( புதிய / ஆர்வலர்களுக்காக மீண்டும் தொடரும் இழை )
அன்பின் உள்ளங்களே .,
இது எங்களைப் போன்ற ஆரம்பக்கட்ட / தமிழின்பால் ஆர்வமுள்ளவர்களுக்கு வரும் குழப்பம்தான் . எழுதிக் கொண்டே வரும்போது சந்தேகம் வரும் .
இங்கே
ர வருமா? / ற வருமா??
ல வருமா? / ள வருமா?? / ழ வருமா???
ன வருமா? /ண வருமா??
இங்கே புள்ளி வச்ச எழுத்து வருமா ? வராதா ??
அவ்வளவுதான் .எல்லாம் அதோடு நின்றுவிடும் . இதை சரி செய்து , குழப்பம் தீர்ப்பது எப்படி ?
-’’இலக்கணப்படி’’ என ஆரம்பித்தால் தெரிந்துகொள்ள ஆர்வம் / ஆசை இருப்போரும் நழுவி விடுகிறார்கள்
சரி , அவர்கள் எளிதாகப்
எளிதாக புரிந்துகொள்ளும்படி சொல்லிப் பார்த்தால் ...?
ஒரு முயற்சிதானே ! செய்து பார்க்கலாம் . எப்படியும் சில எளிய (தம்ப் ரூல்) விதிமுறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் . அதை இங்கே பதியுங்கள் . பலர் பயனடைவார்கள் . தமிழ் தெளிவடையும் .
இந்த இழையில் கற்போம்... கற்பிப்போம் ...
நான் ஆரம்பித்து வைக்கிறேன் ...
சின்ன ‘ர’ (ர்) ,பெரிய ’ற’ (ற்) :
1)தரும் , பெறும் :
தருபர்களுக்கு பெரும்பாலும் தன்னிடமுள்ளதை பிறருக்குத்தர மனம் வராது . (90% பேர் )கொஞ்சமாகவே / சிறிதாகவே கொடுக்க நினைப்பார்கள் . எனவே ‘தரும்’ க்கு சின்ன ர போடுங்க
பிறரிடமிருந்து பெற நினைப்பவர்கள் பெரிதாகவே வாங்க நினைப்பார்கள் / எதிர் பார்ப்பார்கள் . எனவே ’பெறும்’க்கு பெரிய ற போடுங்க
2) சிறிய , பெரிய :
இதில் ஒரு ஆர்வமூட்டும் முரண் பயன்படுத்திப் பாருங்க .
’சிறிய’ வுக்கு பெரிய ற போடுங்க
’பெரிய’ வுக்கு சின்ன ர போடுங்க
( நன்றி ; கல்பட்டார் அவர்களுக்கு)
[1, 2 லிருப்பது எடுத்துக்காட்டு . சொன்ன விதிகள் அவைசார்ந்த வார்த்தைகளுக்கும் சரியாக வரும் ]
3)அரிய,அறிய :
அரிய: – அருமையான / அபூர்வமான / வித்தியாசமான்
தனித்தன்மை வாய்ந்தவைகள் உலகில் குறைவாகவே இருக்கும்
--சின்ன ர போடுங்க
அறிய: – தெரிந்துகொள்ள / புரிந்துகொள்ள வேண்டியவை உலகில் நிறைய உண்டு
-- பெரிய ற போடுங்க
4)ன்,ண் :
ன் – பெரிய ற வுக்கு முன்னாடி சின்ன ன வரும் [எகா- கன்று ,என்று, அன்றோ ]
ண் – ட வுக்கு முன்னாடி பெரிய ண வரும் [எகா- வண்டி,அண்டா, கண்டனம்,உண்டி]
[ நன்றி :
வேந்தன் அய்யா ]
தமிழ் நெடுங்கணக்கிலேயே இந்த ஒலிப்புகள் இணையாக இருக்கு
க ங
ச ஞ
ட ண
த ந
ப ம
ய ர
ல வ
ழ ள
ற ன
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
சில ஒத்த வார்த்தைகளின் பொருள் பார்ப்போம் இங்கு
1) நினைத்தல், எண்ணுதல் :
’’இரண்டும் ஒரே பொருள் தருவதாய்த்தான் எண்ணியிருந்தேன்’’
--மேலே சொன்னதில் பிழையுள்ளது . ஆம் அது
“ இரண்டும் ஒரே பொருள் தருவதாய்த்தான் நினைத்திருந்தேன்’’ என்பதுதான் சரியானது
நினைத்தல் = கடந்தகாலத்தைப் பற்றி அசைபோடுவது பற்றிச் சொல்லுவது
எண்ணுதல் = வருங்காலம்பற்றி திட்டமிடும்போது சொல்லுவது
2)வலை, திரை :
வலை - பிடிப்பதற்காக விரிப்பது (எகா - மீன்வலை)
திரை - நுழையவிடாமல் தடுப்பதற்காக அமைப்பது(எகா - சன்னல்திரை)
இப்போது ‘’ கொசுவலை’’ பற்றிப் பார்ப்போம். இந்த பெயர்தான் நாம் பயன்படுத்துகிறோம் .ஆனால்........
கொசு உள்ளே நுழையாமல் இருக்கப் அமைக்கப்பட்டிருக்கும் திரை அதுவாகும் எனில்
‘’கொசுத்திரை’’ என்பதே சரியான சொல்லாக அமையும்
[நன்றி: மா.நன்னன் அய்யா]