"நாளைய குப்பை" வார இதழை
இன்றே வாங்கினால்
இலவசம்...!
ஒரு மூளை வளர்ச்சி மாத்திரை.
வந்தவனின் மனைவியிடம்
நோய் தீர பரிகாரம் செய்ய வாங்கிய பணத்தில்
தன் மனைவியை மருத்துவ மனைக்குக் கூட்டிப் போனான்,
சோதிடன்.
ஆதிசிவம்,
கவிதையென்றால் சுகமாக இருக்குமென்பார்கள்.
நீங்கள் அனுப்பிய கவிதை சுறுக்கென்று இருந்தது.
அதனால் தான் அதனைக் கவிதை நறுக்கு! என்று கூறினார்களோ!