-பட்டினத்தார்.
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
வெளியே வா குதூகலமாய்
அப்பதனை யசைத்துவிட்ட குரங்கதனைப் போலஅகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே
அதியமான்பழந்தமிழ்ப் பாடல்களை நமது விருப்பங்களுக்கு ஏற்ப பொருள் காணக்கூடாது.பாடலின் துறை, பாடியவரின் நிலை, பாடு பொருள், பாடலில் காலம் சூழல் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பொருள் காண வேண்டும்.அதாவது, பட்டினத்தார் ஒரு துறவி. இல்லறத்தை விட்டு நீங்கியவர்.
துறவு நிலைக்கு எதிரானது பெண்ணுறவு என்னும் கருத்தை ஆழக்கூறுபவர்.உலகியலே தவறானவை எனக் கூறும் பட்டினத்தார், குடும்பக்கட்டுப் பாடு என்னும் நிலைக்கு ஆதரவாக இருந்தார் என்பதில் உண்ண்மையில்லை.பெற்ற பிள்ளையையே காதறுந்த ஊசி கடை வழிக்கு வாராது காண்!! என்றவர்.கடைசி வரை யாஅரோ? என்று வினவியவர்.அவரிடம் காணக்கூடியது பேரின்ப முறையே! என்று கருதுகிறேன்.<<<
மிக ஆழமான கருத்தை உரைத்திருக்கின்றீர்கள்..--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
--
என்றென்றும்
சுதனின்விஜி
"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
பெண்டு பிள்ளைகளுக்கு சோறு போட வக்கில்லாமல் பேரின்ப நிலை கேட்குதா?
பட்டினத்தாரா, பட்டினித்தாரா?
பெண்டு பிள்ளைகளுக்கு சோறு போட வக்கில்லாமல் பேரின்ப நிலை கேட்குதா?
பட்டினத்தாரா, பட்டினித்தாரா?
வேந்தர்நாகபட்டினத்தார், பெருநிதி கொண்ட நவரத்தின வணிகர் என்பர். அவ்வாறு பெருநிதி பெற்றவருக்கு மகவு இல்லை. மனதில் மகிழ்ச்சி இல்லை! அதனால் துறவியானார். அவர் சேர்த்த சொத்துகள் அவர் குடும்பத்தாரிடம் தானே இருந்தன.
பட்டினத்தாருக்கு பிள்ளை இல்லை என்பது தவறான செய்தி. அவருக்கு ஒரு தவப்புதல்வன் இருந்தார். அதாவது குழந்தைப் பேரு இன்றி இருந்து பின்னர் சிவனிடம் வேண்டி குழந்தைப் பெற்றார். அவர் பட்டினத்தாருக்கு முன்னமே துறவு நிலை பூண்டார். அவர் பட்டினத்தாருக்கு கொடுத்த உபதேசம்தான் "காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே". அவ்வுபதேசத்தை ஏற்று உணர்ந்து பொருளின் மீது மிகுந்த பற்று கொண்டவரும் கடல் வணிகத்தில் சேர்த்த தங்கக் காசுகளை சிறுகுன்றுகளைப் போல் இல்லத்தில் வைத்திருந்தவருமான பட்டினத்தார் துறவு பூண்டார். பெண்ணாசையை சாடுவது அன்றைய சித்தர்களின் வழக்கு. பட்டினத்தாரும் ஒரு சித்தர்தான்.பட்டினத்தார் வாழ்க்கை வரலாறை, பாலகுமாரன் 'பேய்க்கரும்பு" என்னும் நாவலாக வடித்துள்ளார்.திருவாசகத்தில் மாணிக்கவாசகரும்"வைப்புநிதிப் பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும்
பித்த உலகில் பிறப்போடிறப் பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே சென்றூதாய்-கோத்தும்பி" என்கிறார்.வள்ளுவர் இதுகுறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்று யாரேனும் சொன்னால் நன்றாக இருக்கும்.நன்றி.
--
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர் - 348
வேந்தன் அரசு,
நில்லா வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மைக் கடை(331)
வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல(342)
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை(345)
யானெனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்(346)
பொருள் வேண்டுவோர் இணைப்பைப் பார்க்கவும்.
வேந்தன் அரசு,
'புறத்தாறு' துறவைத்தான் குறிக்கிறதா? அப்படியே இருந்தாலும் குறளின் முழுப்பொருள் என்ன? இல்வாழ்க்கையையே முறையாக அறவழியில் நடத்தாதவன் துறவு பூண்டு என்னபயன் என்பதுதானே?வள்ளுவர் இப்படியும் சொல்லியிருக்கிறாரே!
நில்லா வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மைக் கடை(331)