கல்லாடைதுவராடை

143 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Aug 22, 2012, 3:31:51 PM8/22/12
to thami...@googlegroups.com

             தமிழ் மொழி பண்பாடுகள் பற்றி ஆயும் இந்த  இணைய மடலாடலில் வந்த
                 கண்ட 'கல்லாடை' பற்றிய கருத்திற்காக எழுந்தது இச்சிறு கருத்துரை
                                <><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

                                                             (1)

                                கல்லாடம் - கல்லாடை - துவராடை
                                   <><><><><><><><><><><><><><>
                                            நூ த லோகசுந்தர முதலி மயிலை
                                  <><><><><><><><><><><><><><>

 கல்லாடையும் துவராடையும் ஒரே பொருளைத் தரும் இருசொற்களாகும்.  கல் / துவர் எனும் இரு சொற்களும்
 சிவந்த நிறத்தைக் காட்டும்.
 
 தமிழகத்தும், (ஏனைய இடத்தும்) குன்றுகளில் மலைகளில் (*) காற்று மழை பனி வெப்பம் எனும் இயற்கையால்
உருண்டு திரண்ட கற்கள், பெரும்பாலும்,உடைபடாது வெளிப்புறமாக உள்ள பரப்பினில், சற்றே பழுத்த சிவந்த
சந்தன நிறமுடைய, அடுக்கல்களாகவும், பாறைகளாகவும் அறைகளாகவும் காணப் படுதலால் 'கல்' எனும் சொல்
பண்பாகுபெயராக அவ்வித செந்நிறத்தையும் காட்ட நின்றது.

                 "கோத்த கல்லாடையும் கோவணமும்" (2.103.2)
                 "கல்லாடை மேற்கொண்ட காபாலி காண்"(6.8.6)
                 "கல்லாடை புனைந்த காபாலி காண்" (6.92.2)

 என கல்லாடை எனும் சிவந்த நிற ஆடை புனைந்தவராக சிவபெருமான் தேவாரத்தில் போற்றப்படுகிறார்.

 இந்துசமயம் எனும் போர்வைக்குள் அடங்கும் பற்பல நெறிகளைச் சார்ந்த துறவிகளும் பௌத்த மதத்தில்
தோய்ந்து துறந்தோரும் சுற்றும் ஆடை அல்லது உடுத்தும் குப்பாயம் தனித்ததொரு செந்நிறம் உடையதாய்
இருப்பதை நாம் அறிவோம்.  'கல்' எனும் சொல் சிவந்த நிறத்தினுக்கு ஆளப்படுவதை 'கல்லால மரம்' எனும்
சொல்லிலும் காணலாம். ஆலமரம் தன் பழம் வழி, (இவ்வாடைகளை விட சற்றே மாறுபட்ட சிவந்த நிறம்
இருந்தாலும்) 'சிவந்தநிற பழம்காய்க்கும்' என இருமடி ஆகுபெயராக விளி பெற்றது.

                    "கல்லாலின் கீழிருந்த காபாலி காண்"      %(6.8.8)%
                    "கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும்"   (6.18.3)
                     "கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானை" (6.20.8)

 எனவரும் தோவாரப் பாடல் வரிகள் சிவபெருமான் ஞானகுருவாக ஆலமரத்தின் கீழ் இருந்து 4 முனிகளுக்கு
அறம் சொன்னதாக புராணங்கள் விவரிக்கும். 'கல்லால்' என்பதில் சிவந்த பழங்கள் ஈனும் ஆலமரம் என விதந்த
விளியாகின்றது.

               [[ ஆல் எனும் சொல் நீரினைக் குறிக்கும். ஆலங்கட்டிமழை, ஆலவட்டம் (காற்றில்
              உள்ள நீர்த் திவலைகளால் ஞாயிற்றை, திங்களை சுற்றித் சிலநேரங்களில் தோன்றும் ஒளி
             வட்டம்) எனவும் நீர் நிலைகளை அணித்து அமைந்த ஊர்கள், ஆலப்பாக்கம், ஆலந்துறை,
             ஆலந்தூர் எனவும் நீர்வழி பெயர் பெறுவதைக் காணலாம். ஓர் பழங்கட்டுரையில் அறிஞர்
             மயிலை சீனிவேங்கடசாமி என்பார் தென்சென்னையில் இப்போது தியாகராய நகர் எனும்
             பெயர் தாங்கி மிளிரும் இடம் 1920-30 களில் 'மயிலாபூர்ஏரி' என பெரியஏரியாக இருந்தது
            அதன் உயர்ந்த கரையில் ஓர் அம்மன் கோயில் எழுந்ததற்கு 'ஆல்அமர்ந்தாள்' என பெயர்
            அமைந்தமையைக் காட்டினார். அக்கோயில் ஆலமரத்தின் கீழ் அமையாமல் ஏரிக்கரையின்        
            (நீர்) மேல்அமைந்தது. இன்றும் அக்கோயில் பழைய துண்டான கரை மேலேயே உள்ளது.

             ஆலமரமோ அரசமர அத்திமர வகையினது ஆயினும் அரசமரம் போல் கற்களையோ
            வேறு மரம் போன்று பற்றுக்கோல்களைக் சார்ந்து வளராது. நீர் எப்போதும் தேங்கி நின்று
            சதுப்பு நிலமாக இளகிய மண்வாகு காணும் இடங்களிலும் வளரக்கூடியது. உயரும் சமயம்
            பரிணாம வளர்ச்சியால் காற்றில் விழாமலிருக்க, பிடிப்பிற்கு போதிய திண்மை இருக்காது
            என்பதால் அங்கங்கே விழுதுகளை தாழ்த்தி, கிடையாக வளர்ந்து மண்ணைப்பற்றி வளரும்.
            எப்போதும் 'ஆல்' இடையேயே சூழ்ந்து வளரக்கூடிய மரம் அச்சொல்லாலேயே ஆகுபெயராக
            'ஆல்' என பெயர்பெற்றது. இதே வகையைச் சார்ந்த (சிதம்பரம் அடுத்த) காயல்களில் உள்ள

            'தில்லை' மரங்களுக்கும் தாழை இனத்தில் உள்ளது போல் பரிணாம் வளர்ச்சியில் பெருத்த
            அடிப்பாகத்தின் மேற்பகுதியிலிருந்தே பற்பல வேர்போன்ற சிறுத்ததண்டுகள் முட்டுக்கொடுத்து
            தாங்கி நிற்க வளர்ந்துள்ளமை காணலாம் ]]

 மேலும், 'துவர்' எனும் சொல்லும் 'சிவந்த' எனும் பொருளில வருவதை நாம் நன்கு
அறிவோம். மகளிரின் இதழ் 'துவர்' நிறமாகக் காட்டுவது இலக்கியங்களின் மரபு.

               "நடம் தாங்கிய நடையார் நல்பவளத் துவர்வாய் மேல்
               விடம்தாங்கிய கண்ணார் பயில்"                 (1.9.3) /மகளிர் இதழ்=பவழம்போன்ற செந்நிறம்/
               "உடுக்கை பல துவர்க்கூறைகள் உடம்பிட்டு உழல் வாரும்"
                                                                                               (1.17.10)/பௌத்த துறவிகளின் ஆடை/
               "படம் தாங்(கு) அரவல்குல் பவளத் துவர்வாய் மேல்
                                                                                               (1.82.9)/மகளிர் இதழ்=பவழம்போன்ற செந்நிறம்/
               "துவர்தரு வல்ஆடையினாரும்"                     (3.43.9)/பௌத்த துறவிகளின் ஆடை/
 
 (#) துவரை-'துவரம்'பருப்பில்' காணும் 'அரக்கு' போன்ற சிவந்த நிறம் சிறிதே கருத்ததாகக் காணும்.
எவ்வாறாயினும் 'துவர்' 'கல்' எனும் சொற்கள் ஏறக்குறைய செம்மண் நிலம் போல் பரந்து பொதுவாக
பல்வித சிவந்த நிறத்தைக் குறிக்க எழுந்ததை அறியலாம்.  அதான்று, 'செவ்வாய்' எனும் கோளின்
செந்நிறமும் 'செம்ம ஞ் சேரி' எனும் இடப்பெயரில் வரும் செவ்வண்ணமும் 'செக்கர்வான்' என்பதி
லுள்ள சிவப்பும் 'சே'வல் (புள்-கோழி) 'செந்நாயி' லுள்ள செம்மையும் "கொவ்வைச் செவ்வாயில்"
(கோவைக்காய்) 'செந்தாமரை'யில் 'செவ்வான் மதி'யில் 'தொண்டைச் செவ்வாய்' (தொண்டை- ஓர்
பயிரினம்), தத்தையின் செவ்வாய் குமுதச் செவ்வாய் முதலிய வற்றில் உள்ள செம்மையும் (நிறம்)
தம்தம் இடை சிறிது சிறிது வேறுபாடு மட்டும் உடையதே அன்றி மாறுபாடு உடையவை அல்ல.
 
.............................    (கருத்துரை மேலும் தொடரும்)
             >< >< >< >< >< >< >< >< >< >< >< >< >< >< >< >< >< >< >< >< >< >< >< >< ><
            %% = (...) என பிறைஅடைப்புக் குறிகளுள் வருவன  சைவத்திருமுறை-பதிக-பாடல்எண்கள். 
        (*) =    தஞ்சை பெரிய கோயிலி ன் கற்களும் (குற்றாலம் செங்கோட்டை)  டில்லி செங்கோட்டையின்
                      கற்களும் சிவந்து காணப் படுதல் கண்டு உணரலாம் . மேலும் இதற்கு நூற்றுக் கணக்கான
                      எடுத்துக்காட்டுகள் காட்டலாம்
          (#)    துவரங்குறிச்சி, எனும் பெயரில் குறைந்தது 3 ஊர்கள் இவ்வூர்களில் மண் சிவப்பு
2012-07-01 12.33.57.jpg
2012-07-01 12.48.13.jpg

நா. கணேசன்

unread,
Sep 2, 2012, 1:27:41 AM9/2/12
to thami...@googlegroups.com


On Wednesday, August 22, 2012 12:31:51 PM UTC-7, selvi...@gmail.com wrote:

             தமிழ் மொழி பண்பாடுகள் பற்றி ஆயும் இந்த  இணைய மடலாடலில் வந்த
                 கண்ட 'கல்லாடை' பற்றிய கருத்திற்காக எழுந்தது இச்சிறு கருத்துரை
                                <><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

                                                             (1)

                                கல்லாடம் - கல்லாடை - துவராடை
                                   <><><><><><><><><><><><><><>
                                            நூ த லோகசுந்தர முதலி மயிலை
                                  <><><><><><><><><><><><><><>

 கல்லாடையும் துவராடையும் ஒரே பொருளைத் தரும் இருசொற்களாகும்.  கல் / துவர் எனும் இரு சொற்களும்
 சிவந்த நிறத்தைக் காட்டும்.


தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தில் இருப்பவர். இங்கு கல் என்பது குன்று, மலை.
சங்க இலக்கியத்தில் பெருங்கல் = இமய மலை.
கல்லால மரம் (கல்லத்தி) ஆங்கிலத்தில் Hill Banyan எனப்படுகிறது.
தாவரவியல் பெயர்: Ficus Tomentosa
http://zipcodezoo.com/Plants/F/Ficus_tomentosa/
http://plants.jstor.org/flora/fwta3534
http://www.scribd.com/doc/92264885/Tamil-Names-to-Botanical-Names

கல்லால மரம் ஆங்கிலத்தில் ’ஹில் பன்யன்’ என்ற பெயருடன்
விளங்குவது சிறப்பு.

கல்லாடை - இங்கே (ochre) stone எனப்படுவதால் கல் பயன்படுகிறது.

யால்/ஆல் - மரப்பெயர் விழுதினால் ஏற்படுவதென்று கருதுகின்றனர்,
விழுதுகள் ஆல மரங்களுக்கே உள்ள சிறப்பு.
தண்ணீர்க் கரையில் மாத்திரம் ஆல மரம் இருப்பதில்லை. நடு ஊர்களிலும்
உள்ளது. மேலும் ஆல் = தண்ணீரால் ஏற்படும் பெயர் என்றால்
தண்ணீர்க்கரைகளில் எத்தனையோ மரங்கள் உள்ளனவே. அவற்றுக்கு
ஏன் ஆல் என்ற பெயர் இல்லை என்பதும் பார்ப்போம்.
ஆலம் விழுது வடம் போல் உள்ளது. எனவே, ஆல்/யால் வடமொழியில்
வட விருட்சம் என்கிறார்கள். தென் திசைக்கு தென்னை, வட திசைக்கு
ஆல்/வட மரங்கள் விசேடம்.

நா. கணேசன்
 

N D Logasundaram

unread,
Sep 2, 2012, 10:12:40 AM9/2/12
to thami...@googlegroups.com
அன்புமிகு கணேசன் அவர்களுக்கு,
 
எப்போதும்  ஆல் (நீர்) சூழ்ந்த இடத்தில் நிலவாகு இளகியதாக இருக்கும்போது தாங்கி பிடிக்க
மேலும் சிறப்பான அமைப்பு தேவைப் படுதலால் பரிணாம வளர்ச்சியில் விழுது தோன்றிற்று
என்பதை நான்காட்டினேன் தாழை தில்லை போன்றவற்றிலும் அவ்வைகை  Arial roots எனும்
காற்றுவழியிலும் வேர் உண்டு ஆனால் சிறிய அளவில்
 
ஆல் வேறு இடத்தில் வளர்வதால் தேவையில்லை என்பதால் விழுதுகளை நீகிவிடுமா ??
அந்நிலத்து மரங்களுக்கு விழுது இல்லை யே என்பதால் அவை ஆல் வரளரக் கூடிய இடத்தில்
வளரமுடியாது அவ்வளவே.
 
நீங்கள் என்ன யானைக்கு யர்ரம் என்றால் குதிரைக்கு  குர்ரம் என்பதுபோல் பேசுகிறீர்களே  
விந்தையான தர்க்க  நியாயம் நிறைய அறிந்தவர் என்பதை மீண்டும் எடுத்துக் காட்டுகிறீர்
 
(௧)
mountain banyan =  கல் ஆல் என்று எவனோ தனக்குத் தெரிந்த அறிவில்  ஆங்கிலத்தில் எழுதி
விட்டதால் கல் எனும் சொல்லுக்கு சிவப்பு  எனும் லோகசுந்தரம் காட்டும்   பொருள் இல்லாது
போய்விடும் என சொல்ல நினைக்கிறீரா அ ய்யா???
(௨)
தட்சிணா மூர்த்தி  படிமம் கல் ஆல் எனும் சொல்லுடன் வரும் பொது  என்னஆலமர பழம்  தன்
சிவப்பு நிறத்தை  நீக்கிவிடுமா ???
(௩)
கல்லிலே வளரும்  ஆலமர வகை சார்ந்த அரசமரதிற்கு விழுதுகள் கிடையாது  அது கல்லிலே
அல்லது எனையும் சுற்றி வளர்ந்து விடும் அதற்கு ஏன் கல்லரசு என பெயர் வைக்கவில்லை??
(௪)
சுவற்றில் எங்கோ நாம் காணமுடியாத விரிசலிலும் வளர்ந்து   தன் வேர்களை கீழே கொண்டு
செல்லக்  கூடியது அரச மரம் அதற்கு என்ன விடர் அரசு என பெயர் உண்டா??
 
 
நல்லவேளை பெண்ணை = பெண்பனை என இதனிலும் ஏதோவொரு வரியையும் சேர்த்து
விடாமல் நின்றமைக்கு மகிழ்ச்சியே.
 
நூ த லோ சு
மயிலை
 


 
2012/9/2 நா. கணேசன் <naa.g...@gmail.com>
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!

N. Ganesan

unread,
Sep 2, 2012, 9:40:24 PM9/2/12
to தமிழாயம்
On Sep 2, 7:12 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> அன்புமிகு கணேசன் அவர்களுக்கு,
>

அன்பு லோகசுந்தரம் அவர்களுக்கு,

கல் என்ற சொல்லுக்கு சிவப்பு என்ற பொருளில்லை.

கல் பல வண்ணத்தில் கிடைக்கின்றன. பச்சைக்கல், நீலக்கல், செங்கல்,
வெண்கல்,
காவிக்கல் தோய்த்துச் செய்யும் ஆடை துறவியர்க்குண்டு. சில துறவியர்
பச்சையாடையும் உடுத்துவதுண்டு. பழனியில் சாதுசாமி மடத்தில்
அவ்வாறு துறவியரைக் கண்டிருக்கிறேன்.

கல்லால மரம் என்பதற்கு ’ஹில் பன்யன்’. ஆலமரம் போலன்றி,
மலைகளிலும், குன்றுகளிலும் 3000 அடி உயரம் வரை வளரும் மரம்
இது. கல்லால்/கல்லத்தி போலவே கல்லிச்சி/கல்லித்தி மரங்களும் உள்ளன.
கல்லால மரத்திலும் விழுதுகள் உண்டு. ஆனால், இந்தியாவின் தேசிய
மரமான ஆல் (பன்யன்) போல, அவ்வளவு பெரிதாக இல்லை. மேலும்
கல்லால் நீர்வளம் குன்றிய கல், கரடுகளிலும் வளரும்.
கல்லால மரம் இங்கே பார்க்கலாம்:
http://commons.wikimedia.org/wiki/File:Ficus_mollis_in_Keesaraguda,_AP_W_IMG_9134.jpg
கன்னடத்திலும் கல்லால மரம் என்றே இதன் பெயர் வழங்குகிறது.

வடம் போன்ற விழுதுகளால் பெற்ற பெயர் ஆல் என்பது.
வடம் போன்ற தும்பிக்கை இருப்பது யால்+னை (யானை/ஆனை) < ஆல்-.
வடம் (< வளை-), ஆல்- போன்றன ஆல மரத்தின் சிறப்பாகிய விழுதுகளால்.

தண்ணியை வைத்து வந்தது என்றால், ஏராளமான மரங்களின் பெயர் ஆல்
ஆக இருக்கணுமே.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Sep 2, 2012, 9:56:04 PM9/2/12
to தமிழாயம்

On Sep 2, 7:12 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:

> (௩)
> கல்லிலே வளரும்  ஆலமர வகை சார்ந்த அரசமரதிற்கு விழுதுகள் கிடையாது  அது கல்லிலே
> அல்லது எனையும் சுற்றி வளர்ந்து விடும் அதற்கு ஏன் கல்லரசு என பெயர்
> வைக்கவில்லை??

கல், கரடுகளில் வளரும் கல்லால் = ஹில் பன்யன் (ficus mollis, பழைய பெயர்
ficus tomentosa)
போலவே, கல் கரடுகளில் வளரும் அரைச மரம் கல்லரசு எனப் பெயர் வழங்குகிறது.
சென்னைப் பேரகராதி காண்க. மலை, குன்றுகளில் வளரும் அரசும், ஆலும் முறையே
கல்லரசு, கல்லால் ஆகும். கன்னடத்திலும் இவ்வாறே.
தட்சிணாமுர்ர்த்தி சிற்பங்களில் கல்லால் (ficus tometosa) பார்க்கலாம்.

நா. கணேசன்


> (௪)
> சுவற்றில் எங்கோ நாம் காணமுடியாத விரிசலிலும் வளர்ந்து   தன் வேர்களை கீழே
> கொண்டு
> செல்லக்  கூடியது அரச மரம் அதற்கு என்ன விடர் அரசு என பெயர் உண்டா??
>
> நல்லவேளை பெண்ணை = பெண்பனை என இதனிலும் ஏதோவொரு வரியையும் சேர்த்து
> விடாமல் நின்றமைக்கு மகிழ்ச்சியே.
>
> நூ த லோ சு
> மயிலை
>

> 2012/9/2 நா. கணேசன் <naa.gane...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > On Wednesday, August 22, 2012 12:31:51 PM UTC-7, selvi...@gmail.com wrote:
>
> >>              தமிழ் மொழி பண்பாடுகள் பற்றி ஆயும் இந்த  இணைய மடலாடலில் வந்த
> >>                  கண்ட 'கல்லாடை' பற்றிய கருத்திற்காக எழுந்தது இச்சிறு
> >> கருத்துரை

> >>                                 <><><><><><><><><><><><><><><**
> >> ><><><><><><><><><>
>
> >>                               **                               (1)
>
> >>                               **  *கல்லாடம் - கல்லாடை - துவராடை
> >> *                              **     <><><><><><><><><><><><><><>
> >>                               **              நூ த லோகசுந்தர முதலி மயிலை
> >>                               **    <><><><><><><><><><><><><><>

> >> *பண்பாகுபெயராக அவ்வித செந்நிறத்தையும் காட்ட நின்றது.*


>
> >>                  "கோத்த கல்லாடையும் கோவணமும்" (2.103.2)
> >>                  "கல்லாடை மேற்கொண்ட காபாலி காண்"(6.8.6)
> >>                  "கல்லாடை புனைந்த காபாலி காண்" (6.92.2)
>
> >>  என கல்லாடை எனும் சிவந்த நிற ஆடை புனைந்தவராக சிவபெருமான் தேவாரத்தில்
> >> போற்றப்படுகிறார்.
> >>  இந்துசமயம் எனும் போர்வைக்குள் அடங்கும் பற்பல நெறிகளைச் சார்ந்த
> >> துறவிகளும் பௌத்த மதத்தில்
> >> தோய்ந்து துறந்தோரும் சுற்றும் ஆடை அல்லது உடுத்தும் குப்பாயம் தனித்ததொரு
> >> செந்நிறம் உடையதாய்
> >> இருப்பதை நாம் அறிவோம்.  'கல்' எனும் சொல் சிவந்த நிறத்தினுக்கு ஆளப்படுவதை
> >> 'கல்லால மரம்' எனும்
> >> சொல்லிலும் காணலாம். ஆலமரம் தன் பழம் வழி, (இவ்வாடைகளை விட சற்றே மாறுபட்ட
> >> சிவந்த நிறம்

> >> இருந்தாலும்) *'சிவந்தநிற
>
> ...
>
> read more »

நா. கணேசன்

unread,
Sep 2, 2012, 11:39:41 PM9/2/12
to thami...@googlegroups.com


On Sunday, September 2, 2012 7:12:40 AM UTC-7, selvi...@gmail.com wrote:

(௧)
mountain banyan =  கல் ஆல் என்று எவனோ தனக்குத் தெரிந்த அறிவில்  ஆங்கிலத்தில் எழுதி
விட்டதால் கல் எனும் சொல்லுக்கு சிவப்பு  எனும் லோகசுந்தரம் காட்டும்   பொருள் இல்லாது
போய்விடும் என சொல்ல நினைக்கிறீரா அ ய்யா???


ஆல் மரத்தின் பழம் சிவப்பு. ஆனால், அவை வெறும் ஆல் தான். கல் ஒட்டு இல்லை.

கல்லால் மரத்தின் பழங்கள் பச்சை. கல் = சிவப்பு என்றால் ஏன் கல்லால், கல்லரசு என்ற
பெயர்கள்?

 யாரோ ஹில் பன்யன் எழுதியதில்லை.  தமிழ் அகராதிகளில் தமிழறிஞர்
எழுதியுள்ளனர்.

நா. கணேசன்
 
Reply all
Reply to author
Forward
0 new messages