ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

973 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Jul 13, 2012, 10:29:50 PM7/13/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

அன்பார்ந்த நண்பர்களே,


வணக்கம்.  சிதம்பரம் குறித்த தொடரை எழுதும்போதே ஸ்ரீரங்கம் குறித்தும் எழுத ஆவலாக இருந்தது.  ஆனால் தகவல்கள் திரட்டுவது தான் எப்படி எனத் தெரியவில்லை.  தற்சமயம் ஸ்ரீரங்கவாசியாக ஆனதில் ஒரு சில தகவல்களைத் திரட்டி உள்ளேன்.  மேலும் தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறேன்.  இது வரையிலும் இருபது பக்கங்கள் எழுதி வைத்திருக்கிறேன்.  இதிலே தவறாக ஏதேனும் இருந்தால், ஸ்ரீரங்கவாசிகள் குறிப்பாக ஸ்ரீ வைணவர்கள் நம் மின் தமிழில் உள்ளவர்கள் தவறுகளையும் என் உளறல்களையும் தயங்காமல் சுட்டிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.  வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த ஆதாரங்கள், அரங்கன் உலா போன்றவற்றிற்கான சரியான தகவல்களுக்குக் காத்திருக்கிறேன்.   ஆதாரமற்ற தகவல்கள்  குறிப்பிடப் பட்டால் தயவு செய்து சுட்டிக் காட்டவும்.  பலரும் எழுதி இருப்பார்கள்.  ஆகவே புதியதாக எதுவும் இருக்காது என்றால் அதையும் மன்னிக்கும்படி வேண்டுகிறேன்.




வைணவர்களுக்கு 108 திவ்ய தேசங்கள் என மஹாவிஷ்ணு கோயில் கொண்டிருக்கும் இடங்களை முக்கியமாகச் சொல்லுவார்கள்.  அவற்றில் முதன்மையானது ஸ்ரீரங்கம்ஆகும். ஸ்ரீரங்கம் மிகவும் பழமையான கோயில் ஆகும்.  ஸ்ரீரங்கநாதர் இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த அரசர்களின் குலதெய்வம் ஆவார்.  ஸ்ரீராமர் அவதரித்த இக்ஷ்வாகு குலத்து மன்னரான இக்ஷ்வாகு ஒரு சமயம் பிரம்மாவை நோக்கித் தவம் இருந்தார். அவருக்கு பிரம்மாவிடம் இருந்த ஶ்ரீரங்க விமானத்துடன் கூடிய பெருமானின் அர்ச்சா விக்ரஹத்தை வைத்து வழிபட வேண்டும் என நீண்ட நாள் ஆவல்.  அதற்காக பிரம்மாவிடம் அதை வேண்டித் தவம் இருந்தார்.  பிரம்மாவிடம் ஸ்ரீரங்கவிமானத்தில் பள்ளி கொண்ட பெருமாளின் திருவுருவோடு கூடிய ஒரு அர்ச்சா விக்ரஹம் இருந்தது.  அதை பிரம்மா பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து பாற்கடலில் இருந்து பெற்றார்.  அந்த விமானத்தின் முன்னர் அமர்ந்த வண்ணம் நான்கு வேதங்களையும் பிரம்மா ஓதி இருக்கிறார்.  இந்த ரங்க விமானமும் பாற்கடலில் பள்ளி கொண்ட உருவில் இருந்த ஸ்ரீரங்கநாதரின் அர்ச்சா விக்ரஹத்தையும் வேண்டியே இக்ஷ்வாகு தவம் இருந்தார்.  பல்லாண்டுகள் தவம் செய்தார்.  அவரின் தவத்தின் கனல் பிரம்மலோகம் போய்த் தாக்க வேறு வழியின்றி பிரம்மா அவர் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்டார்.  இக்ஷ்வாகுவும் அவரிடம் இருக்கும் பெரிய பெருமாளின் அர்ச்சாவிக்ரஹம் அதைச் சார்ந்த ரங்க விமானத்துடனே தன்னிடம் அளிக்குமாறும் தானும், தன் வம்சாவளியினரும் அதைப் பூஜித்து வருவதாகவும் வேண்டினார். 

 

அப்படியே பிரம்மாவும் அந்த அர்ச்சா விக்ரஹத்தை இக்ஷ்வாகுவுக்கு அளித்தார்.  இக்ஷ்வாகுவும் அதைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீரங்கநாதரைத் தங்கள் குலதெய்வமாக வணங்கி வந்தான்.  இக்ஷ்வாகுவிற்குப் பின்னர் பல்லாண்டுகள் கழித்துச் சூரிய வம்சத்தில் இக்ஷ்வாகுவின் குலத்தில் தோன்றிய ஸ்ரீராமர் ராவண வதத்திற்குப் பின்னர் அயோத்தி வந்து பட்டம் சூட்டிக் கொண்ட சமயம் விபீஷணனும் அங்கே வந்திருந்தான்.  அவன் திரும்ப இலங்கைக்குச் செல்லும் சமயம் அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பிய ஸ்ரீராமர் அவனிடம் என்ன பரிசு வேண்டும் எனக் கேட்க, ஸ்ரீராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரையே தன்னிடம் அளிக்குமாறு கேட்கிறான் விபீஷணன்.     கொடுத்த வாக்கை நிறைவேற்ற எண்ணிய ஸ்ரீராமரும் அவ்வாறே விபீஷணனிடம் ரங்க விமானத்தோடு கூடிய ரங்கநாதரை அளிக்கிறார்.  பெருமானைத் தானே தாங்கிக் கொண்டு பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் ஆகாய மார்க்கமாக விபீஷணன் வந்தான்.  பெருமானுக்கோ பாரதத்தை விட்டோ அல்லது சூரியகுலத்தை விட்டோ செல்ல இஷ்டமில்லை போலும்.  ஒரு திருவிளையாடலை நடத்தித் தன்னை பாரதத் திருநாட்டிலேயே இருத்திக் கொண்டார்.

 

பெருமானைச் சுமந்து கொண்டு வந்த விபீஷணன் அதை எங்கேயும் கீழே வைக்கக்கூடாது என்ற உறுதியுடன் வந்து கொண்டிருந்தான்.  ஆனால் ஸ்ரீரங்கநாதரோ சூரியகுலத் தோன்றல்களிடமே இருக்க விரும்பினார்.   மாலை மயங்கும் நேரம்.  அன்றாட அநுஷ்டானங்களை விட முடியாது.  அதோடு இயற்கையின் உபாதை வேறு விபீஷணனுக்கு. கையில் வைத்திருந்த விமானத்தோடு கூடிய ஸ்ரீரங்கநாதரை எங்கேயும் கீழே வைக்கக் கூடாது.  பின் என்ன செய்வது?  சுற்றும் முற்றும் பார்த்தான்.  அங்கே ஒரு அந்தணச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.   நதி ஒன்று இரு பிரிவாகப் பிரிந்து மாலை போல் ஓடிக் கொண்டிருந்தது.  அது காவிரி என்பதைக் கண்டு கொண்ட விபீஷணன், அந்தச் சிறுவனை அழைத்து விக்ரஹத்தைக் கையில் வைத்துக்கொள்ளுமாறும், தான் நதியில் இறங்கி மாலை நேர அநுஷ்டானங்களை முடித்துவிட்டு வருவதாகவும் கூறி விக்ரஹத்தைக் கையில் கொடுத்தான்.  அந்தப் பிள்ளையோ மறுத்தது.  தன்னால் தூக்க முடியாது எனப் பிடிவாதம் பிடித்தது.  விபீஷணன் பிள்ளையைச் சமாதானம் செய்து அவனால் தூக்க முடியாமல் கனம் அதிகம் தெரிந்தால் தன்னை அழைக்குமாறு கூறிவிட்டுப் பிள்ளையின் கையில் கொடுத்தான்.  பிள்ளையும் வேறு வழியில்லை போல என நினைத்தாற்போல் குறும்புச் சிரிப்புடன் வாங்கிக் கொண்டது. 

 

சற்று நேரம் பொறுத்தது அந்தப் பிள்ளை.  விபீஷணன் திரும்பிப் பார்த்தான்.  பிள்ளையின் கைகளில் விமானம் பத்திரமாக இருந்ததைக் கண்டான்.  நதியில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டான்.  அவன் தலை நிமிர்வதற்குள்ளாக அந்தப் பிள்ளை விமானத்தைக் கீழே வைத்துவிட்டு ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டான்.  கோபம் கொண்ட விபீஷணன் ஓட்டமாக ஓடி வந்து விக்ரஹத்தை எடுக்க முனைந்தான்.  அவனால் முடியவில்லை. அந்தப் பிள்ளையைத் துரத்தினான்.  அது பிடிபடவே இல்லை.  ஒரே ஓட்டமாக ஓடியது.  ஒருவாறு பிடிக்க நினைத்தபோது எதிரே தோன்றியதொரு மலையில் ஏறிற்று.  மூச்சு வாங்கத் தானும் மலையில் ஏறிய விபீஷணன் அந்தப் பிள்ளையைப் பிடித்து உச்சந்தலையில் ஓங்கிக் குட்ட நினைத்தபோது அவன் கண்ணெதிரே காட்சி அளித்தார் பிள்ளையார்.  “அப்பனே, ஸ்ரீரங்கனுக்கு இங்கிருந்து செல்ல இஷ்டமில்லை. அதனால் என்னுடன் சேர்ந்து அவர் நடத்திய திருவிளையாடலே இது.” என்று கூற பிள்ளையாரைக் குட்ட வந்த விபீஷணன் தன் தலையில் தானே குட்டிக் கொண்டு, “விநாயகா, என் நாட்டில் பிரதிஷ்டை செய்ய நினைத்து எடுத்துச் செல்ல இருந்த விக்ரஹத்தை இங்கேயே விட்டுச் செல்ல எனக்கு மனம் வரவில்லையே!’ என வருந்த, “கவலை வேண்டாம் அப்பனே! ஸ்ரீரங்கநாதர் தெற்கு முகமாக முகத்திருமண்டலத்தை வைத்துக்கொண்டு உன் நாட்டைப் பார்த்த வண்ணமே குடி இருப்பார்.  உன் நாடு சுபிக்ஷமாக இருக்கும்.  எந்தக் குறையும் வராது.”  என ஸ்ரீரங்கநாதரும், பிள்ளையாரும் அருளிச் செய்தனர்.  இந்த வரலாறு ஸ்ரீரங்க மஹாத்மியத்தில் தர்ம வர்மா என்னும் சோழ மன்னனின் வேண்டுகோளின்படி விபீஷணனே விரும்பி விக்ரஹத்தை அளித்ததாய்ச் சொல்லப் படுகிறது.  மேலும் பிள்ளையாரைப் பிடித்து உச்சந்தலையில் விபீஷணன் குட்டியதாகவும், பிள்ளையார் எனத் தெரிந்ததும், தன் தலையில் தானே குட்டிக் கொண்டதாகவும் ஒரு ஐதீகம்.  அந்தக் குட்டு விழுந்த இடம் இன்றும் பிள்ளையாரின் தலையில் பள்ளமாய்க் காணப்படுவதாகவும் சொல்கிறார்கள்.   பிள்ளையாருக்கு விபீஷணன் வைத்துக்கொண்ட குட்டுக்களைத்தான் நாம் இன்றளவும் தொடர்கிறோம் என்றும் சொல்வார்கள்.   மேலும் பிள்ளையார் விபீஷணனிடமிருந்து தப்பிச் சென்ற இடம் தான் உச்சிப் பிள்ளையார் கோயில் என்றும் சொல்வார்கள்.

 

விபீஷணன் விக்ரஹத்தை எடுக்க முடியாமல் இலங்கை திரும்பியதையும் நடந்த விபரங்களையும் அப்போது சோழ நாட்டை ஆண்டு வந்த தர்ம வர்மா என்னும் மன்னன் தெரிந்து கொள்கிறான்.  அரங்கனுக்கு அங்கேயே ஒரு கோயில் கட்டி வழிபட்டான்.  நாளாவட்டத்தில் தர்மவர்மா காலத்திற்குப் பின்னர் காவிரியில் ஏற்பட்ட அதீத வெள்ளம் காரணமாக ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுர உச்சி வரை மண்மேடிட்டுக் காடுகள் ஏற்பட்டுக் கோயில் காட்டினடியில் மறைந்து போனது.  அவன் காலத்திற்குப் பின்னர் வந்த சோழன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தினடியில் சற்று இளைப்பாற அமர்ந்தான்.  அப்போது திடீரென ஸ்ரீரங்கநாதர் குறித்தும், அவரின் கோயில் குறித்தும் யாரோ ஸ்லோகமாய்ச் சொல்வது மன்னன் காதுகளில் விழுந்தது.  சுற்றும் முற்றும் பார்த்த மன்னன் மரத்தின் மேலே இருந்த ஒரு கிளி அது என அறிந்து கொண்டான்.  உடனேயே மன்னன் தன் ஆட்களை அழைத்து அங்கே தோண்டிப் பார்க்கச் சொன்னான்.  எதுவும் கிடைக்கவில்லை.  ஏமாற்றத்துடன் சென்ற மன்னன் கனவில் அன்றிரவு ஸ்ரீரங்கநாதரே தோன்றித் தாம் இருக்குமிடத்தைக் காட்டியருளினார்.

 

மன்னனும் காட்டை அழித்தான். மணலை நீக்கினான்.  கோயிலும், அதன் பிரகாரங்களோடு புதைந்திருப்பதும், ஸ்ரீரங்க விமானமும்,ஸ்ரீரங்கநாதரின் அர்ச்சா விக்ரஹமும் கிடைத்தது.   கோயிலை முன்னிருந்தவாறே திருத்தி அமைத்தான்.  தன்னுடைய நினவாகக் கிளி மண்டபத்தைக் கட்டினான்.  கிளியின் மூலம் இறைவன் இருக்குமிடம் தெரிந்ததால் கிளிச்சோழன் என்ற பட்டப் பெயரையும் பெற்றான்.  வைணவர்களுக்குக் கோயில் என்றால் திருவரங்கம் தான்.  அதே போல் அவர்கள் திருமலை என்றால் திருப்பதிக் கோயில் தான்.  பெருமாள் கோயில் என்றால் காஞ்சிபுரம் பெருமாள் கோயிலைக்குறிக்கும்.  இந்தக் கோயில் அவர்களுக்கு முதன்மை பெற்றதாக ஆனது.  ஸ்ரீ என்னும் வடமொழி எழுத்துக்குப் பதிலாக திரு சேர்த்து திரு சீரங்கநாதன் பள்ளி/(அரங்கன் பள்ளி கொண்டிருப்பதால்) என்ற பெயரால் அழைத்து வந்தனர்.  பின்னர் அதுவே மருவி திருச்சிராப்பள்ளி என ஆனது என்று சிலர் கூற்று.  இன்னும் சிலர் உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்டிருக்கும் மலையின் மூன்று சிகரங்களை வைத்து திரி=மூன்று, சிகரங்கள் உள்ள பள்ளி என்ற திரிசிகரப் பள்ளி என்றும், இன்னும் சிலர் சிரா என்னும் சமண முனிவரின் பள்ளி இந்த மலையில் இருந்ததால் திரிசிராப்பள்ளியே திருச்சிராப்பள்ளி என்றானது என்றும் கூறுகிறார்கள்.  திரிசிரன் என்ற மூன்று சிரங்களை உடைய இவ்வூரில் இருந்து வழிபட்டு வந்தமையால் இந்தப்பெயர் பெற்றதாகவும் கூறுவார்கள்.  ஆனால் நாம் இப்போது பார்க்கப் போவது ஸ்ரீரங்கம் மட்டுமே.  வடக்கே கொள்ளிடம் சுற்றிவர, தெற்கே காவிரி அணைத்துவர நடுவே பள்ளி கொண்டிருக்கிறார் ஸ்ரீரங்கநாதர்.  இது தான் பழங்காலத்திலே சொல்லப்பட்ட நாவலந்தீவு என்பாரும் உண்டு. 

Mohanarangan V Srirangam

unread,
Jul 14, 2012, 2:36:49 PM7/14/12
to thamiz...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
>>>இதிலே தவறாக ஏதேனும் இருந்தால்ஸ்ரீரங்கவாசிகள் குறிப்பாக ஸ்ரீ வைணவர்கள் நம் மின் தமிழில் உள்ளவர்கள் தவறுகளையும் என் உளறல்களையும் தயங்காமல் சுட்டிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன். <<<<< 



இந்த இடத்தில் ஒரு வேளை என்னைப் பற்றியும் மனத்தில் கொண்டு கீதாம்மா எழுதியிருப்பாரோ என்ற ஐயத்தில் சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லிவிடுதல் சரியானது என்று நினைக்கிறேன். கீதாம்மா என் மனப்பாங்கை நன்கு அறிவார். எனவே அவர் என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

என்னவென்றால், 

பொதுவாக ஸ்ரீவைஷ்ணவம் பற்றி எழுதும் போது ஸ்மார்த்தர்கள் என்னும் ஐயர்களில் கொஞ்சம் கணிசமான பேர்கள் உள்ளே ஸ்ரீவைஷ்ணவத்தின்பால் வைஷம்யத்தையும், வெறுப்பையும், ஒருவித கேலிக் கிண்டலையும் உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டே எழுதுவதையும், பேசுவதையும் நீண்ட காலமாகப் பார்த்து வருகிறேன். எனவே பொதுவாக இப்படிப் பட்டவர்கள் எழுதும் ஸ்ரீவைஷ்ணவம் பற்றிய எழுத்துகளைப் படிக்காமல் இருப்பது நான் கண்ட நடைமுறை நன்மையாக இருந்து வந்திருக்கிறது. 

ஏன் இந்த விதமான வெறுப்பும், கிண்டலும் வைணவத்தின்பால் இந்தக் குழுவினரில் சில பகுதியினரால் வழிவழியாகப் பேணப்பட்டு வந்திருக்கிறது, அதுவும் முன் தலைமுறை பின் தலைமுறைக்கு, பாட்டி பேரனுக்கு, தாத்தா பேத்திக்கு என்னும் பாங்கில் என்பது எனக்குப் புரியாத விஷயம். ஆனால் வைணவத்திலிருந்துதான் அத்வைத சம்ப்ரதாயத்தினரில் சிலர் அல்லது பலர் தடக்களவு செய்யப்பட்டுத் திசை மாற்றிச் செலுத்தப்பட்டார்கள் என்பது பல அத்வைதப் பெரியோர்களே பணிக்கக் கேட்டிருக்கிறேன் என்னும் போது இந்தப் புதிர் எனக்கு இன்னும் அவிழ்ந்தபாடில்லை. 

இந்த விஷயத்தில் சைவ சித்தாந்திகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. காரணம் அவர்கள் தாங்கள் எப்படி ஒரு சித்தாந்தத்தைச் சார்ந்தவர்களாக நெறி பேணுகின்றார்களோ அப்படியே மற்றவர்களும் தங்கள் நெறியில் தீவிர ஈடுபாட்டுடன் இருபபர்கள் என்று அந்த வரம்பிற்குள் மதித்து ஒதுங்கிக் கொள்வார்கள். 

ஆனால் பொதுவாக அத்வைத சம்ப்ரதாயம் என்று கூறிக்கொள்வோர் தங்களுடைய ஸ்ரீ ஆதிசங்கரர் தம்முடைய ப்ரஸ்தான த்ரய உரைகளிலும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையிலும் என்ன அறுதிப்பாடான கருத்துகளை வரைந்திருக்கிறார் என்பதை ஒன்றும் அறியாதவர்களாய், எந்தத் திசை, எந்த ஈடுபாடு என்று எதுவும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றனர். எதிர்மறையான அடையாளமே இவர்களில் கணிசமான பேர்களை அடையாளப்படுத்துகிறது பெரும்பாலான நேரங்களில். அது என்னவெனில் குறிப்பாக ஸ்ரீவைஷ்ணவத்தின்பால் காரணம் தெரியாத த்வேஷமும், வெறுப்பும், கிண்டலும், கேலிச்ச்சிந்தையும் கொண்டிருப்பது ஒன்றே இவர்களை அடையாளப்படுத்துவதாய் அமைந்துவிடுவது ஒரு துரதிர்ஷடம். 
( இதில் பெரும் நகைச்சுவையான விஷயம் என்னவெனில் ஸ்ரீ ஆதிசங்கரர் சைவத்தை ஸ்தாபித்தார், சாக்தத்தை ஸ்தாபித்தார், வைஷ்ணவத்தையும் அவர்தான் ஸ்தாபித்தார், முருகக் கடவுள் வழிபாடான கௌமாரத்தையும் அவரே ஸ்தாபித்தார், முருகக் கடவுள் தமையனான கணபதி வழிபாட்டையும் ஆதிசங்கரரே ஸ்தாபித்தார். சூரிய வழிபாட்டையும் அவரே ஸ்தாபித்தார். ஆறு மதஙக்ளையும், ஷண் மதங்களையும் அவரே ஸ்தாபித்தார் என்று அந்தந்த சித்தாந்தத்தினர் நகைக்கும் வண்ணம் பிற்காலத்தார் கட்டிவிட்ட கதைகளே இன்று ஸ்ரீஆதிசங்கரரின் சரிதம் போல் வலம் வருகிறது.)

ஆனால் இவர்களில் பலர் திசைக்களவு ஆவதற்கு முன்னர் பஜனை சம்பரதாயம், தீவிர ராதா ப்ரேமை சித்தாந்தம், தீவிர கிருஷ்ண பக்தி என்றபடி வைணவத்தின் சில சாரமான பகுதிகளைத் தம் சமுதாய வாழ்க்கையினாலேயே நெடுங்காலம் பேணித் தந்திருப்பது இதுவரை ஆவணப் படுத்தப்படாத ஒரு நல் வரலாறாய் இருந்திருக்கிறது. 

எனவே இத்தகைய மனப்பான்மையில் இருக்கும் என்னால் கீதாம்மாவின் எழுத்தை reservations கொண்டுதான் அணுக முடிகிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். 

இவற்றையெல்லாம் விஞ்சி எழுந்து கீதாம்மாவின் எழுத்து எடுத்துக்கொண்ட தலைப்புக்கு full justice ஒரு வேளை செய்யும் பட்சத்தில் அதற்கு இப்பொழுதே தலைவணங்குகிறேன். 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

 

2012/7/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Geetha Sambasivam

unread,
Jul 14, 2012, 9:52:06 PM7/14/12
to thamiz...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ணா!  உங்களையும் ஷைலஜாவையும் நினைத்துக் கொண்டது உண்மையே. ஏனெனில் இருவரும் என்னை விட அதிகமாய் ஸ்ரீரங்கத்தை அறிந்தவர்கள். ஆகவே தவறு கண்ட இடத்தில் தயங்காமல் சுட்டிக் காட்டவும்.  மற்றபடி ரிசர்வேஷனோடு அணுகுவது எல்லாம் உங்கள் விருப்பம்.  கருத்தை வெளிப்படையாகச் சொன்னதை முழு மனதோடு ஆதரித்து வரவேற்கவும் செய்கிறேன். நன்றி.

2012/7/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
>>>இதிலே தவறாக ஏதேனும் இருந்தால்ஸ்ரீரங்கவாசிகள் குறிப்பாக ஸ்ரீ வைணவர்கள் நம் மின் தமிழில் உள்ளவர்கள் தவறுகளையும் என் உளறல்களையும் தயங்காமல் சுட்டிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன். <<<<< 




எனவே இத்தகைய மனப்பான்மையில் இருக்கும் என்னால் கீதாம்மாவின் எழுத்தை reservations கொண்டுதான் அணுக முடிகிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். 

இவற்றையெல்லாம் விஞ்சி எழுந்து கீதாம்மாவின் எழுத்து எடுத்துக்கொண்ட தலைப்புக்கு full justice ஒரு வேளை செய்யும் பட்சத்தில் அதற்கு இப்பொழுதே தலைவணங்குகிறேன். 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

 

35B.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Jul 14, 2012, 9:54:46 PM7/14/12
to தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், மின்தமிழ்
கவனத்தில் கொள்வேன் ஐயா.  என்னைப் பொறுத்தவரை நான் தட்டச்சும் கட்டுரைகளிலேயே பல என் கருத்துக்கு முரண்பாடானவையே.  அதற்கும், தட்டச்சுவதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதால் விருப்பு, வெறுப்பின்றியே செய்து வருகிறேன்; செய்தும் வருவேன்.  என்றாலும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை என்பதை அறிவுறுத்தியதற்கு நன்றி. வணக்கம்.

2012/7/15 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
சரியான நேரத்தில் அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி
நாகராசன்
35B.gif

திவாஜி

unread,
Jul 15, 2012, 2:36:07 AM7/15/12
to thamiz...@googlegroups.com
2012/7/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஆனால் பொதுவாக அத்வைத சம்ப்ரதாயம் என்று கூறிக்கொள்வோர் தங்களுடைய ஸ்ரீ ஆதிசங்கரர் தம்முடைய ப்ரஸ்தான த்ரய உரைகளிலும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையிலும் என்ன அறுதிப்பாடான கருத்துகளை வரைந்திருக்கிறார் என்பதை ஒன்றும் அறியாதவர்களாய், எந்தத் திசை, எந்த ஈடுபாடு என்று எதுவும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றனர்.
 

ஏன் அத்வைதம்? எல்லா மார்கத்தினரிலும் இப்படி கொஞ்சம் / அரை குறை ஆக புரிந்து கொண்டவர்கள் ஏராளம்.

இப்ப பாஷன் எம் மதமும் சம்மதமே! இவர்களுக்கு தம் மதத்தை பற்றியும் தெரியவில்ல  இதரர் மதத்தை பற்றியும் தெரியவில்லை.

எம் மதமும் சம்மதம் என்பதால் "இல்லை , என் மதமே சம்மதம்" என்பவர்கள் அந்நியப்பட்டு போகிறார்கள். அதனால் இவர்கள் சாடத்துவங்குகிறார்கள்.

ஏன் சாடணும்? அத்வைதியா இருந்தா அவங்களையேதானே சாடிக்கீறாங்க? த்வைதியா இருந்தா அவங்களோட தெய்வத்தைதானே சாடறாங்க?
அப்படி எல்லாம் யோசனை போகாது.

இன்டெலெக்சுவலா புரிஞ்சுக்கறதும் நடை முறைக்கு வரதுக்கும் நிறைய இடைவெளி இருக்கு!
ஏன், யாக்கை நிலையாமை பத்தி பத்தி பத்தியா எழுதக்கூடியவங்க ஒரு ஜீவன் சட்டையை மாத்தினதுக்கு புலம்பறாங்க?

அது அப்படித்தான்.

த்வைதமோ அத்வைதமோ விசிஷ்டாத்வைதமோ  தம் மார்கத்தில் ஆழமாக போனவர்கள் மற்றவர்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. தாம் உண்டு தம் கொள்கையுண்டு தம் 'தெய்வம்' உண்டு என்றிருப்பார்கள். அடிதடி சண்டையே அரைகுறைகளால்தான். 

நாம் எழுதுவதெல்லாம் ஒரு இன்டெலெக்சுவல் எக்சர்சைஸ்தான். இன்னும் ஒரு படி மேலே சொல்ல இன்டலெக்சுவல் ஜிம்னாஸ்டிக்ஸ். எழுதுபவருக்கு எழுதும் போது ஒரு மனதெளிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது தவிர  பிரயோசனம் எதுவும் உண்டா என்பது சந்தேகமே!

என் 2 காசு!
(இதுவும் கூட ஒரு மென்டல் ஜிம்னாஸ்டிக்ஸ்தான்!)

--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 15, 2012, 3:23:02 AM7/15/12
to thamiz...@googlegroups.com
நாம் எழுதுவதெல்லாம் ஒரு இன்டெலெக்சுவல் எக்சர்சைஸ்தான். இன்னும் ஒரு படி மேலே சொல்ல இன்டலெக்சுவல் ஜிம்னாஸ்டிக்ஸ். எழுதுபவருக்கு எழுதும் போது ஒரு மனதெளிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது தவிர  பிரயோசனம் எதுவும் உண்டா என்பது சந்தேகமே!

எனக்கும் இது சரிதான் என்று தோன்றினாலும் இவை போன்ற இன்டெலக்சுவல் ஜிம்னாஸ்டிக்கினால் சில பயன்களும் விளைவதை மறுப்பதற்கு இல்லை.  

அது சரி.  எனக்கு சரி, தப்பு என்பதை எல்லாம் யார் பொருட்படுத்தப்போகிறார்கள்?

ஆனால், ஒரு வித உளைச்சல், தேடல், பயணம் ரங்கனார் மேற்கொண்டிருப்பது அடுத்தவருக்கும் பயனளிப்பதாக இருக்கிறது.

அடுத்தவர்களை ஏன் சொல்ல வேண்டும்?

என்னையே சொல்லிக் கொள்கிறேனே.

அத்வைதத்திலும் த்வைதத்திலும், விசிஷ்டாத்வைதத்திலும் எனக்கு எவ்விதமான வாசிப்போ ஞானமோ கிடையாது.  தேடிப் போகிற ஆர்வம் கிடையாது.  தேடிப்போனாலும் புரியாமல் திரும்பி ஓடிப்போகின்ற ஒருவகையான அச்சத்தன்மையும் உள்ளவன்.
 
என் முன்னோர்கள் த்வைத சம்பிரதாயத்தில், நம்பிக்கையில் கிளைத்தவர்கள் என்றாலும் எனக்குத் தெரிந்து மாத்வ சம்பிரதாயம் எனக்கு மிகவும் பிடித்த ஒப்பட்டு (போளி) மற்றும் பயத்தம் பருப்பு பாயசம் மட்டுமே.   மந்திராலயத்திலும் உடுப்பியிலும் உயிர் போகிற மாதிரி பசித்து ஏறத்தாழ மரணத்தை சந்திக்கிற மாதிரி இருக்கும் தருவாயில் எங்கள் மடாதிபதி பூஜையை முடித்து விட்டு சாப்பிட அனுமதிக்கும்  போது உண்ணும் உணவின் சுவை தெரியும்.  முதலில் பரிமாறப்படும் அந்த ரசத்தின் வாசனை இரண்டு நாட்கள் உள்ளங்கையிலேயே துரத்திக் கொண்டு வரும் சுகம் தெரியும்.

ஆனால் த்வைதம் என்று சொல்லப்படும்   School of Thought பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

என்னைப் போன்றவர்களுக்கு ரங்கனார் அளிக்கும் தத்துவங்களின் சாரம்,   ஏதோ ஒரு வகையில் பல கதவுகளைத் திறப்பது போல இருக்கிறது. 

என்னால் முழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் ஒருவகையான  ஆர்வத்தைத் தூண்டுகிறது.  பொதுவாக ரங்கனிடம் இருந்து வரும் இழைகளை நான் தனியாக கோப்புக்களில் சேமித்து வைத்து தனியாக உட்கார்ந்து படிப்பது வழக்கம். 

அப்படிப்பட்ட தருணங்களில் எனக்கு மிகவும் மலைப்பாக இருக்கும்.  இந்த மனிதர் எங்கெங்கே தேடி இதையெல்லாம் பிடிக்கிறார்.  எப்படி கிரகித்துக் கொள்கிறார்.  எப்படி தான் கிரகித்துக் கொண்டதை அடுத்தவர்களுக்கு ஒரு வள்ளலாக வழங்குகிறார் என்று பிரமிப்பாக இருக்கும்.

இந்த மலைப்பையும் பிரமிப்பையும் மீறி ஒருவகையான ஒரு வகையான பொறாமையும் கூடவே துரத்திக் கொண்டிருக்கும்.

இது ரங்கனார் வழி. கொஞ்சம் சிரமப்பட்டு உடன் பயணிக்க வேண்டிய வழி என்றுதான் எடுத்துக் கொள்கிறேன்.

அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/7/15 திவாஜி <agni...@gmail.com>

திவாஜி

unread,
Jul 15, 2012, 3:51:56 AM7/15/12
to thamiz...@googlegroups.com
பயமாயிருக்காது?
:-)))

2012/7/15 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

தனியாக உட்கார்ந்து படிப்பது வழக்கம். 

Mohanarangan V Srirangam

unread,
Jul 15, 2012, 3:58:45 AM7/15/12
to thamiz...@googlegroups.com
2012/7/15 திவாஜி <agni...@gmail.com>
பயமாயிருக்காது?
:-))) 

திவாஜி ! இது நியாயமா ? :-))) 

 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 15, 2012, 4:00:01 AM7/15/12
to thamiz...@googlegroups.com
அட அவர் சொன்னது

பயமாயிருக்காது!

ஒரு  ஆச்சரியக் குறி கேள்விக் குறியானதால் வந்த பிரச்சினை.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/7/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

திவாஜி

unread,
Jul 15, 2012, 4:00:33 AM7/15/12
to thamiz...@googlegroups.com
நியாயமில்லைதான்! தனியா படிப்பேங்கிறாரே! இது என்ன அந்த மாதிரி எழுத்தா என்ன?
:-))

2012/7/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
திவாஜி ! இது நியாயமா ? :-))) 


Tthamizth Tthenee

unread,
Jul 15, 2012, 4:19:49 AM7/15/12
to thamiz...@googlegroups.com
முதலில் தாம் தெளிந்து . தாம் தெளிந்த விஷய ஞானத்தை மற்றவர்களுக்கும்
தெளிவாக  ..மிகத்தெளிவாக  நுணுக்கமான அலசல்களுடனும், வாதப் ப்ரதிவாதங்களுடனும், எடுத்துக்காட்டுகளுடனும், ஆதாரங்களுடனும்,  அளிக்கிறார்  திரு ரங்கன் அவர்கள்.
 
ஒரு முறைக்கு பத்து முறை படித்தாலும்  புரிகிறார்ப் போலிருக்கும்  .அதன் பிறகு மீண்டும் குழம்பும்.
 
இது திரு ரங்கன் எழுதுவதையெல்லாம் படிக்கும்போது எனக்கு நிகழ்பவை
 
ஒன்று புரிகிறது
 
உள் வாங்கியதை தெளிவாக எடுத்துச் சொன்னாலும்
 
அதை மீண்டும் உள்வாங்குபவர் திரு ரங்கனைப் போலவே ஞானம் கைவரப் பெற்றவராக இருந்தாலே 100 சதவிகிதம் புரிந்து கொள்ள முடியும்.
 
ஏதோ நம்மாலானது நமக்குப் புரிந்த அளவு   புரிந்து கொள்ள முயல்வோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


2012/7/15 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
நாம் எழுதுவதெல்லாம் ஒரு இன்டெலெக்சுவல் எக்சர்சைஸ்தான். இன்னும் ஒரு படி மேலே சொல்ல இன்டலெக்சுவல் ஜிம்னாஸ்டிக்ஸ். எழுதுபவருக்கு எழுதும் போது ஒரு மனதெளிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது தவிர  பிரயோசனம் எதுவும் உண்டா என்பது சந்தேகமே!

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 15, 2012, 4:22:20 AM7/15/12
to thamiz...@googlegroups.com
அட மரமண்டைக்கு திரும்பத் திரும்ப படிச்சாகணும் சாமி.

Kindle ல் மாற்றிக் கொண்டு கையோடு எடுத்துச் சென்று படிக்கிற வழக்கம்.  அப்படிப் படித்தாலும் மண்டையில் நுழைவது இல்லை.

பள்ளிக் கூடம் படிக்கிற போதோ வால் வரைக்கும்  நுழைஞ்சது  என்கிற ரகத்து ஆட்கள் நாங்கள்.

அதனால் பயமெல்லாம் கிடையாது. நான் எ‘ழுதுவதையே தனியாக உட்கார்ந்து படிக்கிறப்போ ரங்கனார் எழுதுகிறவற்றை தனியாகப் படிப்பதற்கு எனக்கு என்ன பயம் சுவாமி?

பென்
------------------------------------------------------------

--------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/7/15 திவாஜி <agni...@gmail.com>
நியாயமில்லைதான்! தனியா படிப்பேங்கிறாரே! இது என்ன அந்த மாதிரி எழுத்தா என்ன?

திவாஜி

unread,
Jul 15, 2012, 4:29:51 AM7/15/12
to thamiz...@googlegroups.com
ஸ்வாமி அதான் விஷயமே!
குரு மூலமா பிலாஸபி கேட்டா - அதுவும் தனியா உக்காந்து- அவருக்கு நம்ம நிலை தெரியும் என்கிறதால அதுக்கு தகுந்தாப்போல சொல்லிக்கொண்டு போவார்.
பொதுவா எழுதுவதை படிப்பதில் இதான் பிரச்சினை. அது நமக்கு சரியான லெவலா இல்லாம போக வாய்ப்பு மிக அதிகம்.

2012/7/15 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

ஒரு முறைக்கு பத்து முறை படித்தாலும்  புரிகிறார்ப் போலிருக்கும்  .அதன் பிறகு மீண்டும் குழம்பும்.

திவாஜி

unread,
Jul 15, 2012, 4:30:34 AM7/15/12
to thamiz...@googlegroups.com
2012/7/15 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
அதனால் பயமெல்லாம் கிடையாது. நான் எ‘ழுதுவதையே தனியாக உட்கார்ந்து படிக்கிறப்போ ரங்கனார் எழுதுகிறவற்றை தனியாகப் படிப்பதற்கு எனக்கு என்ன பயம் சுவாமி?

:-))))))

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 15, 2012, 4:39:15 AM7/15/12
to thamiz...@googlegroups.com
குரு மூலமா பிலாஸபி கேட்டா - அதுவும் தனியாந்த  உக்காந்து- அவருக்கு நம்ம நிலை தெரியும் என்கிறதால அதுக்கு தகுந்தாப்போல சொல்லிக்கொண்டு போவார்.
பொதுவா எழுதுவதை படிப்பதில் இதான் பிரச்சினை. அது நமக்கு சரியான லெவலா இல்லாம போக வாய்ப்பு மிக அதிகம்.


மிகவும் சரியாக சொல்கிறீர்கள் திவாஜி சார்.

நான் தமாஷூக்கு எதையோ உளறித் தொலைத்தாலும் இந்த பயம் எனக்கு எப்போதும் உண்டு.  குரு லபிப்பதும் நம்முடைய பூர்வ ஜென்ம கர்மாதானே?

இதுவரை அப்படியான குரு இங்கு வாய்க்கவில்லை திவாஜி சார். 

நான் சந்திக்க நேரும் அநேகர் என்னை விட அதிகமான வகையில் அயோக்கியப் பயல்களாக இருக்கிறார்கள் அல்லது அயோக்கியத்தனங்களைக் கற்றுக் கொள்ள என்னை குருவாக நாடி வருகிறார்கள்.

தத்துவ விசாரத்துக்கான ஒரு குருநாதர் வரும் வரை தனியாகப் படிக்கும் போது பயமாக இருந்தாலும் எதற்கு இவற்றை எல்லாம் விடவேண்டும் இல்லையா?  ஆனால் ரங்கனார் நம்மை எப்படியோ இழுத்துப் பிடித்து கொஞ்சமாவது புரிந்து கொள்ள வைத்து விடுகிறார்.  அந்தக் கொஞ்சமே ஆளை அசர வைத்து விடுகிறது. 

இதையெல்லாம் கற்றுத் தெளியவைக்க ஒரு குருநாதர் என் வாழ்நாளில் என்றாவது எதிர்வராமலா போகப்போகிறார்?


அன்புடன்

பென்

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/7/15 திவாஜி <agni...@gmail.com>
ஸ்வாமி அதான் விஷயமே!

திவாஜி

unread,
Jul 15, 2012, 4:48:27 AM7/15/12
to thamiz...@googlegroups.com
2012/7/15 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
மிகவும் சரியாக சொல்கிறீர்கள் திவாஜி சார்.


நான் தமாஷூக்கு எதையோ உளறித் தொலைத்தாலும் இந்த பயம் எனக்கு எப்போதும் உண்டு.  குரு லபிப்பதும் நம்முடைய பூர்வ ஜென்ம கர்மாதானே?
ஆமாம்! 
 
இதுவரை அப்படியான குரு இங்கு வாய்க்கவில்லை திவாஜி சார்.   

நான் சந்திக்க நேரும் அநேகர் என்னை விட அதிகமான வகையில் அயோக்கியப் பயல்களாக இருக்கிறார்கள் அல்லது அயோக்கியத்தனங்களைக் கற்றுக் கொள்ள என்னை குருவாக நாடி வருகிறார்கள்.

:-))
 

தத்துவ விசாரத்துக்கான ஒரு குருநாதர் வரும் வரை தனியாகப் படிக்கும் போது பயமாக இருந்தாலும் எதற்கு இவற்றை எல்லாம் விடவேண்டும் இல்லையா?  ஆனால் ரங்கனார் நம்மை எப்படியோ இழுத்துப் பிடித்து கொஞ்சமாவது புரிந்து கொள்ள வைத்து விடுகிறார்.  அந்தக் கொஞ்சமே ஆளை அசர வைத்து விடுகிறது. 

குரு வர வேண்டும் என்று தீவிரமாக நினைப்பதே சீக்கிரம் அவரை வர வழைத்துவிடும்!
 அது வரை எதையாவது போட்டு உருட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்! கரமா கொஞ்சம் கழியும்!


இதையெல்லாம் கற்றுத் தெளியவைக்க ஒரு குருநாதர் என் வாழ்நாளில் என்றாவது எதிர்வராமலா போகப்போகிறார்?

நிச்சயம் வருவார்!
அன்புடன்
திவாஜி

Tthamizth Tthenee

unread,
Jul 15, 2012, 4:50:23 AM7/15/12
to thamiz...@googlegroups.com
பல நேரங்களில் குருவே நம்மிடம் வந்து நான்தான் உனக்கு குரு என்று உணர்த்தினாலும்  நாம் அவரை குருஎன்று உணர்வதில்லை

 

இது போல் எத்தனை குருமார்களை நான் உணராமல் போனேனோ  தெரியவில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/7/15 திவாஜி <agni...@gmail.com>

திவாஜி

unread,
Jul 15, 2012, 4:53:11 AM7/15/12
to thamiz...@googlegroups.com
ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?
வாழ்கையில் பல வழி காட்டிகள் வருவர். பல ஆசிரியர் வருவர். இவர்களை எல்லாம் ஏற்போம் அல்லது விட்டு விடுவோம். 
ஆனால் ஒரே ஒரு குருதான் ஒருவருக்கு. அவர் வர முடிவு செய்துவிட்டால் நீங்கள் உணராமல் போக முடியாது!

2012/7/15 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

பல நேரங்களில் குருவே நம்மிடம் வந்து நான்தான் உனக்கு குரு என்று உணர்த்தினாலும்  நாம் அவரை குருஎன்று உணர்வதில்லை

 

இது போல் எத்தனை குருமார்களை நான் உணராமல் போனேனோ  தெரியவில்லை

Innamburan Innamburan

unread,
Jul 15, 2012, 3:29:55 PM7/15/12
to thamiz...@googlegroups.com
திவாஜியின் ஒவ்வொரு சொல்லும் ஒரு பொன்காசு.
இன்னம்பூரான்

2012/7/15 திவாஜி <agni...@gmail.com>
ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

திவாஜி

unread,
Jul 15, 2012, 8:21:16 PM7/15/12
to thamiz...@googlegroups.com
அப்ப்டி ஏதும் இருந்தா உங்களைப்போல பெரியவங்க ஆசீர்வாதம்!

2012/7/16 Innamburan Innamburan <innam...@gmail.com>

திவாஜியின் ஒவ்வொரு சொல்லும் ஒரு பொன்காசு.

Geetha Sambasivam

unread,
Jul 16, 2012, 5:10:24 AM7/16/12
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல், மின்தமிழ்
புரிந்து கொண்டு தான் கேட்கிறீர்களா?  இவர் மூலவர்.  உற்சவர் தனியாக இருப்பார்.  இவர் நாலாம் சுற்றில் இருக்கிறார்.  ஒவ்வொன்றாக எழுதுகையில் எல்லாம் விபரமாக வரும். சற்றே பொறுமை காக்கவும்.

2012/7/16 nandhitha kaapiyan <nandh...@yahoo.com>
வணக்கம்
திருவரங்கத்தில் உற்சவத்தில் கருட வாகனமே கிடையாதா? அதற்குப் பிறகு பெருமாள் எழுந்தருளவே இல்லையா?
அன்புடன்
நந்திதா
 


Geetha Sambasivam

unread,
Jul 17, 2012, 4:35:42 AM7/17/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

திருவரங்கம் குறித்து அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் ,திவ்யப்ரபந்தம் போன்றவற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அகம் 137. பாலை - உறையூர் முதுகூத்தனார்

 

ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்டசிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,

களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே

வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,

வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்

பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்

தீ இல் அடுப்பின் அரங்கம் போல,

பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,தோளா முத்தின் தெண் கடற் பொருநன்

திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும்

தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.

 

சிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டம் காடுகாண் காதையில்

நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்பால்விரிந் தகலாது படிந்தது போல

ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்

பொய்கையாழ்வார் முதலாம் திருவந்தாதியில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று

கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்திருவரங்க மேயான் திசை(2087)

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்,

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும் நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்

தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள் மாவாய் பிளந்த மகன்(2209)

பூதத்தாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில்

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு(2343)

உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தொழுதாலே போதும் என்று ஆன்றோர் வாக்கு.  இந்தத் தலத்தின் சந்திர புஷ்கரிணியில் நீராடி திருவரங்கனை தரிசிப்பதற்கு ஈடு, இணை இல்லை என்று சொல்லப்பட்டாலும் இந்தத் திருவரங்கம் இருக்கும் திசையை வணங்கினாலே மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப் படுகிறது.   இங்குள்ள சந்திர புஷ்கரிணி, பள்ளிகொண்ட ரங்கநாதர் தோன்றும் போதே அனந்த பீடத்தோடு தோன்றியதாகவும் கூறப்படும்.  அதன் வரலாறு வருமாறு:

ஒருமுறை கங்கை, காவிரி, யமுனை போன்ற புண்ணிய நதிகள் தங்கள் கன்யாரூபத்தோடு இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது வெண்ணில் சென்ற கந்தர்வன் ஒருவன் அத்தனை நதிகளையும் கன்யாரூபத்தில் பார்க்கவே அவர்களை வணங்கினான்.  அங்கிருந்த ஒவ்வொரு நதிப் பெண்ணும் அந்த கந்தர்வன் வணங்கியது தன்னையே எனக் கூற அவர்களுக்குள் வாக்குவாதம் ஆரம்பமாயிற்று.  மற்ற நதிப் பெண்கள் விலகிக் கொள்ள, கங்கையும், காவிரியும் மட்டும் விவாதத்தைத் தொடர்ந்தனர்.  இதற்கு ஒரு முடிவில்லாமல் போகவே இருவரும் விஷ்ணுவை நாடினார்கள்.  அவர் கங்கை தன் பாதத்தில் தோன்றியதால் கங்கையே பெரியவள்.  கந்தர்வனின் வணக்கமும் கங்கையையே சாரும் என்று சொல்லிவிடுகிறார்.  காவிரி துக்கத்தில் ஆழ்ந்து போகிறாள்.  கங்கையை விடவும் தான் பெரியவள் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தவம் இருக்கிறாள்.  அவள் தவத்தில் மகிழ்ந்த மஹாவிஷ்ணு, வரும் காலத்தில் அவள் மடியில் சயனிப்பதாகவும், அதற்கான காலம் வந்துவிட்டதாகவும், அந்தச் சமயம் அவள் கங்கையை விடவும் மகிமை பொருந்தியவளாக ஆவாள் எனவும் வரமும், வாக்கும் கொடுக்கிறார்.

 

அதே போன்ற சமயம் வந்து விட்டதாலும், பாரதத்தை விட்டுப் போக மனமில்லாமலும், சூரிய குலத்தைச் சேர்ந்த சோழன் தர்ம வர்மாவின் பக்திக்காகவும், ஸ்ரீரங்கநாதர் இங்கேயே இருக்கவேண்டும் என தவமிருந்த சோழநாட்டு மக்களின் பக்திக்காகவும்,  இப்படி எல்லாத்துக்காகவும் அரங்கன் இங்கேயே இருந்துவிடுகிறார்.  அவர் இருந்த இடத்தைச் சுற்றுக் காவிரியின் மத்தியில் ஒரு தீவும், அனந்த பீடமும், சந்திர புஷ்கரிணியும் ஏற்படுகிறது.  ஆற்று நீர் எல்லாப் பக்கமும் சூழ மத்தியில் அமைந்துள்ள பகுதியை அரங்கம் என்று கூறுவார்கள்.  அதன்படி இந்தத் தீவானது இரு ஆறுகளின் மத்தியில் இருப்பதாலும், மஹாவிஷ்ணு பள்ளி கொண்டிருப்பதாலும், எப்போதும் ஸ்ரீ எனும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் நிறைந்து காணப்படுவதாலும், ரங்கநாதர் பெயரான ரங்கத்தோடு ஸ்ரீயும் சேர்ந்து ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் எனப் பெயர் பெற்றது.  இங்கே ஸ்ரீரங்கத்தின் தெற்குப்பக்கம் ஓடும் காவிரி நதியானது பரமபதமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு வெளியே ஓடும் விரஜா நதிக்கு ஒப்பானது ஆகும்.

 


2012/7/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 17, 2012, 7:04:46 AM7/17/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
திருவரங்கம் குறித்து அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம்
,திவ்யப்ரபந்தம் போன்றவற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அகம் 137. பாலை - உறையூர் முதுகூத்தனார்

ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்டசிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.

சிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டம் காடுகாண் காதையில்

நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்திருவமர் மார்பன் கிடந்த

வண்ணமும்,
என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பொய்கையாழ்வார் முதலாம் திருவந்தாதியில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்திருவரங்க மேயான் திசை(2087)

என்றும்,

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்,

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும் நினைப்பரிய நீளரங்கத்
துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள் மாவாய் பிளந்த மகன்(2209)

பூதத்தாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில்

விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு(2343)

என்றும் பாடியுள்ளார்கள்.

திரு கண்ணன் format errors இருந்ததால் plain text இல் மீண்டும் அனுப்பச்
சொல்லி உள்ளார். ஆகவே ப்ளைன் டெக்ஸ்டில் அனுப்பியுள்ளேன். சரியாய்
இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Geetha Sambasivam

unread,
Jul 24, 2012, 4:51:55 AM7/24/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 3


கோயில் பெரிய கோயில், பெருமாள் பெத்த பெருமாள், தாயாரும் பெரிய தாயார்,
ஊரும் பெரிய ஊர், தளிகை பெரிய தளிகை, வாத்யம் பெரிய வாத்யம், மற்றும்
பலகாரங்கள் எல்லாமும் நிவேதனத்துக்குப் பெரியவையாகவே தயாரிக்கப்படும்.
இப்படி எல்லாவற்றிலும் இந்தக் கோயில் பெரிதாகவே உள்ளது. ஸ்ரீரங்கத்தை
மதுரகவி ஆழ்வார் தவிர்த்து மற்ற எல்லா ஆழ்வார்களும் பாடி இருக்கின்றனர்.
ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பு சுமார் 156 ஏக்கர் ஆகும். பங்குனி
மாதம், வளர்பிறை சப்தமி திதியில், சனிக்கிழமை, சந்திரன் ரோஹிணியிலும்,
குரு ரேவதியிலும் இருக்கையில் ஸ்ரீரங்கநாதர் இங்கே வந்து சேர்ந்ததாகக்
கூறுகின்றனர். வலக்கையைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு திருமுடியைத்
தாங்க, முதுகுப் பக்கம் வடக்கு நோக்கி இருக்க, இடக்கையால் திருவடியைச்
சுட்டிய வண்ணம் தெற்கு நோக்கு திருமுக மண்டலத்தை வைத்துக்கொண்டு நேராக
இலங்கையைப் பார்த்த வண்ணம் பள்ளி கொண்டிருக்கிறார், ஸ்ரீரங்கநாதப்
பெருமான். இதைத் தொண்டரடிப்பொடியாழ்வார்,

குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டி, தென்திசை இலங்கை நோக்கிக்
கடல்நிறக்கடவுள் எந்தை அரவணை துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ! என் செய்கேன் உலகத்தீரே!

மேலும்

கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே (23)
என்கிறார்.

இந்த ரங்கநாதர் முழுக்க முழுக்கச் சுதையில் ஆனவர். ஆகவே இவருக்குத்
திருமஞ்சனம் என்றஅபிஷேஹங்கள் கிடையாது. தினமும் கொள்ளிடம் எனப்படும்
வடகாவிரி நீரில் நம்பெருமாள் எனப்படும் உற்சவரான அர்ச்சாமூர்த்திக்கே
அபிஷேஹங்கள் நடைபெறுகின்றனர். தொன்று தொட்டுக் கைங்கரியம் செய்யும்
பட்டாசாரியார்கள் ஸ்ரீரங்கநாதரின் சுதை உருவச் சிலாரூபத்தைக்
காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர் . எப்படி எனில் ஒவ்வொரு வருடமும் ஆனி
மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தன்று, தெற்கே காவிரியில் இருந்து நீர்
எடுத்துப் போய் நம்பெருமாளுக்கு அபிஷேஹம் ஆகும். அப்போது சிலா உருவில்
இருக்கும் ஸ்ரீரங்கநாதரின் ஆடைகள், ஆபரணங்கள் களையப்பட்டு,
பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, போன்ற வாசனாதிப் பொருட்கள்
சேர்க்கப்பட்டு, மூலிகைகளின் சாறுகள் சேர்க்கப்பட்டு எண்ணெய் தயாரிக்கப்
பட்டு இந்த எண்ணையை ஸ்ரீரங்கநாதருக்கு தாராளமாகக் காப்பிட்டு
விடுவார்கள். திருமுக மண்டலத்தை விடுத்து மற்ற பாகங்களைப் பட்டுத்
துணியால் மூடி விடுவார்கள். இந்த எண்ணெய்க்காப்பிலேயே பெருமாள் ஒரு
மண்டலம் எனப்படும் நாற்பத்தைந்து நாட்கள் இருப்பார்கள் என ஒரு சாராரும்,
தீபாவளி வரை என இன்னொரு சாராரும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும்
எண்ணெய்க் காப்பிட்டு சுதை உருவில் இருக்கும் ஸ்ரீரங்கநாதரின் சிலா
உருவைக் காப்பாற்றி வருவது என்னவோ உண்மை. அந்தச் சமயம் உற்சவ
மூர்த்தியின் உடலிலும் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு குறைகள், நிவர்த்தி
செய்யப்படும். பின்னர் நான்கு நாட்கள் கழித்து இதே போல் தாயாருக்கும்
செய்யப்படும்.


ஸ்ரீரங்க விமானம்: இந்த விமானம் ஆதியில் தானாகவே உருவானது என்கின்றனர்.
இது பொன்னால் வேயப்பட்டு “ௐ” என்னும் பிரணவ வடிவில் உள்ளது. இந்த
விமானத்தில் உள்ள பரவாசுதேவர் கையில் கிண்ணம் ஒன்றை வைத்திருக்கிறார்.
அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், கிண்ணம்
வாயருகில் சென்று சேர்ந்து கிண்ணத்தில் உள்ளதைப் பர வாசுதேவர்
குடிக்கிறாப் போல் ஆனால் உலகம் அழியும் எனச் சொல்வார்கள். இது சிறு
வயதில் கேட்டது. ஸ்ரீரங்க விமானத்தின் வெளியே விக்னேஸ்வரர் நின்று காவல்
புரிவதாகவும், கீழ்ப்பக்கம் மஹாவிஷ்ணுவின் யோக மாயை ஆன துர்கை
இருப்பதாகவும் கூறுகின்றனர். அவசரம் அவசரமாப் போங்க, போங்கனு
சொல்லுவதால் இவற்றை எல்லாம் நிதானமாய்ப் பார்க்க முடிவதில்லை. L ஸ்ரீரங்க
விமானத்துக்குள்ளே ஆதிசேஷன் மேல் ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டிருக்கிறார்.
மேலும் ஸ்ரீரங்கவிமானத்தினுள், சப்த ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், அனைத்து
தேவர்களும், த்வாதச ஆதித்யர்களும், நவக்ரஹங்களும் இருக்கின்றனர்.
மேலும் தன்னுடைய இந்த ரூபத்தைக்குறித்து பகவான், தான் இங்கே “த்ரிதாமன்”
ஆக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். பகவான் மூன்றே மூன்று இடங்களில்
தாம் “த்ரிதாமன்” ஆக இருப்பதாகவும் அவற்றில் இது முதன்மையானது எனவும்
கூறப்படுகிறது. இந்த மூன்று இடங்களிலும் தனது சுயரூபத்தோடு இருப்பதால்
த்ரிதாமன் எனப்படுவதாகக் கூறுகின்றனர்.


மேலும் ஸ்ரீரங்க க்ஷேத்திரம் ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் எனப்படுகிறது.
மனிதராலோ, தேவர்களாலோ, ரிஷி, முனிவர்களாலோ நிர்மாணிக்கப் படாமல் தானாகவே
உண்டான க்ஷேத்திரங்கள் ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் எனப்படும். அவை
ஸ்ரீரங்கத்தைச் சேர்த்து எட்டு ஆகும்.

1.ஸ்ரீரங்கம்,
2.ஸ்ரீமுஷ்ணம்
3.திருமலை
4.சாளக்ராம மலை
5.நைமிசாரண்யம்
6.தோதாத்ரி
7.புஷ்கர க்ஷேத்ரம்
8.பத்ரிநாதம்


இவற்றில் முதன்மையானதும் ஸ்ரீரங்கமே. 108 திவ்ய ஸ்தலங்களில்
முக்கியமானதும், முதன்மையானதுவும் ஸ்ரீரங்கமே. தேவர்களால்
நிர்மாணிக்கப்பட்ட க்ஷேத்திரங்களுக்கு திவ்ய க்ஷேத்திரங்கள் என்றும்,
ரிஷி, முனிவர்கள், போன்றோர் தங்கள் சித்தியால் ஏற்படுத்தும்
க்ஷேத்திரங்களுக்கு “ஸைந்தம்” என்றும், மனிதர்களால் நிர்மாணிக்கப்படும்
கோயில்களை “மாநுஷம்” என்றும் கூறுவார்கள். இப்படி ஸ்வயம்வ்யக்தம்,
தைவிகம், ஸைந்தம், மாநுஷம் என்னும் நால்வகையான நிர்மாணம் செய்யப்பட்ட
கோயில்களே நூற்றெட்டு திருப்பதிகளில் அடங்குகிறது. ஆதியில் ஸ்ரீரங்க
நாதரை வழிபடும் முறையை பிரம்மாவுக்கு ஸ்ரீரங்கநாதரே சொல்லிக் கொடுத்தார்
என்று ஸ்ரீரங்க மஹாத்மியம் கூறுகிறது. பாஞ்சராத்ர முறைப்படி வழிபடச்
சொன்னதாகவும் ஒரு நாளை ஐந்து காலமாகப் பிரித்துக்கொண்டு வழிபாடுகளை
நடத்தச் சொன்னதாகவும், நித்யகர்மாக்களுக்கும், அநுஷ்டானங்களுக்கும்
பின்னரே தனது அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கவேண்டும் எனவும் கூறியதாகத்
தெரிய வருகிறது. பிரமனும் அவ்வாறே பாஞ்சராத்ர முறைப்படி வழிபட்டதாகவும்,
பின்னர் ஐந்து ருத்ரர்கள், பிரம்ம ரிஷிகள்,ஸ்வயாம்புவ மநு, தக்ஷப்ரஜாபதி
தேவர்கள் என அனைவருக்கும், த்வாதச அக்ஷர உபதேசம் செய்து இந்தப்
பூஜாமுறையை அறிமுகப் படுத்தி வைத்ததாகவும், பிரமனாலும் ஒரு முறை
ஸ்ரீரங்கநாதர் தோன்றிய முறை விவரிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
பின்னர் பிரம்மா சூரியனுக்கும் இந்த வழிபாட்டு முறையைச் சொல்லிக்
கொடுக்க, சூரியன் தன் மகனான வைவஸ்வத மநுவுக்குச் சொல்ல, அவனிடம் இருந்து
வைவஸ்வத மநுவின் புத்திரன் இக்ஷ்வாகுவுக்குப் போய் அவர்களின் குல தனம்
ஆயிற்று. பின்னர் ஸ்ரீரங்கநாதர் விமானத்தோடேயே காவிரிக்கரைக்கு வந்த
வரலாற்றைப் பார்த்தோம்.

Geetha Sambasivam

unread,
Aug 2, 2012, 3:04:03 AM8/2/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
இவற்றுக்கெல்லாம் ஆதாரங்கள் இல்லை எனினும் மரபு சார்ந்ததாகவே கொள்ள
வேண்டி இருக்கிறது. கோயிலைக் குறித்துப் பழங்காலத்து சங்கப்பாடல்கள்,
சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றில் குறிப்பிடப்
பட்டிருக்கும் இலக்கிய ஆதாரங்களையே கிட்டத்தட்ட கி.பி. பத்தாம்
நூற்றாண்டு வரையிலும் கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனெனில் கி.பி. ஏழாம்
நூற்ற்றாண்டில் திருமங்கை மன்னனால் நான்காம் திருமதில் கட்டப்பட்டதாகக்
கோயிலொழுகு சொல்வதாகக் கேள்விப் படுகிறோம். ஆனால் அதற்கு முன்பே
முதலாழ்வார்கள் பாடிய பாடல்களையும் முன்னரே பார்த்தோம். தற்போது
செய்துவரும் சில ஆய்வுகளின் மூலம் பழைய கோயிலின் மேலேயே இந்தக் கோயில்
கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கோயிலொழுகு குறித்து
நான் பார்க்க வேண்டும் என நினைத்த பெரியவர் உபந்நியாசங்களாகச் செய்து
வைத்திருப்பதால் அதைப் போட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.

நம் பாரத நாட்டிலேயே ஸ்ரீரங்கம் கோயில் தான் ஏழு பிரகாரங்களைக் கொண்டது.
ஏழு என்ற எண் புனிதமானதாய்க் கருதப்படுகிறது. மனித உடலுக்குக் காரணமான
ஏழு தாதுக்களையும், உடலில் உள்ள ஏழு ஆதாரங்களையுமே இவை சுட்டுவதாக
ஐதீகம். கருவறையில் தொடங்கிப் பிரகாரங்கள் வெளிப்பக்கமாக
எண்ணப்படுகின்றன. நம் உடலின் உள்ளே எவ்வாறு ஆன்மா குடி கொண்டிருக்கிறதோ
அவ்வாறே கருவறையின் நடுவேஇவ்வுலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாகிய
பெருமாள் எழுந்தருளி உள்ளார். கருவறை விமானம் நான்கு கலசங்களோடு கூடிய
வட்டவடிவில் பொன்மயமாக அமைந்துள்ளது. விமானத்தின் வெளியில்
விக்னேஸ்வரர் காவல் காக்க, கீழ்ப்பக்கம் யோக மாயை ஆன ஸ்ரீதுர்கை
இருக்கிறாள். விமானத்தின் மீது பரவாசுதேவர் கையில் கிண்ணத்தோடு
இருப்பதையும் கிண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் அவர் வாய்க்கருகே சென்று
கொண்டிருப்பதாகவும் ஏற்கெனவே பார்த்தோம். விமானத்தின் கலசங்கள்காயத்ரீ
தேவியின் தலைப் பகுதியாகக் கூறப் படுகிறது. ஸ்ரீரங்க மண்டபம் காயத்ரீ
மண்டபம் என்றும் அழைக்கப் படுகிறது. அங்குள்ள 24 தூண்களும் காயத்ரீயின்
24 அக்ஷரங்கள் எனவும், கோபுரங்கள் வேத தேவதைகளாகவும், சாஸ்திரங்கள்
அங்குள்ள பொருட்கள், செயல்களாகவும் கூறப் படும்.

இதே போல் கோயிலின் ஏழு பிரகாரங்களும் ஏழு உலகங்களைக் குறிக்கும். அவை யாவன:
பூலோகம்= மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று
புவர்லோகம்= திரிவிக்கிரம சோழன் சுற்று
ஸுவர்லோகம்= அகளங்கன் என்னும் கிளிச் சோழன் சுற்று
மஹர்லோகம்= திருமங்கை மன்னன் சுற்று
ஜநோலோகம்= குலசேகரன் சுற்று
தபோலோகம்= ராஜ மகேந்திர சோழன் சுற்று
ஸத்யலோகம்(கர்பகிருஹம் உள்ள சுற்று) = தர்மவர்ம சோழன் சுற்று

மேற்கண்டவர்கள் அந்த அந்தப் பிரகாரங்களைச் செப்பனிட்டதால் அவரவர் பெயரை
வைத்து அழைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் அறிகிறோம். இதைத் தவிர இந்த
ஏழுவிதச் சுற்றுக்களையும் அடைத்தபடி வளைந்து வரும் நெடுஞ்சுற்று ஒன்று
உள்ளது. இதற்கு அடைய வளைந்தான் எனப் பெயர். இந்தச் சுற்றிலிருந்து
மாடங்கள் உள்ள சுற்றுக்கு வருவதற்கு ஏற்றவகையில் நான்கு திசைகளிலும்
திட்டி மூலை என்று வாசலைத் திறந்து வைத்திருக்கிறார்கள். ஏழாவது சுற்று,
அடையவளைந்தான் சுற்று மற்றும் ஆறாவது சுற்றில் ஆகிய மூன்றிலும் மக்கள்
பெருமளவு அந்நாட்களிலும், இந்நாட்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

கருவறை மேற்கு, கிழக்கு, வடக்குத் திசைகளில் சதுரமான திருவுண்ணாழியால்
சூழப்பட்டுள்ளது. அதிலே எம்பெருமானார் சயனித்த கோலத்தில் காட்சி
அளிக்கிறார். குழைகாரை எனப்படும் சுதை வேலைப்பாட்டில் வலப்பக்கமாய்ச்
சாய்ந்த வண்ணம் கிட்டத்தட்ட 21 அடி நீளத்துக்குப் புனுகுச் சட்டம்
எனப்படும் தனிச் சிறப்பான தைலக்காப்புச் சார்த்தப் பட்டுத் தனியானதொரு
ஒளியோடும், மெருகோடும் விளங்குகிறார். தன் வலக்கையைத் தலையைத் தாங்கிய
வண்ணம் வைத்தும், இடக்கையால் திருவடியைச் சுட்டிக் காட்டிய வண்ணமும்,
தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள் பாலிக்கிறார் மூலவர் பெரிய
பெருமாளான ஸ்ரீரங்கநாதர். இவருக்குப் பெரிய பெருமாள் என்ற திருநாமம்
மட்டுமே உண்டு. ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் பஞ்ச இந்திரியங்கள்
எனவும், அந்த பஞ்ச இந்திரியங்களையும் அடக்கியே எம்பெருமானார்
யோகநித்திரை கண்டருளுவதாகக் கூறுவர். அவர் அருகே உற்சவரான நம்பெருமாள்
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி அளிக்கிறார். உற்சவர் முதலில் அழகிய
மணவாளர் என்று அழைக்கப் பட்டுப் பின்னர் நம்பெருமாள் என இப்போது அழைக்கப்
படுகிறார். அது பின்னர் நம்பெருமாள் என மாறியது ஒரு பெரிய வரலாற்றை
உள்ளடக்கிய கதை ஆகும். அதையும் விரைவில் பார்ப்போம்.

சுதையினால் ஆன எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்விக்க இயலாது என்பதால்
வருடம் ஒரு முறை ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் காவிரியில் இருந்து
யானை மீது தங்கக் குடங்களில் நீர் எடுத்து வந்து உற்சவருக்கு அபிஷேஹம்
செய்யப்படும். அந்தச் சமயம் மூலவருக்கு எண்ணெய்க் காப்புச் சார்த்தித்
திருவடி வரை ஒரு மெல்லிய வேஷ்டியால் மூடி விடுவார்கள். இது
நாற்பத்தைந்து நாட்கள் அல்லது நாற்பத்தெட்டு நாட்கள் வரை இருக்கும்.
அடுத்த நாள் பெரிய திருப்பாவாடைத் தளிகை என்னும் நிவேதனம் பெரிய பெருமாள்
சந்நிதி முன் சேர்ப்பிக்கப் படும். அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளை,
தேங்காய், மாங்காய், நெய், தேன், வாழைப்பழம் போன்றவை சேர்த்து உப்பும்
சேர்த்திருப்பார்கள். பெருமாளுக்கு அமுது செய்த பின்னர் பக்தர்களுக்கு
விநியோகம் செய்யப்படும். இந்த ஜேஷ்டாபிஷேஹம் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலைத்
தவிரவும் அதைச் சுற்றி உள்ள மற்ற திவ்ய தேசங்களிலும் ஸ்ரீரங்கத்தில்
நடந்த பின்னர் நடைபெறும். அவை குறித்துத் தனியாகப் பார்ப்போம். ஆனி
மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் ஆரம்பிக்கும் இது ஆடிப் பதினெட்டு அன்று
நாற்பத்தெட்டு நாட்கள் பூர்த்தி ஆனால் அல்லது ஆடி மாதம் இருபத்தெட்டு
வரையில் என்ற கணக்கில் இருந்து வரும். பின்னர் ஆடிப் பதினெட்டு விழாவில்
காவிரி அம்மனுக்குச் சீர் கொடுப்பார் பெருமாள். ஒரு பட்டுப்புடவையில்
மாலை, தாலிப்பொட்டு போன்ற மங்கலப் பொருட்களைப் போட்டுக் கட்டி யானையின்
மேல் ஏற்றிக் காவிரியில் விடுவார்கள்.

இங்கு காவிரியைத் தவிரவும் ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள் உண்டு. தற்போது
நல்ல நிலைமையில் இருப்பது சந்திர புஷ்கரிணி மட்டுமே. மற்றவை சரியான
பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து போயிற்று என்பது வருத்தத்துக்கு
உரியதாகும். மற்றத் தீர்த்தங்களின் பெயர்கள் வருமாறு:

சந்திர புஷ்கரிணி, வில்வ தீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம்,
புன்னை தீர்த்தம், மகிழ தீர்த்தம், புரசு தீர்த்தம், கடம்ப தீர்த்தம்,
மாதீர்த்தம் எனக் கூறுவார்கள். சந்திர புஷ்கரிணியைச் சுற்றி எட்டுத்
திசைகளில் இவை அமைந்திருந்ததாய்க் கேள்விப் படுகிறோம்.

Innamburan Innamburan

unread,
Aug 2, 2012, 6:46:44 AM8/2/12
to thamiz...@googlegroups.com
இந்த இடுகையை அதிகாலையில் படிக்கும் போது, உவகை பெருக்கெடித்து ஓடுகிறது, கீதா. நன்றி.
இன்னம்பூரான்

2012/8/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--

Geetha Sambasivam

unread,
Aug 8, 2012, 1:42:56 AM8/8/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
Inline image 2


பாண்டியன் கொண்டையானு சந்தேகமா இருக்குனு ஆடிப் பெருக்குப் பதிவிலே எழுதி இருந்தேன்.  இது பாண்டியன் முத்துக் கொண்டையே தான்.


ஸ்ரீரங்கம் கோயிலைச்  சுற்றிலும் பாதுகாவலாக திக்தேவதைகளை ஆகம சாஸ்திரப் படி ஏற்படுத்தி இருந்தார்கள் எனத் தெரிய வருகிறது.  அவர்கள் தெற்கில் உலகளந்த பெருமாள் ஆயனார் என்ற பெயரில் அழைக்கப் படுபவரும், தென்மேற்கு மூலையில் யோக அழகிய சிங்கரும், இருந்திருக்கின்றனர்.  அழகிய சிங்கர் கோயில் பழுதுபட்டதால் விக்ரஹங்கள் மூலவரும், உற்சவரும் கூரத்தாழ்வான் சந்நிதியில் வைக்கப்பட்டிருப்பதாய்க் கூறப்படுகிறது.  மேற்கில் துர்கை அல்லது பிடாரி கோயில் இன்றும் இருக்கிறது.  வடமேற்கில் வாதநாராயணர் பழுதடைந்து விட்டது எனக் கேள்விப்படுகிறோம்.  வடக்கில் தசாவதார சந்நிதி இன்றும் காணலாம்.  


வடகிழக்கில் ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி முழுதும் ஜீர்ணமாக பெருமாளும் நாச்சிமார்களும் பக்கத்துத் தோப்பில் எழுந்தருளி இருந்திருக்கிறார்கள்.  இப்போது எங்கே எனத் தெரியவில்லை.  விசாரிக்கிறேன்.  அடுத்து கிழக்கே லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதி. காட்டழகிய சிங்கர்.  நாம் ஏற்கெனவே இருமுறை பார்த்தோம்.  தென்கிழக்கு மூலையில் கோதண்டராமர் சந்நிதி. நவாபு காலத்தில் மந்திரியாக இருந்த ஒரு ராயரால் கட்டப்பட்டது.  சந்திர புஷ்கரணிக்கரையில் இருக்கும் இவரையும் நாம் பார்த்தோம்.  இவரே பிரதான ராமர்.  இவரைத் தவிரவும் பிராகாரத்தில் மேல பட்டாபி ராமர், கீழப் பட்டாபி ராமர் சந்நிதிகள் உண்டு.  இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் எட்டு திக்தேவதைகளை எழுந்தருளப் பண்ணி இருக்கும் திவ்யஸ்தலமான இதன் சரித்திரச் சான்றுகளை நாம் பத்தாம் நூற்றாண்டில் இருந்தே காண முடிகிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இந்தக் கோயிலில் நான்காம் திருமதிலைக் கட்டியதாகத் தெரிய வருகிறது.  ஆனால் இதற்கான சரித்திரச் சான்றுகள் இல்லை.  திருமங்கை ஆழ்வாரே அதிகமான பாசுரங்கள் பாடி இருப்பதாகவும் தெரிகிறது.  அவற்றில் இரண்டு பாசுரங்களைப் பார்ப்போம்.  

நன்றி: மதுரைத் திட்டம்.


உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான், இமையோர்கள் தாதைக்கிட மென்பரால்,
சந்தி னோடு மணியும்  கொழிக்கும்புனல்காவிரி,
அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே (5.4.1)

1379
வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே (5.4.2)

இதைத் தவிரவும், பெரியாழ்வார் பாடல்களும், ஆண்டாள் அழகிய மணவாளரான உற்சவர் மேல் மாளாக் காதல் கொண்டு அவரையே மனைவியாக அடைவேன் எனக் காத்திருந்து மனைவியாக ஐக்கியமடைந்ததுமான வரலாறுகள் சொல்லப் படுகின்றன.  ஆண்டாளுக்கு என இங்கே மூன்று தனிச் சந்நிதிகள் இருக்கின்றன.  அவற்றில் வெளி ஆண்டாள் சந்நிதியை இன்னும் பார்க்கவில்லை.  ஆனால் அங்கே தான் ஆடிப்பூர உற்சவ நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.  ஆண்டாளுக்கு அன்று திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது.  ஆடிப் பதினெட்டு அன்று காவிரிக்குச் சீர் கொடுக்க வரும் நம்பெருமாள் திரும்புகையில் வெளி ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டு பின்னரே உள்ளே திரும்புகிறார்.  அழகிய மணவாளர் மேல் காதல் கொண்ட ஆண்டாள், நம்பெருமாளோடு ஏன் மாலை மாத்திக்கணும்னு தோணுதா?   இருவரும் ஒருவரே. அழகிய மணவாளராக இருந்தவர் தான் நம்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.   அந்தக் கதைக்குத் தான் இப்போ வரேன்.  அதை முதலில் பார்த்துவிடுவோம்.


முதலிலே அழகிய மணவாளன் என்ற பெயர் வந்த கதையைத் தெரிந்து கொள்வோம்.  தர்ம வர்ம சோழனின் வம்சத்தில் வந்த சோழ மன்னன் ஒருவன் நந்த சோழன் என்ற பெயரில் ஆண்டு வந்தான்.  அவன் அரங்கனிடம் மிகவும் பக்தி பூண்டு வந்தான்.  அவனுக்குப் பிள்ளைப் பேறில்லை.  அரங்கனே கதி என்றிருந்த மன்னன் இதற்கும் அரங்கனே பதில் சொல்லுவான் என நம்பிக்கையுடன் காத்திருந்தான்.  ஒருநாள் மன்னன் வேட்டைக்குச் சென்ற போது அங்கிருந்த ஒரு ஓடையில் கமலப்பூக்களின் நடுவே ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்ணுற்றான்.  அரங்கன் அளித்த செல்வம் என எண்ணி மகிழ்ந்து அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தான்.  கமலவல்லி என்ற பெயருள்ள அந்தப் பெண் சிறு வயதில் இருந்தே அரங்கனிடம் பக்தி பூண்டிருந்தாள்.  ஒருநாள் அவள் உத்தியான வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அரங்கன் அவ்வழியே குதிரையில் சென்றதைக் கண்டாள்.  அரங்கன் மேல் மாளாக் காதல் கொண்டாள்.

மணந்தால் அரங்கனையே மணப்பது என முடிவு செய்துவிட்டாள்.  மகளின் நிலை கண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் கலங்கிய மன்னன் கனவில் அரங்கன் தோன்றி, “ நீ குழந்தை இல்லாமல் கவலைப் பட்டதற்காகவே நாம் திருமகளை அனுப்பினோம்;  அவள் நம்மைச் சார்ந்தவள்.  என் சந்நிதிக்கு அவளை அழைத்து வா;  நாம் அவளை ஏற்போம்.” எனச் சொல்லி மறைய, திகைப்புற்ற மன்னன் தன் மகள் திருமகள் எனத் தெரிந்து மகிழ்ந்தான்.  அவளை சர்வ அலங்கார பூஷிதையாக அலங்கரித்து ஊர்வலமாகச் சுற்றமும், உற்றமும் சூழ அழைத்து வந்தான்.  அரங்கன் சந்நிதியை அடைந்தான்.  கோவிலினுள் நுழைந்து அரங்கன் சந்நிதிக்கு வந்ததுமே கமலவல்லி மறைந்தாள்.  தன் பரிவாரங்களோடு வந்திருந்த மன்னன் இதைக் கண்டு அதிசயம் அடைந்தான்.   

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்ததோடு அல்லாமல் தான் இருக்கும் உறையூரிலும் அரங்கனுக்கு ஒரு கோயில் எழுப்பினான்.  அரங்கனே அழகிய மணவாளனாக வந்து தன் மகளைத் திருமணம் செய்து கொண்டதால் அந்தப் பெருமாளுக்கு அழகிய மணவாளர் என்ற பெயரையும் சூட்டினான்.  தன் மகள் நினைவாகத் தாயாருக்குக் கமலவல்லி என்ற பெயரையும் சூட்டினான்.  இந்த அழகிய மணவாளர் தான் ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவர்.  உற்சவருக்குக் கிட்டத்தட்ட அறுநூறு, எழுநூறு வருடங்கள் முன்பு அழகிய மணவாளர் என்ற பெயரே இருந்தது.  அந்தப் பெயர் தான் பின்னர் நம்பெருமாள் என மாறியது.  மாற்றியது ஒரு வண்ணான்.  ஏன்,எப்படி? வரும் நாட்களில் விபரமாய்ப் பார்க்கலாம்.  அதற்கு முன்னர் கொஞ்சம் சரித்திரப் பாடம் படிப்போம்.



namperumal.jpg

Geetha Sambasivam

unread,
Aug 19, 2012, 7:52:36 AM8/19/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
ஸ்ரீரங்கம் கோயிலின் சரித்திரத்தை ஆராயப் புகுந்தோமானால் இந்திய
சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற முக்கியக் கோயில்களில் ஒன்றாகும்
என்பது புலனாகும். வைணவர்களுக்கு முக்கியக் கோயிலான இது எப்போது
கட்டப்பட்டது என்ற சரியான தகவல்கள் கிடைக்காவிட்டாலும் கி.பி. ஏழாம்
நூற்றாண்டிலிருந்து இதன் மகிமை பேசப்படுகிறது. வேத வேதாந்தக்
கருத்துக்களைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளியாகவும் இருந்து
வந்திருக்கிறது. பல மஹான்கள், பல ஆசாரியர்கள் உருவாகி இந்தக் கோயிலின்
தொண்டாற்றி வந்திருக்கிறார்கள். என்றாலும் இதன் பூர்வ சரித்திரம்
குறித்த ஆதாரபூர்வத் தகவல்கள் கிட்டாதது நம் துரதிர்ஷ்டமே எனக் கூற
வேண்டும். இங்கே ஏராளமான கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அவற்றை ஆய்வு
செய்து வருகின்றனர். ஆகவே கொஞ்சம் வெளிச்சம் கிட்டலாம். எனினும் நமக்கு
இந்தக் கோயிலின் ஒவ்வொரு பிரகாரங்கள் குறித்தும், மதில்கள் குறித்தும்
கிடைக்கும் விபரங்களில் இருந்து அவ்வப்போது சோழ, பாண்டிய மன்னர்களால்
இந்தக் கோயில் பல திருப்பணிகளைக் கண்டிருப்பது தெரிய வருகிறது.

நான்காம் திருமதிலைக் கட்டியவர் திருமங்கை ஆழ்வார் என்பதை ஏற்கெனவே
பார்த்தோம். ஏழாம் திருமதில் பிரகாரத்திலும், நான்காம் திருமதில்
பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட சந்நிதிகள் தென்மேற்கு மூலையில்
ஏற்படுத்தி இருக்கின்றனர். இதில் ஏழாம் திருமதில் பிரகாரத்தில் உள்ள
ஆண்டாளின் திருச்சந்நிதி பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் ஏற்படுத்தப்
பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது. கி.பி. பனிரண்டாம்
நூற்றாண்டிலிருந்து பதிநான்காம் நூற்றாண்டிற்கு அது கட்டப்பட்டிருக்கும்
என அந்தச் சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில்
கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது. இதைத் தவிர நான்காம்
திருமதில் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம்
நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் என்கின்றனர். கல்வெட்டுகள் கி.பி.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து கிடைப்பதாகச் சொல்கின்றனர். கோயிலின்
முக்கியத்துவம் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் இந்தக் கோயில்
முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சோழ மன்னர்களின் குல தெய்வமாக
ஸ்ரீரங்கநாதப் பெருமானும், அவர்கள் முடி சூடிக்கொள்ளும் பரம்பரைக்
கோயிலாக சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலும் இருந்து வந்திருக்கிறது.
ஆகவே ரங்கராஜனும், நடராஜனும் சோழர்கள் வாழ்வில் இரு கண்களைப் போலவே
இருந்து வந்திருக்கின்றனர்.

சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது முதலாம்
பராந்தகனின் கல்வெட்டு ஆகும். இம்மன்னன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு
வெள்ளிக் குத்துவிளக்கு ஒன்று அளித்ததோடு அல்லாமல் கற்பூரம், பருத்தித்
திரிநூல் வாங்க, குத்துவிளக்குப் பராமரிப்பு, விளக்கு ஏற்றும் செலவு என
51 பொற்காசுகளையும் வழங்கி இருந்திருக்கிறான். அதோடு கோயிலில் மூன்று
இரவுகள் வேதம் ஓதப் படுவதற்காகவும் தானம் வழங்கி இருக்கிறான். இவனுக்கு
அடுத்துச் சிறப்பாகச் சொல்லும்படி தானம் வழங்கிய மன்னன் இரண்டாம்
ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின் தானம் ஆகும்.
கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது கி.பி. 1060---1063 ஆம் ஆண்டில்
இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால் இது ராஜமஹேந்திரன்
திருவீதி என வழங்கப் படுகிறது. கிட்டத்தட்ட இந்தச் சமயம் தான்
ஸ்ரீபெரும்புதூரில் உடையவர் என அழைக்கப்படும் ஸ்ரீராமாநுஜர் தோன்றிப்
பல்லாண்டுகள் வாழ்ந்து வைணவத்தையும், ஸ்ரீரங்கநாதர் கோயிலையும்
நெறிப்படுத்தியதாகச் சொல்லப் படுகிறது. இதற்குத் தனியாக வருவோம்.
இப்போது கோயிலின் சரித்திரங்களை முதலில் பார்ப்போம்.

ஸ்ரீராமாநுஜர் காலத்தில் சோழ மரபின் வம்சாவளியில் நேரடி வாரிசு இல்லாமல்
போக, சாளுக்கிய—சோழ மரபில் வந்த இரண்டாம் ராஜேந்திரன் என்பவன் ஆட்சிப்
பொறுப்பை ஏற்க நேரிட்டது. சோழ குலத்தின் நேரடி வாரிசு ஆன அதி
ராஜேந்திரன் சந்ததி இல்லாமல் இறந்து போனான். முதலாம் ராஜேந்திரனின்
மகளைத் திருமணம் செய்து கொண்ட ராஜராஜ நரேந்திரனின் மகனான இவன் சிறு
வயதிலிருந்தே சோழ நாட்டிலேயே வளர்ந்து வந்தவன். தன் மாமன் இறந்ததும்
ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் இவனுக்கு மக்கள் ஆதரவு பெருமளவு இருந்து
வந்ததால் அமைச்சர்கள் இவனைத் தேர்ந்தெடுத்துக் குலோத்துங்கன் என்ற பட்டப்
பெயர் சூட்டி முடிசூட்டினார்கள். இவனை முதலாய்க் கொண்டு தான்
தமிழ்நாட்டில் கீழைச்சாளுக்கிய—சோழப் பரம்பரையின் ஆட்சி தொடங்கியது.
முதன்முதல் வேற்று நாட்டு இளவரசன் தமிழ்நாட்டு அரசனாக முடி சூடியதும்
இவன் காலத்தில் தான். இவனுக்கும் ஸ்ரீராமாநுஜருக்கும் பகைமை இருந்து
வந்ததாய்க் கோயில் ஒழுகு சொல்கிறது. இது குறித்துப் பின்னர் பார்க்கப்
போகிறோம்.

ஆனால் இந்தச் சளுக்கிய சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப்
பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும், ஸ்ரீரங்கம்
கோயில் நிர்வாகம் சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து
வந்ததைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அப்போதைய காலநிலைமை
சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. திருவானைக்கா ஜம்புகேஸ்வரர்
கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் அடிக்கடி சச்சரவுகள்; வாதப்
பிரதிவாதங்கள். மூன்றாம் குலோத்துங்கனின் இருபதாண்டு ஆட்சிக்காலக்
கல்வெட்டு ஒன்றின் மூலம் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாக அலுவலர்கள்,
ஜம்புகேஸ்வரக் கோயில் ஆட்சியாளர்களோடு சமரமாகப் பூசல்களைத்
தீர்த்துக்கொள்ளும்படிக் கட்டளை இட்டிருக்கிறான். இத்தனைக்கும் ஒரிசா
வரை சோழ ஆட்சி பரவி இருந்தாலும் தெற்கே இருந்து இலங்கையின் துணையோடு
பாண்டியர்களும், கீழ்த்திசையில் ஆட்சி புரிந்த கங்கர்களும், அடிக்கடி
சோழர்களைத் தாக்கி வந்தனர். இதில் கி.பி. 1223 முதல் 1225 வரையிலும்
ஸ்ரீரங்கம் கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டுக் கோயிலின்
நிர்வாகம் முற்றிலும் சிதைந்து பாழ்பட்டுப் போனது என்பதை அறிகிறோம்.

Geetha Sambasivam

unread,
Aug 19, 2012, 7:55:42 AM8/19/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
மேற்கண்ட தகவல்கள் ஆதாரம்: அறநிலையத் துறையால் வெளியிடப் பட்ட
திருவரங்கம் திருக்கோயில் புத்தகம், வைணவஸ்ரீ, மற்றும் பேராசிரியர்
நாகசாமி அவர்களின் ராமாநுஜர் பற்றிய புத்தகத்தின் விசேஷக் குறிப்புகள்
கொண்ட வலைத்தளம்.
http://adhipiran.com/ramanujar-tamil.html


2012/8/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Aug 27, 2012, 6:32:38 AM8/27/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்


ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 7


சளுக்கிய சோழ வம்சத்தினர் ஹொய்சளர்களின் துணை கொண்டு கோயிலை மீண்டும் அவர்கள் வசம் கொண்டு வர நினைத்தாலும் அவர்களால் இயலவில்லை.  அப்போது தான் பாண்டியர்கள் வேறு தலை எடுத்துச் சோழர்களை நிமிர முடியாமல் செய்து வந்தனர்.  பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அரசனான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1216---1238 ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் அவன் கர்நாடகம் என இப்போது அழைக்கப் படும் பிரதேசங்களைக் கைப்பற்றினான்.  அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டுக் காலத்தில் அவனுடைய படைகள் திருவரங்கம் கோயிலை கங்கர்களிடமிருந்து விடுவித்தது.  ஆனாலும் கோயிலின் திருப்பணிகளில் ஹொய்சளர்களின் ஈடுபாடு குறையவில்லை.  அவர்கள் பல திருப்பணிகளைச் செய்ததாகக் கலவெட்டுக்கள் பல குறிப்பிடுகின்றன.  கி.பி. 1240ஆம் ஆண்டுக் காலத்தில் ஹொய்சள மன்னன் சோமேசுவரன் என்பான் அவனது 16-ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் இக்கோயிலுக்கு ஒரு நந்தவனம் ஏற்படுத்தி மூன்றாம் பிரகாரத்தில் ஒரு சாலையையும் ஏற்படுத்தியுள்ளான்.  கி.பி.1262 வரை ஆட்சி புரிந்த சோமேசுவரனுக்குப் பின்னர் வந்த ஹொய்சள மன்னன் இராமநாதர் என்பார்(கி.பி.1263—1297) வரை ஆட்சி புரிந்தார்.  இவர் படைத்தலைவர்களாகிய இரு சகோதரர்கள் கோயிலுக்குப் பல வகையான தானங்கள் வழங்கியுள்ளனர் என்பதைக் கோயில் வரலாற்று நூல் கூறுவதாக அறிகிறோம்.  இந்தச் சமயம் தான் மிகவும் அழகு வாய்ந்த வேணுகோபால கிருஷ்ணரின் சந்நிதியும் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

தங்களின் எழுச்சியால் பெருமையும், கர்வமும் கொண்ட பாண்டிய மன்னர்களோ, தங்கள் பக்தியிலும் அந்த ஆடம்பரத்தைக் காட்டினார்கள் எனக் கூறுகின்றனர்.  அதன் மூலம் இந்தக் கோயிலுக்குப் பலவகையான நன்மைகளே கிட்டின.  முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1251—1268) வரை ஆண்டு வந்தான்.  இவன் பல கட்டிடங்களை இந்தக் கோயிலில் எழுப்பியுள்ளான் என்பதோடு பல்வகையான அலங்காரங்களையும் செய்ததோடு தாராளமாக நன்கொடைகளையும் வழங்கினான்.  இதனால் அவன் புகழ் மிகவும் பெரிய அளவில் பேசப்படுகின்றது என்பதோடு அவன் காலத்துக் கல்வெட்டுக்களும் அவன் ஸ்ரீரங்கம் கோயிலைப் பொன்மயமாகச் செய்தான் என்று பாராட்டுகிறது.  திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவை இவனால் கட்டப்பட்டதாக அறிகிறோம்.  இந்தக் கட்டிடங்களும், இரண்டாம் பிரகாரமும் பொன்னால் வேயப்பட்டதாகவும் அறிகிறோம்.  இத்தோடு நில்லாமல் ஆதிசேடன் திருவுருவம், பொன்னாலாகிய பிரபை, பொன்னாலான பீடம், பொன் மகர தோரணம், பொன் கருட வாகனம் ஆகியனவும் பொன்னாலேயே அவனால் வழங்கப் பட்டிருக்கிறது.  ஒரிசா எனப்படும் கலிங்க நாட்டரசனைப் போரில் எதிர்கொண்டு வெற்றி பெற்று அவனுடைய கருவூலத்தில் இருந்து கைப்பற்றிய பல பொருள்களைக் கொண்டு ஸ்ரீரங்கநாதருக்கு மரகத மாலை, பொன் கிரீடம், முத்தாரம், முத்து விதானம், பொன் பட்டாடை, பொன் தேர், பொன்னால் நிவேதனப் பாத்திரங்கள், குவளைகள் போன்றவற்றை வழங்கியுள்ளான்.  விலையுயர்ந்த பட்டாடைகளாலும், ஆபரணங்களாலும் திருவரங்கத் திருமேனியை அலங்கரித்து மகிழ்ந்திருக்கிறான்.

இவை அனைத்தையும் தூக்கி அடிக்கும்படி செய்த இன்னொரு நிகழ்வு தெப்போற்சவம் தான்.  அரங்கன் தெப்போற்சவம் காண வேண்டித் தங்கத்தினாலேயே படகு அமைத்தான்.  தனக்கும் சேர்த்து அப்படி ஒரு படகை அமைத்துக் கொண்டிருக்கிறான்.  காவிரியில்  இரு படகுகளையும் விட்டான்.  தனது பட்டத்து யானையை ஒரு படகில் ஏற்றி அதன் முதுகில் மன்னன் அமர்ந்தான்.  மற்றொரு படகில் ஏராளமான ஆபரணங்களும், அணிமணிகளும், பொற்காசுகளும் அவனால் நிரப்பப்பட்டுக் குவிந்து கிடந்தன.  தன்னுடைய படகினது நீர்மட்டத்திற்கு மற்றொரு படகும் வரும் வரையில் அந்தப் படகில் பொன்னைச் சொரிந்து கொண்டே இருந்தான்.  பின்னர் அப்பொன்னையும், அணிமணிகளையும் இக்கோயில் கருவூலத்திற்குத் தானமாக வழங்கினான்.  தன்னுடைய எடை அளவிற்குத் தங்கத்தினாலே திருவரங்கநாதரின் விக்ரஹம் செய்து அதையும் தன் பெயரால் வழங்க வைத்துக் கோயிலுக்கு அளித்தான்.  இவ்வாறு அவன் செய்த பல திருப்பணிகளை இக்கோயில் வரலாற்று நூல் கூறுகின்றது.

இவனை அடுத்து 25 ஆண்டுகள் வரை எந்தவிதக் குழப்பமும், தொந்திரவும் இன்றி அரங்கநாதர் நிம்மதியாக இருந்து வந்தார்.  ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அதாவது கி.பி. 1268—1308 ஆம் ஆண்டுக் காலத்தில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டுக்கும், முக்கியமாய்த் தென்னகத்துக் கோயில்களுக்கும்  மாபெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.  முதன்முதல் வெளிநாட்டிலிருந்து, போர்ச்சுக்கீசிய யாத்திரீகனான மார்க்கோபோலோ வந்து இப்பகுதியின் சிறப்பையும் செல்வச் செழிப்பையும் வியந்து எழுதியுள்ளது நாம் அனைவரும் அறிவோம்.  பாண்டிய நாட்டு மக்க்களையும், மன்னனையும் பற்றி அவர் எழுதியுள்ளவை அக்காலத்தில் நாட்டின் பெரும் செல்வத்தை மட்டும் குறிப்பிடாமல் மக்களின் உயர்ந்த பண்பையும் குறிப்பிடுகின்றது அல்லவா!  தமிழ்நாட்டின் பெரும் செல்வ வளத்தையும் முத்துக்குளித்துறையின் வளத்தையும் பற்றிப் பெருமையாகப் பேசிய மார்க்கோபோலோ தமிழகத்து மக்கள் அனைவரும் இருமுறை குளித்துச் சுத்தமாக இருந்ததாகவும், குளிக்காதவர்களைத் தூய்மைக்குறைவுள்ளவர்களாகக் கருதியதையும், நீர் அருந்துகையில் உதட்டுக்கு மேல் வைத்துத் தூக்கிக் குடித்ததையும், மன்னனாகவே இருந்தாலும் தரையில் அமர்வதைக் கெளரவக் குறைவாய்க் கருதாததையும் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்.  அதான் திருஷ்டிப் பட்டதோ என்னமோ!  குலசேகர பாண்டியன் காலத்திலேயே பாண்டிய நாட்டில் பிரச்னைகள் ஆரம்பித்தன.  இவனுக்குப் பட்டமஹிஷி மூலம் ஒரு மகனும், ஆசை நாயகி மூலம் இன்னொரு மகனும் இருந்தனர்.  பட்டத்து இளவரசன்  சுந்தரபாண்டியன் என்னும் பெயருள்ளவன்.  நியாயமாய் இவனே பட்டத்திற்கு வந்திருக்க வேண்டும்.  ஆனால்  “எம்மண்டலமும் கொண்டருளிய”  என்னும் பட்டம் பெற்ற குலசேகரனோ, தன் ஆசை நாயகியின் மகனான வீரபாண்டியனுக்கே அரசு உரிமையை அளித்தான்.  இது இரு சகோதரர்களுக்குள் பகைமையை உண்டாக்கியது என்பதோடு அந்நியரைத் தென்னகத்தில் வரவும் வழி வகுத்தது.  இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஸ்ரீரங்கம் கோயிலும், சிதம்பரம் கோயிலும், மதுரை மீனாக்ஷி கோயிலும்.  ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் இதன் அரசியல் பின்னணியையும் வரும் நாட்களில் பார்ப்போம்.

பின் குறிப்பு:  மேற்கண்ட தகவல்கள் ஆதாரம்:  அறநிலையத் துறையால் வெளியிடப் பட்ட

Geetha Sambasivam

unread,
Aug 29, 2012, 11:18:27 AM8/29/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
மன்னனால் ஆசீர்வதிக்கப்பட்ட வீரபாண்டியன் அரியணை ஏறியதை சுந்தர
பாண்டியனால் சகிக்க முடியவில்லை. இருவருக்கும் சண்டை மூண்டது. வீர
பாண்டியனுக்கோ படைபலம் இருந்தது. சுந்தரபாண்டியன் செய்வது என்னவெனத்
தெரியாமல் தவித்தான். அப்போது அவன் செய்த மாபெரும் தவறு தான்
தென்னாட்டுக் கோயில்களுக்குப் பல வருடங்கள் பிரச்னைகள் ஏற்படக் காரணம்
ஆயிற்று. ஆம்; நாடாளும் ஆசையில் தன் பிரதிநிதிகளை டில்லிக்கு அனுப்பி
சுல்தானின் உதவியைக் கோரினான் சுந்தரபாண்டியன். வயதில் சுந்தரபாண்டியன்
இளையவன் ஆனால் அவனே பட்டமகிஷிக்குப் பிறந்த பட்டத்து இளவரசன். வீர
பாண்டியனோ வயதில் முதிர்ந்தவன் ஆனால் அவன் ஆசைநாயகியின் மகன். குலசேகரோ
வீரபாண்டியனை ஆட்சி செய்ய வைத்துவிட்டுச் சென்று விட்டான். பாண்டிய நாடு
இரண்டு பட்டது. உள்நாட்டுச் சண்டைகள் ஏற்பட்டன. இந்தச் சண்டைகள்
குறித்த மேலதிகத் தகவல்கள் தேடினேன். மீண்டும் பார்க்க வேண்டும்.

அப்போது டில்லி சுல்தானாக அலாவுதீன் கில்ஜி ஆண்டு வந்தான். அவனால்
சிறைப்பிடிக்கப்பட்ட, சந்த்ராம் என்னும் அலி, முஸ்லீமாக மதமாற்றம்
செய்யப் பட்டு மாலிக்காபூர் என்னும் பெயருடன் சுல்தானின் படையின் முக்கிய
இடத்தைப் பிடித்திருந்தான். பாண்டியன் உதவி தேடி வந்ததும், ஏற்கெனவே
தெற்கு நோக்கி வந்து வாரங்கல் வரையிலும் தன் பலத்தைக் காட்டிச்
சென்றிருந்த மாலிக்காபூர் உடனடியாக சுந்தர பாண்டியன் உதவிக்கு வந்தான்.
மாலிக்காபூரின் பெரும்படைக்கு முன்னர் தன்னால் எதுவும் செய்ய இயலாது
என்பதைப் புரிந்து கொண்டிருந்த வீரபாண்டியனோ காடுகளுக்குள் ஒளிந்து
கொண்டு மறைந்து இருந்து தாக்குதல் செய்தான். வீர பாண்டியன் போசளரின்
கண்ணனூர்க் கொப்பம் செல்ல அங்கிருந்த படை வீரர்களில் பாதிப் பேர்
முஸ்லீமாக இருக்கவே அவர்களும் மாலிக்காபூருடன் சேர்ந்து கொண்டு
வீரபாண்டியனை எதிர்க்கவே அவன் தில்லைச் சிதம்பரம் சென்று அங்கே ஒளிந்து
கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்த மாலிக்காபூர் தில்லைப்
பொன்னம்பலத்தை அடியோடு பெயர்த்து எடுத்து எரியூட்டி மகிழ்ந்தான்.
ஆனாலும் வீரபாண்டியன் அவன் கைகளில் சிக்காமல் போகவே மீண்டும் மதுரை
நோக்கித் திரும்பினான். திரும்பும் வழியில் கண்களில் பட்ட கோயில்களை
எல்லாம் ஆத்திரம் கொண்டு தாக்கினான். அவன் தாக்கிய கோயில்களில்
ஸ்ரீரங்கம் கோயிலும் ஒன்று.

கோயிலினுள் நுழைய அவனால் இயலவில்லை என ஒரு சாராரும், நுழைந்துவிட்டான் என
இன்னொரு சாராரும் கூறுகின்றனர். ஆனால் கோயிலின் விக்ரஹங்கள் கொள்ளை
அடிக்கப் பட்டன. அவற்றில் ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் ஆன அழகிய
மணவாளரும், உபய நாச்சியார்களோடு கொள்ளை அடிக்கப் பட்டு டில்லி நோக்கிச்
சென்றன. ஸ்ரீரங்கம் கோயிலை இடித்துப் பாழாக்கினான். இத்துடன் தன் வெறி
அடங்காத மாலிக்காபூர் மதுரை நோக்கிச் சென்றான். பாண்டிய நாடு பெரும்
செல்வ வளத்தோடு இருந்து வந்ததால் பாண்டிய நாட்டுக் கருவூலத்தைக் கொள்ளை
அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றான். தான் அழைத்த சுல்தான்
படையினால் தனக்கு மட்டுமல்லாமல் மொத்தப் பாண்டிய நாட்டுக்கே தீங்கு
ஏற்பட்டதைக் கண்ட சுந்தர பாண்டியனோ மாலிக்காபூர் திரும்பவும் மதுரைக்கு
வருவதைத் தெரிந்து கொண்டதும், பாண்டிய நாடுப் பெரும் பொக்கிஷங்களோடு
மதுரையை விட்டுச் சேர நாட்டுக்கு ஓடி விட்டான். (அப்போது பத்மநாப சுவாமி
கோயிலில் அவன் ஒளித்து வைத்த பாண்டி நாட்டுப் பொக்கிஷங்களே இப்போது
கிடைத்திருப்பதாக ஒரு கூற்று. அதற்கான ஆதாரங்களையும் சொல்கின்றனர்.
ஆனால் நமக்கு இந்தக் கதை இப்போது தேவை இல்லை.) பாண்டியனும்
கிடைக்காமல், பொக்கிஷமும் கிடைக்காமல் ஏமாந்த மாலிக்காபூர் மதுரையைத்
தீக்கிரையாக்கியதோடு மீனாக்ஷி கோயிலுக்கும் எரியூட்டினான்.
சுந்தரபாண்டியனின் சிற்றப்பன் மாறவர்மன் விக்கிரமபாண்டியனால் எதிர்ப்பு
நேரிடவே அவனைச் சமாளிக்க முடியாமல் மாலிக்காபூர் அங்கிருந்து ராமேசுவரம்
ஓடி அங்கும் கோயிலைச் சூறையாடி எரித்து மக்களைக் கொன்று, அவர்கள்
பொருட்களைக் கவர்ந்து சேதம் விளைவித்துப்பின்னர் தென்னாட்டில் கவர்ந்த
பொருட்களுடன் 512 யானைகள், 5,000க்கும் மேற்பட்ட குதிரைகள், 500 மணங்கு
எடையுள்ள தங்க ஆபரணங்கள், விலைமதிக்க முடியா வைரங்கள், முத்துக்கள்,
மாணிக்கங்கள், மரகதச் சிலைகள் போன்றவற்றைச் சுல்தானுக்குக் காணிக்கையாக
எடுத்துச் சென்றான். கூடவே நம் அழகிய மணவாளரும் சென்றார்.

இங்கே ஸ்ரீரங்கத்திலோ கலவரம், வேதனை, கோயிலை எப்படியாவது திருப்பணிகள்
செய்து புதுப்பித்துவிடலாம். ஆனால் அழகிய மணவாளர் இல்லாமல் உற்சவங்கள்
நடப்பது எங்கே? என்ன செய்வது? ஶ்ரீரங்கம் அருகே உள்ள உத்தமர் கோயிலில்
எம்பெருமானுக்காகத் தினம் தினம் ஆடிப் பாடி மகிழ்விக்கும் பெண்ணொருத்தி
இருந்தாள். அவளோ அரங்கனைப் பார்க்காமல் சாப்பிடுவதில்லை. அரங்கனைக்
காணாமல், அவன் முன்னே ஆடிப் பாடாமல் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
அரங்கன் போன வழியைத் தேடிக் கொண்டு அவளும் கிளம்பினாள். வழியெங்கும்
விசாரித்துக் கொண்டு டில்லிப்படை சென்ற திசை நோக்கி அவளும் சென்றாள்.
விக்ரஹமும் டில்லி போய்ச் சேர்ந்தது. தனக்கு மாலிக்காபூர் கொண்டு வந்த
விலை மதிக்க முடியாப்பொருட்களைப் பார்த்து மகிழ்ந்த சுல்தான் அனைத்தையும்
வீரர்களுக்குப் பிரித்து கொடுத்தான். சுல்தானின் மகள் சுரதானி என்பவள்
அப்போது அங்கே வந்து அழகிய மணவாளரைப் பார்த்தாள். அந்த விக்ரஹம் அவளுடன்
பேசுவது போல் தோன்றியது அவளுக்கு. அந்த விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமெனக்
கேட்டு வாங்கிக் கொண்டு அந்தப்புரத்துக்கு எடுத்துச் சென்றாள்.

நன்றி: தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகம்.

Geetha Sambasivam

unread,
Sep 2, 2012, 8:05:37 AM9/2/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
சுரதானிக்கு அந்த அழகிய விக்ரஹம் மிகவும் பிடித்துப்போய்விடவே, அதனுடனேயே
தூங்கி, விளையாடி, உணவு உண்டு என ஒரு நிமிடமும் அதை விட்டு அகலாமலே
இருந்து வந்தாள். இங்கே கரம்பனூரில் இருந்த நம் நாட்டியப் பெண்மணிக்கோ
அரங்கனைத் தொடர்ந்து சென்றதில் அவன் எங்கே போயிருக்கிறான் என்பதைக்கண்டு
பிடிக்க முடிந்தது. கடும் முயற்சிகள் எடுத்து அந்தப் புரத்துக்குள்
நுழைந்து அரங்கனைச் சீராட்டிப் பாராட்டும் சுரதானியையும்
பார்த்துவிட்டாள். அவளிடமிருந்து அரங்கனை எப்படி மீட்பது? ஆனால் அவன்
திரும்ப அரங்கம் வரும் வழியென்ன?? எதுவும் புரியவில்லை அவளுக்கு.
திரும்ப ஸ்ரீரங்கம் சென்றால் தவிர எதுவும் இயலாது எனப் புரிந்தது
அவளுக்கு. ஆகவே மீண்டும் எப்படியோ அந்தப்புரத்திலிருந்து வெளி வந்து
ஸ்ரீரங்கத்தை அடைந்து விட்டாள். “பின் சென்ற வல்லி” என்னும் பெயரால்
அழைக்கப்படும் அவள், கோயிலில் சம்பந்தப் பட்டவர்களுக்கு அரங்கனின்
இருப்பிடத்தைத் தெரிவித்தாள்.

அனைவரும் கலந்து ஆலோசித்தனர். அரங்கனை எவ்வாறேனும் திரும்பக் கொண்டுவர
வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. சும்மாப் போய்க்
கேட்டால் சுல்தான் கொடுக்க மாட்டான். ஆகவே அவனை எவ்வாறேனும் கவர்ந்து
அவன் மனதை மாற்ற வேண்டும். அதனால் நன்றாய் ஆடிப் பாடக் கூடியவர்களாக
சுமார் அறுபது பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்குப் “பின் சென்ற
வல்லி “வழிகாட்ட அனைவரும் தில்லி போய்ச் சேர்ந்தனர். பெரிய கோஷ்டியாக
வாத்திய முழக்கங்களுடன் தெற்கே இருந்து ஒரு நடனகோஷ்டி வந்திருப்பதை
அறிந்த சுல்தான் தன் அவைக்கு அவர்களை வரவழைத்தான். அவர்கள்
எதிர்பார்த்ததும் இது தானே! மன்னன் சபையில் ஆடிப் பாடி அவன் மனம்
மகிழும் வண்ணம் அவன் கண்களுக்கும், மனதுக்கும் விருந்து படைத்தனர்.
மன்னன் உண்மையாகவே அவர்கள் திறமையில் மனம் மகிழ்ந்தான். ஆகவே
அவர்களுக்கு வேண்டிய பரிசில்களைக் கொடுப்பதாக மனப்பூர்வமாக அறிவித்தான்.
ஆஹா, இது, இது தானே அவர்கள் எதிர்பார்த்ததும். அவர்கள் தங்களுக்கு
வேறெதுவும் வேண்டாம் எனவும், அழகிய மணவாளரைத் திரும்பக் கொடுத்தால்
போதும் எனவும் தெரிவித்தனர். சுல்தான் அவர் இங்கிருந்தால் தாராளமாய்
எடுத்துச் செல்லுங்கள் எனக் கூற, அவர்களோ அந்தப்புரத்தில் இளவரசியோடு
இருப்பதைக் கூறினார்கள்.

அனைவரையும் விசாரித்த சுல்தான், தன் மகளிடமிருந்து அந்த விக்ரஹத்தைப்
பிரிப்பது கஷ்டம் என உணர்ந்தவனாக அவளைத் தூங்க வைத்துவிட்டு எடுத்துச்
செல்லுமாறு கூறிவிட்டான். அவளோ விஷயம் ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்டு
தூங்க மறுத்தாள். இந்த நடன கோஷ்டியே பல்வேறுவிதமான தாலாட்டுக்களையும்
பாடி அவளைத் தூங்க வைத்தது. அவள் நன்றாய்த் தூங்கியதும் அழகிய மணவாளரைத்
தூக்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கிப் பறந்தனர். ஆனால் சுரதானியோ!
மிகவும் மோசமான நிலையில் ஆழ்ந்தாள். மறுநாள் காலை எழுந்து பார்த்தால்
அவள் நேசித்த அழகிய மணவாளரைக் காணவில்லை. மனம் வருந்தி எழுந்து
குளிக்காமல், உணவு உண்ணாமல், உடைமாற்றாமல் அழுது கொண்டே இருந்தாள்.
சுல்தானுக்கு மகளின் மோசமான நிலை தெரிவிக்கப் பட்டது. தன் மகளைப் பல
விதங்களிலும் தேற்றிப் பார்த்தான். அவளோ மனம் மாறுவதாக இல்லை. அந்த
அழகிய மணவாளரையே தான் மணந்து கொள்ளப் போவதாக வேறு சொல்லிவிட்டாள்.
தன்னையும் அவரோடு அனுப்பி வைக்குமாறு வேண்டினாள். அவளின் அவல நிலையைப்
பொறுக்க முடியாத சுல்தான், சில வீரர்களின் பாதுகாப்போடு தன் மகளையும்
அழகிய மணவாளரைப்பின் தொடர்ந்து செல்லும்படி ஆணையிட்டான். முன்னால்
சென்று கொண்டிருந்தவர்களுக்குத் தாங்கள் பின் தொடர்வது தெரிந்து
போய்விட்டது. ஒரு சிலர் விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு வழியிலேயே
மறைந்தனர். மற்றவர் ஸ்ரீரங்கம் அடைந்தனர். சுரதானியும் பின்
தொடர்ந்தாள்.

ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த சுரதானியோ அங்கே கோயில் கதவுகள்
அடைக்கப்பட்டிருந்ததைக் கண்ணுற்றாள். அவளுடன் வந்த வீரர்கள் தாங்கள்
சென்று விசாரித்து வருவதாகக் கூறிச் செல்லக் கோயில் வாசலிலேயே
காத்திருந்தாள் சுரதானி. அங்கே அழகிய மணவாளர் இல்லை என்னும் செய்தியைக்
கொண்டு வந்தனர் வீரர்கள். அவ்வளவு தான். அந்த இடத்திலேயே மயக்கம்
போட்டு விழுந்த சுரதானியின் உயிரும் அக்கணமே பிரிந்தது. அவளுடைய உடல்
மட்டும் அங்கே கிடந்ததே தவிர உயிர் அரங்கனுடன் இரண்டறக்கலந்தது.
அவளையும் ஒரு நாச்சியாராக அன்று முதல் மக்கள் வழிபட ஆரம்பித்தனர்.
முஸ்லீம்கள் உருவ வழிபாடு செய்வதில்லை என்பதால் துலுக்க நாச்சியார்
சந்நிதியில் விக்ரஹங்கள் எதுவும் இருக்காது. ஒரு ஓவியம் மட்டுமே
இருக்கும். தினம் காலை துலுக்க நாச்சியாருக்காக அரங்கன் லுங்கி கட்டிக்
கொண்டு ரொட்டி சாப்பிடுகிறார். இப்போ அரங்கன் கதி என்னனு பார்ப்போம்.

இந்தச் சமயத்திலே தான் அரங்கனைத் திருப்பதியில் மறைத்து வைத்ததாகச் சிலர்
சொல்கின்றனர். அப்படி மறைத்து வைக்கப்பட்ட அரங்கனைத் தான் அறுபது
ஆண்டுகள் கழித்து மீட்டதாகவும் சொல்கின்றனர். ஆனால் ஆதாரபூர்வமான
தகவல்களோ மாலிக்காபூருடன் சென்ற அரங்கன் திரும்பி வந்து விட்டதாகவும்,
அதன் பின்னர் வந்த உல்லூகான் படையெடுப்புச் சமயத்திலே தான் அரங்கன் பல
ஊர்களுக்கும் சென்று ஒளிந்திருந்ததாகவும், அதன் பின்னர் கடைசியில்
திருப்பதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர். இது
கோயிலொழுகிலும் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது. நாம் இப்போதைக்கு
மாலிக்காபூரைப் பார்த்துக் கொண்டோம். மற்ற விஷயங்களுக்கு ஒவ்வொன்றாய்
வரப் போகிறோம். அதுக்கு முதலில் நாம் ஆதிநாயகப் பெருமான் கோயிலுக்குப்
போகவேண்டும்.

மேற்கண்ட தகவல்கள் உதவி: திரு ஹரிகி ஸ்கான் செய்து அளித்த பாரதீய
வித்யாபவன் வெளியீடான ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய தகவல்கள் அடங்கிய
புத்தகம் திரு தாஸ் அவர்களால் எழுதப் பட்டது மற்றும் திரு தவே
அவர்களால் எழுதப் பட்ட புத்தகத்தின் ஸ்கான் செய்யப் பட்ட பக்கங்கள்.

Innamburan Innamburan

unread,
Sep 2, 2012, 11:01:24 AM9/2/12
to மின்தமிழ், தமிழ் சிறகுகள், thamizhvaasal, Innamburan Innamburan

''...முஸ்லீம்கள் உருவ வழிபாடு செய்வதில்லை என்பதால் துலுக்க நாச்சியார்

சந்நிதியில் விக்ரஹங்கள் எதுவும் இருக்காது.  ஒரு ஓவியம் மட்டுமே
இருக்கும்.  தினம் காலை துலுக்க நாச்சியாருக்காக அரங்கன் லுங்கி கட்டிக்
கொண்டு ரொட்டி சாப்பிடுகிறார்..."

~ ஶ்ரீரங்கநாதரின் சரித்திரம், அவரை பற்றிய ஸ்மரணைகள், ஐதீகங்கள், செவி வாய் செய்திகள், புராணங்கள் எப்படி இருந்தாலும், மேற்படி வாக்கியங்கள் மத மாச்சிரியங்களை கடந்த தேவ/ வேத வாக்காகவே அமைந்துள்ளன. மற்றவர் மனம் நோகக்கூடாது என்ற தத்துவம் உன்னதமானது. பக்தியின் உச்சகட்டம். காலாகாலத்தில் இவை பிரபலப்படுத்தப்பட்டிருந்தால், இந்தியா பிரிவினைக்கு இறையாகி இருக்காது. சமீபத்தில் ஸர் சிமன்லால் செடல்வாட் என்ற அந்தக்காலத்து சான்றோன் ஒருவரை பற்றி படித்தேன். அவருடைய தீர்க்கதரிசனம் இந்த வகையில் தான் அமைந்திருக்கிறது. 

Geetha Sambasivam

unread,
Sep 2, 2012, 11:03:59 AM9/2/12
to tamizhs...@googlegroups.com, மின்தமிழ், thamizhvaasal, Innamburan Innamburan
தொடர்ந்து படித்து ஆதரவு காட்டுவதற்கு நன்றி ஐயா.

2012/9/2 Innamburan Innamburan <innam...@gmail.com>:

sk natarajan

unread,
Sep 2, 2012, 9:59:34 PM9/2/12
to thamiz...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
மிகப் பொறுப்பாக அரிய கருத்துக்களை அறிய தருவதற்கு  நன்றி
தொடருகின்றேன் ......

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/9/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 5, 2012, 11:12:51 AM9/5/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 10


மாலிக்காபூரின் படையெடுப்புக்குப் பின்னர் பத்துப் பனிரண்டு
வருடங்கள்வரையிலும் ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகங்களில் எவ்விதமான
மாற்றங்களும் இல்லாமல் நடைபெற்று வந்தது. நடுவில் ஒரு சிறிய முஸ்லீம்
படையெடுப்பு இருந்தாலும் அதில் இருந்து ஸ்ரீரங்கமும், மக்களும்
தப்பினார்கள். திருவிழாக்கள் கொண்டாடப் பட்டன. மக்கள் அரங்கன் திருவுரு
முன்னர் ஆடிப் பாடிக் களித்தனர். அழகிய மணவாளன் வீதி உலா வந்தான்.
எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. அப்போது ஓர் நாள் அந்த மோசமான
செய்தி வந்தடைந்தது. ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ரோத்சவம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அழகிய மணவாளர் அருகிலுள்ள ஆதிநாயகன் கோயிலுக்கு
எழுந்தருளி இருந்தார். அடியார்கள் பலரும் அழகிய மணவாளரோடு
சென்றிருந்தனர். இங்கே ஸ்ரீரங்கத்தில் சிலர் மட்டுமே இருந்தனர்.
இன்னும் சிறிது நேரத்தில் அழகிய மணவாளர் திரும்ப வரப் போகிறார் என்பதால்
பவித்ரோத்சவ மண்டபத்தில் அவரை எழுந்தருளப் பண்ண ஏற்பாடுகள் நடைபெற்றுக்
கொண்டிருந்தன. ஊர் தனக்கு நேரிடப் போகும் கலவரத்தை உணராமல்
கோலாகலத்திலும், கொண்டாட்டத்திலும் ஆழ்ந்து போயிருந்தது. பாண்டியர்களின்
நிலை இன்னதெனப் புரிபடாமல் சிறந்ததொரு தலைவன் இன்றித் தான் நாடுஇருந்தது.
என்றாலும் கோயிலின் அன்றாட நிர்வாகம் ஸ்தம்பிக்கவில்லை.

அப்போது தான் வடநாட்டுப் படையெடுப்பைக் குறித்த தகவல்கள் வந்து சேர்ந்தன.
ஹொய்சள மன்னன் எதிர்த்து நின்றதாகவும், அவனை மதம் மாறக் கட்டாயப்
படுத்தியதாகவும், அவன் தன் நாடு, குடிபடைகள், கஜானா என அனைத்தையும்
சமர்ப்பித்துவிட்டுத் தன் மதத்தைக் காப்பாற்றிக் கொண்டதாகவும் செய்தி
வந்தது. எதிரிகள் சமயபுரத்தை நெருங்கி விட்டதாகவும் கேள்விப் பட்டனர்.
கோயிலில் அப்போது நிர்வாகியாக இருந்தவர் ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர்
என்பார், யோசிக்க நேரமில்லை, உடனடியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதைப்
புரிந்து கொண்டார். ஊர்ப் பெரியோர் சிலரோடு அப்போது அங்கிருந்த வேதாந்த
தேசிகரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார். அவர்களைக் காக்கவேண்டிய
பாண்டியர்களோ ஐந்து கூறுகளாகப் பிரிந்து தனித்தனியே சண்டையிட்டுக்
கொண்டிருந்தார்கள். ஹொய்சள மன்னர் வீர வல்லாளருக்கோ எதிர்த்து நிற்க
முடியவில்லை. என்ன செய்வது! நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என
முடிவெடுத்தார்கள். அங்கேயே இருந்து மூலவரைக் காக்க வேண்டிய
ஏற்பாடுகளையும் அரங்கனோடு செல்ல வேண்டியவர்களையும் அவர்கள் முடிவு
செய்தனர். அதன்படி பிள்ளை லோகாசார்யர் தலைமையில் அரங்கனை ஸ்ரீரங்கத்தை
விட்டுத் தென் திசைக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்யப் பட்டது.

அங்கிருந்த பலருக்கும் அரங்கனைப் பார்க்காமல், அவன் ஆராதனைகளைக் காணாமல்
அன்றைய நாள் கழியாது. அரங்கனைப் பார்த்துவிட்டே அன்றாட உணவை அருந்தும்
வழக்கம் உள்ளவர்கள். இப்படிப் பட்டவர்களிடம் தாங்கள் எடுத்திருக்கும்
முடிவை எப்படிச் சொல்வது? ஆனாலும் வேறு வழியில்லை. மக்கள்
கூட்டத்தினரிடம் முகலாயப் படையெடுப்பைக் குறித்தும், கண்ணனூர் அருகே
நெருங்கி விட்டதாகவும் இப்போது செய்ய வேண்டியது அரங்கனை எவ்வாறேனும்
காப்பது தான் என்றும் விவரிக்கப் பட்டது. விழாக் காணச் சென்றிருந்த
அரங்கனை அவசரம் அவசரமாகக் கோயிலில் உள்ள அணிமா மண்டபத்துக்கு எடுத்து
வந்தார்கள். அரங்கனின் அலங்காரங்கள் களையப்பட்டன. ஒரே ஒரு பூமாலையுடன்
தோளுக்கு இனியானில் மீண்டும் அமர்த்தப்பட்டார் அழகிய மணவாளர். அரங்கனை
ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லும் ஏற்பாடுகள் துவங்கின.

மக்கள் கூட்டம் கூடி இருந்தாலும் யாரும் அரங்கனை விட்டுப் பிரிய
மறுத்தனர். அனைவரின் உயிருக்கு உயிரான அரங்கனை விட்டுப் பிரிந்து நம்
உயிரைக் காத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்றே நினைத்தனர்.
அவர்களிடம் அரங்கனை ஊரை விட்டு வெளியே எடுத்துச் செல்லப் போகும்
செய்தியைத் தெரிவிக்கவும், அவசரம் அவசரமாக அரங்கனோடு செல்லத்
தயாரானார்கள். அவர்களின் லக்ஷியம், வாழ்க்கையின் நம்பிக்கை, உயிர் அந்த
அரங்கனிடம் தான் உள்ளது. தோளுக்கு இனியான் என்னும் பல்லக்கில் அமர்ந்து
கொண்டு நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறார் அவர். சிறிது
நேரத்துக்குள்ளாக அழகிய மணவாளரும், உபய நாச்சிமார்களும் பல்லக்கில்
எழுந்தருளப் பண்ணிய கோயில் நிர்வாக அதிகாரிகள்வேத்திர பாணிகள் என்னும்
கூட்டத்தை ஒழுங்கு செய்வோர் மூலம் கூட்டத்தைக் கட்டுப் படுத்திய வண்ணம்
அரங்கன் பல்லக்கைக் கோயிலை விட்டு நகர்த்தினார்கள். பல்லக்கு மெல்ல
நகர்ந்தது.

“ஓ”வென்ற இரைச்சல். மக்கள் விசும்பி விசும்பி அழுதனர்.
திருச்சின்னங்கள் ஊத, வேதியர்கள் மறை ஓத, பிரபந்தங்கள் பாடப்பட, மங்கள
வாத்தியங்கள் முழங்க, அதிர்வேட்டு சப்திக்க, யானை முன்னால் அசைந்து
சென்று அரங்கன் வரவைத் தெரிவிக்க, ஊர்வலம் எழுந்தருளும் அரங்கன் இன்று
எந்தவிதமான சப்தமும் இல்லாமல், அணிமணிகள் பூணாமல், பட்டாடைகள் தரியாமல்,
வண்ண மலர்மாலைகள் பூணாமல், எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் ஓர் ஏழை,
எளியவனைப் போல் மறைந்து, ஒளிந்து இரவோடிரவாகத் திருட்டுத் தனமாகக்
காவிரியைக் கடந்து தெற்கே செல்லப் போகிறார். அதைக் காணச் சகியாமல் கூடி
இருந்த கூட்டம் ஓவென அழுது ஆர்ப்பரிக்க, அரங்கனைத் தொடர்ந்து சென்றார்
பலர்; அங்கேயே மயங்கி விழுந்தார் சிலர். மார்பில் அடித்துக் கொண்டு
அழுதார் பலர். அரசனைக் காண வந்தோமே, இப்படி ஆண்டியைப் போலச் செல்கிறீரே
எனக் கதறிய வண்ணம் மக்கள் கூட்டம் அரங்கன் பல்லக்கைப் பின் தொடர்ந்தது.
(இதை எழுதும்போது எனக்கும் கண்ணீர்)

அன்று ஸ்ரீராமன் நாடு விட்டுக் காடு ஏகியபோது அயோத்தியில் நிகழ்ந்த
அனைத்தும் இன்று ஸ்ரீரங்கத்தில் நடந்தது. அரங்கன் உலாக் கிளம்பியது.

அரங்கனோடு நம் உலாவும் தொடரும்.

sk natarajan

unread,
Sep 5, 2012, 12:40:10 PM9/5/12
to tamizhs...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் வாசல்
என்ன ஒரு நடை
அப்படியே ஒன்றி போனேன்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/9/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 12, 2012, 5:26:02 AM9/12/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்


ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! 11


இந்த கோபுரம் தாக்குதல் நடந்த காலத்தில் இல்லை; இது குறித்துப் பின்னர் வரும்.  கோயில் அடையாளத்துக்காகச் சேர்த்துள்ளேன்.


அரங்கனின் பல்லக்கும், பரிவாரங்களும் அக்கரையை அடையும்வரை பொறுத்திருந்து பார்த்த சிலர் மீண்டும் திருவரங்கம் நகருக்குள் திரும்பினார்கள்.  கணுக்கால் ஆழத்துக்கும் மேல், முட்டளவு ஆழத்துக்கும் மேல் இடுப்பளவு ஆழமாக இருந்த இடங்களையும் தாண்டி அரங்கன் சென்று கொண்டிருந்தான் ஒரே ஒரு தீவர்த்தியின் உதவியோடு ஒளிந்து மறைந்து திருடனைப் போல் சென்று கொண்டிருந்தான்.கோலாகலமாகச் செல்ல வேண்டியவன், அரசனைப் போல் செல்ல வேண்டியவன்.  இக்கரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மக்கள் குவித்த கரங்களைப் பிரிக்கவில்லை.  கண்ணீர் தாரை தாரையாக வழியப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.   அரங்கன் பத்திரமாய் மறுகரையை அடைய வேண்டுமே என்பதே அவர்கள் கவலையாக இருந்தது.  அரங்கன் அக்கரையை அடைந்துவிட்டான்.  இவர்களும் திரும்பினார்கள்.  இதில் அரங்கனோடு அரங்கன் சென்ற பாதையிலேயே செல்ல விரும்பினவர்களும் அப்பாதையிலேயே செல்ல ஆரம்பிக்க, திருவரங்கத்தின் மூலவரைக் காக்கும் எண்ணத்தோடு மற்றவர்கள் நகருக்குள் திரும்பினார்கள்.

விரைவில் ஒரு போர் இருக்கிறது என்ற எண்ணமும் அவர்களிடையே எழுந்தது.  கோயிலில் அரங்கன் கிடைக்கவில்லை என்றதும், கோயிலின் சொத்துக்கள், நகைகள், ரத்தினங்கள் கிடைக்கவில்லை என்றதும் வரப் போகும் கொடியவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள்.  சென்ற முறைத் தாக்குதலின் போது அருகிலுள்ள ஆதிநாயகன் கோயிலின் மூலவரான ரங்கநாதரைக் கைகளை உடைத்துச் சேதப் படுத்தி, சேஷன் மடியிலிருந்து கீழே இறக்கிப் போட்டு என்ன என்ன என்னமோ செய்து விட்டனர்.  அப்போது எப்படியோ இங்கே ரங்கநாதரைக் காப்பாற்றி விட்டார்கள்.  ஆனால் இம்முறை அவர்கள் முக்கியக் குறியே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தான்.  ஆகவே மூலவர் காக்கப்பட வேண்டும்.

கோயிலின் ஆர்யபடாள் வாயில் கதவைத் திறந்தால் உள்ளே நிலைவாயில் அருகே கற்சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள் சிலர்.  அவர்களோடு நின்று வேலையை மேற்பார்வை மட்டுமில்லாமல் கூட நின்று தானும் வேலை செய்து கொண்டிருந்தார் பெரியவர்  அவர் பெயர் வேதாந்த தேசிகர்.  முக்கியமான ஜனங்கள் ஊரை விட்டு வெளியே போய்விட்டாலும் கோயிலைச் சார்ந்த முக்கியமான பணியாளர்களில் பலருக்கும் மூலவரான பெரிய பெருமாளை விட்டுப் பிரிய மனமில்லை.  அவர்களைப் பொறுத்தவரை மூலவர் பெரிய பெருமாள் வெறும் சுதையால் ஆன விக்ரஹம் இல்லை.  சாந்நித்தியம் நிரம்பிய உயிர்ச் சக்தி ததும்பிய சொரூபமே அவர் தான்.  அவர்களை எல்லாம் அவர் தான் இத்தனை நாட்களாகக் காத்து வந்திருக்கிறார் என்பது உண்மை தான்.  ஆனால் இப்போது அவர்களை எல்லாம் வெட்டிக் கொன்றுவிட்டு அவரையும் துண்டு துண்டாக உடைக்க ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது.  அந்தக் கூட்டத்தினின்று பெரிய பெருமாளை எப்பாடு பட்டேனும் காக்க வேண்டும். அதற்கு நம் உயிர் போனாலும் லட்சியம் இல்லை.

அப்படிப்பட்ட மக்கள் அனைவரும் அன்று கோயிலுக்குள் கூடி அரங்கனை மறைக்கும் திருப்பணியைச் செய்து வந்தனர்.  முதலில் ஆர்யபடாள் வாயிலுக்கருகே கல்சுவர் எழுப்பிக் கோயிலைக் கோட்டை போல் மாற்றிவிட்டால் உள்ளே இருப்பவர்களுக்கு ஆபத்து வராது எனப் பூரணமாக நம்பினார்கள்.  அதே போல் எம்பெருமான் அடியார்களான பல பெண்களும் அங்கேயே தங்கி இருந்தனர்.  அவர்கள் அரங்கனுக்கு முன்னால் மட்டுமே ஆடிப் பாடுவார்கள்.  அரங்கனைத் தவிர மற்றவர்களுக்கு அவர்களின் இனிமையான சங்கீதமோ, ஒயிலான நாட்டியமோ காணக் கிடைக்காது.  அரங்கன் இங்கே இருக்க நாங்கள் வெளியே செல்வதா?  பின் வேறு யார் முன்னிலையில் எங்கள் கலையை நாங்கள் காட்டி ஆனந்திப்பது?  திட்டவட்டமாக மறுத்தனர் அந்தப் பெண்களும்.  இதைத் தவிர வயது முதிர்ந்த பல பெரியவர்களும் கோயிலையே கதி என நம்பி வந்தவர்களும் அங்கே இருந்தனர்.  அனைவரையும் காக்கவேண்டி நகரப்  படையினர் அனைவரும் மும்முரமாக இருந்தனர்.

அழகிய மணவாளர் காவிரியைக் கடந்து தெற்கே சென்று கொண்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்ததும், திருவரங்க நாச்சியாரின் உற்சவ விக்ரஹத்தையும் ஒரு பல்லக்கில் வைத்து அணிமணி ஆபரணங்களைப் பெட்டியில் வைத்து சில ஆட்கள் காவிரிக்கரை வழியாக மேற்கு நோக்கிப் பயணப்பட்டனர்.  அரங்கன் தெற்கே சென்று கொண்டிருக்க, நாச்சியாரோ, மேற்கே.  இனி இருவரும் சேர்வது எப்போது?  யாருக்குத் தெரியும்! :(  அடுத்ததாக அவர்கள் செய்த முக்கியக் காரியம் கோயிலின் தானியக் களஞ்சியத்தைக் காப்பது.  அதையும் செய்து முடித்தார்கள்.  ஆயுதங்களைத் தயார் செய்து வரப் போகும் எதிரியைத் தாக்குவதற்கு ஆயத்தம் செய்து கொண்டார்கள்.  எல்லாம் சரி,  பெரிய பெருமாள்??  ஆஹா, இதோ, அவரையும் பாதுகாக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.  ஆனால்.........ஆனால்........ இது என்ன, சந்நிதியை மறைத்துச் சுவர் ஒன்று!  ஆம், அரங்கன் சந்நிதியை மறைத்துக் குலசேகரன் படியின் மேலேயே கல்சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கொத்து வேலையில் முக்கியமாக வேதாந்த தேசிகரும் ஈடுபட்டு முழு முனைப்போடு செய்து கொண்டிருந்தார்.  ஒவ்வொரு கல்லாக வைக்க, வைக்க பாம்பணையில் துயிலும் அரங்கன் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்தான்.

இதோ அவன் திருவடி, அனைவரும் நன்றாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள், பின்னால் எப்போது பார்ப்போமோ!   பார்க்கையில் எத்தனை பேர் உயிரோடு இருப்போமோ, தெரியாது!  இதோ அவன் திருமுகம்.  தெற்கே நோக்கிய வண்ணம் இருக்கும் அந்த  அருள் விழிகளை இதோ இந்தக் கல்சுவர் மறைக்கப் போகிறது.  அனைவரும் பாருங்கள்;  நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.  அரங்கனின் அருளை உங்கள் மனதில் நிரப்பிக் கொள்ளுங்கள்.  இந்த அருளின் பலத்திலேயே வரக்கூடிய கடுமையான சோதனை நாட்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.  அத்தகைய சக்தியை இதோ அரங்கன்  நமக்கு அளித்துக் கொண்டிருக்கிறான்.  ஆகவே உங்கள் கண் நிறைய, மனம் நிறைய அரங்கனை நிரப்பிக் கொள்ளுங்கள்.  அவன் அருள் பிரவாகத்தில் மூழ்குங்கள்.

அனைவரும் கண்ணீர்  வடிய வடிய வேலை செய்தார்கள்.  ஒரு சமயம் அரங்கனைப் பாரத்த வண்ணம்.  மறு சமயம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அழுத வண்ணம்.  அவர்கள் பார்வையிலிருந்து மெல்ல மெல்ல அரங்கன் மறைந்தான்.  தினம் தினம் வழிபாட்டில் சிறிது நேரம் போடப்படும் திரையையே எப்போது தூக்குவார்கள், எப்போது அவனைக் காணுவோம் எனத் துடிக்கும் அந்த மக்கள் இப்போது போடப்பட்டிருக்கும் இந்தக் கல்திரையைக் கண்டு உடலும், மனமும் பதறத் துடிதுடித்து அழுதார்கள்.


உதவி செய்த நூல்கள்:  ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா, மற்றும் வைணவஸ்ரீ, Ulugh Khan’s expedition and the sack of Srirangam temple.

படங்கள் உதவி:  தற்சமயம் கூகிளார் தான்.  படங்கள் எடுக்கணும்.  கொஞ்சம் வெயில் கடுமை.  போகமுடியலை.  மாலை வேளைகளில் கூட்டம். :)))))

Geetha Sambasivam

unread,
Sep 12, 2012, 5:26:46 AM9/12/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்திய அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

2012/9/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 15, 2012, 10:53:12 AM10/15/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பவித்ரோத்சவம்! 12

ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ரோத்சவம் எனச் சொல்லி இருக்கேன்.  பார்க்கப் போனால் இது எல்லாக் கோயில்களிலும் உண்டு.   ஆகம முறைப்படியான அனைத்துக் கோயில்களிலும் பவித்ரோத்ஸவம் கட்டாயம் உண்டு.  இது சிராவண மாதத்திலேயே செய்யப்படும். சில சமயங்களில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் செய்யப்படும்.  பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும்  பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள்.  கோயிலுக்குப் பலதரப்பட்ட மக்களும் வருவார்கள்.  தடுக்க இயலாது.  அதே போல் பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம்  மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும்.  ஆலயங்கள் தொடர்பான பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம்.  இந்த உற்சவத்தில் உற்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும்.

மேலே சொல்லப்பட்ட மாதங்கள் ஏதேனும் ஒன்றில் சுக்லபக்ஷத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து இந்த உற்சவத்தின் முக்கிய அம்சம் ஆன பவித்ரம் சமர்ப்பித்தல் நடைபெறும்.  இது அநேகமாகப் பெரிய கோயில்களில் ஏழு தினங்கள் நடைபெறும்.  கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும். அதே சமயம் அங்கே வரும் பக்தர்களின் குணங்கள், மாறுபட்ட நடத்தைகள், அவர்களால் ஏற்படும் தீட்டுக்கள் போன்றவைகளால் மூர்த்திகளின் இறை அம்சங்களில் மாறுபாடு ஏற்படும். ஆகவே பவித்ரோத்சவம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

பொதுவாக கோயில்களில் நடைபெறும் உற்சவங்களில் ரக்ஷாபந்தனம் என்பது உற்சவருக்கு மட்டுமே இருக்கும்.  உற்சவ மூர்த்திகளுக்கு மட்டுமே கங்கணம் கட்டுவார்கள்.  ஆனால் பவித்ரோத்சவத்தில் மூல விக்கிரகங்களுக்கும் ரக்ஷாபந்தனம் நடைபெறும்.  இதைக் கடவுளே மேற்கொள்ளும் யக்ஞமாகப் பாவிப்பவர்களும் உண்டு.  கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களில் ஒருவர் இந்த உற்சவத்தை ஏற்று நடத்தும் தலைமப் பதவியை மேற்கொள்ளுவார்.  அவர் பெருமாளின் பிரதிநிதியாகக் கருதப் படுவார்.  உற்சவம் முடியும்வரை ஆசாரியர் எனவும் அழைக்கப்படுவார்.

 மற்றவர்களை ரித்விக்குகள் என அழைப்பார்கள்.  நல்ல முகூர்த்தம் பார்த்து உற்சவம் நடத்தக் கடவுளின் அனுமதி கோரப்படும். பின்னர் ரக்ஷாபந்தனம் என்ற காப்பு மூலவருக்கும், உற்சவருக்கும் அணிவிக்கப்படும்.  ஆசாரியரும் கட்டிக்கொள்ளுவார்.  மூலவரின் இறை சக்தியை உற்சவரிடம் மாற்றுவார்கள்.  பின்னர் யாகசாலைக்கு உற்சவரை எழுந்தருளப்பண்ணுவார்கள். அங்கே உற்சவருக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.  இந்த ஆராதனைகள் கடந்த வருஷத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒன்று என்ற மாதிரி கணக்கிடப்படும்.  வருடத்தின் 365 நாளுக்கும் ஒவ்வொரு நாளுக்கு ஒன்று என்ற கணக்கில் 365 முறை நிகழ்த்தப்படும்.  இது பெரிய கோயில்களுக்கும் பழைமை வாய்ந்த கோயில்களுக்கும் பொருந்தலாம்.  சில கோயில்கள் ஆகம முறைப்படி நடந்தாலும் அங்கே 90 நாட்கள், 180 நாட்கள் எனக் கணக்கிட்டிக் கொண்டு அபிஷேகங்கள் செய்கின்றனர். என்றாலும் குறைந்த பக்ஷமாக 12 முறை வழிபாடுகள் நடத்த வேண்டும்.

 பின்னர் கும்பஸ்தாபனம், மண்டபஸ்தாபனம் நடத்துவார்கள்.  பிரதானமான குண்டத்திலே அக்னி பிரதிஷ்டை செய்யப்படும். வேட ஆரம்பங்கள் செய்யப்பட்டு, பராயணங்களும் நடைபெறும்.  கோமம் முடிந்தபின்னர் பவித்ரம் சமர்ப்பிக்கப்படும்.  பெருமாள் கோயில்களில், முக்கியமாக ஸ்ரீரஙத்தில் அதிவாஸ பவித்ரம் என்ற ஒரு பவித்திரம் முதல் நாள் மந்திர புரஸ்ஸரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பெருமாளுக்குச் சாற்றுவார்கள். பின்னர் மறுநாள் காலையில் முதலில் மேற்கே இருக்கும் குண்டத்தில் அக்னிப் பிரதிஷ்டை செய்யப்பட்டுப் பின்னர் மற்ற குண்டங்களுக்கும் சேர்க்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்படும்.  நான்கு குண்டங்களிலும் பின்னர் பெருமாளை ஆவாகனம் செய்வார்கள். பின்னர் மீண்டும் முறைப்படியான கோமம் நடக்கும்.  ஏழாம் நாளில் யாகம் முடிவடையும் நாளன்று பூர்ணாகூதி செய்வார்கள்.  அதில் பட்டு வஸ்திரம், புஷ்பங்கள், மாலைகள், தேங்காய்கள், நெய் சேர்க்கப்பட்டு ஆகூதி செய்வார்கள்.  பின்னர் த்வார தேவதைகளுக்கு விசற்ஜனங்கள். மண்டல விஸர்ஜனம் நடக்கும்.  மண்டலம் கலைக்கப்பெற்று நடுவில் உள்ள சூர்ணத்தை உற்சவரின் திருவடிகளில் சமர்ப்பிப்பார்கள்.

 பின்னர் பவித்திரங்கள் களையப்பட்டு சகல புண்ணிய ஸ்தலங்களில் இருந்தும் மானசீகமாய்க் கொண்டுவந்ததாயக் கருதப்படும் புண்ணிய தீர்த்தங்களினால் உற்சவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும்.  பரிவட்டங்கள் சாத்தப்பட்டு, புஷ்பமாலைகள் சாத்தப்பட்டு சர்வ அலங்காரங்களோடு உற்சவர் மீண்டும் கர்பகிரகத்துக்குள் எழுந்தருளுவார்.  பின்னர் மகா கும்பத்தை சகல மரியாதைகளோடும் எடுத்துச் சென்று எல்லா மூர்த்திகளுக்கும் அந்தக் கும்ப ஜலத்தால் புரோக்ஷணம் செய்வார்கள்.  பின்னர் விசேஷ ஆராதனைகள் செய்யப்பட்டு நிவேதனங்கள் சாற்றி உற்சவம் நிறைவு பெறும்.  இது உலக க்ஷேமத்துக்காகவே நடத்தப்படும் ஒரு உற்சவம்.

Geetha Sambasivam

unread,
Oct 15, 2012, 10:01:55 PM10/15/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

ஸ்ரீரங்கம் குறித்த சில அபூர்வப் படங்கள்

நேத்திக்கு எங்கள் குடியிருப்பில் நடைபெற்ற நலச் சங்க மாதாந்திரக் கூட்டத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திரு விஜயராகவன் என்னும் ஆய்வாளர் (ஸ்ரீரங்கம் குறித்தே ஆய்வுகள்) ஸ்ரீரங்கம், திருச்சி குறித்த சில அபூர்வமான பழைய படங்களைப் பவர் பாயிண்ட் ஷோவாகக் காட்டினார்.  அவருக்கு இதைப் பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டு மடல் அனுப்பியுள்ளேன்.  ஆனாலும், அவரைக் கேட்காமலேயே இங்கே பகிர்ந்து கொண்டுவிட்டேன். தப்போ, சரியோ தெரியலை.  பல விஷயங்களும் மிகப் புதியவை. பல படங்களும் அபூர்வமானவை.  நிகழ்ச்சி முழுதும் என்னால் உட்கார்ந்து கேட்க முடியவில்லை.  ஸ்ரீரங்கம் குறித்த படப் பகிர்வுகள் முடிந்ததும் கிளம்பிவிட்டேன்.  அவர் ஸ்ரீரங்கம் குறித்த வலைப்பதிவு ஒன்றும் வைத்துள்ளார்.  அதில் இந்தப் படங்களோடு மேலதிகத் தகவல்களும் கொடுத்திருக்கிறார். இங்கேபார்க்கவும். இனி படங்கள்.







காவிரி அந்த நாட்களில் ஓடிய அழகு




அந்த நாளைய ஓவியம்

மற்றப் படங்களும் அடுத்துப் பகிர்ந்து கொள்கிறேன்.

படங்கள் நன்றி:  திரு விஜயராகவன்

sk natarajan

unread,
Oct 15, 2012, 10:21:48 PM10/15/12
to thamiz...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
அருமையான பதிவு 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal


ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/9/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>

LK

unread,
Oct 15, 2012, 10:24:37 PM10/15/12
to thamiz...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
அவரிடம் கேட்டு அந்தப் படங்களை வெளியிடவும் 

2012/10/16 sk natarajan <sknatar...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
Thanks and Regards
Karthik L
http://www.atheetham.com
www.bhageerathi.in



 

Geetha Sambasivam

unread,
Oct 30, 2012, 8:07:00 AM10/30/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 12

நவராத்திரி ஆரம்பத்தன்று கோயிலுக்குப் போனோம். தாயாரைப் பார்க்க
முடியலைனு ஏற்கெனவே சொன்னேன். அது என்னமோ தெரியலை; தாயாரைப் பார்த்தா
பெருமாளைப் பார்க்க முடியலை; பெருமாளைப் பார்த்தாத் தாயாரைப் பார்க்க
முடியலை. இது எங்களுக்கு மட்டும் தான் நடக்குதுனு நினைக்கிறேன். சரி,
இப்போ அரங்கனும், அரங்க நாயகியும் என்ன ஆனாங்கனு பார்ப்போமா? அரங்கனை
அனுப்பிட்டோம் ஊரை விட்டே. ஆனால் அரங்க நாயகி என்ன ஆனாள்னு தெரிய
வேண்டாமா? நம்ம கதையைத் தொடர்வோம்.


அரங்கன் சந்நிதி மூடப் பட்ட உடனேயே அனைவரும் தாயாரின் கதி என்னமோ என
நினைத்தார்கள். ஆனால் தாயாரையும் மூலவரை வெளியேற்றி சந்நிதிக்கு
அருகேயுள்ள வில்வ மரத்தடியில் மண்ணுக்குள் புதைத்து வைத்தனர். தாயார்
படிதாண்டாப் பத்தினி எனப் பெயர் வாங்கியவள். ஆனால் இது தான்
முதல்முறையாக வள் சந்நிதியை விட்டு வெளியே வந்திருப்பாள் என எண்ணுகிறேன்.
இந்தத் தாயார் பின்னால் சில காலம் கழித்துக் கோயிலில் வழிபாடுகள்
ஆரம்பித்த சமயம் மீண்டும் பிரதிஷ்டை செய்யத் தேடியபோது கிடைக்கவே இல்லை.
எங்கே தேடினாலும் கிடைக்கவில்லை. பின்னர் எப்போது கிடைத்தாள் என்பதை
வரும் நாட்களில் பார்க்கலாம். அரங்கநாயகியையும் மறைத்த பின்னர் கோயிலில்
இருந்த அதிகாரிகள், வேதாந்த தேசிகரை அரங்கனோடு செல்லும்படி வேண்டிக்
கொண்டனர். ஆனால் தேசிகர் மறுத்தார். இங்கே ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரிய
பெருமாளைக் காக்க வேண்டி இத்தனை மக்கள் இருக்கத் தான் மட்டும்
தப்பிப்பிழைப்பதில் அவருக்குச் சம்மதம் இல்லை. ஆனால் வைணவத்தை நிலை
நிறுத்த வந்த உந்நதமான ஆசாரியர்களில் ஒருவரான தேசிகரைக் காப்பாற்றியே தீர
வேண்டும் என அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்துவிட்டனர்.

இவர்களுக்குள் வாக்குவாதம் நடக்க அதற்குள்ளாக தில்லிப் படைகள் ஆற்றில்
இறங்கித் தாக்க முன்னேறும் தகவல் கிடைத்தது. ஹொய்சளப் படை வீரர்கள்
வழிகாட்ட தில்லிப் படை முன்னேறியது. அனைவரும் தாக்குதலுக்கான
முன்னேற்பாடுகளோடு வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தலைமை வகித்து
நடத்தி வந்தவன் உல்லு கான் என்னும் தளபதி. தில்லி சுல்தானாக இருந்த
கியாசுதீன் துக்ளக்கின் மூத்தகுமாரன் ஆன இவனே முகமது-பின் – துக்ளக் என்ற
பெயரில் பிரபலமடைந்தவன். அங்கே கோயிலையே கோட்டையாக மாற்றிய வண்ணம்
ஊர்க்காரர்கள் அனைவரும் போருக்குத் தயாரானார்கள். பட்சிராஜன் தோப்பு என
அந்நாட்களில் அழைக்கப் பட்ட கருடன் சந்நிதியைச் சுற்றி இருந்த
தோப்புக்கள் எல்லாம் ஆட்கள் நடக்க முடியாதபடிக்கு முட்கள் பரப்பப்பட்டு,
முட்களால் ஆன பந்துகள் தூவப்பட்டுக் காணப்பட்டன. இவற்றில் மனிதரோ,
குதிரைகளோ செல்ல முடியாது. எதிரிப் படைகள் முன்னேறி தெற்கு வாயிலுக்கு
வராமல் இருக்கச் செய்த இந்த முன்னேற்பாடுகள் எல்லாமும் வீணாகத் தான்
போயின.

அவற்றின் இடையே கால்களை வைத்து எதிரிப்படைகள் முன்னேறினார்கள். ஆனால்
வடக்கு வாயிலுக்கு வந்த படைகள் உடனடித் தாக்குதலில் ஈடுபடாமல் சற்றே
பின்னோக்கிச் சென்று ஸ்ரீரங்கத்தின் மக்களைச் சரணடையும்படியும், கோயிலில்
உள்ள சகலவிதமான ஆபரணங்கள், நகைகள், பொருட்கள், தானியங்கள் அனைத்தையும்
சுல்தானுக்குச் சமர்ப்பிக்கும்படியும் ஆணையிட்டனர். ஆனால் ஊர் மக்களோ
தங்களுக்கு அரசன் அந்த ரங்கராஜன் ஒருவனே எனவும், அவன் யாருக்கும் கப்பம்
கட்டும் நிலையில் இல்லை என்றும் ஈரேழு பதினான்கு உலகுக்கும்
அதிபதியானவனைக் கப்பம் கட்டச் சொல்லும் உரிமையும் எவருக்கும் இல்லை
எனவும் அறிவித்தனர். போர் ஆரம்பித்தது. அரங்கன் தென்காவிரிக்கரையில்
தேசிகருக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அரங்கன் அடுத்து எங்கே
சென்றான், தேசிகர் அரங்கனைச் சேர்ந்தாரா என்பதை வரும் நாட்களில்
பார்ப்போம்.

Innamburan Innamburan

unread,
Oct 30, 2012, 8:27:26 AM10/30/12
to thamiz...@googlegroups.com, mintamil, தமிழ் சிறகுகள்
கீதா,
இங்கு நூலகம் ஒரு சமுதாய முற்றம். பல நிகழ்வுகள் ஒரே சமயத்தில்: வயது 2 ~100. மாதந்தோறும் Reminiscences Day என்று பழைய நினைவுகளை, ஆவணங்களை பகிர்ந்து கொள்கிறோம். நான் ஒரு முறை இந்திய நாணயங்களை காண்பித்து விவரித்தேன். உங்கள் நலச்சங்கத்திற்கும் திரு.வி. அவர்களுக்கும்
என் வாழ்த்துக்களை சொல்லுங்கள்.

Geetha Sambasivam

unread,
Oct 30, 2012, 10:15:29 AM10/30/12
to thamiz...@googlegroups.com, mintamil, தமிழ் சிறகுகள்
நன்றி ஐயா, அடுத்த முறை சந்திக்கையிலே கட்டாயம் சொல்கிறேன்.  நன்றி ஆதரவு காட்டி வருவதற்கு.

2012/10/30 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.

sk natarajan

unread,
Oct 31, 2012, 2:12:02 PM10/31/12
to tamizhs...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் வாசல்
மிகவும் சுவாரசியசமாக செல்கின்றது
உங்களின் எழுது நடை அருமை
அடுத்து என்ன நடக்கப் போகின்றது என அறிய துடிக்கின்றது மனது 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/10/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 9, 2012, 4:40:37 AM11/9/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
கோயிலில் இருந்தவர்களை வெளியேற்ற நினைத்தால் எவரும் வெளியேற மறுத்தனர்.
கோயிலிலேயே தங்குவதாய்க் கூறினார்கள். அரங்கன் முன்னிலையில் அவனுக்காக
நாட்டியம் ஆடும் பெண்மணிகளும் கோயிலுக்குள்ளேயே தங்கினார்கள். சற்றும்
பயமே இல்லாமல் அனைத்தையும் அரங்கனிடம் ஒப்படைத்துவிட்ட அந்தப் பெண்கள்
போரிடச் செல்லும் ஆண்களுக்காக உணவு தயாரிப்பதில் முனைந்தனர். கோயிலின்
அந்தணர்கள் அனைவரும் வாளும், கத்தியும், கதையும் ஏந்தி யுத்தத்துக்குத்
தயாரானார்கள். உல்லுகான் அனுப்பிய செய்தியில் அனைத்துச் சொத்துக்களையும்
சுல்தானிடம் ஒப்படைக்கச் சொல்லி இருந்ததை மறுத்த அவர்கள், தாங்கள்
அனைவரும், இந்த ஸ்ரீரங்கமும், கோயிலும் அதன் சொத்துக்களும் ரங்கநாதனுக்கே
அடிமை எனவும், அவர்களுக்கு ராஜா ரங்கராஜாதான் எனவும் கூறி அடிபணிய
மறுத்தனர். இன்னொரு பக்கம் ஒரு அரசனுக்கு ஐந்து அரசனாகப் பாண்டியர்கள்
பிரிந்து நிற்பதையும் அவர்கள் ஒற்றுமையின்மையால் நேரிட்ட இந்தத்
துன்பத்தை எண்ணியும் மனம் கலங்கினார். தாங்கள் அனுப்பி வைத்த அழகிய
மணவாளர் எங்கே இருக்கிறாரோ என நினைத்து வருந்தினார்கள்.

கோயிலின் தலைமை அதிகாரியான ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர் தலைமையில்
12,000 வைணவர்கள் அந்நியப் படையெடுப்பை எதிர்க்கத் திரண்டனர். ஒரு
பக்கம் போர்த் தந்திரங்களும், பயங்கர ஆயுதங்களையும் ஏந்திய வலுவான படை.
இங்கேயோ எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் தங்கள் மனோபலத்தையும் அரங்கனையுமே
நம்பிய மக்கள். எனினும் மிகவும் உத்வேகமாக எதிர்த்து நின்றனர்.
எதிரிகள் வடக்கு வாசலில் காவல் நின்ற பஞ்சு கொண்டான் என்பவரை எதிர்த்து
உள்ளே புகுந்தனர். இந்த வடக்கு வாசல் ஆர்ய படாள் வாசல் எனப் படுகிறது.
வட மாநிலங்களிலிருந்து வந்த “கெளட” தேசத்து அரசர் கொடுத்த பொருளைக்
கோயில் நிர்வாகம் வாங்க மறுக்கவே தம் தேசத்து ஆர்ய அந்தணர்களை நியமித்து
அந்தப்பொருட்களை அங்கே பாதுகாத்து வைத்திருந்த காரணத்தால் இந்தப்பெயர்
என்கிறார்கள்.

வடக்கு வாசலில் காவல் இருந்த வில்லிதாசரின் மகன் குலசேகரனையும், பஞ்சு
கொண்டானையும் எதிர்த்து உள்ளே புகுந்த வீரர்கள் 12,000 அந்தணர்களையும்
கொன்று குவித்தனர். பஞ்சு கொண்டானும் உயிர் நீத்தார். குலசேகரன்
எவ்வாறோ தப்பி விட்டான். அரங்கனைத் தேடி அவனும் அவனுடன் இன்னும் சிலரும்
சென்றனர். உயிர் நீத்த அந்தணர்களில் சுதர்சன பட்டர் என்னும் பெரியாரும்
ஒருவர். இவர் நடாதூர் அம்மாள் அவர்களின் சீடர் ஆவார். அவரிடம் அமர்ந்து
பாடம் கேட்டு “சுதபிரகாசிகை” என்னும் பிரம்மசூத்திர வியாக்யானம் ஆன ஸ்ரீ
பாஷ்யத்துக்கு விளக்கவுரை எழுதியவர். அந்த சுதபிரகாசிகையையும், தம்மிரு
மகன்களையும் அங்கே பிணங்களுக்கு நடுவே மறைந்திருந்த வேதாந்த தேசிகரிடம்
பராசர பட்டர் என அழைக்கப்பட்ட சுதர்சன பட்டர் ஒப்படைத்தார்.

மூலவரான ரங்கநாதரைக் கல்சுவரால் மறைக்க ஏற்பாடு செய்த வேதாந்த தேசிகர்,
ரங்கநாயகித் தாயாரையும்ம் அங்கிருந்த வில்வ மரத்தடியில் ஒளித்து வைக்க
ஏற்பாடு செய்தார். அவரை அழகிய மணவாளரின் ஊர்வலத்தோடு சேர்ந்து
செல்லும்படிக் ஓயில் அதிகாரிகள் வேண்டியும் அவர் போக மறுத்தார். அவர்
வருகையை எதிர்பார்த்துக் கொண்டு அழகிய மணவாளரைத் தூக்கிச் சென்றவர்கள்
தேசிகர் பின் தொடர்வதற்கு ஏதுவாக உலர்ந்த இலைகளையும், துளசிக்
கொத்துக்களையும் போட்டுக்கொண்டு சென்றிருந்தார்கள். ஆனால் இங்கே கோயிலில்
தங்கிய வேதாந்த தேசிகருக்கு இப்போது ஒரு மாபெரும் பொறுப்பு ஒப்படைக்கப்
பட்டது. சுதர்சன பட்டரின் குழந்தைகளையும், சுதபிராகாசிகையையும்
மறைத்துக் கொண்டு ஒளிந்திருந்த வேதாந்த தேசிகர் அங்கிருந்து
கிளம்பினார். கிரஹண காலத்துச் சூரியன் போல மறைந்திருக்கும் அரங்கனை
மீண்டும் எவ்விதமான இடர்ப்பாடுகளும் இல்லாமல் தாம் தரிசிக்க வேண்டும் என
வேண்டிக் கொண்டு கிளம்பினார் தேசிகர்.


அரங்கன் சென்ற வழிதெரியாமல் விழித்துக்கொண்டு இருந்த தேசிகருக்குத்
துளசிக் கொத்துகளை வைத்து அடையாளம் கண்டு செல்லும்படி கூறப்பட்டது.
ஆனால் திடீரென அடித்த காற்றில் அவை பறந்து வேறு திசைகளில் வியாபித்து
இருக்க தேசிகரோ நிலைமை தெரியாமல் அவற்றைத் தொடர்ந்தே சென்றார். ஆனால்
அவருக்குச் சற்றே முன்னால் சென்ற வில்லிதாசரின் மகன் குலசேகரனும்
இவ்விதம் தவித்தபோது ஒய்சள ராஜகுமாரியுடன் இருந்த ஒரு பெண் தொண்டைமான்
காட்டுக்குள் அரங்கன் ஊர்வலம் புகுந்து செல்வதாகக் கூறி அடையாளமும் காட்ட
குலசேகரன் அரங்கனைத் தொடர்ந்து சென்றான். ஸ்ரீதேசிகருக்காகக்
காத்திருந்த பிள்ளை லோகாச்சாரியார் ஊர்வலத்தைக் கிளப்பிக் கொண்டு மேலும்
தெற்கே சென்றார். தேசிகரோ வழி தப்பிப் போய் உறையூரை அடைந்தார். அரங்கன்
ஊர்வலத்தைத் தொடர்ந்து செல்ல எண்ணிய மக்களைத் தடுத்து நிறுத்தினார்.
பாண்டிய அரசர்கள் போன இடம் தெரியாமல் மறைந்துவிட்டனர். ஆகவே இங்கே
ஸ்ரீரங்கத்தில் அவர்களை எதிர்ப்பார் இல்லாத டில்லிப் படை கோயிலுக்குள்
புகுந்து அனைவரையும் வெட்டி வீழ்த்தித் தோண்டித் துருவிப் பார்த்துவிட்டு
எதுவும் கிடைக்காமல் கோபம் கொண்டு மதுரை நோக்கிச் சென்றனர்.

Geetha Sambasivam

unread,
Nov 9, 2012, 4:45:44 AM11/9/12
to tamizhs...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் வாசல்
ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 12

நவராத்திரி ஆரம்பத்தன்று கோயிலுக்குப் போனோம். தாயாரைப் பார்க்க

மின்சாரம் போயிடப் போறதே என்ற அவசரத்தில் பதிவை முன்பின்னாகப்
போட்டுவிட்டேன். பொறுத்துக்கொள்ளவும். இதைப் படித்த பின்னரே பதின்மூன்று
வேதாந்த தேசிகர் குறித்த பதிவு வரும். அதை மீண்டும் இதற்கடுத்துப்
போடுகிறேன். தொந்திரவுக்கு மன்னிக்கவும். :((

Geetha Sambasivam

unread,
Nov 9, 2012, 4:46:41 AM11/9/12
to tamizhs...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் வாசல்

எதுவும் கிடைக்காமல் கோபம் கொண்டு மதுரை நோக்கிச் சென்றனர்.

sk natarajan

unread,
Nov 9, 2012, 7:59:43 AM11/9/12
to thamiz...@googlegroups.com, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
எத்தனை துயர் அடைந்துள்ளார்கள் அம்மக்கள்
விறு விறுவென்று செல்கின்றது 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/11/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 10, 2012, 8:20:03 AM11/10/12
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, மின்தமிழ்
ஆமாம், நம் பாரம்பரியத்தைக் காக்க வேண்டி பல உயிர்களும் பாடுபட்டிருக்கின்றன.  இம்மாதிரியான நிகழ்வுகள் சிதம்பரம் கோயிலிலும் நடைபெற்றிருக்கிறது.  நடராஜரும் சில காலம் அம்பலத்திலிருந்து வெளியே சென்று மறைந்து வாழ்ந்திருக்கிறார். 

2012/11/9 sk natarajan <sknatar...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Nov 14, 2012, 7:13:23 AM11/14/12
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கனின் தீபாவளிக் கொண்டாட்டம்.



அரங்கன் தீபாவளி கொண்டாடுவது அமர்க்களமாக இருக்கும் என ஸ்ரீரங்கம் வரும் முன்னரே கேள்விப் பட்டிருக்கேன்.  நேற்றுக் காலையிலேயே கோயிலுக்குப் போக எண்ணம்.  ஆனால் முடியவில்லை.  மாலை அரங்கன் சந்தனு மண்டபத்தில் எட்டு மணி வரை சேவை சாதிப்பான் என்பதைத் தெரிந்து கொண்டு சென்றோம்.  அரங்கன் சேவை அதி அற்புதம்.  எதிரே கிளி மண்டபத்தில் ஆழ்வாராதிகளையும், அப்படியே ஆசாரியர்களையும் சேவித்துக் கொண்டோம்.  அப்படியே விமான தரிசனமும், பர வாசுதேவர் தரிசனமும் செய்து கொண்டோம்.  பெரிய பெருமாள் ஏழு மணிக்கப்புறமாய்த் தான் தரிசனம் தருவார். அதுக்குக் கூட்டம் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டிருந்தது.  ஆகவே வந்துவிட்டோம்.  இன்னொரு நாள் தான் போகணும்.  போகப் போகக் கவர்ந்து இழுக்கும் கோயிலாக இருக்கிறது. பார்க்கப் பார்க்கத் திருப்தியும் அடையவில்லை. இனி நம்பெருமாளின் தீபாவளிக் கொண்டாட்டங்கள் குறித்து:


ஆண்டாள் கவலையுடன் அமர்ந்திருக்க, ரங்க மன்னார் வருகிறார்.  இதழ்க்கடையில் சிரிப்பு.  குறும்புச் சிரிப்பு.  "என்ன ஆண்டாள், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! என்ன விஷயம்? "



"ஒன்றுமில்லை;  தீபாவளி வருகிறது.  அப்பா வருவாரா, மாட்டாரா எனத் தெரியவில்லை."

"ஏன், இங்கே உனக்குப் பட்டுப் பட்டாடைகளுக்கு என்ன குறைவு? இவை போதவில்லையா? இந்தப் பெண்களே...............

"போதும் நிறுத்துங்க!  உங்களை விடவும் அலங்காரப் பிரியர் வேறு யார் இருக்கிறார்கள்?  என் கவலையெல்லாம் உங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் அப்பாவுக்குச் சீர் தர இயல வேண்டுமே என்பது தான். "



அரங்கன் இளமுறுவலோடு ஆண்டாள் அருகே அமர்ந்தான்.  ஆயிற்று; நாளை தீபாவளி.  மாமனார் வந்து சீர் கொடுக்க வேண்டும், என மாப்பிள்ளை சும்மா இருக்க முடியுமா!  அவனுடைய அடியார்களை எல்லாம் அவன் தானே கவனிக்க வேண்டும். அதோடு அவன் வேறு எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டுமே.  எண்ணெயில் தானே ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மி இருக்கிறாள்.  முதல் நாள் இரவே அரங்கன் எண்ணெய்க் கோலம் காண்கின்றான்.  மற்றவங்க எண்ணெய் தேய்த்துக்கிறதுக்கும் அரங்கன் தேய்ச்சுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கே.  இங்கே அரங்கன் கோயிலின் பட்டத்து யானையான ஆண்டாள், ரங்கா, ரங்கா எனப் பிளிற, மேள, தாளங்கள் முழங்க அரங்கன் எண்ணெய்க் காப்பு நடக்கிறது.

அப்பாடா! அரங்கனுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் ஒரு நிம்மதி.  இனிமேலே நம்முடைய அடியார்களைக் கவனிப்போம்.  யாரங்கே, ஆழ்வார்களுக்கெல்லாம் எண்ணெய், சீயக்காய், கொண்டு கொடுங்கள்.  அவங்க வீட்டுப் பெண்களை மறக்காதீங்க.  ஆகவே மஞ்சளும் கொடுக்கணும். 

ஆழ்வார்களுக்கு மட்டும் கொடுத்தால் போதுமா!  ஆசாரியர்கள், வைணவத்தைப் பரப்பியவர்கள், அவங்களுக்கு? 

இதோ, அவங்களுக்கும் தான்.  அதோடு நாளைக்கு அவங்களுக்கெல்லாம் தீபாவளிப் பரிசும் உண்டு. " அரங்கன் அறிவிக்கிறான். இப்போது அரங்கன் ரகசியமாக, மிக ரகசியமாகத் தன் அடியார் ஒருத்தரை அழைத்து, "ரங்க நாயகிக்கு எண்ணெய் அனுப்பியாச்சா?  அவள் படிதாண்டாப் பத்தினி.  அப்புறமாக் கோவிச்சுக்குவா. சேர்த்தித் திருவிழா  அன்னிக்கு முகத்தைத் திருப்பிக் கொள்ளப் போகிறாள். நான் மறந்துட்டேன்னு நினைக்கப் போகிறாள்." என்று கிசுகிசுக்க, ஆண்டாள், "என்ன விஷயம்?" எனக் கேட்க, அரங்கன் மெளனமாகப் புன்னகைக்கிறான்.

மறுநாள் தீபாவளி அன்று தாயார் ரங்கநாயகி, ஆழ்வார்கள், ஆசாரியர்கள் அனைவரும் எண்ணெய் அலங்காரம் செய்து கொண்டு திருமஞ்சனமும் செய்து கொள்கிறார்கள்.  அரங்கன் மட்டும் தன்னுடைய அர்ச்சா மூர்த்தியான நம்பெருமாளை உசுப்பி விடுகிறான்.  பெரிய பெருமாளுக்கு எண்ணெய் அலங்காரம் நடந்து புதுசாக ஆடை, அலங்காரம், மாலைகள் முடிந்ததும், நம்பெருமாளுக்கும் நடக்கின்றது.  நம்பெருமாள் உலாக்கிளம்புகிறார்.  ஆனால் கோயிலுக்குள்ளேயே தான்.

"ஆஹா, அப்பா வந்துவிட்டாராமே, அங்கே இப்போது போக முடியுமா? அனைத்துப் பெரியவர்களும் கூடி இருக்கின்றனரே." ஆண்டாளுக்குக் கவலை.


ஆம்,  பெரியாழ்வார் உட்பட அனைத்து ஆழ்வார்களும், ஆசாரியர்களும் அரங்கனின் சேவையைக் காண மூலஸ்தானத்துக்கு நேர் எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்துக்கு எதிரே தனியாகப் பிரிந்து காணப்படும் கிளிமண்டபத்தில் எழுந்தருளுகிறார்கள்.  அனைவரும் அரங்கன் வருகைக்குக் காத்திருக்கப் பெரியாழ்வார் நாணய மூட்டைகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.  மாப்பிள்ளையான அரங்கனுக்குச் சீராகக் கொடுக்க வேண்டியவை அவை.  அரங்கனோ சாவகாசமாக மூலஸ்தானத்துக்கு எதிரே இருக்கும் சந்தனு மண்டபத்திற்கு வந்து மீண்டும் ஒரு அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளுகிறான். 

பின்னர் தீபாவளிச் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.  பின்னர் பகல் நான்கு மணிக்குப் பெரியாழ்வார் சீராகக் கொடுத்த நாணய மூட்டைகள் அரங்கனைச் சுற்றிப் பெரியாழ்வார் சார்பில் கோயில் அரையர்களால் வைக்கப் படுகிறது.  இந்த நாணய மூட்டையை "ஜாலி" அல்லது "சாளி" என்கிறார்கள்.  இவற்றை ஏற்றுக் கொள்ளும் அரங்கன் தம் மாமனார் பெருமையை உலகறியக் காட்ட வேண்டி இரண்டாம் பிராகாரத்தில் நாணய மூட்டைகளோடு வலம் வருகிறான்.  பின்னர் மீண்டும் கர்பகிருஹத்துக்கு எதிரிலுள்ள சந்தனு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறான்.

மெல்ல மெல்ல இரவு எட்டு மணி ஆகிறது.  தனக்காகக் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசாரியர்களைக் கிளி மண்டபத்திற்கு வந்து அரங்கன் ஒவ்வொருவராகப்பெயரைச் சொல்லி அழைக்க, ஒவ்வொருவருக்கும் அரங்கன் சார்பில் தனியாக மரியாதை செய்யப் படுகிறது.  அரங்கனின் மரியாதையைப் பெற்றுக்கொண்ட ஆழ்வார்களும், பதில் மரியாதையைப் பெற்றுக் கொண்ட பெரியாழ்வாரும் அரங்கனிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு தத்தம் சந்நிதிக்குச் செல்கிறார்கள்.  ஆனாலும் கூடி இருக்கும் மக்களுக்காக அரங்கன் இன்னும் சிறிது நேரம் அங்கே சேவை சாதிக்கிறான்.  நேரம் ஆவதைக் குறித்துக் கவலை இல்லாமல் பக்தர்களுக்கு சேவை சாதித்துவிட்டுப் பின்னர் அரங்கன் தன் தீபாவளிக் கொண்டாட்டத்தை முடித்துக் கொள்கிறான்.

ஆண்டாளைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கேட்கிறான் அரங்கன். "என்ன சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! சீர் வரிசை வந்ததா?"

"சுவாமி, தங்கள் கருணையே கருணை!" ஆண்டாள் அரங்கனோடு ஐக்கியம் அடைகிறாள்.

படங்களுக்கு நன்றி: கூகிளாண்டவர்.  தகவல் உதவி: தினமலர்



திவாஜி

unread,
Nov 14, 2012, 8:21:40 AM11/14/12
to thamizhvaasal
பதிவு நீங்க எழுதினதா, யாரும் மண்டபத்துல எழுதி கொடுத்தாங்களா?
:P:P:P:P
நல்லா இருக்கு! நல்ல கற்பனை! 

2012/11/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>
 தகவல் உதவி: தினமலர்



--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

Geetha Sambasivam

unread,
Nov 14, 2012, 9:55:54 AM11/14/12
to thamiz...@googlegroups.com
grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

2012/11/14 திவாஜி <agni...@gmail.com>
329.gif
320.gif

Innamburan Innamburan

unread,
Nov 14, 2012, 1:58:56 PM11/14/12
to thamiz...@googlegroups.com


2012/11/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>
329.gif
361.gif
320.gif

Geetha Sambasivam

unread,
Nov 15, 2012, 3:42:24 AM11/15/12
to thamiz...@googlegroups.com
அது ஒண்ணும் இல்லை ஐயா,  திருவிளையாடல் படத்திலே தருமி மண்டபத்திலே சிவாஜி எழுதித் தரதை வாங்கிட்டு வர மாதிரி வாங்கிட்டு வந்துட்டியானு தம்பி கேட்கிறார்.  வஞ்சப் புகழ்ச்சி அணி.  

அதாகப் பட்டது, என்னோட பதிவு நல்லா இருக்குனு சொல்லாமல் சொல்றார். 

2012/11/15 Innamburan Innamburan <innam...@gmail.com>


2012/11/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>
grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
2012/11/14 திவாஜி <agni...@gmail.com>
பதிவு நீங்க எழுதினதா, யாரும் மண்டபத்துல எழுதி கொடுத்தாங்களா?
:P:P:P:P
நல்லா இருக்கு! நல்ல கற்பனை! 

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
329.gif
361.gif
320.gif

Geetha Sambasivam

unread,
Dec 11, 2012, 7:10:50 AM12/11/12
to மின்தமிழ்

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 14




அரங்கனைத் தேடிச் செல்பவர்கள் தொடர வசதியாகத் துளசிச் செடிகளைக் கொத்துக் கொத்தாகப் பிய்த்து வழி நெடுகப் போட்டுக்கொண்டே சென்றனர் அரங்கனோடு திருவரங்கத்திலிருந்து கிளம்பியவர்கள் அனைவரும்.  அதோடு மட்டுமில்லாமல் அரங்கனுக்குப் பூசப்பட்ட பரிமள கஸ்தூரியின் வாசனையும் சேர்ந்தே அரங்கன் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்தது.  இந்த விஷயம் தான் அவர்களுக்குக் கவலை அளித்து வந்தட்து.  இந்த அதிசயமான நறுமணத்தின் மூலம் அரங்கன் இருக்குமிடத்தைக் கண்டு எதிரிகள் பின் தொடர்ந்தால் என்ன செய்வது எனக் கவலைப் பட்டனர்.  எனவே காடுகளுக்குள்ளும், சோலைகளுக்குள்ளுமே புகுந்து சென்றனர்.  அந்நாட்களில் இயற்கை அன்னையின் வளத்தைக் களவாடும் அளவுக்கு மனிதர் துணிய ஆரம்பிக்கவில்லை.  ஆகவே பூமித்தாய் தன் அனைத்து வளங்களோடும் பரிபூர்ண சர்வாலங்கார பூஷிதையாகவே காட்சி அளித்தாள். விரைவில் திருச்சினாப்பள்ளி நகரின் கரையைக் கடந்து அருகிலுள்ள தொண்டைமான் காட்டில் புகுந்தனர்.  அந்நாட்களில் திருச்சிராப்பள்ளி சிறியதொரு நகரம்.  கோட்டையும், அகழியும் இருந்தன.  நகரை அடுத்துக் கழனிகளும் சோலைகளும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணப்பட்டன.
தொண்டைமான் காட்டில் ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்லலாம் என பிள்ளை உலகாசிரியர் முடிவு செய்தார்.


  ஏனெனில் திருவரங்கத்திலிருந்து வேதாந்த தேசிகரும் மற்றப் பெரியவர்களும் வந்து சேர்ந்து கொள்வதாய்ச் சொல்லி இருந்தனர்.  இன்றிரவு இங்கே தங்கினால் அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள்.  பின்னர் நாளை பயணத்தைத் தொடங்கலாம் என நினைத்தனர்.  ஆனால் மறுநாள் பொழுது விடிந்தும் எவரும் வரவில்லை.  எனவே அரங்கனோடு இருப்பவர்களுக்குக் கவலை அதிகரித்தது.  ஆனாலும் இங்கே தங்குவது ஆபத்து என்று புரிந்து கொண்டிருந்தார்கள்.  ஆகவே அங்கிருந்து கிளம்பினார்கள்.  காட்டிலேயே பெரும்பாலும் சென்றனர்.  பிரதான சாலைகளைத் தவிர்த்தனர்.  சுற்று வழியாகவே சென்றனர்.  கூடச் சென்ற மக்களில் வசதி படைத்தோர் பல்லக்குகள், குதிரைகளில் பிரயாணம் செய்தனர்.  கால்நடையாகச் சென்றவர்களே அதிகம். பரிசனங்கள் எனப்படும் கோயில் ஊழியர்கள் முன்சென்று வழிகாட்டுகையிலேயே துளசிக் கொத்துக்களை அவர்கள் பறித்துக் கீழே போட்டுக் கொண்டு சென்றனர்.  பின்னால் பிள்ளை உலகாசிரியரும் அவர் சீடர்களும் மற்ற மக்களும் செல்ல அரங்க்கன் பல்லக்கு அவர்களைத் தொடர்ந்தது.  இரு தினங்கள் இவ்விதம் யாத்திரை செய்தவர்கள் களைப்புத்தாங்காமல் ஓர் இடத்தில் தங்கினார்கள்.

அப்போது வேதாந்த தேசிகரின் சீடர்களில் ஒருவரான “பிரம்ம தந்திர சுதந்திர ஜீயர்” என்பார் கவலையுடன் பிள்ளை உலகாசிரியரை அணுகி வேதாந்த தேசிகர் இன்னமும் வந்து சேரவில்லை என்பதைக் குறித்த தம் கவலையைப் பகிர்ந்து கொண்டார்.  துளசிக் கொத்துக்களைப் பார்த்துக்கொண்டு வந்து சேர்வார்கள் எனத் தாம் நம்புவதாய் பிள்ளை உலகாசிரியர் கூறி அவரைச் சமாதானம் செய்ய எச்சரிக்கை முரசு அடித்தது.  திடுக்கிட்ட அனைவரும் அரங்கனைப் பல்லக்கோடு மறைத்துவிட்டுப் பார்க்க, வந்தவ்வர்கள் ஸ்ரீரங்கத்து வாசிகளான சில நண்பர்களே. அவர்கள் போர் மூண்டு ஸ்ரீரங்கம் எதிரிகள் கைகளில் சிக்கிக் கோயிலிலும் 12,000-க்கும் மேற்பட்ட அந்தணர்கள் உயிர் விட்டதையும், பல பெண்கள் அரங்கன் சேவையைத் தவிர வேறொன்றும் அறியாப் பெண்கள் எதிரிப்படைகளால் பிடித்துச் செல்லப்பட்டதாகவும், அரங்கனுக்குத் தவிர மற்றவருக்கு ஆடியோ, பாடியோ காட்டாத பெண்களைத் துன்புறுத்தி தங்களுக்காக ஆடும்படியும், பாடும்படியும் செய்வதையும் கூறிவிட்டு, அழுது கொண்டே தாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் கூறி வருந்தினார்கள். 


அவர்களில் சொந்த சொத்துக்கள் பறிபோனதால் கவலைப்படுவதாக நினைத்த மற்றவர்கள் அவர்களைச் சமாதானம் செய்ய அவர்களோ, அரங்கமே எரிந்து போனதை நினைத்துத் தாங்கள் வருந்துவதாய்க் கூறிவிட்டு, பேரழகு வாய்ந்த திருவரங்க நகரம் இன்று விதவைக் கோலம் பூண்டு கழுகுகளும், ஓநாய்களும் திரிந்து கொண்டிருக்கக் காணப்படுவதாய்க் கூறினார்கள்.  இவற்றைக் கேட்ட பிரம்மதந்திர ஜீயர் தம் ஆசானுக்கு என்ன நேர்ந்ததோ என்ற கவலையில் திருவரங்கத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்.  இங்கே இருந்தவர்களுக்கு அவரைத் திரும்ப அழைத்து வருவது பெரும் பிரம்மப் பிரயத்தனமாகி விட்டது. ஆனாலும் அதையும் மீறிக்கொண்டு ஓட ஆரம்பித்த அவர் கண்களில் இருந்து தாரையாய்க் கண்ணீர் மழை பொழிந்தது.  இதைக் கண்ட பிள்ளை உலகாசிரியர், திகைத்துப் போய் அரங்கா, இதுவும் உன் சோதனையோ எனக் கலங்கி நின்றுவிட்டார்.


மனம் தளர்ந்த உலகாசிரியரைத் தேற்றிய கூரகுலோத்தமதாச நாயனார் என்பவர் அவர் நம்பிக்கையும், தைரியமும் கொண்டு விளங்கினாலேயே மற்றவர்களும் அந்த நம்பிக்கையும் தைரியமும் இழக்காமல் இருப்பார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அவரை மேற்கொண்ட பயணத்துக்குத் தயாராக்கினார்.  தில்லிப் படைகள் காட்டுக்குள்ளேயும் அரங்கனைத் தேடி வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் மேலோங்க அந்த ஊர்வலம் அந்த இடத்தை விட்டு அகன்றது.  மாலை மயங்கும் நேரம்.  காட்டினிலே தங்குமிடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள் அரங்கனோடு பயணித்தவர்கள்.  பிள்ளை உலகாசிரியர் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரெனக் காட்டிலிருந்து திடு திடு வென சப்தங்கள்.  சுற்றிலும் சூழ்ந்திருந்த காட்டுச் செடிகளும், மரங்களும் அசைந்தன.  மனிதர்கள் காலடி சப்தங்கள்.  தங்களுடன் வந்தவரல்லாது வேறு யார் இங்கே வந்திருப்பார்கள்?  திகைத்த கூட்டம் சுற்றிச் சுற்றிப் பார்க்கக் கைகளில் தூக்கிப் பிடித்த ஈட்டிகளோடும், வாள்களோடும் ஒரு சிறு கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.  நீண்ட கொடிய மீசைகளோடும், ஆஜாநுபாகுவாகவும், திரண்ட புஜங்களோடும் காணப்பட்ட  அவர்கள் கள்ளக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.  சில கணங்களிலேயே அனைவருக்கும் புரிந்து விட்டது.  அந்த நாட்களில் தொண்டைமான் காடும், அதன் சுற்றுப்புறங்களும் கள்ளர் கூட்டங்களுக்குப்பெயர் பெற்றிருந்தது.  அத்தகையதொரு கூட்டத்திலேயே அவர்கள் மாட்டிக் கொண்டார்கள். 

என்ன செய்யப் போகிறார்கள்?


படங்களுக்கு நன்றி: கூகிளாண்டவர்.  தகவல் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம் வலைத்தளை, ஶ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா முதல் பாகம், மற்றும் திருவரங்கம் குறித்த சரித்திரத் தகவல்கள் கொண்ட புத்தகங்களில் வெளி வந்த தகவல்கள் கூகிளில் தேடப்பட்டுத் தகவல்கள் எடுக்கப் பட்டன. 




Geetha Sambasivam

unread,
Dec 13, 2012, 4:55:48 AM12/13/12
to மின்தமிழ்

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் 15

ஶ்ரீரங்கம், ரங்கநாதர் கோயிலின் விமானம் இருட்டில் காட்சி அளிக்கும் கோலம் இது. தீபாவளிக்குப் போனப்போ பெரிய பெருமாளைப் பார்க்க முடியலை.  அதனாலும் இங்கே இப்போது வைகுண்ட ஏகாதசிக்காக விழாக் கோலம் பூண்டிருப்பதாலும், அப்புறமாப் பெரிய பெருமாளைப் பார்ப்பதே ரொம்பக் கஷ்டம்னு எல்லாரும் சொன்னதாலும் நேத்திக்கு மத்தியானம் ஒன்றரை மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம்.  ஶ்ரீரங்கம் கோயில் சேவை நேரங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை.  அது குறித்துத் தனியாக அட்டவணை தருகிறேன். புதுசா வரவங்களுக்குப் பயன்படும்.  ஆனால் மத்தியானம் ஒன்றரை மணியில் இருந்து மாலை ஆறு வரை பெரிய பெருமாள் சேவை சாதிக்கிறார்.  வெயில், கூட்டமும் உள்ளே போனது அங்கேயே காத்திருக்கும்.  ஆகவே கூட்டமும் இருக்கும் தான்.  ஆனால் இந்தச் சமயம் போனாலேயே எல்லா சந்நிதியும் பார்க்க முடியும் என்பதோடு தாயாரையும் சேர்த்துத் தரிசிக்கலாம்.  தாயார் சந்நிதி மூன்று மணிக்குத் தான் திறக்கிறார்கள்.  ஆனாலும் பெரிய பெருமாளைப் பார்த்துக் கொண்டு, சக்கரத்தாழ்வார், மேலப் பட்டாபிராமர்,  போன்றோரையும் தரிசித்துக் கொண்டு போனோமானால் மூன்று மணி ஆகித் தாயார் சந்நிதி திறந்து தாயார் இலவச சேவையே தருவாள்.

நேத்திக்கு நாங்க பெரிய பெருமாளைப் பார்க்கப்போனப்போ ஐம்பது ரூபாய்ச் சீட்டு எடுத்துத் தான் போனோம்.  சுமார் நூறு, நூற்றைம்பது பேர் இருந்தனர்.  ஆனால்  இலவச சேவைக்குக் கூட்டம் நெரிசல் தாங்கலை.  அதிலே ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகம்.  உள்ளே  சந்தனு மண்டபம் தாண்டி குலசேகரன் படி அருகே எல்லாரும் ஒன்றாகவே உள்ளே செல்ல வேண்டி இருப்பதால் அவங்க முண்டி அடித்துக் கொண்டு போயிடறாங்க.  இருந்தாலும் சுமார் முப்பது முதல் நாற்பது நிமிஷம் காத்திருந்திருப்போம்.  நேற்றுப் பெருமாளின் அடியிலிருந்து முடி வரை நல்ல தரிசனம் என்றாலும் திருப்பதியிலே ஜரகண்டி என்பது போல் இங்கே சொல்லாமல் பிடித்துத் தள்ளவென்றே ஒரு பட்டரை நிறுத்தி இருக்காங்க.  எல்லாரையும் பிடிச்சுத் தள்ளிட்டு இருக்கார். :(  இதுவே கேரளா என்றாலோ, கர்நாடகா என்றாலோ மக்கள் இப்படிக் கஷ்டப் பட வேண்டாம் என்பதும் மனதில் உறைத்தது.  என்ன செய்ய!  செந்தமிழ் நாட்டில் பிறந்துட்டு இதுக்கெல்லாம் ஆசைப் படலாமா?  சரி, சரி வைகுண்ட ஏகாதசி பத்திச் சொல்ல வந்துட்டு, என் சொந்த, சோகக் கதையைச் சொல்றேனே!

சுமார் 21 நாட்கள், நடைபெறும் இந்த விழா பகல் பத்து, இராப்பத்து என இரு பிரிவாக நடைபெறும்.  டிசம்பர்-ஜனவரி மாதங்களுக்கு இடையில் அதாவது மார்கழி-தை மாதங்களுக்கு இடையில் நடைபெறும்.  தீபாவளி கழித்து ஒரு நல்ல நாளில் தென்னை மரத்தின் அடித்தண்டினை இந்த விழாவிற்கான முதற்கம்பமாக நடுவார்கள்.  இந்தப் பந்தல் முழுதும் அமைத்து முடியும் போது 47 கம்பங்கள் இருக்கும்.  மூன்றாம் பிராகாரத்தின் வடகிழக்கு வாசலில், ஆயிரக்கால் மண்டபத்தின் முன்னே அமைக்கப்படும்.  இவற்றோடு சேர்த்தே ஆயிரக்கால் மண்டபத்திற்கு ஆயிரம் கால்கள் என்கிறார்கள்.  இது குறித்து தகவல் விசாரித்துச் சொல்கிறேன்.  அம்மன் சந்நிதிக்கு அருகே இருக்கும் இரண்டாம் பிராகாரத்தின் வடக்கு வாயில் தான் பரமபத வாசல் என அழைக்கப் படுகிறது.  ஆண்டு முழுதும் மூடி இருக்கும் இது வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே திறக்கப் படும். இந்த வடக்கு வாயில் வழியாகவே நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்படுகிறார்.

தொடர்ந்து அதிகாலை நாலே முக்கால் மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டு நம்பெருமாள் ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ளிருக்கும் திருமாமணி மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.  அதற்கு முன்னோடியாக பகல் பத்துத் திருநாள் நாளை டிசம்பர் பதினான்காம் தேதி இந்த வருடம் துவங்குகிறது.  இன்றிரவு பூர்வாங்கமாக ஸ்ரீரங்கநாதரின் மூலஸ்தானத்தில் திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் பாடப்படும்.  பின்னர் பகல்பத்து உற்சவம் ஆரம்பிக்கும்.  14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடக்கும் பகல் பத்து உற்சவங்களில் தினமும் நம்பெருமாள் அதிகாலை மூலஸ்தானத்தை விட்டுக் கிளம்பிக் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் சர்வாலங்கார பூஷிதராக சிறப்பு அலங்காரத்தில் அமர்ந்து சேவை சாதிப்பார்.

அரையர்கள் நம்பெருமாள் முன்னிலையில் திருமொழிப் பாசுரங்களைப் பாடி, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள். 


தொடரும்.


படங்களுக்கு நன்றி: கூகிளாண்டவர்.  தகவல் உதவி:  அறநிலையத்துறை வெளியீடு புத்தகம். தினமலர் தினசரி.




Geetha Sambasivam

unread,
Dec 18, 2012, 6:59:22 AM12/18/12
to மின்தமிழ்

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வைகுண்ட ஏகாதசியும், அரையர் சேவையும்!


ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித்திருவிழா மிகவும் பிரபலம் ஆனதாகும்.   சிதம்பரத்தில் இதே மார்கழியில் எப்படி திருவாதிரைத் திருவிழா பிரபலமோ அதே போல் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா.  மார்கழி மாதத்தில் அமாவாசை கழிந்து வரும் சுக்லபக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி ஆகும்.  இவ்வருடம் கார்த்திகை மாதக் கடைசியில் அமாவாசை வந்ததால், மார்கழி மாதம் ஒன்பதாம் தேதியே வைகுண்ட ஏகாதசித் திருநாள் வருகிறது.  ஆகவே கார்த்திகை 28-ஆம் தேதியன்று இரவில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னோட்டமாக கர்பகிரஹத்தில் திருநெடுந்தாண்டகம் ஆரம்பித்து நடைபெறும்.  பின்னர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சந்தனு மண்டபத்துக்கு எழுந்தருளுவார்.  அங்கேயும் திருநெடுந்தாண்டகம் அபிநயமும் வியாக்யானமும் நடைபெறும்.  இதை அரையர் சேவை என்பார்கள். 


இரு பகுதிகளாக நடைபெறும் திருநாளில் முதல் பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து என்றும் அழைக்கப்படும்.  முதல் திருநாளன்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் கிளம்பி அர்ச்சுன மண்டபம் வந்தடைவார்.  இந்த மண்டபம் கிளி மண்டபத்தை ஒட்டி மேலே ஏறிச் சென்றால் வந்தடையும்.  துலுக்க நாச்சியார் சந்நிதி இங்கே தான் இருக்கிறது.  இங்கே நம்பெருமாள் சர்வாபரண பூஷிதராகக்  காட்சி கொடுப்பார்.  இவருக்கு முன்னே அரையர்கள் முதலில் நம்பெருமாளைப் பிரதக்ஷிணம் வந்து வணங்கி உத்தரவு பெற்றுக் கொண்டு பின்னர் அவர் எதிரே நின்று கொண்டு பாசுரங்கள் பாடி வியாக்யானமும் செய்வார்கள்.  முதலாயிரத்தில் பல்லாண்டு முதல் இரு பாசுரங்களும், அதற்கேற்ற அபிநயமும், வியாக்யானமும், பெரியாழ்வார் திருமொழியின் 212 பாசுரங்களும் பாடப்படும்.

இதைத் தவிரவும் மூலஸ்தானத்தில் மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து பெரிய பெருமாள் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கநாதர் முன்னிலையில் அரையர் சேவை திருப்பள்ளி எழுச்சியும், திருப்பாவைப் பாசுரங்கள்  பாடுதலும் நடைபெறும்.  மூலஸ்தானத்தில்  பெரிய பெருமாளுக்கு முத்தங்கி அணிவித்து சேவை நடைபெறும்.  கூட்டம் இப்போவே தாங்கலை. L இன்னிக்கு அரையர் சேவை பார்க்கலாம்னு கிளம்பிப் போனோம்.  உள்ளே நுழையவே பெரிய வரிசையாக மக்கள் கூட்டம்.  அப்புறமா அங்கிருந்த காவல்துறைப் பெண்மணியிடம் வரிசையில் நிற்க முடியாது எனக் கேட்டு வேண்டிக் கொண்டு ஒரு சிலரைத் தனியாக விட்டுக் கொண்டிருந்த வாயில் வழியே உள்ளே சென்றோம்.  மூலஸ்தானத்தில் பெரிய பெருமாளைச் சேவிக்க ஐம்பது ரூபாய்க் கட்டணத்திலேயே ஐநூறு பேருக்கும் மேல் நின்றிருந்தனர்.  ஆகவே பெரிய பெருமாளுக்கு இங்கிருந்தே வணக்கம் சொல்லிட்டு நேரேக் கிளி மண்டபம் நோக்கி நடையைக் கட்டினோம்.  அங்கிருந்து விமான தரிசனம் செய்யும் அர்ஜுன மண்டபத்துக்கு ஏறினோம்.  சிறிது தூரத்தில் நம்பெருமாள் சாய்ந்த கொண்டையோடு அழகாய் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்.  அரையர்கள் அப்போது தான் நம்பெருமாளைப் பிரதக்ஷிணமாக வந்து உத்தரவு வாங்கிக் கொண்டு சேவையை ஆரம்பித்துக் கொண்டிருந்தார்கள்.  படம் எடுக்கலாமா எனத் தெரியவில்லை.  அங்கிருந்த கோயில் பணியாளரைக் கேட்டதுக்குச் சில பத்திரிகைக் காரர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றார்.  செல்லில் எடுக்கலாமா என யோசித்தேன்.  அங்கிருந்து காவல் துறைப் பணியாளர் வேண்டாம்னு எச்சரித்தார்.  செல்லைப் பிடுங்கிடுவாங்கனு சொன்னார்.  ஆகவே அந்த யோசனையைக் கைவிட்டோம். L

ஆனால் சுற்றிச் சுற்றி வந்து நம்பெருமாளை நன்கு சேவித்துக் கொண்டோம்.  பின்னர் சிறிது நேரம் அரையர் சேவையைப் பார்த்துவிட்டுப் பின்னர் வீடு வந்தோம்.  பலத்த போலீஸ் பாதுகாப்பு, சோதனைகள், கெடுபிடி,  ஆங்காங்கே போக்குவரத்து மாற்றம்னு ஊரே விழாக்கோலத்தில் இருக்கிறது.  சிதம்பரத்திலும் ஆருத்ரா தரிசனம் சமயத்தில் கூட்டம் வெள்ளமாக இருந்தாலும் அங்கே தரிசனம் செய்ய ஏற்பாடுகள் நன்றாக இருந்தன.  மேலும் நடராஜர் வெளியே வரும் பாதையில் எல்லாம் மக்கள் ஒதுங்கி நின்று எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தரிசனம் செய்யும் வண்ணம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  இங்கே கோயிலுக்குள்ளேயே நடப்பதால் கூட்டம் தாங்கவில்லை.   ஆனாலும் சமாளிக்கின்றனர்.   கோபுர வாசலைக் கடந்து உள்ளே நுழையும் வழி சிறிதாக இருப்பதால் அங்கே எப்போதும் நெரிசலாகவே இருக்கிறது.  

ஆழ்வார்கள் அனைவரும் பெருமாளுக்கு எதிரே பெருமாளை தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.  “கண்ணிநுண் சிறுத்தாம்பு” பாசுரத்திற்கான வியாக்யானம் அரையர் சேவையுடன் நாளை  பாடப் படும் எனத் தெரிகிறது.

Geetha Sambasivam

unread,
Dec 24, 2012, 9:22:40 AM12/24/12
to மின்தமிழ்

ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி!


வைகுண்ட ஏகாதசி குறித்து அனைவரும் அறிவோம்என்றாலும் தெரியாதவர்களுக்காக ஒரு சின்னக் குறிப்புநமக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும்அந்த நாளின் துவக்கம் தான் மார்கழி மாதம்அந்த மாதம் தேவர்களின் பிரம்ம முஹூர்த்த நேரம் ஆகும்ஆகவே மார்கழி மாதம் அதிகாலையில் நாம் இறைவனைத் துதிக்கிறோம்அது போலவே தென்பாகத்திலுள்ள பாற்கடலில் யோக நித்திரையில் இருக்கும் மஹாவிஷ்ணுவைத் தேவர்களும் துதிக்கின்றனர்அவர்கள் துதித்த நாளே வைகுண்ட ஏகாதசி நாள் எனச் சொல்லப் படுகிறதுஅவர்களின் துதியால் மகிழ்ந்த மஹாவிஷ்ணு தம் யோக நித்திரையிலிருந்து எழுந்து வந்து அவர்களுக்குத் தரிசனம் கொடுத்தாராம்அந்த வாசல் வடக்கே அமைந்திருக்கும்அதுவே வைகுண்ட வாசல் திறந்து மஹாவிஷ்ணு வெளிவந்ததைக் குறிப்பிடும் வண்ணமே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் அன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்கிறது.இந்த ஏகாதசி வந்த விதத்தை அறிவோமா?

முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கு மிகவும் தொந்திரவு கொடுக்க யோக நித்திரையில் இருந்த மஹாவிஷ்ணுவின் மஹாசக்தியான ஏகாதசி என்பாள் வெளிவந்து அந்த முரனைக் கொன்றாள்கண் விழித்துப் பார்த்து அதிசயித்த மஹாவிஷ்ணுதன் சக்தியான ஏகாதசியைக் கெளரவிக்கும் விதத்தில் இந்நாளில் விரதம் இருந்து ஏகாதசியைப் போற்றுவோருக்குச் சகல நன்மைகளும் கிடைக்கும் என வரமளித்தார்சக்தி விழிப்புடன் இருந்து சரியான நேரத்தில் செயலாற்றியதால் நாமும் நம் சக்தியைப் பயன்படுத்தி விழிப்புடன் (உடல் மட்டுமில்லாமல் ஆன்மிக விழிப்புடனும்இருந்து விரதம் மேற்கொள்ள வேண்டும்இந்த ஏகாதசிகள் ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும் வரும்தேய்பிறையிலும் வரும்.வளர்பிறை ஏகாதசி 12, தேய்பிறை ஏகாதசி 12 மொத்தம் 24 என்றாலும் நாழிகைக்கணக்குகளினால் கூடுதலாக ஒரு ஏகாதசி நாள் வரும்ஆக வருஷத்துக்கு25 ஏகாதசிகள்.

எட்டு வயதில் இருந்து எண்பது வயது வரஇ கடைப்பிடிக்கலாம் எனச்ச் சொல்லப் படும் இந்த ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்றே ஒரே வேளை உணவு உட்கொண்டு,அன்றிரவு பால்பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும்நாம் இருக்கும் விரதம் வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படும் மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசி எனில் அன்று காலை சீக்கிரம் எழுந்து குளித்துக் கோயிலுக்குச் சென்று சொர்க்கவாசல் திறப்பையும்மஹாவிஷ்ணு சொர்க்க வாசல் வழியாக வெளிவருவதையும் பார்த்து வரலாம்அன்று முழுதும் பழங்கள்இளநீர் என்றே சாப்பிட வேண்டும்அரிசிகோதுமை போன்றவற்றினால் ஆன உணவுகளை உட்கொள்ளக் கூடாதுஇரவு முழுதும் கண் விழித்து ஹரி நாமம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்மறுநாள் துவாதசி அன்று காலை சீக்கிரமாய் எழுந்து குளித்துஹரி நாமத்தைச் சொல்லிக் கொண்டேசுண்டைக்காய்நெல்லிக்காய் ஆகியவற்றைப் பல்லில் படாமல் உட்கொண்டு பாரணை பண்ணி விரதத்தை முடிக்க வேண்டும்துவாதசி அன்று சீக்கிரம் உணவு உட்கொள்ள வேண்டும்இந்த உணவில் சுண்டைக்காய்அகத்திக்கீரைநெல்லிக்காய் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்விரதம் இருந்ததால் சூடான வயிறும் உடலும் குளுமை பெறுவதற்கும் ஜீரண சக்தியைச் சரியாக்குவதற்கும் இவை உதவும்.

மதுகைடபர்களை அழிக்கப் போரிட்ட விஷ்ணுவிடம் அவர்கள் பணிந்து வணங்கித் தங்களை வைகுண்டத்திலேயே இருக்கும் பாக்கியத்தைக் கேட்டதாகவும்,அவ்வண்ணமே அவர்களுக்கு விஷ்ணு அருள் செய்ததாகவும்அப்போது அவர்கள் தங்களுக்குக் கிடைத்த இம்மாதிரியான கருணையை பூலோக வாசிகளுக்கும் காட்டுமாறும்வைகுண்டத்தில் எப்படி வடக்கு வாசல் வழியாக விஷ்ணு வெளி வந்து தேவர்களுக்குக் காட்சி கொடுத்தாரோஅவ்வண்ணம் பூலோகத்தின் பெருமாள் கோயில்களில் அர்ச்சாவதாரமாக விஷ்ணு வெளி வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தர வேண்டும் என்றும்அவரை வடக்கு வாசல் வழியே வெளி வருகையில் தரிசிக்கும் பக்தர்களுக்கும்அவரோடு தொடர்ந்து வரும் பக்தர்களுக்கும்தெரிந்தோ,தெரியாமலோ செய்த பாவங்களை நீக்கி அவர்களுக்கு முக்தியை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகவும் பூலோகத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்புக்கான காரணத்தைத் தெரிந்து கொள்கிறோம்.  இனி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி குறித்துப் பார்ப்போம். 

Geetha Sambasivam

unread,
Jan 1, 2013, 4:36:28 AM1/1/13
to மின்தமிழ்

TUESDAY, JANUARY 01, 2013

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி!


கிட்டத்தட்ட மற்ற ஊர்களின் பிரம்மோற்சவம் போல ஸ்ரீரங்கத்தின் வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆகும்.  இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிக்கிறார்.  இப்போதைய காலகட்டத்தில் தான் இது வைகுண்ட ஏகாதசி உற்சவம் என அழைக்கப் படுகிறது.  ஆனால் இதன் பெயர் உண்மையில் திரு அத்யயன உற்சவம் என்றே அழைத்து வந்தனர்.  விஷ்ணு ஆலயங்களின் ஆகம முறைகளை முறையே பாஞ்சாராத்ரம், வைகானஸம் என இரண்டாகப் பிரித்துள்ளனர்.  அவற்றில் பாஞ்சராத்ர ஆகமத்தில், ப்ரசின ஸம்ஹிதையில் மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை தொடங்கி இருபது நாட்கள் ஸ்ரீமஹா விஷ்ணுவான பெரிய பெருமாளுக்கு உற்சவம் செய்ய வேண்டும் எனச் சொல்லப் பட்டிருப்பதாக அறிகிறோம்.  அதன் படி மார்கழி மாத சுக்லபக்ஷத்தின் பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக அமைந்துள்ளது.  இதன் முதல் பத்து நாட்கள் பகல் பத்து எனவும், அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் அழைக்கப் படுகிறது.

பகல் பத்து என்ற முதல் பத்து நாட்கள் நடைபெறுவதே திரு அத்யயன உற்சவம் ஆகும்.  இந்தப் பத்து நாட்களிலும் பெருமாளின் முன்பு பன்னிரு ஆழ்வார்களும் பாடிய நாலாயிர திவ்ய ப்ரபந்தம் முழுதுமாகப் பாடப்பட்டு, அரையர்களால் அபிநயமும் பிடித்துக் காட்டப்படும்.  இந்தப் பகல் பத்து உற்சவம் தொடங்குவதற்கு முன்னர் முதன் முதல் திருமங்கை ஆழ்வார் பாடியருளிய திருநெடுந்தாண்டகம் பாடப்படும்.  இதுவே வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் ஆரம்பக் கொடியேற்றம் எனலாம்.  இதைத் தொடர்ந்து நடப்பதுதான் புகழ் பெற்ற அரையர் சேவை.  அரையர்கள் என்றால் அரசர்கள் என்னும் சொல்லின் திரிபு எனச் சொல்கின்றனர்.  இவர்களும் அரசர்கள் மகுடம் சூட்டிக் கொள்வதைப் போல் தலையில் பட்டுக்குல்லாய் அணியும் உரிமை பெற்றிருக்கின்றனர்.  அந்தக் குல்லாய்களை அணிந்து கொண்டே அபிநயம் பிடிப்பார்கள்.  அதோடு மட்டுமா?  இந்தப் பட்டுக்குல்லாய், நாம் குலசேகரன் படியில் நுழையும் இடத்தில் உள்ள ஜய, விஜயர்கள் தலையிலும் காணலாம்.  பெருமாளுக்கும் பட்டுக்குல்லாய் அணிவிக்கப்படுவது உண்டு.  கம்பளி போர்த்துவார்கள்.  மழை பெயதால் பெருமாள் நனையாமல் இருக்கத் துணிக்கூடாரம் குடை போல் விரிந்து அவரை மழையிலிருந்து பாதுகாக்கும்.  பெரிய பெருமாளுக்கும் குல்லாய் உண்டு. தாயாருக்கும் குளிரிலிருந்து பாதுகாப்புக் கொடுக்கின்றனர்.

அரையர் சேவையின் அரையர்கள் தங்கள் கைகளில் தாளங்களை ஏந்திக் கொண்டு பாசுரத்தின் பொருள் விளங்குமாறு அபிநயம் செய்தபடியே பாடுவார்கள்.  நடிப்பு, முத்திரைகள், இசை என நுணுக்கமான இந்தக் காட்சியானது பாசுரத்தின் பொருளை அப்படியே மனக்கண்ணில் தோன்றும்படிச் செய்துவிடும்.  பார்ப்பவர்கள் மெய்ம்மறந்து பார்க்கின்றனர்.  பகல் பத்து உற்சவத்தின் பெரும் சிறப்பு இந்த அரையர் சேவை. பத்து நாட்களிலும் தினம் இருமுறை நடைபெறும்  ஒவ்வொரு முறையும் குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெறும்.  அர்ச்சுன மண்டபத்தில் பெருமாள் ஆஸ்தானம் இருந்து அரையர் சேவையைக் கண்டு களித்துக் கொண்டே பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.  பாசுரங்கள் புரியாதவர்கள் கூட மனம் ஒன்றிப் போய் ஆழ்வார்களின் உள்ளம் பெருமாளின் கருணையில் தோய்ந்திருந்ததை நன்கு உணரும்படிச் செய்வதே அரையர் சேவையின் மகத்துவம்.

அடுத்தது நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து அர்ச்சுன மண்டபத்துக்குப் புறப்பாடு காணுதல்.  சாதாரணமாக எல்லாம் கிளம்பமாட்டார் நம்பெருமாள்.  நல்ல லக்னமாக நிர்ணயிக்கப் பட்ட வ்ருச்சிக லக்னத்தில் தங்கக்குடை பிடித்து முன்னே தீப்பந்தம் ஒளி வீசிச் செல்ல, வாத்தியங்கள் முழங்க ஆண்டாளம்மாள் ரங்கா, ரங்கா என அழைக்க சிம்ம கதியில் செல்வார் பெருமாள்.  பெருமாளைத் தோளுக்கு இனியானில் காண இயலாது.  இதற்கெனத் தனிப் பல்லக்கு உண்டு.  அந்தப் பல்லக்கில் பெருமாளைத் தோளில் தாங்கி வருபவர்களை "ஸ்ரீபாதம் தாங்குவார்" என அழைக்கின்றனர்.  இன்றைய நாட்களில் இது மருவி சீபாதந்தாங்கி என்றாகிவிட்டது.  நம்பெருமாளுக்குத் திரையிட்டு அலங்காரங்கள் செய்து முடித்தவுடன், "அருளப்பாடு ஸ்ரீபாதம் தாங்குவார்" எனக் குரல் கொடுத்து அழைப்பார்கள். ஸ்ரீபாதம் தாங்கிகள் உள்ளே செல்லக் கதவுகள் மூடப்பட்டுப் பின்னர் திறக்கையில் பேரொளிப் பிழம்பாய், அழகான அலங்காரங்களுடன், முகத்தில் குறுநகை விளங்க, கைகள் அபயம் காட்ட வெளிப்படுவார் நம்பெருமாள்.  பார்ப்பவரைப் பித்துப் பிடிக்கச் செய்யும் அலங்காரம்.  மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் அர்ச்சுன மண்டபம் நோக்கிச் செல்வார்.

Geetha Sambasivam

unread,
Jan 3, 2013, 5:16:53 AM1/3/13
to மின்தமிழ்

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வைகுண்ட ஏகாதசிச் சிறப்பு!





அர்ச்சுன மண்டபத்தில் அன்று முழுதும் ஆஸ்தானம் இருக்கும் நம்பெருமாளுக்கு அரையர்கள் இரு முறை தங்கள் சேவையைக் காணிக்கையாக்குவார்கள்.  இந்த அரையர் சேவை இன்றும், இந்த வருடமும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வரும் ஒன்று.  இதைப் புகைப்படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. :(    அனுமதி கொடுப்பதில்லை.  அரங்கனுக்கு மட்டுமே உரித்தானது என்று சொல்கின்றனர்.  ஒரு நாளைக்குக் குறைந்தது 212 பாசுரங்கள் வீதம் பகல் பத்து பத்து நாட்களிலும் இராப்பத்தில் கடைசிநாளான நம்மாழ்வார் மோக்ஷ தினத்துக்கு முதல்நாள் நடைபெறும் தீர்த்தவாரி வரை தினமும் பாசுரங்கள் பாடி அரையர்களால் அபிநயம் பிடித்துக் காட்டப் படுகிறது. கொடியேற்றத்தன்று திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தோடு ஆரம்பிக்கும் இந்தத் திருவிழாவின் பகல் பத்து முதல் நாளன்று பெரியாழ்வாரின் திருமொழி வியாக்யானம், அபிநயத்தோடு ஆரம்பித்து நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் கண்டருளும் நம்பெருமாள் பகல்பத்தின் கடைசி நாள் அன்று அதாவது வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாளன்று மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். இந்த மோகினி அலங்காரம் அன்று நடைபெறுவதற்கான காரணம் பின் வருமாறு:

ஏற்கெனவே சென்ற இடமெல்லாம் பக்தர்களைப் பைத்தியமாய் அடித்துத் தன் பக்கம் இழுத்த அழகிய மணவாளன் ஆன நம்பெருமாளுக்குத் தனியாக மோகினி அலங்காரம் என்று வேண்டுமா?  இல்லை; இல்லை.  அதனால் எல்லாம் இவன் அனைவரையும் கவர்ந்தான் எனச் சொல்வதற்கு இல்லை. ஆனால் தில்லையம்பலத்து ஆனந்த நடராஜரை எவ்வாறு ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசிப்பது ஆனந்தம் அளிக்கிறதோ அவ்வாறே நம்பெருமாளையும் மோகினி அலங்காரத்தில் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். உண்மையில் மக்களுக்குப் பித்தே ஏற்பட்டு விடும். அப்படியொரு பிரகாசமான பேரழகு. காணக் கண் கோடி வேண்டும்.  இதன் தாத்பர்யம் என்னவெனில் மார்கழிமாதம் தசமியன்று தான் திருப்பாற்கடல் கடையப் பட்டு அமிர்தம் வந்ததாகச் சொல்வார்கள்.  துர்வாசரின் சாபத்தினால் தேவலோகத்தை இழந்த இந்திரன், தன் சக்தியையும் இழக்கவே திருமாலின் ஆலோசனைப் படி அசுரர்களின் உதவியோடு, தேவர்களும் கூடிப்  பாற்கடலைக் கடைந்தனர்.

மத்தாக இருந்த மந்த்ர மலை சாய்ந்துவிழுந்துவிடும் நிலையில் கூர்மமாக மாறி அந்த மலையைத் தன் மேல் தாங்கினார் திருமால்.  வாசுகியான பாம்பரசனைக் கயிறாகக் கொண்டு கடைந்ததால் அதன் வாய் வழி வந்த விஷமும், பாற்கடலின் மேலே இருந்த ஆலகால விஷமும் ஒன்று சேர்ந்து வெளிவரவே அதைத் திரட்டி ஒரு உருண்டையாக்கி உட்கொண்டு ஈசன் திருநீலகண்டராக ஆக, பின்னர் ஒவ்வொன்றாக வெளிவந்து கடைசியில் தங்கக் கலசத்தில் அமுதமும் வெளிவந்தது.  அசுரர்கள் அதைப் பறித்துக்கொள்ள எப்போதும் போல் ஏமாந்த தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர்.  திருமாலும் ஒரு அழகிய பெண்ணாக மாறி தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அமுதம் கொடுப்பதற்கு முன் வந்து அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு அமுதம் கிட்டச் செய்தார்.  இந்த சுக்லபக்ஷ தசமியின் மறுநாளே தேவர்கள் வைகுண்ட வாசியான மஹாவிஷ்ணுவான திருமாலைப் போற்றி வணங்கித் தங்களுக்குத் தரிசனம் கொடுத்தருள வேண்ட மஹாவிஷ்ணுவும், வைகுண்ட வாசலான பரமபத வாசலைத் திறந்து வெளி வந்து பரமபதத்தில் ஆஸ்தானமாக வீற்றிருந்து தேவாதி தேவர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.  இதுவே வைகுண்ட ஏகாதசித் திருநாளின் முதல்நாளன்று மோகினி அலங்காரத்திற்கான காரணமும், மறுநாள் நம்பெருமாள் பரமபத வாசல் வழி வெளி வந்து (அன்றொரு நாள் விரஜா நதிக்கரையில் உள்ள பரமபதத்தில்  காட்சி அளித்தவாறு) ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானம் இருந்து காட்சி அளிக்கிறார்.

அரங்கன் ஆஸ்தானமிருந்து கட்டளையிடும் அழகைப்  பார்க்கும் முன்னர் அரங்கனின் திவ்ய அலங்காரம் குறித்த ஒரு வர்ணனை.  தோளில் கிளி மாலையுடனும், தலையில் பாண்டியன் கொண்டையுடனும் காட்சி அளிக்கும் நம்பெருமாளுக்கு ரத்தின அங்கியால் அலங்கரிக்கின்றனர்.  வைகுண்ட ஏகாதசி அன்று நம்பெருமாள் முழுதும் ரத்தினங்களால் ஆன அங்கி அணிந்திருப்பார்.  இந்த ரத்தின அங்கியை சூரியனின் கதிர் வீச்சுக்குச் சமமாகச் சொல்கின்றனர்.  இந்தக் கதிர்வீச்சு மருத்துவ மற்றும் தெய்வீக குணம் உள்ளது. என்றாலும் இதுவும் ஒரு அளவுக்கு மேல் போனால் ஆகாது என்பதால் அந்த ரத்தின அங்கியில் அவரைப் பாதி வரை தான் பார்க்க இயலும். இடுப்புக்குக் கீழே சல்லாத்துணியால் மறைத்திருப்பார்கள்.  இவ்வாறு ஒளி மிகுந்த ரத்தினங்களின் கிரணங்கள் சூரிய கிரணங்கள் போல் பக்தர்கள் மேல் படுவதால் அதன் பாதிப்பைக் குறைக்கவே பெரிய பெருமாளை முத்தங்கியால் அலங்கரிக்கின்றனர்.  வைகுண்ட ஏகாதசி அன்று நம்பெருமாள் பரமபத வாசல் காணுவதே முக்கியம் என்பதால் அதை முதலில் கண்ட பக்தர்கள் பின்னர் மூலவரான பெரிய பெருமாளைக் காண வரும்போது சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் போன்ற சந்திரனின் கதிர்வீச்சின் குணம் கொண்ட முத்துக்களால் ஆன அங்கி அணிவிக்கப் படுகிறது.  சூரிய கிரணங்களின் வீரியத்தை ஈடு செய்யும் வகையிலேயே இந்த அங்கி பெரிய பெருமாளுக்கு அணிவிக்கப் படுகிறது.


இந்த மோகினி அல்ங்காரத்துடன் பராங்குசநாயகியான நம்மாழ்வாரைப் பார்த்து, நம்பெருமாள் கேட்டாராம்: "என்ன எப்படி என் அலங்காரம்?  அதோ அங்கே பார், ஶ்ரீயை விட என் அலங்காரம் பிரமாதமில்லை?  அவளை விட நான் அழகு இல்லை?  என்னைப் பார் என் அலங்காரத்தைப் பார்!"

நம்மாழ்வார்: தேவரீர் அடியேனை க்ஷமிக்க வேண்டும்.  ஒரே ஒரு குறை உள்ளது!

நம்பெருமாள்:  குறையைச் சொல்லும் சடகோபரே, நிவர்த்திக்கிறேன்.

நம்மாழ்வார்: தேவரீரால் இயலுமா?

நம்பெருமாள்: அதென்ன அப்படிக் கேட்டுவிட்டாய்?

நம்மாழ்வார்: தேவரீருக்கு எல்லா அலங்காரமும் பொருந்தியே வருகிறது.  அதே போல் இந்த மோகினி அலங்காரத்திலும் ஜொலிக்கிறீர் தான்!

நம்பெருமாள்:  அப்புறமென்ன?

நம்மாழ்வார்:  ஆனால் ஸ்ரீஎனப்படும் மஹாலக்ஷ்மித் தாயாரின் கடைக்கண்களில் இருந்து கிளம்பும் கருணை ஒளியான ஜோதியை இங்கே காண முடியவில்லையே ஸ்வாமி!

நம்பெருமாளின் முகத்தில் குறுநகை.  படிதாண்டாப் பத்தினியான ரங்கநாயகியைப் பார்த்து, இப்போது சந்தோஷமா என்னும் பாவனையில் பார்க்கிறார்.

Geetha Sambasivam

unread,
Jan 16, 2013, 5:35:31 AM1/16/13
to மின்தமிழ்

WEDNESDAY, JANUARY 16, 2013

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், வைகுண்ட ஏகாதசிச் சிறப்பு!


ஏகாதசி அன்று விருச்சிக லக்னத்தில் சிம்ம கதியில் பக்தர்களின் உற்சாக முழக்கங்களோடும், வாத்திய இசை முழக்கங்களோடும் மூலஸ்தானத்தில் இருந்து கிளம்பும் நம்பெருமாள் மதுரையின் ராணி மங்கம்மாள் அளித்த ரத்தின அங்கியில், பாண்டியன், கொண்டை, கிளிமாலையோடு புறப்படுகிறார்.  பெருமாளின் திருமேனியில் பனி விழாவண்ணம் துணிக்கூடாரம் பிடித்துக் கொண்டு வருவார்கள்.  சந்தனு மண்டபத்துக்கு முதலில் வரும் நம்பெருமாள் அங்கே சிறிது நேரம் இருந்து பக்தர்களின் வழிபாட்டை ஏற்றுக் கொண்டு பின்னர் வழியெங்கும் காத்து நிற்கும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த வண்ணம் சேனை முதலியார் சந்நிதிக்கு வருவார்.  அங்கே அரங்கனின் திருவடியில் சமர்ப்பித்த மாலை சேனை முதலியாருக்குச் சமர்ப்பிக்கப் படுகிறது.  இதன் மூலம் தான் மீண்டும் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளும் வரை தன் அதிகாரத்தைச் சேனை முதலியாருக்கு மாற்றிக் கொடுக்கிறான் அரங்கன். பின்னர் பக்தர் கூட்டம் வெள்ளமாய்ப் பின் தொடரப் பரமபத வாசல் நோக்கி அரங்கன் ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்கிறது.

பரமபத வாசலை அரங்கனோடு சேர்ந்து கடப்பது அரியதான ஒன்றெனில் அவன் அந்த வாசல் வழியே வருகையில் எதிரே நின்று தரிசிப்பதும் சிறந்ததாகவே கூறப்படுகிறது.  நாழி கேட்டான் வாசல், கொடிமரம் போன்றவற்றைக் கடந்து நம்பெருமாள் திரை மண்டபம் வந்து சேர்கிறார்.  அங்கே யஜுர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்றுமறையாகும்.  அதைத் தொடர்ந்து மற்றவேதங்களும் சொல்கிறார்கள்.  வேதங்களைப் பெருமாளின் சுவாசமாகச் சொல்கின்றனர்.  பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்குப் பெருமாள் வந்து சேர்கிறார்.  பரமபத வாசலைத் திறக்க, அரங்கனின் ஆணை வேண்டும்.  ஆகவே சற்று நேரம் பக்தர்களோடு சேர்ந்து பரமனும் காத்திருக்கிறான்.  சிறிது நேரத்தில், பரமனின் ஆணை பிறப்பதாக ஐதீகப்படி ஆணை பிறந்ததும் பரமபத வாசலின் மணிகள் கணீர், கணீர் என ஒலிக்கக் கதவுகள் திறந்து கொள்கின்றன.  கூடி இருக்கும் கூட்டம் ரங்கா, ரங்கா, கோவிந்தா, கோவிந்தா என கோஷம் போட எட்டுத் திசைகளும் அதிரும் வண்ணம் வாத்திய முழக்கங்கள் செய்யப் பரமன் தன் அடியார் கூட்டத்தோடு பரமபத வாசலை அணுகினான்.  அந்த அதிகாலை வேளையில் குறிப்பிடப் பட்ட முஹூர்த்த நேரமான 4-45 மணி அளவில் தன் பக்தர்களுக்கு அருள வேண்டிப் பரமபத வாசல் வழியே ஆயிரங்கால் மண்டபம் அடைகிறான் நம்பெருமாள்.

அரையர் சேவையும் தொடர்ந்து நடைபெற, ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்த அரங்கன் அங்கே பரமபதத்தின் திருமாமணி மண்டபத்தை நினைவு கூரும் வண்ணம் கட்டப்பட்ட பூலோகத் திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானம் இருக்கிறான்.  மீண்டும் அரையர் சேவை நடைபெறும்.  வைகுண்ட ஏகாதசி அன்று நள்ளிரவு வரை அரங்கன் தரிசனம் திருமாமணி மண்டபத்தில் பக்தர்களுக்குக் கிடைக்கும்.  யோக நித்திரையிலேயே என்றென்றும் இருக்கும் பரமன் தன் பக்தர்களுக்காக வேண்டி இன்று தன் நித்திரையை ஒழித்து ஓய்வு, ஒழிச்சல் இல்லாமல் வீற்றிருந்து அரையர் சேவை, முதலானவற்றைக் கேட்டுக் கொண்டும், நடு நடுவே தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டும் ஓய்வில்லாமல் தரிசனம் தந்தருளுவான்.

அதன் பின்னரே மூலஸ்தானம் சென்று சேர்வான். வைகுண்ட ஏகாதசி முழுநாளும் அதிகாலை நான்கு மணியில் இருந்து இரவு பத்து மணி வரைக்கும் பரமபத வாசலும் பக்தர்கள் கடப்பதற்காக வேண்டித் திறந்திருக்கும்.  அதன் பின்னர் அடுத்த பத்து நாட்களுக்கு இராப்பத்து உற்சவம் நடைபெறும்.  அதன் நிறைவு நாளன்று நம்மாழ்வாருக்கு மோக்ஷம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறும்.  அதைக் குறித்து அடுத்துப் பார்ப்போம்.

Geetha Sambasivam

unread,
Mar 20, 2013, 4:33:00 AM3/20/13
to மின்தமிழ்

WEDNESDAY, MARCH 20, 2013

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், இராப்பத்து உற்சவம்!



பல  மாதங்கள் கழித்து இந்தப் பக்கத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இராப்பத்து உற்சவம் தொடங்குவதில் நிறுத்தி இருந்தேன்.  அதன் பின்னர் அடுத்தடுத்து விருந்தினர் வருகை, உடல் நலக்கேடு எனக் கணினி கிட்டே அவசியத்துக்கு மட்டும் வரும்படி ஆகி விட்டது.  ஆகவே இந்தப் பதிவை இப்போது தான் எழுதவே ஆரம்பிக்கிறேன்.  எழுதிவிட்டு உடனே போட எண்ணம்.  இராப்பத்தின் ஒவ்வொரு நாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆஸ்தானமிருந்துவிட்டு மூலஸ்தானம் திரும்பும் பெருமாள் வீணாகானத்தை ஏகாந்த சேவையில் கேட்ட வண்ணம் திரும்புவார்.  இராப்பத்தின் ஏழாம் நாள் தான் பிரபலமான திருக்கைத்தல சேவை.  அன்று பட்டாசாரியார்கள் தங்கள் கரங்களிலேயே பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு நம்மாழ்வாருக்கு எதிரே சேவை சாதிப்பார்கள்.  நம்மாழ்வார் நாச்சியார் திருக்கோலத்தில் அன்று காணப்படுவார்.  இவரைத் தான் பராங்குச நாயகி என்பார்கள்.  அவர் பாடிய பிரபந்தப் பாடல் ஒன்று கீழே காணலாம்.

வண்டுகளோ! வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண்பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்ஏனம் ஒன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டு கள்வாரும் மலர் உளவோ நும்வியல் இடத்தே?

இவர் தம்மை நாயகியாகவும், பெருமாளை நாயகனாகவும்  பாவித்துக் கொண்டு பாடியவை இவை.  இறைவனை மனக்கண்ணில் கண்ணாரக் கண்டு அவனோடு தாம் பெற்ற இன்பத்தை அப்படியே சொல்லுகிறார்.  நெஞ்சம் திருமாலைத் தவிர வேறொருவரை நினைக்கக் கூடாது;  நாவும் அவன் திருநாமத்தை வாழ்த்திப் பாட வேண்டும்.  இவ்வுலகைப் படைத்துக் காத்து ரக்ஷிக்கும் திருமாலை வாழ்த்திப் பாடுவது அல்லாமல் இப்பிறவி எடுத்ததன் பயன் என்ன என்று கேட்கிறார் நம்மாழ்வார்.   இந்த இராப்பத்துத் திருநாட்களில் நம்மாழ்வாருக்கே முக்கியத்துவம்.  இவ்விதம் ஸ்ரீரங்கநாதனிடம் வேண்டிப் பெற்றவர் பரகால நாயகி என அழைக்கப்பட்ட திருமங்கை ஆழ்வார்.  நம்மாழ்வார் பராங்குச நாயகியாகத் தம்முள்ளே தனது ஆழ்ந்த பக்தியில் கொண்ட விரகதாபத்தினால் பராங்குச நாயகியானார் எனில் பரகால நாயகியான திருமங்கை ஆழ்வாரோ பெருமாளையே கொள்ளை அடித்தவர்.  இந்த இராப்பத்துத் திருநாளின் ஏழாம் நாள் திருக்கைத்தல சேவைக்குப் பின்னர் எட்டாம் நாளன்று தான் இந்தத் திருநாட்கள் ஏற்படவே காரணகர்த்தாவான திருமங்கை ஆழ்வாரின் வேடுபறி உற்சவம் நடைபெறும். 

பெருமாளுக்குச் சேவை செய்வதற்காகப் பணம் இல்லை என வழிப்பறிக் கொள்ளை செய்தவர் திருமங்கை ஆழ்வார்.  இவர் பெருமாளிடம் கொண்ட பக்தி எப்படிப் பட்டது தெரியுமா?

“வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த
  வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்
  எல்லாரும் என்றன்னை ஏசிடினும் பேசிடினும்
  புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே”

வில்லால் இலங்கையையே ஒரு கை பார்த்த ஸ்ரீராமனின் பின்னே சென்றுவிட்டதாம் அவர் மனம்.  யார் என்ன சொன்னாலும் ஏன் அந்தப் பெருமானே பொய் சொல்லி இருந்தாலும் அதைக் கேட்டுக் கொண்டு நம்பி அவரையே வணங்கி வழிபட்டு இருப்பேன்.” அப்படினு சொல்கிறார்.  இவர் தான் ஒரு சமயம் வழிப்பறியின் போது ஒரு திருமண கோஷ்டி வருவதாய்க் கேள்விப் பட்டுப் போய்க் காத்திருந்தார்.  வந்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.  சாக்ஷாத் ஸ்ரீமந்நாராயணனும், ஸ்ரீதேவியுமே மணமகனும், மணமகளுமாய் வந்தனர்.  தேவாதி தேவர்கள் உறவினர் கோலத்தில் கூட வந்தனர்.  பார்த்தார் கலியன்.  (கலியன் யாருனு கேட்கிறவங்களுக்கு, திருமங்கை ஆழ்வாரின் பெயர் கலியன் ஆகும்.) ஆஹா, நல்லதொரு வேட்டை தான் இன்னிக்கு. அப்படினு நினைச்சார்.  திருமண கோஷ்டி எதிர்பாராவண்ணம் அவர்களைத் தாக்கினார்.  ஆஹா, ஆனால் இந்த கோஷ்டியோ இதுக்குத் தானே காத்திருந்தது!  அவர்கள் தப்பி ஓடுவது போல் ஓட, கலியன் துரத்த, அங்கே ஒரு நாடகமே நடத்தப் பட்டது. கலியனுக்கு அது புரியவில்லை. காரியத்திலேயே கண்ணாக இருந்தார்.  உறவினர்கள், கல்யாண கோஷ்டியினர் அனைவர் பொருட்களும் கவரப் பட்டன.  இனி மிச்சம் இருப்பது, பெண்ணும், மாப்பிள்ளையும் தான்.  அவர்களைத் தொந்திரவு செய்ய வேண்டாம்னு சுற்றி உள்ளவர்கள் கேட்கக் கேட்க கலியன் விடவில்லை. பெண்ணை நகைகளை எல்லாம் கழட்டித் தரச் சொல்ல ஸ்ரீதேவியும் அவ்வாறே செய்தாள்.  அடுத்து மணமகன்.  மணமகனின் அனைத்து ஆபரணங்களும் கழட்டப்பட்டன.  மணமகன் பயந்த வண்ணம் ஓடுவது போல் பாவனை செய்ய, கலியனோ விடவில்லை.  இரு கைகளாலும் மணமகன் கைகளைப் பற்றி எல்லா நகைகளையும் கொடுத்தாச்சா என சோதனை செய்தார்.

ஆஹா, காலில் மெட்டி காணப்படுகிறதே.  ஆம், அந்த நாட்களில் பெண்ணிக்குத் திருமங்கலநாண் பூட்டப் படுவது போல் ஆணுக்குக் காலில் மெட்டி அணிவிக்கப் படும்.  இது இந்த ஆண்மகன் திருமணம் ஆனவன் என்பதற்கான அடையாளம்.  அந்த மெட்டியையும் விடாமல் கலியன் கழட்டச் சொல்ல, பெருமாள் கழட்டுவது போல் நடிக்கிறார்.  அது வரவே இல்லை.  எப்படி வரும்! வரவிடாமல் தடுப்பது அவன் தானே.  கலியனுக்குக் கோபம் முற்றுகிறது.  மணமகனைப் பயமுறுத்துகிறான்.  பயந்தது போல் நடித்த மணமகன் கலியனையே கழட்டி எடுக்கச் சொல்கிறான்.  குனிந்து மணமகன் கால்களைப் பற்றுகிறான் கலியன்.  ஆஹா, என்ன பாக்கியம், என்ன பாக்கியம்.  ஆனாலும் புரியாமல் மெட்டியைக் கழட்டுவதிலேயே ஈடுபடுகிறான்.  அதுவா வராமல் சண்டித்தனம் செய்யத் தன் வாயை பகவானின் திருப்பாதங்களில் வைத்துப் பற்களால் கழட்ட முயல, கலியன் காதுகளில் மெல்லக் கேட்டது ஒரு உபதேசம்.

“ஓம் நமோ நாராயணாய!”

2013/1/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Mar 26, 2013, 5:25:23 AM3/26/13
to மின்தமிழ்

SUNDAY, MARCH 24, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! இராப்பத்து எட்டாம் நாள்


அவ்வளவு நேரமாகத் தான் தன் குதிரையில் இந்த மணமகனைத் துரத்தியதும், நகைகளைக் கழட்டச் சொன்னதும், அவன் பயந்து ஓடியதும் நினைவில் வர மீண்டும் நிமிர்ந்து அந்த மணமகனைப் பார்த்தான் பரகாலன் என்னும் நீலன்.  அப்போது, “நீ கலியன்!” எனச் சொல்லிச் சிரித்தான் அந்த மணமகன்.  என்ன? என ஓங்கி அதட்டிவிட்டு மீண்டும் அந்த மெட்டியைக் கழற்ற முயன்ற காதுகளில்  மீண்டும் ஒலித்தது “ஓம் நமோ நாராயணாய!”  நிமிர்ந்து நோக்கினான் கலியன் என அழைக்கப்பட்ட நீலன்.  அங்கே அவன் கண்டது என்ன?



சங்கு சக்ரதாரியாக, மார்பில் வைஜயந்தி மாலையும், ஸ்ரீவத்ஸமும் துலங்க, ஸ்ரீயானவள் மார்பில் துலங்க அபய ஹஸ்தம் காட்டிக் கொண்டு, வாயில் குமிண் சிரிப்புடனும், கமல நயனங்களுடனும், பரிமள கந்த கஸ்தூரித் திலகத்துடனும், காட்சி கொடுப்பது யார்?  தான் காண்பது கனவா? தன்னைத் தானே உலுக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான் கலியன்.  அங்கே அவன் கண்டது கனவில்லை;  நனவே தான்.  சாக்ஷாத் பரந்தாமனைப் பார்த்தான் அங்கே.  அப்போது தான் தனக்கு உபதேசிக்கப் பட்ட மந்திரத்தின் முழுப்பொருளும் புரியவர, தன்னையும் அறியாமல் எம்பெருமானைத் துதிக்க ஆரம்பித்தான் கலியன் என அழைக்கப்பட்ட நீலன் என்னும் பரகாலன்.




வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்பெருந்துயரிடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்”


என்று ஆரம்பித்து பாசுரங்கள் பாட ஆரம்பித்தவர் பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திடுநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்ய நூல்களை அருளிச் செய்து திருமங்கையாழ்வார் என்னும் பெயரைப் பெற்றார்.  இவர் பெயரில் ஸ்ரீரங்கம் கோயிலில் திருப்பணி செய்த குறிப்புகளும் கிடைக்கின்றன.  இவர் வேண்டிக் கொண்டதால் ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி அன்றும் முன்னர் ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரிலிருந்து நம்மாழ்வார் புறப்பட்டு வந்து பரமபத சேவையையும் மோட்சத்தையும் பெற்று வந்தார் என அறிகிறோம்.  தற்சமயம் ஸ்ரீரங்கம் கோயிலிலேயே நம்மாழ்வார் விக்ரஹப் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதால் இங்கேயே நம்மாழ்வார் எழுந்தருளி இருக்கிறார்.  அடுத்து நாம் பார்க்கப் போவது நம்மாழ்வார் மோட்சம் தான்.

Geetha Sambasivam

unread,
Mar 26, 2013, 5:26:15 AM3/26/13
to மின்தமிழ்

TUESDAY, MARCH 26, 2013

ஸ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம், வைகுண்ட ஏகாதசி முடிவு!


இராப்பத்தின் முடிவு நாளன்று நம்மாழ்வார் மோட்சம் தான்.  பத்து நாட்களாக பரமபதமாகிய வைகுந்த வாசலுக்கு ஒவ்வொரு படியாக வந்து கொண்டிருந்த நம்மாழ்வாருக்கு அன்று இறைவன் பரமபதத்தை அருளுகின்றான்.

“கெடுமிடராய வெல்லாம் கேசவாவென்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும்குறுககில்லார்” 

நம்மாழ்வார் ஆழ்ந்து அநுபவித்துத் தம் திருவாய்மொழியில், “கேசவன்” என்னும் பெயரைச் சொன்னாலே போதும்;  துன்பங்கள் அனைத்தும் கெட்டு ஓடிவிடும்;  நமக்கு இந்த ஞானம் பிறக்கும் முன்னர் நாம் செய்த பாவங்களும், பிறந்த பின்னர் மறந்து போய்ச் செய்யும் அனைத்துப் பாவங்களும்,  அனைத்தும் அழிந்து போகும்.  நாள்தோறும் எவருடைய உயிரையேனும் எடுக்க வேண்டி கொடிய செயலைச் செய்து கொண்டிருக்கும் யமனும் நெருங்க மாட்டான்.” என்கிறார்.  இதைத் தான் ஆண்டாள்,”தீயினில் தூசாகும்!” என்றாள்.

தினம் போலவே இன்றும் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளுவார்.   இராஜ நடை, சிம்ம நடை போன்ற நடைகளில் நடந்து ஆஸ்தானம் எனப்படும் மணிமண்டபத்துக்கு வந்து சேருவார்.  சாற்றுமுறை துவங்குகிறது. 

“தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும்நான்குடைச் சுரிகுழல்கமலக்கண்கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே”  

என்னும் பாசுரத்துடன் தொடங்கும் சாற்றுமுறை எட்டாம் திருவாய்மொழியுடன் நிறுத்தப்படுகிறது.  நம்மாழ்வாருக்கு மோட்சத்தை அளிக்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார் என்பதை உறுதி செய்யும் வகையில் பரமபத வாசல்கள் திறக்கப்படுகின்றன.  பட்டர்கள் மிக மிக அருமையாக ஒரு குழந்தையைக் கையாளுவதைப் போல திருக்கைத்தல சேவையின் மூலம் நம்மாழ்வாரை எம்பெருமான் திருவடியில் சரணாகதி செய்விக்கின்றனர்.  அப்போது அவர்கள்


சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின
பூரணபொற்குடம் பூரித்தது 
உயர் விண்ணில் கீதங்கள் பாடினர் 
கின்னரர்கெருடர்கள் கணங்கள்
வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்

வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று
வைகுந்த்தமரரும் முனிவரும்வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

விதிவகைபுகுந்தனரென்று நல்வேதியர்
பதியினில்பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும்நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும்
மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.

என்ற பாசுரங்களைப் பாடுகின்றனர்.  பின்னர் பத்தாம் திருவாய்மொழி துவங்குகிறது.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
தனியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே!”


என்றெல்லாம் பாடி நம்மாழ்வார் எம்பெருமானை என்னை எங்கேயும் அனுப்பிவிடாதே!  உன் பக்கமிருந்து உன் திருவடி சேவை தவிர வேறெதுவும் வேண்டாம் என வேண்டுகிறார்.   நம்மாழ்வார் எம்பெருமானின் திருவடி தொழுதல் என்னும் இந்நிகழ்வுக்காக பட்டர்கள் நம்மாழ்வாரைத் தங்கள் கரங்களில் தாங்கிய வண்ணம் எம்பெருமானை மூன்றுமுறை சுற்றி வந்து நம்மாழ்வாரைப் பெருமாளின் திருவடிகளில் தொழ வைக்கின்றனர்.  நம்மாழ்வாரை நம்பெருமாளின் திருவடிகளில் சேர்ப்பித்ததும், துளசியால் அபிஷேஹம் செய்து அவரை மூடுகின்றனர்.  பின்னர் சாம்பிராணிப் புகை போடவும் சிறிது நேரம் அந்தப் புகையில் நம்மாழ்வாரும், நம்பெருமாளும் தனித்துப் பேசிப்பாங்க போல!



எம்பெருமானிடம் சரணாகதி செய்து வைணவப் பரிபாஷையில் திருநாட்டுக்கு எழுந்தருளிய நம்மாழ்வாரை, பட்டர்கள் இவ்வுலகத்து மாந்தர்கள் உய்ய வேண்டி திரும்பத் தரும்படி வேண்டுகின்றனர்.  நம்பெருமாளும் அதை ஏற்று,  “தாம், தோம், தீம், தந்தோம், தந்தோம், தந்தோம்!” எனத் திரும்பத் தருகின்றார்.  நம்மாழ்வாரின் மேலுள்ள துளசிதளங்கள் அகற்றப்பட்டு நம்மாழ்வார் திரும்ப  ஆஸ்தானம் எழுந்தருளுகிறார்.  பின்னர் அனைவருக்கும் தீபாராதனை காட்டிய பின்னர் நம்மாழ்வார் மோட்சம் நிறைவு பெறுகிறது.

இந்த மோட்சத்தன்று நேரில் பார்க்கும் பக்தர்களில் கண்ணீர் விடாதவர்கள் இருக்க மாட்டார்கள்.


Geetha Sambasivam

unread,
Apr 9, 2013, 9:33:49 AM4/9/13
to மின்தமிழ்

Tuesday, April 09, 2013

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம், மட்டையடித் திருவிழா!




ஸ்ரீரங்கத்து அரங்கன் நம்பெருமாளாயிற்றே.  ஆனால் இவன் அழகிய மணவாளன் என்றே அழைக்கப் பட்டிருக்கிறான்.  நம்பெருமாள் என அழைக்கப்படும் காரணத்தை வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம்.  இப்போ இந்த அழகிய மணவாளன் செய்த ஒரு காரியத்தைச் சொல்லியே ஆகணும்.  இவனோ ஊர்சுத்தி.  ஆங்காங்கே இருக்கும் பெண்கள், ஆண்கள் அனைவரும் தன் பரிமள கஸ்தூரி வாசனையினாலேயே வசீகரிப்பவன்.  இப்படி இருந்த அரங்கன் ஒரு நாள் உலாப் போகையில் இளவரசி ஒருத்தி அவனைக் கண்டாள்.  கண்டது முதல் அவன் நினைவாகவே இருந்தாள்.  மணந்தால் அரங்கன்;  இல்லையேல் திருமணமே வேண்டாம் என்றிருந்தாள்.  அரங்கனுக்குத் தான் வியவஸ்தையே இல்லையே!  அவன் பாட்டுக்குத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.  என்ன இது?  ஏற்கெனவே ரங்கநாயகி நாச்சியார் இருக்கையில் இன்னொரு திருமணமா?  ஆஹா!  ஆம், ஆம், இன்னொரு திருமணம் தான்,  அதுவும் ரங்கநாயகிக்குத் தெரியாமல்.  இது என்ன புதுக்கதை?

சோழர்களுக்கு உறையூர் தலைநகரமாக இருந்த காலம் அது.  நந்த சோழன் என்னும் மன்னன் நாட்டை ஆண்டு வந்தான்.  அவனுக்கு மக்கட்பேறே இல்லாமல் இருக்க ஸ்ரீரங்கத்து அரங்கனை வேண்டினான்.  அரங்கனோ இப்பிறவியில் அவனுக்கு மக்கட்பேறுக்கு வாய்ப்பில்லை;  எனினும் நம் பக்தன் அவன், ஆகையால் அவனுக்கு அருள் செய்ய வேண்டும் என எண்ணினான்.  திருமகளைக் கடைக்கண்ணால் நோக்க அவளும் புரிந்து கொண்டாள்.  தன் அம்சத்தை அவனுக்கு மகவாய்த் தரத் திருவுளம் கொண்டாள்.  ஓர் நாள் உத்தியானவனத்தில் சுற்றி வந்த மன்னன் கண்களில் தாமரை ஓடையில் ஒரு பெரிய அதிசயத் தாமரைப் பூவும், அதில் இருந்த ஒரு குழந்தையும் கண்களில் பட்டது.  மன்னனுக்கு ஆச்சரியம்.  குழந்தையைத் தன்னிரு கைகளிலும் தூக்கி எடுத்து மார்போடு சேர்த்து அணைத்தான்.  குழந்தை, “களுக்”எனச் சிரித்தது.  கமலப் பூவில் கண்டெடுத்த குழந்தைக்குக் கமலவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.  மன்னன் மனம் மகிழ்ந்தது.

விரைவில் மணப்பருவம் எய்திய கமலவல்லி தான் அரங்கனின் உலாவைக் கண்டாள்;  அவன் பால் அவள் மனம் சென்றது இயற்கை தானே!  திருமகளின் அம்சமான அவள் சேர வேண்டிய இடத்திற்கு அவள் மனம் சென்றது அதிசயம் அல்லவே.  ஆனால் இது எதுவும் அறியா மன்னன் மகளின் வருத்தம் கண்டு தானும் வருந்திக் காரணம் கேட்டறிந்தான்.  இது நடக்கக் கூடியதா என எண்ணி வியந்தான்.  கவலையில் ஆழ்ந்த மன்னன் கனவில் அரங்கன் தோன்றி, “உன் மகள் வேறு யாருமல்ல.  திருமகளே உனக்கு மகளாய் அவதரித்துள்ளாள்.  அவளை மணப்பெண்ணாக அலங்கரித்து ஸ்ரீரங்கம் அழைத்து வருவாய்.  நான் அவளை ஏற்றுக்கொள்வேன்.” என்றான்.  அரங்கன் சொல்படியே மன்னன் தன் மகளை அழகிய மணமகளாய் அலங்கரித்து திருவரங்கம் அழைத்து வர, அரங்கன் சந்நிதிக்கருகே மணமகள் மறைந்தாள்.  இதைத் தன் கண்களால் கண்ட மன்னன் வியந்தான்.  திருமகளையே தன் மகளாகத்  தான் வளர்த்து வந்ததையும், அரங்கனே தனக்கு மருமகனாக வாய்த்த பேறையும் எண்ணி மனம் சிலிர்த்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் பற்பல திருப்பணிகள் செய்தான்.  என்றாலும் அவன் மனம் அமைதியுறவில்லை.

பாசத்துடன் தான் வளர்த்த தன் மகளுக்கென ஒரு அழகிய கோயிலை உறையூரில் எடுப்பித்தான்.  பெருமாளை வேண்டிக்கொள்ள அவரும் அழகிய மணவாளராக அங்கே எழுந்தருளியதாகக் கோயில் வரலாறு.  இதன் பின்னர் உறையூர் மண்மாரியால் மூடிய பின்னர் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப் பட்டபோது எழுப்பிய கோயிலே இப்போது நாச்சியார் கோயில் என்னும் பெயரில் உறையூரில் வழங்குவதாய்ச் சொல்கின்றனர்.  அரங்கன் அங்கே அழகிய மணவாளனாக எழுந்தருளி இருக்கின்றான்.  இந்த நாச்சியாரின் திருநக்ஷத்திரமான ஆயில்யத்தன்று பங்குனி மாதம் இவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி ஸ்ரீரங்கத்திலிருந்து நம்பெருமாள் என்னும் அழகிய மணவாளர் ஒவ்வொரு வருடமும் உறையூருக்குச் செல்கிறார்.  பங்குனி மாதம் ஆயில்ய நக்ஷத்திரத்தன்று அங்கே கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை நடைபெறும்.  இதை முடித்துக் கொண்டு அரங்கன் ஸ்ரீரங்கம் திரும்புகிறார்.  இதெல்லாம் ரங்கநாயகிக்குத் தெரியாது.  தெரிஞ்சதுனா அவ்வளவு தான். இனிமேத் தான் இருக்கு அவருக்கு!

படம் உதவி: கூகிளார்.

2013/3/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>


Geetha Sambasivam

unread,
Apr 10, 2013, 3:08:11 AM4/10/13
to மின்தமிழ்

Wednesday, April 10, 2013

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ரங்கநாயகி பட்ட பாடு! மட்டையடித் திருவிழா!





ரங்க நாயகியின் சந்நிதி.  உள்ளே அவளுக்குள் ஒரே கவலை.  அரங்கனை இரண்டு நாட்களாய்க் காணோமே?  அவள்  படிதாண்டாப்பத்தினி தான். வில்வமரத்தடியில் குடி கொண்டிருக்கும் அந்த சந்நிதியைத் தாண்டி அவள் வரவே மாட்டாள்.  அதுக்காக அரங்கனைப் பத்தித் தெரியாமல் இருக்குமா?  அவள் மனம் அலை பாய்ந்தது.  பழைய நினைவுகள் அனைத்தும் குமுறிக் கொண்டு வந்தன.  ம்ம்ம்ம்ம்ம்

"எங்கேயோ ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள்னு ஒருத்தி வந்தாள்.  என்னவெல்லாமோ பாடல்களைப் பாடி அரங்கனை மயக்கிக் கடைசியில் திருமணமும் செய்து கொண்டாள்.  அப்புறமாத் துலுக்க நாச்சியாராம்.  யாரோ ஓர் சுல்தானுக்குப் பெண்ணாம்.  இளவரசியாம்.  அவளை இங்கே வரவைத்து அவளையும் தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொண்டதோடு அல்லாமல், அவங்க தேசத்து ராஜாக்கள் கொடுத்தாங்கனு தினம் தினம் லுங்கி கட்டல், சப்பாத்தி சாப்பிடல்னு ஆயிண்டிருக்கு.  இது போதாதா இந்த மனுஷனுக்கு! பெயரும் வைச்சாங்க பார்!  அழகிய மணவாளனாம்!  யாருக்கு?  எனக்குத் தான் மணவாளன்.  எவளோ ஒரு கிழவி கண்களுக்கு இவர் அழகிய மணவாளனாத் தெரிஞ்சிருக்கார்.  உடனே எல்லாருக்குமா அழகிய மணவாளர்?? "

"போறாததுக்கு இந்தப் பரதக் கண்டம் முழுசும் சுத்தினேன்னு பெருமை வேறே.  அங்கேருந்து இவர் திரும்பி வர வரைக்கும் என் பக்தன் வேதாந்த தேசிகன் புதைத்து வைத்திருந்த வில்வ மரத்தடியிலிருந்து நான் வெளியே தலையைக் காட்டி இருப்பேனா?  அரங்கனையே நினைத்துக்கொண்டு இப்போது எங்கே இருக்கிறாரோ, எப்போது இங்கே வருவாரோ அன்னிக்குத் தான் வெளியே தலையைக் காட்டணும், நாம் இருக்கும் இடத்தைக் காட்டித் தரணும் என அப்படி ஒரு ஒருமித்த சிந்தனையோடு அரங்கன் வந்தால் தான் வெளியே வரது;  நாம இருக்குமிடத்தைச் சொல்லுவது என்றிருந்தேன்.  இந்த மனிதனும் பலருடைய பிரயத்தனங்களின் பேரில் தான் ஒளிஞ்சிருந்த இடத்திலிருந்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.  அப்போவே எனக்குப் புரிஞ்சு போச்சு இவர் தான் அழகிய மணவாளர்;  என் அருமை மணவாளர்னு.  ஆனால் அறுபது வருடத்துக்கும் மேலே ஆனபடியாலே இந்த ஜனங்களுக்குப் புரியலை.  இவரோட இடத்திலே இருக்கிறவர் புது ஆள்னு சொல்லியும் தெரியலை.  அதுக்கப்புறமா இவரோட பரிமள கஸ்தூரி வாசனையைத் தெரிஞ்சவங்க இருக்காங்களானு கேட்டு, கடைசியிலே அரங்கனின் அபிஷேஹத் துணிகளைத் துவைத்து வந்த பரம்பரையில் இப்போது உயிரோடு இருக்கும் வயதான  ஒரே ஒரு “ஈரம் கொல்லி”யைக் கண்டு பிடிச்சு, அவனும் வந்து இவருக்கும் திருமஞ்சனம் செய்யச் சொல்லி, புதுசா ஊர்க்காரங்க பிரதிஷ்டை பண்ணி வைச்சாங்களே அரங்கன்னு அவருக்கும் திருமஞ்சனம் செய்யச் சொல்லி அந்த ஆடையைத் தன்னிடம் கொடுத்தால் கண்டுபிடித்துச் சொல்வதாய்ச் சொன்னான்.  அப்படியே செய்து இரண்டு ஈர ஆடைகளையும் அந்த ஈரம் கொல்லியிடம் கொடுத்தாங்க.

அந்த ஈரம் கொல்லியும் இரண்டு ஆடையையும் வாங்கிக் கொண்டு   முதலில் புது ஆளோட ஆடையின் அபிஷேஹ தீர்த்தம்.  பிழிந்து குடித்துப் பார்த்து முகத்தைச் சுளிச்சான்.  அடுத்துத் தான் நம்ம ஆளோட ஆடையின் அபிஷேஹ தீர்த்தம்.  அதை எடுத்துப்  பிழிஞ்சு குடிச்சான்.  குதிக்க ஆரம்பிச்சுட்டான்.  இவர் தான் நம் பெருமாள்;  நம்பெருமாள்னு சொல்லிக் கூத்தாடி ஆடிப் பாடினான்.  அன்னைக்கு வைச்ச பெயர் இவருக்கு நம்பெருமாள்னு. அந்தப் பெயர் நிலைச்சது.  சரி இனியாவது நம்மளோடயே இருப்பார்னு நினைச்சேன்.  ஆனால் ஒவ்வொரு உற்சவத்திலும் இந்த மனுஷன் ஆண்டாளை வெளியே சந்நிதி வைச்சுக் குடியேற்றி அங்கே மாலை மாற்றிக்கொண்டு வந்துடறார்.  சரி போனாப் போறதுனு அனுமதிச்சா இப்போ இரண்டு நாட்களா ஆளையே காணோமே!  எங்கேனு விசாரிச்சதிலே உறையூருக்குப் போயிருக்காராம்.  வரட்டும்;  வரட்டும் ஒரு கை பார்த்துடறேன்.  யாரோ கமலவல்லியாம்;  ராஜாவின் பெண்ணாம்.  அவள் என்னோட அம்சமாமே?  இருக்கட்டுமே!  அதுக்கு அவளைக் கல்யாணம் செய்துக்கறதா?  ம்ஹூம், இதை நான் அநுமதிக்க மாட்டேன்.  அந்த மநுஷன் வரட்டும்.  உள்ளேயே விடப்போறதில்லை.

திருட்டுத்தனமாக் கல்யாணம் செய்துட்டு அதை என்னிடமிருந்து மறைக்கப் பார்ப்பார்.  எப்படியாவது கண்டு பிடிச்சுடணும். 

திவாஜி

unread,
Apr 10, 2013, 3:34:40 AM4/10/13
to thamizhvaasal
 நசுக்கு!
:-))))))


2013/4/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.

To post to this group, send email to thamiz...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Apr 10, 2013, 5:34:34 AM4/10/13
to thamiz...@googlegroups.com
மட்டையடி வாழைப்பட்டையல்லவா. நசுக்காது.


2013/4/10 திவாஜி <agni...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Apr 10, 2013, 9:43:14 AM4/10/13
to thamizhvaasal
இந்த
​ சம்பவத்தை  அடிப்படையாக​
​  வைத்து     என் தாயார் ​  ஆர் கமலம்மாள்  எழுதிய  
"கிருஷ்ணதீர்த்தம்  "   என்னும் கதைக்குதான்  பாரத ஸ்டேட் வங்கி, ஜன்கல்யாண், அமுத சுரபி  மூவரும் இணைந்து நடத்திய   கதைப் போட்டியில்

முதற்
​ பரிசு கொடுத்து சங்கராச்சாரியார் அவர்களால் தங்கக் காசு வழங்கப்பட்டு  கௌரவிக்கப் பட்டார் ​


அன்புடன்
தமிழ்த்தேனீ
2013/4/10 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Apr 10, 2013, 9:20:49 PM4/10/13
to மின்தமிழ்
உறையூர் வந்துவிட்டார் அழகிய மணவாளன் என்னும் நம்பெருமாள்.  இது 108 திவ்ய தேசங்களில் இரண்டாமிடத்தைப் பெற்ற சிறப்பான க்ஷேத்திரம்.  பின்னே?  ஸ்ரீரங்கம் உற்சவரே இங்கும் உற்சவர் ஆயிற்றே.  இங்கு கமலவல்லி நாச்சியாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டி வந்திருக்கிறார்.  வந்தாச்சு;  வந்த வேலை முடிந்தது.  கமலவல்லியுடன் திஉர்மணம் முடித்துக் கொண்டு சேர்த்தி சேவையும் முடிந்தது.  இனி திரும்பணுமே ஸ்ரீரங்கத்துக்கு. கமலவல்லியோ கண்ணும் கண்ணீருமாக நிற்கிறாள்.  அவளை சமாதானம் செய்த நம்பெருமாள் அவளுக்குப் பரிசாகத் தன் கணையாழியையே கொடுக்கிறார்.  அதை வாங்கிக் கொண்டு கமலவல்லியும் அமைதி அடைகிறாள்.  பின்னர் நம்பெருமாள் ஸ்ரீரங்கம் கிளம்புகிறார்.  கிளம்பியவர் நேரே ரங்கநாயகியைப் பார்க்கப்போகவேண்டாமோ?

ஏதோ வேலை நெட்டி முறிக்கிறாப்போல் அறுவடை ஆகி வந்திருக்கும் நெல் அளவையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.  அதுக்கப்புறமாத் தான் தாயார் சந்நிதிக்கே போகிறார்.  அங்கே போனதும் இவ்வளவு நாழி வேலை செய்துவிட்டுக் களைத்துச் சோர்ந்து போன வந்த நம்பெருமாளுக்குத் திருமஞ்சனம் என்னும் அபிஷேஹம் நடைபெறுகிறது.  ரங்கநாயகி சந்தோஷமாய்ப் பார்க்கிறாள்.  அவள் கண்களிலே பட்டது அந்த விபரீதம். 

"எங்கே? கையைக் காட்டுங்கள்!"

"என்ன கையிலே ஒன்றுமில்லையே?"

"அதான் கேட்கிறேன்.  நான் உங்களுக்குக் கொடுத்த அந்த மோதிரம் எங்கே?"

"ம்ம்ம்ம்??? என்ன மோதிரம், எங்கே மோதிரம்?" 

"சரிதான்!"

"ஓ அதுவா?  வரும்போது காவிரியைக் கடந்து நீரில் இறங்கி வந்தேனா?  ஆற்றில் விழுந்துவிட்டது போலிருக்கே!  இப்போ என்ன செய்வது?"

"ரங்கநாயகி, இரு, நீ இங்கேயே இரு.  நான் போய் ஆற்றில் நன்றாய்த் தேடிப் பார்த்துவிட்டு வருகிறேன்."

ரங்கநாயகிக்கு நம்பிக்கையே இல்லை.  என்றாலும் என்ன செய்யலாம்?  இந்த மனுஷன் தேடிவிட்டு வரட்டும். அதுக்கப்புறம் என்னனு விசாரிக்கலாம்.

Inline image 1

ஆற்றங்கரைக்குத் தங்கக் குதிரையில் எழுந்தருளுவார் நம்பெருமாள்.  ஆற்றில் அங்கும் இங்கும் கணையாழியைத் தேடுவார்.  கீழே, மேலே, மணலில், ஆற்றங்கரையின் நட்டநடுத் தீவுகளிலே, மரங்களிலே, இண்டு இடுக்கு விடாமல் தேடுகிறாராம்.  பின்னர் சத்தம் போடாமல் திரும்புகிறார்.  சித்திரை வீதியில் வையாளி சேவை நடக்கும்.  வையாளி சேவைன்னா அது சேவை.  குதிரை நிஜமாகவே ஓடும். ஓடி ஓடித் தேடுகிறாராம்.  இங்கே இருந்தால் தானே கிடைக்க!  வெறுங்கையோடு தான் திரும்பியாகணும்.  வேறே வழியே இல்லை.  ரங்கநாயகிக்கு ஏதோ விஷமம் என்று புரிந்து விட்டது.  கோபம் கொண்டாள்.  முகத்தைத் திருப்பிக் கொண்டதோடு கதவையும் அடைத்தாள்.  ஆயிற்று. ப்ரணய கலஹம் ஆரம்பமாயிற்று.
ranga1.jpg

Innamburan S.Soundararajan

unread,
Apr 11, 2013, 3:44:07 AM4/11/13
to thamiz...@googlegroups.com
வையாளி சேவைன்னா அது சேவை.
~ ஆஹா! அதை பற்றி நீங்கள் விவரமான வர்ணனை தரவேண்டும். 

Geetha Sambasivam

unread,
Apr 11, 2013, 4:58:49 AM4/11/13
to thamiz...@googlegroups.com
விரைவில் தர முயற்சிக்கிறேன் ஐயா.

--

Geetha Sambasivam

unread,
Apr 12, 2013, 2:35:34 AM4/12/13
to மின்தமிழ்
Inline image 1

ப்ரணய கலஹத்தில் ரங்கநாயகி, நம்பெருமாள் இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகிறது.  ரங்கநாயகியும், அரங்கனும் வாக்குவாதம் பண்ணிக் கொள்வதைப் புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள் அந்தப் புத்தகத்தை  அளிப்பது கே.பி.எஸ்.நாராயணன் செட்டியார், சேர்மன், போர்ட் ஆஃப் ட்ரஸ்டீஸ், ஸ்ரீரங்கநாத ஸ்வாமி தேவஸ்தானம், ஸ்ரீரங்கம். மேலும் உறுப்பினர், டி.ஆர்.யு.சி.சி. திருச்சி, 55, சின்ன செட்டி தெரு, திருச்சி.  இந்தப் புத்தகத்தை  ஸ்கான் செய்து அனுப்பியது பதிவர் மாதங்கி மாலி, அவர் தந்தை திரு மாலி.  இருவருக்கும் என் நன்றி.

முதல்லே பங்குனி மாதம் நடக்கும் இந்த பிரம்மோத்ஸவம் ஆதி பிரம்மோத்ஸவம் எனப்படும். இந்த ஆதி பிரம்மோத்ஸவம் விபீஷணனால் ஏற்படுத்தப் பட்டது.  பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திரத்தன்று கமலவல்லியைத் திருமணம் செய்து கொண்டு உறையூரிலிருந்து திரும்பி வந்த அரங்கன், ரங்கநாயகியைத் தரிசிக்க மிகுந்த பிரேமையுடன் சென்றபோது கோபத்துடன் கதவை அடைத்தாள் ரங்கநாயகி.  எல்லாம் தெரிந்த ஸ்ரீதேவிக்கே கோபமா? எனில் ஆம், கோபம் தான்.  நாம் இதைச் சாதாரணமான மானிடக் கண்களோடும், மானுட மனதோடும் பார்த்தால் தவறாகவே தெரியும். ஆனால் இவ்வுலகில் பரமபுருஷன் ஆன எம்பெருமான் ஒருவனே ஆண்மகன்.  மிகுதி உள்ள அனைவரும் ஸ்வரூபத்தால் எப்படித் தோன்றினாலும் அவர்களும் பெண்மக்களே.  இதைத் தான் மீராபாய் உணர்ந்து கூறினாள்.  கண்ணன் ஒருவனே ஆண்மகன்;  அவனுக்கு முன்னர் அனைவரும் பெண்களே என்று.  ஆகவே இதைப் பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் ஏற்படும் ஒரு விவாதமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.  இவ்வுலகிலுள்ள நம்மைப் போன்ற சாமானிய தம்பதிகளின் சண்டையைப் போல நினைக்க வேண்டாம்.  ஸ்ரீரங்கத்தைப் போலப் பல திவ்ய தேசங்களிலும் ப்ரணய கலஹம் என்னும் நிகழ்ச்ச்சி நடத்தப் படுகிறதெனினும் ஸ்ரீரங்கத்திலே தான் மிகவும் பிரசித்தமானது.

பெருமாளுக்கும், ரங்கநாயகிக்கும் ஏற்படும் இந்தப் ப்ரணய கலஹமானது கடைசியில் நம்மாழ்வாரால் தீர்த்து வைக்கப் படுவதாக ஐதீகம்.  பரமாத்மாவோடு ஜீவாத்மா சேர ஆசாரியனின் உதவி தேவை என்பதை இது சுட்டிக் காட்டுவதாய்ச் சொல்லுவார்கள்.  இனி ப்ரணய கலஹம் என்னும் மட்டையடி ஆரம்பம்.  பெருமாளுக்காக அரையர்களும் நாச்சியாருக்காக நாச்சியார் பண்டாரிகளும் வாதிடுவார்கள்.  அப்போது பூமாலைகள், பழங்கள், பூப்பந்துகள் போன்றவை நாச்சியாரால் பெருமாள் மீது தூக்கி எறியப் படும்.  பெருமாளோ மிகப் பயந்தவர் போலக் காட்டிக் கொண்டு பின்னே, பின்னே ஓட்டமாக ஓடுவார்.  அவர் பின்னே சென்றுவிட்டார் எனத் தெரிந்ததும் மீண்டும் கதவு திறக்கப் பெருமாள் உள்ளே நுழைய முயற்சிக்க மீண்டும் வாக்குவாதம் நடக்க, மட்டையடி நடக்கப் பெருமாள் மீண்டும் பின்னடைவார். இப்போது சம்வாதத்தைச் சற்றுப் பார்ப்போமா?

 அரங்கன் சொல்கிறார்:  "அடியே ரங்கநாயகி, நான் தான் போகும்போதே சொல்லிவிட்டுச் சென்றேன் அல்லவோ?  உற்சவங்கள் முடிந்து தானே நான் வர முடியும்?  நீயோ இந்தப் படியை விட்டுத் தாண்டமாட்டேன் என சபதம் போட்டிருக்கிறாய்!  உற்சவத்தில் எத்தனை கோலாஹலம், எத்தனை கொண்டாட்டம்  என்கிறாய்!  அடி அம்மா, பிராமணர்களெல்லாம் சூழ்ந்து கொண்டு ஸ்தோத்திரம் பண்ணுகின்றனர்.  புஷ்பங்களால் மக்கள் அனைவரும் வர்ஷிக்கின்றனர்.  அலங்காரப் பிரியனான எனக்கு உற்சாகத்துக்குக் கேட்க வேண்டுமா?  இப்படி எல்லாம் சந்தோஷத்தோடு உன்னைக் கண்டு சொல்ல வேண்டி ஓடோடியும் வந்தேனே!"

"நீயோ எப்போதும் என்னை எதிர்கொண்டு அழைப்பவள் இன்று வரவே இல்லை;  அதோடு விட்டதா!  கைலாகு கொடுத்து என்னை உள்ளே அழைத்துக் கொள்வாய்.  அருமையான சிம்மாசனத்தில் அமர்த்துவாய். என் திருவடியை விளக்குவாய்.  திருவொத்துவாடை சாற்றுவாய்,  திருவாலவட்டம் பரிமாறுவாய்; மங்கள ஆலத்தி எடுப்பாய்.  சுருளமுது திருத்தி சமர்ப்பிப்பாய்.  இத்தனை உபசாரங்களும் செய்வாயே, என் கண்ணே!  இன்றைக்கு என்ன திருக்காப்புச் சேர்த்துக் கொண்டாயோ?  என்னைக் கண்டதுமே உன் திருமுகமண்டலம் திரும்பியது திரும்பியபடி இருக்கிறதே,  உன் திருச்சேவடிமார்களாலே பந்துகள், பழங்களைக் கொண்டு என்னை அடிக்கிறாயே.  இப்படி எல்லாம் இன்று ஏன் என்னை அவமானம் செய்கிறாய் என் ரங்கநாயகியே!  இதற்கான காரணம் என்ன சொல்வாய்?"

இது நான் எழுதியவை ஆனால் புத்தகத்தில் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம் எப்படி எனில்,


"நாம் உத்ஸ்வார்த்தமாகப் புறப்பட்டருளித் திருவீதிகளெல்லாம் வலம் வந்து தேவதைகள் புஷ்பம் வர்ஷிக்க, ப்ராம்மணர்களெல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண, இப்படி பெரிய மனோரதத்தோடே தங்களிடத்தில் வந்தால், தாங்கள் எப்போதும் எதிரே விடை கொண்டு, திருக்கை கொடுத்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய் திவ்ய ஸிம்ஹாசனத்தில் ஏறியருளப் பண்ணி, திருவடி விளக்கி, திருவொத்துவாடை சாத்தி, திருவாலவட்டம் பரிமாரி, மங்காளலத்தி கண்டருளப்பண்ணி, சுருளமுது திருத்தி சமர்ப்பித்து--இப்படி அநேக உபசாரங்களெல்லாம் நடக்குமே. இன்றைக்கு நாமெழுந்தருளினவிடத்திலே திருக்காப்புச் சேர்த்துக் கொண்டு, திருமுக மண்டலத்தைத்திருப்பிக் கொண்டு, திருச்சேவடிமார்கள் கைகளாலே பந்துகளாலும் பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களையெல்லாம் இன்றைக்குப் பண்ண வந்த காரியம் ஏதென்று கேட்டுவரச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்

தொடரும்
SerthiSevai.jpg

Geetha Sambasivam

unread,
Apr 19, 2013, 5:02:06 AM4/19/13
to மின்தமிழ்
நாச்சியாருக்காக இப்போது பண்டாரிகள் பேசுவார்கள். முதல்லே என்னோட தமிழில்.  அப்புறமா நாச்சியாரின் ப்ரகாரம்.

"என்ன< எப்போதும் போல் தாம் எழுந்தருளியுள்ளீர்களா?  யார் சொன்னது? அது உண்மையெனில் தங்கள் திருக்கண்கள் ஏன் இப்படி சிவந்து காணப்படுகின்றன? இரவு முழுவதும் தூங்காதவர் போல் அல்லவோ காணப்படுகிறீர்கள்?  மேலும் தங்கள் குழல் கற்றைகள்?  அவை காற்றில் பிரிந்தனவாய்த் தெரியவில்லையே? ஏன் இப்படி கலைந்து பிரிந்து தொங்குகின்றன?  நெற்றியைப் பாருங்கள்!  கஸ்தூரித் திலகம், திருமண் காப்பு கரைந்து வழிந்திருப்பதைப் பார்க்க முடிகிறதே!  அதோடு மட்டுமா?  தங்கள் உதடுகள் ஏன் இப்படி வெளுத்துக் காண்கின்றன!  ஸ்வாமி, இதோ இங்கே தங்கள் கழுத்தில் நகச் சின்னங்களாய்க் காண்கின்றேனே! இவை பொய்யா?  உங்கள் திருமேனியில் எல்லாம் குங்குமமாய்க் காண முடிகிறது எங்கனம்? பரிவட்டங்கள் எப்போது மஞ்சள் வர்ணத்தைப் பெற்றன?"

"ஆஹா, இதென்ன ஆச்சரியம்?  பெண்கள் போட்டுக்கொள்ளும் செம்பஞ்சுக் குழம்பின் சுவடுகள் தங்கள் திருப்பாதங்களில்! ஐயா என் உள்ளம் மிகவும் கலங்கி நான் குழம்பிப் போயிருக்கிறேன். யாரங்கே?  திருச்சேவடிமார்களே, உள்ளே இருக்கிறவர்களை வெளியே விடவும் வேண்டாம்.  வெளியே இருந்து வருகின்றவர்களை உள்ளே விடவும் வேண்டாம்.  கட்டுப்பாடு செய்யுங்கள்.  விண்ணப்பம் செய்கிறவர்களை அநுமதிக்க வேண்டாம்.  வந்திருப்பது யாராய் இருந்தாலும் நம் பெருமாளாகவே இருந்தாலும், அழகிய மணவாளனாகவே இருந்தாலும் அவரை நேற்றைக்கு எழுந்தருளி இருந்த இடத்திலேயே இன்றைக்கும் எழுந்தருளச் சொல்லுங்கள்.  இது என் ஆணை!"

மேற்கண்டவாறு நாச்சியார் கூறியவுடனே மீண்டும் மலர்ப்பந்துகள், மாலைகள், வாழைப்பழங்கள் என நாச்சியார் சந்நதியிலிருந்து தூக்கி எறியப்பட நம்பெருமாளாகிய அழகிய மணவாளர் பயந்து பின் வாங்குவது போல் நடிப்பார்.  சற்றுத் தூரம் பல்லக்குப் பின்னோக்கிச் செல்லும்.  பின்னர் மீண்டும் முன் வந்து, தன் பதிலைச் சொல்லுவார்.  இப்போது நாச்சியாரின் ப்ரகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு நம்பெருமாளின் பதிலைப் பார்ப்போம்.

நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம் பண்டாரிகள் வாய்மொழியாக:

தாம் எப்போதும்போல் எழுந்தருளியது மெய்யானால் திருக்கண்களெல்லாம் சிவந்து இருப்பானேன்?  திருக்குழல் கற்றைகளெல்லாம் கலைந்திருப்பானேன்?  கஸ்தூரி திருமண்காப்பு கரைந்திருப்பானேன்? திருவதரம் வெளுத்திருப்பானேன்? திருக்கழுத்தெல்லாம் நகச்சின்னங்களாக இருப்பானேன்?  திருமேனியெல்லாம் குங்குமப் பொடியாக இருப்பானேன்? திருப்பரிவட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமாய் இருப்பானேன்?  திருவடிகளெல்லாம் செம்பஞ்சுக் குழம்பாயிருப்பானேன்?  இப்படிப்பட்ட அடையாளங்களைப் பார்த்து நாச்சியாரின் திருவுள்ளம் மிகவும் கலங்கி இருக்கிறது.  ஆகையினாலே உள்ளே இருக்கிறவர்களை வெளியே விடவேண்டாமென்றும், வெளியிலே இருக்கிறவர்களை உள்ளே விடவேண்டாமென்றும் இப்படிக் கட்டுப்பாடு பண்ணிக் கொண்டிருக்கிற சமயத்திலே உள்ளே விண்ணப்பஞ்ச்செய்யச் சமயமில்லை.  ஆனபடியினாலே நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே இன்றைக்கும் எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

இதற்கு பதில் கொடுக்கும் நம்பெருமாள் சாதாரணமானவரா!  மஹா கள்ளனாயிற்றே. ஒவ்வொன்றுக்கும் எப்படிப் பதில் கொடுக்கிறார் பாருங்கள்.

"ஆஹா, ரங்க நாயகி, நம்மை யாரென நினைத்தாய்?  நாம் செங்கோலுடைய  திருவரங்கச் செல்வர் அன்றோ!  கவரி முடிந்தோம்;  கலிக்கச்சை கட்டினோம்;  வல்லயம் ஏந்தினோம்.  நம் குதிரை நம்பிரான் மேலே இரவு முழுதும் உறக்கமின்றி இவ்வுலகைக் காக்கும் நிமித்தமாக விழித்திருந்தபடியாலே நம் கண்கள் சிவந்து போயின.  அங்கும் இங்கும் அலைந்து திரிந்த சமயத்திலே அடித்த காற்றிலே திருக்குழல் கற்றைகள் கலைந்து பிரிந்து போயிற்று.  கஸ்தூரித் திருமண் காப்புக் கலைவது ஒன்றும் புதிதல்லவே.  இந்த சூரியனின் அதி கொடூரமான கிரணங்கள் எனக்கு ஒத்துக்கொள்ளாது என்பதை நீ அறியாதவள் அல்லவே! அந்தக் கொடூரமான சூரிய கிரணங்களினால் என் திருமண் காப்புக் கரைந்துவிட்டது. "

"தேவதைகளின் வேண்டுகோளுக்காக வேண்டி சங்க வாத்தியத்தை எடுத்து ஊதிய காரணத்தால் அதரங்கள் வெளுத்தன. இந்த ஜகத்தை ரக்ஷகம் செய்யும் வேலை சாமானியமானதா ரங்கநாயகி?  காடு மேடுகளெல்லாம் சென்று பார்க்க வேண்டாமா?  அவ்விதம் காடுகளெல்லாம் சுற்றி அலைந்த காரணத்தால் ஆங்காங்கே இருந்த முட்செடிகள் கீறிவிட்டதால் கழுத்தெல்லாம் கீறல்களாய்த் தெரிகிறது.  தேவதைகள் மிகவும் சந்தோஷம் கொண்டு என்னைப் புஷ்பங்களால் வர்ஷித்தன.  அப்படி வர்ஷிக்கையிலே அந்தப் புஷ்பங்களின் மகரந்த வர்ணச் சேர்க்கையெல்லாம் என் மேல் விழுந்ததால் குங்குமப் பொடியாக உனக்குத் தெரிகிறது.  ஆஹா, என் பரிவட்டம் உன் கண்ணுக்குப் பீதாம்பரமாய்த் தெரிகிறது போலும்.  என் பீதாம்பரம் தானே மஞ்சள் வர்ணம்.  அதைப் பரிவட்டம் என நினைத்துவிட்டாயோ?  குதிரை மேல் ஏறி இரவு முழுதும் அலைந்த சமயம் குதிரையின் அங்கவடியின் மேலே கால்களை வைத்துக் கொண்டே செல்ல வேண்டுமே!  அப்போது திருவடிகள் சிவக்காதிருக்குமா?  இவைதான் ரங்கா, வேறெதுவுமே இல்லை."

"ஆனால் நான் ஏன் இவ்வளவு தாமதமாய் வந்தேன் என நினைக்கிறாயா?  அதற்குக் காரணம் உள்ளது!"
 






Geetha Sambasivam

unread,
Apr 22, 2013, 5:23:13 AM4/22/13
to மின்தமிழ்
"ஆனால் நான் ஏன் இவ்வளவு தாமதமாய் வந்தேன் என நினைக்கிறாயா? அதற்குக்
காரணம் உள்ளது!"


என்ற நம்பெருமாள் மேலும் தொடர்ந்தார். "வேர்க்க விறுவிறுக்க
வேட்டையாடிவிட்டு நான் திரும்பி வரும் வேளையில், "நீலன்" என்றொருவன்.
யாரோ திருமங்கையாழ்வானாம், சொல்கின்றனர். அவன் பெரிய திருடனாய்
இருக்கிறான் ரங்கா, என் திருவாபரணங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போயே
விட்டான் என்றால்! பார்த்துக்கொள்! மெதுவாக அவனைப்பிடித்துக் காலைப்
பிடிக்கச் சொல்லி, நல்ல வார்த்தைகளைச் சொல்லி சமாதானம் செய்வித்து,
திருவாபரணங்களை மெல்ல வாங்கி கொண்டு போய்க் கருவூலத்தில் சேர்க்கும்போது
கணக்குப் பார்த்தேனா! கணையாழியைக் காணவே இல்லை. ஆஹா, அது நம் ரங்கநாயகி
கொடுத்த கணையாழியாச்சே எனக் கவலை மீதூர விடிய விடியப்பத்து நாழிகைக்கு
மேல் புறப்பட்டுத் திருவீதிகளெல்லாம் தேடித் தேடிப் பார்த்துக் கடைசியில்
ஒருவழியாகக் கண்டு பிடித்துவிட்டேன். அங்கிருந்து உன்னைக் காண வேண்டி
நேரே கிளம்பும்போது இந்த தேவதைகள் ஒரு கூடை புஷ்பத்தை எடுத்துக் கொண்டு
வர்ஷிக்க வந்துவிட்டார்கள். விடுவேனா! என் ரங்கநாயகி அருகில் இல்லாமல்
புஷ்பங்களை நான் ஏற்பதில்லை என மறுத்துவிட்டேன். ரங்கநாயகிக்கும்
சேர்த்துத் தான் என்றார்களா, அவர்களை முன்னே போகச் செய்து நாம் பின்னே
வந்தோம். ஆகையினாலே இந்தப்புஷ்பங்களை ஏற்றுக் கொண்டு நம்மையும் உள்ளே
அழைத்து ஆசுவாசம் செய்விப்பாய்.

மேலே குறிப்பிட்டவை நான் எழுதியவை:

நம்பெருமாளுக்காக அரையர்கள் சொல்லும் ப்ராகாரம்:

திருக்கண் சிவந்திருப்பானேன் என்றால் நாம் செங்கோலுடைய திருவரங்கச்
செல்வரானபடியினாலே கவுரி முடித்ஹ்டு, கலிக்கச்சைக் கட்டி, வல்லயமேந்தி,
குதிரை நம்பிரான் மேலே ராத்ரி முழுதும் நித்ரையின்றி ஜகரக்ஷணார்த்தமாக
ஜாகரூகனாய் இருந்தபடியினாலே திருக்கண் சிவந்து போச்சுது. திருக்குழல்
கற்றைகளெல்லாம் கலைந்திருப்பானேன் என்றால் காற்றடித்துக் கலைந்து
போச்சுது. கஸ்தூரித் திருமண் காப்புக் கரைந்திருப்பானேனென்றால்
அதிகடோரமான ஸூர்ய கிரணத்தால் கரைந்து போச்சுது. திருவதரம்
வெளுத்திருப்பானேனென்றால் அஸுர நிரஸனார்த்தமாய் தேவதைகளுக்காக
சங்கத்வானம் பண்ணினபடியினாலே வெளுத்துப் போச்சுது. திருக்கழுத்தெல்லாம்
நகச்சின்னமாயிருப்பானேனென்றால் அதிப்ரயாஸமான காடுகளிலே போகிறபோது
பூமுள்ளு கிழித்தது. திருமேனியெல்லாம் குங்குமப் பொடிகளாய்
இருப்பானேனென்றால் தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷித்தபடியினாலே புஷ்ப ரேணு
படிந்தது. திருப்பரிவட்டங்களெல்லாம் மஞ்சள் வர்ணமாயிருப்பானேனென்றால்
ஸந்த்யா ராகம் போலேயிருக்கிற திவ்ய பீதாம்பரமானபடியினாலே உங்கள்
கண்ணுக்கு மஞ்சள் வர்ணமாய்த் தோன்றுகிறது. திருவடிகளெல்லாம் செம்பஞ்சுக்
குழம்பாயிருப்பானேனென்றால், குதிரை நம்பிரான் மேலேறி அங்கவடிமேல்
திருவடிகளை வைத்துக்கொண்டு போனபடியினாலே திருவடிகள் சிவந்து போயின.
இப்படிப்பட்ட அடையாளமேயொழிய வேறில்லை. ஆனால், போது கழிந்து வருவானேன்
என்றால் வேட்டையாடி வேர்த்து விடாய்த்து வருகிற ஸமயத்திலே,
திருமங்கையாழ்வானென்பவன் ஒருவன் வந்து ஸர்வஸ்வாபஹாரத்தையும் பண்ணிக்
கொண்டு போனான். அவனைச் சில நல்ல வார்த்தைகள் சொல்லித் திருவாபரணங்களை
மெள்ள வாங்கிக் கொண்டு போய், கருவூலத்தில் எண்ணிப் பார்க்குமிடத்தில்
கணையாழி மோதிரம் காணாமல் போச்சுது. அதற்காக விடியப் பத்து நாழிகைக்குப்
புறப்பட்டருளி, திருவீதிகளெல்லாம் வலம் வந்து கணையாழி மோதிரத்தைக்
கண்டெ;டுத்துக் கொண்டு மீள வாரா நிற்கச் செய்தே அப்பொழுது தேவதைகள்
பாரிஜாத புஷ்பங்கள் கொண்டு ஸேவிக்க வந்தார்கள். நாம் நம்முடைய பெண்டுகள்
அன்றியிலே சூடுகிறதில்லையென்று தமக்கு முன்னமே வரக்காட்டி நாமும் பின்னே
எழுந்தருளினோம். ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பங்களையும்
வாங்கிக்கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாளருளிச் செய்த
ப்ரகாரம்

Innamburan S.Soundararajan

unread,
Apr 22, 2013, 5:30:08 AM4/22/13
to thamiz...@googlegroups.com
உங்கள் நடையோ நேர்த்தி. அரையர் நடையினாலேயோ மனம் கொள்ளை போயிடுத்தே.
இன்னம்பூரான்

2013/4/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Apr 24, 2013, 5:55:14 AM4/24/13
to மின்தமிழ்


அவ்வளவில் ரங்கநாயகி நாச்சியாருக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. இவர் பொய் சொல்லிவிட்டு, உறையூருக்குச் சென்று ஊர் சுத்திவிட்டு இங்கே வந்து என்னமாக் கதை அளக்கிறார்!

இந்த நம்பெருமாளை உற்சவ அலங்காரத்தில் அது என்ன அலங்காரமாகவே இருக்கட்டுமே, சற்றே உற்றுக்கவனியுங்கள்.  அவன் உதடுகளில் ஒரு கள்ளச் சிரிப்பும், குறும்பும் இழையோடும்.  அதுவும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தன்னால் நாச்சியாரை மட்டுமல்ல இந்த ஜனங்களையும் எப்படியோ ஏமாத்திடலாம் என்ற நிச்சயம் தெரிவதையும் அவன் கண்களில் உணரமுடியும்.  நம்மை எப்படியும் உள்ளே விட்டுடுவாங்க.  நாம் சொல்வதை நம்பிடுவாங்க என்று நிச்சயமாகக் கொஞ்சம் ஆசுவாசமாகவே இருப்பான்.  கொஞ்சமும் கவலைப் பட்டுக்க மாட்டான். இப்படிப் பட்டவனை என்ன செய்யறது?  நாச்சியார் புலம்பறாப்போல் புலம்ப வேண்டியது தான்.  அதைக் கேட்டுக்கொண்டு மனதுக்குள்ளாகவே அவன் சிரித்துக் கொள்வது அந்த முகத்தில் அப்பட்டமாய்த் தெரியும். மேலும் மேலும் அடுத்தடுத்துக் கதை அளப்பான் பாருங்கள்.  அதென்னமோ இவன் என்ன சொன்னாலும் ஒரு பக்கம் மனம் அதை நம்பத் துடிக்கும்;  இன்னொருபக்கம் பொய் சொல்கிறான் என்றே தெரியும்.  ஆனாலும் அவன் லீலைகளை எல்லாம் ரசித்து மன்னித்து விடுவோம்.  இப்போ ரங்கநாயகி நாச்சியார் கேட்கப் போகிற கேள்விகளையும் அதுக்கு நம்பெருமாள் சொல்லப் போகிற பதிலையும் படியுங்கள்.

நாச்சியார் பண்டாரிகள் சொல்வது:

கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப்பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி உறையூரில் போய், மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதாமனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் அவ்வடையாளங்களையும் அந்யதாவாகக் கொண்டு நாங்கள் ஏழைகளானபடியினால் இப்படிப்பட்டிருக்கிற வஞ்சநோக்திகளையெல்லாம் நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே தானே சொல்லிக் கொண்டு இன்றைக்கும் அங்கே தானே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

"ஓஹோ, ஐயா, அப்படியா?  கணையாழி மோதிரம் நிஜம்மாகவே காணாமல் போனதா?  அது உண்மையா?  அப்படியெனில் விடிய பத்து நாழிகை இருக்கையிலேயே தாங்கள் எங்கே கிளம்பினீர்கள்?  உறையூருக்குச் சென்றதாகவல்லவோ கேள்வி!  அங்கே மின்னலைப் பழிக்கும் மெல்லிய இடையுடைய ஒரு பெண்ணின் நந்தவனத்திற்கு அருகே தாங்கள் உலாவியதாகவும் கேள்வி.  தங்களைக் கண்டு அந்தப் பெண் மயங்கினாள் என்றும் கேள்வி.  தாங்களும் அவளைக் கண்டு மோஹித்தீர்கள் எனக் கேள்விப் பட்டேன்.  இப்படியெல்லாம் செய்து தங்கள் இஷ்டம் போல், மனம்போல் அந்தப் பெண்ணுடன் கூடி இருந்து இன்பம் அனுபவித்துவிட்டு அந்த அனுபவத்தாலே உண்டாகி இருக்கும் இத்தகைய அடையாளங்களை அவற்றால் இல்லை என்கிறீரே! அந்த அடையாளங்களெல்லாம் சாட்சிப் பிரமாணமாக உள்ளனவே.  ஏன் இப்படி?  நானொரு ஏழைப் பெண் என்பதாலா? இப்படிப்பட்டதொரு வஞ்சகத்தை எனக்கு நீர் செய்யலாமா?  நேற்றைக்குத் தாம் எழுந்தருளி இருந்த இடத்திலே இத்தகைய சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு திரும்பிப் போய் அங்கேயே இன்றும் எழுந்தருளூவீராக!

அரையர்கள் மூலம் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்

நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதும் இல்லை;  காதாலே கேட்டதுமில்லை.  துஷ்டர்களாயிருக்கிறவர்களும் மனதுக்குச் சரிப்போனபடி சொன்னால் நீரும் அந்த வார்த்தைகளைத் தானே கேட்டுக்கொண்டு நம்மையும் ஒரு நாளும் பண்ணாத அவமானங்களெல்லாம் பண்ணலாமா?  நீங்கள் ஸ்த்ரீகளானபடியினாலே முன்பின் விசாரியாமல் பண்ணினீர்காளாமென்கிற அவமானம் உங்களுக்கே யொழிய நமக்குத் தேவையில்லை. ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளே அழைக்கச் சொல்லி பெருமாளருளிச் செய்த ப்ரகாரம்.

"ஆஹா, ரங்கநாயகி, அந்தோ!  உறையூரா?  அது எங்கே இருக்கிறதடி?  நான் அப்படி ஊரை இன்றுவரை காணவில்லையே!  அந்த ஊர்ப் பெயரையும் காதாலே கேட்டதும் இல்லையடி.  யாரோ, வழியோடு போகிற துஷ்டர்கள் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக் கொடுத்து உன் மனதைக் கெடுத்துக் குட்டிச் சுவர் பண்ணி இருக்கிறார்கள். அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டுக் கொண்டு நீ இப்படி என்னை ஒருநாளும் இல்லாத திருநாளாக அவமானம் செய்யலாமா?  இதோ பார், ரங்கா, புத்தம்புதிய புஷ்பங்கள், உனக்காகவே வாங்கி வந்துள்ளேன்.  நீ ஒரு அழகிய பெண்மணி.  முன்பின் சரிவர விசாரிக்க வேண்டாமா?  விசாரிக்காமல் இவ்விதமெல்லாம் நீ சொன்னால் அதனால் விளையும் அவமானம் உனக்குத் தான் ரங்கா!  எனக்கில்லை.  மனதை சமாதானம் செய்து கொள்வாய்.  இதோ இந்த அழகிய புஷ்பங்களை ஏற்றுக் கொள்.  என்னை உள்ளே வரவிடு. என் அருமை ரங்கா, நான் உள்ளே வரலாமா?"

Geetha Sambasivam

unread,
Apr 27, 2013, 5:03:39 AM4/27/13
to மின்தமிழ்
ரங்கநாயகி அவ்வளவு எளிதில் உள்ளே விடுவாளா? இன்னும் கேட்க வேண்டியவை
எவ்வளவோ இருக்கிறது. இந்த மனிதன் ஒவ்வொரு முறையும் நம்மை ஏமாற்றி
விடுகிறானே. இம்முறை விடக் கூடாது. ரங்கநாயகி தொடர்ந்தாள்.

"அழகிய மணவாளரே! முந்தாநாள் நடந்ததைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.
தாங்கள் வேட்டைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றிருந்தீர்கள்.
உண்மையாகவே வேட்டையாடி, வியர்த்து விடாய்த்து வந்தீர்கள். என் மனம்
நெகிழ்ந்தது. தங்களைக் கண்டதுமே உள்ள நிலைமை புரிந்தபடியால் தங்களை
எதிர்கொண்டழைத்துக் கைலாகு கொடுத்து உள்ளே அழைத்துச் சென்றோம். தங்களை
திவ்ய சிம்ஹாசனத்தில் எழுந்தருளப் பண்ணினோம். தங்கள் திருவடிகளைப்
பாதபூஜை செய்து கழுவித் துடைத்து ஆசுவாசம் போக்கி தங்கள் திருவடிகளை
ஒத்தியெடுக்கும் திருவொத்துவாடையால் ஒத்தி எடுத்து, திருவாலவட்டம் காட்டி
அருளினோம். ஆனாலும் தாங்கள் அதிக ச்ரமத்தோடேயே காணப்பட்டீர்கள். ஆகவே
தங்கள் உடலுக்குக் களைப்பினால் ஏற்பட்ட இளைப்போ என எண்ணிக் கொண்டு
வெந்நீரால் தங்களுக்குத் திருமஞ்சனம் செய்விக்கச் செய்து சமர்ப்பித்தோம்.
ஆனாலும் தாங்கள் சரிவர நீராடவில்லை. நீராடியது பாதியும், நீராடாதது
பாதியுமாகவே இருந்தது. நமக்கு அதன் காரணம் புரியவில்லை."

"தங்களுக்கு மேலும் சிரமத்தால் ஏற்பட்ட இளைப்போ எனக் கருதி, தங்கள்
திருமேனிக்கு ஏற்ற திவ்ய பீதாம்பரத்தைத் தேடி எடுத்துச் சமர்பித்தோம்.
அதையும் சரிவர சாத்திக்கொள்ளவில்லை தாங்கள். ஏனோதானோ எனச் சாத்தியருளி
இருந்தீர்கள். பின்னும் விடாமல் கஸ்தூரித் திருமண்காப்பு சேர்த்துச்
சமர்ப்பித்துப் பார்த்தால், ஆஹா, என்னவாச்சு தங்களுக்கு. தாங்கள்
எப்போதும்போல் சார்த்திக்கொள்ளும் திருமண்காப்பைப் போல் அல்லாமல்
திருவேங்கடமுடையான் காப்புப் போல் அல்லவோ சார்த்திக் கொண்டீர்?
கோணாமாணாவென இருந்தது. பின்னரும் விடாமல் தங்கள் பசியாற வேண்டி, தங்கப்
பள்ளயத்தில் அப்பம் கலந்த சிற்றுண்டு, அக்காரம் முதலானவற்றைப் பாலில்
கலந்து, வர்க்க வகைகளையும் சமர்பித்தோம். ஆனாலும் தாங்கள் அவற்றை சரிவர
அமுது செய்யவில்லை. அமுது செய்தது பாதியும், அமுது செய்யாதது பாதியுமாக
வைத்துவிட்டீர்கள். எனினும் விடாமல் சுருளமுது திருத்தி சமர்ப்பித்தோம்.
அதையும் அமுது செய்யாதபடிதானே எழுந்தருளி இருந்தீர்?"

"தூக்கம் சரிவர இல்லை என நினைத்து அனந்தாழ்வானைக் கூப்பிட்டுத்
தங்களுக்கேற்ற திருப்படுக்கையாக விரித்துக் கொள்ளச் சொல்லி அதன்மேலே
தங்களைத் திருக்கண் வளரப் பண்ணி நாமே தங்கள் திருவடிகளை மிருதுவாகவும்,
தங்கள் உடல் நோவு தீரும் வண்ணமும் பிடித்துக் கொண்டிருந்தோம். ஆனால்
ஐயா, தாங்கள் எத்தனை வஞ்சகர்! தங்கள் வஞ்சகத்தால் எங்களுக்கெல்லாம் ஒரு
மாயா நித்திரையை உருவாக்கி விட்டீர்கள். எங்கள் கருவூலம் திறந்தீர்கள்.
எங்கள் ஸ்த்ரீதனங்கள் ஆன அம்மானை, பந்து கழஞ்சு, பீதாம்பரங்கள்
அனைத்தையும் கைக்கொண்டு விட்டீர்கள். எந்த இடத்துக்குச் செல்கிறோம் என
எவரிடமும் கூறவே இல்லை. தாங்கள் சென்ற அடுத்த கணமே எங்கள் மாயா நித்திரை
கலைந்தது. திடுக்கிட்டு விழித்தோம். அனந்தாழ்வான் விரித்திருந்த
படுக்கையில் பார்த்தால் தாங்கள் அங்கே இல்லை. என்ன செய்வது எனப்
புரியவில்லை."

"சரியென்று வாயில்காப்போனை அழைத்துக் கேட்டால் அவர்கள் வந்து அம்மானை,
பத்து கழஞ்சு, பீதாம்பரமான ஸ்த்ரீதனங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு
தாங்கள் இன்ன இடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி
எழுந்தருளிவிட்டார் என்று சொல்கின்றனர். அந்த பதில் கிடைத்ததுமே எங்கள்
அந்தரங்கத் திருச்சேவடிமார்களை அழைத்தோம். அவர்கள் வந்து தங்கள் அடி
பிடித்து, தங்கள் திருவடித் தடம் கண்டு அந்த அடியில் மிதித்துக் கொண்டு
சென்றால் அது உறையூரிலே கொண்டு போய்விட்டது. அங்கே மச்சினி என்ற
ஒருத்திக்கு முறைமை சொல்லி அழைத்ததும், மற்றொருத்தியை மடியைப்
பிடித்ததும், கச்சணிந்த முலைகளோடு கூடிய பெண்ணைக் கண்ணால் அழைத்ததும்,
கனிவாய் கொடுத்ததும், தங்கள் உடலெங்கும் அதனால் ஏற்பட்ட நகக்குறிகளும்,
தங்கள் கார்மேனியில் அதனால் ஏற்பட்ட பசுமஞ்சள் நிறமும், தெரிய வந்தது,"

"ஐயா, தாங்கள் கரும்புத்தோட்டத்தில் சஞ்சரிக்கும் யானையைப் போல இந்தப்
பெண்கள் கூட்டத்தின் நடுவே சஞ்சரிக்கிறீர்கள் என நாங்கள் உங்களைத்
தேடும்படி அனுப்பி வைத்த தூதி ஓடோடியும் வந்து தங்கள் அங்க அடையாளங்களைச்
சொல்லி உள்ளது உள்ளபடி அடையாளம் காட்டிவிட்டாள். உம்மாலே எம் மனது அனலில்
இட்ட மெழுகாய், இல்லை இல்லை, கொல்லன் உலையில் இட்ட மெழுகாய்க்
கொதிக்கிறது. நீர் எதுவும் பேசவேண்டாம், போம், போம். இங்கிருந்து
செல்லும்."

என்றாள் நாச்சியார்.

இது குறித்த ப்ரகாரம் நாளைக்கு வரும். கூடவே பெருமாளின் பதிலும்.

Geetha Sambasivam

unread,
May 7, 2013, 5:53:51 AM5/7/13
to மின்தமிழ்
நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்

முந்தாநாள் அழகிய மணவாளப் பெருமாள் வேட்டையாடி, வேர்த்து, விடாய்த்து
எழுந்தருளினார் என்று அடியோங்கள் அதிப்ரீதியுடனே எதிரே விடைகொண்டு
திருக்கை கொடுத்து உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டுபஓய் திவ்ய
சிம்ஹாசனத்தில் ஏறியருளப்பண்ணி, திருவடி விளக்கி, திருவொத்துவாடை சாத்தி,
திருவாலவட்டம் பரிமாறினோம். அப்போது அதிக ச்ரமத்தோடேயே
எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்போ என்ரு வெந்நீர்த் திருமஞ்சனம்
சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதை நீராடினது பாதியும், நீராடாதது பாதியுமாக
எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்போ என்று திருவரைக்குத் தகுதியான
திவ்ய பீதாம்பரம் கொண்டு வந்து ஸமர்ப்பித்தோம். அதையும் எப்போதும்போல
சாத்திக் கொள்ளாமல் ஏதோ ஒருவிதமாகச் சாத்தியருளினார். ஆனால் இளைப்போ
என்று கஸ்தூரித்திருமண்காப்பு சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதையும்
எப்போதும்போ சாத்திக்கொள்ளாமல் திருவேங்கடமுடையான் திருமண்காப்புப் போல
கோணாமாணாவென்று சாத்தியருளினார். ஆனால் இளைப்போ என்று தங்கப்
பள்ளயத்தில் அப்பங்கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து வர்க்க
வகைகளை முதலானதுகளைச் சேர்த்து ஸமர்ப்பித்தோம். அதையும் அமுது செய்தது
பாதியும், அமுது செய்யாதது பாதியுமாக எழுந்தருளியிருந்தார். ஆனால்
இளைப்போ என்று சுருளமுது திருத்தி ஸமர்ப்பித்தோம். அதையும் அமுது
செய்யாதபடிதானே எழுந்தருளியிருந்தார். ஆனால் இளைப்போ என்று
திருவனந்தவாழ்வானைத் திருப்படுக்கையாக விரித்து அதன் மேலே திருக்கண்
வளரப் பண்ணி அடியோங்கள் திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தோம். தாம்
வஞ்சகக் கள்வரானபடியினாலே எங்களுக்கு ஒரு மாயா நித்ரையை உண்டாக்கி,
எங்கள் கருவூலம் திறந்து எங்கள் ஸ்த்ரீதனங்களான அம்மானக் பந்து கழஞ்சு
பீதாம்பரங்களையும் கைக்கொண்டு இன்னவிடத்துக்கு எழுந்தருளுகிறோம் என்று
சொல்லாதபடி எழுந்தருளினார். அந்த உத்தர க்ஷணமே அடியோங்கள் அச்சமுடன்
திடுக்கிட்டு எழுந்திருந்து திருப்படுக்கையைப் பார்க்குமிடத்தில்
பெருமாளைக் காணாமையாலே கை நெரித்து வாயடித்து அணுகவிடும் வாசற்காப்பாளரை
அழைத்துக் கேட்கும் அளவில் அவர்கள் வந்து அம்மானை பத்து கழஞ்சு
பீதாம்பரமான ஸ்த்ரீ தனத்தையும் கைக்கொண்டு இன்னவிடத்துக்கு
எழுந்தருளுகிறோம் என்று சொல்லாதபடி எழுந்தருளினார் என்று சொல்ல
வந்தார்கள். அந்த உத்தர க்ஷணமே அந்தரங்க பரிஜனங்களாய் இருக்கிற
திருச்சேவடிமார்களை அழைப்பு விடுத்தோம். அவர்கள் வந்து அடிபிடித்து
அடிமிதித்துக் கொண்டு போனவிடத்தில் உறையூரிலே கொண்டு போய் விட்டது.
அங்கே மச்சினி என்றொருத்திக்கு முறைமை சொல்லி மற்றொருத்தியை மடியைப்
பிடித்ததும், கச்சணி பொன்முலை கண்ணால் அழைத்ததும், கனிவாய் கொடுத்ததும்,
கையில் நகக்குறி மெய்யாக ஆனதும், கார்மேனியெங்கும் பசு மஞ்சல் பூத்ததும்,
கரும்புத் தோட்டத்திலே யானை ஸஞ்சரிக்கிறாப்போலே தேவரீர்
ஸஞ்சரிக்கிறீரென்று நாங்கள் உசிதமாகப் போகவிட்ட தூதியோடி வந்து அங்க
அடையாளம் உள்ளபடி வந்து சொன்னாள். உம்மாலே எமது மனது உலை மெழுகாய்
இருக்கிறது. ஒன்றும் சொல்லாதே போம்போமென்று நாச்சியார் அருளிச் செய்த
ப்ரகாரம்.

இதற்குப் பெருமாளின் பதில் கீழ்க்கண்டவாறு.

ஒருவருக்கொருவர் ஸ்ம்சயப்பட்டால் அந்த ஸாம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும்
தீராமற்போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக் கொள்வார்கள். அந்தப்படி ப்ரமாணம்
பண்ணித் தருகிறோம்! நாம் தேவாதிதேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டித்
தருகிறோம்.! ஸமுத்ரத்திலே முழுகுகிறோம்!. அக்னி ப்ரவேசம் பண்ணுகிறோம்!.
பாம்புக்குடத்திலே கை விடுகிறோம்! மழுவேந்துகிறோம்! நெய்க்குடத்திலே
கையிடுகிறோம்! இப்படிப்பட்ட ப்ரமாணங்களையானாலும் வாங்கிக் கொண்டு நாம்
கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிச் சூட்டிக் கொண்டு நம்மையும் உள்ளே
அழைக்கச் சொல்லிப் பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்.

பெருமாள் சொல்கிறார்!

அடி ரங்கா! என் ரங்கா! நீ என் மேல் சந்தேகப் படலாமா? பதிலுக்கு நானும்
உன் மேல் சந்தேகப்படுவேனா! இப்படி ஒருவருக்கொருவர்
சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தால் என்ன சொன்னாலும் மனம் திருப்தி அடையாது.
ஆகவே நான் ஆணையிட்டுச் சொல்கிறேன். நீ எதன்மேல் ஆணையிடச் சொன்னாலும்
அந்தப்படி ஆணையிடுகிறேனடி ரங்கா! தேவாதி தேவனான நான் இதற்காக தேவதைகளைத்
தாண்டி ஆணையிடுவது உனக்குச் சம்மதம் எனில் அவ்வாறு ஆணையிடுகிறேன்.
அல்லது என்னை சமுத்திரத்திலே முழுகு என்கிறாயா? சரி அம்மா, அப்படியே
முழுகுகிறேன். அது வேண்டாம், அக்னி ப்ரவேசம் பண்ணணுமா? அதுவும்
செய்கிறேன். கொடிய விஷப் பாம்புகளைக் குடத்தில் இட்டு அந்தக் குடத்திலே
கையை விடச் சொன்னாலும் பயமில்லாமல் விடுகிறேனடி. மழுவைக் கையில் ஏந்த
வேண்டுமா? இதோ வெறும் கைகளாலேயே ஏந்துகிறேன். கொதிக்கும்
நெய்க்குடத்தில் கைவிட வேண்டுமா? சொல், செய்கிறேன். என்னுடைய இத்தகைய
ப்ரமாணங்களை வாங்கிக் கொள் ரங்கா. வாங்கிக் கொண்டு நான் உனக்காகக் கொண்டு
வந்திருக்கும் புஷ்பங்களையும் வாங்கிக் கொண்டு என்னையும் உள்ளே
அழைப்பாயாக!

Geetha Sambasivam

unread,
May 11, 2013, 5:34:37 AM5/11/13
to மின்தமிழ்
நாச்சியார் அருளிச் செய்த ப்ராகாரம்:


ஒருவருக்கொருவர் ஸம்சயப்பட்டால் அந்த ஸம்சயம் ஒரு ப்ரகாரத்தாலும் தீராமற்போனால் ப்ரமாணத்தாலே தீர்த்துக்கொள்ளுவார்கள்.  லோகத்திலே ப்ராஹ்மணனுக்கும் ப்ராஹ்மணனுக்கும் வாக்குவாதம் வந்தால் ப்ராஹ்மணன் ப்ராஹ்மணனைத் தாண்டிக் கொடுப்பான்.  தாம் தேவாதி தேவனானபடியினாலே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறோமென்று சொல்ல வந்தாரே!  அந்த தேவதைகள் தம்முடைய திருவடிகளை எப்போ காணப்போகிறோம்! எப்போ காணப்போகிறோம்! என்று சதா பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறவர்களை வலுவிலே தாண்டித் தருகிறோமென்றால் வேண்டாமென்பார்களா?  ஸமுத்ரத்திலே மூழ்குகிறோமென்று சொல்ல வந்தாரே! ப்ரளய காலத்திலே ஸகல லோகங்களையும் திருவயிற்றிலே வைத்து ரக்ஷித்து ஒரு ஆலிலைத் தளிரிலே கண் வளர்ந்த தமக்கு ஸமுத்ரத்திலே முழுகுகிறது அருமையா!  அக்னி ப்ரவேசம் பண்ணுகிறோம் என்று சொல்ல வந்தாரே! ப்ரஹ்மாவுக்காக உத்தரவேதியில் ஆவிர்ப்பவித்த தமக்கு அக்னியில் மூழ்குகிறோம் என்றால் அக்னி சுடுமா?  பாம்புக் குடத்திலே கை இட்டுத்தருகிறோமென்று சொல்ல வந்தாரே!  "சென்றாற்குடையாம், இருந்தாற் சிங்காசனமாம்" என்று ஸதாஸர்வ காலமும் திருவனந்தாழ்வான் மேலே திருக்கண் வளர்ந்திருக்கிற தமக்குப்பாம்புக் குடத்திலே கைவிட்டால் பாம்பு கடிக்குமா?  மழுவேந்துகிறோம் என்று சொல்ல வந்தாரே!  கோடி ஸூர்யப்ரகாசமான திருவாழியாழ்வானை ஸதா திருக்கையிலே தரித்துக் கொண்டிருக்கிற தமக்கு அப்ரயோஜகமான இரும்பு மழுவேந்துகிறது அருமையா?  நெய்க்குடத்திலே கையிடுகிறோமென்று சொல்ல வந்தாரே! க்ருஷ்ணாவதாரத்திலே பஞ்ச லக்ஷம் குடியிலுள்ள நெய்யுண்ட தமக்கு நெய்க்குடத்தில் கையிடுவது அருமையா?  இப்படிப் பட்டிருக்கிற பரிஹாஸ ப்ரமாணங்களையெல்லாம் தமக்குச் சரிப்போன இடத்திலே தானே பண்ணிக் கொண்டு இன்றைக்கும் அங்கேதானே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.


நாச்சியார் சொல்கிறாள்:

ஒருத்தர் மேல் ஒருத்தர் சந்தேகப்பட்டால் அந்த சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ப்ரமாணங்கள், சத்தியங்கள் ஆகியவற்றால் தீர்த்துக் கொள்ளத் தான்செய்வார்கள்.  மேலும் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் அல்லவா?  ஒரு பிராம்மணன் இன்னொரு பிராம்மணன் மேலே சந்தேகப்பட்டால் ப்ராம்மணனைத் தாண்டிச் சத்தியம் செய்து கொடுப்பான். ஆனால் தாமோ தேவாதி தேவனல்லவா? ஆகவே தேவதைகளைத் தாண்டிக் கொடுக்கிறதாய்ச் சொன்னீரோ!  அந்த தேவதைகளோ எப்போது உம்முடைய திருவடி தரிசனம் கிடைக்கும் எனக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  அவர்கள்  நோக்கமே உமது திருவடி தரிசனத்தைக் காண்பது தான். அவர்களிடத்திலே நீர் போய் வலுவிலே உங்களை எல்லாம் தாண்டிக் கொடுக்கிறேன் என்று சொன்னால் வேண்டாமென்பார்களா?  ஆஹா,அப்படியானும் நமக்குத் திருவடி தரிசனம் கிடைக்கலாச்சு என ஆனந்தம் தான் அடைவார்கள்.

ஐயா, உம்முடைய கள்ளத் தனம் எனக்குத் தெரியாததா?  சமுத்திரத்திலா மூழ்குகிறீர்?  சமுத்திரத்தில்?? ஆஹா, நன்றாக மூழ்குமேன்!  ஏன் ஐயா,இந்த ஸமுத்திரத்திலே தானே தாங்கள் ப்ரளய காலத்திலே சகல லோகங்களையும் தம்முடைய திருவயிற்றிலே வைத்து ரக்ஷிக்கின்றீர்?  அதுவும் ஒரு ஆலிலைத் தளிரிலே கண் வளர்ந்த வண்ணம் சகல லோகங்களையும் தாங்கிக் கொண்டு  சமுத்திரத்திலே மிதக்கும் தமக்கு சமுத்திரம் ஒரு அருமையா?  அதில் மூழ்குவது தான் அருமையா!  நல்ல வேடிக்கைதான் ஐயா! அடுத்து என்ன சொன்னீர்?? அக்னி ப்ரவேசமா?  ஆஹா, தங்களால் இயலாததா அதுவும்! யாரிடம் ஐயா சொல்கிறீர்?  உத்தரவேதியில் பிரம்மன் யாகம் செய்கையில் அவனிடம் கோபம் கொண்ட சரஸ்வதி இவ்வுலகையே இருட்டாக்கினாளே.  அப்போது விளக்காக ஒளிர்ந்தது யார்?  நீரன்றோ!  உமக்கு அக்னியில் ப்ரவேசம் பண்ணுவது கஷ்டமானதா? அக்னி உமக்குச் சுடுமா?  அடுத்து என்ன சொல்கிறீர்? பாம்புக் குடத்திலே கைவிட்டுத் தருகிறீரா? இதை விட நகைச்சுவையான விஷயம் வேறில்லை ஐயா!  நீர் சென்றால் குடை பிடிப்பது அனந்தாழ்வான்!  படுத்தால் படுக்கையாவது அனந்தாழ்வான்!  இருந்தால் சிம்மாசனம் ஆவதும் அனந்தாழ்வான்!  நீர் பாம்புக் குடத்தில் கை விடுகிறீரா?  உம்மை எந்தப் பாம்பு என்ன செய்ய முடியும்?

அடுத்து மழுவேந்துகிறீரா?  ஆஹா, நன்றாக ஏந்துங்கள்.  ஆனால் உம் கைகளில் எப்போதும் நீர் ஏந்தி இருக்கும் திரு ஆழி ஆழ்வான் என்னும் சக்கரத்தாழ்வானின் கோடி சூர்யப் ப்ரகாசத்திற்கு முன்னால் அந்த மழுவால் நிற்க முடியுமா என யோசியும்!  திருவாழியாழ்வானையே ஏந்தியுள்ள தமக்கு மழுவேந்துகிறது பெரிய விஷயமா?  நெய்க்குடத்திலே கை விடுகிறீரா?  ஐயா, நீர் கிருஷ்ணாவதாரம் செய்த போது கோகுலத்தில் பஞ்ச லக்ஷம் குடியிலுள்ள அனைவரின் வீட்டிலிருந்தும் நெய்யுண்ட தமக்கு நெய்க்குடத்தில் கைவிடுவது ஒன்றும் புதிதல்லவே!  இப்படி எல்லாம் என்னைப் பார்த்துக் கேலி செய்யும்படியான ப்ரமாணங்களைச் செய்யாதீர்.  உமக்கு எந்த இடத்தில் இருந்தால் சரியாக இருக்குமோ அங்கேயே போய் இரும்!  இன்றைக்கும் நேற்றைக்கு எழுந்தருளினவிடத்திலே தானே போய் எழுந்தருளிக்கொள்ளும். இங்கே வர வேண்டாம்."

நாச்சியார் மீண்டும் கதவடைக்கிறாள்.  மலர்மாலைகள், பூச்செண்டுகள், பழங்கள் வீசி எறியப்பட்டு பெருமாளின் பல்லக்கு வேகமாகப்பின் வாங்குகிறது.  பெருமாள் நிஜம்ம்மாவே பயந்துட்டார் போல! :)


ஆச்சு இன்னும் ஓரிரு பதிவிலே மட்டையடி முடிஞ்சுடும், அடுத்து சித்திரைத் தேர் குறித்த ஒரு சின்ன குறிப்புக்கு அப்புறம் மீண்டும் வரலாற்றைத் தொடரலாம்.  அதுக்குள்ளே அடுத்த திருநாள் வந்துடும். :))))



Innamburan S.Soundararajan

unread,
May 11, 2013, 6:27:16 AM5/11/13
to thamiz...@googlegroups.com, மின்தமிழ்
'...அடுத்து என்ன சொல்கிறீர்? பாம்புக் குடத்திலே கைவிட்டுத் தருகிறீரா? இதை விட நகைச்சுவையான விஷயம் வேறில்லை ...'
~ பாயிண்ட் மேட்

இன்னம்பூரான்

Geetha Sambasivam

unread,
May 14, 2013, 4:48:24 AM5/14/13
to மின்தமிழ்
உறையூரா?? அது எங்கே இருக்கு?  பெருமாள் கேட்கிறார். :)))

பெருமாள் அருளிச் செய்த ப்ரகாரம்

நாம் உத்ஸ்வார்த்தமாகப் புறப்பட்டருளி, திருவீதிகள் எல்லாம் வலம் வந்து, தேவதைகள் புஷ்ப வர்ஷம் வர்ஷிக்க, ப்ராஹ்மணர்கள் எல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண, இப்படிப் பெரிய மநோரதத்தோடே தங்களிடத்தில் வந்தால் தாங்கள் எப்போதும் போல ஆதரியாமற்படிக்கு அபராதங்களைப் பண்ணினோமென்கிறீர்கள்; நாமானால் உறையூரைக் கண்ணாலே கண்டதுமில்லை;  காதாலே கேட்டதும் இல்லை என்று சொன்னோம்.  அத்தை அப்ரமாணமாக நினைத்தீர்கள்.  ஆனால் ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்று சொன்னோம்.  அத்தைப் பரிஹாசப் ப்ரமாணமென்று சொன்னீர்கள்.  இப்படி நாம் எத்தனை சொன்னபோதிலும் அத்தனையும் அந்யதாவாகக் கொண்டு, சற்றும் திருவுள்ளத்தில் இரக்கம் வராமல் கோபத்தாலே திருவுள்ளங்க் கலங்கித் திருமுக மண்டலங் கறுத்துத் திருக்கண்கள் சிவந்து இப்படி எழுந்தருளி இருந்தால் நமக்கென்ன கதி இருக்கிறது?  அழகிய மணவாளப் பெருமாள் ஸ்ரீ ரங்க நாச்சியார் சந்நிதி வாசலிலே தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறாரென்கிற அவமானம் உங்களுக்கேயொழிய நமக்குத் தேவையில்லை.  ஆனபடியினாலே நாம் கொடுத்த புஷ்பத்தையும் வாங்கிக் கொண்டு நம்மையும் உள்ளேயழைக்கச் சொல்லிப் பெருமாளருளிச் செய்த ப்ராகாரம்.

"அடி ரங்கா, இது என்ன? இவ்வளவு கோபமாக இருக்கின்றாயே?  நான் உற்சவத்திற்காகவன்றோ கிளம்பிப் போனேன்.  இங்கே திருவீதிகளில் வலம் வந்தேன்.  தேவதைகள் புஷ்பங்களை வர்ஷித்தனர்.  என்னைக் கண்டதும் ப்ராஹ்மணர்கள் எல்லோரும் ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.  அவற்றை எல்லாம் கண்டு மகிழ்ந்து போய் உன்னை நேரில் கண்டு இவை எல்லாவற்றையும் குறித்துச் சொல்ல வேண்டும் என்ற பெரிய மனோரதத்துடனே உன்னைக் காண வந்தேன்.  எவ்வளவு ஆவலுடன் வந்தேன் தெரியுமா?  ஆனால் நீயோ என்னை உள்ளே அழைக்காமல், எப்போதும் போல் என்னை அழைத்து உன் சேவார்த்திகளைச் செய்து மகிழாமல், நான் ஏதோ தவறுகள் செய்துவிட்டேன் என்கின்றாயே!  இது நியாயமா?  அடி, ரங்கா, உறையூரா?  அது எங்கே இருக்கிறது?  நான் அந்த ஊரைக் கண்ணாலே கண்டதுமில்லை. அந்தப் பெயரைக் காதாலே கேட்டதுமில்லை."

ஆனால் நான் சொன்னதை நீ எங்கே நம்பினாய்?? சத்தியம் இல்லை என நினைக்கிறாய். நினைத்தாய்! சரி, சத்தியம் செய்து தருகிறேன் என்று சொன்னால் அதைப் பரிஹாசம் என்கிறாயடி. இப்படி நான் எத்தனை சமாதானம் சொன்னாலும் காதில் கேட்டுக் கொள்ளாமல் உன் மனமும் இரங்காமல், இத்தனை கோபம் ஏதுக்கடி ரங்கா?  கோபத்தாலே உன் திருவுள்ளம் மட்டுமா கலங்கி உள்ளது? உன் அழகான திருமுகம் எவ்வளவு கறுத்துவிட்டது தெரியுமா?  அழகிய நீலோத்பலத்தை ஒத்த உன் திருக்கண்கள் செவ்வரியோடு சிவந்து காணப்படுகின்றதே. இப்படி நீயும் கோவித்துக் கொண்டாயானால் நான் யாரிடம் போவேன்?  அடி ரங்கா?  எனக்கு வேறு கதியும் உண்டோ? சரி, சரி, நீ இருக்கிறபடி இருந்து கொள்ளடி ரங்கா! அழகிய மணவாளன் என்ற பெயர் பெற்ற நான் இங்கே ஶ்ரீரங்க நாச்சியார் சந்நிதி வாசலிலே உள்ளே அழைக்கப்படாமல், வெளியே தள்ளப்பட்டுக்கொண்டிருந்தால் அதனால் எனக்கு ஒன்றுமில்லை.  அந்த அவமானம் உனக்குத் தான். எனக்கு என்ன வந்தது? அடி ரங்கா ஆனாலும் என் மனம் கேட்கவில்லையே! இதோ, இந்தப் புஷ்பங்களை வாங்கிக் கொள், சற்றே நகர்ந்து கொள், என்னை உள்ளே அழைப்பாய்!"

இப்போது யாரோ போற்றிப் பாடும் குரல் கேட்கிறது.  ரங்கநாயகி உற்றுக் கேட்கிறாள்/  யாரது பாடுவது?  ஓ, சடகோபன் என்னும் நம்மாழ்வானா? என்ன பாடுகிறான்??



Geetha Sambasivam

unread,
May 20, 2013, 4:28:44 AM5/20/13
to மின்தமிழ்

மட்டையடித் திருவிழாவில் நம்மாழ்வாரின் எந்தப் பாசுரத்தைப் பாடுவாங்கனு தெரியலை.  யாரையானும் கேட்கணும்.  இன்னும் யாரும் வசமா மாட்டிக்கலை. :))) இரண்டு நாட்கள் முன்னர் கோயிலுக்குப் போனப்போ நம்பெருமாளைப் பார்த்தேன்.  ஊர்சுத்தப் போகாமல் மூல'ஸ்தானத்திலேயே உபய நாச்சியார்களுடன் வீற்றிருந்ததோடு நின்று முழுசாய் ஒரு நிமிடம் பார்க்கவும் முடிந்தது.  போங்க, போங்கனு விரட்டலை. பட்டாசாரியார் யாரோ ஷிஃப்ட் மாறும் வேளை போல!  அதில் கவனமாய் இருந்தாங்க. 


கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்
இருநிலம் கைதுழாவிருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்
இவள்திறத்து என் செய்கின்றாயே


என் செய்கின்றாய் என் தாமரைக்கண்ணா
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என்செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்
என்னும் வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா தகுவதோ என்னும்
முன்செய்திவ்வுலகம் உண்டுமிழ்ந்தளந்தாய்
என்கொலோ முடிகின்றது இவட்கே   

நாச்சியார் காது கொடுத்துக் கேட்டுவிட்டு மனம் மகிழ்கிறாள்.  உடன் பெருமாளைப் பார்த்துச் சொல்கிறாள்.

"தாம் வருஷாவருஷம் அடமாயெழுந்தருளி தமக்குச் சரிப்போனபடி நடந்து போட்டுப் பின்னும் இங்கே வந்து நாமொன்றும் அறியோமென்றும், ப்ரமாணம் பண்ணித் தருகிறோமென்றும் பரிஹாசங்களைப் பண்ணி, இப்படிப்பட்டிருக்கிற அக்ருத்யங்களைப் பண்ணிக் கொண்டு வருகிறீர்.  நாமானால் பொறுக்கிறதில்லை.  நம்முடைய ஐயா நம்மாழ்வார் வந்து மங்களமாகச் சொன்ன வாய்மொழியாலே பொறுத்தோம். உள்ளே எழுந்தருளச் சொல்லி நாச்சியார் அருளிச் செய்த ப்ரகாரம்.

"ஐயா, நீர் ஒவ்வொரு வருடமும் இவ்வாறே அடம் பண்ணிக் கொண்டு வருகிறீர்.  உமக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதைத் தான் செய்து வருகிறீர்.  இப்படி எல்லாம் நடந்த பின்னர் இங்கே வந்து எனக்கு எதுவுமே தெரியாது என அப்பாவி போல் வேஷம் போடுகிறீர்.  அதற்காகப் பொய்யாய்ப் பல சத்தியங்களைப் பண்ணுகிறோமென்று சொல்கிறீர்/  என்னைப் பரிஹாசம் பண்ணுகிறீர்.  நீர் செய்வது அனைத்தும் அக்கிரமங்கள்.  எனக்குப் பொறுக்கவே இல்லையே!  ஆனாலும் அதோ, நம் நம்மாழ்வான் இப்போது இங்கே வந்து மங்களமாய்ச் சில வார்த்தைகளைச் சொல்லுகிறான்.  அவனெதிரில் நம் சண்டையைப் போட்டுக் கொள்ள வேண்டாம்.  அவனுக்காக நாம் உம்மைப் பொறுத்தோம்.  உள்ளே எழுந்தருளிக்கொள்ளும்!"

ப்ரணய கலஹம் முடிந்து நம்பெருமாள் ரங்கநாயகியோடு ஒரே சிம்ஹாசனத்தில் எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிக்கிறார். 


Inline image 1

வாழித்திருநாமங்கள்

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடத் தாய்மகனார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கு மீமையவர் கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலையெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியா மித்துவமு மாயினான் வாழியே
பெருகி வரும் பொன்னி நடுப்பின் துயின்றான் வாழியே
பெரியபெருமாளெங்கள் பிரானடிகள் வாழியே


பெரிய பிராட்டியார்

பங்கயப்பூ விற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழிற்சேனை மன்னர்க்கிதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ் சுட்பொருள் மாலியம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே!

படங்கள் உதவி: கூகிளார்
ரங்கா.jpg

Geetha Sambasivam

unread,
Aug 10, 2013, 9:33:59 AM8/10/13
to மின்தமிழ்

அரங்கனின் தேரோட்டம்!

அரங்கனை ஊர் சுத்த விட்டுட்டு அப்புறமாத் தொடர முடியாதபடிக்கு வைகுண்ட ஏகாதசித் திருநாள், அடுத்து தெப்பம், மட்டையடித்திருவிழா, சித்திரைத் திருவிழா என முக்கியமான நாட்களைக் குறித்து எழுதும்படி ஆகிவிட்டது.  இதுவே சித்திரைத் திருவிழாவுக்கு ரொம்ப தாமதமாகப் பதிவு போடறேன். இதுக்கப்புறமா ஆனி கேட்டையில் ஜேஷ்டாபிஷேஹம், பவித்ராபிஷேஹம் எல்லாம் ஆகி, பெருமாளுக்குக் காப்பு நீக்கித் திருவடி தரிசனம் ஆரம்பிச்சு ஆடிப்பெருக்கும் கொண்டாடிட்டார்.  அரங்கனைக் கூடிய சீக்கிரம் தொடர்ந்து செல்வோம். அதான் துளசி தளங்களை வழி கண்டுபிடிக்கப்போட்டுட்டுப் போறாங்க இல்ல, அதனால் ஒண்ணும் பிரச்னை இல்லை. இப்போ சித்திரைத் திருவிழாவை ஒரு அவசரப் பார்வை பார்த்துடுவோம்.


மட்டையடித் திருவிழாவுக்குப் பின்னர் பெரிய திருவிழா என்பது ஶ்ரீரங்கத்தில் சித்திரைத் திருவிழா.  பனிரண்டு மாசங்களும் அரங்கன் திருவிழாக் கண்டாலும் இந்த முக்கியமான திருவிழாக்களில் தேரோட்டமும் உண்டு. இதை விருப்பன் திருநாள் என்றும் அழைக்கின்றனர். நம்ம ஊர் சுத்தி நம்பெருமாள் ஊரெல்லாம் சுத்திட்டுத் திரும்ப அரங்கம் வந்தப்போ கோயில் பாழடைந்து கிடந்தது.  கர்பகிரஹமும் மற்ற மண்டபங்களும் பாழாகக் கிடந்ததைக் கண்ட விஜயநகரப் பேரரசின் சங்கமகுல மன்னன் இரண்டாம் ஹரிஹரனின் புதல்வன் விருப்பன்ன உடையார் துலாபாரம் ஏறினார்.  இது நடந்தது கிட்டத்தட்ட கி.பி. 1377 ஆம் ஆண்டில் என்கின்றனர். துலாபாரம் ஏறிக் கிடைத்த பதினேழாயிரம் பொற்காசுகளைக் கொண்டு கோயில் மண்டபங்கள் சீரமைக்கப்பட்டன.  பின்னர் அறுபது ஆண்டுகள் வெளியே  இருந்த அரங்கனுக்கு உற்சவம் கண்டருள வேண்டும் எனவிருப்பன்ன உடையார் நினைத்தார்.  ஆகவே 1383 ஆம் ஆண்டில் உற்சவம் கண்டருளினார் நம்பெருமாள். இது பல்லாண்டுகளுக்குப் பின்னர் ஶ்ரீரங்கத்தில் நடந்தது என்பதால் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் மிகவும் விருப்பத்தோடு இந்த விழாவில் கலந்து கொண்டனர்.  இதைச் சித்திரை பிரம்மோத்சவம் என்றே சொல்கின்றனர். 

இந்தத் திருவிழாவில் அரங்கன் தேரில் வீதிவலம் வருவது முக்கிய நிகழ்ச்சியாகும். இந்தத் திருவிழாவை எடுப்பித்த விருப்பன்ன உடையார் அரங்கனுக்கு அருகில் உள்ள அழகிய மணவாளம் என்னும் ஊரைத் தானமாகச் சாசனம் செய்து கொடுத்தார்.  அரங்கன் ஊர் திரும்பும் முன்னர் சில நாட்கள் அந்த கிராமத்தில் தங்கி இருந்தார் என்பதாலும் ஊர் மக்கள் மிக மகிழ்வோடு கிராமத்தை நம்பெருமாளுக்கு சாசனமாக எழுதிக் கொடுக்கச் சம்மதித்தனர். தினந்தோறும் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் வீதிவலம் வந்தருளுவார்.  ஶ்ரீரங்கம் ரங்கராஜன் அனைத்துக் கோயில்களின் அரசர் என்பதால் குதிரை வாகனம் ஏறிபவனி வருவதைப் பல்வேறு புலவர்கள் வாழ்த்திப் பாடியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.  கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் அரங்கன் மக்களை நலம் விசாரித்துச் செல்கிறாராம்.  அதோடு தேரையும் பார்வை இடுவாராம்.  இவை யாவுமே ஒரு மாபெரும் அரசன் அரச வீதி உலாவருவது போலவே இருக்கும் என்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நம்பெருமாள் பின்னர் நான்முகன் கோபுர வாயிலில் வந்து அமுது படைக்கப்படுவார்.  பின்னர் விஜயநகர அரசனான சொக்கநாத நாயக்கனால் நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் நம்பெருமாளுக்கு திருஷ்டி கழிக்கப்படும்  பின்னர் வாகன மண்டபத்தில் படி களைந்து நம்பெருமாள் முன்னர் கார்த்திகை கோபுர வாசலில் திவ்யப்ரபந்தங்கள் சாற்றுமுறை ஆகும்.  நம்மாழ்வார் சந்நிதியிலும் இயற்பா சாற்றுமுறை ஆகும்.  பின்னர் நம்பெருமாள் ரக்ஷாபந்தனம் செய்து கொள்வார்.  அதன் பின்னர் இந்தச் சித்திரைத் திருவிழா முடிந்து தீர்த்தவாரி நடைபெறும் வரையிலும் நம்பெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளுவார்.  அவர்  திருமேனியில் வெயில்படாவண்ணம் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள்.  அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.  விருப்பன் திருநாள் ஏழாம் திருநாளன்று அரங்கன் நெல் அளவை கண்டருளுவார்.  அன்று கோயில் முறைகாரர் நெல் அளப்பார்.  தங்க மரக்காலால் திருவரங்கம் ஒன்று, பெரிய கோயில் இரண்டு எனக் கணக்குப் பண்ணி நெல் அளக்கப்படும்.  நெல் அளவையைச் சரிபார்த்துக் கொள்வார் நம்பெருமாள்.

தேர் அன்றோ அக்கம்பக்கத்துப் பாமர மக்கள் தங்கள் தங்கள் வயல்களில் விளைந்தவற்றையும் பசுமாடுகள், கன்றுகள் என நம்பெருமாளுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிப்பார்கள்.  வெளி ஊர்களில் இருந்தெல்லாம் வண்டி கட்டிக் கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்தத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திருவிழா ஶ்ரீரங்கத்தில் நடந்து வருகிறது.  இந்தச் சமயம் அரங்கனுக்காகச் சிறப்பானதொரு பாத ரக்ஷை தைக்கப்படும் என்றும் அதன் வலக்கால் அளவிற்கு ஒரு குடும்பமும், இடக்கால் அளவிற்கு இன்னொரு குடும்பமும் தைத்துத் தனித்தனியாக எடுத்து வருவார்கள் எனவும், அரங்கனின் எந்தவிதமான அளவுமே இல்லாமல் அவர்கள் தைப்பது சரியாகப்பொருந்தும் எனவும், எந்தக் குடும்பம் எந்தக் காலுக்குத் தயார் செய்கிறது என்ற விபரம் எவருக்குமே தெரியாது என்றும் சொல்கின்றனர்.  இது குறித்து மேலும் விபரங்கள் திரட்டுகிறேன்.

முதல் இரண்டு படங்கள் எங்கிருந்து சுட்டேன் எனச் சொல்ல வேண்டாம் என எண்ணுகிறேன். :))) தெரியாதவங்களுக்கு வெங்கட் நாகராஜின் வலைப்பக்கத்தில் இருந்து சுட்டேன்.

கடைசிப்படம் தினமலர்.காம்.


Reply all
Reply to author
Forward
0 new messages