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் 
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

கையது வீழினும் கழிவுறினும் 
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன் 
கொய்யணி நறுமலர் குலாய சென்னி 
மையணி மிடறுடை மறையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் 
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் 
எந்தாய் உன்னடியலால் ஏத்தாது என்நா 
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த 
சந்த வெண் பொடியணி சங்கரனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் 
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும் 
அப்பாவுன் அடியலால் அரற்றாது என்நா 
ஒப்புடை ஒருவனை உருவழிய 
அப்படி அழல் எழ விழித்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் 
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும் 
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன் 
ஏருடை மணிமுடி யிராவணனை 
ஆரிடர் படவரை அடர்த்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் 
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் 
ஒண்மலர் அடியலால் உரையாது என்நாக் 
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல் 
அண்ணலும் அளப்பரி தாயவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் 
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் 
அத்தா உன் அடி அலால் அரற்றாது என்நாப் 
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப் 
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல் 
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த 
இலைநுனை வேற்படை யெம் இறையை 
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன 
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்

வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம் 
நிலையாக முன் ஏறுவர் நிலமசை நிலையிலரே.


அன்புடன்
தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது



9840686463   9840884852





Oru Arizonan

unread,
Nov 29, 2017, 11:35:53 AM11/29/17
to தமிழ் வாசல்
தேனீயாரே,

பத்து ஆண்டுகளுக்குமுன்னர், ஆனைமுகன் எங்க்ள் ஊரில் ஒரு வீட்டில் குடிகொண்டிருந்தபோது, கோவில்கட்டப் பொருளுதவி கிட்டாதபோழ்து, இந்தப்பாசுரத்தை ஒவ்வொரு ஞாயிறன்றும் கூட்டுப்பிரார்த்தனையில் பாடினோம்.  எதிர்பாராமல் பதினைந்து ஏக்கர் நிலம் கிட்டியது.  அதைத் தொடர்ந்து நிதியுதவியும், ஆளுதவியும் பெருகின.

இப்பொழுதும் நான் கோவிலில் தேவாரம் பாடும்போது இப்பதிகத்தில் சிலபாடல்களைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
 
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 


Virus-free. www.avast.com

Mohanarangan V Srirangam

unread,
Dec 2, 2017, 11:32:05 PM12/2/17
to தமிழ் வாசல்
ஊத்துக்காடு கீர்த்தனைகளில் ஒன்று. என்ன ஒரு நகைச்சுவை கலந்த பக்தி ரசம்! 

கண்ணன் என்றால் என்ன நினைவுக்கு வரும்? 

ஆனால் கீர்த்தனை தொடக்க வரியிலேயே ஓர் அப்பாவியான வரியைப் போடுகிறது. 

பாடினால் நிச்சயம் கண்ணனே நமது முகத்தை வளைத்துத் திருப்பி நிஜமாலும் சொல்கிறோமா? அல்லது சும்மானாச்சியுமா? என்றுபார்ப்பானோ என்று தோன்றுகிறது. 

”கள்ளமே அறியா ‐ த ‐ கண்ணனை
கானக்குழல் எதிரொலி மாதுளப கானத்திடையுலவு நீல ஒளிதைனக்
கண்டபடி சொல்லப் போகாதே - அது அந்தரங்கமாகவும் ஆகாதே.” 

***

Iyappan Krishnan

unread,
Dec 4, 2017, 2:42:57 AM12/4/17
to தமிழ் வாசல்
கள்ளமே அறியாஆஆத கண்ணன் ? ம்க்கும்.. ஊத்துக்காட்டார் பார்த்தாராக்கும்.. மாயக்கள்வனாச்சே அவன்.. 


அவர் பாடல்கள் கேட்கும் போது காட்சி கண்ணில் விரியும் பாருங்க.. அப்படி இருக்கும்.


இந்த தாயே யசோதா பாட்டும் அப்படித்தேன்..  அப்படித் தேன்... 

 தாயே யசோதே உந்தன் ஆயர் குலத்துதித்த 
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி. "

ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர் பாடல்களை கேட்கக் கேட்க சுகம் தான் இல்லையா ?  கோபியர்கள் எல்லாம் வந்து யசோதை கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்றாங்களாம்.  இந்தாம்மா புள்ளைய பெத்த மகராசி, தாயே யசோதா.. உன்னோட ஆயர் குலத் தோன்றலான இந்த திருட்டு மாயன் இருக்கிறானே ரொம்ப பொல்லாதப் பிள்ளைப்பா அப்படிங்கறாங்களாம்.

 போங்கடி புளுகாண்டிகளா.. இந்தச் சின்னப் புள்ளப் போயி உங்க கிட்ட என்ன பண்ணிருப்பான் ? என் செல்லக் கண்ணன், முத்துக் கண்ணன், புட்டாணி கண்ணன் ( கன்னட வழக்கு கண்டுக்காதீங்க :)) )  இவனைக் குறை சொல்லலைன்னா உங்களுக்கு எல்லாம் தூக்கம் வராதே அப்படின்னாங்க யசோதை எந்த அம்மா தன் புள்ளைய விட்டுக் கொடுப்பாங்க? 

அப்ப இந்த கோபியர்கள் அவனோட லீலைகளை பட்டியல் போடறாங்க பாருங்க.   படிக்கும் போதே அந்த வர்ணனைகளை உள் வாங்கிட்டா அந்தக் காட்சி உங்க கண் முன்னாடி நிற்கும்.

" காலினில் சிலம்பு கொஞ்ச கைவளைக் குலுங்க முத்து
மாலைகள் அசைய தெருவாசலில் வந்தான். 
வானவரெல்லாம் மகிழ வையவரெல்லாம் புகழ
நீல வண்ண கண்ணன் அவன் நர்த்தனம் ஆடினான் "

அவன் கால்ல சிலம்பு கொஞ்சுது, சின்னப்புள்ளைக்கு கைல வளை எல்லாம் போட்டிருக்க இல்லையா அது அப்படி குலுங்குது. கழுத்துல முத்து மாலை எல்லாம் அசைய அசைய நடந்து தெருவாசல்ல வரான். சிறு நீலப் புயல் என நர்த்தனம் ஆடறான்(  பச்சைப்புயல்: அருணகிரி நாதர்  .. என்ன ஒரு சொல்லாட்சி இல்லையா ரெண்டு பேருக்கும்).  தேவர்கள் எல்லாம் அவனைப் பாத்து மகிழறாங்க. வையத்தில் இருக்கும் அனைவரும் அவனைப் புகழறாங்க. அப்படியான குழந்தைய தூக்கிக் கொஞ்சனும்னு யாருக்குத்தான் ஆசை வராது சொல்லு ?  அப்படித்தான் நாங்களும் எடுத்துக் கொஞ்சினோம்.   இவன் தான் ஊருக்கே செல்லப்பிள்ளையாச்சே.. அதுவும் தலைவர் வீட்டுப் பிள்ளை. தலைவரோ மக்களுக்கு இணக்கமானத் தலைவர்.. கவனிக்க இனமானத்தலவைர் இல்லை.. இணக்கமானத் தலைவர். 

"ம்ம்.. அதுக்கென்ன இப்ப ? "
" அதுக்கென்னவா ? கேளு 

"பாலனென்று தாவி அணைத்தேன். அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி.. 
பாலனல்லடி உன் மகன் ஜாலமிகச் செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிகவாச்சுதடி "


இந்தச் சுட்டிப் பயல.. குட்டிப் பயல்னு தாண்டி தூக்கி அணைச்சுக்கிட்டேன். அடியாத்தி.. என்ன காரியம் செஞ்சுப்புட்டான் அந்த  பையன்.. எங்கூட்டுக்காரர் கூட பண்ணாத வேலைய பண்ணிட்டாண்டி... டக்குன்னு கட்டின புருஷன் மாதிரி வாயில .... ஆங்... ஆஆஆங்.. வாயில முத்தம் குடுத்துட்டாண்டி...  அப்படிங்கறா ஒருத்தி... 

இன்னொருத்தி சொல்றா... “ டீ... ஆத்தா அது சின்ன புள்ளை இல்லைடியம்மா. அவன் பண்ற காரியங்களை.. அய்யோ எனக்கு வெக்க வெக்கமா வருதே எப்படி நாலு பேர்கள் கூடி இருக்கிற இடத்துல நாஞ்சொல்லுவேன்..  நான் மாட்டேம்ப்பா “ 

அப்படிங்கறா
 

அந்த வாசுதேவன் இவன் தான் அடி யசோதா!
மைந்தன்என்று தொட்டுஇழுத்து மடிமேல் வைத்து
சுந்தர முகத்தைக் கண்டு சிந்தை மயங்கும் நேரம்
அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினான் அடி! (தாயே)

இவந்தான் இவந்தான் அந்த வாசுதேவன்.  கண்ணை மூடிப் பாருங்களேன்.. நான்ன்கைந்து பெண்கள் கூடி நிற்பதுவும்,  அங்கே யசோதா நிற்பதுவும், அந்த மாயக்குட்டன் நிற்பதுவும்..  பெண்களெல்லாம் கண்ணனைப் பார்த்து “ இவன் தான் இவந்தான் “ என சுட்டும் காட்சி கண்களில் தோன்றுகிறதல்லவா.. 

  அப்படியே ஒரு சித்திரத்தை நம் முன் படைச்சுட்டார் இல்லைங்களா ?  கண்ணெதிரே கண்ணன் சிலம்பு குலுங்க குலுங்க நடந்து வரும் காட்சி தெரிகிறது.  நெஞ்சம் குழைந்து கை பதை பதைக்கிறது அவனை எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்று.  இந்த நேரத்தில் எந்தக் குழந்தை எதிர் வந்தாலும் நீங்கள் சட்டென்று எடுத்து கன்னத்தில் கன்னம் இழைப்பீர்களா மாட்டீர்களா ? 

இப்படியான ஒரு காற்சிலம்பு காட்சியை ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் காமிக்கிறார். 



னா கம்பன் காட்டும் சிலம்பு காட்சியைப் பாருங்க. அது காற்சிலம்போ அல்லது அரைச் சிலம்போ இல்லைங்க  பல்லாயிரம் மடங்கு பெரிய சிலம்பு.

தாடகை வரப் போறா. விசுவாமித்திரர் தாடகையைக் கொன்றே ஆகனும்னு இராமனுக்குச் சொல்லிட்டு இருக்கார். ஆனா ராமன் மனசுல .. ச்சே  பெண் ஆச்சே எப்படி கொல்றதுன்னு நினைக்கிறான். விசுவாமித்திரர் அதை உணர்ந்து சொல்றாரு.  ஆண்கள் உன்னைக் கண்டால், அவர்களும் உன்னை அடைய தனக்குப்  பெண்தன்மை வேண்டும்னு நினைக்கிற மாதிரி தோள்களை உடைய இராமனே,  அவள் தன் கைக்கு வலையளாக அணிஞ்சிருக்கிறது என்ன தெரியுமா?  பாம்புகள். அவள் கையில் சூலம்  உண்டு. அவள் இந்த வனத்தில் இருக்கிறவள் அவள் பெயர் தாடகை.   இதெல்லாம் சொல்லிட்டு இருக்கார் உடனே அங்க தாடகை வருகிறாள். 

இந்த கற்பக விருட்சம் கிட்ட நின்னு எதுவேணும்னு கேட்டாலும் உடனே வருமாமே.. அதுமாதிரி தாடகைன்னு சொன்ன உடனே தாடகையின் தோற்றத்தை கம்பர் அறிமுகப் படுத்தறார்.  சிலம்புகள் சிலம்பிடை செறித்த கால்களோடு வராளாம். 


கால் சிலம்புகள் இருக்கே அது உள்ள பரல்கள் போட்டாத்தான்  ஓசை வரும் நடக்கும் போது.  தன் காற்சிலம்பில் முத்துக்களை பரல்களாக  மன்னனின் மனைவி கோப்பெருந்தேவி ஆனால் அந்த சிலம்பின்  ஓசைக்காக  சிலம்பினுள் மாணிக்கத்தைப் பரல்களாகக் கொண்டிருந்தவள் கண்ணகி.

"என்காற் சிலம்பு மணியுடை அரியே, எனத் 
தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி 
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே"  -- சிலப்பதிகாரம்.

ஆக பெண்கள் சிலம்பு அணிவது பண்டைய வழக்கத்தில் ஒன்று. ஆண்களுக்கு வீரக்கழல்.  இந்த தாடகை தன்  காற்சிலம்புக்கு பரல்களாக  மலைகளை பறித்துப் போட்டிருக்காளாம். 

சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக, அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக, நிலக் கிரிகள் பின் தொடர, வந்தாள்

சிலம்பு என்றால் மலைகள் என்றும் ஒரு அர்த்தம் உண்டு.  அந்த மலைகளை பரல்களாக உடைய சிலம்பு எவ்வளவு பெருசா  இருந்திருக்கனும் ? அதை அணியும் கால்கள்? அந்தக் கால்களுக்கான உருவம் ?  அப்படியான கால்களால் அவள்  நிலத்தை மிதிக்க, நிலம் உள் குழிய, அந்த குழிந்த காலடித்தடத்தில் கடலின் நீர் உள் புக, கண்களில் நெருப்பு கனன்று கொண்டிருக்கும் எமனும் இவளைப் பார்த்து பயந்து போய் குகைக்குள் ஒளிந்துக் கொள்ள, நிலத்தில் இருக்கும் மலைகள் எல்லாம் அவளைப் பின் தொடர ( ஆயுதமா அவற்றைப் பறித்துக் கட்டி இழுத்துட்டு வருவா போல )  வந்தாளாம்.  என்ன ஒரு காட்சியமைப்பு. கண்மூடி இந்தப் பாட்டை இன்னொருமுறைப் படித்துப் பாருங்கள். தாடகையின் தோற்றம் உங்கள் கண்முன்னே எழும். 

அதெல்லாம் சரி, அதென்ன நிலக் கிரிகள் ? வெறும் மலைகளென ஏன் சொல்லல ?   இவளே பெரிய மலை மாதிரி நடந்து வரா. அப்ப இவளுக்கும் மலைகளுக்கும் வித்தியாசம் தெரியனும்லையா ஆகவே நிலக்கிரிகள் அப்படின்னு தனியா சொல்லிருக்கார். 

அங்கே கண்ணன் கொண்ட  கால் சிலம்பின் காட்சியமைப்பும் இங்கே தாடகைக் கொண்ட கால்சிலம்பின் காட்சியமைப்பும் மனக்கண்ணால் நாம் உணர்ந்துக் கொள்ளச் செய்தது கவிகளின் பெரும் கவியாற்றல் அன்றி வேறென்ன இருக்க முடியும் ?

--

மறுபடி மறுபடி சொல்றேன்.. 

தூண்டி விட்டீங்க... இது மாதிரி உளரிக் கொட்டிட்டே இருப்பேன்.. 

அவ்வ்வ்... உசுப்பேத்திட்டே இருக்காங்க யுவர் ஹானர்.. 

Iyappan Krishnan

unread,
Dec 4, 2017, 2:53:06 AM12/4/17
to தமிழ் வாசல்
ஒரு சந்தேகம்.. 

மதுர பாரதி அண்ணேன், அரங்கர்.. ஷைலஜாக்கா..  கீதாம்மா.. பதில் தெரிந்த  பெரியவர்கள்  யாராச்சும் பதில் சொல்லுங்க. 

“தரு வனத்துள் யான் இயற்றும்
    தவ வேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம
    வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின்
    சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி‘‘ என உயிர்
    இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.


கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதின்னு தானே கேட்டார் விஷ்வாமித்ரர், இராமன் தான் வேணும்னு கேக்கலையே. ஏன் பரதனை அனுப்பல ?

பரதனும் இராமனும் கரிய செம்மல்கள்..
லக்‌ஷ்மணனும், சத்ருக்ணனும் சிவந்த மேனியர்கள். 

அப்படி இருக்கும் போது ஏன் பரதனை அனுப்பிருக்கலாமே... விஸ்வாமித்ரரும் ஏதும் பதில் பேசிருக்க முடியாதே ? ஏன் தயரதன் கரிய செம்மல்ன உடனே இராமன் தான்னு முடிவு பண்ணார் ?

Tthamizth Tthenee

unread,
Dec 4, 2017, 4:31:13 AM12/4/17
to thamizhvaasal
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி‘‘           பரதனைவிட   கரிய செம்மல்  ஶ்ரீராமனே  அதனால் அவனை அனுப்பினர்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது



9840686463   9840884852





shylaja

unread,
Dec 4, 2017, 4:53:47 AM12/4/17
to தமிழ் வாசல்
ஆஹா ஐயப்பா///  உன்  பிரிய தாயே யசோதா பாட்டா?:)   கூடவே கம்பன் வேறு...  கலக்கல்!  

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Dec 4, 2017, 4:56:32 AM12/4/17
to தமிழ் வாசல்
கரிய செம்மலுக்குக்காரணம்  அரங்கனார் மனசு வச்சா விவரமா சொல்லலாம்! ஆனா சொல்லிட்டா  நாகை கன்னியாகுமரில மறுபடி புயல் வரலாம்:):)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Mohanarangan V Srirangam

unread,
Dec 4, 2017, 10:06:18 AM12/4/17
to தமிழ் வாசல்
’நான் ஒரு முட்டாளுங்க 
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க 
நான் ஒரு..’

2017-12-04 13:23 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:

shylaja

unread,
Dec 4, 2017, 10:21:37 AM12/4/17
to தமிழ் வாசல்
பாட்டெல்லாம் நல்லாத்தான் இருக்குங்க  சினிமால நடிகர்  நடிப்புக்காக  பாடினபாட்டுங்க.....நிஜத்துக்கு வாங்க சாமி:)
--
ஷைலஜா




சீர் வந்த உந்தி திசை முகன் அல்லாது என் 
சோர்வு வந்த சொல்லில் சுருங்குமோ ? ஆர்வ 
ஒருவர் அங்கு ஓயில் உகந்து அவரை ஆள்வான் 
திருவரங்க கோயில் சிறப்பு 

பிள்ளைப்பெருமாள் ஐய்யங்கார்

Mohanarangan V Srirangam

unread,
Dec 4, 2017, 10:23:05 AM12/4/17
to தமிழ் வாசல்
நிஜமாவே நான் ஒரு முட்டாளுங்க...:-)

shylaja

unread,
Dec 4, 2017, 10:36:32 AM12/4/17
to தமிழ் வாசல்
’உன் மூத்தகுமாரனைத்தந்தால்போதும்’என  விஸ்வாமித்திரர் சொல்வதாக வால்மீகி  ராமாயணம்  வரி காட்டுகிறது
 ஜ்யேஷ்டம் மே தாதும் அர்கஸி...விஸ்வாமித்ரர் இப்படி  சொல்றது அரங்கனாருக்கு அர்த்தம் தெரியும் ஆனாலும்  சரியான நேரத்தில் மௌனம் காப்பதும் ஒன்றுமே தெரியாதென தப்பிப்பதும் அவர் வழக்கம். பரவாயில்லை அண்ணலைப்பற்றி எழுத எனக்குக்கசக்காது அதற்கும் கொடுத்துவைத்திருக்கணும்.”குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல்  நின்றாடுகணமயில்போல் நிறம் உடைய என்கிறார் பெரியாழ்வார்.  தஸராத்ரம் ஹி யஞ்ஞஸ்ய..அதாவது பத்துநாள்தான் அதிகமில்லை யாகம்பூர்த்தியானதும்  தந்துவிடுகிறேன் என்பதாக...
(தொடரும்)

2017-12-04 20:51 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

Mohanarangan V Srirangam

unread,
Dec 4, 2017, 10:42:16 AM12/4/17
to தமிழ் வாசல்
வால்மீகி ராமாயண சுலோகம் இந்தச் சுட்டியில் இருக்கிறது தாயே. 

உள்ளதைச் சொன்னால் நம்பணும். நோ புக்ஸ். நோ ப்ரெயின். வாட் டு டூ? 


विश्वामित्रो ययावग्रे ततो रामो धनुर्धर:।

काकपक्षधरो धन्वी तं च सौमित्रिरन्वगात्।।1.22.6।।


विश्वामित्र: Viswamitra, अग्रे in the forefront, ययौ walked, तत: behind him, धनुर्धर: with bow in his hand, राम: Rama (followed), काकपक्षधर: having side locks of hair, धन्वी an archer, सौमित्रि: Sumitra's son Lakshmana, तम् अन्वगात् followed him.

Viswamitra walked in the forefront. Behind him was Rama, bow in hand, while in the archer, Sumitra's son (Lakshmana) with side locks of hair followed.

shylaja

unread,
Dec 4, 2017, 10:43:56 AM12/4/17
to தமிழ் வாசல்
தசரதன்  மகனை அனுப்பத்தயங்கினாலும்  கௌசல்யா  உடனே சம்மத்திதாளாம்  ஏனென்றால் அவளுக்குத்தெரியுமாம்  ராமன் தான் திருமால் என்று. தினமும் ராமனின் சயனக்கோலம்  பார்ப்பாளாம். அரண்மனையில் இருக்கிற ரங்கவிமானத்தில் அரங்கப்பெருமான் சயனித்திருப்பதைப்போலவே  அந்தக்கோலம் அவள் கண்களுக்குக்காட்சி அளிக்குமாம்.அரங்கனைப்போல  யாரால் அப்படிப்படுக்கமுடியும் ராமனால்தான் முடிகிறது பன்னிரண்டு ஆண்டுகள்  அதைப்பார்த்த அனுபவம் பரவசம் உள்ளத்தெளிவு..ஆகவே தான் கௌசல்யா சுப்ரஜா ராமா!!
(தொடரும்)

2017-12-04 21:06 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
It is loading more messages.
0 new messages